31 July 2012

அறிமுகம் உருகும் பிரெஞ்சுக்காதலி....


வணக்கம் வலை உறவுகளே நலமா!

மீண்டும் தனிமரம் உங்களோடு  என் வலையில் நீண்ண்ண்ண்ட மாதங்களாக  காக்க வைத்திருந்த உருகும்  பிரென்சுக் காதலியோடு உங்களிடம் வருகின்றேன்.



காதல் ஒரு புலம்பலா ,இல்லை ஒரு அனுபவமா ,இல்லை உயிரைவாங்கும் நினைவா, ,அதன் உணர்வு என்ன? என்று நான் அறியேன்  ! 





எனக்கு பல நண்பர்கள், நண்பிகள்   கிடைத்தது என் பாக்கியம் அவர்கள் தான் என் எழுத்துக்கு தூண்டுகோலாக இருக்கும் நிலையில் என் அரபுலக நண்பர் பலரில் ஒரு நண்பனுக்குத்தான் அதிகம் தெரியும் நானும் வலைப்பதிவு எழுதும் ரகசியம்!ஹீ (அவங்க  /கதை எல்லாம் பொதுவில் பேசுவதால் இப்ப கொலவெறி ஹீ) 



அந்த நண்பன் போல இன்னொரு  என் பாரிஸ் நண்பன் தான் ஜீவன்(பெயர்மாற்றம்) அவனுக்கும் எனக்கும் நீண்டகால நட்பு  .

அவன் வாழ்வில் நடந்த ஒரு விடயத்தை  உள்வாங்கி கற்பனையும் ,கவிதையும்  சேர்த்து எனக்குப் பிடித்த பல்வேறு மொழிப் பாடல்களுடன்  தொடராக தனிமரம் வலையில் அடுத்த பதிவாக உலாவிடுகின்றேன் . உருகும் பிரெஞ்சுக்காதலியை  .




 இதில் வரும் பாத்திரங்கள் எல்லாம் நிஜம் பாதி  ,ஆனால் அவர்களின் ஆதங்கத்துக்கு நான் எழுத்தாணி  மட்டுமே  .ஒரு வழிப்போக்கனாக இருந்து புலம்பெயர் வாழ்வைச் சொல்லும் ஒரு பதிவாளன் மட்டுமே           .

                               .

 இதில் யாரையும் மனம்நோகடிப்பதுவோ ,அல்லது சினம் கொள்ள வைப்பதோ,  காழ்ப்புணர்ச்சியோ தனிமரத்திற்கு இல்லை   .


 ஆனால் வரலாறு முக்கியம் நல்ல விடயங்களை தேடும் ஒரு வாசகன்  என்பது என் கருத்து .  சில பார்வையில் சமூக விடயத்தைச் சொல்வது தேவையான ஒரு விடயம் என்பதால் பேசாப்பொருளைப் பேசத்துணிந்தேன்!    



அதற்கு ஒரு பிரெஞ்சுவாசியாக எனக்கு எல்லா சுதந்திரமும் இந்த தேசம் தந்து இருப்பதால்        . இந்த பிரெஞ்சுக்காதலியும் சுதந்திரமானவள்                   .அந்த சுதந்திரம் ஏன் உருக வைக்கின்றது   ?

 விடையாக தொடர்   பயணிக்கும் ;


 முதலில் அறிமுகத்திற்காக இரண்டு அங்கம் அதிகம் தனிமரத்தில்  வரும் ; அதன் பின் என் ஐயன் செயல் போல அதையும் அவரையே பணிந்து தொழுகின்றேன் இந்த காதலிக்கும்  கருணைகாட்டு பலரிடம் போக  ;


வெளிநாட்டு அவசர உலகில் தனிமரமும் அதிகம் பொருளாதார தேடலுக்கு ஓடவேண்டி இருப்பதால் கணனியில் இருக்கும் ஒரு சிலநிமிடத்தில் சில நண்பர்களிடம் மட்டுமே பேச முடிகின்றது ஆனாலும் எல்லாரும்  வலை உறவுகள் தான் ;


மன்னிப்புக்கோருகின்றேன் 

-கதையில் அடிப்படையில் வரும் பிரெஞ்சுமொழியைக்கூட கதையின் உண்மைத்தன்மை வாசகர்களுக்கு மொழி அன்னியம் ஆகிவிடுமோ   ?என்ற பயத்தில் தான் அந்த வார்த்தைகள் எல்லாம் தமிழில் மட்டும் மாந்தர்கள் பேசுவதாக அமைக்கின்றேன் ; தெரிந்தே விடும் இந்தப் பிழைக்கு பெரியோர்கள் மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!
( துசியின் தொடருக்கு நான் சுட்டிக்காட்டிய விடயமே இதுதான் அவனின் நிலையை புரிந்தபின் தான் நானும் பார்வையை மாற்றினேன் வாசகர்கள்  கஸ்ரம் அடையக்கூடாது என்ற காரணம்)



இந்தக்கதை  ஜீவனின் பாரிஸ் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட சில ஆண்டை பின்னனியாக கொண்டு நகரும் கதை   முத்தமழையில் தெவிட்டாத காதல் போல,பிரெஞ்சுக்காதல் கடந்து , பிரெஞ்சு வைனும் ,இனிய உணவுகளும் பிரபல்யமான  அன்புதேசம் பாரிஸ் என்பது  உலகம் அறிந்த ஒன்று  .


ஜீவன் இப்போது  வேற ஒரு ஐரோப்பா நாட்டில் வாழ்கின்றான் ;


   கடந்த கால அனுபவம் போல ஏது பூமணி படத்தில் இளையராஜா   எழுதியதுபோல"  உன்னைப்பழுது பார்க்கணும் என்னை அழுது தீர்க்கணும் என்பது போலவும் கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வைச்சுக்கணும் ஒரு நூலு பிரிந்தாலும் அறுந்தோடுமே என்பது போல தான் உருகும் காதலியா ?


 இதுவரை நான் முகநூலில் ,என் பதிவுலக தொடர் பதிவுகள் பகிர்வதில்லை ஆனால் அந்தக் கட்டுப்பாட்டையும் தாண்ட வைத்த இந்தக் காதலியின் கதைக்கு  முகப்புப்படம் 






தந்தவர் சகபதிவாளர் நிகழ்வுகள் கந்தசாமி அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்    .




  இணையத்தில்  நொந்து போகும் ஒர் இதயம் ,


                                                           இரண்டுக்கும் நீங்கள்  தந்த ஆதரவு  இந்தத் தொடருக்கும் கிடைக்கும் என்ற  நம்பிக்கையில்!!!    
                                                                               
                                                                               நட்போடு தனிமரம்- நேசன். 


 
  
பிரெஞ்சுக்  காதலியை  இந்தப்பாடலுடன்  ஆரம்பிக்கிக்றேன்.

 வழமைபோல தான் இந்தக்கதைக்கும் தனிமரம் நேசனுக்கும் தொடர்பு  இல்லை! இல்லை.இல்லை;(நான் ரொம்பச் சின்னப்பையன்! ஒரு குடும்பஸ்த்தன்!ஹீ  )  

29 July 2012

பஹ்ரைன் நினைவுகள்!!!!.


வணக்கம் உறவுகளே! 

 பஹ்ரைன் வழியில் பார்த்த சில ஞாபகங்களை தொடர்வதில் கூட ஒரு சுகம் இருக்கு அனுபவம் போல ஆசான் ஏது உலகில்.



 சென்னைக்கும் போகும் ஆவலில் தரித்து நின்றாலும் ஒரு பயணம் வெளிக்கிட்டு இடையில் நேரம் போக்கும்  எரிச்சல் எனக்கு என்மீதே ஏற்பட்டது ஒரு நாள் பொறுத்து இருந்தால் நிம்மதியாக துபாய் வழியாக போய்ச் சேர்ந்து இருக்கலாம் என் நினைக்க வைக்க காரணம் மறு ஏற்றம் விமானம் தாமதம் 

   ஆகியதால் பஹ்ரைன் தரிப்பிடத்தில்  நேரம்   போக்க இருந்த  வசதிதான் முகநூல் பார்க்கும்  வசதி !




ஊரில் இருந்த நண்பர்களை எல்லாம் காலையில் இருந்து பின்னிரவு வரை பிடிக்கும் நவீனவழி முகநூல் தானே !  

அதிமான நட்புக்கள் அரபுலகில் இருப்பதால் என்   வசதியைப்போல  அவர்களுக்கும் கிடைக்கும் நேரத்தில் அடுப்படி வரை அடுத்த நாள் திட்டம் வரை அளந்து கொண்டே போகலாம் .



 சென்னைப்பயணம் பழகிய ஒன்று என்றாலும் வெளிநாட்டு வாசிகளில் ஈழத்து உறவு என்றால் குடிவரவு/குடியகழ்வு  அதிகாரிகள் அமெரிக்கா பின்லாடனைக்கூட இப்படி நோண்டாது .


தீவிரவாதி எல்லாம் இப்போது பிளைட்டில் வார்து விட கப்பல் மூலம் இலகுவில் வந்துவிடுவார்கள் அதுகூட அறியாமல் எங்க போறாய் ?அங்கே என்ன செய்யிறாய்?

 என பல இம்சைகள் விசா எடுக்கும் போது எல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டு கூடவே ஈழத்து மக்கள்  தனியாக அகதியாக அலைந்தாலும் அந்த நாட்டில் இருக்கோ என்று தெரியாத வீட்டுமுகவரி முதல் கடைசியாக பார்த்த உறவுமுறை வரை விபரம் கொடுத்து தானே உள்நுழைகின்றோம்!ம்ம்!(மேலதிக தஸ்தாவேஸ்சாக!ம்ம்ம் அதில் எல்லா நிஜமும் இருக்கே !ம்ம்)


 ஐரோப்பிய தேசம் சுற்றுலாவாசி என்றால் இன்முகத்தோடு வரவேற்கும் நிலையில் இன்னும் சிலஆசியநாடுகள் கூவி அழைக்கும் போது அதனைத்தவிர்த்து சென்னை போவது அதிக குடும்ப பாசத்தில் தானே .


அது எல்லாம் புரியாத அதிகாரிகளுடன்  தர்க்கம் வரும் போது எல்லாம் நினைப்பது ஏண்டா இந்த நாட்டுக்கு மீண்டும் மீண்டும் வரும் வண்ணம் ஆன்மீகம் ,உறவுகள் என்று படைத்தாய்.


 வெளிநாட்டில் இருந்துவிடலாமே ஜாலியாக என்று ! ஆனாலும் குழந்தைகள் ஏக்கம் மாமா என்ன வாங்கியாராய் என்று கேட்கும் பரவசத்துக்கு எல்லா வலியும் போய் விடும் .இதோ என் மருமகளுக்கு என்று ஆசையாக பல பொம்மைகள் ..பொம்மைக்குட்டி அம்மாவுக்கு ஆரோரோ பாட உறவுகள் எல்லாம் பலதேசத்தில்!இன்று! 


பாருங்கள் இதில் கூட புலி இல்லை!ஹீ எல்லாம் என்னைப்போல் பூனைகள் தான் கண்ணை மூடிவிட்டால் ஊர் நினைப்பு எல்லாம் பால்மாட்டுகள்  வெடிச்சத்ததில்  ஓடியதைப்போல


 !ம்ம்  பாடல் கேட்டாலும் நினைவுகள் வேகத்தைவிட கைபேசியின் பற்றிக்காலம் ஆயுல் குறைவு நவீன தலைமுறை போல ஹாட் அட்டக்கில் விபத்தில் தானே அதிகஉயிர்கள்  போவது போல்.

  அதனால் அப்ப பற்றி தீர்ந்து போனால் அதுக்கும் வசதி இருக்கு இங்கே பாருங்க்ள் ஹீ கைபேசி ஓய்வு நாட நமக்கு இருக்கு  இன்னொரு வசதி அருகில்



`மச்சான்  நான் எல்லாம் வீட்டுக்காரிக்கு நகை வாங்க  மாட்டன் இப்ப  அதுவே கொலைசெய்ய காரணமாவதால்  எனக்கு உயிர் முக்கியம்!ஹி


!( அடக்கஞ்சப்பையல் என்று திட்டுவது புரியுது. .ஹீ   நகைவாங்கி  பாதுகாக்க் முடியாமல் அதை வங்கியில் வைக்க  பாதுகாப்பு பெட்டிக்கு காசு கட்டுவதை விட சுற்றுலா மேல்!)




 இப்போது எல்லாம் சின்னவர்கள் விரும்பி கேட்பது பல கணனி விளையாட்டு தூப்பாக்கியில் சுடும் வெற்றியை. அதுதான் இங்கே சீடியாக!













 அதுகடந்து ஒரு விமானம் வந்து இறங்கும் காட்சியைக்கண்டு  கொஞ்சம் ஓய்வு நாடிய போது .


மனசு வீட்டுக்காரி விரும்பித்தரும் பால்க்கோப்பி ஞாபகம் வர அந்த நேரத்தில் சுட்டது இது!
 அப்போது நண்பன் சொன்னான்.
" மச்சான் சென்னையில் ஆட்டோ வேண்டாம் . எல்லாரும் அப்படி இல்லை ஆனால் ஒரு சில ஆட்டோ ஓட்டுணர்! வெளிநாட்டுவாசி என்றால் சென்னை எதுவும் தெரியாது என்ற நினைப்பு "
 நீ ஒரு கால்டக்சி எடு அது  இப்ப பாதுகாப்பு மீனாம்பாக்கம்  இறக்கத்திலையே பதிவு செய்ய முடியும் .
தேவையான இடம் போகலாம் துரித சேவை .அன்பான கவனிப்பு ,மனதை மயக்கும் இனிய பாடல்கள் .முக்கியம் திருட்டுப்பயம் இல்லை .
நல்ல உள்ளங்கள் விரும்பிய இடத்தில் 24 மணித்தியால சேவை .அவன் சொன்ன கார்  இப்படித்தாங்க!ஹீ
  பதிவு ஒரு சுற்றுலாவைத் தூண்டும் நோக்கம் அன்றி  வேற நோக்கம்` அல்ல!
தொடரும் பஹ்ரைன் நினைவு!.........

27 July 2012

காற்றில் கலந்த ஊடக மூச்சு!!

ஊடகங்கள் இன்று பல்கிப்பெருகி வியாப்பித்திருக்கும் நிலையில் .நவீன தொடர்பாடல் வசதிகளின் பெருக்கம் இலத்திரனியல் ஊடகம் அதீத மாற்றம் கண்டு வரும் நிலையில்.

நம் தேசத்திலும் இன்று பல இலத்திரனியல் ஊடகங்கள் நாள் தோறும் அறிமுகம் ஆகிவருகின்றது. புதிய தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் பல மாறுபட்ட வகையில் தயாராகி ஒலி/ஒளியாக காற்றலையில் தவல்கின்ற இன்றைய நிலையில்.


நம் தேசத்தில் இலத்திரனியல் புரட்சி மாற்றம் கண்டது சந்திரிக்கா அம்மையாரின் வரவில்தான்.

அதிகமாக இந்த தனியார் பண்பலைவிடயத்தை ஆட்சியதிகாரம் கொஞ்சம் சட்டசீரமைப்பு செய்ததன் பயனாக முதல் தணியார் பண்பலை வானொலியாக சகோதரமொழியில் சிரச வானொலியும்

, அதன் பின் சிரசதொலைக்காட்சியும் புத்துணர்ச்சியுடன் வானொலி நேயர்களையும் தொலைக்காட்சி ரசிகர்களையும் ஒரு கலைரசனையாளராக மாற்றம் கண்ட நேரத்தில் தான் ஊடகம் உச்சரித்த நாமம் நிமல் லஷ்பதி ஆராட்சி!


1954 இல் நவம்பர் மாதம் 22 திகதி கோட்டையில் பிறந்த இவர். நாளாந்த கல்லூரியில் கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் ஒலிபரப்பில் சேர்ந்தார் . அதன் பின். அங்கிருந்து தனியார் துறைக்கு தன் திறமையை பரீட்சிக்கும் களமாக்கியதில் வெற்றிக்கொடி கட்டிய இலத்திரனியல் போராளி!


யுத்தம் கொஞ்சம் சமாதானக்காற்றைச் சுவாசித்த தருணத்தில் சிரசவானொலியோடு ஒரே குடும்பமாக சிலகாலத்தில் தமிழில் சக்தி மற்றும் ஆங்கிலத்தில் YES FM,என வானொலியும் அதன் பின்னே தொலைக்காட்சி உதயங்களுக்கும் எல்லாம் இவர்தான் பின்னனியில் இருந்த மகாராஜாவின் தூண்களில் ஒன்று .

அரச வானொலி,தொலைக்காட்சி நிலையங்கள் ,யுத்தம் என்ற நிலையில் பலரை நிலையத்துக்கு அழைத்து ஒரு சில நிகழ்ச்சியைச் செய்து கொண்டு இருந்த போது.

தனியார் வானொலியான சிரச முதலில் பல்வேறு வர்த்தகஉலா மற்றும் சிரச (கடமண்டி) என்ற நவீன வீச்சில் வானொலியோடு பல நேயர்களை ஒன்றினைத்த நிகழ்ச்சிகள் பல திட்டமிட்டதில் நிமல் ஒரு புதுமையின் புரட்சி .


வானொலியில் பல்வேறு நாடுகளுக்கு முதலில் உறவுப்பாலம் நிகழ்ச்சியாக கடல்கடந்து நேரடி நிகழ்ச்சியை இணைத்து (இத்தாலியில் இருந்து) உறவுப்பாலம் போட்டதில் தனியார் வானொலி சிரச என்ற சாதனைக்கு தலைமகன் நிமல்.


தாயகத்தில் இருந்து அரபுலகத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு வந்த உறவுகள் .குடும்பத்திற்கு செய்திகள் கொடுக்கும் ஊடகமாக இருந்ததில் அந்நாட்களில் தகவல் ஊடகமாக கிராமங்களை இனைத்ததில் சிரச வானொலியின் பங்கை சாமானிய கிராமத்தவர் மறக்க முடியாது அதுக்கு மூலசிற்பி நிமல் லக்‌ஷிரி ஆராட்சி

.ஞாயிறு நிம் நத்த நின்னய ! ஹிந்திப்பாடல் தேர்வு தரவரிசையும் 24 நாலு மணித்தியால சகோதரமொழி சேவையில் ஹிந்திக்கு இவர் செய்த நேர மாற்றம் பல்வேறு நேயர்களின் இரவுப்பணிக்கு கடமையோடு காணம் கேட்கும் வழிகிடைத்தது ..

அதே போலத்தான் வானொலிக்கு அலைபேசி வழியே தகவலோடு பாடல் கேட்கும் நிகழ்ச்சியை தொடங்கியதன் பின் எல்லைக்கிராமத்தில் இருந்த கிராமத்து மக்களுக்கும் ,படையினருக்கும் முகம் கானமுடியாவிட்டாலும் .உயிர்மூச்சு இருக்கு போராட்டக்களத்தில் என்ற நிலையில் பல சகோதரமொழி எல்லைக்கிராமத்தவர் விடிய விடிய பாடல் கேட்ட 1996 இல்களில் அந்த நேரத்தில் பலர் மறகமாட்டார்கள் .

நிமலின் நிகழ்ச்சி வேகம் அதிகம் புதிய அறிவிப்பாளர்களை ஊக்கிவித்து தன் முகாமையாளர் பதவியை சிறப்பாக ஆற்றினார்!
பல்வேறு ஊர்களில் வர்த்தக வியாபார விளம்பரத்தில் சிரச தொலைக்காட்சியும் சிரச வானொலியும் ஊடக பங்களிப்பு செய்த நிகழ்வுகள் அச்சத்திலும் பாராட்ட வேண்டியது. அரசியல் சூழ்நிலைகளும், ஊடகங்களின் இருக்கும் போட்டியும், கழுத்தறுப்பும் பலரின் திறமையை ஏனோ மழுங்கடித்து சிலரை உயர்பதவி என்ற ஒன்றில் மட்டும் கட்டிப்போட்டு விட்டு திறமையை வெளிக்காட்ட முடியாமல் நொண்டிக்குதிரையாக்கிவிடும் அந்த வீபரீதம் நிமலுக்கும் ஏற்பட்டுவிட்டது பிற்காலத்தில் என நினைக்கத்தோன்றுகின்றது! மகாராஜாவின் பணிபாளர் குழுவில் இருந்த நிமல் லஷ்சிரி ஆராட்சி கடந்த வாரம் கொழும்பில் இயற்கை எய்தியது ஊடக துறையினருக்கு ஒரு இழப்பாகும் .58 வயதில் இரு பிள்ளைகளின் தந்தையான நிமலுக்கு பலர் கடந்த தினங்களில் தம் ஆழ்ந்த அஞ்சலியைத் நேரில் தெரிவித்திருந்தார்கள்.
கடந்த திங்கள் அன்னாரின் உறுதி ஊர்வம் கொழும்பில் நடைபெற்றது .காலம் ஒரு ஊடக நிபுனரை கவர்ந்து சென்றதை கடல்கடந்து நேற்றுப்பின்னிரவில் அறிந்த போது ஒரு வழிப்போக்கனாக என் ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்துக்கு தெரிவிக்கின்றேன் .
உங்களின் மூச்சுக்காற்று மலைமுகடுகளிலும், எல்லைக்கிராமத்திலும் என்றும் நினைவில் நிற்கும் . ஒரு நாள் எதிரே பலவிடயம் பேசி பாதை மாறிய வழிப்போக்கன் நினைவில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் ஊடக விளம்பரத்தில் செயல்படும் முறையை உபதேசித்த மூத்தவராக. உங்களின் நினைவுகளில் இந்தபாடல் -பலர் நினைவில். ///////////////////////////////////////////////////////////////////////////////////////// துயர் பகிர்வைப் பகிர உதவிய விழியில் விழுந்தவை பதிவாளினிக்கு  நன்றிகள் !

26 July 2012

வாழ்ந்த நினைவுகள் சுமக்கும் 80 !அனுபவம்! 1


வணக்கம் உறவுகளே! 

வசந்த காலத்தின் தேடல்கள் இந்த தனிமரத்தையும் கொஞ்சம் தேகத்தையும் கவனி என்று சற்று ஓய்வை தந்து இருக்கு .இந்த நாட்களில் அதனால் கொஞ்சம் கணனியும், கைபேசியும் முகநூலுமாக மூக்கில் நுழைந்தாலும்..

 கொஞ்சம் மூக்கின் சுவாசம் அதிகம் தூக்கத்தைக் தொலைத்து விட்டு தவிக்கின்ற தனிமை ஒரு புறம் என்பதால் .என்னவள் இருக்கும் பாட்டையும். வாங்கியந்த புத்தகத்தையும் வாசிக்கலாமே என்பாள்.

 வாசிக்க நினைக்கும் புத்தகங்கள் எல்லாம் வரலாற்றுப் பதிப்புக்கள் மனம் ஓய்வு இல்லாத போது எப்படி கிரகிப்பது என்பதால் தவிர்த்தபோது  . கவிதாயினி ஹேமா இந்த நிகழ்ச்சி பாருங்க நேசன் என்றது ஞாபகம் வர .


நானும் பார்த்தேன் நீயா நானா வில் இளையாராஜா 80 களில்!அதில் இன்னும்  சில இசையமைப்பாளர்கள்  நினைவு படுத்தவில்லை கோபி . 


வீ.குமார், கங்கை அமரன்! லக்சுமன் பியாரில்லால்.ஹம்சலோகா,.சந்திரபோஸ், நரசிம்மன்/ இன்னும் பலர் என்றாலும் மையம் இசை ராகதேவன் தானே!

 .இந்த நிகழ்ச்சி பற்றிய பலர் பதிகின்றார்கள் இந்த வாரம் .பலபதிவுகள் சுவாரசியமாக அதன் பாதிப்பில் இருக்கும் .நானும் இப்போது எப்படி மனதையும் உணர்வுகளையும் கடந்து வருவது என இரண்டுநாட்கள் முள்மேல் படுக்கை.

 அதுவும் நம் இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபண வானொலி பற்றி கோபியிடம் பேசியவர்களின் நினைவுகளோடு என் சிறுவயதுக் காலமும் சிந்தனையைக் கிளறிவிடுகின்றது.

 இதில் சொல்லிய பல விடயத்தையும் மறுவாசிப்பு செய்யும் போது ஒரு காலச்சக்ரம் நிதானம் தவறிய இன்றைய அவசர உலகை நினைத்து .இழந்த அந்த உறவுகள் குடும்ப அமைப்புக்கள் ,பிரிவுகள் என நினைவு தலை முறைமாற்றம் !வயது என்று என்ன வார்த்தைகள் சூடினாலும் 80 களில் வந்த பாடல்கள் என் முதல் தெரிவாக எப்போதும் இருக்கும் .

காரணம் அதில் இருந்த அமைதி, ரசிப்புத் திறன் வார்த்தைஜாலம் எல்லாம் இன்று நாம் துரித பொருளாதாரத்தில் ஓடும் கடுகதி ரயில் என்பதால் எத்தனை  பாடலை கைபேசியில் சேர்த்து வைத்துக் கேட்டாலும் !வானொலிக்குயில்களின் குரலில் நேரம் கேட்டு, ஊர் அமைதியில் இருந்த காலம் நம் மண்ணில் அதிகம் யுத்தம் தலையெடுக்கவில்லை .1983 கலவரத்துக்கு முன் என் தாய் மாமா வாங்கியந்த பனசோனிக் வானொலிப்பெட்டியை பத்திரமாக, பாதுகாத்த பாட்டியும். தாத்தாவும் சிறுவர் எங்களை தீண்ட விட்டதில்லை.

 கூட்டுக்குடும்பம் என்பதால் மாமிமார்கள், பாட்டிமார் என சூழ்ந்திருப்போம் !எங்கள் கிராமத்து ஆண்கள் எல்லாம் வியாபாரம் செய்ய மலையகம் மற்றும் காலி முதல் கதிர்காமம் வரை செல்வதால் அவர்களின் வரவை அதிகம் கான்பது கோயில் திருவிழா மற்றும் பண்டிகை முக்கிய உறவுகளின் சுப நிகழ்வுகளில் தான்!!சந்திக்க முடியும் அப்படியான நம் உறவில் 1983 ஆடிக்கலவரம் வீட்டில்  மரண ஓலத்தை பெட்டியில்  கொண்டுவந்தபோது கலியாண வீட்டுக்களையில் இருந்த நிலை செத்தவீடாகிப்போன துயரத்தைக் கடந்து 1984 இல் வந்த சின்ன மாமாவின் கலியாணம் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு!

 அப்போதுதான் ஊருக்குள் வெள்ளை ரோஜா. மன்வாசானை. அன்னக்கிளி,பகலில் ஒரு இரவு ராகங்கள் மாறுவதில்லை  நூல்வேலி , நெஞ்சத்தைக்கிள்ளாதே! எனப் பல பாடல்கள் வீட்டில் ,இருக்கும் வானொலிகளையும்  ஆக்கிரமிப்பி செய்து கொண்டு  இருந்தது .


அதுவும் சின்னமாமாவின் கலியாண வீடியோ மட்டுமே இன்று அடுத்த தலைமுறைக்கு யார் யார் என்ன உறவு என காட்சியாக காட்டக்கூடிய ஆவணமாக இருப்பது .அதில் இருந்தவர்கள்  இன்று மறைந்தவர்கள் போக இன்று யுத்தம் அதுகடந்து பல்வேறு போராட்டக்குழுவில் போய்  உறவில் தொடர்பில்லாமல் போனாலும்!


   அவர்களை எல்லாம் எனக்கு நினைவுக்கு கொண்டு வரும் பாடல் மட்டும் மல்ல இந்தப் படம் பார்த்த கலியாணவீட்டு  படக்காட்சி அனுபவம் சிலிப்பையும் தரும்.

 நம் ஊருக்குள் முதலில்  தொலைக்காட்சி வந்த வீடு   எங்க சின்ன  மாமி வீடு இன்றும் ஒரு தலைமுறைக்கு இந்த தொலைக்காட்சியையும்( டீவி  )சேர்த்துச் சொன்னால் தான் முந்திய தலைமுறை இளைஞர்களுக்கு என்னையும் தெரியும் நிலை .அந்தளவு அப்போது சிறுபராயம் அழியாத நினைவுச் சின்னம் அன்பே சங்கீத்தா .  மெட்டி  படம் போல.

கலமாற்றம் ,வியாபாரம் ,மற்றும் அரசியல் நிகழ்வு ,குடும்பங்கள் தனிக்குடித்தனம் என இந்தியன் ஆமி வருகை எங்க கிராமத்தை சிதைத்து. பலரையும் பல திக்கில் ஆக்கிய போதும் என் நினைவுகள் 1991 கோட்டை முற்றுகை வரும் வரை ஊரில் தீவில் கழிந்த நாட்கள் இன்னும் பசுமை .


அப்போது இருந்தே வானொலிக்கு தபால் அட்டை போடும் பழக்கம் எனக்கு உண்டு அது பெரியமாமி பழக்கியது அதுக்காக பாட்டியின் காசை முடிச்சில் இருந்து சுட்டதும் அடிவாங்கும் மற்ற உறவுகள் பாசம் எல்லாம் இன்று கால மாற்றம் பிரிவுகள் என பலநாட்டில் வாழ்கின்றோம்! ம்ம் !

அதிக தொடர்பாடல் தொலைபேசியில் பாடல் கேட்ட காலம் வந்த போதும் என்னை  வானொலி இன்றும் நேசிக்க வைக்கின்றது . இடப்பெய்ர்வு அதன் பின் இ.ஒ வானொலி என் கவிதைகளையும் பாடல் தேர்வுகளையும் தாங்கி வந்த சுகமான சுமைகள்  அந்த வசந்தகால நதி ஓடம் நாட்கள்  மீண்டும் வராத காலகள்!

வானொலி  அறிவிப்பு ஆசையில் இருந்த போது மூன்றாவது தேர்வில் உள்நுழைய நாட்கள் எண்ணிக்கொண்டு  இருக்கையில் கம்பி எண்ண  இனவாதம் தந்த பரிசு நானும் புலம்பெய்ர்ந்தாலும் .இன்னும் பாடல் கேட்கும் ஆசை தேயாத பால்நிலாப்பாதை .

இன்று நான் புலம்பெயர்ந்தாலும் என் குடும்பங்கள்  மூன்று தலைமுறை ஒன்றாக இருந்த இந்த வெள்ளை ரோஜாப்படமும் அதன் பாடல்களும்.  மறக்க முடியாது  சின்னமாமாவிடம்  இன்றும் இந்த கலியாணவீடியோ இருக்கின்றது பொக்கிசமாக.  கிராமத்தை விட்டு மலையகத்தில் குடிபெயர்ந்த பின்னும் அவரிடம்..



ஆனால் குடும்ப நிலைகள் , அரசியலில் ஆளுக்கொரு பார்வை ஆனாலும் குடும்பம் ஒரு கோயில் ஒவ்வொருத்தர் பார்வையில் .இன்றும் எனக்கு பிரபு  இதில் போட்டு இருக்கும் சங்கிலி மீது ஒரு ஈர்ப்பு உண்டு!ஹீஹீ!!

  சின்ன மாமா கலியாணக்காலத்தில் அப்போது அதுதான் பெசன் மாமாக்கள் ஆளுக்கொரு அரசியல் குழுவில் மல்லுக்கட்டியகாலம் அழியாத கோலங்கள் .அதுவும் குடும்பத்தில் கலியாணம் முடித்தால் மாப்பிள்ளை சீதனமாக பாட்டி பேரணுக்கு சங்கிலியும் பேர்த்திக்கு மல்லிகைமொட்டு வடிவத்தில் சங்கிலியும் (அம்பிகா கழுத்தில் இருக்கும் சங்கிலி போல ) போடும் சம்பிராதாயம் தொடரும் ஒரு குடும்ப பாரம்பரியம் .காசை வியாபாரத்தில் அழித்தாலும் நகை அழிக்க முடியாது என்பது பாட்டியின் கற்பனை! 
 அப்போது அது இரண்டுதலை முறைக்கு தொடர்ந்த  ஒரு தொடர் .பெரியமாமா அவர் தன் மகனுக்கு என கிராம  இடப்பெயர்வு வந்தாலும் . பாதுகாத்தது. ஆனால் 1995 இன்  பின் மூன்றாவது தலைமுறையில் இருக்கும் பலருக்கு பாட்டி ஒரு கிராமத்தில் பேரன்கள் ,பேர்த்திகள் .புகைப்படத்தில் பார்க்கும்  நிலையில் ஈழத்தில் பிறந்த பயனை அனுபவிக்கும் நிலை.
 அதுகடந்து திருமண  பந்ததில்  சேர்ந்து ஆசிர்வாதம் வேண்டும் நிலை இந்தப்பேரணுக்கு கிடைக்காத நீதிக்குத்தண்டனை ! என்றாலும் பாட்டி பாசம் ஒரு பூப்பூவாய் பூத்திருக்கும் பூவே பூச்சூடவா போல  இன்றும் நாலாவது தலைமுறை பார்த்த பாட்டி 5 தலைமுறையும் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசையும்! 
சமயத்தில் வீட்டுக்காரி கேட்பது தலையில் இருந்த முடி என்னாச்சு ?என்றால் நான் சொல்லுவது இந்தப்படத்தில் பிரபுக்கு இருந்த தலைமுடிபோலத்தான் என் சின்ன மாமாவுக்கு கலியாணத்தின் போது  அப்போது இருந்திச்சு.!ஹீ
 இப்ப அவர் தலையில் சூரியோர்தயம் பாக்கும் ரகசியம் என்ன என்று போய்  உன் சித்தப்பாவிடம் கேளு ! பரம்பரையின் ரகசியம் எல்லாம்  வரலாறு முக்கியம்  ஹீ! அடித்தால்   ஏந்திரன் மொட்டைபாஸ் !ஹீ
////////// 
இந்தப்பாடலுக்கு நான் பல தபால் அட்டை போட்டதும், மனைவியுடன் சென்னை பாரிஸ்கோனார் போய் பல்பு வாங்கியகதையை இன்னொரு பதிவில் தருகின்றேன்! ஏனோ இந்த பாடலில் ஒரு சுகம்.கேளுங்கள்!!

25 July 2012

பஹாரனில் ஒரு பொழுது!!!

கோடைக்காலம் என்றால் சுற்றுலாப்  பயணங்கள் எதிர்பார்ப்பையும் ஆசையையும் தூண்டிவிடும் .

போக நினைத்தாலும் எல்லாம் எல்லாருக்கும் அமைவது கடினம் . வேலைத்தளங்களில் .

கடந்த ஆண்டு கோடை விடுமுறையை தமிழகத்தில் செலவிட்ட போது மிகவும் மனதிற்கு புத்துணர்ச்சியும் பல நீங்காத நினைவுகளையும் தந்து சென்றது .


அதை பதிவாக நானும் தனிமரத்தில் ஆலய தருசனம் ,மற்றும் கேரளா பயணத்தை சுற்றுலா போகக்கூடிய இடமாக கருதும் இடங்களை காட்சியாகவும் இணைத்திருந்தேன் .http://www.thanimaram.org/2011/09/blog-post_25.html


அதில் சொல்லாத அனுபவம்  பஹாரன்  விமானநிலையத்தில் கழித்த பொழுதுகள்.


பல்வேறு தேசத்தவரையும் பல்வேறு நாடுகளுக்கு காவிச்செல்லும் விமாணத்திற்கு காத்திருக்கும் தருணங்கள் இனிமையும் ,இம்சையும் கொண்ட ஒரு உணர்வு.

சென்னைக்கான என்பயணத்தை பாரிஸ் வழியாக புறப்பட்டு கட்டார் ஏயாவேசில் பஹாரன்  ஊடாக சென்னைபோகும் திட்டம் கடைசிநேர பயண ஒழுங்கினால் ஏற்பட்டது.

எப்போதும் டூபாய் வழிதான் எனக்குப் பிடிக்கும். எதிர்பார்த்த திகதியில் அந்த வழியூடாக செல்ல முடியாத நிலையில் கட்டார் சேவையில்   பயணிதேன் .

கட்டார் சேவை  பாரிஸ்சில் இருந்து சுகமாக தொடங்கியது ஆனால் பஹாரனில்  மறுவிமாணம் ஏறுவதற்கு காத்திருந்த நிலை ஒரு பகல் பொழுதை ஏப்பம் விட்ட கணக்கு .

இருந்தாலும் அந்த சுகத்தையும் அனுபவித்தது மனைவியைக் காணப்போகும் அன்பு மேலிட்டில் .

புலம் பெயர்ந்தபின் அதிகம் உறவுகள் பல திக்கில் இருக்கும் இனவாத யுத்தம் தந்த நிலையில். இன்மைக்கும் இனி எழு ஜென்மத்துக்கும் துனையாக வருவேன் என்று கைபிடித்த மனைவியை பிரிந்து வாழும் ஆண்கள் இன்று பலர் புலம்பெயர்வில் பல்வேறுகாரணங்களுக்காக .


"ஆனாலும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் "என்பது போல நினைவுகள் அன்பான உறவைச் சுற்றித்தான் வட்டடமிடும்.



இருக்கும் நேரத்தில் பஹாரன் விமான நிலையத்தில் சில காட்சிகள் மனதில் பதிந்தது .

இந்த இரு ஆரபிய மீனவர்கள் படம்!


இவர்களை!ஆவலில்மேலே நோக்கும் போது .

நீ யாராப்பா? ஊருக்கு புதுசா ?வா சேர்ந்தே வலைபோடுவம் தனிமரம் தோப்பாக்காது இப்போதைக்கு என்பது போலவோ :)))


அவரை விட்டு வெளியில் வந்தால் பஹாரனில்  இருக்கும் நண்பணுக்கு ஒரு அழைப்பு.


ஹலோ- மச்சான் எப்படியிருக்கின்றாய் ?
நண்பன் ..- நீ எப்படா வந்தாய் அங்கிருந்து ?இப்ப பஹாரனில் இருக்கின்றாயா ?

நான் - ஓம் மச்சான் இன்னும் 7மணித்தியாலம் தாமதமாகமும் பயணம்!

நண்பன் - நான் இங்கு வந்த பின் தான் தெரிஞ்சுது மச்சான் வெயிலா இந்தநாட்டில் ஐயோடா ?நம் வாழ்வு என்ன ஓட்டகமா? அரபு சேட்டிடம் மாட்டிக்கிட்டு நாம் படும் பாடு ஐய்யோடா !!சொர்க்கமே என்றாலும் நம் நாடு போலாகுமா?

நான் - ம்ம்

நண்பன் -அப்புறம் எங்க கிளம்பிட்டாய்?

நான் - சென்னைக்கு வீட்டுக்காரியைப் பார்த்து ரொம்ம்ம்ம்ப நாளாச்சு !

நண்பன் -என்ன கொடுமை ஈழத்து வாழ்வு எல்லாம் அகதியா அலையும் வாழ்வு!







நான் - !ம்ம்!

என்ன வேண்ட பாஹரனில் உனக்கு?

நண்பன் - இங்க விலை அதிகம்டா ?
நீ சென்னையில் எனக்கு ஒரு மேசையை ஒதுக்கி என் நினைவாக நம் நண்பர்களுக்கு ஒரு டாஸ்மார்க்கில் ஒரு கட்டிங் சொல்லிவை நம்ம நினைவுகளை அசைபோடுவம் ராஜாவின் ராஜாங்கத்தோடு!


நான் -ம்ம்
நீ விரும்பியது எது மச்சான்?? இதில் எல்லாம் என் தெரிவு சந்திச்சு எந்தனை வருசம் மீண்டும் ஊருக்குள் வாழ்வோம் அந்த நினைவுகளோடு(ஹீ நீயா நானா80 தாக்கம் ஹீ )

சரிடா நண்பா நீ வேலையைப்பார் விமானம் தயார் !

மீண்டும் சென்னை போய் கதைக்கின்றேன்!

தொலைபேசியைக்கடந்து வந்தால் நண்பன் நினைவில் மீண்டு கொஞ்சம் ஓய்வுக்கு ஒதுக்கிய நித்திரை கொள்ளும் இடம் இது.

நோன்புக்கஞ்சியின் புனிதமும் அந்த அன்பும் மதம் ,இனம் கடந்து வியாபாரம் தந்த சுகம் போல இந்த ரம்லான் நினைவு வாட்டுகின்றது .

எத்தனை வட்டல் அப்பம், புரியாணிச் சுவை இன்னும் நாவில் மன்னார் நண்பன் போல !
ம்ம்

இவை கடந்து வந்தால் எதிர்பாராமல் முன்னர் முகம் தெரிந்த வியாபார நண்பர்.!


ஓமாத்தயா ஞாபகம் இருக்கா ?கொழும்பில் நாலாம் குறுக்குக்தெரு?

நான் -- சலாம் பாய் மறக்கத்தான் முடியுமா ?

என்ன ஊர் பயணமா ?ஏன் ஏர்-லங்கா நேர போகுமே பாய்?


அதுவா நம்ம ஹாஜி சென்னையில் இருப்பார் .அவரையும் சேர்த்துக்கொண்டு அப்படியே தி.நகர் புடவையும் சேர்த்துக்கொண்டால் கொஞ்சம் ஏதாவது தேறுமே !

ம்ம்

அப்புறம் மாத்தயா சோக்கா இருக்கின்றீங்க? நிக்கா முடிஞ்சா ?
நம்ம பாய் இன்னும் சொல்லுவார் வாங்க அப்படியே வியாபாரம் செய்யலாம் இன்னும் மன்னார் நம் ஊராச்சே!
நினைப்பு இருக்கா?

எப்படி பாய் மறக்க முடியுமா?  அந்த வியாபார வாழ்க்கையை.வருவேன் பாய் நிச்சயம் ஒரு சுற்றுலா என்றாவது.

மாத்தயா இந்த பையில் பாரம் இல்லை என்றால் நம் சாமான் கொஞ்சம் இருக்கு வெயிட் சேர்த்திருக்கின்றீங்களா ?

நான் - எனக்குப் பாரம் ஏதும் இல்லை தாங்க சென்னை வரை ஒக்கே .பாய்.


கிளம்பலாமா இதோ சென்னையில் சூட்டத்தைத் தணிக்க இளநீர் குடிப்போம் .

விமான ஏற்ற அழைப்பில் எல்லோரும் சென்னைக்கு தயாராக இருக்கும் போது .

விமானம் வரிசையைப் பாருங்கள்!:))
பஹாரனில் இருக்கும் இன்னொரு நண்பன் ஞாபகம் வருகின்றது பள்ளியில் கைவினைப்பாடத்திற்கு ஒரு விமானம் செய்துவந்து. அதை மழையில் நனைத்து கப்பல் விட்ட நினைவுகள் கடக்கின்றது .அவனை நேரில் பார்த்து வருசம் 15 ம்ம் இனி எப்போது சந்திப்போம்?

கட்டார்  ஏயாவேஸ் கடந்து அழைக்கின்றது சென்னைப் பயணம்!

24 July 2012

பெண் அல்ல தேவதை!

வணக்கம் உறவுகளே நலமா?

கோடைகாலத்தின் வரவுகளில் கொஞ்சம் எதிர்பாராத ஒய்வு கிடைக்கும் போதெல்லாம். மனது இசையை நாடிச் செல்கின்றது

.அதுவும் விரும்பியவர்களுடன் இசையை மீட்டிப்பார்க்கும் போது வசந்தகாலத்தில் டூயட்டில் இறங்கிவிட மனம் விரும்புகின்ற நிலையில். பொருளாதார தேடலில் நேசிக்கும் உறவுவை கொஞ்சம் பிரிந்து இருக்கும்  பிரிவுகள் மனதில் சில சமயம் சலிப்பையும் ஏக்கத்தையும் தருகின்ற நிலையில் எழுத நினைப்பது கூட ஒரு வெறுமையைச் சொல்லும் செயல் போல இருக்கின்றது.


நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் இந்த வசந்தகால நிலையில் தனிமரமும் சில நேரங்களில் தடுமாற்றம் காண வேண்டிய நிலை.

என்றாலும் இசை ஒரு ரசவாதம் பிரிவுகளின் கால இடைவெளியையும் தனிமையையும் போக்கி கற்பனைகளுடன் புத்துணர்ச்சி சேர்க்கின்றது.

" நான் ஆக நான் இல்லைத்தாயே" பாடல் கேட்கும் போதெல்லாம் இந்தப்பாடல் பொருந்தம் தரும் ஒரு இசை வாரிசுதான் நம்மவர் தேசத்தில் கலைக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் உடனடியாக ஞாபகத்தில் வருவார் எனக்கு .சாரங்கன் சிறிரங்கநாதன்.


இவரை நான் முதலில் அறிந்தது நம்மவர் இசையில் ,நம்மவர் பாடும் சந்தனமேடையில் தான் .அதில் இவர் மீட்டிய ஒரு பாடல் அன்னையின் சிறப்பை அழகுறச் சொல்லியிருந்தது."தாயே என்று "

அந்தப்பாடல் இன்றும் இலங்கை ஒலிப்பரப்பில் பொக்கிசமாக இருக்கும் என நினைப்பு கடல்கடந்தாலும் காணமல் போகவில்லை.


கலாசூரி அருந்ததி சிரிரங்கநாதனைத் தெரியாத வானொலியோடு பரீட்சமுள்ள நேயர்களும் ,ஊடகங்கள் மீது ஆசையில் கனவுகள் சுமந்த உள்ளங்களும் மறந்து போகாத ஒன்று என்றால் மிகையாகாது.ஒரு காலத்தில் .


என்றாலும் இனவாத யுத்தம் இராணுவக்கட்டுப்பாடு என்றும் கட்டுப்பாடு இல்லாத பிரதேசம் என்றும் ஈழத்தைப் பிரித்து வைத்திருந்த நிலையில் .


சிலர் நம்மவர் இசையை அதிகம் அறியமுடியாத நிலையிருந்ததையும் மறுக்கவோ ,மறைக்கவோ முடியாத ஒன்று !

எது எப்படியோ அருந்ததி ஆசிரியராக பலருக்கு முறையாக இசையைக்கற்பித்த ஒரு குருகுலம் தாயகத்தில்..


இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் நிகழ்ச்சிக்கட்டுப்பாட்டாளாக இருந்தார் 1997 இன் பிற்பகுதியில் என்பது நினைவில் வந்து போகின்றது .அதன் பின் முக்கிய பதவியில் இருந்தாரா என நான் அறியேன் அவரின் வாரிசுதான் சாரங்கன் சிரிரங்கநாதன் .

ஆரம்பத்தில் மோகன் -ரங்கனுடன் வாத்தியக்கலைஞராக மேடை ஏறினாலும் பின் பலருடன் சேர்ந்தும் தனித்தும் நம்மவர் இசையை பல இடங்களில் முழங்கியவர் என் பள்ளிக்காலத்தில் .

சாரங்கன் முறையாக மேற்கத்தேசிய சங்கீதம் பயின்ற இசை மைந்தன்.மற்றும் வடஇந்திய அத்தோடு தாயக ,சகோதரமொழி இசை மீதும் நாட்டம் கொண்டவர்.

அதிகம் சகோதரவானொலிகளுக்கும் குறியிசையும், விளம்பர இசைகளும் ,சில சகோதரமொழி தொடர்களுக்கும் ஜிங்கிள்ஸ் சேர்த்து (இசைக்கோர்வை)பின்னனியில் இருந்து செயல்பட்டார்! ஒரு காலத்தில் ஈழத்தில்.

1993-1997 காலப்பகுதியில் இவரின் இசையினை மேடைக்கச்சேரிகள் மூலம் ரூபவாஹினி ,சுயாதீன தொலைக்காட்சி (ITN)என்பவற்றிலும் ,

வர்த்தகசேவையில் வரும் சந்தனமேடையிலும் ஆங்கங்கே கேட்டு ரசித்த காலம் நம்மவர் இசை வெள்ளத்தைப் நேசித்த ஒரு வழிப்போக்கனாக என் நினைவுகள் மனதில் இன்றும் நினைவுகளில்!.

பதியம் போட்ட மல்லிகைச் செடிபோல

முற்றத்துமல்லிகை மணக்கும் என்ற ஆர்வத்தால் ஆகும் .

ஆனால் நம்முற்றத்தில் வளரும் மல்லிகையை பொசுக்கும் ஊதாரிகளும் இருக்கின்றார்கள் .

இனவாதம் ,பிரதேசவாதம் ,மதவாதம் வியாபாரப்போட்டியில் கழுத்தறுக்கும் முகமூடியனிந்த பலர் என கண்டு கொண்டது பின் தனி இசையார்வத்தில் வெளிக்கிட்டபோது

.என்றாலும் சாரங்கன் இசையை பலர் அறிந்திருப்பார்கள் நம்மவர் தேசத்தில் மொழி கடந்து என்பது நிஜம்

.என்ன நம்மவர்கள் திறமையாக இருந்தாலும் ஊடகங்களின் இருட்டடைப்பும் அன்னிய ஊடுருவல்களும் நம் திறமையாளர்களை வளர்க்கவில்லை என்பது நிஜம்.

ஈழத்து ரசிகனாக விடுதலையில்லாத நம் சுதந்திரம் போல நாமும் எல்லா வளமும் இருந்தும் அடிமையாக வாழும் நிலையில் பலர் இசை நேசிப்பைத் தொலைத்துவிட்டு பொருளாதார வண்டியில் தொற்றிக்கொள்வதன் மூலம் தம் முகம் என்ன என்பதை பதிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறியமுடியும் நம்மவர் பற்றி ஒரு தேடலில் தேடும் போது.

இப்படித்தான் நானும் நீண்ட நாள் மறந்து போன சாரங்கன் சிரிரங்கநாததனை நேற்று வேற ஒரு பாடலைத் தேடும் போது எதிர்பாராமல் பார்த்தேன் கையில் கிடைத்த இந்தப்பாடல்!இது!


மனதில் பல கற்பனைகளையும் நினைவுகளையும் சுமக்கின்றது காதல் உணர்வில் ஒரு ஆண்மகன் எப்படி வர்ணிப்பும், வடிவமும் கொடுக்கின்றான் என்பதை அதிகம் அலட்டல் ,இரைச்சல் இலாமல் இசையும் ,கவிதையும் செய்து இருக்கும் விதம் ஒரு புறம் ! இருக்க.

நம் தேசத்துக்கலைஞர்கள் சிவாஜி முதல் கோபலகிருஸ்ணன் வரை தென்னிந்திய கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார்கள் இது அடுத்த தலைமுறை அறியவேண்டிய ஒன்று .

அதே போல ஜிக்கி சகோதரமொழியில் பாடல் பாடியிருப்பது போல நம்மவருடன் சேர்ந்து காந்தக்குரலோன் ஹரிகரணும் சேர்ந்து பாடியிருக்கும் பாடல் இதையும் ரசிப்போமா ?

"அவள் ஒரு மெல்லிய பூங்காற்று ..
நெஞ்சம் அவள் தொட்டாள் பூக்கும் .வித்தககவி பா.விஜய் .

நீங்களும் கேளுங்கள் நம்மவரின் இன்னொரு திறமையை .இன்று சாரங்கன் இலங்கையிலா ?அல்லது வேற எந்த தேசத்தில் தடம்பதிக்கின்றாரா என்று நான் தேடும் நிலையில் இல்லை.

என்றாலும் அவரின் ஆரம்பகாலத்தை மறக்க முடியாத நாட்கள் இன்னும் ஞாபக இடுக்ககையில் .அதுவும் மோகன் ரங்கன் நினைவுகள் பல தொடர் பதிவாக்க எண்ணம் சிறகடித்தாலும் நேரம், ஓய்வு வண்ணம் கொடுக்கணும் வார்த்தைக்கு.


அடுத்த தலைமுறையாவது நம் தேசத்தில் சுதந்திரமாக நம்மவர் இசையை பிரவகிக வேண்டும் என்பதே என ஆதங்கம் .


 ரசிக்கும் குர்லகள் ஜோடியில்

முற்றத்து மல்லிகைக்கு ஊடகங்கள்  இனியும் இருட்டைப்பு  செய்யும் நிலைக்கும் , செய்யமுயல்வோருக்கும் எல்லாம்   மாற்றாப்பார்வையோடு இணையத்தில் ஒரு வானொலி நாளைமுதல் 24 மணிச்சேவையோடு அற்புதமான நிகழ்ச்சிகளோடு உங்களை நாடி வருகின்ற தரணியெங்கும் புரட்சி இணைய வானொலி .!புரட்சியில் இணையுங்கள் தரணியில் புதுமை இணையத்தில் அதிரடியாக நம்மவர் குரல்!  !

19 July 2012

அடுத்த முதல்வர் நண்பனா? !!!


வணக்கம் உறவுகளே நலமா??


 இந்தப்பதிவு நகைச்சுவைக்காக மட்டும் யாரையும் நோகடிப்பதல்ல!



 அரசியல் ஆசை பலருக்கு பல வடிவங்களில் வரும். மக்கள் சேவையே மகேஸன் சேவை என்று வாழ்ந்தவர்கள் நிலையை இன்றைய ஜனநாயக ஆட்சி என்று பாராளமன்றத்தில் கதிரை வியாபாரம் ஆகிப்போன நிலையில் .

சாமானிய வாக்காளன் நினைப்பது எல்லாம் ஒரு நல்ல பிரதிநிதி அரசியலில் இறங்கி வரணும் என்று அதாவது முதல்வன் படத்தில் சங்கர் சொன்னது போல அரசியல் ஒரு சாக்கடை என்றுவிட்டு நாம் போய்க்கொண்டு இருக்காமல் அதில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே !
அப்படித்தான் நம் தேசத்தில் இப்போது சப்பிரமுகமாகாண மாகாணசபைத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில் .
பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி பிரச்சார நெடியை தீவீரமாக்கி வரும் நிலையில்.http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39304
 என் நண்பணுக்கு வந்த கற்பனையை கொஞ்சம் நேற்றில் இருந்து முகநூலில் பார்த்து ரசித்ததும் மட்டும்மல்ல சிந்திக்கவும் வைத்த காட்சியை உங்களோடு பகிர்கின்றேன்.
 அந்த சப்பிரமுக மாகாண தொகுதியில் (இரத்தினபுரி முதல்  பலாங்கொடை வரை! ) இருக்கும் பலருக்கு பல ஆசைபோல என் பள்ளி நண்பன் ஆசை இது ! இந்த நண்பனுக்கும் எனக்கும் உறவு வந்ததே   சாதாரனதரம் (o/l )படிக்கும் போதுதான். ,நண்பன் முதல் வாங்கில் இருக்க நான் இருந்ததோ கடைசி வாங்கில் என்பது தனிக்கதை ஆனால் எத்தனை படம் ஒன்றாக பார்த்தோம் என்பது சாதனை !ஹீ  !இரத்தினபுரி பெற்றெடுத்த வைரம், மலையக மக்களை காக்க வந்த விடிவெள்ளி, வருங்கால மத்திய மகாண முதலமைச்சர் எங்கள் அண்ணன் சத்திவேல் பபுதரன் தொண்டமான்!
அதுகடந்து முகநூலில் பால்பு வாங்குவான் அதிகம் என்னிடம் சிக்குப்பட்டாள்  கோடிஸ்வரன் ஒலிநாடாவை  வாங்கிச் சென்று இன்றும் தொலைத்துவிட்டு வேட்டி உருவிய  கதை தனித்தொடர்!  
இப்போது அவன் குரல் கொடுக்கும்!  சாமானிய மக்களின் குரலினை இவன் சொன்னவிதம் கண்டு ரசித்து சிரித்ததைப் பார்த்து நீங்களும் சிந்தியுங்கள்!
 வசந்தகாலத்தில் நாட்டிற்கு சொல்லும் வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் என் நண்பன் அடிக்கடி கேட்பது எப்ப வருவாய் என்னைக்கான என்று இப்படி ஆசை இவனுக்கு இருக்கும் போது எனக்கு அரசியல் ஆசையில்லை அந்த அரசியல்தானே நம்மை . ஏதிலியாக ஆக்கியிருக்கின்றது என்பது என் கருத்து ! 

13 July 2012

வைரமுத்துக்கு வாழ்த்து!

21 நூற்றாண்டியில் ஈடில்லா கீர்த்தி பெற்ற பாடல் ஆசிரியர்!,கவிஞர்,இலக்கியவாதி என பன்முகப்பார்வையில் பார் போற்றும் கவிப்பேரசு வைரமுத்து அவர்களே உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!


என்றும் உங்கள் புலமைத்தமிழ் எங்களுக்கு புத்துணர்ச்சி தந்து கொண்டு இருக்க வேண்டும் என ஒரு ரசிகனாக ,வாசகனாக, யாசிக்கின்றேன் !






 எப்போதும் கவிஞர்களுகு வித்துவச் செருக்கு வரும் என்பதை உங்களுக்கும் ,இசைச்செருக்கு வரும் இளையராஜாவுக்கும் என்று இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள் வாசித்த போது புரிந்துகொண்டேன் நல்ல பாடல்களை நேசிக்கும் என் போன்ற வழிப்போக்கனின் ஆசையில் நேற்றுப்போட்ட கோலம் வைரமுத்து இனி!திருத்தி எழுதிய தீர்ப்பு அல்ல நட்பில் என்று . !




வானம் எனக்கு ஒரு போதிமரம் எழுதியவர் இனி ரகுமானோடு மறு அவதாரம் கண்டபோது காவி நிறத்தில் ஒரு காதல் படித்தேன்.காதில் ஒலித்த என்ன சொல்லப்போறாய் ,! என்ற பாடல் இளைஞனாக இருந்தாலும் மனதில் அடுத்த ஆத்து ஆல்பேர்ட்டில் வரும் இதயமே இதயமே பாடல்தான் அமைதி தந்தது.




 .எல்லா நதியிலும் என் ஓடம் வாசித்த போது சிற்பியே உன்னைச் செதுக்கின்றேன் திருஞாணம் போல என்னையும் செதுக்கினீர்கள் வைகரை மேகங்கள் 16 வயதில் நீங்கள் நூலாக வெளியிட்டபோது அதே 16 வயதில்தான் நானும் உங்கள் வாசகனாக என்னையும் தீட்டிய என் பழைய பனை ஓலை போல .இதுவரை நான் என தேடித்தேடிப் படித்தேன்




.நேற்று இல்லாத மாற்றமும் .வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாத ஒரு உணர்வு பாடலாக சீண்டிய போது டூயட் படத்தில் பிரபு பேசிய ரத்தத்தினால் வந்த யுத்தத்தினால் கவிதை எழுதினே கண்ணிருந்தால் வாசித்துப் போடியை அதிகம் ரசித்தேன் .தமிழ்புலமைக்கு .


தலைமுறைமாற்றம் போல நீங்களும் தண்ணீர்தேசம் எழுதிய போது தென்மேற்குப் பருவக்காற்று பாடல் ஒலித்தாலும். ரசித்தது (ஒரு ஒடை நதியாகின்றது )தென்றல் வந்து என்னைத் தொடுமும். தலையைக்குனியும் தாமரையேயும் தான் அது எனக்குள் வந்த மாற்றமோ நான் அறியேன் கவிஞரே!



இலங்கையில் நடக்கும் யுத்தம் நிறுத்து என்று (பூவெல்லாம் உன் வாசத்தில் )நீங்கள் பேனா யுத்தம் செய்த போது நானும் உங்கள் மீது ஈர்ப்பில் ரசித்தேன் உன்னைப்பார்த்த பின் நானாக  இல்லையே என்று (காதல் மன்னன் )பாட்டு  எனக்கும் பிடித்த போது நானும் உருகினேன் ஒரு பொய்யாவது சொல்கண்ணே  ஜோடி பார்த்த் போது எங்கோ ஒரு இடத்தில்  என்று அதுவும் ஒரு போர்க்களமும்  இரு பூக்கள்  விரும்பி வாசிப்புக்கு நேசிப்பாகியது!


 அப்போதும் வானம் தொட்டு விடும் தூரம்  என்றும் இன்னொரு  தேசிய கீதம் வாசித்தாலும்   அமர்க்களத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டபோது நாமும் கேட்டோம் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் ஈழத்தில் என்று  ஆனாலும் கேள்விகளாள் ஓரு வேள்வி போல இறுதி யுத்தம் நடந்த போது நீங்கள் எலிக்கறியும் சோழமன்னர்  என்று...  (ஆயிரத்தில் ஒருவன்) படத்தில் எழுதிவிட்டு உங்கள்  பாசத்தலைவர் கருணாநிதிக்கு பாட்டுடைத்தலைவன் என்று ஜால்ரா போட்ட போது கவிராஜன் கதை. வான்ம் தொட்டுவிடும் தூர்ம்தான் செந்தோழன் !

சிகரங்களை நோக்கி திருஞாணம் போல நீங்களும் ஒரு சாதாரன கவிஞர் காலத்தைக்காட்டும் கண்ணாடியாக இருக்கும் சந்தர்ப்பத்தையும் மெளனத்தின் சப்தங்கள்  எழுதினாலும் நான் வடுகப்பட்டி முதல் வால்கா வரை என்று எழுதிவிட்டு க்ருணாநிதியிடம் சர்ணாகதியாக வைரமுத்து  பொழிவிழ்ந்து போன் நிலையை எண்ணும் போதெல்லாம் !


கல்வெட்டுக்கள் ,எல்லாம் என் ஜன்னலின் வெளியே சிலதைச் சொல்லனும்  காற்றின் மொழியே  கேட்ட  செவிகள்  .

வில்லோடு  வா நிலாவே  வாசித்தாலும் விடைதேடுவது! பழனிபாரதி ஆங்கிலம் கலப்பதாக நீங்கள் குட்டிய தருணம் அதிகம் சூடு பிடித்தது  நாளேடுகளில்.

  அதன் பின் வித்தக்கவிபா.விஜய் கருணாநிதியிடம் அதிகம் ஒட்டிய போது நீங்கள் ஆஸ்தான் இடம் பிடிக்க  அடித்த காக்கா பிடிப்பு எல்லாம் உங்கள் மீது ஒரு காழ்ப்புண்ர்வை தந்தது நிஜம் .


வாசிக்கும் நெஞ்சம் யோசித்த போது கிராமத்துக் கதை கருவாச்சி காவியம் சந்தணமும் ,சாக்கடையும் தெளிந்து கொண்டேன் தத்துவஞானியாக என்று நானும் நம்பியிருந்தேன் !.

நீங்கள் இன்னும்  சிலவிடயங்களுக்கு குரல் கொடுப்பீர்கள் என்று  பத்துக்குள்ளே  நம்பர் ஒன்று சொல்லு பாடல் ஒலித்தாலும் கவிதைக்கு நீங்கள்  தரும் ஆளுமை அதிகம்!.

 உங்களின் கிராமிய உணர்வும், நவநாகரிக உலகும் கைராசியாக அமைந்தது ஒரு ரத்ததானம் தான் ..அதுதான் உங்களுக்கு தாய்வீட்டு சீதனம்  அந்த இயல்புதான் புதிய கவிஞர்களுக்கு  வழிகாட்ட வேண்டியவர் வாழ்த்தி வரவேற்காமல்.

  அவர்களை கிள்ளுக்கீரையாக தீண்டும் குணம். உங்கள் மகன் மதன்கார்க்கி மட்டும்தான் அடுத்த கவிஞர் ஆகணும் என்று  அவ்வப்போது சிலிக்கன் சிங்கம் ஆங்கிலம் கலந்து எழுதும் போது பாவம் பழனிபாரதி ஒதுங்கியிருந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் ஞாபகம் வருகின்றது கவிஞரே!


ஆனாலும் இன்னும் ஒரு கேள்வி என் மனதை குடைகின்றது. பா.விஜய் சமர்2009 கவிதைத்தொகுதி ஈழத்து முள்ளிவாய்க்கால் அவலத்தைப் பாடினார். கருணாநிதிக்கு செல்லப்பிள்ளையாக இருந்தாலும் ஒரு கவிஞனாக!

 வாலி வயதான தாயினை வரவிடாமல்  கழுவேற்றிய அரசினை சாடி கவிதை பாடினார்!

கண்ணகி தேசமே என்று கவிதாயினி தாமரை.  பழனிபாரதி .அறிவுமதி வலி கவிதை தொகுப்பாக என பலர்  , சொல்லோவியம் தீட்டிய போது எல்லாம் பாட்டுத்தலைவன் என்று நெஞ்சுக்கு நீதி பொய் எழுதியகருணாநிதியின் பின் சாமரம் வீசும்  நீங்கள் இன்னும் மெளனம் காப்பது ஏன்,,,,.,,,,,,,,,,,,,,,!<<< ,?கவிதையும் ,கதையும் ஆட்சியின் பின்னே அடுத்த நாட்டுக்கதை என்று  வாகைசூடவா வாய் பேசாமல் இருப்பது !,,?


 தமிழ் ,தமிழன் ,தலைவன் ,வீரம், எல்லாம் சொல்லும் உங்கள் பேச்சு கேட்கும் போது  வானம் தொட்டும்விடும் தூரம்தான் கதையில் சொல்லிய!

 (இந்தக்கூட்டம் நமது ஜனநாயகத்தை அழுக்குப்படுத்திவிடக்கூடாது என்று ஆசைப்படுகின்றோம்  )என்று சொல்லியதை ஒரு வாசகனாக வேண்டுவது பிரபல்யமான நீங்கள்  வலிகள்  சுமந்த நம்மவர் கதையை, கவிப்புலமையில் கொஞ்சம் கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்காமல் அடுத்த தலைமுறைக்கும் தெரியும் வண்ணம் .

நம் துயரங்களை  அழகாய்  கவிதையாக, கதையாக மெட்டுப்போட வேண்டும் .
 என்பதே  இந்த வழிப்போக்கனின் ஆதங்கம்!


இந்த ஆதங்கம் ஒரு வாசகனாக !


ஆனால் பாடல் ரசிகனாக நீங்கள் எப்போதும் எங்கே என் புன்னகை  தாளம் படப்பாடலையும் ,என்னைக்கானவில்லையே காதல் தேசம் பாடலையும் கடந்தாலும் நீங்கள் வரிபிடித்த! ஞானியோடு கைகோர்த்த இந்தப்பாடல் இன்று மட்டும்மல்ல என் வாழ்நாள் முழுதும் காதில் ஒலிக்கும்  கொஞ்சம் தேனீர்  நிறைய வானம் !