30 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -10

தூதுக்குழு அனுப்புகின்றோம்,விசாரணை செய்கின்றோம்,ஆராய்கின்றோம் என்று அறிக்கை சமர்ப்பிக்கும் அடுத்த கட்சியில் இருந்து வந்தவரும் !

உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்று உலகிற்கு படம் காட்டும் தலைவர்.அவரினதும் ,அவர் குடும்பத்து தொலைக்காட்சியும் காட்டாத கதைகள் பல இருக்கு ஈழத்தவன் வாழ்வில் நிஜமுகம் காட்ட.

அது எல்லாம் நித்தியானந்தா போல வசூல் ஆகாது .

அதுதான் அகதிகள் கப்பல் உண்ணாவிரதம் எல்லாம் காட்சிப்படுத்த மாட்டார்கள் .தமிழர்களுக்கு.

அகதி என்றால் ?அ--உயிர்!

கதி என்றால் _நிற்கதி =உயிர் நிற்கதி என்று எங்கோ படித்த ஞாபகம் .

நித்தியானந்தா ஆச்சிரமத்தில் இல்லை.

இது எல்லாம் வியாபார உலகம் என்று ஒத்து ஊதுவோருக்கு உண்மை தெரிய வேண்டும் .

ஈழத்தவன் வரலாறு இனியும் இருட்டடைப்பு செய்யும் காலம் இல்லை .நவீன இலத்திரணியல் பரவிக்கிடக்கும் பூமி.

நித்தியானந்தாவை ஆபாசமாக நள்ளிரவில் காட்சிப்படுத்த முடியும் என்றால்.

ஏன் தாய்லாந்து என்றால் முகம் சுழிக்க வேண்டும் ?

சேகரும் தாய்லாந்து வாசி மங்கையுடன் தான் சல்லாபிக்கவில்லை சம்சாரியாக வாழ்கின்றான்.

அன்று என்னோடு பேச்சுக்கொடுத்தான்.

ரவி வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டன் .ஊரில் எப்படி கடவுச்சீட்டு எடுப்பது என்றே கொழும்பு வந்த பின் தான் தெரியும். அந்தளவுக்கு எங்கள் நாட்டுக்கல்வித்திட்டம் தெளிவான விடயங்கள் இல்லாத அரசகருமங்கள். காசு கொடுத்து பாஸ்போட் எடுத்து தாய்லாந்துக்கு உல்லாசவிசாவில் வந்தேன்.!

ஓட்டியாக வந்தவன் என் பையில் ஓட்டி வைத்த பொருட்கள் எனக்குத் தெரியாது.

நானும் வெளிநாட்டு ஆசையில் உயிர் தப்பினால் போதும் என்று வந்துவிட்டேன் .உள்ளே இறங்கிய பின் தான் தெரிஞ்சது என் பையில் போதைப்பொருள் வைத்தவிடயம்.

பிறகு என்ன தாய்லாந்து சிறைவாழ்க்கை என்னையும் ,இவனையும் (சுவா)சேர்த்துவிட்டது.

அண்ணவைப் பார்க்க வந்த இவன் (சுவா ) தங்கை தாய்லாந்துவாசி .இரக்கப்பட்டாள் என் மீது.

இப்ப ஒரு மகன் எங்களுக்கு.

இந்த ஓட்டி வேலையும் ஒரு வியாபாரம் தான் .தாய்லாந்து மொழி தெரிந்தால் அதிகம் சம்பாதிக்க முடியும்.

காசு கொடுத்தால் சிறையில் இருந்து கூட சில்மிசம் செய்ய்யலாம் .

இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கொண்டு போன போது. சுவா காசு கொடுத்து என்னை இங்கேயே தங்கவைத்துவிட்டான்.

இங்க காசு வீசி எறிந்தால் தருணம் பார்த்து தப்பிவிடலாம்.

என்றாலும் எனக்கு உயிர்பாதுகாப்புக் கொடுத்த நாடு தாய்லாந்து. அதுதான் !நான் இங்கேயே செட்டில் ஆகிவிட்டேன்.


என்னைப் பார்த்தவிடயம் யாரிடமும் சொல்ல வேண்டாம் ரவி.

நிச்சயம் சொல்லமாட்டன் சேகர் அண்ணா.

இப்ப நாங்கள் எங்க போறம் ?எப்ப போய்ச்சேருவம் ஐரோப்பா?

எனக்கு வேலை உங்களை எல்லாம் ஹாட்சாயில் சேர்ப்பது மட்டும் தான் .

அதன் பிறகு மற்ற ஓட்டிபொறுப்பு .

ஓ அப்படியா?

ஹாட்சாய் எங்க இருக்கு ?hat-yai

அது மலேசியாவுக்கு அருகில் இருக்கும் நகரம் .

இரண்டு நாட்டுக்கும் இடையில் எல்லைப்பாதைக்கு அன்மித்த நகரம்.

அப்ப இனி நீங்க கூட வரமாட்டீங்களா ?

இல்லை உனக்கு மட்டும் என் கைபேசி எண் தருகின்றேன் .ஏதாவது அவசரம் என்றால். கதை .

எப்ப போய்ச் சேருவோம் ?

நாளை மாலையில் ஹாட்சாயில் இருப்போம் .

பஸ் தொடர்ந்து ஓடும் ஜோசிக்கத் தேவையில்லை ரவி.

நித்திரை வந்தால் நித்திரைகொள்.

இல்லை சேகர் அண்ணா .

இப்ப எல்லாம் நித்திரை நேரம் கெட்டுப்போச்சு .

ஏன் ?

அது எல்லாம் விதி இரண்டு வருட இருட்டறை வாழ்க்கையில் நித்திரை சிதறிப்போச்சு !
ம்ம் எனக்கும் ,ஜீவனுக்கும் .

!ம்ம் எங்க நாட்டில் யுத்தம் வந்தபின் எத்தனைகதைகள் பலரின் வாழ்வில்.


நடக்கும் விதியின் வழியில் போவோம்.

அதுவும் சரிதான் சேகர் அண்ணா.

நான் நித்திரை கொள்ளமாட்டன் முன்னால் மச்சான் கூட கதைக்கப்போறன் .சரி அண்ணா.

இரவின் ஒளியில் தாய்லாந்து வீதிகள் மனதில் சூரியன் வானொலியில் நேற்றைய காற்று நிகழ்ச்சி போல சுகம் தரும்.

டேய் ஜீவன் நித்திரை பிறகும் கொள்ளமுடியும்.

இந்த வீதிகளைப்பாருடா !

யாழ்ப்பாணத்தில் இப்படி இருந்தால் ,வவுனியாவில் இருந்தால் ,எப்படி இருக்கும் வேலை செய்ய .

கிரவல் ரோட்டில் ஓடியே முதுகுவலி வந்துவிடும் அவஸ்த்தை .

டேய் நித்திரைகொள்பவனை எழுப்பி ஏண்டா உயிர் வாங்குகின்றாய் ?

இனவாதம் இருக்கும் வரை ரோட்டும் போடமாட்டாங்க ,மனுசர்களை நிம்மதியா இருக்கவும் விடமாட்டாங்க .

விசர் கனவு காணாமல் இப்படியே பார்த்து ஏக்கம் கொண்டு இரு.

எனக்கு எதுவும் தேவையில்லை இப்ப நித்திரை கொள்ளவிடு

.சரி நீ படு நான் இந்த வீதிகளில் சாலிக்காவோடு கனவில் டூயட் பாடப்போறன்!
தொடரும்.

29 August 2012

விழியில் ஓய்வு!!!

ஓடும் ரயிலில் எல்லாம் உன் நினைவு
ஓடிவந்த போது வலியில்லை இதயத்தில்!
ஓடவிட்டவர்கள் வாழும் ஊரில்
ஓதும் தொழில் ஒன்றும்
ஒத்துவரவில்லை உன்னைப்போல!
ஒரு முறை பார்த்தால் ஒய்வுநாடும் விழிகள்

மெல்லிசை எல்லாம் துள்ளிசை ஆனபோதும்
மெல்லிய காதல் தந்தாய் துள்ளிவரும் பெண்ணாக
சொல்லிய வார்த்தைகள் எல்லாம்
சுருதியில் சேராத வார்த்தை போல உன்னையும் சேராமல் விட்ட காலம் ஒரு
முன்பனிக்காலம் .
முடியாமல் தவிக்கின்றேன் குளிரில் உன் நினைவு சுமந்து!

வசந்தகாலத்தில் வாழ்த்துக்களோடு
வருகைதந்தாய். இதயம் காதல்
விழி திறக்க.
வடிவில் நீ ஒரு வாடாத காதல் பூ
விலைபேசவில்லை அகதியாக அலையும்
விடியாத வாழ்வில்.
விலகிப்போனாய் விருப்பம் என்று
விரும்பி வந்தேன் விசாவோடு விரல்பிடிக்க
வருந்த வேண்டாம் இப்போது என் காதல் வேற விடியல்நோக்கி
வலிகளும் கடக்க வழிகாட்டினாய் வெளிநாட்டில் விலகிப்போனவள்! என்காதல்
வாழ்த்து அட்டை வடிவில்லாமல் கசகிபோனபடி முகம் தொலைந்து வாழ்கின்றேன்.!


விழியில் தீபம் இன்றி!

27 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -09

அகதிகளுக்கான உயர்ஸ்தானிகள் ஆலயம்,அகதிகள் புணர்வாழ்வு ,வெளிநாட்டு அமைச்சு எல்லாம் என்ன அறிக்கை விட்டாலும்.

யுத்தம் தந்த பாடத்தில் உயிரைக்காவிக்கொண்டு உள்நாட்டைவிட்டு ஐரோப்பாவுக்கும் ,ஆஸ்ரேலியாவுக்கும்,கனடாவுக்கும் போகப்போறன் என்று பயணமுகவரிடம் பணம் கொடுத்துவிட்டு பாதிவாழ்வு தொலைத்தவர்கள் முகம் பேசமறுக்கின்றோம் பொதுவில்!

பட்டப்படிப்பு படித்தவன் ஆமி பிடிப்பான் என்ற பயத்தில் காணியும் ,வீடும் வித்து மூதத்தவன் ஒரு பொடியன் உயிர்வாழட்டும் என்று தாய்நாட்டைவிட்டு ஓட்டி அனுப்பின தாய்.

என்ற பிள்ளை வெளிநாட்டுக்குப் போனவன் இதுவரை ஒரு தகவல் இல்லை .என்ற கடவுளே" நீ கல்நெஞ்சுக்காரன் என்று புலம்பும் தாய் கண்ணீர் புரியுமா ?பயணமுகவர்களுக்கு .

இல்லை தான் பயணமுகவரிடம் ஏமாந்துவிட்டேன் என்று தன் உறவுகளிடன் உண்மை சொல்ல முடியாத தாழ்வு மனம் படைத்தவன். முகம் தொலைந்தவர்கள் பட்டியலில் இருக்கும் நிலை பேசமறுக்கின்றது ஊடகம்.

.நடிகருக்கு பால் ஊத்தும் கூட்டம் எல்லாம் பக்கத்துவீட்டுப் பொடியன் சேர்ந்து படித்தவன். இப்போது உயிரோடு இருக்கின்றானா ?என்பதைக் கூட சிந்திக்கும் மனம் இல்லை.

காலம் யுத்தம் மூலம் தந்தது மனதினை வக்கிரம் ஆக்கும் வார்த்தைகளும் ,ஒடிப்போகும் கிளுகிளு செய்தியும் சொல்லும் இணையத்தையும் அன்றி வேற என்ன???

ராகுல் காந்திக்கும் ஜமேக்கா காதலியும் சாட்டில் சல்லாபிக்கின்றார்களா ?என்றும் நாமலும் அசினும் பிசினில் என்று போடும் ஊடகம்.

சொந்த நாட்டில் இருக்கமுடியாத நிலையில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஈழத்துக்குடிமக்கள் தவிக்கும் தாய்லாந்தில்,மலேசியாவில்,ஆப்பிரிக்க நாடுகளில் அதுவும் கெமரூன் நாடுகளில் பயணமுகவர் மூலம் ஐரோப்பா போக,கனடா போக என காத்திருந்து கதறியவர்கள் கதை எல்லாம் மகுடம் ஏறாது திரட்டியில் .


ஆனால் முகம் தொலைந்தவர்கள் மனம் நொந்தவர்கள் ,மனப்பிறல்வு எல்லாம் பேசமறுக்கும் அரசியல் விமர்சர்கள்.

ஒரு கணனிகிடைத்தால் அடுத்த யுத்தம் வரும் என்று சங்கூதும் சானக்கியர்களும், அதிகாரசபை என்று ஆலவட்டம் பிடிப்பவர்களும் முதலில் இந்த ஏதிலிகளை கரை சேர்ப்பார்களா ?? தீர்வுத்திட்டம் கேட்கும் குரல்கள் எல்லாம் இவர்களுக்கும் தீர்வு சொல்வார்களா ?
செடில்க்காவடி தூக்கும் அயல்நாட்டு ஊடகம் எல்லாம் அகதியின் வலி என்ன சூப்பர் சிங்கரில் அழுவது மட்டும் தானா ? ஒப்பாரியாக சிறையில் இருந்தும் சித்திரவதையும் பார்த்திருந்தால் புரிந்து இருக்கும் புலம்பெயர ஈழத்தவன் பட்டவலிகள். இது எல்லாம் புரியாது இத்தாலியில் இருந்து இந்திரா குடும்பத்துக்கு வந்த காதலிக்கு,! . அப்படித்தான் அன்று எங்களுக்கு ஓட்டியாக தாய்லாந்து வாசி சகிதம் அவருக்கு உதவிக்கு வந்தவர் . சேகர். யாழ்ப்பாணம் ஆமியின் கட்டுப்பாட்டில் விழுந்த வருடத்தில் வெளிநாட்டுக்கு போகப் போனார் எங்கள் கிராமத்தில் இருந்து. அவரை 2001 இல் இப்படி ஓட்டியாக சந்திப்பேன் என்று நானும் நினைக்கவில்லை . ஜீவன் யாழ்தேவியில் தூங்குவது போல காலை நீட்டித் தூங்கிய்போது சேகர் முன் கதை கொடுத்தேன். சேகர் அண்ணா எப்படி இந்த ஓட்டிவேலைக்கு வந்தீங்க ?ஊரில் உங்க அம்மா எத்தனையிடம் எல்லாம் தேடுவா . ஏன் இப்படி தோற்றம் எல்லாம் மாற்றி? என்னாச்சு ?சொல்ல விரும்பினால் சொல்லுங்க! ரவிக்கு என்னைத் தெரிந்து இருக்கின்றதே . ம்ம் எப்படி மறக்க முடியும் கிளாலிக்கடல் ஒன்றாகத்தானே தாண்டிவந்தோம் . என்ன சொல்ல வாழ்க்கைப்பாதையே வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு மாறிப்போச்சு. எனக்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை.!!!  தொடரும்...................

25 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -08

புலப்பெயர்தல் ,புலம்பெயர் இலக்கியம் என்று அதிகம் பேசப்பட்டது 1990 இன் பிற்பகுதியில். வெளிநாடு என்ற சொல்லை தவிர்த்து. தனித்துவம் மிக்கதாக இந்த வார்த்தையை முன்னீடு செய்தவர்களில் ஒருவர் எஸ்.பொ அதன் தாக்கம் வாதங்கள் ,பிரதிவாதங்கள் எல்லாம் தாயகத்தில் மல்லிகை ஜீவா,செங்கை ஆழியான் ,செ.யோகநாதன் என முட்டி மோதியது காலத்தால் மறக்க முடியாது ஏடுகளில்.

அனல் கக்கிய வார்த்தைகள் எல்லாம் சொல்ல மறந்த கதையில்லை. ஆனால் சொல்லாத கதைகள் பலதைச் சொல்லும் புலம்பெயர் சமூகம்.

காரணம் சுதந்திரம் என்ன என்பதை அனுபவிக்கும் போது இருட்டடைப்பும் ,வாய்ப்பூட்டும் ,துப்பாக்கி முனையில் மூச்சுக்காற்று போய் விடும் என்ற பயமும் ,மார்ச்சியம் என்றும் நாட்டுப்பற்றும் சொல்லிக்கொண்டு இனவாதம் உயிர் எடுக்கும் பிணம் விழும் நாட்டில் இல்லாத சுதந்திர தேசத்தில் சுதந்திரமான விடயங்களை பேசக்கூடிய சூழலில் வாழ்தல் என்பது வரலாற்றில் வாழ்தல் எஸ்.பொ போல சேமிக்க வேண்டிய நூல்.

அது போல சொல்லாத விடயங்கள் சொல்லுவது எழுத்தாணி பிடிபோர் கடமை..வலிகள் அழுவது /ஒப்பாரி என்றால் நான் அதுகடந்து வந்தவன்.


மரம் பட்டுப்போனாலும் மரத்தின் வேரில் ஈரம் இருக்கும். அன்பில் கிளறிப்பாருங்கள் அடியில் ஜீவன் இருக்கும் .

"டேய் என்ன எழுதுகின்றாய் ரவி .தூக்கம் வருகின்றது படுக்கப்போறன் "

"நீ படு ஜீவன் எனக்கு இந்த தாய்லாந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் இரவில் .அப்படி ஒரு அழகு"

ம்ம் ஏன் தாய்லாந்து மங்கைகளும் அழகுதான் மச்சான்.

அதுசரி உனக்கு முதுகில் ஆமி அடித்தாலும் மூளையில் அடிக்கவில்லை என்னதுக்கு என்று தெரியுமா ?

மூளையில்லை உனக்கு என்று அவனுங்களுக்கும் தெரியும் போல.ஹீ ஹீ

போட லூசு விசர்க்கதை கதைக்கின்றாய்.!!!

உனக்கு நெஞ்சு முடியில் தீபம் ஏற்றியவன் கைவிரலில், தங்க மோதிரம் போடவில்லை. எஸ்லோன் பைப்பில் சாமரம் வீசவில்லை,ஆணி புடுங்கும் சுத்தி வைத்து கைநகவிரல் மீது நர்த்தனம் ஆடவில்லை ,சப்பாத்துக்காலினால் மொழிக்கட்டில் மிதியடி மிதிக்கவில்லை .உண்மை சொல்லு குண்டு எப்படி வந்தது என்று அதுதான் இந்த பஸ்சில் கூட எழுதுகின்றாய் நாட்குறிப்பு ரவி!.

மச்சான் எழுதிவைப்பம் யார்கையில் சேரும் போதும் சரி இப்படி ஒரு அனுபவமா என்று படிக்கட்டும் வழிப்போக்கன் என் உயிர் இல்லாவிட்டாலும்.

கவலைப்படாத சிறையில் இருந்து வெளியில் விட்ட கடவுள் நம்மை தெருவில் அநாதைப்பிணம் போல விடமாட்டார் .


போதிமரத்தில் சரி ஒரு இடம் தருவார்.

அதுவும் சரிதான் மச்சான் ரவி.

ஜீவன் கடவுள் என்னையும் உன்னையும் ஏன் ஒரே ஊரில் பிறக்கவைத்தார்? ஒரே வேலையில் சேரவைத்தார் எல்லாம் விதிப்பயன்.


நீ சிறையில் பாண் சாப்பிட்டிய இல்லைவரும் பேப்பர்களில் ,
பணபடித்தாயா ?இப்படிப் பேசுகின்றாய் .

விதி என்று!

விதிதான் உன்னையும், என்னையும் தாய்லாந்து வீதியில் இப்படி ஓடும் பஸ்சில் கதைபேசவைக்குது.

ஜீவன் .இந்த நேரம் சாலிக்கா இருந்தால் எப்படி இருக்கும்.

அடச்சீ! என்னைப்பக்கத்தில் வைத்துக்கொண்டோ டூயட் பாடுவாய்!
ஏன் அவளோடு பக்கத்தில் இருந்து படம் பார்த்த நீ பேசாத நல்லவன் போல .என்னையும் அவளையும் குறுகுறு என்றே பார்த்து எங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் கொஞ்சிப்பேச விடாத துரோகிடா நீ . வீட்டில் இருந்து பேசு அது என்ன சினிமா அரங்கில் வந்து பேசுவது. நான் படம் பார்க்கும் போது நீங்க என்னை இம்சை செய்தால் எப்படி இருக்கும் . பொறாமைடா உனக்கு நீ நித்திரைகொள் ஜீவன் அப்படித்தான் அன்று இருந்தான் .!!! தொடரும்!!!! பண-வேதம் ஓதுவது போல சகோதரமொழி  சிங்களத்தில்.

24 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -07

"தான் ஆடவில்லையம்மா தசையாடுது அது தந்தை என்றும் மகன் என்றும் சதிராடுது "

என்று கவியரசர் பாட்டில் வரும் வார்த்தை எத்தனை துயரமானது என்று யார் பார்த்தோம்???

இன்றும் காணாமல் போன மகனை,மகளை,பேரனை,பேர்த்தியை தன் உறவைத் தேடி காவல் நிலையமும் ,மக்கள் குறை தீர்க்கும் குழுவிடமும்,மனித உரிமைக்குழு என்றும் அலையும் குடும்பங்கள் நம்நாட்டில் இரண்டு பக்கத்திலும் இருக்கின்றது .


இது எல்லாம் சின்னத்திரையில் அடுப்படியில் .பட்டுப்சாரியில் பல நகைபோட்டு வரும் பாத்திரம் போல இல்லை. இந்த மக்கள் முகம் அழது அழுது வீங்கிய கண்கள் ஆயிரம் கதை சொல்லும் !

.வெளிநாட்டில் ராஜவாழ்க்கை வாழ்கின்றாய் என்று முகநூலில் நெஞ்சில் குத்துவோருக்கு புரியாது கடல்கடந்தவர்கள் .காத்தாலை விமானம் ஏறி மாலையில் ஐரோப்பா வந்ததில்லை அரச தலைவர் போல.

அகதியாக அலைந்து வந்தவர்கள் .!

"நேற்றும் என் கனவில் வந்தான் ஐயா என்ற அம்மா என்று "

என் பிள்ளை என்று காவல்நிலையத்திலும் ,மனித உரிமை ஆணைக்குழுவிலும் அழும் கண்ணீர் நீலிக்கண்ணீர் இல்லை சின்னத்திரைபோல நிஜக் கண்ணீர்.!!

பெற்றபிள்ளைகள் பாசம் இனவாத போருக்குத் தெரியாது. இனவாதம் வாய்ப்பூட்டுப்போட்டகதைகள் பல .


இனவாதம் போராளிடம் அதிகமாக மனிதவழு இழப்பை சந்திக்கும் போது இராணுவக்கட்டுப்பாட்டு ஊடகங்கள் உண்மையான இழப்பைச் சொல்லாது !!


பெட்டியில் வந்த உயிர்கள் எத்தனை என்றால் ஆயிரம் என்றாலும் நூற்றில் சொல்லிய கதை வெளியில் பல ஊதுகுழல் ஊடகம் ஊதிச் சொல்லும் மோதலில் படையின் இழப்பு இத்தனையாம். என்றுவிட்டு இனவாதம் வென்றுவிடும் என்று வேதம் ஓதும் .


வந்த உடல்களை அனுராதபுரம்,மன்னார்,முன்னரங்கம் தாண்டிக்குளம் பகுதியில் இரவோடு இரவாக சாம்பல் ஆக்கிய கதையை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு நெஞ்சு பொறுக்காமல் சொன்ன காரணத்துக்கு துப்பாக்கி நீதி கிடைக்க காத்திருந்த போது!

கண்ணீல் கலர் வண்ணம் தலையில் முடிவண்ணம் மாற்றி முகம் மாற்றி வந்தவன் தான் நாமல் !

இவனை நான் மன்னாரில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபோது நேரில் பார்த்தேன். ஒரு அதிகாரியான ஒரு தரத்தில்.

அம்மையார் காலத்தில்!ம்ம் மகாசிவாரத்திரிக்கு கேதீஸ்வரம் போய் பாலாவியில் நீராடவும் தேவை இவரின் பாதுகாப்பு ஒப்புதல் அனுமதி.முதலில் அவர் அனுப்பும் பட்டியல் பின் தர அதிகாரி தீர்மானிப்பார் என்ற நிலை ஒருகாலத்தில் !ம்ம் .

காலம் மனங்களை யுத்தம் செதுக்கும் ஒருத்தனை என்பதா ?இல்லை இனவாதம் சிதைக்கும் என்பதா ?

பாலாவியில் என்னோடு தீர்த்தம் ஆடியவன் பிரெஞ்சுக்காதலியை சந்திக்கும் சூழல்வரும் என்று நான் கூட நினைக்கவில்லை .ஜீவனுடன் ஏற்பட்ட நட்புநிமித்தம் .

கலிகாலம் என்பதா ?ம்ம் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் கோபம் கடந்து கேட்கவேண்டும் .மரங்கள் செழிக்கும் போது இலை,கொப்பு என சேர்ந்து சிரிக்கும். உறவுகள் பட்டுப்போனால் !மரங்கள் காய்ந்த விறகு என வேர்களில் பச்சத்தண்ணீர் ஊற்றியவர்கள்விட வெண்நீர் ஊற்றியவர்கள் அதிகம் .


இது புரியாமல் வெளிநாடு போன நீ ஆணவம் பிடித்தவன் அடங்க மறுக்கின்றாய் என்றால் ?எப்படி ??
அன்று தாய்லாந்தில் நாமலை அடையாலம் கண்டுகொண்டாலும், உள்பயத்துடன் தான் எங்கலோடு பயணித்தான் . தாய்லாந்து நகரின் பாங்கொக் நட்சத்திரவிடுதியில் இருந்து தாய்லாந்தின் இன்னொரு நகரான ஹாட்சாய் போன அன்று இரவு ! .அந்த இரவில் தாய்லாந்து வாசிகூட இன்னொரு முகம் நம்மவர் முகம் முன்னர் பார்த்த முகம்! தொடரும்... கொப்பு - மரத்தின் கிழை/வாது!

22 August 2012

எடிசன் மாளிகை பார்த்தாலே பரவசம்.!

வசந்தகாலத்தின் இந்த சுகமான நாட்களில் பலர் சுற்றுலா செல்வார்கள் .புலம்பெயர்வாசிகள் போவதும். மீள்வதுமாக இருக்கும் நிலையில் ஒரு கோட்டைக்கு சுற்றுலா செல்வோமா? 

வாருங்கள் "எண்ணங்களாலே இறைவன் தானே .'வண்ணங்களாலே வடிவம் தானே எழில் கொஞ்சும் மலையகமே "என்று ஒரு ஈழத்து மெல்லிசைப்பாடல்  புகழ்பெற்றது ஒரு காலத்தில் .

முத்தழகு பாடிய பாடல் நானும் முணுமுணுத்த பின் ஒரு காலத்தில். இந்த கோட்டையில் நானும் ,நண்பர்கள் சகிதம் ஒரு ஜாலியான சுற்றுலா போன நினைவுகள் இன்னும் மறக்க முடியாது.

முன்னம் இந்தக் கோட்டையை தொடரில் சொல்லி இருந்தாலும் விபரமாக சொல்லவில்லை என்று நண்பன் கூறியதும் ,இல்லாமல் இந்த புகைப்படங்களையும் அனுப்பியிருந்தான்.


உருகும் பிரெஞ்சுக்காரியை ஓய்வு கொடுத்துவிட்டு இந்த கோட்டை பற்றி எழுதச் சொல்லிய நண்பேன்டா.

 இந்தவாரம் அரபுலகில் இருந்து தாயகம் போகின்ற நிலையில் அவனை சந்திச்ச இந்த கோட்டையை மறக்கமுடியாது .


வாருங்கள் இந்தக்கோட்டைதான் எடிசன் பங்களா. இலங்கையின் எழில் கொஞ்சும் ஊட்டியைப்போல குளிர்தேசமான அப்புத்தளையில் இருக்கின்றது .

அப்புத்தளையில் இருந்து வெலிமட போகும் பேரூந்தில் போனால் இந்த மாளிகையை தருசிக்கலாம்.

 மனதுக்குப் பிடித்தவர்களுடன் உடரட்டை ரயிலில் வருபவர்கள் .அப்புத்தளை தரிப்பிடித்தில் இறங்கி "பொடிநடையக போறவரே "என்று டூயட் பாடி வந்தால்.

 சிலமணித்தியாலத்தில் உள்நுழைய முடியும்.


ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநர் ஆக இருந்த சேர் எடிசன் வாழ்ந்த இந்த மாளிகையில்.



 அவரின் ஆட்சியதிகாரம் ;அதில் இவர் செய்த கட்டுமான செயல்பாடுகள் எல்லாம் கோட்டோவியமாக காட்சியளிக்கின்றது.

எடிசனின் இரண்டாம் தார மனைவி அவரை வரைந்த கோட்டோவியம் மிகமுக்கியம் இந்த அரன்மனையில்.


அதிகமான அறைகள், கண்ணாடிபேழைகள் ,முற்கால நினைவுச் சின்னங்கள் எல்லாம் இன்றும். அவரின் நினைவாக சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணம் மாகானசபை மூலம் பராமரிக்கப்படும் இந்த மாளிகை .அப்புத்தளையில் அதிகம் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் ஒரு சிறப்பான இடம்.


மனதிற்கு பரவசம் தரும் மலைப்பகுதியில் இது இருப்பதால் ஆடி ,ஆவணியில் அதிகம் சூரிய ஒளி தெரியும் பகல் பொழுதில் போனால் மிகவும் நேர்த்தியாக இயற்கையோடு அமைந்திருக்கும் இந்த எடிசன் பங்களாவை பார்வையிடலாம்! விரும்பியவரை கைபிடித்துச்செல்லும் போது இந்த மலைமாளிகையில் டூயட்பாடச் சொல்லி மனது ஏங்கும் என்பது போய் வந்தவர்களின் அனுபவம் ஆகும். ஆனால் தனிமரத்திற்கு அந்த அனுபவம் இல்லை !ஹீஈஈஈஈஈ. நாங்கள் குழுவாக  போனபோது நான் ரொம்பச் சின்னப்பையன்!



சுற்றுலா போகும் போது பேச்சுத்துணைக்கு ஆட்கள் இல்லையா? கவலை வேண்டாம் .இருக்கின்றது வானொலி விரும்பிய பாடல் கேட்கலாம் ஒரு தபால் அட்டை போட்டால் அது ஒரு காலம்.





 இன்று கைபேசி மூலம் இணையத்தில் விரும்பிய பாடலுக்கு மெயில் போட்டால்,;முகநூலில் தகவல் அனுப்பினால் பாடல் கேட்கலாம் புரட்சி எப்.எம்மில். ராகவன் குரலில் வரும் காதலா காதலா நிகழ்ச்சியில் நீங்களும் இனிய பாடல்களை கேட்டு மகிழ இணையுங்கள் புதுமையின் புரட்சியில்!

20 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -06

வழிநடத்துதல் .ஒரு பொறுப்பான செயல் எல்லாராலும் இது முடியாத காரியம் .

அரசியலில் தாய்மொழிக்கொள்கை கொண்டுவந்த பண்டாராநாயக்க தமிழ்மொழி அரச பாவனையை சீரழித்தது போல இருக்கக்கக்கூடாது வழிநடத்தல்.


கைகாட்டுவதைவிட கைத்தடியாக இருப்பது ஆன்மீக வழிநடத்தலில் பொறுப்பான காரியம்.

அப்படித்தான் அன்று அதிகாலையில் தாய்லாந்தில் விடியப்போகின்றது என்ற நினைப்பில் நாட்டை விட்டு வெளியேறிவர்கள்.ஜீவனும், ரவியும் .

ஐரோப்பா போகின்றோம் என்று தெரியும் எங்கே ?எப்படி ?என்று எதுவும் தெரியாமல்தான் வழிநடத்தி வந்த பிரயான முகவர் நகுலன் சகிதம் .தாய்லாந்தில் உள்நுழைந்தனர்.

.தாய்லாந்து தேசம் ஒரு அழகியபூமி. அன்பு மக்களின் உபசரிப்பு, கும்பிட்டு வரவேற்கும் உல்லாசபுரி

ஈழத்தின் வரலாற்றில் இந்த தேசம் பின்னால் சில தடங்களைப் பதிவு செய்து இருக்கின்றது ஏடுகளில்.ஆனால் சில பல இதயங்களில் மறக்கமுடியாத தேசம்.

.பிரயானிகள் வாசல் ஊடாக ரவியும் ,ஜீவனும் வெளியேறிய போது !நகுலன் இன்னும் பலரையும் அழைத்து வந்தார்.

பிரயான முகவர்கள் பலர் பல வழிகளில் பலரை ஒன்று சேர்த்து ஒருவரிடம் கையளித்து.குறிப்பிட்ட நபர்களை ஐரோப்பாவில் சேர்க்கச் சொல்லும் வழிமுறைக்கு ஒருவர் வழிகாட்டியாக வருவார்.

அவரை ஓட்டி என்று ஒரு வார்த்தையை குறியீட்டாக பயன்படுத்துவார்கள் .மலேசியத்தமிழில் .

இது ஒரு சிறப்பான வார்த்தை .

இன்னும் ஒரு இடத்தில் இதைச் சொல்லுவான் ஜீவன் என்பதை இப்போதைக்கு சொல்லிவைக்கின்றேன் ஆண்டாள் கூற்றைப்போல.

எல்லாருக்கும் இந்தப்பயணம் மனவலிகள் தரும் என்று அன்று தோன்றவில்லை 18 பேர் வெளியில் வந்த போது.
 நகுலன் எங்களை அழைத்து வந்தது நட்சத்திரவிடுதிக்கு. "இந்தா பாருங்கோ என் வேலை உங்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டும்தான் . இனி இன்னொரு நண்பர் தான் பொறுப்பு . உங்கள் பயணம் வெற்றியாக இருக்க என் வாழ்த்துக்கள் . யார் யார் அதிகமான டொலர் கொண்டந்தவர்கள் காசு எல்லாம் தாங்கோ நான் இங்க இருக்கும் நண்பருக்கு கொடுக்க வேண்டும் .. மிச்சம் போனபின் அங்கே கொடுங்கோ. எப்போதும் அவசரமும் பதட்டமும் இந்த பயணங்களில் இருக்கக்கூடாது. புதியவர்கள் சகபயனாளியோடு மனம்விட்டுப் பேசவேண்டும். ஊரில் எந்த இடம். கடைசியில் இருந்த இடம். போகும் நிலை எல்லாம். மெளனமாக இருந்தால் வெளிநாடு போய்விடலாம் என்ற எண்ணம் சில உயிர்கள் அனாதைப் பிணங்களாகப் போக காரணம் ஆகிவிடும் . அதைக் களைவது நட்பு ரீதியான சந்திப்புத்தான். சந்திக்கும் போது ஒளிவு மறைவு இல்லாமல் பேசவேண்டும்.வெளிநாட்டுக்கு பயணமுகவர் மூலம் வரும் போது . விற்பனை.வியாபாரத் தொழில் என்பதால் ஜீவனும் ரவியும் பேசுவது அரட்டை அரங்கம் போல... அன்று நகுலன் கூட வந்தவர்களில் யாழ்குடா நாட்டின் பல பாகத்தில் இருந்தும் வந்தவர்கள் .அதிகம் . இரண்டு திருகோணமலை நண்பர்கள் .சிலர் முன்னர் பலதடவை தாய்லாந்து வந்து பிரயாணம் கைகூடாத நிலையில் திரும்பியிருந்தவர்களும் அடக்கம். வேடிக்கை உலகில் விநோதங்கள் அதிகம் அதில் .! யுத்தம் என்ற அரக்கன் தமிழ்மீது போர் முரசு கொட்ட அந்த முரசுகொட்டும் முகமாக இருக்கும் இராணுவம் கொலைவெறியோடு அலையும் . ஆனால் இராணுவத்தில் சேர்ந்த பின் போர்களத்தின் நிஜங்கள் புரிந்துகொண்டால் புறமுகிட்டு ஓடுவது கோழை என்று புறநானூறு சொல்லும். என்றாலும் ஓடிவாரது உயிர் தப்ப. அப்படி எங்களோடு பயணித்த ஒரு இராணுவச் சிப்பாய் தான் நாமல்! நாமல் தமிழ் பேசுவான் சிறப்பாக தமிழ் பெயரில்தான் நாட்டைவிட்டு வந்தான் எங்களுடன்!

19 August 2012

மின்நூலும் அன்பு மழையும் -4

வணக்கம் வலை உறவுகளே அன்புமழையில் நனைந்த நிகழ்வு மனதில் மறக்கமுடியவில்லை .

முகநூல் நண்பன் இம்ரான் மோசாவின் வாழ்த்துமழை ஒரு புறம் என்றால்

ஆயிரம் விழுதுகளுடன் ஆலமரமாய் ஆயிரம் யுகங்கள் கடந்தும் உன் இலக்கிய சிந்தனை பார் முழுதும் பரவ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.... Sivanesan Thiagarajah நூல் வெளியீடு சிறபாக நடக்க வாழ்த்துச் சொல்கிறேன்



மின்நூல்
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே புதுமையின் புரட்சி எப் எம் இணையவானொலி ஊடக அனுசரணையில் மணியம் கபே உணவகத்தின் மணிசார் அதிகமான வடை,வாழைப்பழம் வழங்க.


நூல் வெளியீட்டு விழாவுக்கு அணியணியாய் திரண்டு வரும் மக்கள்! அனைவரும் சொன்ன டைமுக்கு வந்திட்டினம் :-))

















 ராச் அவர்கள் கிரிபத்(பால்ச்சோறு )அன்பளிப்பு செய்ய.

கிரிபத்(பாற்சோறு) நேசன் அண்ணாவுக்காக அனைவரும் எடுத்துக்கொள்ளுங்கள்
















 சுவீஸ் சொக்கலேட் ஹேமா


சுவிஸ் சொக்லேட் எடுத்துக்கொள்ளுங்கோ எல்லாரும்.....!



















அதனைத் தொடர்ந்து என் நன்றி உரை காட்சிப்படுத்தப்பட்டது.



வணக்கம் வலை உறவுகளே முகநூல் நண்பர்களே முகம் தெரிந்த நட்புக்களே இன்று இந்த அவையில் அடியவனின் அழைப்புக்கு அன்பின் நிமித்தம் இணையத்தில் இணைந்த இன்னும் என்ன தோழா நட்புக்களுக்கு இந்த நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் எப்போதும் நேரம் மிகவும் பொன்னாது .அந்த நேரத்தை எனக்கு ஒதுக்கியதுடன் என்னையும் பதிவுலகில் தடம்பதிக்க இன்று இந்த நண்பர்களுக்கு முகம் காட்ட வரவேற்புரை நிகழ்த்திய பவன் மற்றும் நிரூபன் ,ராச் மங்களவிளக்கு ஏற்றிய பதிவாளர்கள் அறிமுகம் தந்து   மின்நூல்வெளியீடு செய்த ஹேமா .நூல்


விமர்சனம் செய்த கலைவிழி தன் வலைப்பதிவில் விமர்சனமும் அழைப்பும் பகிர்ந்த கலை மற்றும் நாஞ்சில் மனோ .


இந்த நிகழ்வை ஒழுங்கமைத்த பவன் மற்றும் கலைவிழி,ரித்துஸ்,டெனில் மைந்தன் சிவா ,காற்றில் என் கீதம்,குட்டித்தாரா,துசி,மற்றும் வலையுறவுகளுக்கும் முகநூல் உறவுகளுக்கும் தொடரை மின்நூல் ஆக்கிய பவனுக்கும் தனிமரம் என் முதற்கண் பாதம்பணிந்த நன்றிகள் .

நீங்கள் தந்த இந்த முகம் எனக்கு இன்னொரு நினைவுச் சின்னம் இந்த நாளில் .உங்களை என்னோடு இணைத்த இந்த ஐபோன் தான் எனக்கும் ஒரு தோழன் அவனுக்கும் என் நன்றிகள் .தொடரில் மகனின் தொல்லை பொறுத்த என் தாய்க்கும்!


.இணையத்தில் இப்படி ஒரு நட்பினைப் பெற நான் என்ன தவம் செய்தேன் ராகுலோடு பழகியதைத் தவர.
எல்லாருக்கும் என் நன்றிக்ள் !!!!!!!!!!!!!!
//////////////////
வாழ்க்கைதுனைவியாக வந்தாள்
வாழ்த்துக்கூறும் நாள்
வழிபோக்கன் இதயம் இவள் வசம்!
என்  காதலி அன்பு மனைவி!

17 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -05

நாவுக்கரசர் சிறையில் இருந்து தேவாரம் பாடினார்!

ஆனால் நம்ம ஈழத்து யுத்தம். எத்தனை அப்பாவிகளை போராட்டத்துக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் சம்மந்தம் இல்லாமல் சிறையில் வாடுகின்றார்கள்

.சிறைநிறைப்புப் போராட்டம் என்றும் சிறை எனக்கு ஓய்வு அறை என்று அறிக்கைவிடும் தமிழ்த் தலைவர் என்று சொல்லும் குறளோவியம் தீட்டியவர் அறிவாரா ?

நம் தேசத்தில் எத்தனை விட்டில் பூச்சிகள் பயங்கரவாதம் என்ற போலியான குற்றச்சாட்டில் வாழ்வையும் ,வாலிபத்தையும் தொலைத்து விட்டு விழி மூடியளுவதை .
அடிக்கடி அடுத்த நாடுகளுக்கு அறிக்கைவிட்டும் அன்னக்காவடி எடுக்கும் எம் சாக்கடை விற்பனர்கள் .
இன்னும் பாராளமன்ற கதிரையில் ஒட்டியிருக்கும் பூச்சி மூட்டைகள் இன்னும் எத்தனை நாள் அப்பாவிகளை வெற்று வாக்குறுதி கொடுத்து விடியலைநோக்கிய திசையை காட்டாமல் போவார்கள்,? சிறையில் உண்ணாவிரதம் ,சிறையில் கைகலப்பு ,என்று செய்தி தரும் ஊடகங்கள் இந்தச் சிறைகளில் வாடும் சந்தேகத்தின் பெயரில் பிடிப்பட்டு சிறைகளில் இருக்கும் சந்ததி பற்றி பேசமறுக்கின்றது . ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு நடிகையின் முந்தானையில் குளிர்காயும் நிலை ஒரு புறம் என்றால். இலக்கியத்தில் பதிவு செய்ய வேண்டியவர்கள், ஈழத்துத்து இலக்கியத்தை செளுமை செய்ய வேண்டியவர்கள் .வாசகர்கள் சரியில்லை என்று இன்னும் வருந்துவதை என்ன சொல்லுவது. சிறையில் வாடும் பலரிடம் பல கதை இருக்கும் .அப்பாவி மலையக மாந்தர்கள் எல்லாம் தமிழனாக பிறந்த பாவத்துக்கு அநியாயமாக சந்தேகம் மற்றும் உடந்தையாக இருந்தார்கள் என்று வாடும் நிலை பேசமறுக்கும் புலம்பெயர்குழுக்கள் அறிக்கைப்போர் செய்கின்றார்கள். வடகிழக்கில் சந்தேகம் தந்த பரிசு சகோதரமொழி தெரியாமலும் ,பொருளாதார வசதி இல்லாமலும் சிறையில் சீரழியும் கதையை பேசமறுக்கின்றோம் புலம்பெயர் புதிய தலைமுறையிடம் . ஆனால் அவனை சிறையில் போடணும் இவனை சிறைப்பிடிக்கணும் என்று அவலக்குரல் கொடுப்பவர்கள் எல்லாம் முதலில் இந்த பாதுகாப்பு குந்தகம் என்று பொய்க்குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களை மீட்டு எடுக்கும் வழி காட்ட வேண்டும்.
இரண்டு வருட சிறை வாழ்க்கையை வெளியில் சொன்னால் வெட்கம் என்று நான் நினைக்க மாட்டன் .கோடியில் சீதனம் வாங்கும் சமுகத்தில் வந்த மகனாக. தன் மகன் சிறையில் இருக்கின்றான் என்று ஏங்கும் பல குடும்பத்தின் துயரம் தெரிய வேண்டும் பலருக்கு. சொல்ல வேண்டியவர்கள் மெளனம் காப்பது இனியும் கூடாது . எனக்கு இனவெறியில்லை இல்லை தனிநபர் பொருளாதாரம் விடுதலை காணவேண்டித்தான் தனியார் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். வாலிபமும் சுதந்திரமும் ஜாலியான சினேகமும் என்னையும் சாலிக்காவுடன் சிங்களத்து சின்னக்குயிலே வசந்த ராகம் பாடவா என்று எல்லைக்கிராமம் மதவாச்சியில் சிந்து பாடிய காலம் எல்லாம் நானும் ஒரு சாமானியன் ..
ராஜபக்ச குடும்பத்தில் ஒரு தமிழன் மருமகன் ஆகும் போது ஏன் ?!நான் எல்லைப்படையில் இருந்தவள் கூட காதல் போர்களம் காணக்கூடாது . எல்லையில் இருப்பவளுக்கும் இதயம் துடிக்கும் காதல் மொழி பேசினால் ! என் துரதிஸ்ரம் அவள் குண்டு வெடிப்பில் உயிர் துறந்தாள். அன்பளிப்பு என்றுகாசுகேட்டு கொடுக்காத நிலையில் பொலிஸ் உதவியோடு இராணுவம் குண்டு இருந்தது வானில் என்று சோடித்த கரங்களில் இருந்து. இனியும் இந்த நாட்டில் நீதிமன்றம் நிலையான விடுதலை தருமா ?என்ற நிலையில் பிணையில் வந்த என்னை இன்னொரு நாட்டுக்கு அனுப்ப உதவியர் ஒரு சகோதரமொழி அதிகாரி . அன்று நானும், ஜீவனும் கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக தாய் விமானத்தில் எறிய பின்னிரவை மறக்க முடியாது.
அன்று தான் பின்லாடனை தேடி அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் முதல் போர் தொடுத்த இரவு .எங்கள் நட்பிலும் போர் வந்தது பின்கதவு வழியால் நாட்டைவிட்டு போவதால். .யாருக்கும் சொல்ல முடியாது உயிர் வாழவேண்டும். சகோதரிகளுடன் பிறந்தவன் ,மூத்தவன் உழைத்து சேர்ந்த காசு எல்லாம் நீதிமன்ற செலவுக்கு கரைந்து போன வலி புரியாது . வெளிநாட்டுக்குப் போனதில் சிரித்துக்கொண்டு படத்தில் இருக்கின்றான் என்பவர்கள் இன்று . அன்று எல்லாம் ஒரு நாள்கூட வந்து சிறையில் பார்க்கவில்லை. எதிர்பார்த்து இருந்த நேரத்தில் . ஆபத்துக்கு என் தாய்க்கு உதவிக்கரம் நீட்டவில்லை உறவுகள். எங்கோ பிறந்த சாலிக்காவின் அப்பா தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவள் தம்பிதான் எனக்கும் ஜீவனுக்கும் சாப்பாடு கொண்டுவருவான் சிறப்பு நாளில் சிறைக்கு. அதனால் தான் சிங்களவனை வெட்டணும் ,கொத்தணும் என்று சொல்லுபவர்கள் மீது கோபம் வருகின்றது . இனவாதிகளை எதுவும் செய்யுங்கோ சாதாரன அப்பாவிகளும் ,விடுதலைக்கு ஆதரவுக்குரல் கொடுப்போரையும் சிங்களவன் என்ற வட்டத்துக்கு மட்டும் வருவதை நாம் பிரித்து அறியத் தெரிந்து கொள்ள எல்லா வெளிநாட்டு வாசிகளாலும் முடியாது. எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கின்றார்கள். வெளிப்படையாக சில அரசியல்வாதிகள் காட்டுகின்றார்கள் பலர் ஆதரிக்கின்றார்கள் வாய் மூடி. அதுதான் அரசியல் இந்த அரசியல் .எனக்கு வேண்டாம் என்றுதான் நானும் எங்கள் நிறுவனத்தை விட்டு ஓடிவந்தது. எனக்கு உதவியதுக்கு சாலிக்காவின் தம்பி அடைந்த துயர் பலருக்குத் தெரியாது. .வன்னி மண் இரட்டைப்பெரியகுளம் கடந்து மதவாச்சி வரை ஊர்ந்து வரும் வாகனத்தில் பயணித்தால் வரும் நுனா ,வாகை மரங்களின் முதுகில் பல கதையிருக்கும். சகோதரமொழி நங்கைகளின் ஏக்கம் காதல் என நீளும் மரங்கள் எழுதிய கதைகள் எல்லாம் ஏரிக்கரை ஊடகம் தூக்கி வீசினாலும். சமதர்மம் என்று சொல்லிவிட்டு இனவாதம் பேசும் நிலையில் யாராவது வழிப்போக்கர்கள் எழுதுவார்கள் நம் கதையை எதிர்காலத்தில் .என்னடா மச்சான் ரவி என்ன எழுதுகின்றாய் .நீயும் ராகுலுடன் சேர்ந்து நாட்குறிப்பு தொடங்கிவிட்டாய் போல? ம் சிறையில் இருந்தகாலத்தில் எதுவும் எழுதவில்லையே ஜீவன் !ம்ம் விமானம் டேக் ஓவர் ஆகின்றது. கொஞ்சம் நித்திரை கொள்வம் தாய்லாந்து போய் யோசிப்போம் !

15 August 2012

மின்நூலும் அன்பு மழையும் -3


விமர்சனங்கள் தான் எழுத்தினை சீர்படுத்தும் !ஆனால் சீர்படுத்துவதை விட சீண்டுவதும், இருட்டடைப்பு செய்வதும் எஸ்.பொன்னத்துரை முதல் அந்தனி ஜீவா வரை தொடரும் ஒரு கதை நம்தேசத்தில் !பதிவுலகில் தனிமரம் ஆத்ம திருப்திக்கு எழுதுகின்றேன் .

எழுத்துப்பிழை எனக்கு ஒரு தடைக்கல் உண்மைதான் .

இந்தத்தொடரில் வரும் கல்பனாவைப்பற்றிய ஏடாகூடமான கற்பனை இன்னும் மனதில் இருக்கு எழுதவில்லை . ராகுல் வீட்டிலும் ஒரு மலைமகள் திருமகள் மருமகள் .என்பதால் கொஞ்சம் நடுநிலையில் !:))))என்றாலும் என் உணர்வுகளை எங்கோ ஒரு மூலையில் பதிவு செய்கின்றேன்.

ஆனால் பல விடயம் நம்தேசம் பற்றி பேச இருக்கு சுதந்திரதேசத்தில் இருப்பதால்

ஆனால் நேரம் குறைவு இந்த ஐபோனில் பதிவு எழுத என் நண்பன் இவன் தான் பதிவுலகில் இந்த ஐபோன் போல ஒரு நண்பன் என்னை புரிந்து கொண்ட விமர்சனம் இது!

அனைவருக்கும் வணக்கம்
இணைய இணைப்பின் பிரச்சனையால் மலையகத்தில் முகம் தொலைத்தவன் மின்நூல் வெளியீட்டு விழாவில் முழுமையாக பங்கெடுக்க முடியவில்லை அதற்கு மன்னிக்கவேண்டும்.

எனது முழுமையான கருத்து ஒன்றை இங்கே பதிவு செய்ய நினைத்தேன் தனிமரம் நேசன் பதிவுலகில் இருக்கின்ற ரசனை மிக்க பதிவர்களில் ஒருவர்.பதிவுலகில் எத்தனை பேருக்கு தனிமரம் அவர்களை தெரியும் என்றால் நிச்சயம ஏனைய பதிவருடன் ஓப்பிடும் போது அந்த விகிதாசாரம் குறைவுதான் காரணம் அவர் எப்போதும் மொய்க்கு மொய் என்ற கலாச்சாரத்தை விரும்பியவர் இல்லை.

ஒரு பதிவு பிடித்திருக்கா அதை எழுதியவர் அவருடன் முரண்படுபவராக இருந்தாலும் அதை பாராட்டும் மனநிலை உடையவர்.ஒரு பதிவு பிடிக்கவில்லையா அந்தப்பதிவுக்கான மாற்றுக்கருத்தை அது நண்பனாக இருந்தாலும் முகத்துக்கு நேரே விமர்சனம் செய்பவர் இதனால் அவர் பதிவுலகில் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.

பதிவுலகில் எம் பதிவுகள் பலரால் படிக்கப்படவேண்டும் அதிகம் ஹிட்ஸ் அடையவேண்டும் என்று விரும்பாத பதிவர்கள் யார் இருக்கமுடியும் நான் உட்பட அப்படித்தான்.

ஆனால் தனிமரம் நேசன் அண்ணா வித்தியாசமானவர் ஹிட்ஸ் என்ற மாயையை தள்ளிவிட்டு தமது படைப்புக்கள் ஒருவர் படித்தாலும் பரவாயில்லை அதை எழுதும் போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படவேண்டும் என்பது அவரது கொள்கை.

பதிவுலகில் ஒரு தொடர் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவானது இல்லை ஒரு 3,4 தொடர் எழுதியவன் என்ற முறையில் அதன் கஸ்டங்கள் எனக்கு புரியும் ஆனால் ஒரு தொடரை சிறப்பாக எழுதும் போது அதற்கான அங்கீகாரம் பதிவுல் சிறப்பாக இருக்கும்.என் நண்பர்கள் தளம் பலருக்கு தெரிய காரணம் நான் எழுதிய மறக்கமுடியாத பாடசாலைநாட்கள் என்ற தொடர்தான்.இந்த தொடரில் தான் நேசன் அண்ணா எனக்கு அறிமுகமானார்.

ஒரு தொடருக்கு தொடர்ச்சியாக படிக்கும் வாசகர்கள் கருத்துரையை சராமாரியாக வழங்கினால் 50,100 கமண்ட்கள் இலகுவாக வந்துவிடும் பார்பவருக்கு அந்த தொடர் பலரால் படிக்கப்படுவது போல ஒரு மாயை தோன்றும்.ஆனால் உண்மையில் அந்த தொடரை சில நூறு பேர்தான் படிப்பார்கள் ஏன் வெரும் 20 பேர் மட்டும் படித்த சந்தர்பங்களும் என் அனுபவத்தில் உண்டு.

ஆனால் எத்தனை பேர் படிக்கின்றார்கள் என்பதைவிட நாம் எத்தனை பேரை நம் எழுத்தால் கவர்கின்றோம் என்பது முக்கியம்.அந்தவகையில் திரு நேசன் அண்ணாவின் தொடர்கள் பலரை கவர்ந்துவிட்டது என்பது நிச்சயம் வாழ்த்துக்கள் பாஸ்

இந்த மலையகத்தில் முகம் தொலைத்தவன் என்ற தொடர் எதிர்காலத்தில் ஒரு புத்தகமாகவேண்டும். இணையம் என்பதை தாண்டி சாதாரன மக்களையும் சென்று சேறும் போது இதற்கான வரவேற்பு சிறப்பாக அமையும் எனவே எதிர்காலத்தில் இது புத்தகமாக வெளிவரவேண்டும் என்பது என் ஆசை

அவரது ஆரம்ப கால தொடர்களுடன் ஓப்பிடும் போது அவர் தற்போது எழுதும் உருகும் பிரஞ்சுக்காதலி தொடரில் அவரது எழுத்து இன்னும் மேம்பட்டுள்ளது.தொடர்ந்து தரமான படைப்புக்களால் பதிவுலகில் மேலும் சிறந்த பல அங்கீகாரங்கள் தனிமரம் அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று வாழ்த்தி நிற்கின்றேன்.

அன்புடன்
ஒருவாசகனாக கூடவே பயணிக்கும்
அன்புத் தம்பி
கே.எஸ்.எஸ்.ராஜ்
 இந்த பெருமை எல்லாம் இந்த வலை தந்த உறவு இன்றுவரை நண்பனை தனிமரம் முகம் பார்த்தது இல்லை ஆனால் இவன் பதிவில் நான் எப்போதும் வருவேன் பால்க்கோப்பி கேட்டு நண்பனும் கலாய்த்தாலும் கோபிக்க மாட்டான் தனிமரம் குடிக்க கேட்கின்றது வாந்தி எடுக்க இல்லை என்று :)))))



ராஜ் விமர்சனத்தைத்தொடர்ந்து மின்நூல் நீண்ட விமர்சனத்தை


விழியில் விழுந்தவை பதிவாளினி கலைவிழியின் உரை காட்சிப்படுத்தப்பட்டது!
பதிவர் நேசனின் மலையகத்தில் முகம் தொலைந்தவன், மின்நூல் வெளியீட்டு நிகழ்வில் கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்நிகழ்வில் எனது கருத்துக்களும் பகிர கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியே.

மலையகத்தில் முகம் தொலைத்தவன் ராகுலிடம் மனதை தொலைத்தவர்கள் பலர். அந்த வரிசையில் தனிமரம் நேசன், கதை ஆசிரியர் வாசகர்களையும் இச் சமுத்திரத்தினுள் முத்தெடுக்க அழைத்துச் சென்று ராகுலுடன் இரண்டறக் கலக்க வைத்து விட்டார். ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலும் ஏதோ ஒரு மூலையில் யுத்தத்தின் வடுக்கள் ஆறாமல் இருப்பது நிதர்சனம். அதிலும் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதி மற்றும் தீவுப்பகுதிகளில் இயக்கங்கள் செய்திட்ட வக்கிரகங்களை சொற்களால் விபரிக்கவோ மழுங்கடிக்கவோ முடியாது.

மலையகத்தில் முகம் தொலைத்தவன் நாயகன் ராகலும் அப்படியானதொரு கால பாதிப்பில் இளமைக் கனவுகளை, தாயினன் அன்பை, சகோதர பாசத்தை, பிறந்த ஊரை தொலைத்து மலையகம் செல்கிறான். அங்கு அங்கு ராகுல் முகங் கொடுக்கும் பிரச்சினைகள், சவால்கள், இதேவேளை அவன் மலையகத்தில் பெற்றும் கொள்ளும் சாதக விடயங்கள் என அனைத்தையும் ஆசிரியர் சொல்லிவிட மறக்கவில்லை.

இத்தொடர் கதையில் குடும்ப பாசம், கூட்டுக் குடும்பம், தீவு பகுதி மக்களின் பழக்கவழக்கங்கள், உணவுமுறை, திருவிழாக்கள் என அனைத்து விடயங்களையும் ஆசிரியர் மிக லாவகமாக கதையினை கொண்டு சென்று படம்பிடித்துக் காட்டிவிட்டார். அந்த காலப்பகுதியில் பிரபலமானவை, அக்கால நடமுறை என்பவற்றை இத்தொடர் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அதேபோல் மலையக சூழலையும் ஆசிரியர் நேசன் சிறிய சிறிய அசைவுகளினூடாகவும் எளிவாக விபரிக்கிறார். தமிழ் சினிமாவைப் பார்த்தால் எப்படி இலகுவில் விளக்கம் கொள்ள முடியுமோ அவ்வாறு நேசன் தனது எழுத்தின் மூலம் வாசகர்களுக்கு விளக்கம் கொடுக்கிறார். ஒவ்வொரு சம்பவங்களையும், காட்சிகளையும் அவரது வசனநடை இலகுவில் கண்முன் கொண்டு வருகிறது. தொடரை வாசிக்கும் போதே காட்சிகள் மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

உவமைகளைக் கையாழ்வதில் ஆசிரியர் நேசன் தனித்துவம் கொள்கிறார். கதை நகரும் காலப்பகுதிக்கு ஏற்றாட் போல், அக்கால பிரபல சம்பவங்களையும் மக்களின் நடைமுறையில் உள்ள எளிய சம்பவங்களையும் கொண்டு உவமைகளை கொடுக்கிறார். இது கதையை வாசிக்கும் வாசகர்களுக்கு கதையுடன் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.

சிங்கள மக்கள் மத்தியில் அன்றாட நடைமுறை, மலையக மக்களின் அன்றாட போராட்டகள் என அனைத்தையும் தனது வாசகனுக்கு ஆசிரியர் வளமே வளங்கியிருக்கிறார். யாழ்ப்பாண அதுவும் தீவுப்பகுதி மக்களின் மொழிநடையை கையாண்டுள்ளதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். கதையில் ராகுல் எவ்வாறு மனதில் பதிகிறானோ பங்கஜம் பாட்டியும் நம் மனதில் ஒரு தாக்கத்தை எற்படுத்தி வடுகிறார். பங்கஜம் பாட்டியின் பாத்திர படைப்பு மிக அருமை. அவரது இயல்புகளை பல சவால்களுக்கு மத்தியில் அசிரியர் படைத்திருப்பதை மறுக்கமுடியது.

உண்மைச் சம்பவங்களை இலக்கியமாக தொகுத்து அதனை ஒரு சுவைமிக்க கதையாகவும் தந்த ஆசிரியர் சில சூடான காட்சிகளுக்கு திரையிட்டு மறைத்து விட்டார் அல்லது தொட்டும் தொடாமலும் தனது கதையை நகர்த்தி விட்டார் என என்னத் தோன்றுகிறது. ராகுலைப் போலவே ஆசிரியரும் வானெலி மீதும் அறிவிப்புத்துறை மீதும் கொண்ட ஈடுபாடு கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை காண்பிக்கப்படுகிறது. அந்த விடயத்தில் ஆசிரியர் சற்று தன்னிலை மறந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

மலையகத்தில் முகம் தொலைத்தவன் உண்மைச் சம்பவங்களை கொண்டு நம்மத்தியில் வந்திருப்பவன். இவன் இலக்கியத்தில் முகம் தொலையக் கூடாது. ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது என் கருத்து. எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இலங்கைத் தமிழன் வாழ்வும் சாவும் ஒவ்வோர் வரலாற்றுமச் சுவடுகள். அவற்றை காலங் காலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது அவா. கற்பனைக் கதைகள் போல் அல்லாது தொடர் நாயகன் ராகுல் ஒரு தனி நபராக இங்கு விளிக்கப்படவில்லை. அவன் ஒரு வரலாற்று உண்மை.

பதிவர் நேசன் அவர்களின் எழுத்துப் பயணம் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நன்றி




தொடரும்!!   

14 August 2012

மின்நூலும் அன்பு மழையும் -2

வணக்கம் உறவுகளே !

ஒரு சமூகத்தின் குரலாக ஒரு தொடர் முடிந்து போன விடயமாக இருந்தாலும். !

அதில் இருக்கும் குறைநிறைகள் பலருக்குப் போய் சேர வேண்டும் என்பதே என் ஆவல்! அந்த ஆவலுக்கு ராகுல் கேட்டதைச் செய்தேன் என்ற பெருமிதம் ஒரு புறம் என்றால் நாஞ்சில் மனோவின் அவரின் ஆசியுரையைத் தொடர்ந்து !

இந்த தொடரில் அறிமுகமான அன்பு அண்ணன் மகேந்திரன் அவர்கள் தன் பல்வேறு பணிகளுக்கும் இடையில் அனுப்பியிருந்த நூல் அறிமுக உரை மின்நூலில் அணிந்துரையாக அலங்கரிக்கின்றது.


வணக்கம் சகோதரர் நேசன்,
இதோ என்னுடைய நூலுரை...
ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்...

மலையகத்தில் முகம் தொலைந்தவன்
என்ற வாசகத்தில் இருக்கும் உயிர்ப்பை சொல்லி மாளாது.
நட்பு என்பது ஒரு குடைக்காளான் போன்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.



ஆனால் நட்பு என்பது நற்கற்களில் செதுக்கிய சிற்பம் என்பது இந்த தொடரை படித்த பின் தான் தெரிந்துகொண்டேன்.
 தேடுதல் என்பது எப்போதும் நிற்காத ஒன்று. தேடுதலின் பொருள் அறிந்துகொள்ள விழைகையில் அதன் விளைச்சல்கள் யாவும் பாற்கடல் கடைய முற்பட்டு கிடைக்கும் பல்வேறு திரவியங்கள் போல விளைந்துகொண்டே இருக்கும். ஆயினும் விளையும் பொருளறிந்து தேடுவது ஒருவகை. இங்கே நட்பின் பிரபஞ்சத்தில் கையாளப்பட்ட தேடுதல்கள் மலையகத்தில் என்னை மலைக்கச் செய்தவை. போர்க்கால நெருக்கடிகளை நேரடியாய் கண்டதுபோல நெஞ்சை உருக்கும் காட்சிகளையும் மனதில் பஞ்சுப்பொதியாய் ஏற்றிவைத்திருக்கிறார் நூலாசிரியர். பொதுவாக ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் மொழிநடை மனத்தைக் கவரவேண்டும். அந்த வகையில் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழ் நடை கதை முழுதும் தீப ஒளியாய் நிறைந்து நிற்கிறது. வாழ்க்கைமுறை, நடை உடை பாவனைகள், கலாச்சாரம், பண்பாடு மற்றும் போற்றத் தகுந்த நாட்டுப்புறக் கலைகள் என எல்லா நிலைகளையும் அதன் நீல அகலங்கள் வரையறுத்து எழுதி இருக்கும் விதம் அஜந்தா ஓவியம் போல காலத்தால் அழியாதவைகள். கதாநாயகன் ராகுல் அறிமுகப் படுத்தப்பட்ட தினத்திலேயே நம் அகம் புகுந்து ஒட்டிபிறந்த இரட்டை போல அகத்தினில் கலந்துவிட்டார். மலையகத்தில் பல முகங்கள் தொலைந்திருந்தாலும் இந்தக் கதையின் நாயகன் அவரின் நினைவுகளை நம் நெஞ்சில் பதியமிட்டு சென்றுவிட்டார். நேசமிகு பாசமே மலையகம் விட்டு என்னகம் புகுந்த சகோதரர் நேசனே!! இக்கதை படித்தபின்னே எவ்வகம் நானிருப்பினும் செவ்வகம் தருவித்து மலையகம் வந்தடைந்தேன்!! தொலைந்துபோன நெஞ்சங்கள் அலையலையாய் என் நெஞ்சில் களைந்துவிட்டு போன கோலங்கள் ஏராளம்!! கோலங்களை ஒன்றிணைத்து கோளமாய் ஒருங்கிணைத்து கோமகன் நான் பாடிவந்தேன் மலையகப் புகழ்பாட!! தவறிப்போன தேடுதல்கள் தவிப்பாய் இருப்பினும் தடையிலாத நினைவுகள் தகதிமிதோம் போடுதே!! இன்றோர் ஆகமம் தேடுதலுக்காய் படைத்தாய் இன்னும் பல காவியங்கள் இயற்றமிழ் துணைகொண்டு இனிதாய் படைத்திடவே மனதிற்கினிய வாழ்த்துக்கள்!!
ஒரு மலைச்சாரலில் நடந்த கதையை வசந்த மண்டபம் வரை கொண்டு சேர்த்த பெருமை இந்த இணையத்துக்கு உண்டு! அதே போல மின்நூல் வெளியீட்டுக்கு எல்லாரையும் இணைத்த பெருமை இன்னும் என்ன தோழாவுக்கு உண்டு . அவரினைத்தொடர்ந்து மின்நூல் வெளியீட்டை கவிதாயினி குழந்தைநிலாஹேமா வெளியீடு செய்து வைத்தார். ! ஹேமா தளத்தில் இதில் வரும் சம்பவத்துக்கு காரணமான முக்கிய விடயங்களை கவிதையாக்கிய போது மின்னல்வரி கணேஸ் அண்ணா என்னைப்பாராட்டியதும் அவரின் நட்பும் இன்னொரு உந்து சக்தியானது.  அதே போல ஹேமா இந்த தொடருக்கு கவிதை விருந்து தந்ததும் இந்ததொடருக்கு ஒரு சிறப்பு நிகழ்வு.  கவிதை தந்த கரங்கள் மின்நூலையும் அவரின் வாழ்த்துரையுடன்.வெளியீட்டைச் செய்தார்!
முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள் தனிமரத்துக்கு.தனிமரம் தனிமரமெண்டு பெரிய கூட்டம் வச்சிருக்கிறார்.அவரைப் புரிந்து அவர் இயல்போடு போனால் எம்மையும் புரிந்து இசைந்து கை கோர்க்கும் இனிய அன்பான சகோதரன்.மனம் நெகிழ்கிறேன் நேசன்.உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.நன்றி சொல்வதால் தூரமாகிவிடவில்லை.ஒரு சம்பிரதாயம் மட்டுமே ! "தனிமரம்" நேசனின் மடியில் "மலையகத்தில்
முகம் தொலைத்தவன்". மலையக குளிந்த நீரோடை வரப்பில் காற்றில் கை கோர்க்கும் சிநேகத்தின் சிறுகதை. புகையிலை மணமும் வரும் திடீரெனத் தேநீரும் தரும் உறவுகள் பின்னிப் பிணைக்க ஆச்சியும் வருவா அப்பு கள்ளும் குடிப்பார். அத்தையும் வருவா மாமாவுக்கு அடிக்கடி அடியும் நடக்கும் பெடியளுக்கு பேச்சும் விழும் பிறகு..... பெரும் சண்டையோடு குழறி அழுது ஒப்பாரி ஆனாலும் வெள்ளைத் தங்கமென கட்டிக் கொஞ்சும் அவள் கிழவி. எங்கள்..... ஈழமண்ணின் கடல் தெரியும் பின் கடும் போர் தெறிக்கும் இரத்தம் துடைத்தபடி கடல் கடக்கும் அகதிக் கதையும் கண்ணீருக்குள் கரையும். சின்னச் சின்னதாய் காதலும் வரும் ராகுலும் வருவார் காதலை இடைமறிக்க கரடிகளும் கடக்கும். விரியும் கதையில் பனித்துளியாய் நானும் இருந்தேன் யோகா அப்பா அம்பலம் ஐயா கலை ரெவரி கணேஸ் மகி மணி துஷி ரெவரி கலைவிழி சீனி ரமணி விச்சு நிரூ ஏஞ்சல் அதிரா எஸ்தர் k.s.s.ராஜா நாஞ்சில் மனோ என்று இன்னும் கனபேர்..... முதல் கோப்பி ஆருக்கெண்டு ஓடிப்போய் போட்டி போட்டுப் பாட்டும் கேட்டுக்கொண்டே தொடரும் வாசிப்பம் பிறகு கொஞ்சம் கும்மியும் அடிப்பம். மகரந்த ஒளி கக்கும் காதலனாய் ஆனான் மலையகத்தின் மணாளன் காலப்போக்கில் எங்களுக்கு!!! எழுத்து என்பது ஒரு தவம் விளையாட்டல்ல.மகிழ்வான நினைவலைகளையும் சேர்த்துக்கொண்டான் "மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் "மலையகத்தில் முகம் தொலைத்தவன்"அவனை....! அவனை நீங்களும் வாசித்து வாழ்த்தி வாழவைக்க வேண்டி மின்நூலாக வெளியிடுகிறோம்.நிரூ முன்னுரை சொல்லித் தொடக்கிவிட அத்தனை உறவுகளும் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்த இந்தத் தொடரை உங்களிடமும் கையளிக்கிறோம்.தனிமரம் நேசனின் ஞாபக சக்திக்கும் பாராட்டுக்கள்.அவரது அம்மாவும் முக்கிய உறுதுணை.எழுத்துப்பிழைகளைத் திருத்திய ஆசான் அம்மா அவருக்கும் நன்றிகள் சொல்லி இத்தொடரைப் பதிவிறக்க.....
 தொடரும்!