பெற்றவர்களைப் பிரிந்து கூடப்பிறந்து கும்மாளம்,குடிமிச்சண்டை,போட்டாலும் பாசத்தின் உறைவிடங்களான சகோதரிகளைப்பிரிந்து நேற்றுவந்து உறவாகிப்போன கைபிடித்த கணவனுடன் கடல்கடந்து குடித்தனம் நடத்த நாடற்றவனின்பின் நானும்போகிறேன்!
.......,,,,,,
நான் பிறந்த இந்தவீட்டை இனி எப்போது பார்ப்பேன் எப்போதும் தனிமையில் என்னுடன்பேசும் இந்த வேப்பமரம் தாங்கிய தூப்பாக்கிச் சன்னங்கள் இன்னும் மறையாத முற்றத்தை விட்டுப்போறன்!
:::;;
முகம் தெரியாத மணிதர்களாக வந்து முன்னேரி காவல்காத்த அந்த தெய்வங்கள் வாழ்ந்த ஓழுங்கையை மறந்து எப்படி இருப்பேன் தனிமையில்......,
--//////
அயல்கிராமங்கள் எல்லாம் ஓடிவந்து சாப்பிட்ட கோயில் மடத்தை எப்படிப்பிரிவேன்!-//
--/////
ஓர் இரவுக்குள் கையில் கிடைத்ததுடன் மழையில் நனைந்து மறுகடல்தாண்டி வந்தாரைவாழவைத்த வன்னியைவிட்டு வீட்டுக்காவலுக்கு விட்டுப்போன நான் வளர்த்தமாடு காணாமல் போனது போல் !
........----/
உறவுகள் எல்லாம் உணவின்றி உடுதுணி இன்றி உறக்கம் தொலைத்து கொத்துக்கொத்தாக குண்டுபோட்டு குதறியெறியப்பட்டு குற்றுயிர்போன பேரவலத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வல்லரசுகள் தேசத்துக்குப் போனாலும் வற்றாத காயங்கள் மனதில் அலையலையாய்!
--/
என் அண்ணா நீ என் மடியில் மரன ஓலமிட்டு மறைந்து போன தருனத்தில் தவித்த தவிப்புக்களை எல்லாம் எல்லாத்தையும் என்னுள் புதைத்துவிட்டு புலம்பெயர்ந்து இன்று புதுப்பயணம்போனாலும் நான் மரணத்துள்ளும் வாழ்வேன் என் இனத்தின் விடிவைப்பார்பதற்காக என்னுள் கனவுகளுடன்!
----
இவளையும் மன்னியுங்கள் வேர்களைவிட்டு வேறுதேசம் போவதற்கு நான் தப்பிக்கவில்லை சாட்சியாக வேண்டும் சில
சம்பவங்களுக்கு!