30 October 2014

தேடலும் நினைவும்-5

திரையில் வரும்  இசையமைப்பாளரில்   பலரில் இன்று மறந்து போன ஒருவர்தான் பாலபாரதி !

1990 இன் பிற்பகுதியில்  இலங்கையில் பண்பலை வானொலிகளில் இவரின் இசையில் வெளியான இந்தப்படப்பாடல் ஒரு முகவரி பாலபாரதிக்கு.

காதல் வந்து தூக்கம் கெட்டவர்கள் கதை  இலங்கையில் பண்பலை அறிவிப்பில் இருந்தோர் பலரின் ரகசிய டையரி!

அதுபோல விஜய் முன்னர்  தமிழில் அறிமுகமானலும் வேலை கிடைச்சாச்சு . இந்தப்படம்தலைவாசல்   அடைமொழி மூலம் இவர் பிரபல்யம் இன்றைய பூஜை படம் வரை! ஆனாலும் மாமியார் வீடு படநடிப்பு இவரின் சிறப்பு தமிழில் என்பேன்!

 ஆனால் ஏனோ தமிழ்சினிமா இவரை  பயன் படுத்தவில்லை!ம்ம்http://www.cineikons.com/thali-vasal-vijay/#sthash.XTliiusK.dpbs


 பின் பாலபாரதியின் இசைக்கு  பேசப்பட்ட படம் தான் தல அஜித்குமார் அறிமுகமான அமராவதி படம் .



இதில் எல்லாப் பாடலும் பட்டிதொட்டி எங்கும் தொடர்ந்து  ஒலித்தது.

 அதிலும் இந்தப்பாடல் தனித்துவம் .இதயராகம் இசைக்கும் போது!ம்ம்



பின் ஏனோ பாலபாரதி அதிகம் திரையில் மின்னவில்லை .இன்று இவர் ஞாபகம் எத்தனைபேருக்கு  இருக்கு?, மீண்டும் பாலபாரதி இசை  காதில் கேட்குமா?,

.

முன்னர் தேடல் இங்கே-http://www.thanimaram.org/2014/10/4.html
//////////////////////

ஐபோனுக்கும் வருகைக்கும் அகதியின் ஆசைக்கும் இடையில்
 இசையின்  காதல் !ஐரோப்பாவில் களவும். திருட்டும்
வழிப்பறி என்றாலும் !
ஆண்டவன் கருணையில் அடுத்த ஐபோன் தனிமரம்கையில்  வரும் எனில் அகதியான உன் கதையுடன் அடுத்த வருடம் வலையில் வருவேன்!
அதுவரை ஆன்மீகம் அழைக்கின்றது சகியே!


21 October 2014

வாழ்த்துக்கள்.....

தித்திக்கும் தீபாவளி என்று
தீன்பண்டங்கள்  ஓரு புறம்
திரி கொழுத்திய சக்கர வானம்
தெருவில் எல்லாம் கொழுத்தி
திளைத்த நாட்கள். இனியும்
திரைகடல் கடந்த பின்னும்
திக்குத் தெரியா அகதிக்கு
திகட்டும் நாள் வராது எனினும்!!!



தித்திக்கும் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்


18 October 2014

காதல்பூ பூக்கின்றதே.......!

நாளந்தம் பல பாடல்கள் காற்றில் நான் கேட்கும்  வானொலிகள்  மூலம் காதில் கேட்டாலும் மனதில் தங்கும் பாடல் சிலது.

இந்த வாரம் அதிகம் வேலைப்பளுவுக்கு இடையிலும் இந்த பாடல் என்னை  அதிகம் ஏனோ  பிடித்திருக்கின்றது நீங்களும் கேட்டு ரசிக்க இங்கே-

 .


14 October 2014

கிறுக்கலும் கீதமும்-7

செவ்வானம் தொடும் சானல் போல நம்மிக்கையில்
 உன்னையே கைகோர்த்து ஜோடியாக நடக்கின்றேன் 
என் காதல் தொட்டுவிடும் தூரம் தான்.
 இனி பாதை ஒன்றுதான் காதலில்!
////////////////////////////////////////

அன்று கரம்போட் விளையாட்டில் உன்னைத் தோற்கடித்தேன்
 உரிமையுடன் சின்ன மச்சான் என்று !! 
இன்று வாலிபத்தில் கணவகாக தொடர்ந்து வர ஆசை! 
வெளிநாட்டில் பெரிய மச்சான் முக்கியம் என்று விளையாட்டுக்கு கூட
 வெட்டிவிடாதே என் உருகும் காதலை!
/////////////

கோட்டை முகாம்கள் உயிர் பிரிந்த
 எலும்புக்கூட்டைப்போல வீழ்ந்து 
கிடந்தாலும் என் நேசிப்பு
 வானம் போல வெளிச்சமாக 
உன்முகம் தேடி வரும்!




////////////////////////முகம் இந்த பாதையில்  நேரில் வருவாயோ???
                                 





முன்னம் கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2014/06/6.html

13 October 2014

தேடலும் நினைவுகளும்.---4

நினைவில் தாலாடும் பலபடங்களுக்கு இனிய இசை மீட்டிய இசையமைப்பாளர்  சிற்பியை இன்று  
 இயக்குனர் விக்ரமன் இவரை அறிமுகம் செய்தாலும் நான் பேச நினைப்பது எல்லாம் தமிழில்  முதல்ப்படம் என்றாலும் இசை முதலில் வந்தது என்னவோ  தமிழில் கோகுலம் படம் தான்.

 அந்த  நேரத்தில் நடந்த தன் சினிமா அனுபவத்தை விக்ரமன் எழுதிய நூலில் விபரித்திருப்பது  அச்சில் சாட்சியாக இருக்கின்றது. ஒரு இயக்குனரின் கஸ்ரங்கள் சினிமா புகழ் வாழ்க்கை நிலைக்கு கொடுக்கும் விலையின்  துயரங்களை.!



 சிற்பி   அதிகம் பட்டி தொட்டி எங்கும் பலரை பேச வைத்த படப்பாடல்  உள்ளத்தை அள்ளித்தா.!!


அதன் பின் மேட்டுக்குடி என்று சுந்தர்.C கூட்டனியும் சினிமாவில் செட்டான ஜோடி எனலாம்.

 இவர் பிறமொழி  இசையை காப்பி அடிக்கின்றார் என்று அன்நாட்களில் ஊடகங்கள் கழுவி ஊத்தினாலும் இவரின்  நல்ல பல மெட்டுக்கள்   சுயமாகாவும் வந்த பாடல்கள் பல

.சிற்பிக்கு தனி முகம் இங்கே-http://tamilpaadalvari.wordpress.com/ கேப்டன் படம் , பின் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்று போட்டியில் இவரும் சளைத்தவர் அல்ல..கோடாம்பக்கம்,படப்பாடல் இன்னும் பிடிக்கும் இசை. ரகசியமானது காதல்.சமூகதளம் யூட்டுப்பிள்  பாடல் கிடைக்கவில்லை!இப்படிப்பல பாடல் சாட்சியாக  இல்லை இல்லை.......................ம்


உன்னை நினைத்து,வருசம் எல்லாம் வசந்தம், என்று 2002 இல் சிற்பியின் இசையில் வந்த  பாடல்கள்  நேயர் தெரிவில்  முத்துக்கள் 10 பாடலில் இலங்கை வானொலிகளில் முதல் இடம் பிடித்து வானொலி வரலாறு


.இன்று இவரின் புதிய பாடல்கள்  கேட்கும் சூழல் எனக்கு இல்லை என்றாலும் சிற்பியின் இந்தப்பாடல் என் முதல்த்தேர்வு எப்போதும்! சினேஹா  படம் பார்க்க முன் பானுப்ரியா ரசிகன்.ஹீ



நம்பிக்கைத்தானே வாழ்க்கை பாடல் .ஆசிரியர் பழனிபாரதி பற்றி என்றோ கிறுக்கியது இங்கே-http://www.thanimaram.org/2011/04/1.html

முன்னர் தேடல்---http://www.thanimaram.org/2014/10/3.html

05 October 2014

வாங்கோ கவிதை எழுதுங்கோ பூங்கோதை !!


காட்சிப்படம் தந்து கவிதை எழுத அழைத்த பூங்கோதைச்செல்வன் பாதம்
என்றும் பணிந்து பாடும்  கல்லாதவன்!

                                          தனிமரம்!!!!

                                   /////////////////////

கார்கால மேகம் போல
கருகரு கூந்தல்தாரகை 
கைதி என்ற போர்வையில்
காடையர்கள் கையில் சிக்கிய காயத்திரி 
காணாமல் போன 
வெள்ளைக்கொடி விவகாரம் போல
வெள்ளையுடையில் இரு விழி 
கண்ணீர்த்துளிகள்!!!!
காட்சி கையால் வரைந்தது 
கண்ணாகியும் கண்ணீர்விட்டாள்
கட்டியவன் கொலைக்கு
கடும் நீதி கேட்டு காந்தி தேசத்தில் !

கானாத துணைவன்
கடலில் போன 
கட்டுமரம் போல
கடல்கடந்தும் 
கண்ணனின் கீதம் போல ஆத்மா 
காற்றில் ஈழத்தில் இன்னும் 
ஐநா காற்றில் கேள்வியாய் இசைக்கும்!!!


காந்தக்குழல் கையில் மீட்டி
கார்த்திகைப்பூக்கள் வருகைக்காக
கண்ணீர்ரில் பூஜிக்கும்
கவிதை ஓவியம் இதைக்
காணவாரீர்களோ ??ஈழக்கனவை
கழுத்தறுத்த கனவான்களே!
கவிதையாலே ..
கல்லில் செதுக்கிய நவீன கண்ணகி 
கார்நாடக சிறைபோல இல்லை!


காலிச்சிறையும், கண்டிச்சிறையும்,
காத்திருக்கின்றேன்!!! நந்திக்கடல் ஓரம்
காணமல் போகலாம் நானும் காலம்
கலியுகம்!
கருணாநிதியும் கடிதமும் போல என் 
கண்ணீர்த்துளியும் காய்ந்து போகட்டும்
கடவுளுக்கும் கருணையுண்டா?
கவிதை பாடுங்கள் 
கனவும் கலைந்தது கரிகாலன் 
கண்சிமிட்டிய காந்தப்பூமியில்!
கடும் தவத்துடன் காத்திருக்கின்றேன்!

கையில் கிட்டாத சுவாசம் போல!
/////////////////
காட்சிக்கு கானம் இது.

01 October 2014

தேடலும் நினைவுகளும்-3

திரைவானில் மின்னல் இட வரும் மேகங்கள் போல 1990 பிற்பகுதியில் இளையராஜாவின் தேக்கமான நிலை அல்லது ராகதேவனின் வீழ்ச்சி என்றும் இளம்புயலின் ஆதிக்க வருகை என்றும் பத்திரிக்கைகள் கிச்சுக்கிச்சு மூட்டிய நிலையில்தான்!

 பெரிய நடிகர் விஜய்காந்த் பிரபலய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்  (ஆதுதான் இனி சூப்பர் ஸ்டார் அப்பா )கூட்டணியில் அறிமுகமான இசைமேலோடி பரணியை இன்று தேடலும் நினைவுகளிலும் தேடுகின்றேன் :))) !



முதல் படம் பெரியண்ணா!


 பரணிக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது .எனலாம் பெரியண்ணா விஜய்காந்த் திறமையான பலரை திரையில் ஏற்றிவிட்டவர் அரசியல் கடந்து என்பதை வரலாற்றில் எழுதி வைக்கவேண்டியது கடமை காழ்ப்புணர்ச்சி இல்லாமல்!

அதன் பின் பரணிக்கு ஏறுமுகம் கிடைக்கவில்லை பின் பார்வை ஒன்றே போதுமே பாடல்கள் எல்லாலாம் பட்டி தொட்டி எங்கும் குணால் மோனல் கிசுகிசுபோல வானொலிகள் எங்கும் ஒரு அலை அலையென நேயர் விருப்பம் அறிவிப்பாளர் விருப்பம் என்று இடைவிடாது இசைக்கோலம் ஈட்டியது பரணிக்கு வெற்றி முகம் ஆனது. இடையில் லேடிஸ் அன் ஜெண்டில்மன் படப்பாடல் வெண்ணிலவே வெண்ணிலவே பாடல்  வானொலியில் சக்கை போடு போட்டாலும் படம் வந்ததது பற்றி நினைவில் இல்லை. நிலவு இவருக்கு ஹிட்சு எனலாம் இவர் இசையில் நிலவு பாடல்கள் பல ஹிட்சு வானொலியில் அது ஒரு காலம்!ம்ம்ம்ம்
.பின் வந்த பிரபு. பிரபுதேவா கூட்டணி சார்லி சாப்லின் படம் இன்னும் உச்சநிலைக்குச் சென்றார்!

 அதுவும் முதலாம் சந்திப்பில் அறிமுகமானே???

 அதன் பின் அவரின் பட பட்டியல் அவரின் பிறப்பு எண் 9 போலவே 18 இல் இருக்கின்றது)))))))))))))))

 அவரின்
1. Periyannaa
11. Sinthamal Sitharamal
2. Paarvai Ondrea Pothumea12. Periya Neesthama (Telgu)
3. Charli Chaplin13. Leaman (Tamil & Telgu)
4. Ladies & Gentleman14. Vedanthangal
5. Pesaatha Kannum Peasumea15. Meesai Maadhavan
6. Sundra Travels16. Manathil
7. Jaya17. Kathal Thiruda
8. Yes Madam18. Thodu
9. Mutham
10. Style
 புதிய  இசையைக்காணவில்லை கண்டவர்கள் பின்னூட்டத்தில் புதிய படங்கள் பற்றிப்பகிர்ந்து வரலாற்றின் நாயகர் நீங்களும் ஆகுங்கள்:))))


 இன்னொரு

                                          தொடரும் !ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

....சற்று முன் பிடிக்கும் பாடல் இது என் விருப்பம்!ம்ம்



முதல் தேடல் இங்கு-http://www.thanimaram.org/2014/09/2_16.html