05 June 2013

அந்த நாள் ஞாபகம்----13


வணக்கம் உறவுகளே நலமா ??
அந்தநாள் ஞாபகம் ஊடாக திரையரங்குகளில் தீனிபொறுக்கி தித்தித்த நினைவுகளைத் தெரிந்து தெளிக்கும் இந்த தொடர் குறிப்பில் !

இன்று கும்மாளம் போட்டது கெட்டாஞ்சேனையில் இருந்த கெயிட்டி திரையரங்கில்.

அது 1999  இன் அந்திம மாதங்கள் .அப்போது கொழும்பு வாழ்க்கையில் சந்தோஸமும் ,சங்கடமும் இருக்கும்.

சுதந்திரமாக விற்பனைப்பிரதிநிதி என்ற  பந்தா ஒருபுறம் சந்தோஸம் ,தனியாளாக உழைக்க வெளிக்கிட்ட பின் ஊதாரியாக செலவு செய்ய கட்டுப்பாடு இல்லாத நிலை என்றால் !

இடைக்கிடை வந்து நிக்கும் பாதுகாப்புச் சோதனை சந்தேகம் என்ற புயல் என தமிழன் என்ற இன உணர்வில் வந்துவிழும் சிங்கள இனவாத அதிகார தோரணை என்பன மீது எப்போதும் சங்கடமான கோபத்தினை வெறுப்பாக வீசிச்செல்லும் இனத்துவேசமாக! ஆனாலும் சகோதரமொழி நண்பர்களின் அன்பும் கருணையும் சந்தோஸமாக கை கொடுக்கும் நண்பா நீ என்பதில்!

என் சம்பளக்காசும் திரையரங்கில் கொஞ்சம் எங்கள் சின்னச்சின்ன சந்தோஸங்களை சேமிக்க உதவியது மட்டும் தான் மிச்சம் இன்றுவரை.


இந்தகெயிட்டி  திரையரங்கு இன்று இல்லை .அது இருந்த இடம் தெரியாமல் புதிய அங்காடி வந்து இருக்கலாம் நிகழ்காலத்தில் !அது போல இதன் இசை அமைப்பாளர் பரத்ராஜ் இப்போது!!!!!!

ஆனால் இந்த திரையரங்கில் நம்மவர் தயாரிப்பு என்று சொல்லும் ஈழத்துத்து திரைப்படங்களும் இனவாத சங்காரம் 1983 நிகழ முன்  பல வெற்றிப்படங்களாக வசூலை வாரியிறைத்தது என்று வரலாற்றுத்தகவலையும் பதிவு செய்து இருக்கின்றது காதிக நூலில்!

தம்பி ஐயா தேவதாஷ் அவரின் படைப்பை இங்கு வாசிக்கலாம். http://www.thanimaram.org/2011/03/blog-post_23.html

இதே திரையரங்கில் என்னோடு அன்று சமகாலத்தில் பார்த்தவர்களின் கடந்த நினைவுகளை நண்பனுக்காக நான் எழுதும் தொடர் இது!

 இந்தத்தொடரும் ஒரு பூவேலி போலத்தான் :))))) பூ அழகு அருகில் இருக்கும் முள் வலி அதுவும் அழகுதானோ:)))) நான் அறியேன் தனிமரம்  என்பதோலோ????
இருந்தாலும் இந்தப்பாடல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் அதிகம் பிரபல்யம் ஒரு காலத்தில் நேயர் விருப்பத்தில்! அதில் தனிமரம் என் நியப்பெயரும் காற்றில் வந்த தருணம் !இந்த பதிவுலக  ஹிட்சு தரவில்லை ஹீஹீ!!

16 comments:

  1. வணக்கம்,நேசன்!நலமா?///தொடர்கிறது அந்த நாள் நினைவு மீட்டல்!நானும் அந்தத் திரை அரங்கில் அந்தக் காலத்தில் படம் பார்த்திருக்கிறேன்.1983-க்கு முன்!

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள் மலரட்டும்.

    ReplyDelete
  3. இனிய நினைவுகள்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. நினைவே ஒரு சங்கீதம்தான் இல்லையா...!

    ReplyDelete
  5. அழகிய நினைவுகள்.. அட அங்கும் ஒரு கெயிட்டி தியேட்டரா

    ReplyDelete
  6. அண்ணா நினைவலைகள் சூப்பர்- தம்பி ஐயா தேவதாஸின் “இலங்கை திரைப்பட வரலாறு” படித்தீர்கள் தானே?

    அந்த புக் இங்கு கிடைக்குமா அண்ணா?

    ReplyDelete
  7. மலரும் நினைவுகள் தொடரட்டும் நேசரே ...தொடர்கிறேன்...

    ReplyDelete
  8. படத்தில் பொரளை கொஞ்சம் அழகாக தெரிகின்றது.

    ReplyDelete
  9. வணக்கம்,நேசன்!நலமா?///தொடர்கிறது அந்த நாள் நினைவு மீட்டல்!நானும் அந்தத் திரை அரங்கில் அந்தக் காலத்தில் படம் பார்த்திருக்கிறேன்.1983-க்கு முன்!

    5 June 2013 13:09 //வாங்க யோகா ஐயா நலமா!ம்ம் நீங்களூஊஊஊஊஊமாமாஆஆஆஅ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. மலரும் நினைவுகள் மலரட்டும்.

    5 June 2013 18:51 //ம்ம் நன்றி கரந்தை சார் வருகைக்கும் க்ருத்துரைகக்கும்

    ReplyDelete
  11. இனிய நினைவுகள்... தொடர்கிறேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. நினைவே ஒரு சங்கீதம்தான் இல்லையா...!//ம்ம் நிஜ்ம் தான் அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. அழகிய நினைவுகள்.. நன்றி சீனு!

    அட அங்கும் ஒரு கெயிட்டி தியேட்டரா!!ம்ம் கொழும்பில் இருந்திச்சு!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    5 June 2013 22:22

    ReplyDelete
  14. அண்ணா நினைவலைகள் சூப்பர்-!!!நன்றி சார் பாராட்டுக்கு!

    தம்பி ஐயா தேவதாஸின் “இலங்கை திரைப்பட வரலாறு” படித்தீர்கள் தானே?ஓம்!

    அந்த புக் இங்கு கிடைக்குமா அண்ணா? அது சந்தேகம் மனீமனீ!ம்ம் !! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    6 June 2013 02:07

    ReplyDelete
  15. மலரும் நினைவுகள் தொடரட்டும் நேசரே ...தொடர்கிறேன்...
    6 June 2013 06:33 //நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  16. படத்தில் பொரளை கொஞ்சம் அழகாக தெரிகின்றது.//நண்பா அதுகொச்சிக்கடை சேச் படம் பொரளை இல்லை!!ம்ம் கொஞ்சம் கொழும்பை இன்னும் ரசியுங்கோ!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete