வலையுலகில் எழுத்தார்வத்துக்கு களம் அமைத்துக்கொடுக்கும் பலர் .கவிதை ,கட்டுரை , கதை ,என பல போட்டிகளை நடத்திக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய செயல்.
அந்த வகையில் சக மூத்த பதிவாளர் வெங்கட் நாகாராஜா ஒரு படத்தினை பகிர்ந்து கவிதை எழுத வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.
அழகிய காட்சிப்படத்தினைக்கண்டு கவி எழுத ஆசை!
ஆனாலும் ஆன்மீக தேடலில் தனிமரம் வலைக்கு ஒய்வு .என் சொந்தப் பெயரிலேயே கவிதை எழுதி அவருக்கு அனுப்பி இருந்தேன் .
அவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் .இந்த வாய்ப்பை தந்து கவிதையையும் வெளியீடு செய்த வெங்கட் அண்ணாவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்க்ளும் .
அந்த வகையில் சக மூத்த பதிவாளர் வெங்கட் நாகாராஜா ஒரு படத்தினை பகிர்ந்து கவிதை எழுத வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.
அழகிய காட்சிப்படத்தினைக்கண்டு கவி எழுத ஆசை!
ஆனாலும் ஆன்மீக தேடலில் தனிமரம் வலைக்கு ஒய்வு .என் சொந்தப் பெயரிலேயே கவிதை எழுதி அவருக்கு அனுப்பி இருந்தேன் .
அந்திப்பொழுதில் அன்பை ஆழ்கடல் போல
அள்ளித்தரும் அருமை நாயகன் என் அருகில்.
அவர் கரம் கொண்டு அணிந்து அழகு
பார்க்கத்துடிக்கும் அல்லிப்பூக்கள் ஆயிரம்
அன்று மலர்ந்தவை போல அவரிடம்
சொல்ல ஆசைகள் கோடி அருவியின்
அலைபோல ஆனாலும் அந்தக்கனப்பொழுதிலும்
அன்புக்கூடல் அதைத்தடுக்கின்றதே.
ஓட்டுக்கேட்கும் அலைவரிசை ஒலிப்பதிவு
அரசு போல அருகில் வளரும் தனிமரம்
அதை வேட்டையாடுங்கள் முதலில்
ஆம் ஆத்மி கட்சிபோல
அரசியின் கட்டளை இது அரசே!
கவிதை பிரசுரம் ஆகுமா ?இல்லை பூக்கூடையில் போகுமா?, என்ற தயக்கம். இருந்தாலும், கவிஞர்களும் ,கவிதாயினிகளும் போட்டி போடும் இடத்தில் சிவநேசனும் போட்டி போடலாம் என்ற ஆசையில் எழுதிய கவிதையை ,ரசித்து பாராட்டியவர்கள் பலர் .http://venkatnagaraj.blogspot.com/2014/01/18.htmlஅவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் .இந்த வாய்ப்பை தந்து கவிதையையும் வெளியீடு செய்த வெங்கட் அண்ணாவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்க்ளும் .
ஒருவேளையில் கவிதையில் யாரைப்பார்தாவது உருக்கிப்போன உதவாக்கரையோ என்று யாரவது நினைத்தால் கம்பனி பொறுப்பு இல்லை:)))