03 September 2018

யாசிக்கும் ஏதிலி- மின்நூல்!

வணக்கம் உறவுகளே நலம் தானே

கொஞ்சம்  பதிவுலகம் எல்லாம் எப்படி இருக்கு என்பதை கண்டுகளிக்கலாம் என்று ஓடோடி வந்தேன்!)))ஒரு சிறிய சோம்பல் நீக்கி .

உங்களுடன் இணையத்தில் சந்திப்பது மகிழ்ச்சி.

கடிகார மனிதர்கள் படம் போல வாழ்க்கை என்னும் வீடுக்கனவுடன் பொருளாதார தேடலில் புதிய வேலை தேடும் படலம் சில மாதங்களாக தொடர்கின்ற கதை எல்லாம் விரைவில் உங்களுடன் பகிர ஆசை !என்றாலும் எப்போதும் ஒரே சினேஹா முகாரி பாடும் உன் கதை கேட்டுச்சலித்துப்போச்சு என்றவர்களுக்காக !

இதோ புதிய அவதாரம் போல யாசிக்கும் ஏதிலி மின்நூல் வடிவத்தில் உங்களை நாடி வந்துவிட்டது.)))) https://thanimaramnesan.pressbooks.com/

இனி தொடர்கதை வாசிக்காதவர்கள் மின்நூல் வாசித்து உங்களின் உள்ளக்கிணற்றில் இருந்து எழும் கருத்துப்புயல்களை தனிமரம் நோக்கி வீசுங்கள் .


என் எழுத்துப்பணிக்கும், அடுத்த படைப்புக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்ற  ஆவலுடன் என் தாழ்மையான வேண்டுகேளுடனும் உங்களை யாசிக்கும் இந்த ஏதிலியின்  இன் மின்நூல்களை பலரிடம் சென்று சேர்க்க வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் 
உங்களின் 
சினேஹா அபிமானி தனிமரம் நேசன்!))))

விரைவில் அடுத்த மின்னூல் பற்றிய பகிர்வுடன்!





தனிமரம் வருவேன் என்ற தேர்தல் வாக்குறுதி போல அல்லாது செயல்வடிவில் உங்களைச்சந்திப்பேன்.!




நட்புடன் தனிமரம்,
பாரிஸ்.