30 March 2015

முகம் காண ஆசையுடன்--6

முகம் காண ஆசையுடன் -1,2,3,4.5..


 இனி...


எதிர் பார்த்தேன் இளங்கிளியே உனைக்க காணலையே? என்ற பாடல போல தான்  !

வார இறுதி ஒருநாள் விடுமுறையான ஞாயிறு ஓய்வுநாளில் சுமாவின் ஸ்கைப் அழைப்பு வரும் என்று காத்திருந்தே முதல் மரியாதை நடிகர் திலகத்தின் ஊயிர் ஊஞ்சல் போலத்தான்  அசுரனும் இலங்கையில் இருந்து முகநூல் நண்பியின் அழைப்பு நேரில் வராத போது தன் இணையத்தினை; நீயும் உன் நட்பும் போய்த்தொலை என்று குடிபோதையில்தான் பருகிய  வெற்று மதுபாண போத்தலை வீசி விட்டு போகும் குடிகாரன் போல எழுந்து போன நிலையில்!

 அவனின்  நண்பன் அகிலன் . என்ன மச்சான் ?மனசு சரியில்லைப்போல? இந்தா ஒரு பியர் குடி !

இன்று தானே உனக்கு விடுமுறை .தினமும் என்னைக்கவனி போல ஒரு நாளைக்கு 15  மணித்தியாளம்  காசுக்கும் மீதி 3 மணித்தியாளம் வெட்டியாக அறிவை வளர்க்கின்றேன்; ஆழ்ந்து நூல்கள் படிக்கின்றேன் ;நட்புக்கள் என்று  முகநூல்/ வலைப்பதிவு என்று வெட்டியாக அழையும் உன்னை சிலகாலம் பாரிசில் அறியும் ஒருவன் நான் என்றாலும் !

இந்த வீட்டில் சக நண்பன் போல உன்னையும் என்னுயிர் தோழன் பாபு பார்க்கின்றேன்

 இப்ப சில மாதங்கள் நீயும் ஒரு வலைப்பதிவு/முகநூல் என்று ஏதோ போதையில் பதவி தேடி ஓடும் முன்னால் ஜனாதிபதி போல அமைதியில்லாமல் போலி விளம்பரம் தேடுவது போல சிலரின் பதிவை நாடி ஓடுவதும்; அதன் சுருக்கம் பற்றிப் பேசுவதும் ,முகநூல் நட்பு என்று அழைப்பிள் அதிரடிப்படைநாயகன்  அம்மவாசை பாத்திரம்  போல பம்முவதும் ஏன்??

 என நான் கனம் கோட்டார் அவர்களே என்பது போல உன்னைக்கேட்க மாட்டேன் நண்பா!


முகநூலில் ஏதாவது நல்ல விடயம் அலசிஆராய முடியுமா  ?,

நிச்சயமாக இல்லை!

சும்மா பொழுது போக்கு போதைக்கு ஒரு நடிகையின் / நடிகரின் விடயம் அல்லது ,அரசியல் நையாண்டி பேசி நாமும் ஒரு பத்தி விமர்சனப்பதிவு எழுதும் தகுதி இருக்கு! என்று நமக்கு  நாமே பட்டம் சூட்டும்  பரிவட்ட மேடைபோல மட்டும் தான் மச்சான் முகநூல் இது என் கருத்து நாளை எனக்கு தாலி அறுப்பு போல  வேண்டாம் மச்சான்! .


உண்மையான நட்புக்கு இங்கு பலருக்கு சிரிக்கும் மேடை போல ஆமா நீ பாரிஸ் உன் உயிர்காப்பாற்ற வந்தாயா ?,

இல்லை உழைத்து இலங்கையில் சொந்த வீடு கட்ட வந்த  வெற்றிக்கொடி கட்டு படத்தில்  சார்லி போலவா  மச்சான்??

 வெளியில் உன் போலி முகம் எதுவோ நான் அறியேன் .

உனக்காக ஒருத்தி உன்னை நேசித்த பாவத்துக்காக இன்னும் முகம் வெளியில் காட்டாமல் இலங்கை இனவாத நாட்டில்  சிறையில் பூத்த சின்னமலர் போல இருக்கும் பூஜா பற்றி சிந்தித்தாயா??


 ,,அவளைப்பற்றி ஏதாவது ஜோசித்தாயா மச்சான் அகிலன்!பூஜா என் உயிர் மச்சான் உனக்கு எப்படி புரியவைப்பேன் நான் சிறையில் வாடும் சின்னப்பறவை போல இலங்கை இனவாதம் பற்றி சிலதை முகநூலில் போலி முகத்திலும், வலைப்பதிவில் ஊடக பத்தி எழுதும் நாளைய செய்தி  போலவும் எழுதினாலும் என் நேசம் நீ எப்படி அறிவாய் இன்னும் ஒரு பியர் தான் குடிப்போம் போதை சிலதை நிஜம் சொல்லும் !......வண்ணப்பூ வவுனியாவின் தேவதை  என் ஆசைக்காதலி அவள் பூஜா.............



 தொடரும்..........

26 March 2015

முகம் காண ஆசையுடன் -5


முகம் காண ஆசையுடன் -4
/////////////////
 இனி......
-----------------

இணைய நினைக்கும் போதெல்லாம்
இசைக்கும் பாடல் போல நீயும்
இல்லறத்தில் இணைய வேண்டிய ஆசையில்
இவன் இசைக்கும் பாடல்!

இங்கும் கேட்குமோ உன் குரல்?,


 என்று கவிதை எழுதிக்கொண்டிருந்தான் அசுரன் . இன்று எப்படியும் சுமாவுடன் ஸ்கைப்பில்  நேரடியாக பேச வேண்டும் சந்தித்தவேளை நாயகன் போல காத்து இருந்தான் ஆவலுடன் பாரிசில்.!



 விரும்பிய நட்புக்களுடன் நேரில் பேசும் வசதியை ஸ்கைப் என்ற புதிய வருகையின் தொழில்நுட்பம் உதவி செய்தாலும் இலங்கையில் இணையத்தொடர்பு என்பது நினைத்த நேரத்தில் உதவாத ஒரு அயல்தேசம் போல இழுத்தடிக்கும் தந்திரம் கொண்டது!


!உடனே கைபேசியில் இருந்து தூரதேசம் அழைத்தால் மாதமுடிவில்  அதிக கட்டணம் போடும்  இலங்கைக்கு உதவி செய்த  சீனா போல!


 என்ன செய்வது தொடர்பு அவசரம் என்றால் உதவி நாடிப்போவதில் என்ன குறை வந்துவிடப் போகுது அயல்நாட்டிடன் இன்னும் அடிமை போல இருந்த காலம் இப்போது இல்லை!

 நமக்குத்தேவை இப்போது அவசரமாக என்ற பின் ஏன் அவதிப்படுவான் என்றாலும் அசுரனின் கைபேசி இலக்கத்தை வாங்கி வைத்து இருக்கவில்லை மத்திய வங்கியில்  இருக்கும் தங்கநாணயம் போல!

 என்றாலும் இப்போது நிவேதாவிடம் கேட்களாம்!

 ஆனாலும் அவளிடம் ஏதும் காரணம் சொல்ல வேண்டும். பேசாமல் இணைப்புச்சதி செய்கின்றது நம் ஆட்சிக்கு எதிராக என்பது போல ஒரு ஸ்டேஸ்ச் போட்டாள்  நாளை அசுரன் முகநூலில் அறிந்து கொள்வான் என்ற சிந்தனையில். கொழும்பு  14 கிராண்பாஸ் வீதியில் இருந்த தொலைத்தொடர்பு சேவை மையத்தில் இருந்து வெளியேறினாள் சுமா.


இப்பவே  இப்பவே  என்ற பாடல் போல இதோ அழைப்பாள் என்று இணையத்தில் காத்து இருந்தான் ஜனாதிபதியை சந்திக்கக் காத்து இருக்கும் வெளிநாட்டு ஊடகவாதி போல அசுரன் !


 சிலரின் அழைப்பு சிலருக்கு சிலநேரத்தில் போதையூட்டும் இது பருவத்தின் சித்து விளையாட்டுப்போல என்று நினைத்துக் கொண்டான் அசுரன் வாடகை கொடுத்து  தங்கியிருக்கும் அறையில் இருக்கும் இன்னொரு நட்பு அகிலன் .

அந்தி  பூத்திடும்  இந்த நேரத்தில்
அக்கரையில்  இருந்து
அன்பில் யாரின் அழைப்புக்காய்
 அலைகின்றான் அகதியான
அன்பு நண்பன் அழுத்தினான்
அடுத்த பாட்டுக்கு கவிதை ஒன்று
அக்கரையில் இருக்கும் வானொலிக்கு


அதில் ஒலித்த பாடல் இதுவோ  [[[[[[[




தொடரும்.......



23 March 2015

கவிதை போல கிறுக்கல்.


பூக்களும் பேசிடும் மெளனம் கலைத்து
 நீயோ பேசாமல் கொல்வது என் அந்தி
 நேர சந்தோஸ மாலையை
பேசு பூவே உன்னை நேசிக்கும் 
மாலை நேரத்தென்றல் இவன்
        



-------------------------------------------


நீ ஒரு தேவதை போல வந்து என் வாழ்வை 
நிழல்கள் போல அப்பா என்று தாலாட்டும் குயிலே 
என்றும் பாடுவேன் ஒரு பாட்டு 
செல்லம் நீயடி!



--------------------

மழைபோல வருவாளோ  மன்னன் 
                                          மனம் குளிர  ஊர்சனம் போடும் 
                                                          ஊழிக்கூத்தில் மின்னல் போல ஒதுங்குவாளோ
                                                                  இன்னும் விடையில்லாத ஆத்திர நடணம் போடும் மழையை புழுதிவாரித் 
தூற்றும் மனதுடன் காளை
  ஒருவன் மயிலிடம் ஓதும் வேதம்!





-------------------------------



 எழுதும் கடிதங்கள் எல்லாம்
உன்னை மறந்த முகவரி போல 
ஏதிலி என்னையும் தொலைத்துவிட்டது
விடியும் பொழுது உன்னையும்
இன்னொரு சுகராகம் மீட்டும்
அதிகாலைப்பொழுதில்!
முகாரி போல ஈழம்விட்டு
மூச்சு வாழும் நாட்டில் 
முகம் காண !
ஆசை என்ன லேசா!!



////////////// 

13 March 2015

முகம் காண ஆசையுடன் ...-4


முகம் காண ஆசையுடன் -3

இனி.......

உள்நாட்டு சுதந்திர வேட்கையில் ஊர்விட்டுப்போன  உறவுகளையும் , இடம்பெயர்ந்த உடன் பிறப்புக்களையும். உற்ற நட்புக்களையும் .கூடப்படித்த பள்ளிக்கூட உறவுகளையும். மீண்டும் சேர்க்கும் பள்ளிக்கூடம் படம் போல இன்றைய  நவீன ஊடக வருகையான முகநூல் ஒன்றினைக்கும் ஒரு பொது மேடை எனலாம்.

 என்றாலும் இந்த முகநூல் பலருக்கு தகவல் பகிரும் ஊடகம் என்றால் சிலருக்கு முகம் தொலைந்த நட்பு  உறவை மீண்டும் தேடும்  பைவ்ஸ்டார் படம் போல இன்று !

எனினும் குடும்பத்தில் எற்படும் நவீன புரட்சியின் இன்னொரு முகம் இந்தப்படம் போல ,



 இந்த முகநூலின் வருகையில் முகம் தேடும் காதல் கதை காதலர் தினம் படம் போல ஒவ்வொரு இளம் நெஞ்சங்களின் புதிய தேடல் என இந்த புதுப்பிறவி போல முகநூலின் வருகை பல செய்திகள் சமூகத்துக்கு சொன்னாலும் !

நாட்டின் இன்றைய நிகழ்வுகளை சொல்லும் விளம்பரப்பலகை போலஒரு பக்கம் என்றால் !

அன்றைய பாரதிராஜா படத்தின் தின்னை வெட்டிப்பேச்சுப்போல  இன்று சிலரின் கும்மியின் ஜோதிலட்சுமி இந்த முகநூல்  என்றால்  நீயா ?நானா ,என்பது போல அடுத்தவரிடம் ஒலிவாங்கியை கொடுங்க கருத்து அறிய என்பது போல புகைப்படக் காட்சியின் கருத்துக்கள் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் சேரும் ஒரு ஆலமரம் இன்னொரு பக்கம் !

முகநூலில் தனிப்பட்டவர்களின் வேட்டியின் அழகு முதல் சேலையின் நிறம் வரை கரைத்து   ஊத்தும் திருப்பூர்  சாயப்பட்டரை போல பலரின் அரசியல் ,சினிமா ,ஆன்மீகம் , என இந்த நவீன பொழுதுபோக்கு கருவி இன்றைய புதியபாதை  வழிகாட்டி என்றாலும் இங்கும் பல கதைகள் அச்சு  ஏட்டில் எழுதுவது போல எழுதும் புதிய படைப்பாளிகளின் வருகைக்கு இன்னொரு கணையாழி போல  ஒரு தீவு முகப்புத்தகம்.

 .இப்படிச் சிந்தனையில் பாரிசின் புறநகர்சாலையில் இயங்கும் ஒரு இத்தாலியன் உணவகத்தில்   சமையல் தொழிலில் இரண்டாவது சமையல் தொழிலாளியாக   இருக்கும்  அசுரன் கைபேசிக்கு.!


 தனிப்பட்ட செய்தி ஒன்றின் வருகை உற்சாகத்தினை கொடுத்தது  மாலையில் நீண்ட நாட்களாக முகநூலில் அவனின் சிந்தனையோடு ஓத்துப்போகும் ஒரு முகம் தெரியாத முகநூல் உறவு அவனை ஸ்கைப் மூலம் பேசமுடியுமா ?என்று கேள்வியினை தொடுத்து இருந்தது.

தன்னிடம் நடிகன் பதிவாளர் அசுரன் பற்றி பேசாத சுமா என்று என் நண்பி நிவேதா கோபித்த பதிவாளினிதான் இப்போது என்னுடன் முதன் முதலாக பேசும் ஆசையில் அழைப்பு எடுக்கச்சொல்லி விட்ட தூது போ செல்லக்கிளியே போல செய்திக்குறிப்பு.


 நாளைய பொழுது ஞாயிறு மாலை அழைப்பில் வருகின்றேன் என்று உடனே பதில் கொடுத்தான் அசுரன்.வேடிக்கையாக!

தொடரும்.....

09 March 2015

கிறுக்கலும் கீதமும்.

எழுதுவதும் ஒரு  பிரவசம் போல
எழுதும் கவிதையும் இன்னொரு பிறப்பு !
என்று எழுதும் எழுத்தாளர்கள்/ளிகள்  இன்று
ஏந்தும் தமிழ்  போல
ஏனோ வீதியில் என்று
எடுத்துச் சொன்னால்
எல்லாம் ஒரு பிழைப்பும் தமிழ் போல
எழுதி எவந்தான் தமிழில்
என்றும் வெல்லலாம்  சில கோடி
என யாரும் மேடை நாடகத்தில்  என ஏனோ
ஏதிலிகள் யாரும் கற்கவில்லை!


/////////////////////



 உதவும் ஆசை எனக்குண்டு
உண்மையில் நீ முகம் அறிந்து
ஊர்மாறி முகம் கொண்ட
உற்ற நண்பன்! என்றாலும்
உன்னைப்போல ஒருவன்
உண்மையில் இன்றும் இல்லை!!
உனக்குப்  புரியாது ஏதிலி தேசத்தில்
உழைப்பு இல்லாத
உற்ற நண்பன்  ஒரு நாள்
உண்மை   நிலை
உன்னிடம் சொல்ல
உதைக்கின்றது  எனக்கும்
உருவான ஒரு
உற்ற வாரிசு! உன்மையில்
உலக வாழ்க்கை ஒரு சுமைதான்!

02 March 2015

முகம் காண ஆசையுடன் -3

                       
முகம் காண ஆசை-1
முகம் காண ஆசை..-2
               
இனி....




வார்த்தைகள்  பேசாநிலையை மெளனம் என்று சொல்லும் சமூகம் ஊடகத்தணிக்கை என்ற கவசம் போடும் ஆட்சிநிலை  பற்றி  பொதுவில் பேசாத நிலையை யாரும் அதிகம் பொதுவெளியில்  முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முகநூலில் அன்றாடம் கழுவி ஊத்துக்கின்ற  அற்ப சந்தோஸத்தில் நாடு போகும் நிலை பற்றி, பேச மறுப்பதும் ஒரு கோழைத்தனம் எனலாம்!


 எப்போதும் சமூகம் என்ற கூட்டில் வாழும் நிலையை தொடர்கின்றது தானே நம் இயல்பு. !

புதியதாய் ஏதாவது  ஊடகத்தில் எழுதினால். பேசினால். ஊர் வம்பு என்று எத்தனை அன்பு மிரட்டல்கள் .விசாரணை என்ற ஆசைக்கவனிப்பு எல்லாம் நான் பார்த்தவன்  ஊடக சுதந்திரம் இல்லாத நாட்டில் நிவேதா !


அதுதான் மெளனமாக  இப்போது இருக்கின்றேன் . எங்கே அசுரன் ஸ்கைப்பில்  பதில் வரவில்லை என்று  நிவேதா கேட்ட விசாரணைக்கு மேல்கண்டவாறு பதில் கொடுத்தான் அசுரன்.

ஆமா சுமாவுக்கு கலியாணமா  ?,யார் சொன்னார்கள்,? நிவேதா வினோதமானவளே பாடல்போல வினோதமாய் கேட்டான் அசுரன்.

 நட்புக்கள் எல்லாம் எல்லா நேரத்திலும் உண்மையாக இருப்பது இல்லைத் தானே நண்பா . சுமா என்னோடு ஊடக நெறியில் இடையில் வேலை பழக வந்த இடத்தில் பிரியமான தோழி போல நட்பானவள்

 நீயோ என்னுயிர் தோழன் போல முன்னம் பள்ளிக்காலத்தில்  முகம் அறிந்தவன். இப்போது புலம்பெயர் தேசத்தில் தொலைவில் இருக்கும்   நாடோடி தென்றல் பாண்டியன் போல என்று சொல்லமா?, அசுரன் !

ஹீ ஹீ   என்ன நேற்றைய நடிகன் தள பதிவை என்னிடம் கோடிட்டுக் காட்டுகின்றாயா நிவேதா ?

அட பதிவு எல்லாம் ஞாபகம் இருக்கா?, எல்லாம் நேரில் பார்த்த மக்களின் வாழ்வியலைத்தானே என் தளத்தில் நடிகன் எழுதுவது.

 ஆமா நடிகன் தளத்தில்  யார் அந்த நடிகை போல  பின்ணணி நாயகி.


 அது அடுத்த தொடர்கதைக்கு ஒரு முன் விளம்பரம் தோழி.  . ஓ அப்படியா ! நேற்றுத்தான்  சுமா என்னிடம் கலியாண அழைப்பிதழ் கொடுத்தாள்    அப்போது அவள் முகநூலை பார்த்த போதுதான் உன்னுடனும் அவள் நட்பில் இருப்பவள் என்று அறிந்தேன்.

 இருந்தாலும் ஒரு உந்துதல் அவள் இதுவரை உன்னைப்பற்றி ஒரு வார்த்தையும் என்னிடம் பேசியதில்லை. ஒரு வேளை சுமாவுக்கு நீ என் நட்பு என்று அறிந்து இருக்க சந்தர்ப்பம் அமைந்து இருக்காது என்று ஏன் நீ சிந்திக்கக்கூடாது நிவேதா.

எது எப்படியோ கலியாணம் நல்லவிடயம் தானே ஊடகத்தில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று நீ அறிந்தவள்.  இப்படி எல்லாம் பேசலாமா?,

  நாடு விட்டு வந்து இப்ப 5 வருடம் போய் விட்டது . சாரிடா உன்னை ஏங்க வைத்திட்டன் கோவிக்காத  .

நான் வெளியில் போகவேண்டி இருக்கு பின் உன்னிடம் பேசுகின்றேன் என்று தொடர்பை துண்டித்தால் நிவேதா. மீண்டும் பேசுவோம் என்று இலங்கை பேச்சுவார்த்தை நாடகம் போல அசுரனும் கலைந்து சென்றான் ஸ்கைப்பின் தொடர்பை நிறுத்தி!....



 இன்னும்  முகம் காண ஆசை ........