16 November 2014

பிரிவோம் சந்திப்போம்....

என்னையும் என் தனிமரம் வலையையும் 5 கண்டத்திலும் அறிய  ஏதோ ஏதிலி தமிழ் ஆசையில் கிறுக்கும் தொடர் என்றாலும் ,கவிதை போல மொக்கை என்றாலும், தனிமரம் நேசன் யார் என்றே புரியாத நட்புக்களுக்கு முகம் கொடுத்தது ஐபோன் என்பேன் !






ஆனாலும் துரஸ்திஸ்ரம் ஏன் எனக்கு ஐபோன் ஆசை வந்தது ஏன் ,?????,



தனிமரம் என்று இந்த வலைக்கு வந்தேன்??,






 இந்தவலையில் நான் ஏன் தனிமரம் ஆனனேன் ???சமரசம் இல்லாத கோபமா இல்லை ,நடுநிலை முக்கியம் என்பதால் தானா ??அல்லது ஹிட்சு என்ற மாயமானை பிடிக்கும் தொழில்நுட்ப வசதி அறியாத படிக்காதவன் என்பதா?, ஆனாலும் இன்னும் இருக்கின்றேன் ..





தனிமரம் வலையில் இது என் சுயம் பேசும் ! யாருக்கும் ஜால்ரா போடத என் பாதையில் இந்த வலை தந்த உள்குத்து இன்னும் நினைவில் இருக்கு!






 ஆனாலும் சூடு போட்டு என்னை வலையில் வளர்த்த மூத்தவர்கள் இன்றுவலையிலும் இல்லை. புதிய வருகை என்ற  முகநூலிலும் இல்லை !ஆனாலும் தனிமரம்  நேசன் இன்னும் இருக்கின்றேன் இரண்டிலும் !ஹீ





 அதுக்கு காரணம் என்னையும் ஒரு நட்பாக ஏற்ற நிஜமான வலையுறவுகள் என் பேன்! ஆனாலும் முகநூல் மூலம் வலைக்கு  வந்தது  முதல் என்கையில் இருந்து 2 ஐபோன் களவு போனதும் என் தோல்விதான். ஆனாலும் என்னையும் நேசிக்கும் முகம் தெரியாத உங்கள் பலருக்கு தனிமரம் கமடியன் என்றாலும் வலை மூலம் உறவான் என் தங்கை வாத்து சொல்லுவா நான் ஒரு வழிப்போக்கன் பாசமான் அண்ணா என்று!





 அந்த பாசத்துக்கு முன் இன்றுவரை தனிமரம் ஏதிலிதான் கலை என்று வலையில் வரும் கருவாச்சி கறுப்பா /சிவப்பா/படிப்பு என்ன ஊர் ஏது என்று இன்றுவரை அறிய முயலும் தேவையில்லாத ஒரு உறவை இந்த வலையுறவு உண்மையில் தரமுடியுமா ??,


என்றால் முடியும் என்பதுக்கு தனிமரம் ஒரு உதாரணம் என்று சொல்வேன் தங்கையும், அண்ணாவும் கவிதை எழுதினால் அன்பில் வரும் கவிதை தனித்துவம்.இது சிலருக்கு கோபம் தரும் என்றாலும் கும்மி அடிக்க என் தங்கை போல முடியாது என்னாலும் !






ஆனாலும் என் தங்கைக்கும் அன்பில் சினேஹாமீது  கோபம் கொள்வது நம் குடும்ப இயல்பு!


ஹீ
 சரி விடயம் இதுதான்.

 இந்த வருடத்தில் தனிமரம் அதிகம் வலைப்பதிவு எழுதவில்லை தனிப்பட்ட இல்லற/பொருளாதார மாற்றம்  இது எல்லோருக்கும் வரும் இயல்பு எனக்கும் இந்தாண்டு பல பாலபாடம் படித்தேன்/ கற்றேன். அதுவே என் திருப்புமுனை  என்றாலும்.

 இந்தவருடம் எனக்கும் ஒரு விருது கிடைத்தது ஒரு தொடருக்காக!ஆனால் பலருக்கு பின்னூட்டம் போடவில்லை காரணம் மொய்க்கு மொய் என்றும், ,வலையில் வரவேற்பது இல்லை தனிமரம்!.


ஆனாலும் பின்னூட்டப்புயல் தனபாலன்சார் .மற்றும் யோகா ஐயா போன்றோரின் தொடர் ஊக்கிவுப்பும் அஞ்சலின் ,அதிரா,ரூபன்.கரந்தை ஜெயக்குமார், சொக்கலிங்கம் ஐயா, மகேந்திரன்,நாஞ்சில் மனோ,துளசிதரன், யாழ்பாவண்ணன், சீனி. தளிர்சுரேஸ்  என்று இன்னும் பலர் அடிக்கடி உசுப்பியதால் ஏதோ கொஞ்சம் எழுதியாச்சு ஹீ .




  இது தனிமரம் பதிவு 612!!அத்தோடு பின் தொடர்வோர் பட்டியல் 177 இதுவும் ஒரு ஹிட்சு தனிமரத்துக்கு!ஹீ!


 என்றாலும் தொடர்ந்து தொடர் எழுதுவேன் விரைவில்!!




 ஆனாலும் என் தனிப்பட்ட இன்னொரு தேடல் !!


நாளை தொடங்கும் நிலையில் §



இனி மீண்டும் தனிமரம் உங்களை நாடி புதிய ஆண்டில் சந்திக்கின்றேன் .முடியும் போது வலையில் உறவுகளின் பகிர்வுக்கு பின்னூட்டம் வரும் இனி மேல் தனிமரத்தின் வலையில் இருந்து  பதிவு வராது  !வலையுறவுகளே ,வாசகர்களே!!!!


! மீண்டும் வலையில் சந்திப்போம்! புத்தாண்டில்! என்னையும் நேசிக்கும் உறவுகளே எப்போதும் தனிமரம் என்றும் காத்து இருப்பேன்  முகம் தேவையில்லை உண்மை நேசிப்புக்கு§§

மீண்டும் சந்திப்போம் புத்தாண்டில் புதிய தொடரில்


  வழிப்போக்கன்
 தனிமரம் நேசன்.
 பாரிஸ்
16/11/14...

13 November 2014

கவிதை எழுதுவோம்....!-2

வலையில் படம் பகிர்ந்து கவிதை பாட அழைதார் !


இவ்வார வலைச்சர ஆசிரியரும் மூத்த பதிவாளரும்  வெங்கட் நாகராஜ் அண்ணாச்சி இங்கே-

 ஏதோ ஆசையில் நானும் கிறுக்கின்றேன்!

முன்னர் இவர் அழைப்பு இங்கே-http://www.thanimaram.org/2014_01_01_archive.html


மாமலை மீது நானும் ஓடுவேன் நதிபோல
மனம் அமைதியாக
மலையக அரசியல் இலங்கையில் போல!
மனம் கொதித்தால் மழை பொழிந்தால்
மனைகள் எல்லாம்
மலையக பூமியில்\
மீரியபெத்த போல
மலையும் சாயும்
மணல் வீதியும்
மற்றவர் பார்வையில்
மறைந்து போகும்.
மறக்க வேண்டாம்
மாமன்னர் போல ஜனாதிபதி முதல்\
மாகாண முதல்வர் தொடக்கம்
 மலையகம் நம் இரத்த உறவு என்றுவருவார்
மதியாத மாமியார் வீடு
மலையக அரசியல் போல அல்ல
மனித நேயம்
மலைகள்  மயான அமைதி கொள்ளும்
மனைகள் போல மனையின் பெறுமதி
மரித்த பாலுமகேந்திரா இல்லம் என்று
மறறக்கமுடியாத திரைப்படம் சொல்லியும்
மாசான அரசியல்வாதிகள்
மறந்த லயம் என்று பேச்சு
மலையக பூமியில் போட்ட சிறை
மறந்தும் பேசாத மலை இந்த நதி
மலைகள் வழிகாட்ட நதியும் ஓடுகின்றேன்
மாணிக்க கங்கையும் மார்பில் பாயும்
மலையகத்தின் வீதியில்
மறக்க நினைக்கின்றேன் மலையக வாசம்
மீண்டும் நீயே  மரங்களின் வேர்களின் மீது
மண்ணெண்ணை போல எரிகின்றாய்
மனித வெடிகுண்டு நானும் நதி போல
மரம் என்று மறு பெயரில் மக்கள்
மனதை  வீதிபோல பேசும் வலையில்
மகிழ்ந்து பேசுகின்றேன் மா மனங்கள் அறியாது
மலையில் ஓடும் நதியும் மரங்களின்  வேர்களும்
மனம் விட்டு அகலாது மறந்த வீடு போல!


யாவும் கற்பனை!
//

மலையகத்துக்கு இன்று தேவை
மன ஆற்றுப்படுத்தல்!ம்ம் 

12 November 2014

கையறுநிலை!! சிறு கதை போல.




 கார்காலத்தின்  வருகைக்கு கட்டியம் கூறுவது போல பாரிஸ் வானமும் மழையைப்பொழியும் காலை நேரத்தில் !

பாரிசின் புறநகர்ப் பகுதியின் ரயில் நிலையத்தில் காத்து இருந்தான் அகிலன் பாரிஸ் நகரைச்சென்றடையஇன்னும் சில் நிமிடத்தில் யாழ்தேவி ரயில் போல sncf வந்துவிடும் என்பதை உயரத்தில் பூட்டியிருந்த தொலைக்காட்சியில் சினிமா நடிகையைப்பார்த்து ஜொல்லுவிடும் ரசிகன் போல ஒரு துள்ளல் குறிப்பு காட்டியது! 



அகிலனின் சிந்தனை எல்லாம் அடுத்தவாரம் என்ன செய்வது என்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கும் முன்னால் அமைச்சர் போல அவன்நிலை!


 வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு சிரிப்பு மேடைதான் காசுமரத்தின் கீழ் இருக்கும் ஞானி போலவும் கைபேசி சிணுங்களில் இவ்வளவு கோடி ரூபா வை யாழில் வியாபாரம் செய்ய, கொழும்பில் மாடி வீடு வாங்க என்ற அதட்டல் தொனியின் உறவுகள் எல்லாம் அறிவது இல்லை அதிகாலையில் கோப்பி குடிக்கவும் நேரம் இன்றி எழும்பி ஓடும் காகம் போன்ற புலம்பெயர் ஒப்பாரி வாழ்வை.ஈழயுத்தத்தில் இருந்து உயிர் தப்பிக்க புலம்பெயர் தேசம் பாரிசில் அடைக்கலம் தேடிய பலரில் ஆயிரம் பெயர் சொல்லி ஒரு காலியாணம் போலத்தான் அகிலனின் நிலையும். 



நேற்று வந்தது போல இருந்தாலும் பத்து வருடங்கள் ஓடிவிட்டது அகதி என்ற முத்திரையைப் போர்வையைப் போல முகம் தேடிப்போக்கும் சம்பிரதாய சட்டத்துக்குள் புகுந்து கொள்வதுக்குள் தலையில் இருந்து முடியும் உதிர்ந்து விட்டது

 . வந்த இடத்தில் நானும் சண்டியர்தான் சண்டை வரும் வரை சட்டை கிழியும் வரை போல சமையல் தளத்தில் பாதுகாப்பு சோதனை அதிகாரிகள் படை சூழ வருமானவரித்துறையும் சுகாதரத்துறையும் சேர்ந்து வந்து தேடுதல் செய்யும் நிலை ஏற்படாத காலம் வரையும் சமையல்க்காரன் வேலைகிடைத்ததும் .,பிரபல்ய நடிகரிடம் சினிமாவுக்கு கதை சொல்ல அலைந்த புதிய இயக்குணர் போல அகதி விசாவுக்கு அலைந்ததும் தனிக்கதை.



 இது எல்லாம் யாரும் பேசமாட்டார்கள் நல்ல கதையில்லாது தோற்ற சினிமா கலைப்படம் போல அவனுக்கு விசா கையில் இருக்கும் கொழுப்பு ஆளுங்கட்சி போல அடாவடியில் துள்ளுகின்றான் என்றும் திமிர் என்றும் காதில் ஓதுவோர் எல்லாம். பள்ளிக்கூட காதல் படலை வரை என்பது போல அல்லாமல் காலம் பூராகவும் கைபிடித்து கலங்கரை விளக்கம் போல ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து அழகு பார்க்க அவன் விரும்பியவள் கூட விசாவுக்குகாத்தானோ தன்னை அகிலன் விரும்புவதாக எண்ணி அகிலனின் நிஜமான நேசிப்பை ஏதோ அரசியலில் இறங்க தன் ரசிகர்களை உசுப்பியே விசில் ஊதும் நடிகர் போல எண்ணி சந்தனம் பூச வேண்டியவளே சாணியை அரிதாரம் போல பூசி அயல்நாடாம் இங்கிலாந்து ராணிக்கு இன்னொரு மாளிகைகை கட்டும் கனவுத்திட்டத்துக்கு இஞ்சினியர் இவள்தான் என்பது போல உயர்ப்படிப்பு என்று இடம்பெயர்ந்துவிட்டாள் . 



அகிலன் தேவதாஸ் போல சோகத்தில் தாடி வளர்த்து இருந்தாலும் கனவே கலையாதே பட முரளி போல பையத்தியமாக இல்லாமல் இன்னொருத்தியை தாய்த்தேசத்தில் இருகரம் நீட்டி ஈழத்தில் இருந்து விசாவோடு இல்லத்தரசியாக இங்கு வரவழைத்ததும் ,வாரிசு இரண்டுக்கு தந்தை ஆனதும் இடையில் சில பக்கம் போல .கடந்த காலம்!


 இப்போது பாரிசிலும் வேலையில்லாத்திண்டாட்டம் இலங்கையில் திறமையான எதிர்க்கட்சி இல்லாத நிலைபோல அதிகமாகிக்கொண்டு இருக்கும் நிலையில் தான் அடுத்த வாரம் முதல் பணிபுரியும் சமையல்க் கடைக்கும் மூடுவிழா என்றும் இனியும் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கமுடியாது என்ற முதலாளியின் பேச்சைக்கேட்டதில் இருந்து அகிலனின் ஒரே சிந்தனை இனி என்ன செய்வது??


 அரசின் நிதி ஊதவியை நாடவேண்டும் , இன்னொரு வேலையைத் தேடும் வரை அதுக்குள் அரச கேட்கும் பத்திரங்களின் கணக்குமட்டும் குறைவில்லை வருமானச்செலவு போல . வீட்டுவாடகை,வங்கிக்கடன் என்று அகிலனின் வங்கிக்கணக்கில் செலவுப்பக்கம் எப்போதும் சினிமா நடிகரின் சம்பளம் போல உயர்ந்தே இருக்கும்.

இங்கு பலரின் இரட்டைவேலையின் உள்ரகசியத்தில் உபரிச்செலவுகள் வெளியில். தெரியாத உள்நாட்டு அரசியல் விவகாரம். இனி என்ன செய்யலாம் ??

இது தான் அவனின் மனஓசை . கார்த்திகையும் வந்துவிட்டாள் ஐய்யப்பன் விரதம் தொடங்கிவிடும் அகிலனும் ஆன்மீகயாத்திரை என்று இந்தியா செல்பவன் இந்த விரதம் இருக்க முடியாதவர்கள் இவணைப் பார்த்து சீமான் அரசியல் போல உண்டியல் குலுக்குவது எல்லாம் நடைமுறையில் பார்த்த்துச் சலித்த கூத்தணி வெட்டுத்தோட்டாக்கள் .

 இதுவரை கையில் காசு சேர்க்கும் எண்ணம் வந்ததில்லை இப்போது தான் நீதி தேவதை நல்ல தீர்ப்பு எழுத விழித்தது போல மனசும் பணத்தை சேமிக்கவில்லையே என்ற ஆதங்கம் வருகின்றது.இதைத்தான் முன்னோர்கள் நாற்பதில் நாய்க்குணம் என்றார்களோ?? 

எதோ என் கடவுளே "நான் யாருக்கும் தீங்கு செய்ய்வில்லை எப்படியும் இந்த வருடமும் யாத்திரை போகும் வழியைக்காட்டு.

" எப்படியும் அடுத்த மாதம் என் முதலாளி மொத்தமாக தருவதாக எழுத்தில் தந்த கடித்தில் சேவைக்கால ஊதியமும் சம்பளமும் சேர்த்தால் எப்படியும் வங்கிக்கடன்7500 ஈரோ கட்டிவிடலாம் மீண்டும் முதல்வர் ஆவேன் என்பது போல என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன் . அதில் எந்த தடங்களும் வந்துவிடக்கூடாது என்ற நினைப்பிள் இருந்தவனுக்கு கைபேசியில் இடியாக வந்த செய்தி இதயம் நின்றுவிடும் போல இருந்தது.


 . தாயார் உடல்நலகுறைவாகி ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும், வைத்தியர்கள் இனி கடவுள் சித்தம் என்று கைவிட்டுவிட்டார்கள் தங்களின் எதிர்ப்பார்ப்பு சில லட்சம் கட்டிய பின் மருந்து மாத்திரை இந்த வசதியறைச் செலவு என்றும் இனி என்னிடம் பணம் இல்லை இறுதிக்காரியங்கள் எல்லாம் உன் பொறுப்பு என்று மூத்த அண்ணண் ஊரில் இருந்து எடுத்த தொலைபேசி அழைப்பிள் சொல்லிய விடயங்கள் கேட்ட நிலையில் அகிலனின் இதயமும் துடிக்க நீண்ட நேரம் எடுத்தது . .அந்த நேர இடைவெளியில் எங்கோ இருந்து வந்த ஒரு வேற்றுநாட்டவன் அகிலனின் கையில் இருந்த கைபேசியையும் உருவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். அவன் காதில் விழுந்த்து எல்லாம் காசு எப்ப அனுப்புவாய் என்ற  அண்ணாவின் வார்த்தை மட்டுமே .கட்வுளே கருணை காட்டு என்று கையறுநிலையில் ரயிலில்  சாய்ந்தான் அகிலன். 

மறுநாள் நாளிதழலில்  அகிலனின் புகைப்படம் மரணச்செய்தியாக நண்பர்களினால் வெளீயீடு செய்யப்பட்டிருந்தது.




யாவும் கற்பனை .

10 November 2014

மாயா உனக்காக-2

 மாயா முதல்ப்பாகம் இங்கே-http://www.thanimaram.org/2014/11/1.html


மாயா நீ ஒரு மயக்கும்
மலையக நங்கை
மனதில் இன்னும்
மயக்கும் உன் முகம்\
மாதுரி நடித்த தில்தோ பாஹல் கைய் போல
மறக்கத்தான் முடியுமா?,


மஞ்சக்காட்டு மைனா என்று
மலையக வீதியில்
மடியில் சாய்ந்து
 மலர்களே மலர்களே என்று
மார்பில் நீ பாடவில்லை.
மச்சனைப் பார்த்தீர்களா என்று
 மாமியார் வீடு வந்து தேடாத
மாமன் மகள் என்று எழுத மறக்கவில்லை
மாயா எல்லாம் உனக்காக்த்தான்!


மாயா உன் அழகு ஒரு
மார்கழிப்பூவே என்று பாடவா?,
மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்,
மல்லிகையே மல்லிகையே,
மாப்பிள்ளைக்கு நல்ல யோகம்,
மாயா மச்சந்தா என்று
மாவனல்ல வீதியில்
மப்பில் புலம்பவில்லை.
மாயா உனக்காகத்தான்.



மாமா சொல்லி `
மானரோஷத்தில் மாடு மேய்த்தாலும்
மரியாதை வேண்டி ஓட்டகம்போல
மளிகைக்கடைக்கு கடைநிலை ஊழியர் போல
மாயமாக இங்கு வந்தேன்!
மச்சான் உதவியில்..


மாய உலகம் இப்ப புரியுது
மச்சாள் வேண்டாம் என்று
மஞ்சள் வெயிலும்
மலையகத்தில் சுடாத பூமி
மீரிய் பெத்த மழையில்
மாண்ட செய்தி கேட்டேன்
மனசெல்லாம் ஒரு மயக்கம் !
மலையகம் எல்லாம் ஏனோ
மத்திய ஐரோப்பாவில் இருப்போருக்கு
மனதில் தோன்றவில்லைப்போலும்
மாலையில் தேனீர் குடிக்கும் போது!


மலேசியா முதலாளி வாங்கும் வேலையாள்
மரப்பெட்டியில் வருவேன்  நீவருவாய் எனப் போல
மருகி அழுகின்றேன் உன்னால் தானடி.
மாயா . மறந்துவிடு என்னை
மரணம் வரும்  வரை உன்னுடன்
 மஞ்சத்தில் வரமாட்டேன்.


மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று.
மயக்கம் என் தாய்மொழி.
மாதாவின் கோவிலில்.
மாயம் செய்தாயோ?, என்று
மறக்கு நினைக்கும் என்
மன்மதன் முகம் தேடாதே
மாயா !


மாலையில் மறு வேடத்தில்
மன்சூர் பாய் எனக்கும்
மறு பாதை காட்டிவிட்டார்!
மரோக் நாடு போய் அங்கிருந்து
மலை கடந்து மறு வாழ்வு தேடிப்போறேன்.


மரணத்திலும் என் பெயர்
மறக்கமுடியாது மாயா
மன்னிக்கவும் மச்சாள்
மறப்போம். மன்னிப்போம்.
மணிதான் இந்த மாய உலகில்
மார்க்கம்! எல்லாம் அதன் பின்னே
மாயா வரமாட்டேன்!!!
மரணம் நோக்கி மலையின் பாதையில்
மலர் தூவும் ஒரு மலர் நான்
மார்ஷ அல்லா என்னை மன்னிப்பாயா!
மனித வெடிகுண்டு சந்தேகத்தில்


மரோக் நாட்டில் இலங்கை குடிமகன்
மறுநாள் நாளிதழலில் !


யாவும் கற்பனை.....

07 November 2014

இனிய வாழ்த்துக்கள்.

வானொலி மீதான ஆர்வம் சிறுவயது முதல் என்  நேசிப்பு இலங்கையில் வானொலி அறிவிப்பாளர்/ அறிவிப்பாளி என்றால்  இந்திய ஒரு நடிகர்/நடிகைக்கு ஈடான ஒரு புகழ் /போதை எனலாம்.



 ஆனால் கால மாற்றம் தனியார் துறை பண்பலை வருகையும்1994 இல் பின் சந்திரிக்கா அம்மையார் அரசியல் வருகை போல!


 பண்பலை வானொலி தேர்வு முறையும் பற்றி எழுத  வெளிக்கிட்டாள் வானொலி நிலையத்தில் இருந்து இரவு நேர நிகழ்ச்சி செய்து கொண்டு நேற்றைய காற்று வீசவேண்டி வரும்!நேயர் என்பதால்!



 என்றாலும் அந்த துறையை ஏனோ என் ஆசையில் தேட நினைத்தாலும் என்னை விரும்பிய விற்பனைப்பிரதிநிதி என்னை இன்னும் தனித்துவம் தேடவைத்தாலும்.





 இன்றும் வானொலி அறிவிப்பு மீது ஒரு சொல்லாத காதல் இருக்கு ! என்றாலும் கால மாற்றம் புலம் பெயர்ந்த பின் பலவானொலி கேட்கும் நேயர் நான். ! முகநூல் மற்றும் கம்பி அல்லா செய்தி ஸ்கைப்பில் தொடரும் நேயர் என்றாலும்.


அந்தவகையில் சில வருடங்கள்  வேலைத்தளத்தில்இருந்தே வானொலிகேட்கும்  ரசிகன்  நான்!



அந்த வகையில்தமிழ் அருவி வானொலியில் பல நிகழ்ச்சி ஒலிபரப்பானாலும் என் ஓய்வு நேரத்தில்   பிடித்த நிகழ்ச்சி இணையராகம் . அந்த நிகழ்ச்சி செய்யும் வானொலி அறிப்பாளினி சாந்தி இன்று இன்னொரு அகவையை கடக்கின்றார்.!இலங்கை வானொலியில் அம்மா இராஜேஸ்வரி சண்முகம் ,கலிஸ்ரா லூக்கஸ் .,நாகபூசனி  கருப்பையா போல  நிகழ்ச்சியில்  அமைதியாக நேயர்களுடன் எப்போதும் பண்பை பேணுவது போலததான் சாந்தியும் எத்தனை நிகழ்ச்சிச்சுமையிலும் சிரித்துக்கொண்டே நிகழ்ச்சி செய்யும் பாங்கு என்னைக் கவர்ந்தது.




  சாந்தி என்றும் சந்தோஸாத்துடன் வாழ கடல் கடந்து என் வாழ்த்துக்கள்..


கவிதையும் இனிய காணங்களும் தரும் இணைய ராக நாயகி சாந்திக்கு அன்பான் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .


இன்னும் இன்னும் நிகழ்ச்சி தொடர் கடல்கடந்து. என் வாழ்த்துக்கள். இப்போது அதிகம் வானொலியில் இணைய முடியாவிட்டாலும்  எப்போதும்  கேட்கும்  நேயர்!

இவருக்கு என் தேர்வுப்பாடல் இது மொழி கடந்து.சாந்தியுடன் பாடல்கள் கேட்டு  அதிகம் சண்டை போடுவேன்  கைபேசியில் அது ஒரு காலம்!




 எப்போதும் பாடல் தராத நேரத்தில் என் வலையில் கவிதையோடு பதிவு போட சாந்தி  தரும்  உற்ச்சாகம் தனிமரத்தின் இன்னொரு தனிக்கதை..http://www.thanimaram.org/2014/07/blog-post_13.html


 என்னையும் அன்பில்  நேயராக என் கோபம் எல்லாத்தையும் பொறுக்கும் அன்புத்தோழிக்கு என் இனிய  வாழ்த்துக்கள்




.வானொலி நேயர்களே நீங்களும் இணைய இங்கே



-நீ பேசாத மெளனங்களால் மெளனித்து போன என் பொழுதுகள் என் காதலுக்கு சாட்சியாய் ....
இனிய பாடல்களும் கவிதைகளும் கலக்கும் இணையராகங்கள்
நிகழ்ச்சியில் அன்புத்தோழி சாந்தி
Web: www.tamilaruviradio.com
Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio
Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662
சஞ்ஜீவ ஒலி பல்சுவை இணையம். www.sanjeevaoli.com.

சாந்திக்கும் பிடிக்கும் பாடல் இது-தமிழில் இதனை யூட்டிப்பில் தேடனாலும் கிடைக்கவில்லை! ஆனால் வாழ்த மொழி ஏது-

06 November 2014

தேடலும் நினைவுகளும்-6

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்று பிறமொழியில் இருந்து வந்து தென்னகத்தில் பிரபல்யம் ஆனவர்கள் என்று சிந்தித்தால் ஒரு சிலர் ஞாபகத்தில் வந்து செல்வார்கள் .லக்சுமன் பியாரிலால் இரட்டையர்கள் போல!

ஆனாலும் இளையராஜா காலத்தில் தொடங்கி ரகுமான் காலம் வரை தமிழில் தனக்கும் ஒரு இடம் உண்டு என்று நிரூபித்தவர் தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி


. இன்று இவரை தேடினால்...ஏனோ புதிய படங்களில் இவரின் இசையை கேட்கும் நிலை இல்லை. .



முன்னைய தேடல் இங்கு-http://www.thanimaram.org/2014_10_01_archive.html

இளையராஜாவுடன் முரண்பட்ட கே. பாலச்சந்தர் அதிகம் மரகதமணியை தமிழில் பயன் படுத்தினார்.

அழகன்.படத்தில் சாதிமல்லி இன்னும் மறக்கமுடியாது.

அதன் பின் அவரின் இயக்கத்தில் வானமே எல்லை மரகதமணியை இன்னும் பிரபல்யம் ஆக்கியது .


ஒரு பாட்டுக்கு நடிகை நடனம் ஆடும் புதிய பாதையை முதலில் பானுப்ரியா தொடங்கியது இதில் என்றாலும்! "நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்" பாலச்சந்தர் தன்னை அழகன் படத்தில் முக்கிய பாத்திரம் கொடுத்து  ஒரு கைமாறு என்று எண்ணலாம்!


 பாலச்சந்தர் பின் ஜாதிமல்லி படத்துக்கும் இவரையே ஆஸ்தான இசையமைப்பாளர் ஆக்கியது அன்றைய சினிமா உலகு!




ஜாதிமல்லி மறக்கமுடியவில்லை பாடல் இன்னும் மறக்கமுடியவில்லை.


பாலச்சந்தர் வழிகாட்ட  அர்ஜின் இயக்கி நடித்த சேவன் பாடலில் இவரின் கை ஓங்கியது!-

பின் அர்ஜின் ஹிட்சில் இந்த பிரதாப் இன்னும் இவரின் இசைக்காக என் தேர்வாகியது  தனிக்கதை!




ஆனாலும் தெலுங்கு இசையின் முக்கிய தோல்  வாத்தியம் தமிழில் பறை மரகதமணியின் தனித்திறமை! அவரின் இசையில் அதிகம் இது மேலோங்கி இருக்கும் ஒரு வேளை தெலுங்கின்  பிரதான இசையோ நான் அறியேன்!
ம்ம்



! அதன் பின் தமிழில் மலையாளத்தில் மொழிமாற்றி வந்த அசுரன் படம் மோகன்லால் நடித்த படப்பாடல்  அதில் குளிர் குளிர் என சுடுகின்றதே பாட்டு இலங்கை வானொலியில் மட்டும் இருக்கும் ஒலிப்பேழை. சீடி. .

அதன் பின் யாருக்கு மாப்பிள்ளை யாரோ என்று தமிழில் வந்த ராஜசேகர் நடிப்பு படம்.

 அதன் பாடல்கள் இன்னும் சமூகதளம் யூட்டிப்பில் இல்லை இலங்கை கடந்து.

 இன்று புரட்சிFM,வானொலியிலும், தமிழ் அருவிFM வானொலியிலும் மட்டும் இதன் முழுப்பாடல்களும் இருப்பது நேயர் என்  சந்தோஸம்.



 ஆனால் ஐரோப்பாவில் முக்கிய வானொலி லங்காசிரியிடம் இது பற்றி கேட்டாள் அப்படி ஒரு படம் இருக்கா???


 என்று ஒரு புன்னகை மழுப்பல்!


ஹீ சரி விடயத்துக்கு மரகதமணி இசை மீட்டிய படங்கள் பல தமிழில் ஆனாலும் இவரும் போலி ஐடியில் வரும் பதிவர் போல ஹாம்சலோகா, ராஜ்கோட்டி, கீரவாணி என்று வந்தாலும்!
http://www.andhrawishesh.com/telugu-film-movies/movie-news/46289-happy-birthday-keeravani.html

 இசையில் ஒரு சாயல் இருக்கும் இது நிஜமா இல்லை என் நினைப்பா என்று நான் அறியேன் யாராவது திரையுலக ஜாம்பாவாங்கள்  இந்த சந்தேகத்தை தீர்த்துவைக்கட்டும் இசை எனக்கு பிடிக்கும் மரகதமணி மீண்டும் வரட்டும் வாழ்த்துவோம்.!


அன்னமா உன் பேர்  அன்னமா-தமிழில்  யாருக்கு மாப்பிள்ளை யாரோ இன்னும் தமிழ்பாடல் யூட்டிப்பில் யாராவது ஏற்றுவார்களா?, இதன் ஒரியினல் இது-



05 November 2014

மாயா உனக்காக!!!-1

ஹேமா முகநூலில் ஒரு கவிதை இன்று பகிர்ந்தார் .படம் பார்த்த பின் ஏனோ தனிமரம் எனக்கும் ஆசை வந்தது அதை கிறுக்கலாக இங்கே! யாவும் கற்பனை.. யாரையும் நோகடிப்பது என் நோக்கம் இல்லை!!!! நன்றி ஹேமா


.
///////////

மாயா நீ தான் என்னை!


மலையகத்தின் வீதியில்
மடுவுக்கும் மலைக்கும் இடையில்
மாப்பிள்ளை தகுதி கேட்டாய் ??
மழை பொய்த  அன்நாளை
மறக்கவில்லை.
மலையும் சரியும்
மலையகத்தில்  இயற்கை அழிவு இதயம்
மீரியபெத போல
மனதில் இன்னும் அடைமழை!

மனவேதனை போல நீ துப்பிய
மழைதானோ வார்தையாக
மலையக வீதியில்
மாடிவீட்டில் இருந்து
மாமனார் என்ற தகுதி
மடிப்பிச்சை கேட்க வைத்த கதை!


மாமலை போல ஒரு மாதாதேவி
மருகன் இவன் மடியில் தாங்கிய
மழலை மடுவத்தில்
மார்பில் தாங்கிய கதை எல்லாம்
மலையக பூமியில்
மான்புற்ற ஆசிரியர்கள்
மலரும் அச்சில் எழுதவில்லை!!



மடிந்தாலும் கவ்வாத்து
மருகறை என்று
மாயா  நான் எழுதினேன் உன்னால்!
மா என் முகவரி தமிழில் அறிவாய்!
மா- குதிரை .நான்   மா போல மரம்!
மலரும் பூக்கும் என்றாய் மாயா!
மலர் மலையகத்தில் இடப்பெயர்வு
மழையாக வந்த சேதி சொல்லாமல் விட்டாய்!
மடிக்கணனி உன்னிடம் அப்போது இல்லை!
மழைக்கும் போர்க்கும் சாக்கு
மரணத்திலும் சாக்கு சொல்லுவோம்
மலையக தலைவர் போல!
http://www.newstamilwin.com/show-RUmszBTZKXgq0.html

மாத்தையா வேலைக்கு  வரவில்லை என்று
மனதில் வெட்கி மாமா வடக்கு
மாமி தெற்கு என்று மழை போல
மச்சாள் பொது ஆசையில். ஆனாலும்
மானம் என்ற மழை இன்னும்
மனசில் தூறுது மாயா.


மரத்திலும்  ஆசை மடியில் உன் போல அழகாய்
மகன் அவனுக்கு நீ மாமி போல  இருக்கலாம்  மாயா!
மரணம் உனக்கு மண் சரிவு எனும்  போர்வையிலா
மயக்க மான இந்திரன் போல  அதிகாலையில் வரணும் ??
மன்னிக்கவும் மழையே மீண்டும்
மலைகத்தில் இப்படி மாயா போல வந்து
மனதில் சாரல் வீசாதே !
மலைகத்தில் புலி  என்று மாமியார் வீட்டில்
மாமா பொலிஸ் தந்த பரிசு
மச்சாள் முத்தம்  போல இனிப்பாகாகவோ
மன்சில்  நீ மலையகம் அறிவாயோ??
மடையா இலக்கிய மேதை மோதிரக்குட்டோ
மீசையில் போடவில்லை!
மழித்துவிட்டேன் நான் பறக்கும் பூச்சி
மானம் இழந்த மல்லுவேட்டி மைனர்!!
மச்சாள்  இனையம்
மடிக்கண்னி என்று மார்பிள் தூக்கவில்லை
மாமான் பாஸ்வேட் இன்னும்
மாயாதான்!

மாயா உனக்காக இன்னும்
மலர் போல தூவும் ஆசையில்!
மாலை நேரம் இங்கிலாந்து
மலைச்சாரலில்
மனதோடு மழைக்காலம்.
மலையோரம் பாடல் கேட்கும்
மந்தி!-குரங்கு .மாயா நான்!ம்ம்ம்ம்



 தொடரும் மாயா......
//

மாத்தையா-அதிகாரி சிங்கள மொழியில்
மடையா-முட்டாள்
கவ்வாத்து-தேயிலைச்செடியின் கீழ்ப்பகுதி.
மடுவம்-பிள்ளை பராமரிக்கும் இடம்.

04 November 2014

உலக சினிமாவில் நம் நாயகன்.

முகநூலில் சில நேரம் மூழ்கும் போது சில விடயங்கள் சிந்திக்கத்தூண்டும் விடயம் பேசப்படும்.https://www.facebook.com/spp.bhaskaran?fref=photo

 ஆனால் பின்னூட்டம் போட வெளிக்கிட்டால் சில நட்பு கெட்டு விடும் இயல்பு இருக்கு.

 ஆனாலும் கருத்து முக்கியம் என்றால் அதை வலையில் எழுதும் போது இன்னொரு நட்புக்களின் மனக்கிளச்சியை இன்னொரு பகிர்வாக  பதிவு எழுத்தூண்டும் என்பதை பதிவுலகம் அறியும்.( அண்ணாச்சி மெட்ராஸ் சிவகுமாரின் பொங்கியிருக்கின்றார் இங்கே-
தமிழில் தங்களுக்கு பிடித்த கவ் பாய் படங்கள் பற்றி சிலர் சிலாகித்து எழுதி வருகிறார்கள். கங்கா, எங்க பாட்டன் சொத்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என பட்டியல் போடுகிறார்கள். இவ்வகையறா படங்களை பற்றி குறிப்பிடும் உலகசினிமா ரசிகன் 'குதிரையில் பறக்கும் கதாநாயகனோடு நாமும் ஒரு குதிரையில் தொற்றி பயணிக்கிறோம். ஏகாந்த மலைகளில் மல்லாக்க கிடக்கிறோம். புல்வெளிகளில் புணர்ந்து திளைக்கிறோம். நதியின் கரைகளில் கரைகிறோம்' என்று மனசாட்சியின்றி ஏகத்துக்கும் வர்ணித்து தள்ளுகிறார். கொஞ்சம் அசந்தால...
மேலும் பார்க்க
 —உலகசினிமா ரசிகன் )
.

 அந்த  வகையில் இன்று என் நினைவுகளை அசை போடும் விடயம் இந்த கவ்பாய் என்று சொல்லும் மாயமான் உலகு.

. சிறுவயதில் ராணி காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தில் இருப்புக்கோட்டை முரட்டுச்சிங்கம். மாயாவி ,படித்தாலும் இந்த மிருக நட்பு கூப்பிட்டால்/விசில் அடித்தால் குதிரை வருமோ தெரியாது,,? ??

 சிவாவில் ரஜனி குதிரையில் போட்ட ஆட்டம் இன்னும் ஞாபகம். அதுக்கு முன் அன்னை ஓர் ஆலயம் யானை என்றாலும்!

 எனக்கு அதிகம் இந்த தென் இந்திய சினிமாவில் கவ்பாய் என்றால் அது நம் மாட்டுக்கார நேசன் என்று நாளிதழ்கள் எள்ளி நகையாடினாலும், திரையில் வாயில்லா ஜீவனிடம் அன்பு; கருணை என்று எல்லா உத்தியையும் இறக்கிவைக்கும் யுத்தியில் இவர் போல யார் இன்று யார் உண்டு ???


குதிரை நம் ஊரில் இருந்தாலும் மாட்டில் தான் முதல் சாவாரி செய்த அனுபவம் இன்னும் மெய்சிலிக்கின்றது .நினைக்கும் போது.!


 எனக்கு ஆங்கில படம் அறிமுகம் ஆகும் முன்னமே தமிழ்ப்படம் தான் அறிமுகம் .அதுவும் மாடுகள் எங்கள் சொத்து. விவசாய பூமியில் அதன்  நினைவுகள் அந்த உயிர்களின் கருணை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாது. நாம் வாழ ஈழத்தில் எத்தனை தம் உயிர்களை இந்த மாடுகள் (கோமாதாக்கள்) கொடுத்த கதைகள் எல்லாம் எழுத வெளிக்கிட்டால் அது சோக காவியம் போல ஆகிவிடும் !



என்றாலும் இன்னும் கவ்பாய் என்றால் சின்னவன் எனக்கு எல்லாம் இவர் தான்.!

இதன் பின் தான் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் எல்லாம் !

 இன்னும் பல படம் இவர்  நடிப்புக்கு ஈடு இணையில்லை.


 இன்னும் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்!!இவர் வழிகாட்டிய இந்தப்பாடல் இன்னும் பிரெஞ்சில் சந்தோஸ குத்தாட்டம்.என்ன சினேஹா ஆட வரமாட்டா திரையில்!ஹீ








.

01 November 2014

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))இறுதி.

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))-2
இனி...

இங்கிலாந்தில் இடம் பெயர்ந்தேன்
இல்லத்தரச்சியுடன்
இனிதே குடும்பம் ஒரு கதம்பம் என்று
இரண்டு வாரிசு !


இனி என்ன வாழ்வில் ஒரு சந்தோஸம் !
இங்கே தொழில் தொடங்கி .
இலங்கை உற்பத்தி எல்லாம்
இங்கு கிடைக்கும்!



இறந்த காலம் எல்லாம் மறந்து
இந்த ஊரில் இருக்கலாம் என்று
இங்கிலாந்தில் ஒரு வீதியில்
இவனும் காத்து இருந்த நேரத்தில்!


இங்கே ஏன் வந்தாய்?? என்று
இவனையும் திட்டும்
இந்த சினேஹா இப்ப பாட்டி போல


இனியும் வரலாம் இன்னொரு
இல்லத்தின் பாட்டியாக
இருக்கு சினிமாவில் இடம்
இனியும் உன்னை நினைத்து!
இந்த அகதியும் கவிதை எழுதினால்
இருக்கவும் இடம் இல்லை!ஹீ


இப்போதும் தனிமரம் போலத்தான்
இன்னும் படிக்கவில்லை
இனியும் பட்டதாரி
 இல்லை இவன்!
இவள் என்ஜினியர் என்று ஆனாலும்!
 இன்னும் இருக்கின்றாள் .தனிமரம் போல ஆனாலும்
இன்று சினேஹாவும்; தனிமரமும் தோப்புத்தான்!


இனியும் நீ தனிமரம் ஆஹாதே!
இன்னும் பல கதை இணையத்தில்
  இவன் எழுதுவேன்!! வெட்டிப்பயல்
இவன் தனிம்ரம் என்று எண்ணாதே!!!

இலங்கை முதல் இங்கிலாந்து வந்தாலும் !
இன்னும் இசைப்பேன்
 இவள் ஒரு இல்லத்தரசியாக வேண்டும் 
இன்ஜினியர் மாப்பிள்ளைக்கு
இவனோ படிக்காதவன்.....


.

30 October 2014

தேடலும் நினைவும்-5

திரையில் வரும்  இசையமைப்பாளரில்   பலரில் இன்று மறந்து போன ஒருவர்தான் பாலபாரதி !

1990 இன் பிற்பகுதியில்  இலங்கையில் பண்பலை வானொலிகளில் இவரின் இசையில் வெளியான இந்தப்படப்பாடல் ஒரு முகவரி பாலபாரதிக்கு.

காதல் வந்து தூக்கம் கெட்டவர்கள் கதை  இலங்கையில் பண்பலை அறிவிப்பில் இருந்தோர் பலரின் ரகசிய டையரி!

அதுபோல விஜய் முன்னர்  தமிழில் அறிமுகமானலும் வேலை கிடைச்சாச்சு . இந்தப்படம்தலைவாசல்   அடைமொழி மூலம் இவர் பிரபல்யம் இன்றைய பூஜை படம் வரை! ஆனாலும் மாமியார் வீடு படநடிப்பு இவரின் சிறப்பு தமிழில் என்பேன்!

 ஆனால் ஏனோ தமிழ்சினிமா இவரை  பயன் படுத்தவில்லை!ம்ம்http://www.cineikons.com/thali-vasal-vijay/#sthash.XTliiusK.dpbs


 பின் பாலபாரதியின் இசைக்கு  பேசப்பட்ட படம் தான் தல அஜித்குமார் அறிமுகமான அமராவதி படம் .



இதில் எல்லாப் பாடலும் பட்டிதொட்டி எங்கும் தொடர்ந்து  ஒலித்தது.

 அதிலும் இந்தப்பாடல் தனித்துவம் .இதயராகம் இசைக்கும் போது!ம்ம்



பின் ஏனோ பாலபாரதி அதிகம் திரையில் மின்னவில்லை .இன்று இவர் ஞாபகம் எத்தனைபேருக்கு  இருக்கு?, மீண்டும் பாலபாரதி இசை  காதில் கேட்குமா?,

.

முன்னர் தேடல் இங்கே-http://www.thanimaram.org/2014/10/4.html
//////////////////////

ஐபோனுக்கும் வருகைக்கும் அகதியின் ஆசைக்கும் இடையில்
 இசையின்  காதல் !ஐரோப்பாவில் களவும். திருட்டும்
வழிப்பறி என்றாலும் !
ஆண்டவன் கருணையில் அடுத்த ஐபோன் தனிமரம்கையில்  வரும் எனில் அகதியான உன் கதையுடன் அடுத்த வருடம் வலையில் வருவேன்!
அதுவரை ஆன்மீகம் அழைக்கின்றது சகியே!