வணக்கம் உறவுகளே !!
மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில் சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து விட்டு ரசிப்பேன் சின்னவயதில்! அப்போது இருந்து சந்தனமேடை ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் .
இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன்.
வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது.
அப்போது நான் பார்த்த் கேட்ட விடயங்களை என் இரண்டாவது தொடரில் தொடர்கின்றேன் .
எனக்கும் ரயிலுக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் போல தொடர்ந்து பல பயணம் ரயிலுலோடு !
பாரிசிலும் நான் ரயிலில் சந்தித்த காதல் கதையை தொடராக தருவேன் கொஞ்சம் விடுமுறையின் பின்!
ரயிலில் அதுவும் யாழ்தேவியில் ஒரு பக்கத்தில் இருந்து உடரட்டையில் இன்னொரு பக்கத்திற்கு வியாபாரம் காரணமாகவும் உறவுகளைச் சந்திக்கவும் என் பயணித்த நாட்கள் அதிகாலையில் யாழ்தேவியிலும் வார இறுதியில் உடரட்டையிலும் என ஓடியது.
விற்பனைத் தொழில் தந்த அனுபவம் மறக்க முடியாது .
தொழில் தாண்டி நான் ஏன் அதிகம் உரடட்டைக்கும் யாழ்தேவியிலும் பயனித்தேன் என்பதைச் சொல்லும் ஒரு பாடல் கடந்தவாரத்தில் இருந்து இடைவிடாது ஒலிக்கின்றது என் காதில்!கூடவே குத்தாட்டம் மனசுக்குள்!
கந்தப்பு ஜெயந்தன் இசையில் அவரோடு சேர்ந்து பாடியிருக்கும் பாடகி பிரதா,ஜெயரூபன் .
கவிதைக்குச் சொந்தக்காரர்-திரு. T.சதீஸ்காந்த.
பாடல் ஒலி/ஒளி மிகவும் எனக்கு பிடித்திருக்கின்றது .காட்சி அமைப்பில் பிரியந்தன். செய்திருக்கும் புதுமை. காட்சியில் இருக்கும் இயல்பு மீண்டும் நம்மவர்களின் திறமையை பட்டொளிகாட்டி மின்ன வைக்கின்றது.
காந்தனின் தொடர் இசைப்பயணத்தில் இந்தப்பாடலும் ஈழத்து இசையில் இந்தப்பாடல் இசையின் தாக்கம் இனி பலரையும் மெல்லிசை குறுவட்டு செய்வதற்கு தூண்டு கோலாக அமையும் என்பது என் எண்ணம்.
ஈழத்து இசைக்கு ஊடகங்கள் காட்டும் தொடர் அசமந்தப்போக்கு என்று தான் தீருமோ ???
என்றாலும் ஜெயந்தனின் இந்தப் பாடல் சமுகதளமான முகநூலிலும்,யூத்டூயூப்பிலும் இணைந்து இருப்பதால் நம்மவர் இசையை விரும்பும் உள்ளங்களுக்கு இப்போதைய நவீன வசதி இன்னொரு தளத்தினை அல்லது சந்தையை திறந்து விட்டு இருக்கின்றது.
இலத்திரனிய ஊடகங்கள் தொடர்ந்து ஒலி/ஒளி செய்து மக்களிடம் போக வழிநடத்த தயங்கினாலும் முகநூல் ஊடாக பலர் கண்டு களிக்கிறார்கள்.
அதனால் பயன் பெற்றவனில் நானும் ஒருவருன்!
அதன் பயனை வலையுலகம் கான கண்டுகளுக்கட்டும் உறவுகள்.
பாடல் வரிகள் என்னை மீளவும் ஊர் பெருமைக்கு சிக்க வைக்கின்றது
.பாடலில் என் ஊரும் வருகின்றது கேட்பது தனி சுகம் .
கண்ணாம்பூச்சி மட்டுமா விளையாடினோம் ம்ம்ம் .
அதையும் தாண்டி.
"நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை. "ரசிக்கின்றேன் பலதரம் கற்பனை ஊற்றை
".உன் காதல் என்ற சிறையில் நான் ஆயுள் கைதியானேன் ""
கவிதையின் வாசம் .
நாம் ஊர் விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண்வாசம் மனம் விட்டுப் போகாதே !!
யார் எது சொன்னாலும் (பிரதேசவாதம்) என்றாலும் அதில் இருக்கும் தனித்துவம் வார்த்தையில் அடக்க முடியாது.
பிரியந்தனின் படத் தொகுப்பு பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.
பாடல் முடிவில் நானும் இந்த புலம்பெயர் வாழ்வை விட்டு ஊர் ஓடிவிட மனம் துடிக்குது. எனக்கா காத்திருக்கும் என் காதல் மனைவியை கான ஆனால்!!!!ம்ம்ம்ம்ம்
கேட்டு ரசியுங்கள் நம் படைப்பை!
ஜெயந்தனின் முகநூல் இதோ-Facebook link- http://www.facebook.com/pages/MusicDirector-K-Jeyanthan/195797620434975
மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில் சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து விட்டு ரசிப்பேன் சின்னவயதில்! அப்போது இருந்து சந்தனமேடை ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் .
இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன்.
வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது.
அப்போது நான் பார்த்த் கேட்ட விடயங்களை என் இரண்டாவது தொடரில் தொடர்கின்றேன் .
எனக்கும் ரயிலுக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் போல தொடர்ந்து பல பயணம் ரயிலுலோடு !
பாரிசிலும் நான் ரயிலில் சந்தித்த காதல் கதையை தொடராக தருவேன் கொஞ்சம் விடுமுறையின் பின்!
ரயிலில் அதுவும் யாழ்தேவியில் ஒரு பக்கத்தில் இருந்து உடரட்டையில் இன்னொரு பக்கத்திற்கு வியாபாரம் காரணமாகவும் உறவுகளைச் சந்திக்கவும் என் பயணித்த நாட்கள் அதிகாலையில் யாழ்தேவியிலும் வார இறுதியில் உடரட்டையிலும் என ஓடியது.
விற்பனைத் தொழில் தந்த அனுபவம் மறக்க முடியாது .
தொழில் தாண்டி நான் ஏன் அதிகம் உரடட்டைக்கும் யாழ்தேவியிலும் பயனித்தேன் என்பதைச் சொல்லும் ஒரு பாடல் கடந்தவாரத்தில் இருந்து இடைவிடாது ஒலிக்கின்றது என் காதில்!கூடவே குத்தாட்டம் மனசுக்குள்!
கந்தப்பு ஜெயந்தன் இசையில் அவரோடு சேர்ந்து பாடியிருக்கும் பாடகி பிரதா,ஜெயரூபன் .
கவிதைக்குச் சொந்தக்காரர்-திரு. T.சதீஸ்காந்த.
பாடல் ஒலி/ஒளி மிகவும் எனக்கு பிடித்திருக்கின்றது .காட்சி அமைப்பில் பிரியந்தன். செய்திருக்கும் புதுமை. காட்சியில் இருக்கும் இயல்பு மீண்டும் நம்மவர்களின் திறமையை பட்டொளிகாட்டி மின்ன வைக்கின்றது.
காந்தனின் தொடர் இசைப்பயணத்தில் இந்தப்பாடலும் ஈழத்து இசையில் இந்தப்பாடல் இசையின் தாக்கம் இனி பலரையும் மெல்லிசை குறுவட்டு செய்வதற்கு தூண்டு கோலாக அமையும் என்பது என் எண்ணம்.
ஈழத்து இசைக்கு ஊடகங்கள் காட்டும் தொடர் அசமந்தப்போக்கு என்று தான் தீருமோ ???
என்றாலும் ஜெயந்தனின் இந்தப் பாடல் சமுகதளமான முகநூலிலும்,யூத்டூயூப்பிலும் இணைந்து இருப்பதால் நம்மவர் இசையை விரும்பும் உள்ளங்களுக்கு இப்போதைய நவீன வசதி இன்னொரு தளத்தினை அல்லது சந்தையை திறந்து விட்டு இருக்கின்றது.
இலத்திரனிய ஊடகங்கள் தொடர்ந்து ஒலி/ஒளி செய்து மக்களிடம் போக வழிநடத்த தயங்கினாலும் முகநூல் ஊடாக பலர் கண்டு களிக்கிறார்கள்.
அதனால் பயன் பெற்றவனில் நானும் ஒருவருன்!
அதன் பயனை வலையுலகம் கான கண்டுகளுக்கட்டும் உறவுகள்.
பாடல் வரிகள் என்னை மீளவும் ஊர் பெருமைக்கு சிக்க வைக்கின்றது
.பாடலில் என் ஊரும் வருகின்றது கேட்பது தனி சுகம் .
கண்ணாம்பூச்சி மட்டுமா விளையாடினோம் ம்ம்ம் .
அதையும் தாண்டி.
"நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை. "ரசிக்கின்றேன் பலதரம் கற்பனை ஊற்றை
".உன் காதல் என்ற சிறையில் நான் ஆயுள் கைதியானேன் ""
கவிதையின் வாசம் .
நாம் ஊர் விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண்வாசம் மனம் விட்டுப் போகாதே !!
யார் எது சொன்னாலும் (பிரதேசவாதம்) என்றாலும் அதில் இருக்கும் தனித்துவம் வார்த்தையில் அடக்க முடியாது.
பிரியந்தனின் படத் தொகுப்பு பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.
பாடல் முடிவில் நானும் இந்த புலம்பெயர் வாழ்வை விட்டு ஊர் ஓடிவிட மனம் துடிக்குது. எனக்கா காத்திருக்கும் என் காதல் மனைவியை கான ஆனால்!!!!ம்ம்ம்ம்ம்
கேட்டு ரசியுங்கள் நம் படைப்பை!
ஜெயந்தனின் முகநூல் இதோ-Facebook link- http://www.facebook.com/pages/MusicDirector-K-Jeyanthan/195797620434975