28 June 2016

காதில் கேட்குமோ!

இலங்கை வானொலி  ஒலிபரப்பு பணிச்சேவை வர்த்தக சேவை/ சர்வதேச சேவை /மலையக சேவை /என்று இலங்கை வானொலியின் பண்பலை விரிவாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மையப்படுத்தி நேயர்களை கவர வேண்டும் !அல்லாது பிரதேசவாத செயல்பாட்டுக்கு உந்து சக்தி அரசியல் திட்ட செயல் !இலங்கையில்  தனியாக  என்று கண்டியில்வானொலி  நிலையம் அமைந்தது பிராந்திய வானொலி சேவை மையம் இலங்கை மலையக சேவையை சிங்கள/தமிழ் வானொலி என்று அடுத்த கட்டம் நோக்கிய வரலாறு


 90 இன் இன்னொரு கதை! ஆனால் மலையகசேவை  அறிந்தவர்கள் சிலர் !!

ஆனால் வன்னி சேவை, யாழ் சேவை என்று இலங்கை வானொலியின் சில பிரிவுகள் சில வானொலி ஆர்வ நேயர்கள் தான் அறிவார்கள் !


 காரணம் திட்டமிட்ட இனவாத யுத்த  செயல்பாடு மட்டுமா !மின்சாரத்தடையும்! மூலக்காரணி!

இன்னும்பல  இனவாத செயல்! இதன் நீட்சித்தான் புலிகளின் குரல் அறிமுகம் என வானொலி பற்றிய பல தணிக்கை செய்திகள் ஆயிரம் !


அதை தாண்டி வெற்றி எப் .எம் என்று இன்று இலங்கையில் தனியார்  பண்பலை வானொலி கூட இனவாத ராஜபக்‌ஷ  சாத்தானின் இன்னொரு வடிவம் எனலாம்!


 அதையும் ஊக்கிவிக்கும் ரசிகர்கள் என்றும் இருப்பது ஊடக சாபம் எனலாம்!

 எது எப்படியோ இன்றும் இந்த பாடல் நெஞ்சில் வாழுது!




ஆனால் மலையக சேவை தொடர்ந்து இயங்குகின்றதா ,,?என்று இந்த முன்னால் நேயர் நான் அறியேன்!

 அருமையான பாடலுக்கு மெட்டமைத்தவர் என் முகநூலில் நட்பாக இருப்பதும் என் இசை யாசிப்புக்கு கிடைத்த வரம்!

பாடல் எழுதி பாடும் ஜெயபாரதிதாசன்  பற்றிய தகவல் இப்போது ஏனோ எங்கும் தேடியும் கிடைக்கவில்லை!

பாடல் கேட்டு தகவல் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்க!இசையில் இசையானியின் தாக்கம் சாயல் இருப்பது மெல்லிசையில் சிறப்பான குருவி போல  என்றாலும் அந்த நதியில் மூழ்கலாம்!



20 June 2016

யாசிக்கும்-- ஏ-தி-லி -13

முன்னர் கதை இங்கே-http://www.thanimaram.org/2016/06/12.html

காதல் என்ற உணர்வு ஒருவனுக்கோ ,யுவதிக்கோ ,உள்ளத்தில் காதல்வேதம் என பூப்பது  எப்போது ?

வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதை போலவா ,இல்லை தபூ சங்கரின் இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கும் காதல் பிறந்திருச்சு என்ற கவிதை போலவா ?

நேசம் வரும் பருவம் என்ன ?இளமைக்காலங்களா?ஆராட்சிகள் பலதில் இளமை ஊஞ்சல் ஆடுகின்றது  ,காதலுக்கு மரியாததை  ,முதல் வசந்தம் பள்ளிப்பருவத்தில் என்பதா !

கன்னிப்பருவத்திலே என்பதா. இல்லை பூந்தளிர் போல மாப்பிள்ளை களைகட்டும் இல்லையேல் காதல்   முத்தினகத்தரிக்காய் போல !

இருபது வயதுவரை பெற்றோரின் வசமிருந்தேன்!இருபது நிமிடத்திலே உன் வசமாகிவிட்டேன்   காதல்கொண்டேன்  நீ பாதி நான் பாதி ,கண்ணால் பேசவா ,

இல்லை இன்னும் அடிப்படை இனப்பிரச்சனைக்கு முக்கியகாரணம் இனவாதசெயல் போக்கு என்பதை அறியாத இலங்கை ஜானாதிபதி போல காதலும் இன ஈர்ப்பு என்பதா ??

ஏன் இந்த மாற்றம் டுயட் பட கவிதை போல் கண்ணிருந்தால் வாசித்துப்போடி என்பது போல இல்லை யாழினி   என் காதல் .

உன்னைப்பார்த்த அந்த கார்கால கார்த்திகை தீபஜோதி அந்த ஒரு நாள் போல அல்ல .

வருஷம் எல்லாம் வசந்தம் போல இருதயம் இடமாறித்துடித்தது டிங்டோங் கோயில்மணி போல , எதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் போல அல்ல யார் இந்த தேவதை என்று நெஞ்சம் துள்ளியது! நேசிப்பில்  மனமோ உன்னருகில் நான் இருந்தால் படம் போல  காலம் எல்லாம் என் பொண்டாட்டி நீ என்று என்றோ எழுதிய தீர்ப்பு போல என்னைக்கொன்றது !

உனக்கு  உண்மை தெரியுமா யாழினி ?நானும் அகதியாக இடம் பெயரமுன் என் தொழில்கள் பல பூர்வபூமியில்.

என்றாலும் நான் மதித்தது வானொலியோடு பயணிக்க யுத்த இடப்பெயர்வில் என் ஆசையைவிட  பொருளாதார கடமை என்னை அழைத்தது. விற்பனைப்பிரதிநிதி வேலைக்கு.!

நெஞ்சம் எல்லாம் பாடல்களும், கவிதையும் கரைகடந்த வெள்ளம் போல பாய்ந்தாலும் .

ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதம் பண்ணாதீங்க போல பல இடங்கள் பயணித்த போதும் பார்வைகள் பல பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன், என்று கொல்லவில்லை சிந்தையை .

எங்கேயும் எப்போதும் போல   என் அடிப்படை உயிர் பாதுகாப்பை  கேள்விக்குறியாகிய போதுதான்  சிறையில் சில ராகங்கள் போல நானும் புலம்பெயர்ந்தேன் .


பொருளாதார தேடலுக்காக அல்ல விதியின் விளையாட்டு உன்னைச்சந்திக்க வைத்தது என் வாலிபம் பூத்தது  இப்படி போல


 யாழினி!





தொடரும்.

13 June 2016

கொழுப்பு ஜாஸ்தி [[[ கிறுக்கல்.

கொக்குத்தொடுவாய் கோரைப்புல்லில்
கொக்கி போல கோர்த்த
கொண்டைப்பூ
கொழுந்தன்
கொடுத்துவிட்டேன்
கொஞ்சும் கிளி  போல
கொக்காவில்
கொழுந்தை அவள்
கொழும்புக்கு போகையிலே!


கொடிகாமம் பாதை மூடி!
கொப்பரும் தவித்த
கொலையுகம் எல்லாம்
கொப்பளம் போல
கொத்திக்கிளறுது
கொஸ்கமுவ வெடிவிபத்துப் போல!
கொண்ட காதலில் !.!


.
கொக்கட்டிச்சோலைக் கதை சில
கொல கொல என்று
கொழுந்து, வெற்றில்லையும்
கொழுப்பு பேச்சும் கலந்த காலம்
கொட்டாவ முதல்
கொட்டாஞ் சேனைப்பக்கம்
கொடிபறக்குது குஸ்பூ காலயுகம் போல!
கொலன்னாவையில் கொண்ணர்
கொடுத்த இருட்டடியும்!
கொஞ்சிப்பேச
கொஞ்சக்காலம் தடைகள் என்றாலும்!
கொலஸ்ரோல் என்றும்
கொடா நாட்டு ஓய்வு போல போன
கொழுந்தியா நீயும் !
கொழுத்திப் போட்டாய் காதல்
கொலைஞன்  இவன்  என்று

கொம்பனித்தெரு வீதியில் ! சகியே
கொசு போல
கொல்லுதடி!   நீ இன்னும்
கொடுக்காத காதல்த் தீர்வை தேடி!!



கொற்றவையிலும் காணவில்லை,
கொடிபிடித்த ஐநாவிலும் தேடவில்லை,
கொட்டி என்று
கொலைகள் செய்த
கொலைகாரபூமியில்
கொட்டிக்கிடக்குது
கொடுத்த கடிதங்கள்  பிரிக்கப்படாத
கொடுமை சின்னங்களாக
கொடுக்காத நீதி போல

கொப்பகேன்  என்று நீ போனதால்
கொடுத்துவச்சவள்  அவள் என்று
கொண்டாடும் உறவுகள்!
கொட்டியாவத்த முருகன்
கொடிமரம் போல யாசிக்கும்
கொழுந்தன் உயிர் !
கொடி போல வாடுதடி
கொண்ட காதலில்!



கொல்லாமை சிறப்புஎன்ற
கொஸ்லாந்த மாஸ்டர் கூட
கொடிபோல மண் சரிவில்
கொலையாகிய கதை என்று
கொடுக்கப்போறேன் மனுவிசாரணை!!



கொடுக்கவா இதயம் இடமாற்ற
கொடுத்தால் கிடைக்கும் மறு வாழ்வு.
கொல்லும் உன் நினைவு தாண்டி..
கொழும்பு நோக்கி மீண்டும் நேசக்கரம் நீட்டுது!
கொழுத்தும் வெயிலில் நானும் போறேன்
கொழும்புக்கு விடுமுறையில்!
கொழ்ந்தனாருக்கு கொப்பளிக்க ஒரு
கொப்பிழா[[


கொஞ்சம் கற்பனை!
கொஞ்சம் நிஜம்
கொழும்பு அரசியல் நோக்கி[[[




------------------

இலங்கையின் ஊர்கள் இங்கே முதலாக!
கொப்பர்- தந்தை யாழ்வட்டாரமொழி
கொண்ணர் - அண்ணா-/யாழ் வட்டாரமொழி!
கொட்டி-சிங்களத்தில் புலி !
கொப்பகேன் -ஜரோப்பிய நாட்டுகளின் தலைநகரம் ஒன்று!

09 June 2016

யாசிக்கும் --- ஏ--தி--லி---12


முன்னம் இங்கே ஏதிலி கதை-http://www.thanimaram.org/2016/05/11.html

இனி.....
  சிலைகள் சிதைந்து போவது
சில வரலாறு போல
சில நேரத்தில் நீயும்
சிங்காரி சிதைந்தாய்
சிக்கினால் சினேஹா
சில வலிகள் போக்க
சிந்திப்பேனா
சிலோன் போன பின்
சில கதை வரலாம்!

    (யாதவன் நாட்குறிப்பில்)
இனி...



வியாபாரம் என்பது  பன்டைய காலம் முதல் தொடரும் ஒரு பண்டமாற்று எனலாம்! கு.பா ராஜகோபலனின் பெட்டிக்கடை நாராயணன் கவிதை போல ஆனால் காதலும் வியாபாரமா ???

நிச்சயம் கலியாணம் ஒரு வியாபாரம் போலத்தான் !இருப்பவன் சீதனம்/வரதட்சனை  என்று அள்ளிக்கொடுக்கின்றான் தேர்தல் வேட்பாளர் போல  சீதனம்  விரும்பியவன் இலவசத்தை வரவேற்கும் மக்கள் போல வாங்கிக்கொள்கின்றான்  வருவது வரை இலாபம் என்று ஊழல் செய்யும் மந்திரி போல சீதனம் வேண்டாம் என்றால் ஏதோ சர்வதேச யுத்தமீறலை திசை திருப்ப உள்நாட்டு விசாரணைக்கு மட்டும் தலையாட்டும் இலங்கை அரசு போல வினோதமாக பார்க்க வேண்டியிருக்கு யாழினி!


 நிச்சயம் எங்க வம்சம் சூரிய வம்சம் படம்போல இல்லை !ஆனால் ஆனந்தம் படம் போல !!திருப்பதி ஸ்டோர்தான் !!!வியாபாரத்தில்

பெட்டிக்கடையில் தொடங்கிய தாத்தாவின் கடின உழைப்புக்கும் ,அவரின் வாரிசுகள் நிறுவாகத்திறனுக்கும்  இடையில் காலமாற்றம் மட்டுமல்ல, இலங்கை ஆட்சியின் இனவாத செயல்பாடுகளும் முட்டுக்கட்டை போட்டதை முன்னம் எழுதிய கதைகள் போல நீ அறிந்து கொள்ள சந்தர்ப்பம் இல்லை !

இன்றை தலைமுறைக்கு இணையம் தானே இன்னொரு உலகம் நான் உலகம் சுற்றும்  வாலிபன் போல நாடுகள் சுற்றவில்லை !பல ஊர்கள் சுற்றிய வியாபார பரதேசி !

நம் முன்னவர்கள் நாட்டு நடப்பை பத்திரிக்கையிலும், வானொலி கேட்டும்  அறிந்து  கதைகள் எல்லாம் பழங்கதை போல இருக்கலாம்!  முகத்தார்வீடு நாடகம் போல !



ஆனால் சிரிமா ஆட்சியில் இலங்கைப்பொருளாதாரம் வளர்ச்சிகண்டதை நம்ப மறுப்போர் போல உன் தந்தைக்கும் .எனக்கும் இடையில் தாய்மாமன் படம் போலவோ இல்லை  எம்டன்மகன் பரத் போலவோ  மருமகன் என முன்விரோதம் ஏதும்மில்லை !


!இது என்ன இலங்கை அரசியல்க்கட்சிகள் போலவா ?ஆட்சியில்  இருக்கும் போது தமிழர் பிரட்சனைக்கு தீர்வு கிடைக்கும் இது நல்லாட்சி என்பது போலவும் !


பின் வாக்கு வங்கிநோக்கி புலிகள் இன்னும் வாழ்கின்றனர் அதனை முறியடிப்பேன் என்று மக்களை இனவாத நிலையில் வைத்து இருப்பது போல அல்ல !




 வாழ்க்கை ஒரு முறைதான் தவமாய்த் தவமிருந்து  படம் போல! என் தந்தை வலி நான் அறிவேன்!  படிச்சபுள்ள மீட் மை சன் என்று என் தந்தை எத்தனை வியாபார கம்பனிகளுக்கு  என்னை தயாரிப்பாளர் வாரிசு சினிமாவில் ஹீரோவாக வருவது போல  என் கதை தொடங்கும் நேரம் இது  என  கதை எல்லாம் இன்னும் எழுதவில்லை தொடராக முகநூலில்[[[.அதுக்கு நேரமும் இல்லை இப்போது!


என் கனவு உன்னோடு !உயிரோடு உயிராக ,காதலுடன் ,என்றும் அன்புடன் ,டூயட்,எனக்  காத்திருந்தேன் !காலம் எல்லாம்  மெட்டி ஒலி காற்றோடு என்ற பாடல் போல நீ வருவாய் என ,கவிதை பாடும் அலைகள் போல என் பொண்டாட்டி ,பட்டதாரி எம்மா நீயா அரசாங்கம் . மாயமோகினி. சின்னத்தாயி,என் இனிய பொன்நிலாவே ,என் உயிர் நீதானே !என் காதல்  கண்மணி,உனக்காக ஒரு ரோஜா ,உன்னுடன் ,பொன்மனி அவள் கண்மணி போல அல்ல !


அன்புள்ள காதலி ,என் சினேகிதியே !ஆசைக்கிளியே கோபமா ?
என்று எல்லாம் பாடல் புனையக்காத்து இருந்தேன் !


நீயோ கண் இருந்தும் குருடி போல சுள்ளான் ,போக்கிரி ,திருட்டுப்பயல்  ,திமிர் ,படிக்காதவன் ,கோவில்களை  ,மலையூர்மம்பட்டியான்,பொல்லாதவன் ,காதல்க்கிறுக்கன், காதல் எப் எம்,இரவுப்பாடகன் ,நடிகன் , தப்புத்தாளங்கள் ,போல என்னைவிட்டுப் போனாயா யாழினி?



நான் என்ன நடிகனா வேஷம் போட?, இல்லை  இலங்கை அச்சு ஊடகம் லேக்கவுஸ்  பிரதம ஆசிரியர் போலவா ஆட்சிக்கு வக்காலத்து வாங்க ?,எத்தனை தரம் உன்னிடம் பேச ஆசைப்பட்டு இந்த ரயில்த் தரிப்பிடம்,பாடசாலை,வேலைபழகும் இடம் ,என ஓடி ஓடி வந்தேன்  அன்றைய ஜப்பானில் கல்யானராமன் போல ))) ஆஹா வந்திருச்சு என்று!


 இன்று இப்படி எல்லாம் உருகும் பிரெஞ்சுக்காதலியாக நீ  இருப்பாய் என்று அன்றே மனம் சொல்லியது நிஜம் !


ஆனால் இதய வெடிப்புக்கள் ஒன்னும் கொஸ்கமுவ இரானுவக் கிடங்கு வெடி விபத்துப்போல பாரிய சேதமல்ல காரணம் பொதுவெளி அரசியல்  என்றும் போல சொல்ல மாட்டேன் !


ஏன் தெரியுமா ??

இன்னும் உனக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான்  பிரார்த்திக்கின்றேன் !இயற்க்கையின் தீர்ப்புக்கு நாம் எல்லாம் தலை வணங்க வேண்டும்!

 ஆனாலும் இயற்கை படம் போல அல்ல கொஸ்கமுக  வெடி விபத்து  உள்ளக திட்ட மிட்ட நாடகம் போலத்தான் நீயும் அன்று என்னைப்பிரிந்து லண்டன் போனாய்!

இல்லை என்று  உன் நெஞ்சைத்தொட்டு  சொல் !இந்தநிமிடம் வரை என் குரு போட்ட மந்திரிச்ச மாலையும் சரி நானும் சரி.   அறுவடை நாள் நாயகியும் ஏன் இப்படியான கதையை மீட்டவா!அன்றை அடுத்த நிகழ்வு பற்றி!



தொடரும்....