31 March 2016

ஆனந்த ஊர்வலம்.

ஒலியும் ஒளியும் இந்த வார்த்தையை அறிமுகம் செய்து தந்தது சிங்கப்பூர் தொலைக்காட்சி .அவர்களின் நிகழ்ச்சியை இலங்கையில் ஒலி/ஒளிபரப்பி செய்தது அரச ஊடகமான ரூபவாஹினி 80 இன் பின்னும்90 முற்பகுதியிலும் இந்த நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் ரசிகர்கள் இலங்கை  எங்கும் இருந்தார்கள்.

 இன்று போல தனியார் ஊடகம் பல இல்லாத அந்த நேரத்தில் ரூபவாஹினியின் தமிழ்ச்சேவையின்  ஊடாக சிங்கையின் கலை பண்பாட்டினை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

 பிரதி வெள்ளி தோறும் இலங்கை நேரப்படி மாலை 5.00 இருந்து 5.30 வரை ஒலியும்/ஒளியும் நாடு விட்டு நாடு தாண்டி வந்த நிகழ்ச்சியை ஏனோ அரச ஊடகம் இடைநிறுத்தியது  திடீர் என்று!.

அந்த நிகழ்ச்சிக்கு பதிலாக நம்மவர் பாடல்கள் என்ற ஒரு நிகழ்ச்சி அறிமுகம் இலங்கையில் மீண்டும் மெல்லிசைக்கு புதிய பாதை போட்டது ஒலி/ஒளியாக ரூபவாஹினி தமிழ்ச்சேவை.

 அதே போல ஒலியாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சந்தமேடை என்ற நிகழ்ச்சியை தொடங்கியதும், இலங்கையின் மெல்லிசை வரலாறு.

 இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பாடல்கள் எழுதியவர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் வெளியில் பல கவிஞர்கள் இருந்தாலும் ஏனோ சந்தர்ப்பம் அவர்களுக்கு முதல்மரியாதை செய்தது.

நல்ல கவிதைகள் பல பாடல்களாக நம்மவர் பாடல்களாக ஒலியும் ஒளியுமாக தமிழ்ச்சேவையில் தோன்றிய போது புதியவர்கள் பலரும் இந்தக்கலைஞர்களின் பெயர்களையும்  அவர்களின் முகத்தையும் முகவரியையும் தேடத் தொடங்கினார்கள்.


 அந்த வகையில் வானொலியில் நேயர்களுக்கு அறிமுகமானவர்கள் புனைபெயரில் நம்மவர் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பினார்கள் இறைதாசன்( B.H அப்துல்ஹாமீத்) எஸ்.எழில்வேந்தன்,ராஜேஷ்வரி சண்முகம்,ஜெய்கிருஸ்ணா,ஜோசப் ராஜேந்திரன்,நாகபூசனி கருப்பையா,அருந்ததி சிறிரங்கநாதன் ,மலர்வேந்தன்,சில்லையூர் செல்வராஜன்,கமலினி செல்வராஜன்,சிறிதர் பிச்சையப்பா,நிலாமதி பிச்சையப்பா இரட்டைப்பாதை சேகர் , கார்மேகம் நந்தா,மலரன்பன், முத்தையா ஜெகன்மோகன் சீத்தாராமன், கலீஸ்ரா லூக்கஸ் என பலர் இந்த நிகழ்ச்சி மூலம் இலங்கை இசைமேடையில் பாடல் எழுதுவோராக  முத்திரை பதித்தார்கள்.

இவர்களின் பெயரும் புகழும் நாட்டின் பல பாகங்களில் இசை மேடைநிகழ்ச்சியில் விளம்பரங்களாக மின்னியதை! ஏனோ இனவாத யுத்த வெறி  இலங்கை மெல்லிசையை  மீண்டும் நலிவடைய வழிசெய்ய !

பல கலைஞர்கள் வருயாய் தேட அரபுலகம்,புலம்பெயர் என்று  நாட்டை விட்டுச்செல்ல இலங்கை மெல்லிசையும் காணமல் போனோர் பட்டியலில் சேர்ந்து கொண்டது .

ரூபவாஹினியும் தமிழ்நிகழ்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கவில்லை இந்திய திரைப்படங்களை ஒலியும் ஒளியுமாக தமிழ்மக்களிடம் சேர்த்துவிட்டது.

இந்த நம்மவர்கள் பாடலில் பல இசையமைப்பாளர்கள் புதியவராக வலம் வந்தார்கள் மோகன் -ரங்கன்,பாயஸ்- ரட்ணம்,கேசவராஜன், திருமலை பிரபா, சிறிதர் பிச்சையப்பா ,சாரங்கன் சிறிரங்கநாதன் என இன்னும் பலர் இவர்களுக்கு முகவரியை தந்த இலங்கை மெல்லிசையை இவர்கள் இன்று மறந்தாலும் இவர்களை மறக்காத நேயர்கள் பலர்..

எஸ் எழில்வேந்தன் இலங்கை வானொலியில் பிரபல்யமான அறிவிப்பாளர்.


 இவரின் தந்தை துறைநீலாவணன் ( சின்னத்துரை ) ஈழத்து மூத்த கவிஞர்   அவரின்  கவிதை இலங்கை உயர்தர பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு வாழ்வியல்லை கருவாக கொண்டது   கவிதை.

தந்தை போல எழில்வேந்தனும் கவிதை புனைவதில் வல்லவர் இவரின் பல பாடல்கள் இன்றும்  இலங்கை கலைக்கூடத்தில் இருக்கின்றது.


 பின் வந்த காலகட்டத்தில் தனியார் வானொலிக்கு  எஸ். எழில்வேந்தன்  இடம் மாறினாலும்  அவரின் வழிகாட்டலில் தனியார் வானொலியில் தடம்பதித்தோர்  இன்று பலர் எனலாம் அவரின் கற்பனைக்கு இந்தப்பாடல் ஓர் எடுத்துக்காட்டு.


மற்றும்மொரு பாடலுடன்  ஊர்வலம்  தொடரும்.....

24 March 2016

யாசிக்கும் -- ஏ--தி --லி -4

முன்னம் இங்கே யாசிப்பு-http://www.thanimaram.org/

இனி...

கனவு தொலையும்
கவிதை தொலையாது
கற்கவில்லை வெண்பா!
கடந்து போகும் காதலும்!!
கற்றவன் என்றால் தூற்றும் உலகம்!
கல்லாதவன் கடந்தேன்  கவிதை மட்டுமா
கடல் கூடத்தான் !!கன்னியின் காதலும்
கடந்தேன்! ஏதிலி  நான் !!!
கடம்பமரம் முதலில்
கடைசியில் பூசை எனக்குத்தான்!
                                   (  யாதவன் நாட்குறிப்பிள்)


பார்த்திருந்தேன் உன்னையே  எதிர்பார்த்திருந்தேன் உன்னையே  என்றது விஜய் பாடல் போல பார்வையோ இல்லை பார்த்தாலே பரவசமே  மாதவன்  சிந்தனைச் சாரல் லயிப்போ அதன் பதிப்பில் பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்ற பிரசாந்த்  கனவோ  பார்வை ஒன்றே போதுமே  குணால் என்பதா இல்லை பார்க்காத என்னைப் பார்க்காத என்ற ஆறு  சூர்யா  தவிப்பு  பார்வையா இல்லை என்றும் இனிமை பாராமல் பார்த்த நெஞ்சம் என்ற  பூந்தோட்டாக்காவல்க்காரன்  பாடல் ஆனந்து  ஹீரோ போல அல்ல யாழினியின் பார்வை !

இது பார்வை ஒன்றே போதுமே பட மோனல் போலும் அல்ல உன்னை நினைத்து பட சினேஹாவின் தண்ணீர் இறைக்கும் காட்சிபோல  அக்கினிப் பார்வையை அதனை உள்வாங்கும் திறமையில்லாதவன் போல அல்ல  யாதவன் .!



வேட்டையாடு விளையாடு பட பார்த்த முதல்நாள் என்று கமல் போல இன்னும் டூயட் பாட ஹீரோ அல்ல!இதை மட்டும்மா நீ உலக சினிமா பார்த்து இருந்தாலும் நம் அயல் தேச  நடிகை பட்டியல் சொல்லி இவளை கவர்ந்து சொல்ல நினைக்கும் ஆசை எனக்கில்லை!!




 ஏன்னா நீ பிறக்கும் முன்னமே உன் தாய் குமரியாக  என்னை தூக்கியவள் மருமகன் என்ற மாமியாக !இந்த கலாச்சார போராட்டம் யுத்தம் என்ற போர்வையில் சிதைந்த கனவு எழுத நான் என்ன தனிமரம் வலையில் வெட்டியான் எழுதிய கதை போலவா!

யாழினி விழிப்பார்வை சொல்ல மறந்த கதை போல கூர்வாள்கொண்டு கீறும் ஓவியக்காதல் என்று நினைக்க இது என்றென்றும் காதல் போல !அல்லது  எங்கே எனது கவிதை என்று பாட கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மம்முட்டி காலம்  அல்ல இன்றைய வாழ்க்கை .  

காலம் மாறிப்போச்சு என்று கதை பேச நினைத்தால் நிச்சயம் சிறையில் இருப்போர் விடுதலை எப்போது என்ற உறவுகளின் நிலைபோலத்தான் யாழிலினியின்  பார்வையின் பின்னே இருக்கும் மூடுமந்திரம் !


ஆனாலும் பாட்டி கதைக்கத் தொடங்கினால் மதுரை முத்துவின் கமடி  இடைவிடாத வண்டி ஓட்டல் போல சிரிக்கலாம் ,சிந்திக்கலாம், ஆனாலும் இப்போது சிரிக்கும் நிலையில் யாதவனும் இல்லை! யாழிலினியும் இல்லை  இது தாய்லாந்தில் முறிவடைந்த  இலங்கை அரசு -புலிகள்  சமாதான பேச்சு வார்த்தை போல!

  ஆனாலும் ஊடகங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டிய நிலைபோல பாட்டியின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ன சாமி இந்த வருசம் மலைக்கு போறீயா ?, காசுப்பிரச்சனை என்றால் ஜோசிக்காத நான் தாரன் போயிட்டுவா. அப்படியே இவளுக்கும் ஒரு நல்ல வழிகாட்ட பிரார்த்தனை  செய்!

 என்று எங்கு சுற்றினாலும் பேச்சின் இறுதியில் காதலைச்சொல்ல வந்து நிக்கும் சொல்லாமலே லிவின்ஸ்ரன் நிலைபோலத்தான் நாக்கினை அறுக்க வேண்டும் போல ஆன்மீக கார்காலத்தில் .

இப்படி மனதினை காதலில் அலைபாயும் மனதினை அடக்கியாளுவதும் திருவிளையாடல் தருமி போலத்தான் என்னையும் அடக்கி காதலும் கடந்து  போகும் என்று கடிதம் எழுத பயணங்கள் பதிவர் அல்ல பாரிசில் வாழும் சாமானியன் என்று சொல்ல நினைக்கும் போதே மனதில் வலி அது தமிழிலில் பாட   இப்படி நினைத்தாலும்

 சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்தேன் என்ற  காதல்சொல்லவந்தேன் கார்த்திக் நடித்த படம் பாடல் வெளியாகியும் படம் வெளிவராமல் போனது போலத்தான் !


 யாழினியும்  ஏதோ சொல்ல வாய்திறந்த போது அவளின் கைகேசி ஒலித்தது !இந்த ரிங்டோன் அந்தப்பாடல் இது!



தொடரும்.

15 March 2016

யா-சி---க்கும்- ஏ-தி-லி----3


யாசிப்பு முன்னே இங்கே-http://www.thanimaram.org/2016/03/2.html.


பாரிசில் பார்த்தேன்
பாலான வாலிபம் பூத்தது
பாவை நீ என் நெஞ்சம் என்று
பாடல் தேடினேன் நீயோ
பாதை காட்டினாய் !!
பலமலையும் கடக்கின்றேன்
பாதைகாட்டும் குருவாக இன்று! நீயோ
பாதம் பணிகின்றாய் !
பாவமன்னிப்பு கேட்டு!!!
படிக்காதவன் ! படம் நீ
பார்க்காத பாவை!!
           (யாதவன் நாட்குறிப்பில்)

இனி ...





அவசர உலகின் அவலத்தைக்காண வேண்டும் என்றால் ஐரோப்பாவின் பாரிஸ்நகரின் மையம் கார்டிநோட்  பக்கம் போய்ப் பார்க்க வேண்டும்! எத்தனை மனிதர்கள் !!எத்தனை குணம்!! இந்த நகரில் இருந்து புறநகர்களுக்கு நகரை அண்டிய ஊர்களுக்கும் செல்லும் ரயில்கள் பல.


 அப்படிப்போகும் ரயில்களில் ஒன்றில் பயணம் செய்தால் தான் யாதவன் அடிக்கடி செல்லும் அந்த ஆலயத்துக்கு செல்ல முடியும்!


 வழமையாக வேலைமுடிந்தவுடன் அவனும் விரைந்து நடந்து கார்டிநோட் ரயில் தரிப்பிடத்து மேடைக்கு சென்ற போது தான் அந்தக்குரல் அவன் காதில் விழுந்தது !


எங்கேயோ கேட்டகுரல் போல ஆம் இந்தக்குரலுக்கு சொந்தக்காரி பூவே பூச்சுடவா பானுமதி போல ஒரு பாட்டித்தான் .

யாதவனை சிறுவயது முதல் தோலில் தாங்கிய அயல்வீட்டு   சொந்தம் செல்லம்மா பாட்டியின் குரல் இலங்கை வானொலி அறிப்பாளினி ராஜேஷ்வரி சண்முகம் போல யுத்தம் என்ற அரக்கன் நாட்டைவிட்டு அகதியாக  புலம்பெயர்ந்து வந்தாலும்! பூர்வபூமி சொந்தத்தை விட்டுக்கொடுக்காத சோலையம்மா போல தம்பி இந்த ரயில் லார்க்கூநோவ் போகுமோ ?,என்று மேடையில் இருக்கும் தமிழ் பேசும் நெஞ்சங்களிடம் தயக்கம் எதும்மில்லாது கேட்கும் 16 வயதினிலே குருவம்மா போல )))அவர்களின் பதில் வர முன்னமே வந்து கொண்டு இருக்கும் ரயில் அங்கு போகும் என்னைப்போல என்று உள்வந்தன் யாதவன் சினிமாவில் பாட்டுடன் அறிமுகமாகும் ஹீரோ போல!






 எப்படிச்சுகம் பாட்டி ?,நீங்க வருவதாக தொலைபேசியில் அழைத்து சொல்லியிருந்தால் நானும் காத்து இருப்பேனே !நீ மாலைபோட்ட சாமி உன்னை தொந்தரவு செய்ய விருப்பம்மில்லை. அத்தோடு வேலையில் ஒருப்பக்கம் ;ஆலயத்தில் தொண்டு என்று அதிகம் அங்கலாய்ப்புடன் திரிவாய் !



நான் வயசானவள்! எதுக்கு கஸ்ரம் கொடுப்பான் என்றே கட்டிப்பிடித்து முத்தம் தரும் பாரிஸ் கலாச்சாரத்தையும் பின் பற்ற மறக்காத இந்த செல்லம்மா பாட்டிதான்  குரு வழிபாடு பற்றி ஏதுவுமோ தெரியாத என்னையும் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் போல இன்றும் ஆன்மீகப்பக்கம் தலைவைக்க காரண கர்த்தா என்றால் மிகையில்லை !


வழிகாட்டிய செல்லம்மா பாட்டியினையும் தாண்டி இன்று உயர்ந்த அனுபவத்தையும் ,பலரை நெறிப்படுத்தி பின் பற்ற அந்த ஆபத்பாண்டவன் கருணையே அன்றி வேறில்லை.!


என்ன பாட்டியும் பேரணும் பாசப்பறவைகள் போல ஜோடி சேர்ந்தாச்சா ?,என்னை மறந்திட்டீங்கள் போல ?,,அடிப்போடி உன்னை மறக்கவில்லை! உனக்கு முதல் என் மடியில் தவன்றவன்  இவன்!


 நீ தான் எல்லாவற்றையும்  ஈழம் என்ற கற்பனைக்கனவில் எல்லாம் தொலைச்சுப்போட்டு  இன்று புலம்பெயர் தேசத்திடம் கையேந்தும் முன்னால் அபளைகள்  போலத்தான் சுயம் இழந்து இரந்து நிற்பது வெட்கம் தான்! நீயும்  படித்தவள்  பிரெஞ்சில்! ஆனால் நான்  5 தலைமுறை பார்த்த படிக்காத மேதை பாசத்தில் !! என் வம்சம் வயிறு எரியுது ஏன் சொந்த நாட்டை விட்டு அகதியாக இங்க வந்தேன் என்று!

 நீ சிரிப்பாய்  என் பேரன் ஏதோ சினிமா நடிகை போல  உன் பின்னே லோ லோ  என்று வெட்டியாக கால்ஷீட் கேட்டு அவள் பின்னே ஓடும் குதிரை அல்ல !



அவன் !! காசுக்கு கூட தூசு இல்ல நம் வியாபார வித்துவ செருக்கு! வெற்றிலை போட்டு துப்ப இது என்ன பாட்டி சொல்லைத் தட்டதே படம் எல்லாம் நீ பார்க்காதவிடயம்!  நீயும் சிவக்க ஆம்பிள்ளை வேணும் !






  இதுக்குத்தான் உன்கூட எங்கும் வருவதில்லை என்ற கோபப்பார்வையை விலக்கி யாதவனை நோக்கினால் யாழிலி!



10 March 2016

யா-சி-க்கு-ம் ஏ-தி-லி-2



முதல் யாசிப்பு -http://www.thanimaram.org/2016/02/1.html

                   இனி.....

உணர்ந்து
உருகி
உறவாட வந்தேன்
உன் பார்வையில்
உதவாக்கரை ஏதிலி!
                            (  யாதவன் நாட்குறிப்பில் )


இலங்கை ஆட்சியினரின் பொறிமுறை விசாரனைக்கதை  போல குணாவிடம் "அதுசரி நேற்று காசு அனுப்பச் சொன்னேன்  அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே ?"

ஓம்டா மறந்து போய்விட்டன் .இன்று நிச்சயம் அனுப்புகின்றேன் யாதவன் .

டேய் உன்னை நம்பி வாக்கு கொடுத்தால் நீ இப்படி நம்பிக்கைத்துரோகம் செய்வது நியாயமா?? அரசியலில் இப்ப துரோகங்கள்தானே வெற்றியடையது ))  எனக்கு நேற்று ஓய்வு கிடைக்கவில்லை .அதைவிட அவசரமும் இல்லை பணம் அனுப்ப.உனக்குத்தானே அவன் முகநூல் நண்பன்.!

இருந்தாலும் நீ பலருக்கும் அவசரத்துக்கு காசு கொடுத்து உதவுவது  தேவையற்ற செயல்   நண்பா.

உன் செலவினங்களுக்கே வருவாய் போதாத நிலையில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கூடாது மச்சான் .அதுவும் இப்ப வெளிநாட்டில் இருக்கும் முகநூல் நட்புக்களிடம்  தாயக உறவுகளுக்கு அவசரதேவை ,உடனடிச்சேவை என்ற போர்வையில் நிகழும் பண  மோசடிகள் பற்றி அன்றாட செய்திகள் இணையத்தில் ,வாட்சாப்பில் ,வெளியாகும் நிகழ்வுகள் பற்றி எல்லாம் நீ சிந்திப்பதில்லையா ??

அதுபற்றி எல்லாம் ஆராய எனக்கு நேரமும்மில்லை தேவையும் இல்லை நமக்கு நாமே பிரச்சாரம் போல !

என்னிடம் உரிமையுடன் உறவாக வரும் உறவுகளுக்கு இயன்ற பொருளாதார வசதியை செய்யனும் ஒரு நட்பாக .

"அது சமூகத்தளத்தில் இருந்து வந்தால் என்ன, இனவாத நாட்டில் இன்னல்படும் உறவாக இருந்தால் என்ன "

தக்க சமயத்தில் உதவனும்.காலம் கடந்து கடிதம் எழுதியோ  ?பதவியை துறக்காது கைதிகள் விடயத்தில் சந்திப்புக்களை   நடத்துவது போலவோ அல்ல பணம் தேவை என்று  ஒருவன் அவசர உதவி நாடி  வரும் போது ஆபத்பாண்டவன் போல நடக்கனும் அதுதான் என் ஆன்மீகநெறியும் கூட குணா!

அதுக்காக உன்னிடம் இல்லாத செல்வத்தை இன்னொருவரிடம்  நீ கடனாக வட்டிக்கு வேண்டி பிறருக்கு கொடுக்க நினைப்பது உண்மையான சேவையல்ல !சுமை யாதவன் .கொடுத்த பணம் ஏதும் திரும்பிவராது தேர்தல் செலவு போல

நீயே கடனில் இருக்கும் போது மற்றவரிடம் கடன் வாங்கும் செயல் ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ந்த இலங்கை நாடு இன்னும் அதிகவட்டிக்கு சீனாவிடம் பணம் வாங்கி அந்த நாட்டுக்கு அடிமையாகும் செயல்போல இருக்கு உன்நிலையும் இங்கு என்று யாருமே உணரப்போவதில்லை.

"இப்படித்தான் இரண்டு மாதத்துக்கு முன் உன் தாய்லாந்து தாயக உறவு சொந்த தொழில் தொடங்க அவசரமாக காசு கேட்ட போது நீ இங்கே நட்புக்களிடம் 5000 ஈரோ பிரட்ட எத்தனை பேரிடம் இரந்து நின்றாய் என்பதையும் நான் அறிவேன் இதனை அந்த நெஞ்சம் அறியுமோ தெரியாது ?

இறுதியில் அவன் தொடர்பும் ஆனஷ்ராஜ் படம் தேவன் போல மாறிப்போச்சு  அதை எல்லாம் நான் மறக்கவில்லை.

கொஞ்சம் தெளிவாக ஜோசி யாதவன் உன்னிடம் இன்றைய நிலையில் கையிருப்பு எத்தனை ஈரோ சேமிப்பாக இருக்கும்? புலம்பெயர்ந்து வந்த பின்?

  என்னிடம் சேமிப்பாக கடன் தான் இருக்கு பதுக்கல் என்று சுவிஸ் வங்கியிலோ அரபுலகத்திலோ தேடி வைக்கவில்லை  டாலரில் ஆனால் நட்புக்களை தேடிவைத்து இருக்கிறேன் .ஈரோ போல கடன் விரைவில் வரும் தேர்தல் போல கட்டிமுடிக்க வேண்டும் ))) நாட்டைவிட்டு தப்பியோடவா முடியும் சாமானியன்?,

எப்ப எல்லாம் சபரி மலைக்கு பயணம் என்று வெளிக்கிடுகின்றேனோ குணா அப்ப எல்லாம் தடையாக இந்த கடனும் வந்து நிக்குது . முதல்வர் வேட்பாளர்  யார் என்ற கூட்டணிச்சிக்கல் போல இந்த ஆண்டும் என்ன ஆகுமோ என்ற  என் கதை யார் அறிவார்கள்!


கட்சிமாறும் பாராளுமன்ற உறுப்பினர் போல

தொடரும்....,
 

08 March 2016

அந்தியில் உதயம் அவசியம்!

இன்றைய நவீன காதல் எதில்  போய் முடியுமோ?,பேஸ்புக், வாட்சப். என்ற இணையத்தில் பல தேசம் நோக்கி பணம் தேடி ! அதுவும் புலம்பெயர் வாழ்வு என்ற திக்கு தெரியாத, பொருளாதார ,சமூக. கலாச்சார வாழ்வாதார யாதார்த்த உலகில்  இன்றைய தலைமுறையின் இடைவெளியை காலத்தின் பதிவாக வந்திருக்கும்பொதுவெளியில் காலச்சுவடு  இந்த யாதார்த்த உலகையும் நீங்களும் காணுங்கள்!


குறும்படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.முதலில்!!!

காட்சி இங்கே-












06 March 2016

அஞ்சலி!!

இழப்பு என்பது இயற்க்கையின்
இந்த உலக நியதி !
இதுதான் பதிவு என்று
இந்த ஆலயம் என்று
இன்முகம் தாமரை போல
இவரை வலைச்சரம் மேடையில்
இன்றைய வெள்ளி என்று
இந்த தனிமரமும் அன்பில் யாசித்தவன்
இன்னும் தனிமெயில் என்று நேசித்தவன்
இந்த இணையம் ஊடாக நெஞ்சம் தொட்டவர்!


இன்னும் வலையில் பல
  இறைவன்  இருக்குமிடம்பற்றி  எழுதிய
இனிய படைப்பாளி!


இன்று 9/2/16
இயற்க்கை எய்தினார் என்ற
இன்றைய செய்தி என்னையும்
இரங்கல் பதிவு செய்ய கால தேவன்
இறைவனின் செயல்! இவரின்
இழப்பு வலையில்  பேரிழப்பு !ஆத்மா
இறைவன் காலடியில்
இணையட்டும் என்று
இரந்து பிரார்த்திக்கின்றேன்!.

இன்னும் செய்திகள்
 இங்கே-http://tthamizhelango.blogspot.com/2016/03/blog-post_6.html

இனி யார் இந்த ஆலயம் என்று
இனிய காட்சிப்படங்களுடன்
இணையத்தில் ஏற்றுவார்கள்!
இறைவா உனக்கு ஏன் இந்த அவசரம்!

இந்த அன்னையை
இத்தனை சீக்கரம் அழைத்தாய்!