30 May 2016

யாசிக்கும்--- ஏ---தி--லி- 11


முன்னம் ஏதிலி கதை இங்கேhttp://www.thanimaram.org/2016/05/10.html

இனி...



காதலிக்கும் போது ஆண்கள்  எல்லாம் காலை முதல் மாலை வரை தமிழ்ப்பட புதுக்காட்சிக்கு வெட்டியாக காத்திருப்பது போல காதலிக்கும் போது ரயில்வே தரிப்பிடத்திலும் !பார்த்தேன் ரசித்தேன் படம் போல பஸ் தரிப்பிடத்திலும் !காதல்தினம் படம் போல பூங்காவிலும் காத்து இருக்கும் ஆண்கள்! கலியாணம் முடித்ததும் காதலை மறந்து போகும் கால மாற்றம் தான் என்ன?,

எனக்கு இது புரியவில்லை யாதவன் .!


 எனக்காக முன்னர் நீ எப்படி எல்லாம் என் கவனைத்தை உன் மேல் திருப்ப லவ்டுடே ஹீரோ போல லோ லோ என்று அலைந்து இருப்பாய்!  என் பின்னால் உனக்காக பிறந்தேன் படம் போல !  ஆனால் இன்று 15 நிமிடம் தாமதம் பணிக்கு என்பதில் உன் பதட்டம் என்னை சங்கடப்படுத்துகின்றது !ஊழல்குற்றவாளிகள் கூட நல்லாட்சி அரசில்  அமைச்சர் பதவி ஏற்றது போல [[[





.எதுக்கும் !சிரித்து மயக்காத!! உன் சிரிப்புன் பின் இருக்கும் அழகைகூட என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது யாதவன்!!

 இந்தளவு தெளிவாக பேசும் நீ ஏன் என் காதலை அலட்சியம் செய்தாய் ?யாழினி ,,

என் அந்த நேர சிந்தனை எல்லாம் படிப்பின் மீதும், எதிர்கால திட்டத்தின் மீதுமே குறியாக இருந்தது.



 அப்ப நான் எல்லாம் திட்டமில்லாமல் வெட்டியாக ஊர்சுற்றும் துள்ளித்திரிந்த காலம் பட ஹீரோக்கள் போலவா இருந்தேன் !எனக்கு தெரியல ,உன்னைப்புரிஞ்சுக்க  முயற்ச்சி செய்யல என்று நினைக்காத!



 ஆனால் உனக்கும், என் அப்பாவுக்கும் சாஸ்த்திரத்தில் வரும் கேதுவும், ராகுவும் போல எட்டாம் பொருத்தம் என்றும் என்பதால்  தான் கொஞ்சம் தயங்கினேன்§


))) ஏன் சிரிக்கின்றாய் .இல்லை நீ பிரெஞ்சில் சுதந்திர நங்கை என்று நினைத்தேன்! நீ இன்னும் இலங்கை சிறைக்கைதிகள் போல விடுதலை பொறாத அவலை என்று நினைக்கும் போது கூத்தணி அரசியல் நினைத்து சிரிப்பதா /அழுவதா என்பது போல இருக்கு உன் நிலையும்!



 உண்மையில் உங்க அப்பா மீது இன்றும் வருத்தமில்லை! ஏன் தெரியுமா ,?.,எந்த தந்தையும்  உங்க மகளை எனக்கு கட்டிவையுங்க இந்த உலகில் உங்களைவிட சந்தோஸமாக வாழ்நாள் எல்லாம் பொக்கிஷம் போல பாதுகாப்பேன் என்று சொல்லும் காதல் நாயகனுக்கு பச்சைக்கொடி காட்டியதில்லை! காதலுக்கு மரியாதை படம் போல !!

அவர் பார்வையில் என் ஏதிலி வாழ்க்கை பிடிக்காமல் போய் இருக்கலாம்!!



 அது அவரின் தவறனா பார்வை! ஆனால் நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் நண்டு பட ஹீரோ போல கட்டினால் யாதவனை அன்றி வேற யாரையும்  திருமணம் செய்யமாட்டேன் என்று.


. நீ அப்படி சொல்லவில்லையே அன்று!




காலம் கடந்த முகநூல் திருமண வாழ்து போல  இப்ப வந்து எல்லாம் என்மேல் குற்றம் என்று  சொல்கின்றாயே?,

 நான் செய்த தப்பு என்ன யாழினி?,,

 யாசிக்கும் ஏதிலி என்று உன் நிலைதான்!




 ஏன் சுயம் இழந்தாய்?, ஏன் பிரெஞ்சு நாட்டுக்கு வந்தாய்!


 ஏன் பிரெஞ்சு வராமல் வேற நாட்டில் அகதியாக வாழ்ந்து இருக்கலாமே! நம் குடும்பம் சந்தி சிரிக்க நீதானே காரணம்!


  நீ உன் நட்பு வெட்டிப்பயல் தனிமரம் மீது கைகாட்டலாம்! ஆனால் கட்சித்தலைவர் நினைத்தால்  மாகாண முதல் அமைச்சர் மீது சுமுகமாக பிரச்சனையை தீர்த்து இருக்கலாம் போல இல்லாமல்  அடுத்த கட்டம் முடிவு எடுத்தது நீதானே யாதவன்!சொந்தம் 16 படப்பாடல் போல


 அந்த மாயா என்னைவிட அழகா ?,எப்படி அவள் உன் சிந்தனையை மாற்றினால் !சினேஹாவைவிட   அழகாய்  இருப்பாளா இல்லை சதிலீலாவதி பட கோவை சரளா போலவா,,?,இல்லை


 இனவாத அரசை காப்பாற்ற எடுத்த முடிவு போலத்தான் நீயும் உன் குடும்பத்தை மட்டும் தானே சிந்த்தித்தாய்! இது உங்களுக்கு எப்போதும் வியாபாரம் தானே!




தொடரும்.....

25 May 2016

வாங்க மின்னலுக்கு பூ கொடுப்போம்[[[[

வலையுலகில் நகைச்சுவையை மையம் கொண்டு சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து தனித்துவத்துடன் பதிவு எழுதுபவர்கள் பலரில் அதிக நட்புக்களை அன்பால் ஈர்த்தவர் இந்த வார்த்தியார் என ஒரு சிலர்  சொல்லக்கூடும் ))


அந்த  அன்பு வார்த்தையை தனிமரமும் வழிமொழிகின்றேன் .என் ஆரம்ப கால பதிவுகளில் அதிகம் தட்டிக்கொடுத்து, ஊக்கம் கொடுத்து ,எழுதத் தூண்டியவர்  கணேஸ் அண்ணாச்சி .

அன்பில் எங்களுடன் பதிவாளினி ஹேமாவின் தளத்தில் போட்டிக்கு எழுதிய கவிதை இன்னும் மறக்க முடியாது !
கணேஷ்...

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் தாய்...
அவள் முகம் பார்த்து
சாப்பிட்டது குழந்தை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனித்தனியே வந்து
ஒன்றி‌ணைந்த பாதைகள்
சேர்த்தன எங்கள் கரங்களை..!
கோர்த்த கரங்கள் பிரிந்தன
இன்னொரு பாதைச் சந்திப்பில்!

உன் வழி உனது என் வழி எனதென
பிரிந்து சென்றவள்
மீண்டும் வரவேயில்லை..
இன்னும் காத்திருப்பில்...
பனி படர்ந்த காலையும்,
சாலையும், தனிமரமாய் நானும்!
http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html


பாதை,பாசம் ,நிலா என அவரின் கவிதை ஈடுபாடு வியப்பிக்க வைத்தது.

 ஆனாலும் தொடர் என்றால் அது நடைவண்டித்தொடர். அடுத்து எப்ப வெளிவரும் என்று காத்திருந்து பின்னூட்டம் இட்ட பசுமையான நாட்கள் மீண்டும் வராதா? என இன்றும் மனம் விரும்புகின்றது.


நல்ல படைப்புக்களை பலர் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் இவரின் மேய்ச்சல் மைதானம் வலைப்பதிவு ஒரு தகவல் களஞ்சியம் .http://horsethought.blogspot.fr/2013/05/blog-post.html

சிறுகதை எழுதுவதில் கில்லாடி, இவரின் அம்மா கதை இன்னும் பலர் படிக்க வேண்டியது.
http://minnalvarigal.blogspot.com/2012/04/blog-post_08.html

  நல்ல நடிகர் நூல் ஆசிரியர் என  பன்முகம் கொண்டவர் .வலைச்சரத்தில் முத்திரை பதித்தவர் .மொக்கைப்படம் பார்த்த அனுபவம் இங்கே[http://minnalvarigal.blogspot.com/2013/04/blog-post_20.html

இன்றை புதியவர்களுக்கு இவரின் இலக்கிய ஆளுமை பற்றி அதிகம்  தெரிந்து கொள்ள ஆர்வம் எனில் இங்கே பார்க்கலாம்.http://minnalvarigal.blogspot.com/2012/05/16.html

சென்னைப்பதிவர் விழா சிறப்பாக அமைய அண்ணாச்சியின் பங்களிப்பும், பணியும் அளவிடமுடியாத சேவை எனலாம் !

ஏனோ வலையுலகில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் இன்று அவரை முகநூல் பக்கங்களில் மட்டும் பதிவை பகிர்கின்றார்.


 என்றாலும் மீண்டும் தாய்வீடு போன்ற இந்த வலையுலகில்  முன்னைய கலகலப்புடன் மீண்டும் நண்பர் வரவேண்டும் என்பதே என் போன்ற  வழிப்போக்க வாசகர்களின் வேண்டுதலாக இருக்கும்!http://minnalvarigal.blogspot.com/2013/10/blog-post.html

 என்னடா தனிமரம் இன்று மின்னல்வரிகள் கணேஸ் பற்றி நினைவுபடுத்துகின்றது? என நீங்கள் நினைக்கலாம்.!

இன்று அவருக்கு ஒரு சிறப்பான நாள் !26/5/-- /ஆம் அன்பு அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் இன்றை தினம் .


காலத்துக்கு காலம் வலையில் வந்து போகும் பல உறவுகளில் இந்த தனிமரமும் வலையுறவுகள் சார்பாக கடல்கடந்து இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் .மின்னலுக்கு  பிறந்தநாள் வாழ்த்துப்பூ தர சினேஹா சார்பில் திருமதி தமிழ் அவர்கள்  மின்னல் வீடு நோக்கி [[[[!


வாழ்த்துவதற்கு வயது ஒரு தடையல்ல நல்ல இதயம் போதும் என்ற அண்ணாச்சியின் வார்த்தையை கடன் வாங்கியே அன்பு பாடலை பரிசாக காற்றில் கலந்து விடுகின்றேன் !.என் வாழ்த்தையும் நோய் நொடி இன்றி என்றும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்!


 .அண்ணாச்சிக்கு இந்த பாடல் அதிகம்  பிடிக்கும்  ஏன் என்று நான் அறியேன்[[ பூரிக்கட்டை அடி அமெரிக்கா வரை புகழ்[[[ இந்தப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளி/ஓலிபரப்பாக எத்தனை விளம்பர இடைவெளி இம்சை என்பதை தாங்கிய நெஞ்சம் இந்த ஏதிலி[[[



என்றும்
நட்புடன்
தனிமரம்
பாரிஸ்.




24 May 2016

யா+---சிக்-கும் .. ஏ-தி---லி! 10


முன்னே இங்கு யாசித்து- http://www.thanimaram.org/2016/05/9.html


இனி .. ஏதிலி தொடர....

 திமிரில் அழிவேன் என்றால்!
திமிர் பிடித்த ஆலமரமாக
திரிவேன் உயிர்ப்பில்! அப்போது உன் ஆசையை
திரியில் ஒளிரும்  விளக்காய்!!!!
திரித்து விடு மரத்தில்
தீயாக சுடர்விடுவேன்!
                                      (  யாதவன் நாட்குறிப்பில்)




தமிழ் சினிமாவில் வில்லங்களிடம் இருந்து தப்ப ஹீரோ, ஹீரோயினி ஓடுவது போல நினைச்சு ஏன் நீ ஓடிவரக்கூடாது யாழினி ரயிலைப்பிடிக்க!  பஸ்சில் இருந்து இறங்கியதும் எதிரே பாரிஸ் பக்கம் பயணிக்கும் ரயிலைக் கண்டதும் ஓட நினைத்தவனை பார்த்து! நில்லு யாதவன் என்ற யாழினியின் கூற்று மேலே பதில் தந்தான் யாதவன்!

உனக்கு எப்போதும் சினிமா மோகம் தான் !!உன்னைச்சின்ன வயதில் ஊர் சுற்றவிட்டது பிழையாப்போச்சு!என் மாமா உன்னை நல்லா வளர்கவில்லை பொன்மனச்செல்வன் பட விஜய்காந்து போல! என்னால் உன்னைப்போல ஓட முடியாது! மெதுவாக நடந்து அடுத்த ரயிலைப்பிடிப்பம் யாதவன் என்று கெஞ்சும் இவள் முகத்தை எப்போதும் ரசிக்கலாம் சினேஹா முகம் போல என்று சொல்லத்தான் நினைக்கின்றேன் பாடல் போல சொல்ல நினைத்தாலும் மெளனம் பேசியது பட ஹீரோ போல அமைதியாக இருந்தான்!





 .உன்னால் ஒரு ரயிலை தவறவிட்டாச்சு! அடுத்த ரயில் இன்னும் 15 நிமிடம் காத்து இருக்கனும் ரயில் தரிப்பிடத்தில் யாழினி.

 இந்த 15 நிமிடத்தால் ஒரு குடியும் மூழ்கிப்போகாது யாதவன் ரயிலைப்பிடிக்க ஓடும் போது எதிர்பாரத விபத்து நேர்ந்தால் பாதிப்படைவது நீ மட்டுமல்ல ,இந்த ரயில் போக்குவரத்தும் தான்!


 இல்லை யாழினி இப்படி ஓடுவதிலும் ஹிக் இருக்கு வேதம் படத்தில் அர்ஜீன் ஓ அன்பே நீ குட்டிப்புயல் பாட்டுக்கு ஓடுவது போல)))!

 உன்னை சுட்டு இருக்கனும்டா!


அதுசரி ஊரில் உயிரைக்காப்பாற்ற ஓடினம் !இப்ப பொருளாதாரத்தைக் காக்க ஓடுகின்றம்.


 இடையில் இப்ப இயற்க்கையின் பிடியில் இருந்து தப்ப ஓடுகின்றம்!




 ஒடுவதே வாழ்க்கையாகிப்போச்சு!


 வேலைக்கு தாமதம் ஆகும் என்று தெரிந்தால் ஏன் முன்கூட்டியே கோயிலில் இருந்து வெளியில் வந்திருக்கக்கூடாது ,,?,

எனக்கு நீ என்னோடு வருவாய் என தெரியாதே !

என் நேரம் எப்போதும் ஒரே மாதிரித்தான் !

.சரி வேலைக்கு தாமதம் என்றால் ஒரு கைபேசி  அழைப்பில் முதலாளிக்கு சொல்வது தானே பணிக்கு வரத்தாமதம் என்று வானொலி நேரடி நிகழ்ச்சி தாமதமாகும் போது இடைவிடாத இசை ஒலிப்பது போல  ! நான் எந்த தடங்களையும் தாண்டி எப்போதும் வேலைக்கு முன்கூட்டிப்போவது தான் என் வாடிக்கை  யாழினி!



அதனால் உனக்கு என்ன தங்கப்பரிசா கிடைக்கப்போகுது !நிச்சயம் இல்லை !!ஆனால் பதட்டம் இல்லாமல் சமையலில் கவனம் செலுத்த முடியும் .அடுப்பு வெக்கை ஒருபுறம் ,அடுத்தடுத்து வரும் சாப்பாட்டு  ஆடர்  ஒழுங்காக போக நம் திறமை முக்கியம்!

 அது சரி நீ எப்போதும் முன் எச்சரிக்கை வாதிதான்! ஆனால் எப்படி இல்லறத் தேர்வில் கோட்டை விட்டாய் ?,என்னை பாரிசில்  தவிக்கவிட்டு இன்னொருத்தியை இலங்கையில் தாரமாக ஏற்றாய் மனைவி என்று  முதல்மரியாதை ஹீரோ போல!



யாழினியின் பேச்சைக்கேட்டு திகைத்து நின்றான் யாதவன்! உண்மை சொல்லவா யாழினி!  எல்லாம் உன்னால் தானடி !என் கனவு ,என் கற்பனை .என்,ஆசைக்கு எல்லாம் தீயிட்ட  நீ தமிழில் வந்த தெலுங்கு மொழிப்பட யாருக்கு மாப்பிள்ளை யாரோ ரம்யாகிருஸ்ணன் போல நீயடி என்று சொல்ல ஆசை !


ஆனாலும் உறவுகள், பாசம் என்னை சிறைப்பறவை போல சிந்திக்க வைக்கின்றது! ஆனாலும் நான் சிரிக்கின்றேன்! சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பு  பொற்காலம் பட பாடல்  போல  உன் போல பட்டதாரி நான்  இல்லைத்தானே! உன் பார்வையில் ஏதிலி  தோற்றவன் என்றாலும் என் பாதையில் பயணிக்கின்றேன்!

 யாரிடமும் லைக்கு வேண்டாத முகநூல் நட்பு போல!

கோட்டைவிட்டது என் காதல் அல்ல உன் பட்டதாரி திமிர்!அதை உன் அப்பன் அறிவான் !அவன் தானே என்னிடம் கேட்டான்! என்னிடம் என் மகளை வரம் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு பிரெஞ்சில் என்று ?,

 இன்று சொல்லவா என்னிடம் ஒரு சுய  தொழில் இருக்கு!இன்று  அடியவன் வழிகாட்ட என் குரு மேற்பார்வை செய்ய எத்தனை பேரை பாத யாத்திரையில் வழிநடத்துக்கின்றோம் ஆன்மீகத்தில்! அதுமட்டுமா! என் முகநூல் நட்புக்கள் .,.நம் தாயக உறவுகள் எப்படா நண்பனே  வருவாய் மீண்டும் நம் கலையகம் போல என அந்தமான் காதலி பட ஹீரோ போல என்று என் பால்ய காலம் எல்லாம் உங்க அப்பனுக்கும் ,உனக்கும் திமிர் பிடித்தவன் இவன் என்றால் நான் எப்போதும் புரியாத புதிர்தான்!


 ஆனால் நானும் படிச்சவன் என்பதை இப்ப புரியும் உன் நிலையை நான்  புரியும் போது! உன்னை நினைத்து பட  லைலா போல தான் ஆனாலும் !ரயில்கள் எப்போதும் யாருக்காவும் காத்து இருப்பதில்லை. உனக்கு தெரியுமா?, ரயில்களில் கூட ஆயிரம் அழகு இருக்கு! சாதரண ரயில், அதிகூடிய வேக ரயில், மின்னல் ரயில் இன்னும் பலதை இந்த பாரிஸ் ரயில் அறியும்!



 நீ அறிவியோ நான் அறியேன்! ஆனால் நான் ஓடுவேன்!! இது திமிர் அல்ல தன்நம்மிக்கை  உங்க அப்பன் என்னை இதே  போல ஒரு ரயில் தரிப்பிடத்தில் தானே என் முகத்தில் சந்தணம் போல வசை மொழி புரிந்தான்!



ஹீ அப்போதும் சிரிச்சேன் !இப்போதும் சிரிக்கின்றேன் !!ஏனா இந்த சினேஹா போனால் என்ன இன்னொரு திவ்வியா என நம் சினிமா மாறிக்கொண்டே போகும் [[





தொடரும்!

20 May 2016

பிரார்த்திப்போம் !!நீயே எல்லாம்!!!

இலங்கேஸ்வரன் பூமியை
இடையில் வந்த
இங்கிலாந்து
இணைத்து வைத்து போனது!
இந்தாருங்கள்
இனி ஆளுங்கள் என்று!!
இனவாதக்கொள்கை மேலிட
இறையாண்மை  என்று தமிழ்பண்டிதர்
இஞ்சா போட !!!
இனங்களை  அழித்ததும்!
இலங்கை பாராளமன்ற எதிர்கட்சி பதவி
இது என்று வலம் வந்த காலம்
இறந்தகாலம்!

இதோ வெற்றுவிட்டோம்
இருதேசப்போரை
இன்றுடன் 7 ஆண்டு
இன்றைய எதிர்கட்சி தலைவர்
இப்போதும் இஞ்சா!

  இன்னும் தீர்வில்லை இன ஐக்கியம்!
இருந்தாலும் !வெளிநாடுகளுக்கு
இத்தனை கோடியில்
இந்தளவு வளர்ச்சி என்று
இயம்பி எழுந்தன கட்டிடங்கள்.
இன்றும் முன்னால் வேந்தன் போல
இரந்து நிற்கும்
இந்த உறவுகள் நிலையை என்னவென்பது?

இலங்கை நாட்டில்
இயற்க்கையின் சீற்றங்களும்,
இனியும் கையேந்தும்?
இருப்புக்களும் ! தமிழர் பூமியும்
இன்றும் புதைந்து போகும்
இரத்தக்கறைகள் !


இலத்திரனியல் ஊடகங்கள்
இருட்டடைப்பு செய்தாலும்!
இது நல்லாட்சி என்று
இனிப்புக்கொடுத்தோரும்
இன்னும் தேடிவரவில்லை
இருக்கின்றோம்
இழவுகள் விழுந்தாலும் !


இடம்பெயர்தோர் வலிகளை
இடர்பாட்டை இனிப்போக்கி
இருள் அகற்றி
இனிதே வாழ
இரக்கம் காட்டு
இறைவனே!
இதுதானே நம்வாழ்வு!

இன்னொரு நதிக்கடல்!!

இனியும் வேண்டாம்!

10 May 2016

இசை எங்கும் உன்னைத்தேடும்!

தேர்தல் நேர வேலைப்பளுவோ வலைப்பதிவர்களுக்கு[[


அதனால் தான் நம்பதிவுக்கு யாருமே பின்னூட்டம் போடவில்லை என்று இன்று வந்து ஓய்வில் வலைப்பதிவை நோக்கினால்! பிரெஞ்சுமொழியில் ஏதோ சொல்லுது !

இனித்தான் மொழிபெயர்ப்பாளர்களை தேடனும் இந்தவாரம் உங்கள் டஸ் போட்டில் என்பதிவுகள் வரவில்லை என்றால் அடுத்த இந்த பதிவில் சொல்லுங்க[[!ஏன்னா தொடர்கதை இனித்தேவையா என்ற நிலையில் தனிமரம்[[



இந்தப்பாடலை கேளுங்க ஓய்வில்!ம்ம்! இது சரி கேட்குதா தடைகள் தாண்டி!அப்படி என்ன அரசியல் பேசிவிட்டேன் தப்பாக!ம்ம் வாழ்க தமிழ் வளர்க சேவை!

07 May 2016

யாசிக்கும் ஏ-தி-லி--9

முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016_04_01_archive.html
இனி....

விதி என்பது என் வாழ்வில்
விடுதலை அல்லாத சிறை!
விரும்பியவள் கேட்டாள்
விலை போல பட்டம்
விரும்பி ஏற்க இது என்ன
விடுதலைப்போரா!

                    (   யாதவன் நாட்குறிப்பில்)

காத்து இருந்தேன் தனியே எதிர்பார்த்து இருந்தேன் என்ற ராசாமகன் படப்பாடல் போலவோ இல்லை,  உனை  எதிர்பார்த்திருந்தேன்  தென்றலிடம் கேட்டேன்  என்ற வனஜா கிரிஜா படப்பாடல் போல அல்ல பார்த்துப்பார்த்து கண்கள் பூத்திருப்பேன் என்ற நீ வருவாய் என  படப்பாடல் போலும் அல்ல பஸ்சுக்கு காத்திருக்கும் யாதவன் நிலை !இது 12 பி படம் போலவும் அல்ல இந்த வீதியூடாக  பஸ் சில நேரத்தில் குறித்த நேரத்துக்கு வரும் பலசமயத்தில் வராமலும் போகும் என்பதை நன்கு அறிவான் யாதவன்.


 ஆனால் யாழினிக்கு ஈழத் தமிழருக்கு தீர்வுத்திட்டம் வரும் என்று காத்து இருக்கும் கூத்தணி போலத்தான் பஸ்சுக்கு காத்து இருக்கும் நிலை !

என்ன யாதவன் இன்னும் பஸ் வரல? வரும் ஆனா வராது என்று வடிவேல் போலச் சொன்னால் இருக்கும் கோபத்தில் இன்னும் நன்மொழிகள் கேட்க நேரிடலாம் என்பதால் இப்ப வந்திடும் என்று பாரதிகண்ணம்மா படத்தில் விஜய்குமார் ரயில் நிலையத்தில் காத்து இருப்பது போல நம்பிக்கையூட்டினான் யாதவன்.

உள்ளே வெளியே படம் போல யாதவனுக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய பதட்டம் என்றாலும் பஸ் நிறுத்தத்தில் தனியே யாழினியை விட்டுச்செல்ல தன்மானம் இடம்கொடுக்கவில்லை .பல்வேறு இன இளைஞர்கள் வீதியால் போகும் இடம் நாகரிம்மற்ற வார்த்தைகள் நன்கு உதிரும் கார்கால பனித்துளிகள் போல .

செல்லம்மா பாட்டி நம்பித்தானே யாழினியை என்னோடு அனுப்பிவைத்தா. இந்த நேரத்தில் முகம்சுழிக்கும் வண்ணம் ஏதும் நடக்கக்கூடாது என்பதால் பொறுமையாக பஸ் வருகின்றா என்று வீதியை நோக்கினான் என்றும் அன்புடன் படத்தில் முரளி  சித்தாராவீட்டை நோக்குவது போல.

 எப்ப இந்தியா பயணம் யாதவன் என்று யாழினி கேட்டதும் தான் பஸ்சுக்கு காத்து இருக்கும் நேரத்தினை நோக்கினான் யாதவன் இன்னும் 7 நிமிடங்கள் காட்டியது திரைப்பலகை .

எப்போதும் போவது போல தை முதல் வாரத்தில் போக இருக்கின்றேன் யாழினி .நானும் உன்னோடு வரவா இந்தியாவுக்கு இந்த இயந்திரமான உலகத்தில் இருந்து கொஞ்சம் விடுபடணும் போல இருக்கு .


வேலையில் விடுமுறைகிடைக்கும் போது வீட்டிற்கு வந்தால் முன்னர் போல சந்தோஸம் இல்லை .

தமிழ்ச் சினிமாவில்  வரும் அமெரிக்கா மாப்பிள்ளை நிலை போல இது பட்டதாரி மாப்பிள்ளை, இது லண்டன் மாப்பிள்ளை என்று ஒரே கலியாணப் பேச்சுத்தான் .


என் நிம்மதியே கொட்டுப்போச்சு காதலே நிம்மதி பட ராதிகா போல.தனியாக  மனம்விட்டுப்பேச இப்ப யாரும் இல்லாத என் சுயநிலையை  நினைக்கும் போது வாழ்க்கையில் வெறுப்பாக இருக்கு.

 உனக்கு என்ன சந்தோஸமாக இருக்கின்றாய் யாதவன் .ஏன் இப்படி பைத்தியமானே நான் பையத்தியமானே கடல்ப்பூக்கள் பாடல் போல  ஏன் இந்த மயக்கம் இப்படி உன்னோடு நடுவீதியில் நின்று புலம்பும் இந்த நிலை எதுவும் புரியல எனக்கு!

முதலில் மன தைரியம் முக்கியம் யாழினி. மனதை  தளரவிடாத விழியில் வழியும் கண்ணீரைத்துடை முதலில்.

 யாராவது பார்த்தால் நான் பேச நினைப்பதெல்லாம் மோகினி நிலை போலகிவிடும் .

நேசிப்பு என்பது யாசிப்பு போல யார்? யாரை ,ஏன் ?எப்படி நேசிப்பது என்பது முன்வினைப்பயன்.

 எதிர்ப்பார்ப்புக்களும் கனவுகளும் எல்லாருக்கும் நிறைவேறுவதில்லை யாழினி.

நீ என்னோடு வருகின்றேன் என்று இப்ப சொல்லும் போது கேட்க சுகமான சுமைகள் போல ஆனால் நான் போவது ஆன்மீகப்பயணம் குருவுடன் சேர்ந்து  கூட்டத்தை வழிநடத்த உதவியாகத்தான்  எப்போதும் என்னை நம்பும் அவரை விட்டுப்பிரிய மாட்டேன் கட்சிமாறும் சட்டமன்ற உறுப்பினர் போல !

உன்னை அழைத்துப்போக தயாராக இருக்கின்றேன் .ஆனால் தனியாக அல்ல! உனக்குப் பிடித்தஒரு துணையைத் தேடிய பின் என்னோடு வா!  தமிழகம். கேரளா எல்லாம் நிச்சயம் நீ பார்க்க வேண்டிய ஆலயங்கள் எல்லாம் சுற்றிக்காட்டுவேன்!ஏன் தெரியுமா ,,?,ஏதிலி யாசிப்பு  பொய்முகம் அல்ல! இது உன்னை குத்திக்காட்டுகின்றேன் என்று நினைக்காத படிக்காதவன்  நான் ஏதிலி என்றுதானே நீ என் காதலை புரிந்துகொள்ளவில்லை ?



தொடரும்....

03 May 2016

தாகம் தீர்க்கவா.


எம்மவர் இசை ,எம்மவர் பாடல், எங்களுக்கான மேடை இதுவே மெல்லிசை என்பது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சந்தனமேடையின் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் .

80 இன் பின்னும் 90 களிலும் இலங்கைக் கலைஞர்கள் பலருக்கு இந்த மேடை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பது வரலாறு. இலங்கை மெல்லிசையின் தனித்துவம் மேலோங்க சந்தனமேடையில் மின்னிய பலரினை இனவாத யுத்தம்  காலச்சுழற்ச்சியில் பலர் மறந்தாலும்!மறைந்தாலும்

 எதிர்கால வரலாற்றுக்கு சான்றாக ஏட்டில் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் இருக்கு.

அரசகரும மொழித்திணைக்களம் இன்னும் இனவாத கொள்கையில் இருந்து மீளவில்லை என்பதை இலங்கை அமைச்சர்களே பொதுவில் பேசும் போது சாமானியர்கள் எதை எதிர்பார்ப்பது நல்லாட்சி இது  என்ற கோஷத்தில் !

என்றாலும் வரலாற்றில் அனுபவத்தில் இருந்து இந்த இணையத்தில் அங்கங்கே நானும் தனிமரத்தில்  80 இன்/90 இன் காதல்ஜோடிகள் தம் பெயரை மரத்தில்  கீறும் கோடு போல சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் பிரபு ,சபீத்தா ஆனாந் ஜோடி எழுதுவார்களே அப்படித்தான்))  நானும் எழுகின்றேன் தனிமரத்தில்)))


சந்தனமேடை  நிகழ்ச்சி இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு பிரதி சனி மதியம் வானொலியில் கேட்கும் அறிமுக இசையும் அதைத்தொகுத்த அறிவிப்பாளர்கள்/ளிகளின் குரல்களும் இன்னும் நாடு கடந்தாலும் காதில் ஒலிக்கின்றது .

மனமோ அங்கேயே இன்னும் நினைவைச் சிறைப்பிடிக்கின்றது.
 அடிக்கடி தில்லையகத்தார் துளசிதரன் சார் பின்னூட்டத்தில் கேட்பது  ?

எப்படி தனிமரம் இத்தனை பாடல்கள் ,இத்தனை திரைப்படங்களை , நினைவில் இருத்தி தொடருக்குள் புகுத்தும் விந்தை ?

அந்த திறமையின் சூட்சுமம் என்ன என்று ?

இதில் ரகசியம் ஏதும்மில்லை  !

வானொலி அறிவிப்புக்கு முதல் திறமையே சுயதேடல் மெல்லிசை,துள்ளிசை,சினிமா பாடல்களும் ,சிறந்த படங்களும் அதில் இருக்கும் இலக்கிய ரசனைகளும் ,சுய வாசிப்புக்களும் தான் நிகழ்ச்சி படைக்க ஆக்கபூர்வமான வழிகாட்டி. அதனை எப்படி   நேயர்களுக்கு ஊடுகடத்துவது என்பதே  ஒரு வானொலி அறிவிப்பாளர்/ளிகளின் பிரதான வெற்றியாகும் .

என் சிறுவயதுக்கனவு வானொலியோடு பயணிக்க வேண்டும் என்பதே!

இசை என்னை அதிகம் செதுக்கியும் , சிலதில் சிதைத்தும் இருக்கின்றது என் பால்ய காலத்தில் !

அதனால் தான் இன்றும் மீள அசைபோடும் மாடுபோல  தொடர்களில் பாடல்களையும் ,கவர்ந்த படங்களையும் ஒன்றினைத்து தொடர் பேசுகின்றேன் )))


புதியவர்கள் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததா ? எந்த காலத்தில்? பாடல் இருந்ததா??  என்ற சிந்தனைத்தேடலுக்கு ஒரு உந்து சக்தியை  தூவிச்செல்கின்றேன் தொடரில்)))

தொடருக்கு பாடலும், சினிமாவும் மெருகூட்ட வழிகாட்டியதே இசையும் கதையும் என்ற இலங்கை வானொலியின் நிகழ்ச்சிதான் !

பல பிரதிகள் எழுதினாலும் அதில் ஒலிபரப்புக்கு தேறியது  சிலது என்றாலும் அந்த வெற்றியும் கூட  எழுத்துப் போதையை தந்ததும் அதை பின்புலமாக்கி தொடர்கதை எழுதி பட்ட வடுக்கள்  இன்னும் மறக்கமுடியாது.

எத்தனை கால காத்திருப்புக்கு பின் மீண்டும் வலையில் இந்த தொடர்  பெற்ற வெற்றிப்போதை!


 இன்னும் தொடர்கள் எழுத உற்சாகம் தருகின்றது இந்த தனிமரத்துக்கு))).

பாடல் பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றி நண்பர்களுடன் விடிய விடிய பேசவும் ,எழுதவும் இந்த மெல்லிசையுடன் தொடர்பு படவர்களின் நட்பும் என்னையும் இன்னும் கடல்கடந்தும் முகநூலில் தேடி வரவைக்கின்றது!

அப்படியான பாடல் விரும்பிய நேயர்களில் நானும் ஒருவன் .


விரும்பிய ஒரு பாடல் பற்றி நீண்ட நாள் எழுதணும் என்ற ஆசை !ஆனாலும் நடுவில் சில பக்கத்தைக் காணவில்லைப்போல பொருளாதார தேடல்))


அருந்ததி சிறிரங்கநாதன் -இலங்கை இசைத்துறையில் ,ஊடகம் ,இலக்கிய விமர்சனத்துறையில் என தெரியாதவர்கள் இருக்கமுடியாது .வீணை இசைப்பதில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற ஒரு வித்தகி .அருந்ததியின் மகன் 90 இன் அடுத்தலைமுறை இசையமைப்பாளர் சாரங்கன் சிறிரங்கநாதன். .இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக இருந்தவர் அருந்ததி ஒரு பெண்ணிலைப்போராட்டவாதி .

சிறிதர் பிச்சையப்பா-ஈழம் /இலங்கை என பிரபல்யமான பல்துறைக்கலைஞன் சிறிதரின் தந்தையும் ஒரு மூத்த இசைக்கலைஞர் இலங்கை கலைக்கூடத்தில் .சிறிதரின் மனைவி நிலாமதி சிறிதர் பிச்சையப்பா பிரபல்யமான பாடகி ( சிறிதர் இசைக்குடும்பம் பற்றி வேற பதில் எழுதுவேன்)

கணேஸ் ராஜ்-சந்தனமேடையில் அதிக இசையமைப்பு இவருடையதாகத்தான் இருக்கும்  என்பது நினைவுகள். வானொலி தாண்டி தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இசையமைத்தவர் இவரிடம் கொழும்பில் இசை கற்றவர்கள் பலரில் சிலர் பின் குறுந்தகடு வெளியீடு செய்ததும் வரலாறு அதனை இங்கே காணலாம்))http://www.thanimaram.org/2012/03/blog-post.html

மூவரின் கூட்டிணியில் உருவான இந்தப்பாடல் என்னைக்கவரர்ந்ததுக்கு முதல் காரணம் இசை அதுவும் ஒக்ரோ பாட் என்ற தோல்வாத்தியம் மற்றும் ஓகன் ஈழத்து மெல்லிசையில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகள் எனலாம்.

மழையில் நனைவது போல ஒரு சுகம் இந்த பாடலில் அதுவும் வாலிப்பத்தில் மலைகளில் நனைந்து இயற்க்கையோடு காதலில் மயங்கினால் எப்படி இதயம் குளுருமோ! அப்படி இன்றும் நெஞ்சைக்கிள்ளும் இந்த பாடல் நீங்களும் ரசிக்க  இங்கே-https://youtu.be/DKf7S-tOGCI