இப்போதெல்லாம் முன்னர் போலபாடல்கள் கேட்கும் புறச்சூழ்நிலைகள் இல்லை .நிலையற்ற பொருளாதார தேடல்,இணைய வானொலிகளை செவிமடுக்க முடியாத கைபேசி செயல் இழப்பு , வீட்டில் நுழைந்தால் வாரிசுகளின் வா வெளியே போகலாம் என்ற ஆசைக் குதுகலிப்பு எதிர்பார்ப்பு !
“எப்ப பாரி வேலை வேலை வீட்டுக்கு வந்தால் ஒரே பேஸ்புக் வீட்டில் ஒருத்தி இருக்கின்றாள் என்ற நினைப்பு என்ற தமிழருவி வானொலியில் வரும் வர்த்தக விளம்பரம் போல நிஜத்திலும் கூல் கூல் என்றெல்லாம் சாமானிய வாழ்வியலில் அதிகம் மூழ்கிப்போய்விட்டேன் .))))
ஆனாலும் இன்னும் ரசனை மாறவில்லை பாடலுக்குக்கான தேடலில் என்று சொல்ல நினைத்தாலும் ,ஆர்ப்பாட்டமான இசைகள் அதிகம் என்னை ஈர்ப்பதில்லை. இந்த ஐரோப்பிய பரபரப்பு வாழ்வில்.
காதல் மாதம் இது என்று கவிதை எழுத நினைத்தாலும்! காலநதியில் நானும் ஏதிலியாய்ப்போனேன்!)))
புத்தாண்டும் பிறந்தாச்சு பூவே நில்லடி என்று இவ்வாண்டிலும் எம்மவர் கந்தப்பு ஜெயந்தன் இசையில் செந்தூரனின் வரிகளில் ஒரு பாடலை காட்சிகளுடன் முகநூலில் பகிர்ந்து இருந்தார் .
காட்சி அமைப்பில் சில முரண்பாடுகள் தனிப்பட்ட ரசனையில். தொடர்ந்து ஒரே மாதிரியான இசை ,இந்திய சினிமாவின் தாக்கம் அதிகம் என்றாலும் நம்மவர் பாடலை பலரிடம் கொண்டு சேர்க்கும் ஆசையில் இதோ பாடல் நீங்களும் ரசிக்க!)))