08 February 2016

பாசம் கண்டேன்.

 தனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம்  பல நல்ல வலைப்பூ  நட்புக்களை  அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு  என்ற நெருக்கத்தை  இந்த தனிமரத்துக்கும்  தந்து இருக்கின்றது. தருகின்றது ,இனியும் தரலாம்.

 அந்த வகையில் என் ஆரம்பகால நட்புக்களில் ஒருவன் இந்த முன்னால் பதிவர்.இப்ப இவர் வலையை மூடிவிட்டார் போலும்! ஹீ

தனிமரம் ஈழப்பதிவர்களில் இன்றும் இவனை நட்புறவு என்று  கொண்டாடுவது எதனால் ?,என்று சிந்தித்தால்! நம் பிறப்பு எண் வரிசை 9 கடைசிநிலை என்பதால் போலும் .

போராட்ட குணம்,  நம்பி வந்தால் எதையும் இல்லை என்று சொல்லாத பாசம்,சீண்டினால் தனித்துவம் தேடுவது என்று இயல்பான போலி இல்லாத நிஜம் புரியாத வாழ்வியல் நிலையா,  இனி வரும் நாளில் ஆராய்வோம் சினேஹா ரசிகமணிகளாக[[[[[[


 ராஜ்  இன்று புதிய வருகைமுகநூலில் முகம்காட்டினாலும். அதுக்கு  முன்னர் அறிமுகமான வலையை கரிசல்காட்டு பூவைப்போல தேடாமல் இருப்பது  நெருடல் என்பேன் நண்பர்கள் வலைத்தள வாசகனாக!

இந்திய நடிகை சரன்யாமோகனை வைத்து கும்மியடிக்க  அன்று போல எல்லாம்  இப்போது வலையில் முடியாமல் போனாலும்.

 அந்த 2011 இன் வசந்த கால நாட்களில் வலையில் மட்டும்மல்ல யூத் விகடன் எல்லாம் பிரபல்யமான பதிவர் அன்புத்தம்பி கிஸ்ராஜ்))))


இந்த நட்புக்கு இன்று இன்னொரு ஆயுள் அதிகமாகும் இனிய நல்நாள் .9/2/...

தம்பிக்கு எப்போதும் இந்த தனிமரம் வாழ்த்துக்களை வலையில் அனுப்பிவைப்பது என்றாவது ஈழத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் .

http://www.thanimaram.org/2012/02/blog-post_6016.html
என் ஆரம்ப கால பதிவுகளை அதிகம் ஊக்கிவித்தவன் .அதுவும் கடந்து கும்மியில் சினேஹா  இளவரசி மன்றம் ,பத்மினிபாட்டி  மன்றம் ,நமீதா கழகம்,தேவயானி ரசிகர்மன்றம்  ,குஸ்பூ ஆண்டி அணி  ,அஞ்சலி அக்கா  மன்றம் என்று சினிமா மட்டும்மல்லாது பல முகநூல் குழும பாசறைகள், ஈழ தென் ஆசிய குழுக்கள் என்று முகம் காட்டினாலும் )))) கிஸ்ராஜ் எங்கள் பலருக்கு பரீட்சயமான பின்னூட்டவாதி.சுறா சீடி இலவசமாக அனுப்பிவைக்கும் வள்ளல்))))


நண்பர்கள் தளப்பதிவர் ராஜ் சரண்யாமோகன் நடிகையை தீவிர நேசிப்பிள் இன்றும்  கண்ணீர்விடும் முன்னால் காதலன் என்று முகநூலில் கலகலப்பூட்டுவதில் இவன் ஒரு ஜாலி  நட்பு என்றும் .!



இந்த சுபநாளில்  அன்புத் தம்பியை என்றும் வாழ்வில் சகல செளபாக்கியமும் பெற்று சாந்தியும் சமாதானமாக ,வலையும் முகநூலும் வாழ்வின் ஓர் அங்கமாகி இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து பல படைப்புக்கள் நண்பர்கள் வலைப்பூவில் தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 தம்பியின் பன்முகத்திறமை இப்போது குறும்படம்  வழியாக தடம்பதிக்கும் செய்தியை முகநூல் மூலம் அறிந்தவன் .ராஜ் இயக்கிக்கொண்டு இருக்கும் குறும்படம் வெற்றிகரமாக பொதுசமூகதளத்தில் விரைவில் பார்க்கும் ஆசையில்!


தம்பிக்கு ஏற்ற நாயகி இவரைப்போல சாதுவாக வரட்டும் விரைவில்[[[[


என்றும்
நட்புடன்
தனிமரம் நேசன்.
பாரிஸ்.

9 comments:

  1. நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நல்வாழ்த்துகள்!
    த ம 2

    ReplyDelete
  4. வணக்கம்
    இனிய வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. தங்கள் நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் நட்பு நெடுநாள் நீடித்திட. தங்கள் நண்பர் எடுக்கும் குறும்படம் வெற்றி பெறவும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. எமது வாழ்த்துகளும் நண்பரே
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  7. நன்றி நேசன் அண்ணா அனைவருக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி ..ராஜ் ..

    ReplyDelete