22 October 2012

நெஞ்சில் வாழும் கலைஞன்!

ஹிந்தித் திரையுலகில் மிகநீண்டகால அனுபவமும் திறமையும் மிக்க மூத்த ஒரு படைப்பாளியும் சிறந்த ஆளுமையும் மிக்க ஒரு இயக்குனரை ஹிந்தி திரையுலகம் நேற்று (21/10/12 )இழந்து தவிக்கின்றது.

..யாச் சோப்ரா!

சினிமா இயக்குனர்கள் பலரின் பல படைப்புக்கள் சில ரசிகர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். ஒலியும் ஒளியும் சந்திக்கும் இந்த திரைப்பட ஊடகம் பல்வேறு படைப்பாளிகளை மொழி கடந்து நேசிக்க வைக்கின்றது. அப்படி நான் நேசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் தான் யாஸ் சோப்ரா.


யாஸ் சோப்ரா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவர் ஒரு இயக்குனர் ஹிந்தித் திரைவானில் என மட்டும் நன்கு அறிவேன்.
.அதே போல நல்ல கதாசிரியர்,நல்ல தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அவரின் மகன் ஆதித்த சோப்ராவும் ஒரு தயாரிப்பாளர். தந்தையோடு சேர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களை தந்து இருக்கின்றார்.

யாச் சோப்ராவின் படங்களை கொழும்பிலும் ,அனுராதபுரத்திலும் நான் அதிகம் பார்க்கும் சூழல் கிடைத்தது என் பணியின் காரணமாக. !

மக்களின் வாழ்க்கையின் மையமாக அதன் அடிநாதமாக இருப்பது குடும்பம் என்பதை மிக நேர்த்தியாக கையாளும் திறமைசாலி இயக்குனர்களில் ,கதாசியரியர்களில் மறைந்த யாஸ் சோப்ராவும் ஒருவர் என்பது நான் பார்த்த அவரின் படங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்.


யாஸ் சோப்ரா அதிகம் அமிதாப்பச்சனுக்குப் பின் பிற்காலத்தில் சாருக்கானை ஹிந்திப் பட உலகில் பாதுசாவாக உயர்த்தி விட்டவர்களில் முதன்மையானவர் எனலாம். பல நல்ல திரைப்படங்கள் யாஸ் சோப்ராவின் யாஸ் ராச் பிலிம்ஸ் மூலம் ஹிந்தியில் அதிக படங்களை மக்களுக்குத் தந்தவர்

.இவரின் படங்கள் நம்நாட்டில் சகோதரமொழியில் (சிங்களத்தில்)பின்னனிக்குரல் கொடுக்கப்பட்டு அதிக தடவை ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் ,மற்றும் சிரச தொலைக்காட்சியிலும் ரசிகர்களுக்கு விருந்தாக ஒலி ஒளிபரப்பப்பட்டது.இனியும் தொடரும் ரசிகர்கள் விருப்பு இன்னும் இருக்கின்றது. அப்படி பார்த்தவர்களில் நானும் ஒருவன் .தில் தோ பாஹல் ஹைய்,கபி குசி கபிகம், வீரசாகர்,மொகப்பத்தேன் என எனக்கு அவரின் படைப்புக்கள் அதிகம் பிடிக்கும்!

யாஸ் சோப்ராவின் பிரிவில் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவர் படத்தில் இருந்து சில காட்சிகள் மீளவும் அந்தப்படைபாளிக்கு சமர்ப்பணம் கலையஞன் உயிர் பிரிந்தாலும், கலைப்படைப்பு உயிர் வாழும் .

அப்படியானவர்களில் யாச் சோப்ரா எப்போதும் வாழும் படைப்பாளி .




17 comments:

  1. வணக்கம் நேசன் அண்ணா...
    எப்படி இருக்கீங்க...
    இவரின் படங்கள் பார்த்து இருக்கேன்.... ஆனால் இவரின் புகைப்படத்தை அவர் இறந்த பின்தான் பாக்கிறேன்... :--(

    சாதனையாளர்களுக்கு மரணம் இல்லை...

    ReplyDelete
  2. தொடர்ந்து தொடரே போடாமல் இடைக்கிடை இப்படியான வேறு பதிவுகளும் போடுங்கள் நேசன் அண்ணா...

    ReplyDelete
  3. இவர் தானே “மகா பாரதம்“ தொடரை இயக்கியவர்?

    சோப்ரா குடும்பத்தாருக்கு இதன்மூலம் உங்களுடன் நானும் என் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. நல்ல மனிதரை அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. நல்ல மனிதரை அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. உண்மையைச்சொன்னால் இவரை நான் இதுவரை அறிந்ததில்லை அவர் பற்றி அறியத்தந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  7. பகிர்வு அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடிந்தது...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  8. இவர் ஒரு பாலு மகேந்த்ரா தான்.
    இவருடைய சில படங்கள் பார்த்துள்ளேன் அற்புதமான கதையம்சங்கள்

    ReplyDelete
  9. நலமா நேசரே?

    YASH CHOPRA...ஹிந்தி படம் பார்ப்பதில்லையாதலால் அவ்வளவாக அவர் படம் பற்றி தெரியாது...

    பிறகு சந்திக்கலாம்...

    ReplyDelete
  10. வணக்கம் நேசன் அண்ணா...
    எப்படி இருக்கீங்க...
    இவரின் படங்கள் பார்த்து இருக்கேன்.... ஆனால் இவரின் புகைப்படத்தை அவர் இறந்த பின்தான் பாக்கிறேன்... :--(

    சாதனையாளர்களுக்கு மரணம் இல்லை...

    22 October 2012 14:26 //வணக்கம் துசி நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நிச்சயம் கலைஞன் உயிர் வாழ்வான்!ம்ம்

    ReplyDelete
  11. தொடர்ந்து தொடரே போடாமல் இடைக்கிடை இப்படியான வேறு பதிவுகளும் போடுங்கள் நேசன் அண்ணா...

    22 October 2012 14:27 //ம்ம் எல்லாத்துக்கும் நேரம் இருக்க வேண்டுமே துசி ஆத்ம திருப்தி முக்கியம்!ம்ம் நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. இவர் தானே “மகா பாரதம்“ தொடரை இயக்கியவர்?// நான் பார்க்கவில்லை அருணா பாரதம் தொடர்!ம்ம்

    சோப்ரா குடும்பத்தாருக்கு இதன்மூலம் உங்களுடன் நானும் என் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.! நன்றி வருகைக்கும் அன்னாரின் குடும்பத்துக்கு அஞ்சலிக்கும்!

    ReplyDelete
  13. நல்ல மனிதரை அடையாளம் காட்டியுள்ளீர்கள்.// நன்றி விச்சு அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  14. உண்மையைச்சொன்னால் இவரை நான் இதுவரை அறிந்ததில்லை அவர் பற்றி அறியத்தந்ததுக்கு நன்றி.// நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  15. பகிர்வு அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடிந்தது...

    நன்றி...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  16. இவர் ஒரு பாலு மகேந்த்ரா தான்.//ம்ம் உண்மைதான்!!!
    இவருடைய சில படங்கள் பார்த்துள்ளேன் அற்புதமான கதையம்சங்கள்! நிஜம் தான் சிட்டு நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    23 October 2012 01:02

    ReplyDelete
  17. நலமா நேசரே?

    YASH CHOPRA...ஹிந்தி படம் பார்ப்பதில்லையாதலால் அவ்வளவாக அவர் படம் பற்றி தெரியாது...

    பிறகு சந்திக்கலாம்.// நலம் ரெவெரி!ம்` மீண்டும் சந்திபோம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.ரெவெரி!

    ReplyDelete