16 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-80


மததீயில் மாணவிகள் போராட்டம் மலையகம் எரிகின்றது !


அறிவிச் சோலையில் அடுப்பு ஊதும் குழல்கள் ;ஆட்டுவிப்போர் ஆடைகிழித்தார்கள், பள்ளிமாணவியின் பாவாடையில் இரத்தம் பார்த்தவர்கள் கண்களில் ..;என்று எல்லாம் தலையங்கமாக தலைநகரில் இருந்து வரும் பத்திரிகைக்கு செய்தி எழுதும் செய்தியாளர்!

 தெரியாத எரிகின்றது என்ன எரிக்கின்றது என்ன என்று.

 உண்மையின் குரல் என்று விட்டு பொய்யின் போதையை இரவு விடுதியில் இறைத்த மதவாதிகள் மாட்டின் ஜின் ஒரு புறம், தொட்டுக்கொள்ள மாட்டுப்பொறியல் அதில் தெரியவில்லையா மதம் எண்ண என்று??


 ஊதுகுழல் என்று எழுதும் போது தெரியவில்லை ஊதும் குழல் பெண்களா இல்லை கர்ணன் குழலா என்று அடுப்பு என்று எள்ளி நகையாடும் போது தெரியவில்லை பெண்கள் அடக்கி வைக்கணும் என்று நினைக்கும் ஆணாதிகப்பார்வை? 

ஆட்டுவிப்போர் என்ற தலையகம் தீட்டிய போது தெரியவில்லை மாணவிகள் மாணவர்கள் கைமீறி அது யாரிடம் போய் அரசியல் விளையாட்டில் கிரிக்கட் ஆட்டம் போல அடித்தாடும் நிலையில் மதத்தீ எரிந்துக் கொண்டு இருக்கிறது.


 வாக்கு அரசியலுக்கா மாணவர் சமுகத்தை தூண்டிவிட்டு வேசம் போட்ட அரசியல் முகம் தெரியாதா அந்த செய்தி ஆசிரியருக்கு நகரின் முக்கிய வாடிவீட்டில் மங்கள் வெளிச்சத்தில் மாலைப்நேரம் மப்பு போதவில்கைவென்று மண்டியிட்ட நேரம் சாரம் கட்டியவன் கண்டது எல்லாம் கமராவில் விழாது.

 ஆனால் விழியில் விழும் செவியில் விழும் மொழியில் புரியும் .ஆடைகிழித்தார்கள் என்று அசிங்கமாக எழுதிய போது எப்படி இருந்து இருக்கும் செய்தியைப் பார்த்து உணர்ச்சிக்கு அடிமையாகும் வாசகர்களுக்கு வெட்டணும் கொத்தணும் சுடணும் என்று தீ மூட்டும் செய்தி எழுத்தாளர் சமுகப்பார்வையில் செய்தி சொல்லமல் விட்டது ஏன் 


உள்ளார்ந்த பார்வையில் ஒரே வீட்டில் நண்பர்கள் ,நண்பியாக ,ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் சக நண்பிகளை துரியோதனன் சபையில் பாஞ்சாலியின் சேலை உருவியது போல பர்தாவை உருவ இது என்ன சினிமாவா ,,,


அவர்கள் நம் தோழிகள் எந்த காம வெறியும் இல்லாத நண்பிகள் தீபாவளிக்குப் பலகாரமும் ரம்சாணுக்கு வட்டல் அப்பம் தின்ற வீட்டில் எப்படி ரெண்டகம் செய்வார்கள் தீயாக வதந்தியைப் பரப்பி மாணவர்களின் மனங்களில் மதத்தீ கீறல்போட்டவர்கள் எல்லாம் எப்படி மதவாதிகள் பின் நின்று தீயிட்டார்கள் மறக்கமுடியாத பள்ளிமாணவர் பருவ வாழ்வில்.எல்லாம் ஆராய வேண்டி கல்வியமைச்சு வேடிக்கை பார்த்தது பாராளமன்றத்தில் பதிவாகும் வரை .



அந்தளவு இந்த அறிவுச் சோலையும் கலைத்தாயியும் மதச்சண்டையில் இருந்த போது வீதியில் நிற்கும் காடையர் காமக் கூட்டத்துக்கு பாவடையில் இரத்தம் எதனால் என்றே எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியாது .


.பருவயது கடந்து தானே தாய் ஆனால் இவனைப் பெற்றவள் அந்த ரத்தம் தெரியாதவன் ஆனால் மதம் என்ன எழுதினது என்று மட்டும் படித்து விடுவார்களே? 


எங்கும் உள்ள அல்லா பெயரைச் சொல்லும் அல்லாவின் ஆணையும் தொழுதால் அய்யனைச் சேர்ந்த பின் அம்மை தொழுதேத்தும் மெய்வினை அங்குண்டோ மெய்யுலகில்!

வீதியில் போகும் அறிவுச்சோலை இந்துப் பெண்பிள்ளைகளிடம் வீதியில் நின்று மோசமான வார்த்தைகள் பேசிய ஆட்டோ ஓட்டும் முஜாஹீதீன்களுக்கு எல்லாம் எப்படி இலவசமாக மதவெறி டீசல் ஊத்தினார்கள் வியாரிகள் இவர்களுக்கும் வீட்டில் சகோதரிகள் இருந்தால் இப்படியா தரம்கெட்ட வார்த்தைகள் தங்கையிடம் பேசுவார்கள் உணர்ச்சி வேகத்தில் உதிர்கும் வார்த்தைகளுக்கு உறவு முறை தெரியாதா ?


கேவலம் மதம் என்ற அரக்கன் புகுந்து வீதிகளில் மாணவர்கள் மாணவிகளுக்கு மன உளைச்சல் தந்த போது தான் ராகுல் அயிசாவிடம் கலைத்தாயின் பள்ளியில் அன்று பேசியது. 

அயிசா ஒரு சட்டப்பிரச்சனைக்கு மதச்சாயம் பூசிய மதப்பிரச்சனையில் கூட புரிந்து கொள்ளாமல் யார் யாரோ தீ மூட்டிவிட அதில் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லாம் வேற்று நாட்டவர்கள் போல நினைக்கும் போது எப்படி சுகுமார்கூட காலம் எல்லாம் காதல் வாழ்க என்று ஜோடியாக முடியும்.!


 எது பிரச்சனையாகும் என்று நினைத்தேனோ அது நேரில் நடக்குது நான் மதவாதி அல்ல. ஆனால் மதம் கடந்து நீங்க வரமுடியுமா ??????

வந்தாலும் உங்களுக்குப் பின் வீட்டில் இருக்கும் இரு சசோதரிகள் வாழ்வில் வரும் நடைமுறைச்சிக்கள் ஏன் உணரவில்லை? அதே போல தானே சுகுமார் வீட்டிலும் அவனுக்கும் இருக்கும் இரு சகோதரிகள் வாழ்வில் எப்படி எல்லாம் கலியாணச் சந்தையில் கேள்வி வரும் என்று ஜோசிக்கவில்லை?

 அவன் மூத்தவன் விடும் தவறினால் குடும்பத்தில் ஏற்படும் புயல்கள் ஏன் புரிய மறுக்கின்றீங்கள் ஆயிசா?18 வயதில் காதல் தேவை என்று ஜோசிக்கும் போது தன் குடும்பத்தின் கெளவரவம் ,பொறுப்பு தேவை என்று ஏன் ஜோசிக்கக்கூடாது? ஒரு பெண்காத்திருக்க முடியுமா?

படிப்பு முடிக்கவில்லை ,இன்னும் ஒரு தொழில் கிடைக்கவில்லை அதன் பின் குடும்பத்தில் பொறுப்பு முடிக்கவில்லை .அதுக்குள் கலியாணம் என்றுஒரு ஆணை எப்படி ஒரு பெண் அவசரப்படுத்த முடியும் நடைமுறையில் பல சிக்கல் வரும் இது எல்லாம் புரியாமல் காதல் என்றால் எப்படி அயிசா?

 நீங்க மதம் கடந்து வந்தாலும் நடைமுறையில் எங்க போய் வாழமுடியும் ?மன்னாரில் இல்லை கண்டியில் ஊர் விட்டுத்தான் போகணும். நிச்சயம் பதுளையில் வாழ மதவாதிகள் விட மாட்டிணம் .அதிலும் பார்க்க இந்த காதல் என்ற வேசத்தைக்களையுங்கோ இது எல்லாம் ஒரு ஈர்ப்பு ஆனால் பகிஸ்கரிப்பு நேரம் வராமல் விடாதீங்க பள்ளிக்கு .

ஏன்னா பொடியங்கள் எல்லாம் நீங்களும் மதவாதி என்று முத்திரை குத்துவாங்க அயிசா. .இவன் சுகுமார் காதலை நிராகரித்தால் அவன் வாழ்க்கை நல்ல இருக்கும் .ஒரு நண்பனாக இருவருக்கும் சொல்லுறன் இதுக்கு மேல் உங்க விருப்பம் நான் வில்லன் ,துரோகி என்று எப்படி நினைச்சாலும் பருவாயில்லை .


அயிசாவை எங்காவது ஊரில் பார்க்கும் போது நல்ல ஒரு வகுப்புத் தோழியாக பார்க்கணும் இனி உங்க இஸ்ரம்.மதத்தீயில் விழுந்த போது குளம்பிய குட்டியையில் மீன் பிடிக்க முடியாது என்பதை அயிசா சுகுமாரின் காதலை நிராகரித்து அத்தோடு பாடசாலைக்கும் வராமல் வீட்டில் இருந்து படித்துக்கொண்டு இருந்தால்.



 சந்தேகம் என்ற தீ சந்தர்ப்பம் கிடைக்கும் போது எண்ணை வார்க்கும்.

 சுகுமார் அயிசா ஒரு இஸ்லாம் .இந்த நேரம் வரமால் போனது அவளுக்கும் இயற்கை உபாதை இருக்கும் ஆனால் பொடியங்கள் மனதில் அவளும் மதவாதியின் பின்னால் போய் விட்டால் என்று நினைக்கின்றாங்க.

 ஒரு பகிஸ்கரிப்பிலே இப்படி என்றால் வாழ்க்கையில் எத்தனை தடைகள் தாண்டணும் வேண்டாம் இந்தகாதல் ஒழுங்கா படி. உன்னால் முடியும் பல்கலைக்கழகம் போக நான் பரீட்சை முடிய கொழும்பு போறன் இனி சந்திப்பது கடினம் மச்சான் .


ஆனால் குடும்பத்தில் நீ பொறுப்பா இருக்கணும் நண்பர்களில் பல வகை இருக்கு எல்லார் மனதும் ஒரே மாதிரி இருக்காது .

உன் வீட்டில் சாப்பிட்ட போது உன் தங்கையும் எனக்குத் தங்கைதான் அப்படி உறவில் தான் எல்லா வீட்டிலையும் நான் வேண்டுவது நண்பன் ஒரு அண்ணாவக இருக்க முடியும்.

 ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள் யாரும் நண்பர்கள் வீட்டில் மருமகனாக இருக்க முடியாது .அதுதான் என் நிலை .இதுக்கு கொஞ்சம் அவதானிப்பு தேவை ஒரு நண்பரின் செயல் எனக்கு பிடிக்கலை.

 இதை நீ நிராகரிக்க விட்டால் நான் உன்னை நிராகரிப்பேன் ஏன்னா எனக்கு அண்ணா பதவி தான் முக்கியம் புரிஞ்சுக்க யார் அந்த நட்பு என்பதை உணர்கின்ற தருணம் காதலைவிட முக்கியம் .



137 comments:

  1. வணக்கம் நேசன் அண்ணா, கடைசி இரண்டு பதிவுகளையும் வாசித்து விட்டு நித்திரைக்குச் சென்றேன்... மிண்டும் வந்து விட்டேன்

    ReplyDelete
  2. வணக்கம் கலைவிழி வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ தூக்கம் போய் விடும்!ஹீஇ

    ReplyDelete
  3. ஊரில் நடந்த சம்பவம் கேட்டு தூக்கம் போய் விட்டது.. தலையிடிதான் இருக்கு அதுக்கா இந்த பால் கோப்பி அருந்துகிறேன். நன்றி

    ReplyDelete
  4. இரவு வணக்கம்,நேசன்!நலமா?////இரவு வணக்கம் கலைவிழி!கலை விழிக்கு என்ன ஆயிற்று ??????????????

    ReplyDelete
  5. இந்தச் சம்பவம் எத்தனையாம் ஆண்டில் நடைபெற்றது?

    ReplyDelete
  6. இனிய இரவு வணக்கம் யோகா ஐயா, நான் நலமே இருக்கிறேன் நீங்கள் நலமா?

    ReplyDelete
  7. ஊரில் நடந்த சம்பவம் கேட்டு தூக்கம் போய் விட்டது.. தலையிடிதான் இருக்கு அதுக்கா இந்த பால் கோப்பி அருந்துகிறேன். நன்றி
    16 June 2012 11:37 //ம்ம் தூக்கம் தொலைந்த இரவுகள் எல்லாம் இருட்டறையில் போய் விட்டது கடல் ,கடக்கும் போது கதறி வருவது என்ன எம்கையில் ஏதும் இல்லை!ம்ம்

    ReplyDelete
  8. உண்மையில் எனக்கும் இந்தக் கலவரம்/வன்முறை புதுசு தான்.உண்மையைச் சொல்ல வேண்டும்,நான் இன்று வரை அறிந்திருக்கவில்லை!

    ReplyDelete
  9. நண்பர் ஒருவரின் விட்டு அயலில் உள்ள வீட்டில் கள்ளர்கள் அட்டகாசமாம்..

    ReplyDelete
  10. கலைவிழி said...

    இனிய இரவு வணக்கம் யோகா ஐயா, நான் நலமே இருக்கிறேன் நீங்கள் நலமா?///நன்றியம்மா,நான் நலமே இருக்கிறேன்.

    ReplyDelete
  11. இரவு வணக்கம்,நேசன்!நலமா?////இரவு வணக்கம் கலைவிழி!கலை விழிக்கு என்ன ஆயிற்று // வணக்கம் யோகா ஐயா நலம் தானே! விழிக்கு தூக்கம் போச்சாம்!ஹீ கோப்பி குடித்த படியால்.

    ReplyDelete
  12. இந்தச் சம்பவம் எத்தனையாம் ஆண்டில் நடைபெற்றது?// 1999 மே மாதம் தொடக்கம் செப்டம்பர் வரை குறித்த பகுதியில்

    ReplyDelete
  13. யாழில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களை பாதுகாக்க நித்திரை இன்றி தவிக்கின்றனர்.

    பொருள் வைத்திருப்போர் அவற்றை பாதுகாக்க, பெண் பிள்ளைகளும் இல்லாமல் பொருளும் இல்லாமல் இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

    அங்கும் காடையர்களின் அட்டகாசம்..

    ReplyDelete
  14. உண்மையில் எனக்கும் இந்தக் கலவரம்/வன்முறை புதுசு தான்.உண்மையைச் சொல்ல வேண்டும்,நான் இன்று வரை அறிந்திருக்கவில்லை!//ம்ம் தப்பி விட்டீர்கள் தாயகத்தில் மூத்த தலைமுறையில் பிறந்து!ஹீ

    ReplyDelete
  15. கலைவிழி said...

    நண்பர் ஒருவரின் விட்டு அயலில் உள்ள வீட்டில் கள்ளர்கள் அட்டகாசமாம்..///கொஞ்ச நேரத்துக்கு முன்பு நடந்ததா?

    ReplyDelete
  16. உண்மைதான் கலைவிழி!"அவர்கள்"இல்லாதது "எல்லோருக்கும்" வசதியாகப் போய் விட்டது!

    ReplyDelete
  17. நண்பர் ஒருவரின் விட்டு அயலில் உள்ள வீட்டில் கள்ளர்கள் அட்டகாசமாம்..//ம்ம் ஊழிக்காலத்தில் உருண்டு ஓடும் நிலையில் பேய் ஆட்சிகள் பேதலிக்கும் கம்பனில் படித்தது!ம்ம் விதிவசம்.

    ReplyDelete
  18. நான் நலம்,நேசன்!"§§§§§அந்த"தகவல் கிட்டியதா???

    ReplyDelete
  19. கோப்பி குடித்த படியால் தலையிடி வரவில்லை அண்ணாச்சி........ கோப்பி நல்லா இருக்கு இன்டைக்கு ஒன்று காணும் அதிகம் குடித்தால் சக்கரை நோய் வந்திடும்....

    ReplyDelete
  20. யாழில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களை பாதுகாக்க நித்திரை இன்றி தவிக்கின்றனர்.

    பொருள் வைத்திருப்போர் அவற்றை பாதுகாக்க, பெண் பிள்ளைகளும் இல்லாமல் பொருளும் இல்லாமல் இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

    அங்கும் காடையர்களின் அட்டகாசம்..

    16 June 2012 11:45 //ம்ம் நகை சூறையாடல் தொடரும் கற்பு சூறையாடல் என அழுது வடிப்பது தமிழர்தான்!ம்ம்

    ReplyDelete
  21. இப்பதான் ஒரு மணத்தியாலம் ஆகுது......... பொலிஸ் இலக்கம் கேட்டு என்னிடம் தொடர்பு கொண்டார்கள்.. அது தான் விழித்து விட்டேன்

    ReplyDelete
  22. உண்மைதான் கலைவிழி!"அவர்கள்"இல்லாதது "எல்லோருக்கும்" வசதியாகப் போய் விட்டது!// ம்ம் உண்மைதான் யோகா ஐயா!

    ReplyDelete
  23. நான் நலம்,நேசன்!"§§§§§அந்த"தகவல் கிட்டியதா???// ஓம் நன்றி ஐயா!

    ReplyDelete
  24. எல்லாவற்றுக்கும் ஒரு "முடிவு" வரும்,விரைவிலேயே!

    ReplyDelete
  25. கோப்பி குடித்த படியால் தலையிடி வரவில்லை அண்ணாச்சி........ கோப்பி நல்லா இருக்கு இன்டைக்கு ஒன்று காணும் அதிகம் குடித்தால் சக்கரை நோய் வந்திடும்....

    16 June 2012 11:48 // ஹீ 20 மணித்தியாளம் ஓடி வேலை செய்தால் வராதாம் !ஹீ சக்கரை நோய் நித்திரை வரும்!ஹீ

    ReplyDelete
  26. எல்லாவற்றுக்கும் ஒரு "முடிவு" வரும்,விரைவிலேயே!/ம்ம் இப்படிச் சொல்லியே காலம் போய்விட்டது பல இடங்களில்!ம்ம்

    ReplyDelete
  27. கோப்பி குடித்தால் நித்திரை வராது, உற்சாகம் பிறக்கும். பால் சேர்க்காத எத்தனை வெறும் கோப்பி என்றாலும் குடிக்கலாம்.........

    ReplyDelete
  28. கோப்பிப் பிரியர் நேசன்!!!!!!!!!!

    ReplyDelete
  29. கோப்பி குடித்தால் நித்திரை வராது, உற்சாகம் பிறக்கும். பால் சேர்க்காத எத்தனை வெறும் கோப்பி என்றாலும் குடிக்கலாம்.........

    16 June 2012 11:54 // ம்ம் ஆனால் உடல் அலுப்பு வரும்போது தூக்கம் வருகின்றதே கோப்பி குடித்தவுடன் தூங்கி விடுவேன் இரவில்.ஹீ

    ReplyDelete
  30. நல்லதொரு மாற்றத்தை தான் எதிர்பார்த்து காலம் கடந்து விட்டது.

    யாழ் செய்திகளை கேட்டால் அடுத்தகண நகர்வே பெரும் சுமையாகியது

    ReplyDelete
  31. எங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை

    ReplyDelete
  32. கோப்பிப் பிரியர் நேசன்!!!!!!!!!!

    16 June 2012 11:56 // ஹீ அப்படி இல்லை உழைப்பு முக்கியம் தானே தூக்கம் பின் காலத்தில் கொள்ள முடியும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம் ஐரோப்பாவில்!

    ReplyDelete
  33. யாழ் செய்திகளை கேட்டால் அடுத்தகண நகர்வே பெரும் சுமையாகியது

    16 June 2012 11:57 //ம்ம்

    ReplyDelete
  34. இப்படியே ஊக்குவித்து,குடாவை குழப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள்.இளைஞர் கையில் தான் இந்தப் பிரச்சினை இப்போது இருக்கிறது,பார்ப்போம்!

    ReplyDelete
  35. எங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை

    16 June 2012 11:58 //ம்ம் வார இறுதி வீட்டில் பல சோலி இருக்கும் தானே கலைவிழி!

    ReplyDelete
  36. கலைவிழி said...

    எங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை?////சின்னவ ஊர் உலா!பெரியவ....................வேலையாயிருக்கும்!வருவா என்று நினைக்கிறேன்,ரெண்டு நாளா காணயில்ல.

    ReplyDelete
  37. இப்படியே ஊக்குவித்து,குடாவை குழப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள்.இளைஞர் கையில் தான் இந்தப் பிரச்சினை இப்போது இருக்கிறது,பார்ப்போம்!// ஒன்றும் செய்ய முடியாது அல்லக்கைகள் உதவிக்கு இருக்கும் வரை!ம்ம்

    ReplyDelete
  38. உழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா

    ReplyDelete
  39. கலைவிழி said...

    உழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா!///அப்புடிப் போடுங்க,கலைவிழி!

    ReplyDelete
  40. தனிமரம் என்றால் சோலி இல்லை.. ஹி... ஹி..........

    ReplyDelete
  41. எங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை?////சின்னவ ஊர் உலா!பெரியவ....................வேலையாயிருக்கும்!வருவா என்று நினைக்கிறேன்,ரெண்டு நாளா காணயில்ல.

    16 June 2012 12:02///ம்ம் அறுதலாக வரட்டும் எல்லாச் சோலியும் முடித்துவிட்டு அதுக்குள் நான் முடிக்கணும் நாளை !ம்ம் பார்ப்போம் சித்தன் செயல் சிவன் செயல்.

    ReplyDelete
  42. உழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா

    16 June 2012 12:03 //ம்ம் அவா மேல் பாரத்தைப்போட்டு விட்டு இருக்க முடியாது பொறுப்புக்கள் இருக்கு காகாகூட்டம்!ஹீ

    ReplyDelete
  43. பதிவை படித்துவிட்டு அப்படியே அமைதியாகிட்டேன் .மனம் கனத்தது .

    ReplyDelete
  44. கட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்!ஹி!ஹி!ஹீ!!!!!!!

    ReplyDelete
  45. உழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா!///அப்புடிப் போடுங்க,கலைவிழி!

    16 June 2012 12:04 //ம்ம் இப்ப சித்திரம் விட கறப்பது முக்கியம் என்ற நிலையில் சுவர் என்ன சித்திரம் என்ன எல்லாம் காலம் செய்த கோலம் அகதியாக்கி அலையவிட்டது!ம்ம்

    ReplyDelete
  46. இரவு வணக்கம்,ஏஞ்சலின்!!!என்ன செய்ய?இதுவும் வந்தது!

    ReplyDelete
  47. யோகா அண்ணா /நேசன் /ஹேமா /கலா /கலை /ரெவரி
    அனைவரும் நலமா ?
    வந்திருக்கும் கலைவிழி சகோதரியும் நலமா

    ReplyDelete
  48. வாங்க அஞ்சலின் அக்காள் நலமா !ம்ம் என்ன செய்வது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு முகம்!

    ReplyDelete
  49. சுமைகளை துணைவியார் மீது போட முடியாது தான்..... சுமைகளை எப்படி எந்த நேரத்தில் எந்த நுமையை இறக்கி வைப்பது என உங்களுக்கு ஆலோசனை தந்து மனச் சுமையை இறக்கி வைப்பதே பெரிய ஆறுதல் அல்லவா

    ReplyDelete
  50. //கட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்!ஹி!ஹி!ஹீ!!!!!!!//

    நீங்க சொல்வது சரிதான் .

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. தனிமரம் என்றால் சோலி இல்லை.. ஹி... ஹி........../ம்ம் தனிமரமும் உதவாக்கரையாக இருந்தால் சோலி இல்லை ஆனால் அதுவும் உதவும்கரையாக இருந்தால் கோவிந்தா!ஹீ

    ReplyDelete
  53. angelin said...

    யோகா அண்ணா /நேசன் /ஹேமா /கலா /கலை /ரெவரி
    அனைவரும் நலமா ?
    வந்திருக்கும் கலைவிழி சகோதரியும் நலமா?/////எல்லாரும் நல்லாயிருக்கோம்.ரொம்ப நன்றிம்மா,நீங்க நலமா? கடந்து போய்ச்சு,அதுவும்!இனி வரும் காலம் நல்லாயிருக்கட்டும்,ஆண்டவன் தயவில்!

    ReplyDelete
  54. பம்பாய் //படப் பாடல் மிக அருமை .

    ReplyDelete
  55. கட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்!ஹி!ஹி!ஹீ!!!!!!!

    16 June 2012 12:08//ம்ம் அது எல்லாம் மாறுதாம் நீ உன் சோலி பார் நான் படலைதாண்டிப்போறன் எல்லாம் எனக்குத்தெரியும் நான் உன்னைவிட ஏட்டுக்கல்வி படிச்சிட்டன் என்று!ம்ம்

    ReplyDelete
  56. இனி வரும் காலம் நல்லாயிருக்கட்டும்,ஆண்டவன் தயவில்!//

    அதுவேதான் அண்ணா .மனிதர் கைவிட்டாலும் இறைவன் கைவிடமாட்டார் .அந்த நம்பிக்கையில் இருப்போம்

    ReplyDelete
  57. இனிய வணக்கம் அஞ்சலின் அக்கா..... இன்று முதல் உங்களுடன் நட்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி,,,,,,,,,

    நான் நலமே இருக்கிறேன்... நன்றி
    நீங்கள் நலமா

    ReplyDelete
  58. சுமைகளை துணைவியார் மீது போட முடியாது தான்..... சுமைகளை எப்படி எந்த நேரத்தில் எந்த நுமையை இறக்கி வைப்பது என உங்களுக்கு ஆலோசனை தந்து மனச் சுமையை இறக்கி வைப்பதே பெரிய ஆறுதல் அல்லவா

    16 June 2012 12:10 //ம்ம் அது உண்மைதான் கலைவிழி!

    ReplyDelete
  59. தனிமரம் said...

    ம்ம் அது எல்லாம் மாறுதாம் நீ உன் சோலி பார் நான் படலைதாண்டிப்போறன் எல்லாம் எனக்குத்தெரியும் நான் உன்னைவிட ஏட்டுக்கல்வி படிச்சிட்டன் என்று!ம்ம்..///ஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்!!!

    ReplyDelete
  60. கட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்!ஹி!ஹி!ஹீ!!!!!!!//

    நீங்க சொல்வது சரிதான் .

    16 June 2012 12:11 //ம்ம் ஒரு விதத்தில் சரிதான் அஞ்சலின் அக்காள்.

    ReplyDelete
  61. நலம் அண்ணா .ஆனா அந்த கண்களில் இன்னமும் இருந்தாற்போலிருந்து ஒரு கடிக்கிற SENSATION //IRRITATE செய்கிறது

    ReplyDelete
  62. பம்பாய் //படப் பாடல் மிக அருமை .// ந்ன்றி அஞ்சலின் அக்காள் அந்தப்பாடல் வைரமுத்துவின் முததில் எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  63. அண்ணாச்சி இந்த இடத்தில் தனிமரம் என்று என்னை சொன்னேன்.... கோவிக்க கூடாது உங்கள் பெயரை அனுமதி இன்றி பாவித்ததுக்கு
    நாங்கள் எப்பவும் உதவாக்கரை லிஸ்டிலதான் இருப்போம்.. கொஞ'சம் வித்தியாசமா இருக்கட்டுமே

    ReplyDelete
  64. ஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்!!!//

    அப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே

    ReplyDelete
  65. அதுவேதான் அண்ணா .மனிதர் கைவிட்டாலும் இறைவன் கைவிடமாட்டார் .அந்த நம்பிக்கையில் இருப்போம்

    16 June 2012 12:15//ம்ம் உண்மைதான் அஞ்சலின் அவர் தான் எல்லாம்.

    ReplyDelete
  66. angelin said...

    நலம் அண்ணா .ஆனா அந்த கண்களில் இன்னமும் இருந்தாற்போலிருந்து ஒரு கடிக்கிற SENSATION //IRRITATE செய்கிறது.///கண் கவனமாக இருக்க வேண்டும்.ஓய்வு கொடுக்க வேண்டும் நிறையவே!கம்பியூட்டர்,தொலைக்காட்சி கொஞ்சமாக பார்க்க/படிக்க வேண்டும்.

    ReplyDelete
  67. எங்கே உங்கள் மருமகள் கலையை காணோம் .
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ /என்ற கர்ஜனை கேட்டு நாளாகுது:))))))))

    ReplyDelete
  68. angelin said...

    ஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்!!!//

    அப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே?////ஆமாமா,அப்போ தான் நாம பிறவிப் பயனை அடைவோம்!

    ReplyDelete
  69. ஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்!!!//ம்ம் அது வேண்டாம் என்றாள் வில்லனாக இருப்பது மேல் என்பது என் கணிப்பு ஆனால் பாசக் கயிறு விடாதாம் !ம்ம்

    ReplyDelete
  70. .ஓய்வு கொடுக்க வேண்டும் நிறையவே!கம்பியூட்டர்,தொலைக்காட்சி கொஞ்சமாக பார்க்க/படிக்க வேண்டும்.//

    இது மகரந்தம் பறப்பதால் ஏற்படும் HAY FEVER அலர்ஜி

    ReplyDelete
  71. நலம் அண்ணா .ஆனா அந்த கண்களில் இன்னமும் இருந்தாற்போலிருந்து ஒரு கடிக்கிற SENSATION //IRRITATE செய்கிறது

    16 June 2012 12:1//ம்ம் சரியாகும் யோசிக்காதீங்கோ அஞ்சலின் அக்காள்§

    ReplyDelete
  72. angelin said...

    எங்கே உங்கள் மருமகள் கலையை காணோம் .
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ /என்ற கர்ஜனை கேட்டு நாளாகுது:))))))))////என்ன சிரிப்பு?????என்னோட செல்ல மருமக உங்களுக்கு இளக்காரமாப் போச்சோ?ஊருலா போயிருக்கிறா,வருவா கருக்கு மட்டையோட!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  73. யோகா ஐயா கருக்கு மட்டை உங்கேயும் இருக்குதோ........

    ReplyDelete
  74. அண்ணாச்சி இந்த இடத்தில் தனிமரம் என்று என்னை சொன்னேன்.... கோவிக்க கூடாது உங்கள் பெயரை அனுமதி இன்றி பாவித்ததுக்கு
    நாங்கள் எப்பவும் உதவாக்கரை லிஸ்டிலதான் இருப்போம்.. கொஞ'சம் வித்தியாசமா இருக்கட்டுமே// ம்ம் நான் கோபிக்க மாட்டன் தனித்துவம் முக்கியம் கலைவிழி பட்டியல் போட்டு சுட்டிக்காட்டினால் சுற்றில் நிக்காது காட்டாறு!ம்ம் ,

    ReplyDelete
  75. angelin said...

    .ஓய்வு கொடுக்க வேண்டும் நிறையவே!கம்பியூட்டர்,தொலைக்காட்சி கொஞ்சமாக பார்க்க/படிக்க வேண்டும்.//

    இது மகரந்தம் பறப்பதால் ஏற்படும் HAY FEVER அலர்ஜி.////ஓ......அதுவா?இங்கே எனக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நண்பருக்கும் இதே தொல்லை. ,

    ReplyDelete
  76. இல்லையில்லை :) நான் கிண்டல் செய்யல உங்க மருமகளை

    ReplyDelete
  77. கலைவிழி said...

    யோகா ஐயா கருக்கு மட்டை உங்கேயும் இருக்குதோ........?///இங்க கடைக்கு பொருள் இறக்குமதி செய்வோரிடம் சொன்னால் இறக்கிவிட மாட்டார்கள்?ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  78. அப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே//ம்ம் அதைச் சொல்லணும் தப்பு என்று வெட்டிவிட்டால் போதும் பாசக்கயிறை கம்பன் கந்தர்வன் கோட்டையில் மரம் வெட்டிய இலக்குவன் போல!ம்ம்

    ReplyDelete
  79. உண்மைய சொன்னா ரொம்ப போரடிக்குது அண்ணா உங்க மருமக இல்லாம .

    ReplyDelete
  80. ஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்

    ReplyDelete
  81. எங்கே உங்கள் மருமகள் கலையை காணோம் .
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ /என்ற கர்ஜனை கேட்டு நாளாகுது:))))))))

    16 June 2012 12//ம்ம் ஊரில் ஓய்வு வரட்டும் மெதுவாக அப்பா அம்மா அண்ணா செல்லம் தானே இளவரசி!

    ReplyDelete
  82. சீசி இனி நான் எங்கேயும் உங்களுடைய தனித்துவமான பெயரை உபயோகிக்க மாட்டேன்.........

    ஒருக்காத் தான் சும்மா சொல்லிப் பாத்தன்.

    ReplyDelete
  83. angelin said...

    இல்லையில்லை :) நான் கிண்டல் செய்யல உங்க மருமகளை!///நானும் சும்மா தான்,ரவுசு விட்டுப் பாத்தேன்!

    ReplyDelete
  84. கருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே

    ReplyDelete
  85. அப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே?////ஆமாமா,அப்போ தான் நாம பிறவிப் பயனை அடைவோம்!

    16 June 2012 12:21 //ஹீ பயனா பாவமா !ம்ம்

    ReplyDelete
  86. ரெவரியின் பதிவில் படங்கள் எதுவும் தெரியல ..உங்க யாருக்கும் தெரிகிறதா

    ReplyDelete
  87. angelin said...

    உண்மைய சொன்னா ரொம்ப போரடிக்குது அண்ணா உங்க மருமக இல்லாம .///அவவுக்கும்,அப்புடித்தான் இருக்கும்!என்ன செய்ய இரத்த உறவுகளும் முக்கியமில்லியா???

    ReplyDelete
  88. இது மகரந்தம் பறப்பதால் ஏற்படும் HAY FEVER அலர்ஜி

    16 June 2012 12:22 //ம்ம் பூக்களால் மூக்கில் வரும் அலர்ச்சி அதிகம் அஞ்சலின் இங்கும் அதிகமானவருக்கு இருக்கு!

    ReplyDelete
  89. திடீரென என்னை காணவில்லை என்றால் யாரும் தேடாதேங்கோ

    ReplyDelete
  90. angelin said...

    கருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே?////Ha!Ha!Haa!!!He!He!He!!!Ho!Ho!!!!!

    ReplyDelete
  91. கனனியில் பட்டறி முடிஞ்சு போட்டுது

    ReplyDelete
  92. யோகா ஐயா கருக்கு மட்டை உங்கேயும் இருக்குதோ........//ம்ம் எல்லாம்இம்போட் கலைவிழி!ஹீ

    ReplyDelete
  93. அவவுக்கும்,அப்புடித்தான் இருக்கும்!என்ன செய்ய இரத்த உறவுகளும் முக்கியமில்லியா???//

    ஆமாம் அண்ணா .நீங்க சொல்வதும் சரியே .

    ReplyDelete
  94. கலைவிழி said...

    திடீரென என்னை காணவில்லை என்றால் யாரும் தேடாதேங்கோ!////ஷாக் எல்லாம் குடுக்காதையுங்கோ!இந்த இடத்தில எண்டு சொல்ல வேணும்!!!

    ReplyDelete
  95. கருக்கு மட்டை என்பது பனை மரத்தின் ஓலையை தாங்கும் தண்டு.. அதில் முற்கள் இருக்கும்.. அதால் அடித்தால் தோல் எல்லாம் காயம் ஏற்பட்டு இரத்தம் வரும்

    ReplyDelete
  96. கருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே?////Ha!Ha!Haa!!!He!He!He!!!Ho!Ho!!!!!//

    ஏன் அண்ணா ..இப்படி சிரிக்கீங்க ..எனக்கு இன்னமும் தெரியாது
    நானும் சும்மா தெரிந்தாற்போல் தலையாட்டுவேன்

    ReplyDelete
  97. கலைவிழி said...

    கனனியில் பட்டறி முடிஞ்சு போட்டுது.///அடச்சீ!இவ்வளவு தானா???அப்பிடியே கலை மாதிரியே..................................!

    ReplyDelete
  98. உண்மைய சொன்னா ரொம்ப போரடிக்குது அண்ணா உங்க மருமக இல்லாம .//ம்ம் சமயத்தில் எனக்கும் தான் அஞ்சலின் கலாய்ப்பதில் கலை ஒரு குறும்புக்கார தங்கச்சி! எனக்கும்! வலையில் வந்தாலும் என் உடன் பிறப்பு பட்டியலில் வாத்தும் ஒரு உறவு எனக்கு.

    ReplyDelete
  99. angelin said...

    கருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே?///இல்லேம்மா,அது "பனை" மரத்துக் கிளை!

    ReplyDelete
  100. பயப்புடாதேங்கோ ஐயா நான் நல்ல பொண்ணாக்கும்.........

    இந்த உறவுகளை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போக மாட்டேன்

    ReplyDelete
  101. கலைவிழி said...
    கருக்கு மட்டை என்பது பனை மரத்தின் ஓலையை தாங்கும் தண்டு.. அதில் முற்கள் இருக்கும்.. அதால் அடித்தால் தோல் எல்லாம் காயம் ஏற்பட்டு இரத்தம் வரும்///

    அவ்வ்வ்வவ்வ்வ் ..இனிமே கவனமாதான் பேசணும் .நான் தென்ன மட்டை என்றல்லவா நினைத்தேன்

    ReplyDelete
  102. ரெவரியின் பதிவில் படங்கள் எதுவும் தெரியல ..உங்க யாருக்கும் தெரிகிறதா

    16 June 2012 12:31 //ம்ம் புதிய மாற்றம் ஒரு படமும் எனக்குத்தெரியவில்லை!ம்ம்

    ReplyDelete
  103. திடீரென என்னை காணவில்லை என்றால் யாரும் தேடாதேங்கோ

    16 June 2012 12:32 // நீங்க நித்திரை என்று நினைப்போம் கலைவிழி!

    ReplyDelete
  104. ஆமாம் நேசன் .அவ ஆடு பற்றி சொன்னவுடன் ,நான் ஆட்டுடன் இருக்கும் ஒரு படம் தேடி எடுத்தேன் ,அதை போட்டா இன்னமும் என்னை கிண்டல் செய்வா .அந்த பயத்தில் படத்தை போடாம் வச்சிருக்கேன் :))))))

    ReplyDelete
  105. கலைவிழி said...

    பயப்புடாதேங்கோ ஐயா நான் நல்ல பொண்ணாக்கும்.........

    இந்த உறவுகளை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போக மாட்டேன்.///நான் சும்மா தாம்மா சொன்னேன்,மருமக இல்லாத இடத்துக்கு நீங்க ரெண்டு பேர் வந்திருக்கிறீங்க.சந்தோஷமாயிருக்கு!!!!

    ReplyDelete
  106. ஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்//ஓம்` சேர்ந்து களவு எடுக்க ஆள் இருக்காது தனியாக போகணும் களவானிக்கூட்டம்!ஹீ

    ReplyDelete
  107. angelin said...

    ஆமாம் நேசன் .அவ ஆடு பற்றி சொன்னவுடன் ,நான் ஆட்டுடன் இருக்கும் ஒரு படம் தேடி எடுத்தேன் ,அதை போட்டா இன்னமும் என்னை கிண்டல் செய்வா .அந்த பயத்தில் படத்தை போடாம் வச்சிருக்கேன் :))))))///உங்கள அப்புடீல்லாம் கலாய்க்க மாட்டா!உங்க பேர்ல ஒரு மரியாத இருக்கு அவவுக்கு.சும்மா ஜாலிக்குப் பேசுவா.

    ReplyDelete
  108. கனனியில் பட்டறி முடிஞ்சு போட்டுது//ம்ம் நன்றி கலைவிழி வருகைக்கும் கருத்துக்கும் ஓய்வு கொடுங்கோ கணனிக்கு அதுவும் பாவம் தானே!ம்ம் உங்கள் விரல்வேகத்துக்கு ஈடுகொடுக்கும் கருக்குமட்டை அல்லவா!
    லொல்லு!

    ReplyDelete
  109. இலங்கை தமிழ் அழகிய தமிழ்
    நாங்க சென்னைவாசிகள்
    வேய்ட் பண்ணுங்க என்போம்
    ஒரு அக்கா என்னிடம் நிக்கறீங்களா என்றார்கள்
    சேர்ல உக்காந்திருந்த நான் விளங்காமல் எழ்ம்பி நின்றேன் .
    அவங்களே சிரிச்சுட்டாங்க .இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது .கலை படிக்க மாட்டா என்ற தைரியத்தில் எழுதுகிறேன் :))

    ReplyDelete
  110. தனிமரம் said...

    ஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்//ஓம்` சேர்ந்து களவு எடுக்க ஆள் இருக்காது தனியாக போகணும் களவானிக்கூட்டம்!ஹீ!!///தம்பிக்கு இருக்கு, வந்தாப்பிறகு,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  111. கருக்கு மட்டை என்பது பனை மரத்தின் ஓலையை தாங்கும் தண்டு.. அதில் முற்கள் இருக்கும்.. அதால் அடித்தால் தோல் எல்லாம் காயம் ஏற்பட்டு இரத்தம் வரும்

    16 June 2012 12:35 //ம்ம் சமயத்தில் வேலி கட்டவும் உதவும்!ஹீ

    ReplyDelete
  112. சரி அண்ணா /நேசன் கலைவிழி .பணி சப்பாத்தி சுடும் பணி எனை அழைக்குது .மீண்டும் சந்திப்போம் நல்லிரவு வணக்கம்

    ReplyDelete
  113. நான் வந்துட்டன்

    ReplyDelete
  114. angelin said...

    .கலை படிக்க மாட்டா என்ற தைரியத்தில் எழுதுகிறேன் :))///அவ படிக்காட்டி என்ன?நாங்க படிக்க வைப்பமே????????எப்புடியும் ஒரு வாரத்துக்குப் பத்தாது?ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  115. என்னதான் ஊருக்கு நல்லது செய்தாலும் எப்படா இந்தப் பொண்ணு ஊர விட்டு ஓடும் என்று ஒரு கூட்டம் பாத்துக் கொண்டே இருக்குதுகள்.....

    கொடுமை கொடுமை

    ReplyDelete
  116. ஆமாம் நேசன் .அவ ஆடு பற்றி சொன்னவுடன் ,நான் ஆட்டுடன் இருக்கும் ஒரு படம் தேடி எடுத்தேன் ,அதை போட்டா இன்னமும் என்னை கிண்டல் செய்வா .அந்த பயத்தில் படத்தை போடாம் வச்சிருக்கேன் :))))))///உங்கள அப்புடீல்லாம் கலாய்க்க மாட்டா!உங்க பேர்ல ஒரு மரியாத இருக்கு அவவுக்கு.சும்மா ஜாலிக்குப் பேசுவா.

    16 June 2012 12:42// உண்மைதான் அஞ்சலின் அண்ணா என்னையே கலாய்க்கும் போது அக்காளை என்ன பாடு படுத்துவா வாய்க்காரி பாவம் நாத்தனாரும் ஹேமாவும் தான்/!ஹீ

    ReplyDelete
  117. நடுச் சாமத்தில் இப்படி சிரிக்க வச்சுட்டிங்களே அக்கா..........

    அத சரி கால்கடுக்க எவ்வளவு நேரம் நிண்டீங்க

    ReplyDelete
  118. சரி ஏஞ்சலின்,குட் நைட்!!!!///எட்டே முக்கா வரைக்கும் பொண்ணுக்கு சப்பாத்தி சுடாமையா இங்க இருந்தீங்க?ஒங்களுக்குக் கருக்கு மட்டை அடி கலை வந்து கொடுப்பா!!!!

    ReplyDelete
  119. இலங்கை தமிழ் அழகிய தமிழ்
    நாங்க சென்னைவாசிகள்
    வேய்ட் பண்ணுங்க என்போம்
    ஒரு அக்கா என்னிடம் நிக்கறீங்களா என்றார்கள்
    சேர்ல உக்காந்திருந்த நான் விளங்காமல் எழ்ம்பி நின்றேன் .
    அவங்களே சிரிச்சுட்டாங்க .இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது .கலை படிக்க மாட்டா என்ற தைரியத்தில் எழுதுகிறேன் :))

    16 June 2012 12:44 //ம்ம் எனக்கு பாண்டி அனுபவம் அதிகம் என்பதால் தப்பிக்கின்றேன் அஞ்சலின் அக்காள்!ஹீ

    ReplyDelete
  120. அவ ஆறு மணிக்கே சாப்பிட்டா அண்ணா இது எனக்கும் கணவருக்கும்

    ReplyDelete
  121. ஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்//ஓம்` சேர்ந்து களவு எடுக்க ஆள் இருக்காது தனியாக போகணும் களவானிக்கூட்டம்!ஹீ!!///தம்பிக்கு இருக்கு, வந்தாப்பிறகு,ஹ!ஹ!ஹா!!!!!!

    16 June 2012 12:44 // ஹீ அதுக்குள் நான் படலையாள் சந்திக்கு போய் விடுவேன் ஓட்டத்தில் தனிமரம்!ஹீ

    ReplyDelete
  122. ஒரு ஆறேழு நிமிடம் இருக்கும் கலைவிழி :)))
    நல்லவேளை அவங்க திரும்பி பார்த்தாங்க (வடை சுட்டு கொண்டு இருந்தாங்க )

    ReplyDelete
  123. GOOD NIGHT :)))NESAN /YOGA ANNA/KALAIVIZHI

    ReplyDelete
  124. angelin said...

    அவ ஆறு மணிக்கே சாப்பிட்டா அண்ணா இது எனக்கும் கணவருக்கும்.///சரிம்மா,குட் நைட்!அப்புறம் பாப்போம்!!!

    ReplyDelete
  125. சரி அண்ணா /நேசன் கலைவிழி .பணி சப்பாத்தி சுடும் பணி எனை அழைக்குது .மீண்டும் சந்திப்போம் நல்லிரவு வணக்கம்

    16 June 2012 12:4// நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் சந்திப்போம் குட் நைட்!

    ReplyDelete
  126. இதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...
    ஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....

    ReplyDelete
  127. சரி கலைவிழி,நல்லிரவு வணக்கம்,கொஞ்சமா கண் உறங்குங்கள்!நேசன் சாப்பாடு ............உங்களுக்கும் நல்லிரவு,மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  128. என்னதான் ஊருக்கு நல்லது செய்தாலும் எப்படா இந்தப் பொண்ணு ஊர விட்டு ஓடும் என்று ஒரு கூட்டம் பாத்துக் கொண்டே இருக்குதுகள்.....

    கொடுமை கொடுமை

    16 June 2012 12:48 // சீச்சீ அப்படி இல்லை கலைவிழி அந்தப்பொண்ணுக்கும் ஆயிரம் சோலி இருக்கும் என்று புரியாத வாத்துமடையங்களா ஐரோப்பாவில் வாழும் அண்ணாக்கள் ஐயாக்கள் அக்காள்கள் நாத்தானார்கள்!ஹீ

    ReplyDelete
  129. அத சரி கால்கடுக்க எவ்வளவு நேரம் நிண்டீங்க//ம்ம் என்ன ஒரு 40 நிமிட பாட நேரத்தில் நாள் முழுவதுமா இல்லையே ,,!ஹீ

    ReplyDelete
  130. காற்றில் எந்தன் கீதம் said...

    இதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...
    ஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....////உண்மைதான் சகோ!நடப்பவை நல்லனவாக அமையட்டும்.

    ReplyDelete
  131. அவ ஆறு மணிக்கே சாப்பிட்டா அண்ணா இது எனக்கும் கணவருக்கும்

    16 June 2012 12:51//ம்ம் எனக்கும் அனுப்புக்குங்கோ நாளை இரவு நானும் அக்காள் குசினியை உருட்டணும் சப்பாத்தி ஆசையாக இருக்கு!ஹீ அவாக்கு அது பக்குவம் வராது தம்பிதான் கிங்!ஹீ

    ReplyDelete
  132. இதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...
    ஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....//ம்ம் வாங்க தோழி காற்றில் என் கீதம் நலமா!ம்ம் நான் ஒன்றும் அறியேன் பராபரனே ஒரு வழிப்போக்கன் அவ்வளவும் தான் ஆனால் மனதில் சாந்தியும் சமாதானமும் உண்டாக என்று சொன்னவர்கள் ஊட்டிவிட்டது ஒரு குடும்ப தேவதையின் வாழ்வில் புயலை மரணத்தை அறிந்த வழிப்போக்கன் வலி ஊருக்குத்தெரியாது! என்பது நிஜம் தோழி அது கடவுள் செயல் என்று நான் அறிந்தாலும் மற்றவர்கள் அறியணும் அதுதான் அவனுக்கு நான் எழுத்தாணியாக் இருந்து வ்லையில் எடுத்துவாரன்!ம்ம்

    ReplyDelete
  133. இதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...
    ஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....//ம்ம் நன்றி தோழி நான் சாமானியன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  134. காற்றில் எந்தன் கீதம் said...

    இதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...
    ஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....////உண்மைதான் சகோ!நடப்பவை நல்லனவாக அமையட்டும்.

    16 June 2012 13:02//ம்ம் யோகா ஐயா அந்தத்தோழி என் மரியாதைக்குரிய சகபதிவாளினி! ஒரு காலத்தில் இருகோடுகள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  135. ரி கலைவிழி,நல்லிரவு வணக்கம்,கொஞ்சமா கண் உறங்குங்கள்!நேசன் சாப்பாடு ............உங்களுக்கும் நல்லிரவு,மீண்டும் சந்திப்போம்!

    16 June 2012 12:58 //ம்ம் இனித்தான் யோகா ஐயா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்! நாளை மதியம் சந்திப்போம்!குட் நைட்!

    ReplyDelete
  136. வணக்கம் சகோதரர் நேசன்,
    ஆணாதிக்கத் தனங்கள் இன்றும் இருந்துகொண்டு தான்
    இருக்கின்றன..
    மதங்கள் என்றுமே ஆண்கள் தான் உயர்ந்தவர்கள்
    பெண்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லியதில்லை..
    இன்று இருப்பவர்களின் தவறான புரிதலே காரணம்...

    இங்கே நீங்கள் குறிப்பிட்ட பாடலும் அதன் கருவாக்கமும்
    ஒளிப்பதுவும் கண்ணை நிறைக்கும்..
    காதலுக்காக தன் மனதுக்கு பிடித்தவனுக்காக
    தன் மதம் கொண்ட சடங்கை
    உதறிவிட்டுப் போகும் ஒரு புதுமைப்பெண்...

    தொடரட்டும் ... மலையகத்தில் தொலைத்ததெல்லாம்
    மீண்டு வருகிறது உங்கள் எழுத்துக்கள் மூலம்...

    ReplyDelete
  137. வணக்கம் சகோதரர் நேசன்,
    ஆணாதிக்கத் தனங்கள் இன்றும் இருந்துகொண்டு தான்
    இருக்கின்றன..
    மதங்கள் என்றுமே ஆண்கள் தான் உயர்ந்தவர்கள்
    பெண்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லியதில்லை..
    இன்று இருப்பவர்களின் தவறான புரிதலே காரணம்...

    இங்கே நீங்கள் குறிப்பிட்ட பாடலும் அதன் கருவாக்கமும்
    ஒளிப்பதுவும் கண்ணை நிறைக்கும்..
    காதலுக்காக தன் மனதுக்கு பிடித்தவனுக்காக
    தன் மதம் கொண்ட சடங்கை
    உதறிவிட்டுப் போகும் ஒரு புதுமைப்பெண்...

    தொடரட்டும் ... மலையகத்தில் தொலைத்ததெல்லாம்
    மீண்டு வருகிறது உங்கள் எழுத்துக்கள் மூலம்...

    16 June 2012 19:21 // நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் அனித்தரமான கருத்துரைக்கும்!

    ReplyDelete