கண்களை மூடினாலும் தெரிகின்றதே
சதைபிளந்து உடல் எரிந்த காட்சிகள் என்று பா.விஜய் கவிதை சொல்லும்,.
வேதனை வீட்டைவிட்டு பிரிந்து செல்வதை கவிதையாக கம்பன் சொல்லாதது ஏனோ ?என எண்ணவைப்பது!
வீடு ஒரு உயிருக்கு நிகர் என்பதாலா?
இப்படித்தான் இதுவரை நான் பிறந்த ஊர் ,என் ஊர் ,என் சொத்து .என்று இறுமாப்பில் இருந்த பங்கஜம் பாட்டியும் பரதேசியாக ஏதும் அற்ற ஏதிலி ஆகும் நாளும் வந்தது.
1991 ஆனி மாதத்தின் முதல் வாரத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 10.மணி அன்று .வேலியில் பாடிய திருச்சிராப்பள்ளி வானொலி
நேரம் சொல்லிக் கொண்டு இருந்தது .
எதிரே படலையில் பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் அடிபாடு தொடங்கி விடும் போல இருக்கு.
இந்தச் சைக்கிள் போராளி தம்பி வேண்டிக்கொண்டு போனவராம். வேலியில் சாத்தி விட்டு.இதைத் தந்துவிட்டன் நானும் அம்மாட்டப் போறன் என்று விடுப்புப் பார்த்த குமரேசன் சொல்லிவிட்டுப் போன சில நிமிடங்கள் !
கோர்க்காலியில் இருந்து எடுத்துவைத்தும் ,எதற்கும் பிள்ளைகளுக்குத் தேவை என்று யூரியா பாக்கில் கட்டிவைத்த உடுப்புக்களும் ,கொஞ்ச அரிசிமாவும் எடுத்து முன்னாயத்தமாக ஏற்றிவைத்திருந்த இரட்டைமாட்டு வண்டியை.
எதற்கும் அடுத்த கிராமத்தில் நிறுத்திவிட்டு வாறன் என்று சொல்லி விட்டு சின்னத்தாத்தா தம்பி யுடன் சென்ற சில நிமிடத்திலேயே!
டேய் எல்லோரும் எதற்கும் சேட்டைப் போட்டு நில்லுங்கோ.
அடைத்து வைத்திருக்கின்ற கோழியைத் திறந்து விடுங்கோ .
ராகுல் கிளியைத் திறந்து விடு.
வந்தால் பார்க்கலாம் .
இல்ல அம்மா .
இது நல்ல கிளி.
என் பேர் எல்லாம் சொல்லுது பயறு போட்டு வளர்த்ததில்.
டேய் நீ வாறீயா இல்ல குத்தூசி நெருப்பில் வைத்து சுடூ வாங்குவாய் என்றாள் அம்மா .
! அதுவரை கேட்காமல் இருந்த ராகுலுக்கு எச்சரிக்கையாக.
பாட்டி எங்கே ?
அவங்க மாட்டை அவிழ்த்துவிடுறாங்க நாணாயக்கயிறு மட்டும் விட்டுட்டு
.நீ என்ன செய்யிறாய் !
இந்த அம்மா கொஞ்ச நேரம் கிளியோட விளையாட விடமாட்டா.
கத்த வைக்காதயடா வாறீயா இல்ல குத்தூசியில் சூடுவைக்கவா ?
வேண்டாம் வாரன் அம்மா.
இப்படித்தான் போனவாரம் !
மாட்டுக்கு குறி சுட்டது.
தேங்காய் மட்டையில் நெருப்பு மூட்டி.
ஒவ்வொரு மாட்டிலும் யார் யாற்ற மாடு என்று பங்கு பிரிச்சு பெயர் குறீயீடு போடுவது .
மாட்டுக்கு தண்ணீர் வைக்கவும் ,வைக்கோல் யார் போடுவது ,புல்லு வெட்டுவது, என்ற வேலைகள் பார்க்க .
ராகுலின் பெயரிடும் போது அனோமாவின் பெயரிலும் ஒரு குறீயீடு போடுங்கோ என்று பாட்டியிடம் சண்டை போட்ட போது!
எரிந்து கொண்டு இருந்த குத்தூசி எதிர்பாராமல் என் காலில் விழந்து வீடே இரண்டு பட்டது .
மாட்டுக்கு நலம் போடச் சொன்னால் என் பேரனின் காலில் நாமம் போட்டுவிட்டியே என்று பங்கஜம் பாட்டி பத்திரகாளியாகி விட்டது.
உன்ற பேரன் பார்க்காமல் போனதுக்கு நான் என்ன செய்வன் .
என்று பாட்டியோடு மாட்டுக்கார ஆனந்தன் சண்டைபோட்டது ஞாபகம் வந்தது.
அம்மா கோபம் வரும் போது இதைச் சொல்லியே பயப்படவைப்பது இப்ப வாடிக்கையாகிவிட்டது.
சண்முகம் மாமி எங்க ?இவ்வளவு நேரமும் காணவில்லை .
எண்ணைய் ஊத்த செங்குக்குக்கார வீட்டபோனாவா.
ரூபன் செக்காட்டிக்கொண்டிருப்பான் நான் போய் கூட்டியரவோ அம்மா.
போட்டு டக்கண்டு வா .
எல்லாரும் ஒன்றா நிற்பம் என்று அம்மா சொல்லி முடிக்க முன்னரே சைக்கிள் எடுத்துக் கொண்டு சந்திக்கு ஒடினான் ராகுல்! சந்தி கடக்கும் போது!
வருவான் தொலைந்தவன்!!!!!!
////////////////////
கோர்க்காலி-நெல் அடுக்கும் இடம் யாழ் வட்டார மொழி!(பத்தாயம் என்று யுகபாரதி சொல்வார் தன் நூலில்)
விடுப்பு-நோட்டம்
டக்கொண்டு-மிகவிரைவாக!
செக்கு-எண்ணைய் அரைக்கும் மர ஆலை.ஈழத்தில் வடக்கில் ,இது அதிகம்
சதைபிளந்து உடல் எரிந்த காட்சிகள் என்று பா.விஜய் கவிதை சொல்லும்,.
வேதனை வீட்டைவிட்டு பிரிந்து செல்வதை கவிதையாக கம்பன் சொல்லாதது ஏனோ ?என எண்ணவைப்பது!
வீடு ஒரு உயிருக்கு நிகர் என்பதாலா?
இப்படித்தான் இதுவரை நான் பிறந்த ஊர் ,என் ஊர் ,என் சொத்து .என்று இறுமாப்பில் இருந்த பங்கஜம் பாட்டியும் பரதேசியாக ஏதும் அற்ற ஏதிலி ஆகும் நாளும் வந்தது.
1991 ஆனி மாதத்தின் முதல் வாரத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 10.மணி அன்று .வேலியில் பாடிய திருச்சிராப்பள்ளி வானொலி
நேரம் சொல்லிக் கொண்டு இருந்தது .
எதிரே படலையில் பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் அடிபாடு தொடங்கி விடும் போல இருக்கு.
இந்தச் சைக்கிள் போராளி தம்பி வேண்டிக்கொண்டு போனவராம். வேலியில் சாத்தி விட்டு.இதைத் தந்துவிட்டன் நானும் அம்மாட்டப் போறன் என்று விடுப்புப் பார்த்த குமரேசன் சொல்லிவிட்டுப் போன சில நிமிடங்கள் !
கோர்க்காலியில் இருந்து எடுத்துவைத்தும் ,எதற்கும் பிள்ளைகளுக்குத் தேவை என்று யூரியா பாக்கில் கட்டிவைத்த உடுப்புக்களும் ,கொஞ்ச அரிசிமாவும் எடுத்து முன்னாயத்தமாக ஏற்றிவைத்திருந்த இரட்டைமாட்டு வண்டியை.
எதற்கும் அடுத்த கிராமத்தில் நிறுத்திவிட்டு வாறன் என்று சொல்லி விட்டு சின்னத்தாத்தா தம்பி யுடன் சென்ற சில நிமிடத்திலேயே!
டேய் எல்லோரும் எதற்கும் சேட்டைப் போட்டு நில்லுங்கோ.
அடைத்து வைத்திருக்கின்ற கோழியைத் திறந்து விடுங்கோ .
ராகுல் கிளியைத் திறந்து விடு.
வந்தால் பார்க்கலாம் .
இல்ல அம்மா .
இது நல்ல கிளி.
என் பேர் எல்லாம் சொல்லுது பயறு போட்டு வளர்த்ததில்.
டேய் நீ வாறீயா இல்ல குத்தூசி நெருப்பில் வைத்து சுடூ வாங்குவாய் என்றாள் அம்மா .
! அதுவரை கேட்காமல் இருந்த ராகுலுக்கு எச்சரிக்கையாக.
பாட்டி எங்கே ?
அவங்க மாட்டை அவிழ்த்துவிடுறாங்க நாணாயக்கயிறு மட்டும் விட்டுட்டு
.நீ என்ன செய்யிறாய் !
இந்த அம்மா கொஞ்ச நேரம் கிளியோட விளையாட விடமாட்டா.
கத்த வைக்காதயடா வாறீயா இல்ல குத்தூசியில் சூடுவைக்கவா ?
வேண்டாம் வாரன் அம்மா.
இப்படித்தான் போனவாரம் !
மாட்டுக்கு குறி சுட்டது.
தேங்காய் மட்டையில் நெருப்பு மூட்டி.
ஒவ்வொரு மாட்டிலும் யார் யாற்ற மாடு என்று பங்கு பிரிச்சு பெயர் குறீயீடு போடுவது .
மாட்டுக்கு தண்ணீர் வைக்கவும் ,வைக்கோல் யார் போடுவது ,புல்லு வெட்டுவது, என்ற வேலைகள் பார்க்க .
ராகுலின் பெயரிடும் போது அனோமாவின் பெயரிலும் ஒரு குறீயீடு போடுங்கோ என்று பாட்டியிடம் சண்டை போட்ட போது!
எரிந்து கொண்டு இருந்த குத்தூசி எதிர்பாராமல் என் காலில் விழந்து வீடே இரண்டு பட்டது .
மாட்டுக்கு நலம் போடச் சொன்னால் என் பேரனின் காலில் நாமம் போட்டுவிட்டியே என்று பங்கஜம் பாட்டி பத்திரகாளியாகி விட்டது.
உன்ற பேரன் பார்க்காமல் போனதுக்கு நான் என்ன செய்வன் .
என்று பாட்டியோடு மாட்டுக்கார ஆனந்தன் சண்டைபோட்டது ஞாபகம் வந்தது.
அம்மா கோபம் வரும் போது இதைச் சொல்லியே பயப்படவைப்பது இப்ப வாடிக்கையாகிவிட்டது.
சண்முகம் மாமி எங்க ?இவ்வளவு நேரமும் காணவில்லை .
எண்ணைய் ஊத்த செங்குக்குக்கார வீட்டபோனாவா.
ரூபன் செக்காட்டிக்கொண்டிருப்பான் நான் போய் கூட்டியரவோ அம்மா.
போட்டு டக்கண்டு வா .
எல்லாரும் ஒன்றா நிற்பம் என்று அம்மா சொல்லி முடிக்க முன்னரே சைக்கிள் எடுத்துக் கொண்டு சந்திக்கு ஒடினான் ராகுல்! சந்தி கடக்கும் போது!
வருவான் தொலைந்தவன்!!!!!!
////////////////////
கோர்க்காலி-நெல் அடுக்கும் இடம் யாழ் வட்டார மொழி!(பத்தாயம் என்று யுகபாரதி சொல்வார் தன் நூலில்)
விடுப்பு-நோட்டம்
டக்கொண்டு-மிகவிரைவாக!
செக்கு-எண்ணைய் அரைக்கும் மர ஆலை.ஈழத்தில் வடக்கில் ,இது அதிகம்