24 May 2015

இன்னும் நினைவில்!!!!

தேடலும் பாடலும் ஒரு கலை போல நெஞ்சைத்தொடும் நிகழ்ச்சி வானொலியில் நிகழ்ச்சி செய்யும் சில அறிவிப்பாளர்/ளிகளுக்கு  .

ஆனால் அதக்கான நேரகாலம் அமையாது அவசர உதவி நாடி இன்னொரு மூத்த  அறிவிப்பாளர்களை/ளி தேடி ஓடியது  சிலரின் இலங்கை வானொலி அனுபவமகாக கடந்து வந்த பாதை ஒரு சாகாபதம் படம் போல நம்பிக்கை நட்சத்திரம் போல இல்லை என்றாலும் அறிவுப்பு என்பது ஒரு பாரிய கலகலப்பான சேவை எனலாம் .


பலரையும் சந்தோஷப்படுத்துவது என்பது சினிமாவில் நகைச்சுவை நடிகர்/கை போல இன்று வரை கடினமான பணி!


வானொலி என்றால் என்ன அதன் பாரிய சேவை என்ன என்று அறியாது இருந்த பலருக்கும் பொன்னியின் செல்வன்  போல  குருவாக இருந்து   பயிற்றுவித்து  வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று  அறிமுகம் செய்த இலங்கை வானொலிக்குயில் மறைந்த  அம்மா இராஜேஸ்வரி சண்முகம் போட்ட பிச்சை இலங்கையில் மட்டும்மல்லாது புலம்பெயர் தேசத்தில்  பலரை வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று  இன்றும் முகவரியுடன் வாழும் பலருக்கு .

இன்று புதிய நவீன பாணி டீஜே என்ற அறிவிப்பாளர்  அறியாத செய்தி!

 என்றாலும் ஒரு பாடலை எப்படி எந்த நிகழ்ச்சியில் எப்படி ஒலிக்க விடவேண்டும் அதுக்கு நேயர்கள் என்னமாதிரி கருத்தினை இன்றைய முகநூல் லைக் போல அன்றே நேயர்கடிதம்  அஞ்சல் பெட்டி 574 என்று தம் மன உளைச்சளை  திட்டி எழுதிய  கருத்துக்கள் பொதுவில் வாசிக்கப்படாமல்  போனாலும் இன்றைய வலையில் தொடர்கதை போல  இலங்கை வானொலியில் ஒரு நிகழ்ச்சி இருந்தும் கடந்த கால சந்திரிக்கா ஆட்சி போல இலங்கை  வரலாறு !



இது எல்லாம் இன்றைய கூத்து அரசியல்  கடந்து வந்த வானொலி நேயர் வரிசையில் நானும் ஒருவன் ! நானும் காத்து இருக்கின்றேன் நாளை நல்லது இலங்கையில் நடக்கட்டும் என்று!ஆனாலும் இன்னும் எனக்கும் வேலையில்லை !ம்ம் இன்னும் பாடல் காதில்!

10 May 2015

முகம் காண ஆசையுடன் -10

இதுவரை.http://www.thanimaram.org/2015/05/9.html



 இனி .....
பொது மன்னிப்பு, கருனை விடுதலை  என்றெல்லாம்  மேதகு ஜனாதிபதியின் செயலைப் பாராட்டும் பலரும்!

 தேசத்துக்காக இன விடுதலைப்பாதையில் போய் இன்றும் விடுதலை வெளிச்சம் கானாது இருட்டில் தம் தியாக  விதியின் செய்லை நினைத்து மருகி சிறையில் வாழும்  நம் உறவுகள்  பற்றி எந்தக்கட்சியும் இன்னும் தீர்வு சொல்லாமல்.

 அடுத்த தேர்தலுக்கு வாக்குப்பலம் சேர்க்கும் வட்டமேசை மாநாடு போல நாளாந்தம் விடும் முதலைக்கண்ணீர்  அறிக்கை எல்லாம் எந்தக் குப்பையில் போடுவது ,,??

 பத்திரிக்கைக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதுக்காக நாளேட்டில்  எல்லாத்தையும் அச்சாக்கும்  பிரதம ஆசிரியர்.

 இருண்ட மக்களின் வாழ்வு பற்றி எழுத இடம் தராத நிலைதான் ஜனநாயக அரசியல் போலும் !

என்ற சிந்தனையில் சொல்ல முடியாத மனக்குழப்பத்தில் கிராண்ட்பாஸ் வீதியில் பயணித்தாள் சுமா .

 அசுரனுடன் நேரடியாக இன்று எப்படியும் பேசிவிட வேண்டும்.   என் கலியாணம் பற்றியும் சொல்ல வேண்டும் . தயக்கம் இனியும் கூடாது .என் பத்திரிக்கை அனுபவத்தை அடுத்த சந்ததிக்கும் சொல்லி வைக்க வேண்டும் என்றால் நல்ல ஒரு நம்பிக்கையான ஒருவன் உதவி தேவை.


 அதுவும் அசுரன் புலம்பெயர் தேசத்தில் இருப்பவன் அவனால் நிச்சயம் நான் எதிர்பார்க்கும் செய்திகளை  வெளிக் கொண்டர முடியும் .

 அவன் கருனை வைத்தால் நான் இங்கு துணிந்து எழுத முடியாத செய்தியை எல்லாம் சுதந்திர ஊடகவாதி போல அசுரன் தளத்தில் பகிர்ந்தால் விகடனில் வலை பாயுது போல பலரின் பார்வைக்கு சிறைக் கதைகள் வெளியில் வரலாம்!

அசுரனின் ஸ்கைப்பிக்கு தனியார் கொமினிக்கேசனில் இருந்து அழைப்பினை எடுத்தால் சுமா!


 கைபேசியில்  உள் வரும் அழைப்பிணை எல்லா நேரத்திலும் உள்வாங்க முடியாத சூழ்நிலை சமையல் வேலையின் சாபம் என்பதை பலர் அறியாமல் எங்கே  ஊத்திக்கிட்டு இப்போது படுத்திருக்கின்றானோ என்பதுதான் சிலரின் உடனடி  தீர்மானமாக இருக்கும் .
 
 முகம் காண ஆசையுடன்........

04 May 2015

முகம் காண ஆசையுடன் -9

முதலில் இங்கே--முகம் காண ஆசையுடன் -8


இனி....


இலங்கை அரசியளில் சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை  கோமாளி வேசம் போட வந்தவர்கள் எல்லாம் அடுத்த சந்ததியின் வாழ்க்கையை  இனவாதம் வெற்றி என்று ஆட்சிக்காக  பணயம் வைத்து ஆடிய கபட நாடகத்தில் காணமல் போனோர் பற்றியும். கைதியாக  சேது பட ஹீரோ போல  நடைப்பிணம் போல  வாழ்வோர் பற்றியும் பொதுமேடையில் பேசாமல்!


 இன்னும் அடுத்த தேர்தல் முறை  மாற்றம் வேண்டாம் என்று வாக்காலத்து ஜால்ரா மூலம் மீண்டும்  ஆட்சிக்கு வரத்துடிக்கும் ஆசையில் ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் போல  ஒரு குடும்பம் !

இன்னொரு பக்கம்!

 என் பக்கம்  இப்போது தனிப்படை தமிழ் மாகாண சபை  என்ற கோதாவில் முன்னால் முதல்வர்  நடிகை போல தன் கடமை மறந்து   இன்னொரு நாட்டு இரத்தக்கறை படிந்த  பிரதமருக்கு  இரந்து எழுதும் கடிதம் என்றும் !

இன்னும்  அமைதியாக ஆமை போல வீடு புகுந்து தேசங்களை  சீரழிக்க நினைக்கும் வல்லரசுகளுக்கும்  சாமரம் வீசி ஆவது என்ன என்று யாரும் சிந்திக்கும் நிலையில்லை !


 தாய்நாடு பொருளாதாரம் .சமூகம். அரசியலில்  மதம் இனம் என தரம் தாழ்ந்து போகும் நிலைக்கு  தெளிந்த பார்வையில்லாத மக்களும்   ஒரு வகையில் காரணம் என்பதை  உணர்ந்து எந்த வாக்களிப்பின் போது சிந்திக்கப் போறம்!


இதை எல்லாம் சுதந்திரமாக எந்த   ஊடக  மாமாக்கள்  எழுதப் போறர்கள்,  இன்னொரு கட்சியில் போட்டியிடலாம் என்று  ஆரூடம் எழுதும் உத்தமர்களும்  ,

இன்று த்ரிஷாவுக்கு  பிறந்தநாள் என்று எழுதும்  ஈழத்து புலம்பெயர்  புதிய தலை முறை முகட்டுத்  திறனாய்வாளர்களும்,


 என்று உள்ளம் திறந்து ஈழத்தின்  இன்னொரு முகம் காண ஆசையுடன் என்று சிறைச்சாலையில் வாடும்!

 தேசத்துக்காய் இரத்தம் சிந்தி இனவாத பார்வையில்  இன்னும் வெளியில் வராத தேச புதல்வர்கள்/புதல்விகள் பற்றி யார்  வலையிலும் ,யார் முகநூலிலும் யார்   துணிந்து பொதுவில் எழுதுவார்கள் .

எல்லாருக்கும் பொழுது போக்கு அவசியம் தான் ஆனாலும் சுமா இலங்கையில் இருக்கும் ஒரு ஊடகவாதி  என் வலைப்பகிர்வின்  பதிவுகள் பற்றி உடனுக்குடன் முகநூலில் தனிமையில் கருத்துச் சொல்லும் ஒரு வாசகிகளில் முக்கிய துணை முதல்வர் போல ஆனால் இப்ப சில நாட்கள் எந்த தொடர்பும் இல்லை!

 இன்னொரு நண்பி நிவேதா  தன் தோழி சுமாவுக்கு வெளிவராத நாளை எங்கள் கலியாணம் தமிழப்படம்   போல   அவளுக்கு கலியாணம் என்று என்னோடு கருத்துப்  பகிர்கின்றாள் !

இனி யாரை தேடிப்போவேன் என் தேவதை  பூஜா  முகம் காணும் ஆசையுடன்!

 புலம்பெயர் தேசத்தில் அடுப்பிள்  செம்மறி ஆடுபோல!இன்னும்  நெருப்பிள் வேகும் என் நிலை யார் அறிவார்கள் ??

என்ற சிந்தனையில் நடிகன் வலைப்பதிவாளர் வெட்டிப்பயல் அசுரன்!





முகம் காண ஆசையுடன் .......