09 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -04

புலம்பெயர்ந்துவிட்டான். வெளிநாட்டில் நல்லாக செட்டில் ஆகிவிட்டான் என்றும் சொல்லும் உறவுகள்.

அகதியாக என்று சொல்லும் தாயக உறவுகள் எல்லாம் அறியாது.

அகதியாக இந்த ஐரோப்பிய தேசம் வந்து சேர இடையில் பட்ட அவலங்கள்.

எத்தனையோ இலக்கியம் வாழும் இந்த உலகில் அகதியாக அலைந்தவன்கள் கதையை அழகாய் சொல்லும் நாவல் உயரப்பறக்கும் காகங்கள் என்றாலும் அதில் மேன்போக்காக வந்து போகும் அகதி விடயம் .

என்றாலும் இந்த அகதி என்ற முத்திரையை முகத்தில் தாங்க முகம் தொலைந்தவர்கள் பற்றி ஆராய்ந்தால் எத்தனை அவலத்தை ஈழத்து சந்ததி கண்டு வந்தது என்று இன்னும் உண்மையுடன் ஒரு வார்த்தை தன்னும் அடுத்த சந்ததிக்கு தெரியாமல் இருக்கும் பல மூத்தவர்கள்.

தங்கள் குடும்பம் என்ற கோயிலில் மூலவராக இருக்கின்றார்கள் .

எங்கே உண்மையைச் சொல்ல முடியும் இலக்கியத்தில் இதை பதிவு செய்தால் இனி ஒருத்தனும் அகதி என்ற கப்பலில் வரமாட்டார்கள் !என்ற உண்மையைக்கூட பூசி மெழுகாக்குவது அசிங்கம் என்று தன்னை நினைத்து வெட்கப்படுவார்களோ ?என்ற அவநம்பிக்கையில்.

எனக்கு வெட்கம் இல்லை, ரோசம் இல்லை, சூடுசுறனை இல்லை ,உதவாக்கரை,

இலக்கியம் இருட்டடைப்பு செய்து வாசகர்களுக்கு உண்மை சொல்லாத மூத்த இலக்கியவாதிகள் போலவும் இல்லை நான்.

தளபதிக்கு பிறந்தநாள் விளம்பரமும் ,தல ஒரே உடுப்பை போட்டு நடப்பதே நடிப்பு மட்டுமா அவர் நடிப்பு  என்று கூறி நக்கல் ஊடே ஒருத்தன் பின் புலம் இல்லாமல் வெற்றியீட்டியதை  ஆதரிக்காமல் தந்தை நிழலில் வந்தவருக்கு  சப்பைக்கட்டு கட்டும் ரசிகரும் நான் இல்லை .

என் நாட்குறிப்பை எந்த விருப்பு, வெறுப்பும் கடந்து உண்மையில் இப்படி எல்லாம் நான் இருந்தேன் என்பதை என் தாத்தா என்றாவது புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் .

நான் என் நாட்குறிப்பை எழுதுவது.

தாத்தா பாசம் கிடைக்க இந்த ரவி போல யார் எங்க குடும்பத்தில் .

மூத்தவன் என்ற தலமையைத் தந்த தாத்தா யுத்தம் தந்த சாபத்தில் இருந்து பாதுகாத்து வடக்கில் ஒரு தீவில் இருந்து எங்க குடும்பம் எல்லாம் இடம்பெயர்ந்து வன்னி வந்த போது !

வன்னியில் என்னை இருக்க விடாமல் வவுனியா அனுப்பியதும் பாசம் தான்

.இந்த நேரத்தில் தான் 1999 செப்டம்பர் மாதம் மலையகத்தில் இருந்து ராகுல் வந்தான் விற்பனைப்பிரதிநிதியாக ஒரு பல்தேசியக்கம்பனிக்கு வவுனியா பகுதிக்கு.


அந்த மாவட்டப்பிரதிநிதியாக. சமகாலத்தில் வேற ஒரு கம்பனிக்கு பொறுப்பாக வவுனியாவில் என்னோடு இருந்தவன் தான் இன்று இங்கிருந்து பயணம் போன ஜீவனும் .

நாங்கள் எல்லாம் ஒரே இரவில்! தீவைக்கடந்தாலும் வன்னிபோன போதும் பிரியாத நட்பு சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் சேர்ந்தோம் வேலைத்தளத்தில் .

தனியார் துறை வேலையில் சேரும்போது வருடங்கள் அனுபவம் முப்பு அடிப்படையில் ராகுலும், ஜீவனும் எனக்கு தம்பிகள் .

.ஆனால் வயதில் ஒன்று!

எங்கள் கம்பனிச்சட்டங்களில் பிற வருமானம் ஈட்டுவது சட்டப்படி தவறு.

ஆனால் வியாபாரப்பரம்பரையில் வந்த இரத்தம் கம்பனிச்சட்டத்துக்கு வேலி தாண்டி கூட்டாளிகளாக வியாபாரம் செய்தோம்.

இரானுவக்கட்டுப்பாட்டுக்குள் இருந்து கட்டுப்பாட்டு இல்லாத பகுதிக்கு எங்கள் பொருட்களை அனுப்பவதில் பலர் போட்டி போட்டோம் .

இந்த வேலையில் தான் பாதுகாப்பு பச்சோந்திகள் கேட்டது கையூட்டல்.

கொடுத்தோம் கொடுத்தோம் உழைத்தோம் உழைத்தோம் !

உண்மையில் இரண்டு தொழில் செய்து களவு இல்லை என்பது மட்டும் நிஜம் .

பொய் சொல்வது ஒரு நிறுவனத்திற்கு மட்டும் .


வவுனியா வருவது என்றாள் உத்தரவு வாங்கி வரவேண்டும் என்பதால் சகோதரமொழி அதிகாரிகளுக்கு தண்ணீர்கட்டுவதில் நாங்கள் கில்லாடி.


அப்போது கைபேசி வரவில்லை பேஜர் மட்டும் தான் .

அதனால் இணைப்பு கிடைக்கவில்லை என்று சாட்டுச் சொல்ல முடியும் ஆனால் காவல் துறையின் விளக்கமறியலில் இருக்கும் போது பொய் சொல்ல முடியாது.


பேராசை பெருநட்டம் என்றாகிவிட்டது பெரும் வலியோடு வாகனத்தில் குண்டு இருந்தது என்று எடுத்த கரங்களுக்கு கொடுக்க முடியாது அந்தளவு தொகை என்றதைச் சொன்னதன் விளைவு பூட்டினார்கள் கைவிலங்கு .


போனது வவுனியா காவல் நிலையம் அங்கிருந்து அனுராதபுரம்.

அதுகடந்து மகசன் சிறை மண்டியிட்டபோது வந்து பார்த்தவர்கள் கேட்டது நீதிமன்றத்தில் 2 வருடம் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்காமல் எங்கள் பிள்ளைகளை பிணையாக விடுங்கள் என்று.

அரசியல் எங்கள் பின்புலமாக இருந்த படியால் சட்டம் வளைந்து கொடுக்க.

இரவோடு இரவாக இலங்கைத்தீவைவிட்டு வெளியேறிய பெயர்தான் இந்த ரவி!

,ஜீவன் என்னோடு கட்டுநாயக்காவூடாக தாய்லாந்தில் வந்து சேர்ந்தோம்.


மங்கோலியா குளிரில் மாண்டவர்களும் செங்கொஸ்லாவியா ஊடாக நடைவண்டியில் நடைப்பிணம், ஆனவர்களும், மொஸ்கோவில் மோட்சம் போனவர்கள் ,கதையை கம்பிகளின் ஊடாக பாரிஸ்குடும்பி சொன்னது போல வந்த துயரங்கள் சொன்னார்களா ?மூத்தவர்கள்?

என்று நான் அறியேன் !

ஆனால் எங்களோடு கடலில் போனவர்கள் முகம் கட்டாயம் ஞாபகம் வரும் .

எந்த செய்தியை கேட்கும் போது உருகும் பிரெஞ்சிக்காரி உண்மை சொல்லவில்லை என்கிறால்!

நடந்தது எல்லாம் சொன்னால் அசிங்கம் என்று நான் ஒதுங்க மாட்டன் எனக்கு !குடும்பம் ஜீவன் போல ஆலமரம் இல்லை நான் அனாதை !பாவம் சுமக்கின்றேன் ! தொடரும்!

36 comments:

  1. திரட்டிகளில் இணையுங்கள் அன்பு உறவுகளே! இணையம் சதி செய்கின்றது!

    ReplyDelete
  2. முதல் காப்பி கேக்க ஓடி வந்தேன், பதிவை படித்துவிட்டு மனசு வெந்தது நண்பா கண்ணீருடன்....!

    ReplyDelete
  3. தமிழ் பத்து, இன்ட்லி இணைத்து விட்டேன், தமிழ்மணம் நமக்கு இல்லை நண்பா...

    ReplyDelete
  4. நேசன் இந்தப் பாட்டைக் கேக்கிற நேரமெல்லாம் அழாத நாளில்லை.இப்பவும் அழுகிறன்....என் நாடு,என் தேசம்,போர்,இரத்தம்,இழப்புக்கள்....தொடரா போகுது....நினைவுகள் உயிரை மட்டுமேன் காப்பாத்தி வச்சிருக்கிறன் நான் !

    ReplyDelete
  5. சந்திரிகா அம்மையார்.....அம்மா கதை கதையாச் சொல்லுவா.எதை மன்னிச்சு யாரோட ஒத்துப்போறது..?!

    ReplyDelete
  6. indliyil inaiththen .


    thodarnthu varuven!

    ReplyDelete
  7. ஒருபோதும் மறக்க முடியாதவைகளாகவா அவைகள் இன்னமும்.......நெஞ்சத்தில் ஊசலாடுகின்றன

    ReplyDelete
  8. வன்னியில் என்னை இருக்க விடாமல் வவுனியா அனுப்பியதும் பாசம் தான்..............

    வன்னி = வவுனியா....?

    ReplyDelete
  9. ஈழச் சகோதரர்களின் துயங்கள் கேட்கக் கேட்க மனம் கனக்கிறது.இன்னும் தெரியாதவை எவ்வளவு உள்ளதோ?

    ReplyDelete
  10. நாடு இரவொன்றில் என்னையும் மீளதள்ளியது கடந்த காலத்துக்கு உருகும் பிரஞ்சுகாரி
    உருகும் பிரஞ்சுகாரி 4_பயணக்களைப்பு

    ReplyDelete
  11. என்ன சொல்வது இந்தப்பதிவுக்கு தொடருங்கள் தொடர்கின்றேன் வேறு என்ன சொல்ல முடியும்

    ReplyDelete
  12. இருங்க...இதற்கு முதல் பதிவை படித்துவிட்டு ஓடி வருகிறேன். :)

    ReplyDelete
  13. வழமைபோல தொடர்
    நன்றாகப் போகுது.

    ReplyDelete
  14. //எனக்கு வெட்கம் இல்லை, ரோசம் இல்லை, சூடுசுறனை இல்லை ,உதவாக்கரை,
    //

    ஹா...ஹா..ஹா.. இப்படி ஒரு மனமிருந்தால், வாழ்க்கையில் தோல்வி துன்பத்துக்கே இடமில்லை... இப்படித்தான் நானும் நினைப்பதுண்டு
    நோ வெட்கம் நோ ரோஷம்:)).

    வீடியோவும் பார்த்தேன்ன்ன்:(.

    ReplyDelete
  15. முதல் காப்பி கேக்க ஓடி வந்தேன், பதிவை படித்துவிட்டு மனசு வெந்தது நண்பா கண்ணீருடன்....!

    9 August 2012 13:43 // வாங்க மனோ அண்ணாச்சி கண்ணீர் விட்டாலும் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ மனசு பாரம் குறையும்!ம்ம்

    ReplyDelete
  16. தமிழ் பத்து, இன்ட்லி இணைத்து விட்டேன், தமிழ்மணம் நமக்கு இல்லை நண்பா...

    9 August 2012 13:47 // நன்றி மனோ அண்ணாச்சி!

    ReplyDelete
  17. Namma sonyha kathai sokakkathai// சோகத்தையும் சொல்லி அழுவோம் கவிக்கிழவா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  18. நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  19. நேசன் இந்தப் பாட்டைக் கேக்கிற நேரமெல்லாம் அழாத நாளில்லை.இப்பவும் அழுகிறன்....என் நாடு,என் தேசம்,போர்,இரத்தம்,இழப்புக்கள்....தொடரா போகுது....நினைவுகள் உயிரை மட்டுமேன் காப்பாத்தி வச்சிருக்கிறன் நான் !

    9 August 2012 16:05 //ம்ம் பலர் அப்படித்தான் ஹேமா!ம்ம்

    ReplyDelete
  20. சந்திரிகா அம்மையார்.....அம்மா கதை கதையாச் சொல்லுவா.எதை மன்னிச்சு யாரோட ஒத்துப்போறது..?!//ம்ம் மறப்போம் சில பிழையான வழிநடத்தலை இருபக்கமும்!ம்ம் நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  21. ndliyil inaiththen .


    thodarnthu varuven!//ம்ம் நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  22. ஒருபோதும் மறக்க முடியாதவைகளாகவா அவைகள் இன்னமும்.......நெஞ்சத்தில் ஊசலாடுகின்றன

    9 August 2012 17:27 //ம்ம் அப்படித்தான் பலருக்கு சிட்டுக்குருவி!

    ReplyDelete
  23. வன்னியில் என்னை இருக்க விடாமல் வவுனியா அனுப்பியதும் பாசம் தான்..............

    வன்னி = வவுனியா....?// இல்லை சகோ வன்னியின் ஒரு பகுதிதான் வவுனியா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் சிட்டுக்குருவி!

    ReplyDelete
  24. ஈழச் சகோதரர்களின் துயங்கள் கேட்கக் கேட்க மனம் கனக்கிறது.இன்னும் தெரியாதவை எவ்வளவு உள்ளதோ?

    9 August 2012 17:32 //ம்ம் இருக்கு சகோ எரிமலை போல ஆயிரம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.முரளிதரன்!

    ReplyDelete
  25. நாடு இரவொன்றில் என்னையும் மீளதள்ளியது கடந்த காலத்துக்கு உருகும் பிரஞ்சுகாரி
    உருகும் பிரஞ்சுகாரி 4_பயணக்களைப்பு//ம்ம்ம் நன்றி நெற்கொழுவான் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  26. என்ன சொல்வது இந்தப்பதிவுக்கு தொடருங்கள் தொடர்கின்றேன் வேறு என்ன சொல்ல முடியும்//ம்ம் நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  27. நெஞ்சு கனக்கிறது...

    9 August 2012 23:22 //ம்ம் நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  28. இருங்க...இதற்கு முதல் பதிவை படித்துவிட்டு ஓடி வருகிறேன். :)

    10 August 2012 02:01 //ம்ம் படியுங்க நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹாலிவூட் ரசிகன்!

    ReplyDelete
  29. வழமைபோல தொடர்
    நன்றாகப் போகுது.//ம்ம் நன்றி அதிரா!

    ReplyDelete
  30. /எனக்கு வெட்கம் இல்லை, ரோசம் இல்லை, சூடுசுறனை இல்லை ,உதவாக்கரை,
    //

    ஹா...ஹா..ஹா.. இப்படி ஒரு மனமிருந்தால், வாழ்க்கையில் தோல்வி துன்பத்துக்கே இடமில்லை... இப்படித்தான் நானும் நினைப்பதுண்டு
    நோ வெட்கம் நோ ரோஷம்:)).

    வீடியோவும் பார்த்தேன்ன்ன்:(.

    10 August 2012 02:54 // ம்ம் நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  31. கனத்த மனதுடன் தொடர்கிறேன் ...
    பாடல் எப்போ கேட்டாலும் மனதை வலிக்க செய்துவிடும் :(

    ReplyDelete
  32. yen annaa ippurilaam

    ReplyDelete
  33. கனத்த மனதுடன் தொடர்கிறேன் ...
    பாடல் எப்போ கேட்டாலும் மனதை வலிக்க செய்துவிடும் :(

    11 August 2012 08:10 // நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  34. en annaa ippurilaam//ம்ம் அதுதான் கதை! நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete