25 February 2013

அந்தநாள் ஞாபகம் தொடர்..7


வணக்கம் உறவுகளே எல்லாரும் நலம் தானே ??

பாரிஸ் இந்த வாரம் பனிமழையைப் பொழிகின்றது !வீட்டில் இருந்து படம் பார்க்கலாம் என்றால் பொருளாதாரம் துரத்துகின்றது .ஓடி ஓடி உழைக்கணும் என்று:))

துரத்துகின்ற தேடலுக்கு இடையிலும் தொலையாத நினைவுகள் சில எனக்கும் உண்டு. அந்த நினைவுகளை ஞாபகமாக அந்த நாள் ஞாபகம்தொடராக தனிமரத்தில் பகிர்கின்றேன் .

நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் அவை பார்த்த திரையரங்குகள் என ஒரு ஆவனமாக சேமிக்கும் ஆசையின் விளைவுதான் இது !

வரலாறு முக்கியம் என்று சொல்லும் நாஞ்சில் மனோ உசிப்பியதன் நிலைதான் மக்கா :))))

இன்று எந்த திரையரங்கில் தனிமரம் வீசில் ஊதியது என்று அறிய ஆவலா  ?சரி .

கிளாங் -செந்தோஸா மலேசியா!



. புலம்பெய வெளிக்கிட்டு நான் எதிர்வு கொண்ட கசப்பானஅனுபவங்கள் பல ,இன்னும் சிலரை மன்னிக்க முடியாத நிலை  எனக்குண்டு! என்றாலும் கற்றதும் பெற்றதும் அதிகம் இந்த புலம்பெயர நான் கடந்துவந்த வழிப்பயணங்கள் .


அப்படி வந்த வழியிலும் தமிழ்சினிமா மீது இருக்கும் தனியாத மோகம் நாம் தங்குயிருந்த மலேசியாவில் பார்த்த படம் தான் இது!


மலேசியா எனக்கு பிடித்த நாடுகளில் ஒன்று அமைதியான நாடு ..நம்நாடுபோல போர் மேகம் சூழாத தேசம்.

கையில் எந்த அடையாள அட்டையும் இல்லாமல் சுதந்திரமாக எங்கேயும் எப்போதும் போகக்கூடிய உயிர் அச்சுறுத்தல் இல்லாத தேசம் .

எனக்கு இந்த மலேசியா அதிகம் பிடிக்கும் இந்த மலேசியாவில் 2001 நவம்பர் மாத முதல் வாரத்தில் தீபாவளி வெளியீடாக இந்தப்படம் வந்திருந்தது.!

துன்பத்திலும் சிரிக்கணும் என்ற பாடம் கற்றது இங்குதான் .பல நண்பர்கள் ஒன்றாக வந்து மீண்டும் தாயகம் சென்ற என் கடந்த காலத்தை தனிமரம் இங்கு பதிவு செய்து இருக்கின்றேன் :)))) !http://www.thanimaram.org/2011/02/tirumpiparkiran-3.html

ஆனால் படிக்காதவன் எழுத்துப்பிழை அதிகம் தான் மன்னிக்கவேண்டும்:)))

என் நட்பு வட்டத்தின் இன்னொரு அவலத்தையும் இங்கே பதிவு செய்து இருக்கின்றேன். எந்த கூச்சமும் இன்றி !


அதனால் தான் இந்தத் தொடரில் எனக்கு தொடர்பு இல்லை என்று சொல்ல முடிகின்றது:)))


இந்தப்பட்ம் பார்க்க் நாம் ஆசைப்பட்டது முக்கியம் சினேஹா மீதான ஈர்ப்புத்தான்!! என்னைப்போலவே என் நட்புக்களுக்கும் அப்போது சிம்ரன் சினேஹா ஒரு பிடித்தமான நடிகைகள் .


அத்தோடு தேவாவின் இசை கமலின் நடிப்பை நாம் அறிவோம் !அவருடன் அப்பாஸ் ஒன்று சேர்கின்றார் என்ற போது ஏற்பட்ட சினிமா மீதான தேடல் என பலதும் சேர்ந்த நிலையில் 7.50 மலேசியன் வெள்ளி கொடுத்து பார்த்த படம் .


 அதன் பின் கிளாங்கில் இருந்தே நம் குடியிருப்புக்கு பொடி நடையில் வந்தது சந்தோஸமும் துக்கமும் கொண்டது:)))

இன்று இந்த நட்பு வட்டங்கள் எங்கே இருக்கின்றார்களோ நான் அறியேன் ??

ஆனால் தனிமரம் பாரிஸில் சுதந்திரமாக இருப்பது!uகடவுளின் அனுக்கிரகம் என்பேன்!


மீண்டும் ஒரு திரையரங்கில் சந்திப்போம்:))))


23 February 2013

விழியில் வலி தந்தவனே!!!!!!-8



இனவாத ஆட்சியில் இருப்பைத் தக்கவைக்க எல்லோரும் தற்காப்பு பயிற்ச்சி பெறுவது தவிர்க்க முடியாத நிலை என்பதை பள்ளிக்காலத்திலேயே புரிந்துகொண்டவர்களில் ரகுவும் ஒருவன் அதனால் தான் ஆவலுடன் கராத்தே பயின்றான் அன்றும் அப்படித்தான்!வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுவிளையாட்டு மைதானத்தில் நடக்கும் கராத்தே வகுப்பில் தவராமல் கலந்துகொள்வான்.!


தென் இலங்கை ஆட்சியாளர்கள் சீமெந்தைக்கூட தடை செய்த பொருட்கள் என்ற பட்டியலில் இட்டதால் பள்ளியில் உடுப்பு மாற்றுவதற்கு ஒரு அறையிருக்கு உள்ளே இரண்டாக பிரித்திருந்தாலும் வாசல் ஒன்றுதான்.

உள்ளே ரகு உடுப்பு மாற்றிக்கொண்டு வாசலுக்கு வரும் போது அடைப்புக்கு மற்ற பக்கத்தில் பெண்மையின் அழகினை தரிசிக்கும் சிற்பம் போல சுகி தனது சட்டையை கழற்றி  விட்டு டீ சேர்ட்டை போட்டுக்கொண்டு இருந்தாள். விழிக்கும் இமைப்பொழுதில் ரகு பார்த்துவிட்டான் அவன் பார்த்ததை அவளும் பார்த்துவிட்டாள். என்ன சுகி சொல்லிட்டு உள்ள வந்திருக்கலாம் இல்லை நான் உள்ளே நிற்கின்றேன்.என்று ஒரு வார்த்தை!சொல்லி இருக்கலாமே?

 சொரி ரகு நான்அக்கம்பக்கம்  கவனிக்கவில்லை என்ன காராத்தே எல்லாம் பழகுறீங்க போல ஆர்ஜின் மாதிரி என்று தனது டீசேர்ட்டை போட்டாள்.ரகு எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான்

அவளும் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இங்கே அவளிடம் காமம் இல்லை தூய்மையான காதல் மட்டுமே இருந்தது.அவள் மனதில் காமம் இருந்திருந்தாள் இங்கே தவறு நடக்க சந்தர்ப்பம் இருந்தது.அவள் நினைத்திருந்தால்.  தான் உடுப்புமாற்றும் போது ரகு உள்ளே வந்தான் என்று சொல்லி அவனை அவமானப்படுத்தியிருக்க முடியும். இதுதான் சமயம் என்று பழிவாங்க முடியும்.அவள் அப்படி செய்யவில்லை.

சுகி நேராக நெட்போல் ப்ராக்டிஸ் நடக்கும் இடத்துக்கு சென்று நெட்போல் ப்ராக்டிஸில் ஈடுபட்டாள் விளையாட்டில் ஒன்ற முடியாத நிலையில் விழியினை காரத்தே வகுப்பை நோக்கினாள்  தோகை மயில் போல அது முடிய ரகு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட தயார் ஆன போது ஒரு நிமிசம் ரகு என்று மறித்தாள்!

என்ன என்பது போல அவளை அளந்தது அளபெடை விழிகள்! அவன் பாவனை செய்ய

என்ன ரகு என்னை புரிந்துகொள்ள மாட்டிங்களா ?!சரியான கஸ்டமா இருக்கு ?படிக்கமுடியலை ஒரே உங்க ஞாபகமாகதான் இருக்கு !

சிந்தனையை சிறைப்படுத்த முடியவில்லை சில் என்று உங்க நினைவுகள் சீண்டுது உங்க மீது ஏன் என் விழிகள் மனது மஞ்சம் கொள்ளுகின்றது. என்று தவம் போல தணிமையில் இருந்து யோசித்தாலும்  விடையில்லை நான் என்ன செய்யுறது ரகு நீங்களே சொல்லுங்க?

உங்களுக்கு எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியலை சுகி ?என் நிலமையை புரியாது உங்களுக்கு. சிட்டிசன் அஜித் போல என் பின்னாடி ஒரு கிராமம் இல்லை இருப்பது ஒரு கோவில் அதில் என் தந்தை தெய்வத்திருமகன் !

நானோ உத்தம புத்திரன் .உங்களை நான் லவ் பண்ணிணால் என்ன என்ன பிரச்சனை வரும் என்று ஒரு நிமிசம் யோசிச்சு பாருங்க?

 என்னைக்காதலிக்கும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது .எனக்கு எவ்வளவு பிரச்சனை வரும் .

புரிந்துகொள்ளுங்க.!

உங்க அப்பா நினைச்சால் விவசாயி மகனை வீதியில் விட்டு நாடோடி போல என்னை என்னவேணும் என்றாலும் செய்யலாம் .

நிச்சயம் இந்தக்காதல் பூவே உனக்காகப் போல சரிவராது .ப்ளீஸ் இதுக்கு மேல என்னால் தெளிவாக புரியவைக்கமுடியாது.இத்தோட விட்டுவிடுங்கள் கவிதை பாடும் அலைகள் அல்ல இந்தக்காதல்!

ஏன் ரகு  நாங்கெல்லாம் விரும்ப கூடாதா ?என் அப்பா பெரிய ஆளா இருக்கலாம் அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்.!

இப்பவா நாம கலியாணம் கட்ட போறமா ?உங்கள் படிப்பு முடிய,என் படிப்பு முடிய அதுக்குள்ள எவ்வளவு மாற்றம் வருதோ?

இந்த மண்ணில் மரணங்கள் மலிந்த பூமியில் மனங்களின் ஆசைகளுக்கு இனவாதம் சங்காரம் செய்யுமோ யார் அறிவார்?? 

சிலவேளை எங்க வீட்டில் ஓக்கே சொல்லாம் இல்லையா ?

எனவே எங்க அப்பா நம் காதலை ஏற்றுக்கொள்ளவும் கூடும்!

நல்லாயோசிச்சு சொல்லுங்கண்ணா. என்று சொல்லிவிட்டு அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றாள்!


(தொடரும்)
I

22 February 2013

வாங்க குடிப்போம்.!!!!!!



முன்பணிக்காலத்தில் பாரிஸ் வாழ்க்கை இந்த வருடம் அதிக பனிமழையை கொண்டு வந்த நிலையில் தனிமரம் தனிக்குடித்தனம் தொடங்கிய நிலையில் !

தனிமரம் தாங்குமா ,,???????????????ஹீஈஈஈஈஈஈஈஈ:)))


ஐபோனின் வருகை சும்மா இருந்த நானும் .தனிமரம் என்று அறிமுகம் ஆகி அன்பாகவும் ,வம்பாகவும் வலையில் வந்த என் ரயில் பயணம் யார் கண்பட்டதோ வழிப்பறியில் நடந்த இழுபறியில்  கைபேசியை களவு கொடுக்காமல் காப்பாற்றினாலும்,கண்ணில் காயம் வராமல் இருக்க முடியாதநிலை கடந்த மாதம்!

 இந்த நிலையிலும் விடாது வேட்டை :)) என்று முகநூல் என்று என் முகத்தை இன்னும் என்ன தோழா குழுமத்தில் கும்மியில் கலகலத்தது !மூன்றுநாள் ஓய்வில் ஹேமாவின் ஆலோசனைப்பாடல்கள் ஒரு புறம் என்றால் இந்த வாசிப்பு இன்னொரு புறம் ஒரு கண்ணில் தானே வலி மறுகண்ணில் இந்த தொடர் நினைப்பு :)))) !

கண்திருஸ்ட்டி போக்க  கைபேசிக்கு சுத்திப்போட வாங்கிய பொருள்தான் இந்த பூசனிக்காய்:))))


கண்ணில் வலி தூக்கம் இல்லை என்ன செய்வது எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே:)))

என்ன செய்வது எப்படி வீட்டுக்காரி வரும் நேரத்தில் டூயட் பாடுவது !


என் மேல் அதிகாரி சொன்னார் மாப்பூ நீ சூப் குடி என்று இதுதாங்க அது:)))

 தேவையான பொருட்கள்
ஒரு பூசனிக்காய்த் துண்டு
ஒரு வெங்காயம்
ஒரு தேக்கரண்டி உப்பு
ஒரு கப் தண்ணீர்
ஒரு கப் தடித்த பால்(creme liquid)
இரண்டு கரண்டி எண்ணெய்(விரும்பிய)
ஒரு சட்டி
ஒரு கரண்டி
ஒரு அடுப்பு
செய்முறை-


முதலில் பூசனியின் வெளிப்புறத்தையும் ,உள்புறத்தின் வழுவழுப்பையும் அகற்றிவிட்டு சிறுசிறு துண்டாக வெட்டவும். ஒரு வெங்காயத்தையும் வெட்டவும் . பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து முதலில் எண்ணெய்யை சூடாக்கவும் .சூடான எண்ணெய் மீது பூசனியையும் வெங்காயத்தையும் கொட்டுங்கள்!சட்டிக்குள் அடுப்பில் அல்ல:)))


அதன் பின் சிறிது நேரத்தில் உப்பினையும் தண்ணீரையும் சேர்த்து சட்டியில் ஊற்றுங்கள் !30 நிமிடங்கள் கொதிக்கவிட்ட பின் அடுப்பில் இருந்து இறக்கவும் அதன் பின் மிக்சியில் அல்லது கிரேண்டரில் அடிக்கவும் அடிக்கும் போது தடித்த பால் சேர்த்த பின் நீங்களும் குடிக்கலாம் பூசனிக்காய் சூப்!




19 February 2013

விழியில் வலி தந்தவனே-7




இனவாத ஆட்சியினர் சமாதான நாடகத்தில் நடித்துக்கொண்டே முக்கிய போராளிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துக்கின்ற செயல் பாட்டில் மும்மரமாக ஆழ ஊடுருவும் படையினர் மூலம் ஆங்கங்கே பல இடங்களில் கிளைமோர் தாக்குதல் நடத்துகின்ற நிலையை கண்டிக்க வேண்டியவர்கள் .பல கதைகள் பேசிக்கொண்டு இருந்த நிலையை பார்த்துக்கொண்டு இருக்கும் நம் மக்கள் !உழவு இயந்திரத்தில் வரும் போது மிக அவதானமாக பாதையோரம் விழியினை கூர்மையாக்கி  தொலைநோக்குவது இயல்பான ஒன்று.

 அப்படித்தான் ரகுவும் உழவு இயந்திரத்தினைச் செலுத்திய வண்ணம் வீதியை நோட்டம் இட்ட போது! பூலான் தேவியின் வரலாற்றில் வரும் சாம்பல் பள்ளத்தாக்கு கதை படித்ததில் பிடித்தது போல 
ஒரு சாம்பல் நிற டீ சேர்ட்டும் கறுப்பு பாவாடையையும் அணிந்த ஒரு  வன்னிமயில் குடையுடன் சுகிவீட்டு  கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றால்!

 உள்ளே செல்லும் போது வீதியை ஒரு முறை முன் எச்சரிக்கையில் அவளும் ஒரு சிறையில் பூத்த சின்னமலர் போல நோக்கினாள்.

ரகுவும் அப்போது கிட்ட வந்துவிட்டான். அது சுகிதான்! ரகுவை ஏறிட்டு பார்த்தாள்!


.ரகு அவளை கவனித்தாலும் கவனிக்காதது போல  உழவு இயந்திரத்தை ஓட்டிக்கொண்டு சென்றான்.

ஆனால் சிறிது தூரம் போய் திரும்பி பார்த்தான் போகும் பாதை சரிதானா? என்பது போல சுகி அப்போது பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.விழியில் வலி தந்தவனே என்பது போல

அடுத்த நாள் பாடசாலையில் 
"நில்லுங்க ரகு உங்களிடம் கதைக்கணும் "இம்முறை சுகியின் தோழிகள் யாரையும் காணவில்லை. அவள்தான் அவன் எதிரே நின்றுகொண்டு இருந்தாள்.ஒற்றை ரோஜா போல

ஏன் ரகு என்னை பிடிக்கலை என்று சொல்லுறீங்க ?பார்த்தால் கூட பார்காதது கண்ணெதிரே தோன்றினால் பிரசாந்த்  போல போறீங்க உங்களை எனக்கு நல்லா பிடிக்கும். பைத்தியம் ஆனேன் ரகு !
நல்லா யோசிச்சு ஒரு பதிலை சொல்லுங்க என்று அழுதுகொண்டே போய்விட்டாள்.!

விழியில் வந்தவள் வழியில் அழுகின்றாள்
வில்லங்கம் காதல்  விடலைப் பருவத்தில்
விவசாயி மகன் இவன் அவள் 
வீட்டில்
விசயம் தெரிந்தால் வீட்டோ போல
விரைந்து வரும் வெளிக்கிடு
விடுதலைக்கு !

ரகு தன் மனசாட்சியை தானே கேட்டுக்கொண்டான் உண்மையிலே இவள் என்னை விரும்புகின்றாள் தான் போல. !

அப்படி என்னில் என்ன இருக்கு பெண்கள் பார்த்ததும் மயங்கிவிழும் அளவுக்கு நான் பிரசாந்த் போல மன்மதனும் இல்லை, வசதிகள் படைத்த அம்பானியின் வாரிசு இளைஞனும் இல்லை ,படிப்பில் ஸ்டூடன் நம்பர் வன் போலவும் இல்லை.!

ஆனாலும் ஒரு பெண் என்னைக் காதலிக்கின்றாள் அதுவும் மிகவும் அழகான செவ்வரளிப்பூப்போல ஒரு பெண்.


இதுதான் உண்மையான அன்பு என்பதா?ஒருவேளை நான் இதை மிஸ்பண்ணுகின்றேனோ?

ரகுவிற்கு அவளது காதலை ஏற்க தடையாக இருக்கும் ஒரே ஒரு காரணி அவள் குடும்பப்பின்னனி மட்டுமே அரசியலே.. அதன் சூழல்!



ரகுவிற்கு பிடித்தமான ஒருவிடயம் புரூஸ்லி போல கராத்தே அதை முறைப்படி கற்றுவருபவன்.வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடக்கும் கராத்தே வகுப்பில் தவராமல் கலந்துகொள்வான்.அதில் கலந்து கொள்ளாவிட்டால் மற்றவர்கள் சிரிப்பார்கள் பயந்தவன் உயிர் வாழமாட்டான் என்று  !!என்றாலும் இந்த வன்னி பூமியில் கராத்தே உயிர் காக்கும் சில நேரங்களில் இனவாதிகளின் வக்கிரகத்தில் இருந்து என்பதை ஈழம் பதிவு செய்து இருப்பதையும் மறந்தவன் இல்லை ரகு!!!

 தொடரும்.........

17 February 2013

விழியில் வலி தந்தவனே! ஆறு

அன்பு என்ற பாசக்கயிறுக்கு கத்தியாக இருப்பது  அதிகாரம் .இந்த அதிகாரம் பல வழிகளில் கத்தியாக குடும்பம் என்ற வட்டத்தில் இருந்து ஊர் ,அது கடந்து நகரம் போய் ,மாநகரம் கடந்து ,தலைநகரம் கலந்து ,தேசம் என்று காதலுக்கு வரும் கத்திகளின் அதிகாரம் என்ன என்று அறியாதவன் இல்லை ரகு !

எந்த நிலையிலும் தன் ஆசையால் தந்தை என்ற மரகத வீணையை சுரம் பிரிந்த தந்தி போல உடைப்பது சுகிமீதான  காதலும் அதன் பின் விளைவான அதிகார ஆட்சியும் என்று முன்கூட்டிய முன் உணர்வினால் தான்  அன்று பொங்கியது!

ஒருவேளை அவள் சாதாரண ஒரு ஏழைவீட்டு இராஜகுமாரி போல இருந்திருந்தால் ரகுவும் அவள் காதலை ஏற்றுக்கொண்டு இருக்கலாம் !

ஆனால் சும்மா அவளை காதலிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு பின் குடும்ப பிரச்சனை என்று அவள் விட்டுவிட்டு போனாலோ ,இல்லை அவளது குடும்பம் இவனை தண்டித்தாலோ ,வேதனையும் வலியும் இவனுக்கு மட்டும் இல்லை அந்த அபலைப்பெண்ணுக்கும் சுஜாதாவின் அனித்தாவின் காதல்கள் நூல் போலத்தான் !எனவே அவள் தன்னை பயந்த கோழை என்று நினைதாலும் பரவாயில்லை காதல் தேன் என்ற வலையில் போய் சிலந்திக்கூட்டில் சிக்க அவன் தயார் இல்லை.

இந்த காதல் செய்யும் மாயம்தான் என்ன ஏன் ஒரு சாமானியனுக்கும் அதிகாரவர்கத்தினருக்கும் முடிச்சு போடுகின்றது ஒருவேளை பிரச்சனைகளை பார்க்காத ,பிரிவுகளை கண்டு மனம் உருகி ,மனம் புலம்பி உடைந்த நிலாக்கள் போல காதல் சுவாரஸ்யமாக இருக்காது என்பதா??

கடவுளின் படைப்பில் தான் எத்தனை முடிச்சுக்களை போடுகின்றான் சில முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுகின்றன. சில வாழ்நாள் முழுவதும் அவிழ்க்கப்படாமலே போய்விடுகின்றன்.

அடுத்துவரும் நாட்களில் ரகுவிற்கு சுகியை பார்க்க பாவமாக இருந்தது .எப்போதும் சந்தோசமாக பூஞ்சோலைப் பூவாக  திரியும் அவள் முகத்தில் ஆங்காடியில் விலைபோகாத இந்தப்பூ விற்பனைக்கு அல்ல !

விலை அதிகம்  என்பது போல சந்தோசம் இல்லை சோகம் குடியேறியிருந்தது.அந்த சோகத்துக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்வு வேறு அவனுக்கு ,ஆனாலும் ஆரம்பத்திலே  காதல் நதிக்கு அணைகட்டியதில் சிறந்தது என்று நினைத்துக்கொண்டான்.

 முதல் யாசிப்பையும் முதல் ஸ்பரிஸத்தையும் என்றும் மறக்கமுடியாது என்று சொல்வார்கள். அதே போல சுகிக்கு அவனை மறக்கமுடியவில்லை.


இதயத்தில் காதல் தீபம் ஏற்றியவனே
என் உணர்வுகளை பறித்தவனே
ஏன் என்னை சிதைக்கின்றாய்
அனுதினம் உன் முகம் காண தவிக்கும் ஜீவனை
எழு ஸ்வரம் போல 
ஏன்  தீண்ட மறுக்கின்றாய்?

என்  தவிப்புக்களை அறிந்தும் ஏன்
அறியாத துவாரகைக் கண்ணன் போல நடிக்கின்றாய்?
நீ இல்லை என்றால் என் 
இரவுக்கு ஏது பகல்!

சுவாரசியமானவனே சுகியின் நிலையை
புரிந்துகொள்ளடா!!!

(ரகு சுகியின் காதலை மறுத்த போது சுகி எழுதிய கவிதை  இதை தோழி சுவாதி என்பதால் ரகுவிடம் காட்டிய போது ரகுவினால்   ஒன்றும் சொல்ல முடியவில்லை.)


இதயம் பட முரளி போல இருந்தான்!

அதன் பின் அன்று ஒரு நாள் நல்ல மழைக்காலம் சென்னையில் ஒரு மழைக்காலம் போல வன்னியில்!!

பாடசாலை விடுமுறை நாள் என்பதால் ரகு தனது தந்தைக்கு உதவியாக அவர்களது தாய் பூமியான சந்ததியை வாழவைத்துக்கொண்டு இருக்கும்  வயலுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தான்.நேரம் பின்னேரம் ஜந்து இல்லை ஜந்து அரை இருக்கும் மெலிதான கார்கால கும்மிருட்டு  வரும்போது ரகு இந்தியாவில் புகழ்மிக்க மஹேந்திரா தயாரிப்பு உழவு இயந்திரத்தில்தங்கள் வயலில் வேலை செய்யும் சனத்தை ஏற்றிக்கொண்டு சின்னக் கவுண்டர் போல வந்துகொண்டு இருந்தான் !இந்தப் பாதையில் தான் சுகியின் வீடும் இருக்கின்றது!


தொடரும்.......................

பின்னேரம்-மாலை நேரம்/சாயந்தரம்!
I

13 February 2013

காதலர் தின அனுபவம்!


வணக்கம் உறவுகளே இது காதல் மாதம் என்று சமையல் கடைமுதல் அங்காடி வரை அழகிய வார்த்தைகளில் தூங்கும் என் போன்ற தூங்கும் அப்பாவிகளையும் உசுப்புகின்றார்கள்:)))


புதுமாப்பிள்ளை உன் காதல் கதை என்ன என்று  ஒருத்தன் இணையத்தில் முகம் தெரியாமல் வந்து என்ன பாஸ் !
உருகும் காதலியா ?தொலைந்தவன் காதலா ?இல்லை விழியில் வலி தந்தவனே ?
இல்லை இனி எழுதும் தொடர் தான் உண்மையான உங்க அனுபவமா ?

என்று வம்பில் மாட்டிவிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு தெரியாது நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போன கதை :))) 
இருந்தாலும் அவன் கேட்ட காதலர் தின கடந்த கால அனுபவம் சொல்லணும் என்று எனக்கும் காதல் வந்த கதை இது !

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கோ !அது 1996 அப்ப  படித்துக்கொண்டு இருந்தேன் இனிப்படிப்பு வேண்டாம் இத்தனை காலம் கடைசி வாங்கில் இருந்து கணக்கு வாத்தியார் கருக்குமட்டையால் அடித்து உன் கையில் காயம் பட்டு வரும் நிலையை விட்டுவிட்டு உதவாக்கரையாக இருக்காமல் உருப்படு என்று என்னையும் வியாபாரக்கடைக்கு வா என்று என் மாமா சொல்லியதை நம்பி என் தாயும்  வவுனியா அனுப்பிய நிலையில்  !


அங்கு வந்து நான் அடுத்த கட்டம் என்ன என்று காத்து இருந்த போது தான் ஊர் தாண்டி வந்தால் கட்டுப்பாடு போய்விட்டது எங்க பார்த்தாலும் காதலர் தினம் என்று பேச்சு என் நண்பர்களும் சேர்ந்து கொள்ள காலையும் மாலையும் கற்குழியில் குந்தியிருக்கலாம் என்றால் ஒழுங்கா படிக்கவும் இல்லை இதில் வேற உதவாக்கரைக்கு ஒரு காதல் ஒரு கேடா என்று எங்க மாமா கையால் அடித்தால் காயம் வந்து விடும் வீட்டில் அடித்த்தால் விடுதலைக்கு போய்விடுவானோ என்று நினைத்தார் போல நானோ அடுத்த காதலர்தினம்  வருவதற்கு முன் எப்படியும் அன்று  கேட்டுவிடவேண்டும் என்று நினைத்ததுதில் என்ன பிழை ?? கேட்டது பிழை என்று தேஞ்ச (துடைப்பத்தால்)தும்புத்தடியால்  முதுகில் போட்டார் பாருங்க !

தாங்க முடியாத காதல் வலி !!

முடிவு செய்தேன் நான் கட்டினால் இவளத்தான் கட்டணும் .என்று நினைக்கவில்லை .உருகுதே மருகுதே என்று சொல்லவில்லை .காதல் வந்ததும் காதலை யாருக்கும் என்றோ ?காண்பதில் எல்லாம் தலைகீழ் தோன்றம் என்றோ ?

நினைத்து நினைத்துப் பார்தேன் என்றோ ? பாடவில்லையே !

பார்த்தேன் பார்த்தேன் என்றும் ஏனோ எனக்குள் .

உன்னைப் பார்த்த பின் நானாக இல்லையே .என்று ஒரு உணர்ச்சிப் போராட்டம்.

 அவள் ஒன்றும் அப்படி அழகில்லை கொடியிலே மல்லிகைப் பூ ஆனால் சுமார் தேவதை .

அவள் அப்படித்தான் !

நானே பணக்காரன் இல்லை .நானே ராஜா நானே மந்திரி போல என் வழி தனி
வழி .அவளிடம் சென்றேன் அன்பே அன்பே என்னைக் கொள்ளாதே !

சொல்லிவிடு வெண்ணிநிலவே ..உன்னைக்கொடு என்னைத் தருவேன் .
காதல் சுகமானது .

நானும் உன்னை நேசிக்கின்றேன் .நீயோ பாணுபிரியாபோலவோ ,சினேஹா போலவோ ,சிங்கரவேலன் குஸ்பூ போலவோ இல்லை .

என் நெஞ்சைக்கிள்ளாதே என்றேன் அவளிடம் .

அவளோ காதலர் தினத்தில் 'உள்ளத்தை அள்ளித் தந்தா'  நீ ஒரு கோடீஸ்வரன்  !அவள் அறிமுகம் ஆன  அந்த மலைக்காட்சி இன்னும் மனதில் நெஞ்சில் ஆடும் பூ  .

இன்னொரு நண்பன் எனக்கும் கிடைத்தது ம் அந்த மலையகத்தில் .அதை முதலில் சொன்னேன்  அவளிடம். பின்  உனக்கு 18 எனக்கு 20 .

சொல்லாயோ வாய் திறந்து ,பொத்தி வைச்சுக்கோ எந்தன் அன்பு மனசை நினைவுச்சின்னம் மாதிரி என்றேன் .

போடாப் போடா புண்ணாக்கு என்றால் அவள் அன்புத்தம்பி .

காதல் வந்தால் காதலர் தினத்தில் என்னவிலை அழகே என்று தொடங்கி உருகி உருகி உருகும் காதலிபோல இல்லாமல் .

வைரமுத்துவைக் கொண்டு எழுதி அதில் "படைத்தான் உன்னையே மலைத்தேன் தினம் தினம் உன்னை நினைக்கின்றேன்  என்று மயங்கிய கதையை கதிர் அண்ணாவிடம் சொல்ல  அவர்  ரகுமானிடம் சென்றதன் விளைவு காதலர் தினம் வந்துவிட்டது .

பிறகு என்ன தாண்டியார் ஆட்டம் ஆடி எனக்கும் காதலர் தினம் பிடிக்கும் :)))

.நான் அவளுக்கு பூக்கொடுக்கவில்லை பாடல்  தந்தால் வாங்கிக்கொண்டு ஊரைவிட்டு நாம் ஓடிவந்தாலும் உள்ளத்திலும் ,இதயத்திலும் இன்னும் தொடர்கின்றது காதலர் தினப் பாட்டுத் தான் எனக்கும் பிடிக்கும் கேட்டுப் பாருங்கள்!:)))))))!

தனிமரமும் மொக்கை போடும் :)))))))

இனிய துணையைத் தேடுங்கள் உனக்கென நானும் எனக்கென  நீயும் சேர்தே இருப்போம் இந்தப்பிறவியில்  என்ற நிஜமான அன்புடன்!

இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!!

கற்குழி- இலங்கை வவுனியாவில் இருக்கும் ஒரு கிராமம்!ம்ம்ம்ம்