உலாக்களில் பல விழாக்கண்டேன் உறங்கிய மனதுக்குள் நீ இருந்தாய் என் நிலவாக மறந்து போனாய் பின் பறந்து போனாய் !
இப்படி அவன் மனதில் நினைத்துவிட்டு!
வா சுகி போவம் .
"இருடா .உனக்கு எப்பவும் அவசரம் .அம்மாட்டக் காசு வாங்கியாரன் "
ஏன் ? அவிச்ச கடலை வாங்கவோ .வேண்டாம் .அதுதான் வீட்டில் மாமி செய்வாவே .
"இல்ல ராகுல் அது கச்சான் வாங்க இன்று அப்பாவிடம் காசு வேண்டினால் உனக்கு படம் பார்க்க பிறகு தரலாம் தானே"
" மெதுவாக பேசு ஓட்டவாய் "
அவள் அப்போதும் ஒரு குழந்தையைப்போல தான் !
குமரி என்றாலும் ஏனோ அவள் தான் அவனின் உண்மையான நேசிப்புக்கு இருக்கும் ஒருந்தியாக அங்கே இருந்தால்!
ராகுல் படம் பார்க்க தியேட்டரில் இருக்க அவளின் உண்டியல் காசுதான் டிக்கட் வழியாக வெளியே போகும்.
கடன் வேண்டும் போதெல்லாம் அவளுக்கு பள்ளிக்கூடம் புத்தகப்பை தூக்க வேண்டும் . அவளுக்கு கைவீசி வரணும் என்ற ஆசை.
அதையும் விட பிறந்த நாளில் இருந்து அவள் பாரம் ஏதும் சுமக்கக்கூடாது என்று எல்லாரும் அக்கறையோடு இருப்பது அவள் ஒருத்திக்குத் தான் .
எல்லாரும் அந்தளவு மனமும் குணமும் அவளுக்கு .மென்மையான மச்சாள் சுகி!
காசு வேண்டும் போது ராகுல் சொல்லுவான் .
"உன் பெரியப்பாவிடம் சீதனம் வாங்கி உனக்குத் தான் தருவேன் சரியா "
"அப்ப நீ உழைக்க மாட்டியோ?
யார் சொன்னது இல்லை என்று!
உங்க அப்பா சுருட்டுக்கடையில் கல்லாப்பெட்டியில் குந்தணும் என்று அடம்பிடிக்கின்றார் .
இதோ சின்ன மச்சாள் நித்திரை என்று அடம்பிடிக்கின்றாள் .
நீ படம் பார்த்துக் கெட்டுப்போறன் என்று ஒருபக்கம், கடையில் உங்கப்பா புலம்பல்!
யுத்தம் என்று சொல்லி என்ற ஐயா என்னை இங்க அனுப்பினதும்.
நான் படும் பாடும் உன்னைத் தவிர யாருக்குத் தெரியும். .
"சரிசரி மூஞ்சையை தொங்கப் போடாத "ராகுல்.
முதலில் பெரஹரா பார்க்கணும்
மிச்சம் எல்லாம் நாளை மறுநாள் பள்ளிக்கூடம் போகும் போது பேசுவோம் . இல்லை ஆற்றில் குளிக்கும் போதும் பேசலாம்.குண்டா.
இனி பள்ளிக்கூடம் நான் கூட்டி வரமாட்டன் .
இந்தா வாரா உன்ற அக்காளிடம் புத்தகப்பையை கொடுத்துவிடு.
ஏன் ?துரைக்கு யாரவது லைன் போடுகினமோ பள்ளிக்கூடம் போகும் வழியில் .
இல்ல அந்தச் சீலா உங்க அப்பாவிடம் பந்தம் பிடிக்கின்றாள் .
நான் பசங்க கூடஅதிகம் பகிடி பண்ணுகின்றேன் என்று.
அந்த அக்காள் சொன்னாவோ ஓம் நேற்ற உன்ற அப்பா சொல்லித்திட்டியது எனக்கு "
"சுருட்டுக்குப் பாணி போடத் தெரியல போறவார பெட்டைகளுக்கு பகிடியா பண்ணுகின்றாய் கிரகம்."
அந்த கண்ணாடி அவள்தான் என்று நினைக்கின்றேன் .உங்க அக்காளின் புதுத் தோழி! அவாதானே.
ரெண்டு பேருக்கும் பாரன் காட்டுறன் பங்கஜம் பாட்டியின் பேரன் ஆர் என்று.
"உன்ற பாட்டி ஊரில். எங்க அப்பாவை இங்க ஒன்றும் செய்ய முடியாது சொல்லு சுகி உங்க சுருட்டுக்கடை வேலைக்காரனிடம் "
மாமியின் பெரியதங்கை மகள் இவளுக்கு அதிகம் நினைப்பு அவர் அப்பா செல்லன் மாமா கடையில் அவர் சொல்லும் வேலை எல்லாம் ராகுல் செய்வதால் .தங்க வீட்டிற்கு வந்து விடுவேனா உறவு கொண்டாடிக்கொண்டு என்று.
சுகி இவங்க அப்பாவும் நானும் உங்க அப்பாவிடம் சுருட்டுக்கடையில் ஒரே வேலைக்காரங்கள் தான் .
அவர் கல்லாப்பெட்டியில் இருக்கலாம் ஆனால் நான் எல்லாவேலையும் செய்வேன் வெள்ளை வேட்டியில் ஊத்தைபடக்கூடாது என்று இருக்கும் ஆள் இல்லை .
சரிசரி உன்ற தாத்தா பெருமையை சொல்ல வேண்டாம் ."
வா இந்த வீதியால் போகும் பெரஹரா பார்ப்போம்.
வீதியில் புத்தன் உலா வர விழிகளுக்கு வர்ணஜாலம் காட்டும் விளக்கு வெளிச்சம் பலர் போகும் வழிகளில் அதிசயமாக இந்த உலாவைப் பார்க்கும் சிலருக்கு .
தங்கள் இணைக்குயில்கள் வந்தார்களா ,என்றே எட்டிப்பார்ப்பதும் காத்திருப்பதாக இருக்கும் .
கிராமத்தில் இருந்து பலர் வந்து இருப்பார்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களுடன் .
இதில் ஊரில் பேசமுடியாத பலருக்கு இந்த பெரஹரதான் வழிகொடுக்கும் .
சில சகோதரமொழியில் இருப்போருக்கும் தாய்மொழிபேசுவோருக்கும் ஜொல்லு விடும் வீதி இது . சிலர் சில்மிச வேட்டைக்கு இருட்டு அடிவிழும் வீதியும் இதுவாகத்தான் இருக்கும்.
அந்தளவுக்கு இங்கே அதிகமானவர்கள் வீதியுலாவை கண்டு ரசிப்பார்கள்!
வீதியில் வரும் போது தான் தென்னக்கோன் தாத்தா வந்தார்.
அவர் பேர்த்தி அனோமா போனபின் செல்லன் மாமாவோடு ஏற்பட்ட மனக்கசப்பால் வீதியில் கண்டால் ராகுலோடு பேசுவார் .
ஆனால் அவரும் கல்கமுவை வாசியாக விட்டார் .இந்த விழாவில் அவரின் சின்னமகளின் சின்னப் பேர்த்தி குசுமா கண்டியன் நடனம் ஆடிவருவாள் .
அவளுக்கும் அனோமாவிற்கும் ஒரு வயது இளமை.
செல்வம் மாமா போனபின் அனோமாவிற்கு பதுளையில் இருந்து கடிதம் போடும் ஒரே ஒரு தோழி அவள்தான் .
இவளைப்பார்க்கும் போதெல்லாம் ராகுலுக்கு இப்போது அனோமா எப்படி எல்லாம் வளர்ந்து இருப்பாள் என்று நினைக்க மட்டுமே முடியும் !
வீட்டில் யாரும் சேர்க்காத உறவாகி அவர்களும் வெளிநாடு போனபின் மறந்த உறவாகிப்போனவர்கள் நினைப்பை ஏதாவது ஒரு சந்திப்புத்தானே சிந்திக்க வைக்குது .
அப்போது தான் தென்னக்கோன் தாத்தா சொன்னார்.
இதில் சுகியைத் தவிர யாருக்கும் தென்னக்கோன் தாத்தாவின் கதையும் தெரியாது, மொழியும் புரியாது.
தென்னக்கோன் தாத்தா ராகுலோடு எப்போதும் சகோதரமொழியில் தான் கதைப்பார் .
காரணம் நல்லா மொழிகற்கின்றேனா என்று கண்டு பிடிக்கத்தான் .அவர் தான் அன்று அந்த விசயத்தைச் சொன்னார்! பெரஹராவுக்கு சந்தோஸத்தோடு போனவன் சிந்திக்க வேண்டியவன் ஆகினான் ராகுல்!
தொடரும்..........
///// பகிடி- ஜாலி
கச்சான்...-வேர்க்கடலை
லைன்.. நூல்விடுதல்/நோக்குதல்!
சீதனம்- வரதட்சனை!
கல்கமுவ இலங்கையில் ஒரு நகரம் .
துரை-மரியாதை நிமித்தம் தோட்டத்தொழிலாளிகள் பேசுவது /சார் போல
இப்படி அவன் மனதில் நினைத்துவிட்டு!
வா சுகி போவம் .
ஏன் ? அவிச்ச கடலை வாங்கவோ .வேண்டாம் .அதுதான் வீட்டில் மாமி செய்வாவே .
"இல்ல ராகுல் அது கச்சான் வாங்க இன்று அப்பாவிடம் காசு வேண்டினால் உனக்கு படம் பார்க்க பிறகு தரலாம் தானே"
" மெதுவாக பேசு ஓட்டவாய் "
அவள் அப்போதும் ஒரு குழந்தையைப்போல தான் !
குமரி என்றாலும் ஏனோ அவள் தான் அவனின் உண்மையான நேசிப்புக்கு இருக்கும் ஒருந்தியாக அங்கே இருந்தால்!
ராகுல் படம் பார்க்க தியேட்டரில் இருக்க அவளின் உண்டியல் காசுதான் டிக்கட் வழியாக வெளியே போகும்.
கடன் வேண்டும் போதெல்லாம் அவளுக்கு பள்ளிக்கூடம் புத்தகப்பை தூக்க வேண்டும் . அவளுக்கு கைவீசி வரணும் என்ற ஆசை.
அதையும் விட பிறந்த நாளில் இருந்து அவள் பாரம் ஏதும் சுமக்கக்கூடாது என்று எல்லாரும் அக்கறையோடு இருப்பது அவள் ஒருத்திக்குத் தான் .
எல்லாரும் அந்தளவு மனமும் குணமும் அவளுக்கு .மென்மையான மச்சாள் சுகி!
காசு வேண்டும் போது ராகுல் சொல்லுவான் .
"உன் பெரியப்பாவிடம் சீதனம் வாங்கி உனக்குத் தான் தருவேன் சரியா "
"அப்ப நீ உழைக்க மாட்டியோ?
யார் சொன்னது இல்லை என்று!
உங்க அப்பா சுருட்டுக்கடையில் கல்லாப்பெட்டியில் குந்தணும் என்று அடம்பிடிக்கின்றார் .
இதோ சின்ன மச்சாள் நித்திரை என்று அடம்பிடிக்கின்றாள் .
நீ படம் பார்த்துக் கெட்டுப்போறன் என்று ஒருபக்கம், கடையில் உங்கப்பா புலம்பல்!
யுத்தம் என்று சொல்லி என்ற ஐயா என்னை இங்க அனுப்பினதும்.
நான் படும் பாடும் உன்னைத் தவிர யாருக்குத் தெரியும். .
"சரிசரி மூஞ்சையை தொங்கப் போடாத "ராகுல்.
முதலில் பெரஹரா பார்க்கணும்
மிச்சம் எல்லாம் நாளை மறுநாள் பள்ளிக்கூடம் போகும் போது பேசுவோம் . இல்லை ஆற்றில் குளிக்கும் போதும் பேசலாம்.குண்டா.
இனி பள்ளிக்கூடம் நான் கூட்டி வரமாட்டன் .
இந்தா வாரா உன்ற அக்காளிடம் புத்தகப்பையை கொடுத்துவிடு.
ஏன் ?துரைக்கு யாரவது லைன் போடுகினமோ பள்ளிக்கூடம் போகும் வழியில் .
இல்ல அந்தச் சீலா உங்க அப்பாவிடம் பந்தம் பிடிக்கின்றாள் .
நான் பசங்க கூடஅதிகம் பகிடி பண்ணுகின்றேன் என்று.
அந்த அக்காள் சொன்னாவோ ஓம் நேற்ற உன்ற அப்பா சொல்லித்திட்டியது எனக்கு "
"சுருட்டுக்குப் பாணி போடத் தெரியல போறவார பெட்டைகளுக்கு பகிடியா பண்ணுகின்றாய் கிரகம்."
அந்த கண்ணாடி அவள்தான் என்று நினைக்கின்றேன் .உங்க அக்காளின் புதுத் தோழி! அவாதானே.
ரெண்டு பேருக்கும் பாரன் காட்டுறன் பங்கஜம் பாட்டியின் பேரன் ஆர் என்று.
"உன்ற பாட்டி ஊரில். எங்க அப்பாவை இங்க ஒன்றும் செய்ய முடியாது சொல்லு சுகி உங்க சுருட்டுக்கடை வேலைக்காரனிடம் "
மாமியின் பெரியதங்கை மகள் இவளுக்கு அதிகம் நினைப்பு அவர் அப்பா செல்லன் மாமா கடையில் அவர் சொல்லும் வேலை எல்லாம் ராகுல் செய்வதால் .தங்க வீட்டிற்கு வந்து விடுவேனா உறவு கொண்டாடிக்கொண்டு என்று.
சுகி இவங்க அப்பாவும் நானும் உங்க அப்பாவிடம் சுருட்டுக்கடையில் ஒரே வேலைக்காரங்கள் தான் .
அவர் கல்லாப்பெட்டியில் இருக்கலாம் ஆனால் நான் எல்லாவேலையும் செய்வேன் வெள்ளை வேட்டியில் ஊத்தைபடக்கூடாது என்று இருக்கும் ஆள் இல்லை .
சரிசரி உன்ற தாத்தா பெருமையை சொல்ல வேண்டாம் ."
வா இந்த வீதியால் போகும் பெரஹரா பார்ப்போம்.
வீதியில் புத்தன் உலா வர விழிகளுக்கு வர்ணஜாலம் காட்டும் விளக்கு வெளிச்சம் பலர் போகும் வழிகளில் அதிசயமாக இந்த உலாவைப் பார்க்கும் சிலருக்கு .
தங்கள் இணைக்குயில்கள் வந்தார்களா ,என்றே எட்டிப்பார்ப்பதும் காத்திருப்பதாக இருக்கும் .
கிராமத்தில் இருந்து பலர் வந்து இருப்பார்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களுடன் .
இதில் ஊரில் பேசமுடியாத பலருக்கு இந்த பெரஹரதான் வழிகொடுக்கும் .
சில சகோதரமொழியில் இருப்போருக்கும் தாய்மொழிபேசுவோருக்கும் ஜொல்லு விடும் வீதி இது . சிலர் சில்மிச வேட்டைக்கு இருட்டு அடிவிழும் வீதியும் இதுவாகத்தான் இருக்கும்.
அந்தளவுக்கு இங்கே அதிகமானவர்கள் வீதியுலாவை கண்டு ரசிப்பார்கள்!
வீதியில் வரும் போது தான் தென்னக்கோன் தாத்தா வந்தார்.
அவர் பேர்த்தி அனோமா போனபின் செல்லன் மாமாவோடு ஏற்பட்ட மனக்கசப்பால் வீதியில் கண்டால் ராகுலோடு பேசுவார் .
ஆனால் அவரும் கல்கமுவை வாசியாக விட்டார் .இந்த விழாவில் அவரின் சின்னமகளின் சின்னப் பேர்த்தி குசுமா கண்டியன் நடனம் ஆடிவருவாள் .
அவளுக்கும் அனோமாவிற்கும் ஒரு வயது இளமை.
செல்வம் மாமா போனபின் அனோமாவிற்கு பதுளையில் இருந்து கடிதம் போடும் ஒரே ஒரு தோழி அவள்தான் .
இவளைப்பார்க்கும் போதெல்லாம் ராகுலுக்கு இப்போது அனோமா எப்படி எல்லாம் வளர்ந்து இருப்பாள் என்று நினைக்க மட்டுமே முடியும் !
வீட்டில் யாரும் சேர்க்காத உறவாகி அவர்களும் வெளிநாடு போனபின் மறந்த உறவாகிப்போனவர்கள் நினைப்பை ஏதாவது ஒரு சந்திப்புத்தானே சிந்திக்க வைக்குது .
அப்போது தான் தென்னக்கோன் தாத்தா சொன்னார்.
இதில் சுகியைத் தவிர யாருக்கும் தென்னக்கோன் தாத்தாவின் கதையும் தெரியாது, மொழியும் புரியாது.
தென்னக்கோன் தாத்தா ராகுலோடு எப்போதும் சகோதரமொழியில் தான் கதைப்பார் .
காரணம் நல்லா மொழிகற்கின்றேனா என்று கண்டு பிடிக்கத்தான் .அவர் தான் அன்று அந்த விசயத்தைச் சொன்னார்! பெரஹராவுக்கு சந்தோஸத்தோடு போனவன் சிந்திக்க வேண்டியவன் ஆகினான் ராகுல்!
தொடரும்..........
///// பகிடி- ஜாலி
கச்சான்...-வேர்க்கடலை
லைன்.. நூல்விடுதல்/நோக்குதல்!
சீதனம்- வரதட்சனை!
கல்கமுவ இலங்கையில் ஒரு நகரம் .
துரை-மரியாதை நிமித்தம் தோட்டத்தொழிலாளிகள் பேசுவது /சார் போல