31 August 2011

உன்னை நினைந்து நினைந்து!

ஒவ்வொரு முறை சென்னை போகும் போதும் எப்படியாவது திருப்பதியானை தரிசிக்கனும் பெருமாளே பிறவிப்பயனில் உன்னைப் பார்த்தே என் கண்கள் பரவசப் பேருணர்வைப் பெறனும் என்று நீண்டநாள் கனவு .

ஏதாவது தடங்கள் வந்து பயணம் பாதியில் திரும்ப வேண்டிய நிலையில் முடியாமல் போன காரியம்.

 இந்தத் தடவை என் ஆசைக்கு பெருமாள் பக்தனின் குரலுக்கு கடைக்கண் பார்வை பார்த்து அருள் கொடுத்தார் .

திருவேங்கடாவா மாமலை வாழ்  திருப்பதியானை நானும் என் மனைவியுடன் சென்னையில் இருந்து தமிழ்
நாடு சுற்றுலா மையத்தின் பதிவு செய்யப்பட்ட பேரூந்தில் அதிகாலையில் பலருடன் சென்றோம்.

நண்பர் முன்பதிவை செய்துவிட்டு பற்றிச்சீட்டை கொடுக்கும் போது அதிகாலை 5.30 வாகனம்  நிறுத்தும் திருவல்லிக்கேணி  சாலையில்  காத்திருக்கவும் என்றுவிட்டுச் சென்றார்.

நாங்களும் புலம்பெயர விமான நிலையத்தில் நின்றதுபோல் அதிகாலை 5.15 போய்விட்டோம் பெருமாளை சேவிக்கனும் என்ற ஆவலில்.!

 கீழைத்தேசத்தில் நேரக்கடைப்பிடிப்பது என்பது அரசதலைவர் முதல் ஆடுத்த வீட்டு அன்னலட்சுமி வரை ஓட்டு வாக்கின மந்திரிபோல் நினைத்த நேரம் வருவார்கள்.

ஒரு ஊழியர் அதிகாலை 6மணிக்கு காரியாலயக்கதவு திறந்தார். நானும் போகும் பயணத்தை கூறியதும் இருங்கள்
வாகனம் வரும் உங்கள் முன்பதிவு சீட்டைக் காட்டுங்கள் என்றதும் நானும் கொடுத்தேன்.

 அவர் வாங்கி அதற்கு சுற்றுலாமையத்தின் சின்னம் பொறித்த பற்றிச்சீட்டையும் என் தகவல்களையும் பதிவு செய்துவிட்டு இன்னும் சில நிமிடங்களில் வாகனம் வரும் நீங்கள் காத்திருங்கள் என்றார்

.நானும் எத்தனை காத்திருப்பைப் பார்த்தவன் .என் மனைவி பாவம் இரவும் பயணப்பைகளை  சிரமங்களுடன் முன் ஆயத்தம் செய்தால் துணைவியார் கஸ்தூரிபாய் போல் பின் தூங்கி முன் எழும்புபவள் .

நான் இன்னும் அதிகம் நேரத்திற்கு எழுப்பிவிட்டேன்.நீங்கள் ஒரு அவசரக்குடுகை இன்னும் கொஞ்சம் நித்திரைகொண்டு இருக்கலாம் என்று  காதோரம்  கடிந்துகொண்டால் .

பெருமாளே இது என்ன திருப்பதியான் மயக்கம் இப்படி யா?

 கொஞ்சம் பொறு பெருமாள் பெருமாட்டி உன்னுடன் தரிசனம் பெறனும் என்றுதான் சித்தம் அதனால்தான் இப்படி நடக்குது செல்லம் என்று சென்னை வெயிலுக்கு குற்றால அருவியை உச்சந்தலையில் ஊற்ற எங்களுக்கான வாகனம் தயாராகியது.


எங்களுடன் சிலர் ஏறிக்கொள்ள எங்கள் வாகனம் மிகவும்  உடரட்டமெனிக்கேயைவிட மெதுவாக சென்னையில் இருந்து திருப்பதியை நோக்கிய பயணம் 5 மணித்தியாலம் பிடித்தது .

வழமையாக 3 .30  மணித்தியாலம் போகும் பயணம்.எங்களின் வாகன சாரதியின் அக்கறையான வாகனம் செலுத்தல் !

 திருப்பதி
மலையடிவாரத்தில் நாங்கள் சென்ற வாகனம் நிறத்தப்பட்டது .

மலையடிவாரத்தில் இருந்து ஆந்திராப் பிரதேசத்தின் போக்குவரத்து கழகத்தின் பஸ் பக்தர்களை மேலே கொண்டு செல்கின்றது. அவர்களின் பஸ் மட்டுமே சேவைபுரிய முடியுமாம் !

தனியார் யாரவது போவது என்றாள் கார் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது.பார ஊர்திகள் அனுமதியில்லை.

மலையடிவாரத்தில் இதனை ஆயிரம் பக்தர்கள் வருகின்றார்கள் இவ்வளவு கோடியில் பணம் புரலும் இடத்தில் போதியளவு சுகாதார வசதியில்லை கழிப்பிடவசதி செய்ய ஏனோ யாருக்கும் மனசு இல்லை!

 துர்நாற்றம் கூவத்தை விட குமட்டுகின்றது.

 மேலே போய் மீண்டும் கீழே வரக்கட்டணம் 34 இந்தியன் ரூபாய்.
மலையடிவாரத்திற்கும் கோயிலுக்கும் இடையில் வாகனம் ஓட்டுவதற்கு உண்மையில் தனித்துவம் தேவை .

ஒவ்வொரு வளைவிலும் அடுத்தவர் மீது செல்லமான சாய்வுடன் கூடிய இடி கொடுக்க வேண்டும். இது எனக்கு முன்ன மலைநாட்டுப் பயணத்தினை ஞாபகம்  ஓடியதும் மீண்டும் தாயகத்தின் சோதனைச்சாவடியை ஞாபகப்படுத்தும் திருப்பதி காவல்துறையினர் சகல உடமையையும் கதிர் இயக்கச் சேதனைக்கு உட்படுத்தியும் ஆண்கள் ஒரு புறம் பெண்கள் ஒரு புறம் உடல் சோதனைக்கு உட்படுத்திய பின் மீண்டும் வாகனம் சுமந்து செல்கின்றது.


 இயற்கை எழில் மனதில் பெருமாளை நினைத்து ஆண்டாள் பாடியபாசுரங்களையும் பெரியாழ்வார் முதல் குலசேகர ஆழ்வார்கள் பாடல்கள் பக்தியின் பெருமையை மீட்ட விரைவான ஒரு மணித்தியாலத்தில் திருப்பதியானை தர்சிக்கும் நுழைவாயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.

 இவர் உண்மையில் பழகுவதற்கு இனிமையானவர் நாமாக்கல் மாவட்டம் இவர் பூர்வீகம் தொடர்ந்து பக்தர்களை அழைத்துவருவதால் பலரை தெரிந்து வைத்திருக்கின்றார் .

மனைவி தடுத்தும் நாந்தான் வீம்புக்கு புகைப்படக்கருவியையும் எனது கைபேசியையும் கொண்டு வந்திருந்தேன் காட்சியை பதிவு செய்யலாம் என்று சில இடங்களில் புனிதம் பேணப்படுவதை நானும் வழிமொழிகின்றேன் .

போய்ப்பார்ப்பதற்கும் நாம் புகைப்படங்களாக  பிரதி செய்து மற்றவர்களுக்கு காட்டுவதற்கும் இடையில் எப்போதும் உணர்வுகள் வேறுபடுவதைக் காணமுடியும்.

முதலில் எங்களை அழைத்துவந்தவர் நமக்கு ஒதுக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாமையத்தின் மடத்திற்கு அழைத்துச் சென்று உடைமாற்றவும் காலைக்கடனை முடிக்கவும் சில நிமிடங்கள் கொடுத்தார் பின் எல்லாரிடமும் கடவுச்சீட்டு , புகைப்படக்கருவி,  எல்லாவற்றையும் தரும்படி  கூறினார்
.  கோயிலுக்குள் புகைப்படக்கருவி,  தொலைபேசி,பாடல்கேட்கும் கருவிகள் அனுமதியில்லை .

எங்கள் பொருட்களை இவர் பாதுகாத்தார்.

முடிகாணிக்கை செய்வதற்கு சங்கக்கடையில் சவற்காரம் வாங்க நின்றதைவிட அதிகமான கும்பல் .

அதுவும் வெளிநாட்டவர் என்றாள் கட்டணம் இவர்கள் சொல்வதை வைக்க வேண்டும்.

 தெரிந்தவர்கள் எனில் முன்னூரிமை தலையில் தண்ணீர் தெளித்த பின் ஒரே இழுவை திருப்பதியானுக்கு கோவிந்தா !

அருகில் குளியல் அறை உண்டு விரைவாக நீராடிய பின் தருசனம் காண பலர் முண்டியடிக்கின்றனர் .

கட்டணம் இல்லாத நுழைவாயில் 50 ரூபா கட்டணம் சிறப்புத் தருசனம்,300ருபாய் கட்டணம்   சிறப்புத்தருசனம் என மூன்று நுழைவாயில் பெருமாளை சேவிக்க எங்களுக்கு விரைவான தருசனம் காணபதற்கு 300 ரூபாய் கட்டணத்தில் உள்நுழைந்தால் பக்தர்கள் கூட்டம் பொங்குதமிழுக்கு யாழ்லில் கூடியதைவிட அதிகம் .

இத்தனை கோடி பக்தர்கள் படை எடுப்பதன் மகிமை  இன்னும் ஆன்மீகம் தழைத்தோங்கு து .என்பதா எள்ளுப் போட்டால் எண்ணையாகும் வண்ணம் ஊர்கின்ற பக்தர்கள்.

 5 மணித்தியாலம் காத்திருந்தோம் !

நமோ வெங்கடேசா நமோ சினிவாசா !உன்னை நினைந்து நினைந்து மனம். உருகி உருகி தினம்  நெய்யாய் உருகுதய்யா !
உன் அருகில் வரத்துடித்து கண்கள் கண்ணீர் சிந்துதய்யா !
பட்டுப் பீதாம்பரம்!
  பெருமாளின் தங்க கலசம் கண்டு! கோவிந்தன் தருசனம் கண்டோம்!

வாழ்வில் இப்பேறு மீண்டும் வரனும் என்ற ஆசையுடன் திருப்பதியானின் துளசித் தீர்த்தம் வேண்டிக் குடித்தோம் பெருமாள் பிரசாதம் கற்கண்டும் லட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தால்.

 புகைப்படப்பிடிப்பாளர்கள் ஆலயத் தோற்றத்தின் முகப்பு  அழகு தெரியும் வண்ணம் விரும்பிய படி புகைப்படம் எடுத்து சில நிமிடங்களில் பிரதியை கையில் தருகின்றார்கள்.

 ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கடலைக்கடை முதல் ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றது.

 ஞாபகப் பொருட்கள் ஏதாவது   விரும்பி வேண்டலாம்.

 மீண்டும் ஆந்திரா போக்குவரத்து வாகனத்தில் மறு பாதையால் கீழே வந்தோம் அங்கிருந்து வெளியில் வந்தால் எமக்கான சிற்றுண்டி தயாராக இருந்தது.

 அதை முடித்துக் கொண்டு வரும் வழியில் தாயார் அலமேலு (பத்மவாதி)அம்மன் ஆலயத்தையும் தருசித்துவிட்டு அங்கு குங்குமம் மற்றும் லட்டும் வாங்கிய பின் நமது பயணம் இனிதே சென்னையை நோக்கி திரும்பியது. 



28 August 2011

சென்னையில் ஒரு சந்திப்பூ(காதில்)

கடந்த வாரம் திடீர் பயணமாக சென்னை வந்த மூத்த பதிவாளர் நண்பன் மைந்தன் சிவாவை மெரினாவில் நேரடியாக சந்தித்தேன். !
அவரை  நலம் விசாரிப்புடன். நாம் இருவரும் மெரினாவில்
கும்மியடித்ததை
நண்பர்களுடன் நம் உரையாடலை பகிர்ந்து கொள்வதில் தனிமரம் மகிழ்ச்சியடைகின்றது.

மைந்தன் -ஹலோ நேசன் நீங்களா?
வாங்க பாஸ் நலமா சிவா!
என்ன நண்பா திடீர் விசிட் ஏதாவது விசேஸமோ?

மைந்தன் -அச்சுவலி ஐம் வெரி இம்போட்டன் மீட்டிங்!

ஐயோ பாஸ் உங்களுக்கு அச்சுவேலியில் நண்பி இருப்பது எனக்குத் தெரியும்! உந்த இங்கிலீஸ் எனக்கு கொஞ்சம் அலர்ஜிக் தம்பி .
நான் உங்க அளவுக்குப் படிக்க வில்லை தமிழில் பேசலாமே!?

மைந்தன் -நிச்சயமாக பேசலாம். இப்ப கொழும்பில் இப்படி இரண்டையும் கலந்து பேசினால்தான் மதிப்பினம் தெரியுமா!?

ஓம் சிவா பலர் சொல்லக் கேள்வி இங்கமட்டும் என்ன சென்னையிலும்  அப்படித்தான்!
வேற சொல்லுங்க சிவா என்ன குடிப்பம் ?
மைந்தன் -நான் குடிப்பதில்லை நேசன் தெரியாதோ ?

நீங்கள் தப்பா புரிஞ்சிட்டீங்க பாஸ் .நான் பால்கோப்பியா? டீ யா ?என்று கேட்டன்!

மைந்தன் -ஒ ஐ சீ! நான் நீங்கள் சகோதர மொழி நண்பர்களுடன் பழகியதால் மெண்டிஸ் ,ஸ்டவுட், லயன் லாகர் என்று நினைச்சன்!

மைந்தன் -நேசன் எனக்கு ஒரு ஐஸ்சொக் சொல்லுங்க

இதோ நண்பா இப்பவே வருகின்றது ?

மைந்தன் -நன்றி நண்பா!

மைந்தன் - யூனோ இந்த ஹன்சிஹாவை டாவடிக்க வெளிக்கிட்ட பின்பு தான் இந்த ஐஸ்சொக் சாப்பிடும் பழக்கம் !

ஏன்? முதலில் ஐஸ்கோனோ குடித்தனீங்க. இல்லை குச்சி சூப்பினதோ?

மைந்தன் -நேசன் மிகவும் கடுப்பூ ஏத்தா தீங்கள் உங்க மேல சகோதரமொழி,இலங்கை வானொலி , என மற்றவங்கள் . கடுப்பா இருப்பது தெரியுமா?!

ஒம் சிவா நல்லாத் தெரியும் !அதுக்கு விரைவில் விளக்கமா பதில் தாரன் .அவங்கள் யார் என்பதை நானும் நேரம் இருக்கும் போதெல்லாம் ஆராய்கின்றேன் ஆனால் முடியல பாஸ்!

 -சொல்லுங்க பாஸ் பதிவுலகில் புகழ்பெற ஏதும் வழியிருக்கா?

மைந்தன் -நேசன் தலைப்பை கவர்ச்சியா வையுங்கள் அதிகமானவர்கள் படிப்பார்கள்!

பாஸ் உங்க இலட்சியம்?

மைந்தன் -அப்படி எல்லாம் பெருசா ஒன்னுமில்ல!

ஏதோ வாழ்க்கைபோனால் சரி!

வெளிநாடு போகும் உத்தேசம் இல்லையா?

மைந்தன் -நமக்கு எல்லாம் 8 மணிக்கு நித்தா வந்திடும்.
  உங்களை மாதிரி சாமப்பேய் கிடையாது!
அப்ப நிரூபன் சாமப்பேயா?

மைந்தன் -ஏன் நேசன் அவர் என் பாஸ்  அவரின் நித்திரை முழிப்புக்கு அயிரம் இருக்கும்! நான் சின்னப்பொடியன் ஹீ ஹீ

உங்கட வெட்டிச் சங்கத்தில்  தமிழக காங்கிராஸ் காரியாலயத்தில் கோஸ்டி மோதலில் வேட்டி கிழிப்பதைப் போல உங்க வேட்டியும் கிழித்து விட்டார்களாமே!?
மைந்தன் - இதுவேற தெரியுமா உங்களுக்கு! ?

பாவிங்களா  அந்த தலைவரை விடமாட்டன் மோதி விளையாட்டுத்தான்!

 நீங்களும் தலைவர் ஆகனும் என்றுதான் கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தீர்களாமே!?

மைந்தன் -இதெல்லாம் அவரின் கட்டுக்கதை!

சங்கத்தில் இன்னும் உறுப்பினாரா?

மைந்தன் -இன்னும் உருப்பினர்தான் நேசன்!

நீங்க சங்கத்தில் இருக்கும் போது ஒரு பதிவு போட்டீங்க !இப்ப உங்க அடிப்படை உறுப்பினர், செயல்குழு உறுப்பினர் பதிவை விட்டு தூக்கிவிட்டாங்கலே!?

மைந்தன் -நானாத்தான் விலகுவதாக ராஜனாமாக் கடிதம் கொடுத்தன். கட்சியின் டெல்லி தலைமை இன்னும் என்  ராஜனாமாவை ஏற்க வில்லை இப்படி இருக்கும் போது தலைவர் தன் இஸ்டத்திற்கு ஆடலாமா?

உங்களுக்கும் தலைவருக்கும் ஆரம்பத்தில் இருந்து கலைஞர் அன்பழகன் போல்தானே நட்பு இருந்துச்சு?

மைந்தன் -ஒ அதுவா தலைவர் நல்லா இருந்தார் இடையில் மகளீர் அணித்தலைவி  தன் வலையில் விழ்த்தியதில் நமக்குள் கருத்துவேறுபாடு!

ஓ அவாதான் தப்சியோ?

மைந்தன் -யோ நீ யாரோடு யாரை ஒப்பீடு செய்யிற !

கூல் பாஸ்! இது மொக்கையான கேள்வி!
மைந்தன் -என்னப்பார்த்தா மொக்கையான பதிவு போடும் ஆளாத் தெரியுதோ!?

பாஸ்  உங்க  கூழ் என்பது நல்ல வெட்டிரும்பு தெரியுமோ? நல்ல மெண்டிஸ்  போத்தல் , ரைஜின் , லயன் ஸ்டவுட்!
உங்க தலைவர் 2 போத்தல் மிக்சிங் இல்லாமல் முடிப்பாராமே நிஜமா?

மைந்தன் -யோ இது பப்ளிக்கில் பேசுற விடயமா? அப்பா இதைக் கேட்டா  சங்கத்தையே கலைத்திடுவார்?!

அப்படியா! நீங்க அப்பா பிள்ளையா ?
அப்பா சொன்னா அரசில்ல இறங்குவீங்க ,புதுப்படத்தில் நடிப்பீங்க ஒரே உடுப்பை பலகாட்சியில் போடமாட்டீங்க கேட்டா இமெச்சு இதிலும் பார்க்க !, பஞ்சு டயலக் பேசாமல் சமத்தா நடிக்கலாமே!

மைந்தன் -யோ நீ என்னையா உள்குத்துக் குத்துராய்!

நண்பா  யூனோ திஸ் இஸ் பனியா?

மைந்தன் -பாஸ் நீங்க டமிலே பேசுங்க!

நேசன் - மைந்தன் நீங்கள் வெளியீடு செய்ய இருக்கும் "ஹான்சிஹாவுடன் காதலில் ஒரு கணக்காளர் "என்ற நாவல் பற்றி சொல்லுங்கள்!

மைந்தன் - இதுகூடத்தெரியுமா? சரி அதில் ஹான்சிஹாவுடன் செய்த சில்மிசங்கள் காதல் ரசனையுடன் இதுவரை வெளியாகாத அரிய புகைப்படங்கள் வித்தியாசமான மொழிநடையில் ஒரு நாவல் காவியமாக வெளிவரும்!

இதை ஓட்டை வடையின் தலைமையில்  நாஞ்சில் மனோ வெளியீடு செய்ய விக்கியண்ணா பெற்றுக்கொள்வதாக அறிந்தேன் உண்மையா?

  மைந்தன்  - ஆம் அதுமட்டுமல்ல



ஓரே நேரத்தில் இந்த நாவல் இரு இடங்களில் வெளியீடு செய்யும் முயற்ச்சியில் இருக்கின்றேன் !

நேசன் -
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க நண்பா!

  மைந்தன் -ஆம் முதல் முறையாக  வரலாற்றில் ஒரு நாவல் இரு தேசங்களில் மிகுந்த பணச் செலவு செய்து வெளியிட  இருக்கின்றேன் .

பாரிஸ் தேசத்தில் என் நாவல் காட்டான் தலைமையில் துஷ்யந்தன் வெளியீடு செய்ய  நிகழ்வுகள் கந்தசாமி பெற்றுக் கொள்வார் .அதற்காக கந்தசாமி விரைவில் பாரிஸ் போக இருக்கின்றார்!

இதன் வெளியீட்டு  உரைகளை யார் யார் செய்கின்றார் சொல்ல முடியுமா!

அரபுலகத்தில் நடப்பதை  சி.பி செந்தில் குமார் அவர்களும் பாரிஸ் தேசத்தில் நடப்பதை நிரூபனும் செய்கின்றார்கள்!

உங்கள் நாவல் வெற்றிவாகை சூடி நோபல் பரிசு பெற என் வாழ்த்துக்கள் நண்பா!

நன்றி நேசன் இது இரகசியமாக இருக்கட்டும் யாராவது பளாக்கில் திருட்டுத்தனமா வலையேற்றி என் கனவை தளபதியின் வேலாயுதம் படம் என்று விற்றுவிடுவார்கள்!



முடிவாச் சொல்லுங்க! உங்க எதிர்காலத்திட்டம் என்ன ?

அரசியலில் யாருடன் கூட்டு? உங்க தலைவரின்  மெளனம்  இதை எல்லாம் அடுத்த தலைவராக வரப் போகும் மைந்தன் மனதில் என்ன இருக்கு ?

 முதலில் தலைவருக்கு ஒரு விடிவைக்காட்டுங்கள். பாவம்  அவரும் சோகத்தில் இருக்கிறார்!?

மைந்தன் -அதுக்காகத்தான் தலைவரை ஓய்வு எடுக்கச் சொன்னேன் !இதைப்புரிஞ்சுக்காமல் நான் சதி செய்வதாக மன்ற உறுப்பினர்களிடையே என்னைப்பற்றி அவதூறு சொல்லி என் வேட்டியை உருவ வெச்சு (கிழித்து) கோவணத்தோட காலிமுகத்திடலில் ஓடவிட்டாங்க.
 நல்ல காலம் கார்த்திகா பார்க்கல !

உங்க மீது தலைவரின் சின்ன வீட்டை  ஹான்சிஹா மாதிரி இருக்கிறீங்க என்று ஜொல்லுவிட்டதால்தான் சங்கத்தில் உங்கமீது இத்தனை அன்புச் செதுக்கல் என்று இன்னொரு நண்பர் எனக்கு சொன்னார் சிவா?

மைந்தன் - யோ நீ ஒரு திட்டத்தோடுதான் சங்கத்தில் லாபி செய்கிறாய் இப்பவே நான் யார் என்று உனக்கு காட்டுகின்றேன் பாரு நேசன்!

கணக்கியல் வேலைக்கும் இப்போது புதிதாய் நுழைந்திருக்கும் வானொலித் தொகுப்பாளர் வேலைக்கும் இடையில் என்ன வேறுபாடு காண்கிறீர்கள் சிவா?

மைந்தன் - கணக்கிற்கு முடியை புடுங்கனும் வானொலியில் மூளையை புடுங்கனும் ஹீ ஹீ!

உங்கள் வலையை ஏன் முடக்கினார்கள் பாஸ்?

மைந்தன் - ஒன்னுமில்ல நேசன் தொடர்ந்து கிரிக்கெட்டும் ,விஜய் பதிவும் போட்டதால் யாரோ சில கசுமாலங்கள் என்னை கடுப்பேத்துறாங்கள்!

ஹான்சிஹாவுடன் எப்போது கலியாணம் பாஸ் ? அவங்களுக்கு சமைத்துப்போட  ரெடியா  சகோ?

மைந்தன் அடிக்க வர நேசன் ஓடுகின்றார் மெரினாவின் கடற்கரை ஓரம் !








 ?






26 August 2011

காற்றின் மொழியே ..!

சில மொழி உச்சரிப்புக்கள் எவ்வளவு தூரத்திலும் காதில் விழுகின்ற போது ஒர் ஈர்ப்பு வருவது தவிர்க்க முடியாது !

அதுவும் தெரிந்த மொழியை பேசும் போது இன்னும் ஒரு சுகம் கூடவரும் .
அப்படித்தான் நானும் காற்றுவாங்கிக் கொண்டு செல்லும் போது நல்ல அழகு என சகோதர மொழி குரல் கேட்க நானும் திரும்பிப் பார்த்தேன் !

பீச்சுக்கு தாயகத்தில் இருந்து வந்திருந்த இரு சிங்களக் குடும்பத்தினர் கடல் அலையோடு விளையாடினார்கள். கம்பஹா மாவட்டத்தில் இருந்து அவர்களின் புதல்வி சென்னையில் நடக்கும் சிறுவர் விளையாட்டில் பங்கு பெற வந்திருந்தார்கள்

.மறுநாள் விளையாட்டு இன்று மாலையை சந்தோஸமாக கழிக்கவும்  குடும்பத்துடன் வந்திருந்தார் .மெரினாவிற்கு.

அவருடன் நானும் விடுப்புக்கு பேச்சுக் கொடுத்தேன்.

அண்ணா சுற்றுலா வந்தீர்களா சென்னைக்கு!?

மகளின் விளையாட்டைச் சாட்டி எல்லாரும் வந்தோம் !

பரஸ்பர அறிமுகத்தின் பின் எங்களின் உரையாடலை உங்களுக்காக.

சந்திரசிரி ஒரு சிறைச்சாலை கணக்காய்வாளர். யாழ் சிறை மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் கடமை புரிந்தவர். இப்போது அவிசாவளையில் கடமையாற்றுகின்றார் .

 நீங்கள் எங்கிருந்து வாரீர்கள். தம்பி?

நான் பிரென்ஸ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றன்.






சந்திரசிரி- இந்த புலம் பெயர் மக்கள் இன்னொரு யுத்தம் வரும் என்று நினைக்கிறார்கள் போல?

நேசன் - நிச்சயமாக இல்லை உங்களுக்கு சில தவறான எண்ணங்களை யாரோ திணிக்கிறார்கள்!

சந்திரசிரி- உண்மையில் எனக்கு இறுதியுத்தம் மனவேதனையைத் தருகின்றது .இதன் பிறகாவது நாம் ஒரே நாடு என்று வளர்ச்சிப்பாதையில் போகனும்  இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்க்ள்.?

நேசன் - உறவுகளின் பிரிவையும் சோகங்களையும் இழப்புக்களையும் மறக்க முடியுமா? இன்னும் நமக்கு விடிவு வரவில்லை .! இத்தனை துயரங்கள் சொத்து இழந்து ஒவ்வொரு குடும்பமும் பலதிக்கில் பிரிந்து வாழும் வேதனையை அனுபவித்தால் தான் புரியும் ஒரே நாடு என்ற கொள்கை வெறும் கோஸம் அல்ல நமக்கு ஏதாவது கிடைக்கனும் நிம்மதியாக வாழ.!

சந்திரசிரி-  இப்படியே அடிபடுவதுதான் தீர்வா தம்பி ?
நிச்சயமாக இல்லை.!







நீங்கள் நல்லா சிங்களம் பேசுகின்றீர்கள் ஏதாவது அரச உத்தியோகம் பார்த்தனீங்களோ?

என்னைப் பார்த்தா ரத்துரோசா கமல அத்தாராட்சியா பொய் சொல்ல?!புலி என்றே சந்தேகத்தில் பாதி படிப்பு முடிக்கல!

சந்திரசிரி- இப்ப நாடு அமைதியை நோக்கிப் போகின்றது எப்ப தாய்நாடு வரும் எண்ணம்?

எல்லாரும் அப்படித்தான் சொல்லிரீங்க! இன்னும் வெள்ளைவானும் ஊடக சுதந்திரமும் இல்லையே !
!நாட்டுக்கு வாரவங்க விமான நிலையத்திலே காணமல் போறாங்களே!


சந்திரசிரி  -வெளிநாட்டில் இருந்தாலும் நல்லா உள்ளூர் விடயங்களை அவதானிக்கிறீங்க போல சிவா!

ஒவ்வொரு நாட்டுக்காரனும் தன் நாட்டின் மீது ஒரு பாசமும் பற்றும் வைத்திருப்பார்கள் என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்தந்த நாட்டில் அவனும் வெளிநாட்டு வாசியே!

சந்திரசிரி - உண்மைதான் சிவா நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன் !அவுஸ்ரேலியாவில் வாழும் என் தம்பியும் உங்களைப் போல்தான் சொல்லுவான்!

சந்திரசிரி - சென்னை வரும் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது இங்கு இருக்கும் சிலர் காடைத்தனமாக  நடந்து கொள்வது  சரி என்று எண்ணுகின்றீர்களா தம்பி?

நிச்சயமாக கண்டிக்கணும். சாதாரன மக்கள் மீது செய்யும் வன்முறை கலாச்சாரம்  எந்த நாட்டில் என்றாலும்  எனக்கு உடன்பாடு கிடையாது  .நம்நாட்டிலும் ஜே.வி.பி யும் சிங்கள உறுமையையும் ஏன் குடுராஜாக்களும் சேர்ந்து  செய்கிறார்கள் அண்ணாவுக்குத் தெரியாதோ?


சந்திரசிரி- மிகவும் சூடாக இருக்கிறீங்க போல தம்பி! அரசியல் மீது வெறுப்போ?

அரசியல் மீது வெறுப்பு இல்லை. அரசியல் வாதிகளிலும் அரச அதிகாரிகள் மீதும் தான் கோபம் வருகின்றது அண்ணா! நம்நாட்டை இப்படி சீரலித்ததால் நாம் எத்தனை நாடுகளில் சீரலிகின்றோம்!

 சந்திரசிரி- உண்மைதான் சிவா!

 சந்திரசிரி- இப்போது ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கின்றது நீங்கள் என்ன வேலை செய்கின்றீர்கள்?

முன்னர் போல் இல்லை !வேலை தேடுவது மிகவும் சிரமம்! நம்மவர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள்!
நான் ஒரு சமையல் உதவியாளனாக இருக்கின்றேன்!

 சந்திரசிரி- நல்ல சமையல் செய்வீர்கள் போல மனைவிக்கு வேலைச் சிரமம் இல்லை என்கிறீர்கள்?

அப்படி எல்லாம் பெரிசாக சமைக்கமாட்டன் ஆனால் இதுவரை யாரும் என் சாப்பாட்டை சாப்பிட்டு மரணிக்கவில்லை?

இருவரும் கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தோம்!

நாட்டுக்கு  ஒரு நாள் கண்டிப்பா வருவன் உங்களை தேடி வந்து சந்திப்பன் !
சந்திரசிரி!! உங்களைச் சந்தித்தது மிகவும் சந்தோஸம்  அவரிடம் இருந்து விடை பெற்றேன் !

இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி  சிறிது தூரம் கடந்த பின் என்னிடம் சொன்னால் இப்படி அவருடன் கொழும்பில் கோல்பேஸ் கடற்கரையில் நின்று  பேசினீங்கள் என்றாள் நாலாவது மாடியில்  இருந்திருப்போம் இரண்டு பேருமாக  இல்லை என்றாள் வெள்ளைவான் வந்திருக்கும். வாயை வைத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே! பாருங்கள் நண்பர்களே சுதந்திரமாக பேசக்கூடமுடியுது இல்லையே நண்பர்களாக?
இது யாரின் பிழை?

காற்று வீசும் ...

24 August 2011

கடல் ஓரம் வாங்கிய காற்று! 

என் பாசக்கார பதிவுலக உறவுகளே சிறிய இடைவேளையின் பின் மீண்டும் தனிமரம் உங்களுடன் இணைகின்றது எல்லோரும் நலமா !?

 சிலரின் வலையை முடக்கிவிட்டார்களாம் என்று அவலக்குரல் கேட்டு ஓடிவந்தேன்.!

காற்றில் என் கீதம் தோழி ஒரு  அழகிய தேவதையை பெற்றெடுத்து அகிலவர்சினி என்று அழகிய நாமம் சூட்டியிருக்கிறார் .வாழ்த்துக்களும் நேசனின் ஆசிகளும் தேவதைக்கு.

  இனி உங்களுடன் என் விடுமுறையில் பார்த்து ரசித்தவையை பதிவிடுவதுடன் நண்பர்கள் வலையில் முடிந்தவரை பின்னூட்டத்துடன் சந்திப்பேன் நட்புடன்
       தனிமரம் நேசன்!
 இதோ புதிய பதிவு எல்லாரும் கொண்டாட

கடல் ஓரம் வாங்கிய காற்று!

 ..கடற்கரைக் கிராமத்தில் பிறந்த எனக்கு கடல்காற்று, சோகிபொறுக்கியது ,  கடலில் நீச்சல் அடித்த சுகமான
இளமைக்காலங்கள் என பலதும்  தொலைத்து  இப்போது புலம்பெயர் வாழ்வில் இயந்திரமாக ஓடுகின்றேன் .

பொருளாதார சுமைகள் மூச்சு முட்டினாலும். இரத்த அழுத்தம் ,

அதிகமானால் வேற இடத்தை மாற்றினால்.  கொஞ்சம் மனதிற்குப் புத்துணர்ச்சி வரும் .அதனால் பலகடல்களை நாடி ஒடிப்போய் காற்றுவாங்குவதும் கடலில் புரள்வதும் மனதிற்கு சாந்தியாகும் .

எதுவும் அருகில் இருக்கும் போது அதன் தாற்பரியம் புரிவதில்லை.

 நீண்ட தூரம் பிரிந்து வந்த பின்தான் இயற்கையின் கொடை தெரிகின்றது.
அடிக்கடி சென்னை போகும் என் பயணம் மெரினா கடற்கரையை பார்க்காமல் முடிவதில்லை.

கடற்கரையில் மாலையில் காலாறா நடப்பதும் சந்திரோயத்தை காண்பதும் சில பாடல்களுடன் மணலில் குழிதோண்டுவதும் மனதினை மீண்டும் இளமைக்கால்ங்களுக்கு இழுத்துச் செல்லும் ஒரு மார்க்கம்.


 இந்த முறை மனைவியுடன் கொஞ்சம் அதிகமாக கடலைப் பார்த்த வண்ணம் கடலை போட்டேன் .

எப்போதும் மெரினா பீச்ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாற்றத்தை எனக்குத் தந்து கொண்டிருக்கின்றது .

சுண்டல் விற்கும் சின்னப் பொடியன் .


தன் வாழ்வின் வெளிச்சம் தெரியாமல் ஊருக்கு வெளிச்சமான எதிர்காலத்தை துல்லியமாக சொல்வதாக சொல்லும் நரிக்குறவர் வழித்தோன்றல் ஜக்கம்மா சாஸ்த்திரம் .
நானும் பார்த்தேன் எனக்காக இல்லாட்டியும். ஒரு அன்புத்தாயை அலட்சியம் செய்ய மனசு வரவில்லை .

அதற்காக.

  ஆனாலும் அந்த தாயின் பில்டாப்பூ கொஞ்சம் ஓவர்தான் என் தலையில் ஐஸ் வைத்தா! தம்பி மகராஜான் ஒரு ஹோட்டலுக்கு முதலாளி ஜோகம் இருக்கு.

 என்று ஏற்கனவே சொந்த தொழில் செய்வது இல்லை என்று இருக்கும் எனக்கு இது தேவையா?

மனைவியைப் பார்க்கச் சொன்னேன் அவளோ தும்புத்தடி பிஞ்சு போய்விடும் என்றாள் .

ஆத்தா ஆளைவிடு என்று எஸ்கேப் ஆகி அடுத்த பக்கம் போனேன் என் பிரியமான பால் கோப்பிக்காரர் இருந்தார் .

கடல்கரைக்காற்றுக்கு இதமான சூடு வாங்கிக்கொண்டு நடந்தால் முன்னம் இதில் ஏறிய குதிரை அருகில் வந்தது ஒரு சுத்து சுத்த ஆசைதான் ஆத்துக்காரியை கேட்டேன் ஒரு ரவுண்டு போக!

 மொட்டையனுக்கு கொழுப்புக் கூடிப்போச்சு இன்னும் சின்னப்பிள்ளையோ?

 பிரான்ஸ்க்கு கைபேசி எடுக்கட்டா மாமிக்கு  என்று அம்மாவை ஞாபகம் ஊட்டினால். ஆத்தா!  வீட்டில் உதவாக்கரை இதுவேறா என்று என் ஆசைக்குப் போட்டேன் தடா சட்டம்,.

.அங்கிருந்து ஒரு சில நிமிட நடையில் கடல் அலைகளுக்கிடையில் இன்னும் ஒலிக்கின்றது.

 கடல்மீன்கள்  பாடல்  தாலாட்டுதே வானம் தல்லாடுதே மேகம்  அதையும் ரசித்து விட்டு நடந்தால் அருகில் என் செவியில் விழுந்த ஒரு சொல் திரும்பிப் பார்க்கின்றேன்!

.. தொடரும் காற்று

கடல் ஓரம் வாங்கிய காற்று! 

01 August 2011

காத்திருப்பூ?!!!

என்ன உறவுகளே நலமா ! சில பாடல்கள் தனிமரத்தை மிகவும் செதுக்கியிருக்கிறது .என்றாள் வைரமுத்து சிற்பியே உன்னை செதுக்கின்றேன் என்ற கவிதைத் தொகுப்புக்கு போகாதீர்கள்! ஆனால் அது வெளியான காலகட்டம் நானும் தேடிப் படித்தேன்!

காத்திருப்பு என்ற உணர்வு பலருக்கு வலியும் வேதனையும் கலந்தது. சாய்ந்தாடு !நீங்கள் பாட்டியின் மடியில் அல்லது ,அன்னையின் மடி.
 ஏன் மாமியின் அல்லது அத்தையின் மடியில் சாய்ந்து ஆடியிருக்கிறீர்களா? அதன் பின் அத்தை/அல்லது மாமி ஒரு மகளைப் பெற்று வளமான வாழ்வில் அவள் ஒரு ஹான்சிஹா!மாதிரி இருந்து அவளை தோழில் தூக்கி ஆடியிருக்கிறீர்களா?

 அதற்காக காமம் என்று பொருள் கொள்ளாதீர்கள். இது இரத்த உறவு.  மனசில் கள்ளம் கபடம் இல்லாத உறவு .காதலும் இல்லை, அண்ணன் தங்கை உறவும் இல்லாத நிலை .

அரசியல் முதல் அடுப்படி சமையல் வரை பேசக்கூடிய உறவாக மச்சாள்மார் வாய்ப்பது! எத்தனை பேருக்கு வாய்க்கும் ?!

கோபம் என்றாள் அடித்தும். அதற்காக கெஞ்சியும் பின் ஏதாவது வாங்கிக் கொடுத்தும் சமாதானம் ஆகி சாப்பாடு போடும் உறவாக இருப்பது அன்பா!

இல்லை எதிர்காலத்தில் கணவன் என்று எதிர்பார்த்தா? அதையும் தாண்டி புரிந்து கொண்ட உணர்வா இருக்குமா?

மச்சாள் என்றாள் எட்டி நின்று பேசனும் .மச்சான் மீது மரியாதை இருக்கனும் என்று வாழும். கிராமத்து மனநிலையில் .பேர் சொல்லியும், திட்டியும் என்னை ஒரு நண்பனாக அவள் அருகில் கட்டிலில் நான் என்  கனவுகள் என பலதைப் பேசும் போது அவள் காவலுக்குப் பக்கத்திலும்,.

  என் அதிகாலை நித்திரையைக்  ரேவதியுடன் டூயட் பாடும் போது  குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றி கனவைக்கலைக்கும் , ஒரு தேவதையாக இருப்பது யாருக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் ?

காலமாற்றம், யுத்தம் என்னும் அரக்கன் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வு, மண்மீட்பு என்று எங்கள் வாழ்க்கையை , கிழித்துப் போட்ட ஈழத்தவன் வாழ்க்கையை எத்தனை தூயரங்கள் என்பது வாழ்ந்தும் ,அனுபவதித்தும் இருக்கும் கொடுமை வார்த்தையில் வர்னஜாலம் காட்ட
முடியாது.

.இப்படியான உணர்வுகள் தீண்டும் போது உதவிக்கு நண்பர்கள் இல்லாத இராத்திரிப் பொழுதுகளில் எங்கள் உணர்வுக்கு.

 இலங்கை வானொலி வர்த்தசேவையில் இரவின் மடியில் நிகழ்ச்சி ஆடிவரும் உறங்காதவிழிகளுக்கு உறக்கம் வரவைக்கும் வித்தை புரிந்த அறிவிப்பாளர்கள் பலர்.

 அவர்களில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் பலரில் மஹர்திஹாசிம் இப்ராஹிம் ஒரு மூத்த அறிவிப்பாளர்.

 இவர் சர்வதேச ஒலிபரப்பு /தேசிய சேவை / வர்த்தக சேவையில் கடமையாற்றுபவர் .இவர் இரவின் மடியில் வந்தால் இன்னும் சேவை நேரம் அதிகமாகாதா என எண்ணிய பொழுதுகள் அதிகம்.

 அப்போது வர்த்தகசேவை இரவு 10 மணியுடன் நிறைவு பெற்றுவிடும். இப்போது தெரியாது? இதை இப்போது யாரிடம் விசாரித்தால் நாகரிக உறவுகள் நீ இன்னும் உதவாக்கரையா! வெளிநாடு போயும் திருந்தலயா ?பலர் இப்போது இந்தவானொலியை கேளுங்கள் பரிசில் தருகின்றோம் என்கின்றது.  எழுத்துப்பிழைவிடும் என் போல் மொழியை சிதைக்கும் பல- வானொலி  இருக்கும் போது வருவாய் இல்லாத வானொலி கேட்க நாம் என்ன  விசில் அடித்தான் குஞ்சுகளோ? என்று எள்ளி நகையாடும் போது தொலை பேசி தொடர்பை துண்டறுப்பதை தவிர என் கோபத்தை யாரிடம் கூறமுடியும் .!


1997 இல் வெளியான இப்பாடலை நான் மஹாதிர்ஹாசிம் செய்த இரவின் மடியில் தான் முதலில் கேட்டேன் .இப்பாடல் படத்தில் எப்படி இயக்கியிருப்பார்கள் என்று இன்று வரை கற்பனையில் கனவு காண்கின்றேன்.

 ஆம் இப்படம் படப்பிடிப்பு இடையில் நிறுத்திவிட்டார்கள். பாடல்கள் வெளியாகி அரச/ தனியார் வானொலியில் இரு  பாடல்கள் ஒலிக்காத நேரம் இல்லை. அந்தப் படம் சத்யராஜ் +தேவயானி  ஜோடியாக நடித்த ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.

 தேவயானியின்  காதல் திருமணம் இந்தப்படத்தைப் பாதித்ததாக அன்நாளில் மித்திரன்  வாரமஞ்சரி சொல்லியது.

இப்பாடல் தேவா இசையில் பழனிபாரதி இயற்றிய பாடல்.

 வைரமுத்து இவர் மீது கொட்டிய அவதூறு  வார்த்தைகள்  பல அந்நாளில் தினகரன்  நாளிதல் தாங்கி வந்தது பத்திரமாக வைத்திருந்த பல தகவல் களஞ்சியம் இடம்பெயர்வு புலப் பெயர்வு எனபோய்விட்டது காற்றில் பறக்கும் பஞ்சைப் போல!

பாடியவர்கள் உன்கிருஸ்னன்+ சுஜாத்தா .
இப்படாலுடன்  என் வாழ்வில் சில சுவாரசியம் இருக்கு!

!1) இந்தப்பாடலை மூத்த பதிவாளரிடம் அவரின் வலையில் ஒலிக்க விட தனிப்பட்ட மின்னஞ்சல் போட்டேன். அவரும் விரைவில் போடுவதாக பதில் தந்தார் .காலம் ஓடியது இன்னும் வரவில்லை. இப்போது நானும் ஒரு வலையை உருவாக்கியது அவருக்குத் தெரியாது போல !என்றாலும் அவரின் பதிவைப் படிக்கும் ஒரு வாசகன் நான் .இது மாறாத ரசனை!


2) இப்பாடலை புலம் பெயர்ந்த பின் கேட்க முடியவில்லை .என்று அதிகம் கவலைப்பட்டேன் .
இனையப் பரிச்சயம் அதிகம் தெரியாதவன் கடந்த ஆண்டு என் மனைவி எனக்காக கொண்டுவந்த அன்புப் பரிசு இப்பாடல் பதிவு செய்த ஒலிநாடா .

திரும்பி மனைவி தாயகம் போகும் போது தவித்து நின்ற என்னைப்  போல் அந்த ஒலிநாடாவும் அவளின் கைப்பையில் மீண்டும் போய்விட்டது .இன்றும் கைக்கு வரவில்லை.மனைவியைப் போல்தான் !அப்பாடா  ஐஸ் மனைவிக்கு தொலைபேசியில் பேசும் போது பதிவை  பார்த்துவிட்டு திட்டுறாள் மொழிக்கொலைக்கு!


3) என் ஞாபக ஏட்டில் இப்பாடல் பதிந்து  விட்டதை நண்பனிடம் இணையத்தில் தேடும்படி கூறினேன். அவன் பணி செய்யும் டுபாய் வெய்யில்  பணிகளுக்கிடையிலும் எனக்காக தேடி இதன் link  தந்து என்னை இன்பக்கடலில் மூழ்க வைத்தவன்.

இப்பாடல் வரிகள் பலபிடிக்கும் அவற்றை விளக்குவது பதிவை நீண்டதாக்கிவிடும்.

பழநிபாரதி உண்மையில் ஆங்கிலம் கலந்து எழுதினாலும் ,தமிழ்த்திரையில் குறிப்பிட்டகாலத்தில் அதிகம் பாடல் எழுதியவர் .

இப்போது ஏனோ மெளனம் காப்பது புரியவில்லை. புதிய பாடல் ஏதும் என் விழிக்கும் செவிக்கும் காணவில்லை.

 இவரின் காதலின் பின்கதவு கவிதை நூல் தான் அண்மையில் நான் வாங்கியது.

இப்பாடலை ரசித்து எழுதியிருப்பார் நாம் !மறந்து போன பூசனிப் பூ,
 மத்தளம் -இது செய்ய எத்தனை மண்பானையை உடைத்து கடதாசிப் பேப்பர் ஒட்டி காவல் இருந்து இசைத்துப் பார்த்த சின்னவயசு நினைவுகள்.!

இலவுகாத்தகிளி- இது பற்றிய எத்தனை உள்ளங்களின் காதல் என் கண்முன்!

காத்திருப்பு-இதுபற்றிய வார்த்தைக் கொத்து. ஆண்டாள் முதல் ஈழத்தமிழன் வரை உணர்வுகள் மிக்கது.

கவிதைவீதியின் ஒரு பதிவு மெரினாவில் காத்திருந்து போனதை வடிவாக படம் பிடிக்கும் வரிகள் என இத்தோடு பொருந்தும்.