21 June 2015

தந்தையின் தாலாட்டு

என் நல்ல நட்பு யார் என்று என் நண்பனிடம் தனிமையில் யாராவது கேட்டாள் அவனின் மந்திர வார்த்தை சொல்வது "நல்ல பாடல்கள் தான் அவன் நட்பு வட்டத்தில் முதல் என்று!"

 எனக்கு பாடல்கள் மீது  காதல் வர அல்லது பிரியம் வர என் நேசிப்பு வானொலியில் பணி செய்ய விரும்பியது துணைக்காரணம் என்றாலும் இயல்பில் கவிதை நேசிப்பும் கவிதை புணைவு ஆர்வமும் முக்கிய காரணியாகும்!


ஆனாலும் இலங்கையிலும், ஈழத்திலும் இந்திய ஆதிக்க கட்டமைப்பை மாற்றத்துடிக்கும் இசைப்பாடல் ஆசையில் உதித்தவர்களின் தாய்வீட்டு  முகவரி இலங்கை பொப் இசை.


அந்த பொப் இசைக்கு வழிகாட்டி இலங்கை வானொலி என்பது கடந்தகால வரலாறு .


இனவாத யுத்தம் பலதை புரட்டிப்போட்ட கோலமாகிப்போனது பலரின் துயரம் அதனை வெளிக்காட்டாமல் தமக்கு இட்ட பணியை செய்ய வேண்டிய வாழ்வாதார சூழலில் இருந்த இலங்கை வானொலி பணியாளர்களின்  கடமைக்கும் இனவாத கொள்கைக்குமான போராட்டம்  பற்றி இன்று புலம்பெயர்  நாட்டில் இருந்து சுதந்திரமாக தனித்தொடராக பல விடயம்  எழுத முடியும் பல அறிவிப்பாளர்/ளிகளினால் என்பதை  மறுக்க முடியாத கடந்தகாலம்.

 

இலங்கை வானொலியில் சந்தனமேடை என்ற நிகழ்ச்சி பற்றி என் ஒரு தொடரில் அதிகம் பேசியதால்!


அந்த நிகழ்ச்சியில் எனக்கு நன்கு அறிந்த கவிஞர் வரிசையில் கார்மேகம் நந்தாவும் ஒருவர்  அவர்  ஒரு மலையகத்தின்  கவியாளுமை கொண்ட மெட்டுக்குப்பாட்டு எழுதும் வித்தகர்.

  இன்று இளைய   இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையில் எழுதிய பாடல் என்னை கவர்ந்திருக்கு இருக்கு .




.பாடல் குழுவுக்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூக்கள்.இன்னும் பல படைப்புக்கள் தொடரட்டும்.


நீங்களும்  பாடலை பார்த்து ரசிக்க இங்கே-

01 June 2015

இன்னும் உன்னோடுதான்!!

இசை  என்னும் ஜீவநதியே
இளையராஜா என்னும் அரசே!



இசையாழ்மீட்டி எத்தனை ஆயிரம்
இணையில்லா கீதம் படைத்தாய்!
இந்திய சினிமாவில் நீ ஒரு
இமயம் என்று இன்னும் சிலர்
இன்றும் கொண்டாவில்லை!
இந்திய தமிழன் நீ  என்று போலும்
இருந்தாலும் நீ போட்ட
இன்னிசை கலையை
இருட்டில் திருடியோர் இங்கு பலர்!



இணையப்பரப்பிள் இன்றும் பல
இணைய வானொலிகள்
இனிதாய் உன் கீதம் பல
இரவில் தாலாட்டும்.

இசையாசிக்கும்
இந்த தனிமரமும்  உன்னை
இன்றைய நாளில் இனிதே
இதயம் நிறைய போற்றுகின்றேன்!



இன்றைய நாள் உன் வாழ்வில் 2/6
இன்னொரு உதயம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இசையானி இராகதேவன்
இளையராஜாவே!


இன்னும் உன் இசையில்
இவனும் உன்னோடு
இந்தக் காதல் போல!


இன்னும் பல பாடலுடன்
இன்னும் உன்னோடுதான்.
இப்படி நீ மெட்டுப் போட்டாலும்


இன்றும் உன் பாட்டுத்தான்
இதயத்தில்!