26 April 2020

கவிதையும் காணமும்!

முன்னர் இங்கே--https://thanimaramnesan.blogspot.com/2015/04/blog-post_43.html

-------------------------------------------------------------
உன்னையே சகி என்று
உழுத கதைகளில்
உலகமே உற்றுக் கேட்டது!
உண்மையில் யார் அவள்? !
ஊமையின் பாடல் போல,
உறங்காத நினைவுகளுடன்,
உயர்படிப்பு 
உறுதியுடனும் நாம் சிந்திய
உதட்டோர முத்தம் எல்லாம்!
ஊரில் தணிக்கைச் செய்திபோல
உருகும் காதலி என்றெல்லாம்,
உருமறைப்பில் திமிருடன்,
உனக்கு விசா இல்லை!


உதறிய உன்னக்கும்
உற்றதுனைதேடி
உங்கப்பர்பரும்!
ஊற்றிய பிரெஞ்சு வைன் போலவே
உள்ளிருப்புகாலத்தில்
உலகமேதூற்றும்!
ஊழ்பட்ட கொர்னாவில் இருந்து நீயும்
உயிர்ப்புடன் வருவாய் என்ற 
உயரியகனவுடன் 
உன்னோடு 
உடரட்டைக் காதலன்
உறங்காத விழிகளுடன் நானும்!
------------------------------------------------------------------------------------------!

யாவும்கற்பனை)

பல பாடல்கள் நாளாந்தம் காற்றலையில் ஒலியாக வெளி வந்தாலும்! படமாகி வெளிவராது போகும் சிலபடங்களில் இந்த என் உயிர்க்காதலி படம் ஒன்று வெளியாக வில்லை. ஆனால் பாடல் இன்றும் இலங்கை வானொலிக்கூடத்தில் இருக்கின்றது.ஆனாலும் சமூகதளமான யூட்டிப்பில் வேற ஒருவர் பதிவேற்றிய காட்சியே இப்பாடல் ஒலி/ஒளியாக இந்த கொர்னா காலத்தில் பார்த்து ரசிக்க!

இப்போதெல்லாம் இலங்கை வானொலி  இணையத்தில் ஓங்கி ஒலிக்கின்றது. தாய்வீட்டில் இப்போது முகநூல் மூலமும் பாடல் கேட்கலாம் வாருங்கள்.!slbc.lk---

https://www.facebook.com/SLBCThendralFM/?epa=SEARCH_BOX



19 April 2020

கொர்னா என்ன சொல்லுது?!!!

கொர்னாவின்  சதியில்   சிக்குண்டு  வீட்டில்  சிதறிக்கிடக்கும் உறவுகளே நலமாஎன்றுகேட்கும் ஆவலில்லைஎன்றாலும் சம்பிரதாயம்  என்ற  ஒன்று தென்கொரியா  தேர்தல் போல நடக்கும்! எல்லோரும் நலம்தானே

நீண்ட இடைவெளி தனிமரத்தின் முகத்திரையை கூகில் ஆண்டவர்தனிமரம்.org,/தனிமரம்கொம்கிழித்து தொங்கவிட்டாலும்!தனிமரம் நேசன் என்ற முகம் இன்னும் முகநூலில் உறவுகளுடன் முத்தெடுத்தாலும்வலை என்ற ஆலமரத்தின்  ஊஞ்சல்  ஆனந்தம் பட சினேஹாபோல  என் கற்பனை எழுத்துக்கு  விளக்கேற்றும்  இதய  தேவதை போல!)))

தனிமரம் கொஞ்சம் பொருளாதார தேடல் மாற்றல்கள்(பழைய உணவகம் மூடிவிட்டார்கள்) . ,இல்லறத்தில் புதல்வர்களின்  ஐபோன்  எங்களுக்கே என்ற  சீண்டல்கள்நிலையற்ற தொழில் ஓய்வுநாட்கள் என்று விரட்டினாலும் இந்தப்பக்கம்  வர  விரும்புகின்றேன்!)))


எதுவென்றாலும்  முன்னர்  போல  தொடர் கதை  எழுதும்  அமைதியின்மை  பிரதான  மூலக்காரணம்என்றாலும்  விரைவில்   பாரில்  எங்கும்   கொர்னா  நீங்கும்   என்ற   நம்பிக்கை  போல  தனிமரமும் தொடரினை தாங்கிவரும்!


       எங்கே  ?   உன்சத்தம்,சந்தடி இல்லையே   என்று பாசத்துடன்,நேசத்துடன்நேர்மையுடன்,நெகிழ்ச்சியுடன் இன்னும் உங்களை பார்க்கும் ஆவலில் இருக்கின்றோம்  என்ற உங்களின் நலம் அறியும் தனிப்பட்ட  தேடல்  மின்னஞ்சல்களுக்கு எல்லாம் இந்தவழிப்போக்கன் தனித்தனியாக  நன்றி சொல்லஆசைதான்!

எனினும் பொதுவான தனிமரத்தில் ஒருபதிவு போட்டால் என்னையும் நேசிப்போர்  எந்தக்கொர்னாவும் இவனைத்தீண்டவில்லை என்ற ஒருநம்பிக்கைக்கீற்றை   உணர்ந்துகொள்வார்கள்.)) 

பாரிஸ் சினேஹா மன்றம் இன்னும்  துடிப்புடன்  இருக்குதனிமரம்வலை  10 ஆண்டிலும்  சோடை போகவில்லை  எங்களை மீறியதால்  என்ற  இருத்தல்  பற்றிய       திமிர்   இன்னும்         இன்னும்    நலமுடன்  இருக்கின்றோம்  !)))இலங்கையில்   விடுவிக்கப்படாத சிறைக்கைதிகள்  போல   என்பது   எல்லாம்  இலங்கைத்தேர்தல்  பிரச்சாரம்  போல  கையில்  எடுக்காத  அரசியல்போல   என்றாலும்!

தனிமரம்  இன்னும்  வலையை  உயிர்ப்புடன்   சில் சில்  சில்லெல்லா  பாடல்போலமெல்லிசையாகஉன்னை  நினைச்சு   நினைச்சு   உருக்கிப்போன  உருகும்  பிரெஞ்சுக்காதலிபோல  என்றெல்லாம்   பீலாவிட   நேரமில்லை.)))

 ஆயினும்  ,தனிமரம் வலையில்  ஒரு தோப்பு  அன்பில்    என்பதை   புதியவர்களுக்கும்புரிந்துகொள்ளவும்,தெரிந்துகொள்ளவும்ஒருகல்வெட்டு  போல  தனிமரம்  காற்றலையில்  கடிபட்டுசிதைபட்டு,காத்திருந்து,கடந்து  வந்த   பாதைகள்   எல்லாம்  இங்கே  பல  பதிவுகளாகதொடர்கதைகளாககவிதைப்பூக்களாக  ஒப்பீட்டில்  பல  எழுத்துப்பிழைஎன்னும்  ஒட்டறைகள்   இன்னும்   அம்மியில்  அரைத்த சம்பல்போல,சுவையுடன்  இருக்கு!

தேங்காய்ச்சம்பலில் புளிகூடவோ,புளியங்கொட்டைமேல்  இருக்கும் சம்பல்  அரைத்த உதவாகரையின்  கைக்கு  சாட்டையால்  சாத்தனும் என்ற  இலங்கை  காற்றலை ஆசைக்கிறுக்கல் சங்கதி   எல்லாம் எழுதும்  ஆர்வம்  இல்லை  இப்போதும்!


 எனக்குப்  பாடல்கேட்க  இப்போது  புலம்பெயர்தேசத்தில்  நேரம்இல்லை,!



 கொர்னாவிலும்  எங்ககடை வாடிக்கையாளர்களுக்குஎடுத்துச் செல்லவசதியாக  உணவகம்இயங்கின்றது!))) 

இப்படித்தான்  இதுவரை இருந்தேன்  உரங்கு/அத்தியாவசிய  சாமான்தட்டுப்பாடுகியூவரிசை/  பங்கீடு  எல்லாம்  உன்னைநினைத்து  படம்போல   பார்த்து  வளர்ந்தவர்களில்  தனிமரத்துக்கும்  நினைவுகள் பல இருக்கு.

அவை  எல்லாம்   என் வலையில்   பதிவு போல பொத்தி வச்ச மல்லிகை மொட்டு போலசிந்தாமல் சிதறாமல்!)) 

இயற்கையின்   நியதியோ?சீனாவின்  சதியோ?நவீன  தலைமுறையும்  ஈழத்தில்/ இனவாத  யுத்தம்    எப்படி  எல்லாம்  சிதைத்தது  மனித  உயிர்களை,உறவுகளை,என்பதை  புரியவைக்க  வந்த  புதியதென்றல்படப்பாடல்  போல   நாளைக்கும்  நிலவு  வரும்  நாமிருக்க  மாட்டோம்!இந்த  கொர்னாவைரஸ் தாக்கம்  நாம்அறியோம்!


ஆனாலும்  பாரிசில்  இறப்பு  வீதமும்  அதிகம்  என்று     இதுவரை   19/04/2020 ஊடங்கள்  பதிவு செய்து  கொண்டேயிருக்கின்றது 19 323.!

எல்லோரும்  நலமுடன்   இருக்க   ஒன்றாய்  பிரார்த்திப்போம்!என்பதே   இன்றைய   காலத்தின்  தாரக  மந்திரம்

விரைவில்  எல்லோர்  வலையிலும்  கும்மி அடித்தது,குதர்க்கம்,பேசி,விடிய  விடிய  சண்டை போட்டாலும் அன்பில்  விட்டுப்பிரியாத  வலைச் சொந்தங்களின்  இதயவாசல்தேடி  தனிமரம்  வருவேன்!

என்ற   நம்பிக்கையுடனும்,  பிரார்த்தனைகளும்!

-----19/04/2020---------------------------------------------------------------------------------

——பெட்டிக்கடை——-


காத்திருப்பு போல ஒரு 
கடினம் காதலிலும் இல்லை!
கடைசி நேரப் பேரூந்துபோல!
கடைசி நேர நேயர் விருப்பம் போல
கடைமூடிய வாடிக்கையாளர்முகம்போல!
காசு இருந்தும்!
கடைசியாசைபோல!
கால்போத்தல் வைன்இல்லையே!
காலையில் எத்தனைமணிக்கு  ?,
கடைதிறப்பாய்?
கட்டிலில் ஒலிக்கும்
காத்தால கைப்பேசிக்கும்,
கனவுகள் உண்டு!  
காத்திருங்கள்!! இன்னும்
கால்மணி நேரத்தில்  வந்திடுவேன்!
கடை திறப்புநேரம் நெருங்கின்றது!))
கடிந்துகொள்கின்றாள்!
கட்டையில் போகும்வரை
காதுகொடுத்துகேட்பதில்லை நீஎன்று!
கடமை முக்கியம்
கடைகளும் ஒருசேவையே!
(யாவும்கற்பனை)