26 February 2016

யாசிக்கும் ஏதிலி -1

அறிமுகம் இங்கே --http://www.thanimaram.org/2016/02/blog-post_24.html


யாசிப்பும் வியாபாரம் எனில்
யான் யாதுமற்ற அகதி!
யவன தேசமும்
யாத்திரை போவேன்
யாசித்த கர்மவினை தீர்க்க!

              (யாதவன் நாட்குறிப்பில் .. )



கார்கால மழையின் சிறப்பை குறுந்தொகை சொல்லியது ஒரு வரலாறு என்றால்! மாரிகால மழையின் துயரை தமிழக சென்னைவாசிகளும் ,புறநகர் வாசிகளும் அனுபவித்த அவலத்தை  தடுப்பதுக்கு எந்த மக்கள் தலைவர்களும் இதயபூர்வமாக முன்னேற்பாடு பற்றி அனுகியிருந்தால் இந்த மலிவு ஸ்டிர்க்கர் விளம்பரம் எல்லாம் தோன்றியிருக்குமா ??

அதனை சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்தும் நிலை தோன்றியிருக்குமா ?ஊடகங்கள் எல்லாம் தனக்கு பிடித்தவர்களின் பின்னே தள்ளாடுது ? என்று பாரிசின் மையப்பகுதியில் இயங்கும் தனியார் பிரெஞ்சு உணவகத்தில் தலைமைச் சமையளார் பணி முடிந்து வழமை போல வெளியில் வந்த  யாதவன் பேச்சை உடன் வந்த குணா கேட்டுக்கொண்டு வந்தான்



.சக நண்பனாக உன்னைநினைத்து பட ரமேஸ்க்கண்ணா போல  இதை எல்லாம் பொதுவில் பேசினால் முகநூலில் பிளாக் செய்யும் தந்திரம் சிலருக்கு புரிவதில்லை !

வீனாக மனதை பதட்டநிலையில் வைத்து இருக்கும் செயல் தேவைதானா மச்சான் குணா??

சமூகப்போராளி என்றால் யாதவன் அடுத்த சூடான செய்தி வரும் வரை களத்தில் நின்று போராட வேணும் அதுதான் இப்ப பெஷன் !

என்னமோ போடா மாதவா போல எனக்கு இந்தக்களம் எல்லாம் புதுசு .

இனவாத யுத்தகளம் எத்தனை சூடான செய்தி தந்து இருக்கும் நம்தேசத்தில் .

எல்லாம் இழந்து போனபின் இப்ப சமூகத்தளத்தில் வேஷம் கட்டி ஆவது ஒன்றும்மில்லை குணா .


அப்படிச்சொல்லாத  எகிப்து நாட்டில் ஆட்சிமாற்றத்துக்கு அடித்தளமிட்டதே சமூகவலைத்தளங்கள் தான் !

மறந்துவிடாத அது நன்கு மறக்கவில்லை குணா ஆனால் இன்றும் சிரியா பற்றி எந்த ஊடகமும் நடுநிலைமையுடன் பேச மறுப்பது ,அங்கு நிகழும் மரணங்களை வெளிப்படுத்தாமை எதனால் ? நமக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு சட்னியா!மனித உரிமை என்ற போர்வையில்!!!

இப்படித்தானே ஈழத்திலும் பல லட்சம் மக்கள்  அன்று அழிக்கப்பட்டனர் யுத்த வெறியில்.

அந்த நேரம் இந்த சமூக வலைத்தளம் எல்லாம் வரவுமில்லை ,இப்போது போல பிரபல்யம்மாகவும்மில்லை ,அந்த துயரத்தில் இன்னும் விடுபடாத பலரின் கதைகள் எல்லாம் அறியாது.

 சிலர் முகநூலில் போலி வீரனாக பொங்கி ஆவது ஒறும்மில்லை .

அதுசரிதான் ஆமா இப்ப நீ இப்படியே கோயிலுக்கு போகப்போறியா ??

ஓம் வேலைக்களைப்பு இல்லையா ??

குணா எனக்கு  என் குரு நம்பிக்கையுடன் தரும் கடமையை செய்யவேண்டும்.

 அதுக்காக உடல்க்களைப்பு என்று சாட்டுச்சொல்லி ஒதுங்ககூடாது.

 சரி சரி நீதான் அடுத்த குருசாமி என்று அங்கே சிலர் கிண்டல் பண்ணுவதை நான் அறிவேன் !

மச்சாம் தனக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை என்று ஆற்றாமையில் சிலர் அரசியலில் சாணி போல ஆன்மீகத்திலும் சந்தனம் பூசுவது இயல்பு.

 இது எல்லாம் பார்த்தால் பொது அரசியலில் வரமுடியாது நல்லாட்சி என்ற கூட்டத்தில்.

இதைப்பார் குணா காலதேவன் போடும் கணக்கு எப்படியோ தெரியாது ??

ஆனாலும் குரு ஆசியும் ,மணிகண்டன் அருளும் இருந்தால் !இதுதான் உன் பாதை என்று விதியாக அமைந்தால் குருப்பதவி ஏற்றுக்கொள்வேன் !

எதோ ஒரு திறமை என்னிடம் இருப்பதால் தானே என்னைத்தேடி பதவி வருகின்றது ?எல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை!  எத்தனையோ காவடி தூக்கிவிட்டேன் தலைமைப்பதவி என்ற பொறுப்பில் ! என்பதை நீ அறிவாய் தானே குணா??

இன்னும் யாசிப்போம்........

24 February 2016

யா-சி-க்-கு-ம் ஏதிலி-!! அறிமுகம்.



 நலமா உறவுகளே??, மீண்டும் தனிமரம் இணையத்தின் துணைகொண்டு வலை இதயங்கள் உங்களுடன் கதை பேசும் ஆசையில் புதிய தொடருடன் வருகின்றேன்..

முன்னர் போல இப்போது ஓய்வு கிடைப்பது அருதாகிவிட்டதால் என் இருப்புக்கூட மந்தகதியில் வலைப்பக்கம் வருவது. என்றாலும் உங்களின் ஆசியும் தொடர் ஆதரவும் இந்த தனிமரத்தையும் தொடர்கதையில் சிலிர்க்க வைக்கும்.என்ற நம்பிக்கை என்றும் உண்டு.

காதல் பற்றி  தொடராக எழுதுவதும் , உருகுவதும் ,கண்பார்த்தவையும் ,காதில் விழுந்த வார்த்தைகள் கவிதையாகவும் ,காலநதியில் ஓவியம் போல சேமிப்பாக தனிமரம் வலையில் இதுவரை பல நிஜத்தை எழுதிய அனுபவத்தின் ஊடே மொக்கையாக  வலம்வந்து பின் மின்நூல்வரை சில தொடர்கள் பதிந்தாலும்)))




முதல் முறையாக கற்பனையாக ஒரு குறுந்தொடர் எழுதும் எண்ணத்தின் வண்ணம் இந்த தொடர் !

இதில் வரும் விடயம் யார் மனங்களையும் வார்த்தை அம்புகொண்டு கீறும் வலிகள் அல்ல .எனக்கு தோன்றியதை என் கண்கள் ஊடே பார்த்த ரசித்த  நட்பு வட்டத்தின் நகலாக  எழுத்தாணி பிடிக்கின்றேன் ஆசையில் ஓர் கடிதம் போல [[[.

 என் ஆசைக்கு எழுத்துப்பிழை ,காட்சிப்பிழை ,கருத்துப்பிழை ,சுருங்கச்சொல்லத்தெரியாமை என்று தடைகள் பல குறுக்கே வந்தாலும் அதைத்திருத்தி  தனிமரம் வலையையும் தேர்தல் முடிந்ததும் நேரில்  வந்து பார்க்காத சட்டமன்ற உறுப்பினர் போல நினைக்காமல்)))

உங்களில் ஒருவனாக அனுதினம் வரும் ஒரு தபால்க்காரன் போல நினைக்கலாம்)))


இதுவரை திரட்டியில் வாக்கும், தித்திப்பு பின்னூட்டங்களும் வழங்கியது போல இந்தத்தொடருக்கும் உங்கள்  ஓட்டும் ,பின்னூட்டங்களும்  தொடரும் என்ற  நம்பிக்கையில் அடுத்த பகிர்வாக யாசிக்கும் ஏதிலியை வலையில் ஏற்றிவரக் காத்திருக்கின்றேன்))) இனிய பாடல்கள் ,கவிதைகள்.கலந்து அரசியல், ஆன்மீகம், சினிமா, என்று ஒரு மொக்கையாக  மீண்டும் வலம்வரப்போறன்[[[


வழமை போல இந்தத்தொடருக்கும்  தனிமரம் நேசனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நெஞ்சத்தைத் கிள்ளாமல், சினேஹாமீது ஆணைக்கினங்க )))

தெய்வ வாக்கு போல ஆன்றோர் சபையில்கூறிக்கொள்கின்றேன் !



ஐயா தனிமரம் படிக்காத ஏதிலி!!



 என்னிடம் இருப்பது எல்லாம் கற்பனையும், அனுபவம் அன்றிவேறில்லை சுவிஸ்வங்கியில் சேமிப்பாக கறுப்பு பணம்))))

தொடர் இனி நாடிவரும் இனிய பாடல்கள் வலம் சூழ !தேர்தல் வாக்கு கேட்டு வரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் படைகள் போல [[[[


 பின்னூட்டம் இடலாம் விரும்பினால் !


அதுக்கு முன் ஒரு வார்த்தை!

.
தனிமரம் யாரையும் என் வலைக்கு  வா என்று கெஞ்சல!
தனித்துவம்  என்னிடம் இல்லை! இது  தன்நம்பிக்கை வெறி!
தாழ்ந்து போகமாட்டேன்!
தங்கம் போல படித்தவனா நீ  என்றால் ?,
தரம் தெரியாது எனக்கு!
தனிமரம் வலைக்கு
தனிமையில் பின் தொடர்வோர் 181
தாண்டுவேன் மலைகள் பல[[
தாண்டிய கடல் எல்லை
தட்டில் வைக்கும் தானக்காசுபோல இல்லை
தனிக்கை சட்டம் தாண்டியவன்
தந்தையை இழந்தாலும்
தன்நம்பிக்கை
தயங்காதவன்!.

புரிந்தவர்கள் வாருங்கள். மொய்க்கு மொய் வைக்கும் வசதி இல்லாத அகதி இந்த தனிமரம் என்று கும்பிட்டு உத்தரவு வாங்கும்
இவன்.
பாரிசில் வெட்டிப்பயல்[[[
தனிமரம்.


இனி  இந்த பாடலை நீங்கள் கேட்டவாறு[[[[





குத்துங்க எஜமான் குத்துங்க[[[[






14 February 2016

காதல் குத்து!

காதல் பற்றி பேச பல பாடல்கள் இன்று காற்றலையில் வந்த வண்ணம் இருக்கு .காதலர்தினம் என்று!



ஆனாலும் இந்த காதலர் தினம்   பாடல் நெஞ்சில்  அடிக்குது[[





 ஆனாலும் நட்புக்களின் காதல்  ஆணி பல பார்த்தவன் அதை பேசலாம்







 விரைவில் இந்த பாட்டு இன்று கேட்போம்[[குழுவினருக்கு வாழ்த்துப்பூக்கள் தந்த வண்ணம்!


பாடல் இங்கே-






08 February 2016

பாசம் கண்டேன்.

 தனிமரம் வலைப்பூ என்ற பதிவுலக அறிமுகம்  பல நல்ல வலைப்பூ  நட்புக்களை  அன்பான நேசிப்பாக இந்த இணைய வலைப்பூ வழியே யாசிப்பு  என்ற நெருக்கத்தை  இந்த தனிமரத்துக்கும்  தந்து இருக்கின்றது. தருகின்றது ,இனியும் தரலாம்.

 அந்த வகையில் என் ஆரம்பகால நட்புக்களில் ஒருவன் இந்த முன்னால் பதிவர்.இப்ப இவர் வலையை மூடிவிட்டார் போலும்! ஹீ

தனிமரம் ஈழப்பதிவர்களில் இன்றும் இவனை நட்புறவு என்று  கொண்டாடுவது எதனால் ?,என்று சிந்தித்தால்! நம் பிறப்பு எண் வரிசை 9 கடைசிநிலை என்பதால் போலும் .

போராட்ட குணம்,  நம்பி வந்தால் எதையும் இல்லை என்று சொல்லாத பாசம்,சீண்டினால் தனித்துவம் தேடுவது என்று இயல்பான போலி இல்லாத நிஜம் புரியாத வாழ்வியல் நிலையா,  இனி வரும் நாளில் ஆராய்வோம் சினேஹா ரசிகமணிகளாக[[[[[[


 ராஜ்  இன்று புதிய வருகைமுகநூலில் முகம்காட்டினாலும். அதுக்கு  முன்னர் அறிமுகமான வலையை கரிசல்காட்டு பூவைப்போல தேடாமல் இருப்பது  நெருடல் என்பேன் நண்பர்கள் வலைத்தள வாசகனாக!

இந்திய நடிகை சரன்யாமோகனை வைத்து கும்மியடிக்க  அன்று போல எல்லாம்  இப்போது வலையில் முடியாமல் போனாலும்.

 அந்த 2011 இன் வசந்த கால நாட்களில் வலையில் மட்டும்மல்ல யூத் விகடன் எல்லாம் பிரபல்யமான பதிவர் அன்புத்தம்பி கிஸ்ராஜ்))))


இந்த நட்புக்கு இன்று இன்னொரு ஆயுள் அதிகமாகும் இனிய நல்நாள் .9/2/...

தம்பிக்கு எப்போதும் இந்த தனிமரம் வாழ்த்துக்களை வலையில் அனுப்பிவைப்பது என்றாவது ஈழத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் .

http://www.thanimaram.org/2012/02/blog-post_6016.html
என் ஆரம்ப கால பதிவுகளை அதிகம் ஊக்கிவித்தவன் .அதுவும் கடந்து கும்மியில் சினேஹா  இளவரசி மன்றம் ,பத்மினிபாட்டி  மன்றம் ,நமீதா கழகம்,தேவயானி ரசிகர்மன்றம்  ,குஸ்பூ ஆண்டி அணி  ,அஞ்சலி அக்கா  மன்றம் என்று சினிமா மட்டும்மல்லாது பல முகநூல் குழும பாசறைகள், ஈழ தென் ஆசிய குழுக்கள் என்று முகம் காட்டினாலும் )))) கிஸ்ராஜ் எங்கள் பலருக்கு பரீட்சயமான பின்னூட்டவாதி.சுறா சீடி இலவசமாக அனுப்பிவைக்கும் வள்ளல்))))


நண்பர்கள் தளப்பதிவர் ராஜ் சரண்யாமோகன் நடிகையை தீவிர நேசிப்பிள் இன்றும்  கண்ணீர்விடும் முன்னால் காதலன் என்று முகநூலில் கலகலப்பூட்டுவதில் இவன் ஒரு ஜாலி  நட்பு என்றும் .!



இந்த சுபநாளில்  அன்புத் தம்பியை என்றும் வாழ்வில் சகல செளபாக்கியமும் பெற்று சாந்தியும் சமாதானமாக ,வலையும் முகநூலும் வாழ்வின் ஓர் அங்கமாகி இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து பல படைப்புக்கள் நண்பர்கள் வலைப்பூவில் தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 தம்பியின் பன்முகத்திறமை இப்போது குறும்படம்  வழியாக தடம்பதிக்கும் செய்தியை முகநூல் மூலம் அறிந்தவன் .ராஜ் இயக்கிக்கொண்டு இருக்கும் குறும்படம் வெற்றிகரமாக பொதுசமூகதளத்தில் விரைவில் பார்க்கும் ஆசையில்!


தம்பிக்கு ஏற்ற நாயகி இவரைப்போல சாதுவாக வரட்டும் விரைவில்[[[[


என்றும்
நட்புடன்
தனிமரம் நேசன்.
பாரிஸ்.

05 February 2016

ஆண்டவா காப்பாத்து!

அடிக்கடி அறிக்கைவிடும்
அரசியல்வாதியின்
அடுத்த கட்ட நகர்வு போல

அகதியும் ஆசையில்
அடர்ந்த வனம்
ஆமி இனம் என்று
அல்லல்லுற்று  ,அவதியுற்று
அரச  ஆணைக்குழுக்கள் என்று
அழுது புலம்பும் அகதியின்
ஆத்ம காதல்
அபயம் தேடி!
அனுதினமும்
அதிரவைக்கும்
அடர்ந்த மிரட்ச்சியும்!!




அந்தவெள்ளைக்கொடி நிஜங்களும்
அந்தவிகாரைகளும் அதில் பறக்கும்
அரசபீட போலி மிருகங்களும்!


அறியாது நீ என்னை
அதிக யாசிப்பினால்
அழைத்து  ஆமியிடம் கையளித்து
அழிந்த  நம் காதல்!
அகதியின் யாசிப்பு
அவனியில் யாருக்கும்  வேண்டாம்!
அழிந்த  ஈழக் கனவு  போல
அப்பாவி நானும்
அழகிய தீவாய் உன்னுடன்
அடுத்த தேடலில்!


அதே காதலுடன்
அகதி நான்
அனைத்தும் கற்பனையே!!
ஆன்றோர் சபையில்
அம்மாவின் ஆணைக்கிங்க!
அடியாட, கொல்லுடா.
அவன் ஈழப்பொறுக்கி!
அதோ  நாளைய இதழில்
அரபுல இந்தியன் பதிப்பிலும்
அடுத்த செய்தியாக எதுவும் வரலாம்.


அதையும் கும்மியடிக்க
ஆண்டவா நம்மை காப்பாத்து!
ஆனாலும் தாய் மண்ணில்
அடக்கம் காணும் ஆசையில்!!

.யாவும் கற்பனையே!!!!!!