29 September 2011

பிடித்த பாட்டுக் குரல் மீள்பதிவு

இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலகில் பிரிக்கமுடியாத பாகம் பாடல்கள் ! ஒவ்வொருபாடல்களும் பலதொழில் நுட்பக்க கலைஞர்கள் பங்களிப்புடன் காற்றில் தூதுவிடப் படுகிறது! ..
பாடல்கள் பாடி நடித்த காலம் போய் பின்னனி பாடுவதற்கு பலபாடகர்கள் திரையிசையில் குரலில் அறிமுகமானார்கள். முகம் தெரியாவிட்டாலும் குரல் அவர்களை பல்லாயிரம் ரசிகர்களை அவர்கள் பின் தொடரக் காரணமானார்கள் .அந்த வழியில் என்னைக் கவர்ந்த பின்னனிப் பாடகர்/ பாடகிகளில் என்றும் முதன்மையானவர்! ..

பாடகி ஜென்சி !
இவரின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் எனக்கு இன்று மூன்று தசாகப்தமாக என் செவிகளுக்கும் மனதிற்கும் ஒரு தாயைப்போல் ,சகோதரியாக ,காதலியாக,வழித்துனையாக வருகின்ற இசைப்பிடிப்பூ.
தமிழ் திரையில் குறிப்பிட்ட பாடல்களைப் பாடிய ஜென்ஸியின் கிறீச் குரல் வழியே நம்ராஜாவின் இசையில் அவருடன் டூயட் பாடிய காதல் ஓவியம் பாடும் காவியப் பாடல் பொங்கும் பூம்புனல் ஊடாக வந்து கிரமர்போன் (எங்க ஊரில் ரொட்டியில் பாட்டுப் பாடும் கறுப்பு நாடா) எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் கீதம் இசைக்கும் எப்படி மனதில் நுழைந்தது என்று( காதலைப் போல்) இன்றுவரை தெரியவில்லை !
., .....இடப்பெயர்வு வரமுன் நம் ஊர்களில் குழாய் புட்டில்(லக்ஸ்பீக்கர்) பாட்டுப்போடும் கலியான வீடுகளில் எல்லாம் அழையாத விருந்தாளி ஜென்சியின் பாடல் அடங்கிய டெப்(tape) .எப்போதும் தாலாட்டும் ராஜாவின் குரலுடன் அந்த அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடல் என்னுடன் பலமுறைகளில்( ரொட்டி,tape,cd,mp3, ipod) இன்று ஐ-போன் ஊடாகவும் மீளா அடிமையாக வாழ்வில் ஒரு பாகமாக தொடர்கிறது .காலமாற்றம் தொழில் நுட்பங்களில் பாடல் பதிவு முறைமாருகின்றது மனம் மாறுதில்லை.
..
காதல் ஓவியம் பாடலின் இடையில் "தாங்கு மோ என் தேகமே மன்மதனின் என்ற "வரியை ஒரு சுற்று ஹம்மிங்கில் ஆலாபனை
செய்வதாகட்டும் முடியும் வேளையில் ராஜாவின் பின்னே செல்லும் லாலா லாலா ஹம்மிங்கில் ஒரு தேவதை கூடவருவது போன்ற உணர்வை எனக்கு எப்போதும் கேட்கும் போது தரும் அந்தக்குரலில் ஒரு ஈர்ப்பு !

..
இன்னொரு சிறப்பான பாடல் ராஜாவின் ராஜாங்கத்தில் உல்லாசப்பறவைகள் படத்தில் வரும்" ஏதோ தெய்வீக ராகம் கேட்காத பாடல்"" என்ற பாடலில் ஒரு மயக்கமான குழைவை குரலினுடே தந்தாலும் படத்தில் இப்பாடல் காட்ச்சி சொதப்பல் என்பேன் .
என்பின்னிரவுப் பயணங்களில் தாலாட்டாகவும் மன புத்துணர்ச்சிக்கும் பாடலின்" தந்தன் தந்தன் ஹம்மிங் சரியாக ஜென்ஸியிடம் கைபிடித்து போகையில் என் தேவதை வருவதைப் போன்ற பரவசம் ஏற்படுகிறது!

நிறம்மாறாத பூக்கள் படத்தில் இருபாடல்களும் இசையானியின் ஆத்மாவான பாடல் சிறப்பாக ஜென்ஸின் குரலினுடே என்னை கட்டிப்போட்ட பாடல்களில்
""..
இனிய ஹம்மிங் உடன் ஆயிரம் மலர்களே மலர்களே! இப்பாடலின் வைரமுத்துவின் வரியை ரசித்து அதன் பாவத்தை குரலில் தருவதில் எனக்கு எப்போதுமே இவர்குரலில் தனியின்பம்"
மற்றப்பாடல்" இருபறவைகள் மலை முழுவதும் "பாடலில் மலையடிவாரத்தில் காட்சிகள் படம்பிடிக்கப் பட்டிருக்கும் பாடலின் பின்னே அவரின் குரலில் மலையலகை ரசிக்க முடியும்!
..
இன்னும் ஜானியில் ஒரு சிறியபறவை,கீதா சங்கீதா என்று ஜெயச்சந்திரனுடன் சேர்ந்து பாடிய அன்பே சங்கீதா படப்பாடல், கரும்புவில்  படத்தில் ஜேசுதாஸ் உடன் பாடிய மீண்பிடித்தேரில் மன்மத ராஜன் ,பாடல்களும் என் இரவுப் பொழுதுகளை தாலாட்டும் ஜென்ஸி சில பாடல்களை பாடினாலும் முத்திரை பதிதவர். கேரளாவில்
குடித்தனம் நடத்தும் இந்தக்குயில் மீண்டும் பாட சந்தர்பம் கிடைத்தாள் தமிழ் திரைக்கு குரலில் இசை மீட்ட தயார் என அன்மையில் ஒரு வார சஞ்சிகையில் கூறியிருந்தார்...
..

மொழியை சிதைக்கும் பாடகர்களும், குத்துப்பாட்டில் கும்மியடிக்கும் இன்றைய சூழலில் குரலில் அமைதியான இசையை மதிப்பவர்கள். பின்னனிபாடுவது வியாபாரம் என என்னும் நிலையில் மீண்டும் ஒருவலம் வரத்துடிக்கும் இந்தக் கீதம் சிந்துபாட முடியுமா?

27 September 2011

நொந்து போகும் ஒரு இதயம்!! -2






என் அருமை பதிவாளர்களே! இந்தத் தனிமரம் புதிய நீண்ட தொடருடன் உங்களிடம் வருகின்றேன்.
இதில் என்னுடன் முரன்பட்டிருக்கும் முன்னால் நண்பனின் கதை சில மாற்றங்களுடன் .
.விடை தேடுகின்றேன் .கதையில் யாரையும் புண்படுத்தும் என்றால் மன்னிப்பை இங்கேயே கேட்கின்றேன்
.தனித்தனியாக வருவதற்கு புலம் பெயர் தேடலில் தொலைந்து போகின்ற நேரம் அதிகம் என்பதால்!


////////////////////////////////////////////////////////////////////////////////////
.பிரபு கந்தசாமியின் தவப்புதல்வன் .அவர் நண்பர் தேவனின் விருப்புக்குரியவன் ..தேவன் என்கின்ற வியாபார செல்வந்தரிடம் கைநீட்டி செய்த வேலைக்கு மாதமுடிவில் கூலிவாங்கும் தொழிலாளிகளில் என் தந்தையும் நானும் சேர்ந்து கொண்டேம்.

3மாதங்கள் குறுங்கால திட்டம் போடும் எனக்கும். நீண்ட கால திட்டம் போடும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்கலால் வேலை தேடி சந்தைப்படுத்தல் அதிகாரியான சில தினங்களில் .

யாதார்த்தமாக வந்து நலம் விசாரிப்புக்களுடன். தோல் கொடுத்தான் பிரபு.

முன்னர் கடைக்கு வரும் போதெல்லாம் வெறும் பார்வையுடன் போனவன் .என்னுடன் சகலதும் பேசிக்கொள்ளும் அளவிற்கு அந்தரங்க நட்புப் பாலத்துக்குள்ளும் வந்துவிட்டான் விரைவில்.

பார்ப்பதற்கு ஹிந்திப்பட சன்சய்தத் போல் நெடியவனும் திடகாத்திரமான உடம்பும் பழுத்த பூசனிக்காய் போல் மாநிறம் கொண்டவன்.

நானோ சோமாலியில் இருந்தவன் போல் இருந்தேன். இப்ப மட்டும் என்ன அதே கோலம்தான் தலையில் தான் மாற்றம் தலைமுடியை தானம் கொடுத்துவிட்டேன் ரஜனி விக்வைக்க கேட்டதில்.

சாதாரன தரத்தில் எட்டுப் பாடங்களையும் ஒரே எறிதல் குண்டில் வீசி எறிந்து கா/பெ/ உயர்தரம் என்ற இரண்டாவது ஏணியில் ஏறும் ஆண்டாக 1997 ஆவனி பகுதியில் பள்ளிக்குள் உள்நுழைந்தவன்.

எனக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் பாஞ்சாலியின் கணவர்களைப் போல்!

நல்ல பாடல் ரசனையும் 1980 இல் வெளியான படங்கள் என்னைப் போல் அவனுக்கும் பிடித்திருந்தது.

இடப்பெயர்வில் என் இனிய பல நண்பர்களை பலதிக்கிற்கும் மண் மீட்பு என்றும், கானாமல் போனவர் பட்டியலிலும் ,புலம் பெயர்ந்தும் போனவர்களையும் விட்டு தனிமரம் தனியாக பாலைவனமாக இருந்த போது நட்பு என்று உறவுப் பாலம் இட்டு பனிமழையைப் போல் வந்தான்.

அதுவும் எனக்கு அப்போது தேவையாக இருந்தது. ஊர்சுற்றுவதும் உதவாக்கரை என திரிந்து கொண்டிருந்த தனிமரத்திற்கு வவுனியாவின் சதுரங்கள் தெரிந்து கொள்ளவும் என் இருப்பு ஏது என்று தெரியாமல் திக்கு முக்கடியபோது தத்தளிக்கும் ஒரு ஓடமாகிப் போனவனுக்கு வழிகாட்டும் பாதைசாரியாகவும் பாரதியின் கண்ணன் போல் எனக்கும் யாதுமாகி வந்து இருந்தான்.பிரபு.


நாம் இருவரும் வேலைமுடிந்தும் ,பள்ளிமுடிந்தும் பல இடங்களை கோவலனைப் போல் காலினாலும் சைக்கிள் மூலமும் அளந்த தூரம் .வைரமுத்து சொல்வது போல் பழைய பர்மாவிற்குப் போகும் தூரம்

.ஒவ்வொரு குச்சு ஒழுங்கைகளையும் பாதுகாப்பு காவலர்களிடம் வரும் தேடல்களையும் தாண்டி ,மாற்றுக்குழுவினர்களின் மர்மப்பார்வைகளையும் ,
எனக்கு மொழி பெயர்த்தவன் அவனே .

எனக்கு சகோதரமொழியில் குருவாக இருந்தான். எங்கள் நட்பு அவன் வீடுவரை நண்பன் என்ற பயணத்தில் அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவனானேன்.

ஓயாமல் நான் கேட்கும் பால்கோப்பியை தாயும் சரி பிரவுக்குப் பின் பூமிக்கு வந்த இரு சகோதரிகளும் தம்படிப்புக்கு இடையிலும் உரிமையுடன் போட்டுத் தருவார்கள் அண்ணா என்று.

. ..என்
குடும்பத்தினர் மறுபக்கத்தில் நானும் தந்தையும் இக்கரையில் இப்படிப் பலர் இருந்தார்கள் அக்காலத்தில்
.
வவுனியாவின் தண்ணீர் ஒரு வித்தியாசமானது. சில பகுதியில் சில படிமங்களை கொண்டிருக்கும் கொதித்தாறிய தண்ணீரை வடிகட்டிக் குடிக்காவிட்டாள்.
காலப் போக்கில் சிறு நீர் கழிக்கும் போது எரிச்சலும் அதனைத்தொடர்ந்து சலக்கடுப்பும் சிலருக்கு ஏற்படும் .( இதற்கு மருத்துவ விளக்கம் தம்பி மதிசுதா பாடம் போட்டு விளக்குவார் என நம்புகின்றேன்)


எனக்கும் வந்த புதுசு. தாகத்தைப் போக்க எதையும் ஜோசிக்காமல் அரசியல் வாதியின் தேர்தல் பிரச்சாரம் போல் அருந்திக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது ஆமிக்காரன் காதுக்குள் பேனையை வைத்து காதைப் பொத்தி அடித்தது போல் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட நான் போய் நின்றது.

மன்னார் வழி காட்டும் குருமன்காட்டுச் சந்தியில் இருந்த தனியார் கிளினிக் .வைத்தியரும் என்னை ஏற இறங்க பார்த்து பரிசோதித்து விட்டுச் சொன்னது தான் எனக்கு அடி வயிற்றில் கல் இருப்பதாக .கேனியா என்பார்கள் பேச்சு வழக்கில்.

எனக்கு விரைவாக சத்திர சிகிச்சை செய்யனும் என்றார் .அப்போது உதவிக்கு இருந்து இரண்டு நாளும் பார்த்தது அவனின் தாய்.
என்னையும் தன் மகன் போல் என்று பாசம் கொட்டிய குசுமாவதி அம்மாவை .

இந்தப்
பதிவு எழுதும் ஏகாந்த நேரத்திலும் என்னிப் பார்க்கின்றேன் அதே பாசத்துடன் .

தனிமரம் வெளிநாட்டுவாசி ஆனதன் பின்பு மாறிவிட்டான் .என்று நீங்கள் கூறும் குற்றச்சாட்டு சந்தேகத்தின் பிடியில் பூஸாவில் வாடும் என் உறவுகள் போன்றது

.உண்மையில் நடந்த
எல்லாம் நீங்கள் அறியவில்லை என் பக்கம் உள்ள நியாயத்தை என்பது மட்டும்
என்னாள் உறுதியாக எந்த நியாயத்தைக் கண்டரியும் ஆனைக்குழு முன் சாட்சியம் கூறுவேன்

.அன்று உங்களிடம் கற்ற சகோதர மொழியில் இன்றும் மறக்கவில்லை காலமாற்றத்தில்.

எந்த புயலிலும் தனிமரம் கானாமல் போன செம்பனி விவகாரமல்ல என்றாவது தீர்ப்பு வரும் என்று என்னும் ஒரு கிரிசாந்தியின் தம்பியின் ஆவி போல் என்னையும் நம்புவீர்கள்.

காலமாற்றம் மீண்டும் நடந்தவையை ஞாபகப் படுத்து கின்றது.

தொடரும்-

25 September 2011

விண்ணைத் தாண்டிய என் காதல் !

இயற்கையான கிராமம் தொலைந்து நகரத்தின் தூசுக்காற்றில் துவண்டு !

மாநகரத்தின் மூச்சிரைக்கும் அடுக்குமாடி வாழ்க்கையில் கலந்து போன வாழ்க்கையில். எப்போதாவது சுத்தமான செங்கம்பளம் விரிக்கும் பசுமைவெளிகளுக்குப் போகனும் என்ற ஆசையில்!

 இம்முறை என்பயணம் இன்னொரு ஞாபகச் சின்னத்தில் சேர்ந்த இடம் தான் .

இயற்கை எழில் கொஞ்சும்  சேச்சிகளும் மயக்கும் கேரள தேசம்!

சென்னையில் இருந்துசொகுசு பேருந்தில் நாம் கேரளா புறப்பட்டோம்.

 பஸ்பிரயாணம் கொஞ்சம் அலுப்புத்தட்டுயது உண்மை. மழை ஒரு புறம் சாரதியை அதிகம் வேகமாக போவதற்கு தடைக்கல் போட்டது. நீண்ட நேரத்தின் பின் 15 மணித்தியாலம் பயணித்து போய் சேர்ந்தது கேரளாவின் எர்ணாகுளத்தின் மையத்திற்கு.


நாம் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த கார்ச்சாரதி அதிகதடவை கைபேசியில் தொடர்பு கொண்டு. கிரிக்கெட் வர்ணனை போல் எங்கே நிற்கின்றீர்கள் என்று கொஞ்சம் அதிக துன்பம் தந்தாலும் நாங்கள் போக வேண்டிய இடத்திற்கு கூட்டிச் செல்ல இன்னொருவர் காத்திருக்கின்றார் என்பதில் மகிழ்ச்சியே!

மொழிபுதிது அதையும் தாண்டி முதல்தடவையாக போகின்றோம்.

 சிலருக்கு முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் .கடைசி நேரத்தில் காலைவாரும் செயல்களை என் வலையுலக நண்பர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அவர்களின் பதிவும் அதைத் தொடர்ந்து வந்த சில  சினிமாப் படங்களும் தான் நாம் கேரளா போக உந்து சக்தி.

நாம் போய் பஸ்தரிப்பில் இறங்கவும் எங்களை அழைத்துச் செல்ல காத்திருந்தவரும் முன்வர நம் கைபேசி அழைப்புக்கு சிரம் இல்லாமல் போனது.

பரஸ்பர அறிமுகத்தின் பின் எங்களைச் சுமந்து கொண்டு கார் போன  ஏர்ணாகுளம் பெருந் தெருப்பாதை!

 எனக்கு அத்தனக்கல ஊடாக குருநாகல் போன வழிப் பயணங்களை ஞாபக  உணர்வை மீட்டியது.

 பாதை இரு மரங்கும் செவ்விளனீர் மரங்களும் வீட்டுத்தளபாட பிரம்பினால் செய்த பாவனைப்பொருட்கள் அதிகம் .

அத்தனக்கலயில் கிடைக்கும் அங்குதான் ஒரு  அரசியல் வரலாறு இருக்கும் குடும்பத்தின் வாழ்விடங்கள்.

  அதை ஒத்த ஏர்ணாகுளத்தின் புதிய பாலம் ஊடாக அதிக தூரம் கார் போகும் வழிகள் எங்கும் மீண்டும் தாயகத்திற்கு போன உணர்வைத் தந்துகொண்டுருந்தது .

.மறக்க நினைக்கும் குருநாகல் வாழ்வை மீண்டும் சீண்டியது .

.ஒவ்வொரு கடைத் தெருக்களிலும் பலபொருட்கள் காட்சியளிக்கின்றது .

.கொஞ்சம் உள்ளே செல்லச் செல்ல மாவத்தை கம வழி கண்டிக்கு போவதைப் போல் சிறியதும் பெறியதுமான வீடுகள் வீட்டைவிட அதிகம்  கண்ணில் தெரிவது தொலைக்காட்சி அண்டெனாக்கல் பூட்டிய (சாட்டலைட்) தகடு .

ஒரு வேலை கருணாநிதியின் இலவச டீ.வி இங்கு வரை வந்துவிட்டதோ! என எண்ண வைக்கின்றது.

நாம் போகவேண்டிய இடம் நெருங்கும் வழி எங்கும் தேக்கு மரங்களும் ,செம்பரத்தைச் செடிகளும், ஆவரசம் மரங்களும் பூத்துக் குழுங்கும் அழகு அதிகாலையில் இன்னும் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றது.

 மனதிற்குப் பிடித்தவளுடன் நீண்டகாலத்தின் பின் ஒன்றாகப் பயணிப்பதும் இன்னும் சுகமல்லவா?

நாம் போகும் இடம்தான் கடந்தாண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட விண்ணைத்தாண்டி வருவாயாவில் முன்பாதிக்கதையை நகர்த்தும் இடமான ஆலப்புழாவிற்கு!

ஆலப்புழா பிரபல்யமாகிவரும் சுற்றுலா உல்லாசபுரி!

 ஆழப்புலாவில் இயற்கை நளினம் புரியும் அழகு நடிகை சோபனாவின் பரதத்தினைப் போன்றது.!//






ஆலப்புழாவின் படகு வீட்டுக்கு டிஸ்யூம் படத்தில் ஒரு பாடல் அங்கேதான் சூட்டிங் நடத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகளை கேரளா சுற்றுலாமையத்தின் பணியகம் .

விளக்கத்துடன் முன்பதிவு செய்த பற்றுச் சீட்டை வாங்கி ஒதுக்கப்பட்ட படகிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

நம்மை அழைதுச் சென்று நாம் தேடிவந்த படகுவீட்டில் ஏற்றியதும் அவர்கள் விடைபெற படகின் மாலுமியும் உதவியாளரும் நமக்கு அறிமுகம் ஆனார்கள்.!

 போனதும் முதலில் தேசிக்காய் தண்ணீர் குடிக்கத்தந்தார்கள் .

உடல்சூட்டுக்கு புத்துணர்ச்சியைத் தருமாம் .

எனக்கு முன்னர் கோயில் திருவிழாக்காலங்களில் நாம் செய்த தண்ணீர்ப்பந்தல் ஞாபகம் வந்திச்சு.

 இங்கு தேசிக்காய் மிகவும் சிறியது ஆட்காட்டிப்பறவையின் முட்டைபோல்.!


படகுவீடு மிகவும் தென்னோலையாலும் பிரம்பாலும் பின்னப்பட்டு குளியல் அறை கழிவறை,படுக்கையறையுடன் மிகவும் சுத்தமாக இருக்கின்றது.

 ஒரு அறையில் இருந்து, ஐந்து அறை வரை, படகுகளில் வகை இருக்கு .

பருவகாலங்களுல் அதிகமான கட்டணம் அத்துடன் அங்கு சேவையில் 700 படகுகள் இயங்குகின்றது .

ஒரு நாளில் சராசரியாக 500 படகுகள் இயங்கிக் கொண்டிருக்குமாம்..

 ஒரு நாள் வாடகை ,ஒரு வாரம் ,ஒரு மாதம் என பலர் விரும்பிய வண்ணம் வாடகைக்கு படகுவீடு கிடைக்குமாம் .

கேரளா பண்டிகை நாட்களில் வரும் சுற்றுலாவாசிகளுக்கு படகுகள் போதவில்லையாம் என்றார் மாலுமி  .

நாம் மதியம் உள்நுழைந்ததால் மதியச் சாப்பாடு தயார் நிலையில் இருந்தது வரும் வழியில் அவர்கள் தொடர்பு கொண்டு அசைவமா/சைவமா என்பதை தீர்மானித்துகொண்டார்கள் .
.
எங்கள் படகுவீடு நீரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இயங்க வெளிக்கிடவும் நாமும் உடைமாற்றி குளியல் முடித்து வரவும் சரியாக இருந்தது .

கடல் நன்னீர் ஏரி என்று சொல்ல முடியும் இதை இரு மரங்கிலும் விவசாய நிலமகள் பச்சையாடை உடுத்தி சிரிக்கின்றாள் செம்பரத்தம் பூ எங்களை புன்னகைத்து வரவேற்கின்றது .

பயணம் தொடரும்!

24 September 2011

நொந்து போகும் ஒரு இதயம்!!

என் அருமை பதிவாளர்களே! இந்தத் தனிமரம் புதிய நீண்ட தொடருடன் உங்களிடம் வருகின்றேன்.
இதில் என்னுடன் முரன்பட்டிருக்கும் முன்னால் நண்பனின் கதை சில மாற்றங்களுடன் .
.விடை தேடுகின்றேன் .கதையில் யாரையும் புண்படுத்தும் என்றால் மன்னிப்பை இங்கேயே கேட்கின்றேன்
.தனித்தனியாக வருவதற்கு புலம் பெயர் தேடலில் தொலைந்து போகின்ற நேரம் அதிகம் என்பதால்!

நொந்து போகும் ஒரு இதயம்!!

வவுனியா இதுபல குளங்களையும் இனிய பல இயற்கை வளங்களையும் கானுவோரை கண்மயங்க வைக்கும் விவசாய பூமி.
.
வடக்கின் ஒரு சிறு தீவில் இருந்து யுத்த அரக்கன் போர் என்று தம்பட்டம் அடித்து எங்களை ஒரு சாக்குப் பைகளிலும் ,வண்டில்களிலும் முடிந்தவையை மட்டும் ஏற்றிக்கொண்டு பூனை குட்டியைக் காவியது போல் உயிரைக்காவிக்கொண்டு பல இடங்களில் வாடகை இருப்பிடங்களில் தாவித் தத்தளித்த எங்கள் குடும்பத்தில். இருந்து ஆப்பிரிக்க கவிஞன் சொல்லுவான் பாத்தியில் இருந்து பிடுங்கிப் போட்ட நாற்றைப் போல் என் குடும்பத்தில் இருந்து.

அக்காலப் பகுதியில் நடந்த போர்ச் சூழ்நிலையில் நானும் ஒரு பின்கதவு வழியாக தாண்டிக்குளம் ஊடாக சேற்றில் தத்தளித்து படையினரின் பலத்த விசாரனைகளைத்தாண்டி கோழிக்கூட்டு முகாமில் முத்தம் இட்டு ஒரு மாத பந்தியில் பருப்புடன்.


சில தலையாட்டிகளின் சில்மிசங்களைச் சந்தித்து,.

தந்தையின் பாசம் தன் மகனை மீட்க தன் முதுசகம் காணியை அறிந்தவரிடம் ஆதனமாக கொடுத்து. வட்டிக்கு பணம் வாங்கி அரச அதிகாரிகளிக்கு அன்பளிப்பு கொடுத்து கூட்டிச் சென்றது கோவில் குளம் என்ற வவுனியாவில் இருக்கும் ஒரு இடத்திற்கு.


ஹொரவப் பொத்தானைக்கும் மடுக்கந்த சந்திக்கும் வழிகாட்டும் நீண்ட பெரும் பாதை அவ்வழி .அயலில் இருந்தார்கள் மூவினமக்களும்.

தமிழர் ஒரு காலத்தில் அதிகம் வியாபாரம் செய்த பூமியில் சிலர் எல்லைதாண்டி வந்து வியாபாரம் செய்யும் இடமாகிப் போனது ஹொரவப் பொத்தானை எனப் பெயர் மாற்றிய மாம்பழச் சந்தி.


இங்கு நானும் எனது தந்தையின் தொழில் ஸ்தாபனத்தில் ஒரு ஊழியனாக சேர்ந்து கொண்டேன்.

தந்தையும் மகனும் வேறு பிரிவுகளில் வேலை புரிந்தோம்.

சிலகாலத்தில் சந்தைப் படுத்தல் அதிகாரி வேலையும் வந்து சேர கோழி மேய்த்தாலும் கோபுர மெந்தையில் மேய்க்கனும் என்ற அரச வேலை பார்க்கும் மாமியின் கனவில் பசிலன் 2000 போட்டுவிட்டு சேர்ந்தேன் தனியார் வேலையில்.

அருகில் ஒரு வீடும் வாடகைக்கு வந்தது சுதந்திரமாக இருப்பதற்கும் உறவுகள் வந்து சேர்ந்து விடும் என்ற காத்திருப்பில் முண்டியடித்து.

தந்தையை பொருளாதார சுமையில் தள்ளி நானும் அவர் தோல்களில் என் ஆசைகளை ஏற்றிவைத்தேன் .


ஏற்கனவே ஒருத்தனை தனியே விட்டு அவன் போன பாதை தெரியாமல் முகச் சவரம் மறந்து தாடிக்குள் தன்னை மூடிக்கொண்ட ஒரு பாசத்தின் கருனை உள்ளத்திற்கு! பொறுப்புணர்வு இல்லாத நவநாகரிக மன்னன் வாரிசு நானே எனத் திரிந்ததை என்னி !
இன்று நான் ஒரு தந்தை ஆனபின்பு துயர் உறுகின்றேன் .

தந்தையின் நிழலில் குடி கொண்ட தருணத்தில் நண்பனாக வந்தான் பிரபு!

இவனின் பூர்வீகம் ஒரு விசித்திரமானது தந்தை ஒரு பூர்வீக விவசாய செட்டிகுளம் வாசி. ஒரு மந்திரி போல் அமைதியானவர்.
அதிக மான்,மரைகள் என வேட்டையாடும் விவசாயப் பிரதேசத்தில் வளர்ந்தவர்.

அங்கே அக்காலத்தில் விவசாய சாகுபடிக்காலத்தில் பிறமாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து பொருளாதார தேடலுக்காக வருவார்கள்.
அப்படி வரும் எல்லைக்கிராமத்தவர்களில் சகோதரமொழி உறவுகளும் இருப்பார்கள். அப்போது ஊர்காவல்படை என்ற ஒன்று தோற்றம் பெறவில்லை.

அப்புஹாமியின் லொறிகளில் பல வெட்டித்தங்கம் சுட்டு எடுத்து தட்டிச் செய்த பளபளக்கும் மேனியழகு குசுமாவதிகளும், அனோமாவதிகளும் அன்றாடம் பிழைப்புக்கு விவசாய காணிகள் தேடி அங்கும் இங்கும் போனார்கள்.
அவர்கள் காலத்தில் இனவாதப் பேய் கொஞ்சம் அடங்கியிருந்து மெல்ல மெல்ல வளரவெளிக்கிட்டது. குசுமாவதிக்கும் கந்தசாமிக்கும் இடையில் பிரபு வளரத்தொடங்கியது போல்.!


அவனைப் பெற்றதுடன் அவர்களுக்கு இருவீட்டாரின் உறவுகளுக்கும் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிக்க்ப்பட்டது போல் இவர்களும் வெளியேற்றப் பட்டார்கள்.

இருவரும் கைக்குழந்தையான பிரபுவுடன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் அனுப்பிய மலையக மக்கள் போல் குடியுரிமை இழந்து தலைமன்னாரில் கப்பலுக்கு காத்திருந்த நிலை

..அவர்களை கோவில்குளம் அழைத்து வந்து இருப்பிடம் கொடுத்து உதவியாக தானும் இருந்தான் தேவன் என்ற கந்தசாமியின் நண்பன்!.

தொடரும்!...

பசிலன்..-2000 (வீரமறவர்களின் சுதேச கண்டுபிடிப்பு) மீள் பதிவு 23571

22 September 2011

சுடர்க்கொடியின் மணாளன்!

எப்போதும் பாசுரங்களில் பாடு பொருள் பெருமாள் மீது அளவற்ற காதலையும் ,வேண்டுதலையும் இனியதாக கூறும்.!

 எனக்கும் பாசுரங்களை அதிகம் பாராயம் செய்யனும், ,கருத்துக்களை கற்றறியவேண்டும், என்று தீராத ஆசையுண்டு.!

 கால ஓட்டம் பொருளாதார தேடலில் அதை மீட்டிப்பார்க்க முடியாத நிலை. என்றாளும் பெருமாள் மீது தீராத காதல் எப்போதும் எனக்கு!

சிறிரங்கம் என்றாள் பெருமாள் ஞாபகம் வரும். பாடல்  அசிரியர் வாலி ,சுஜாத்தாவின் சிறிரங்கத்து தேவதைகள் என பலதும் பின் தொடரும் அலைகள்.

பலதடவை குழுவாகப்போகும் போது பள்ளி கொண்ட பெருமாளின் வாசலை எட்டுப்பார்த்துவிட்டு விமானத்தை பிடிக்க ஓடும் கடைசிநேர பயணிபோல் ஓடிவிடுவம்.

 இம்முறை தனியாக மனைவியுடன் போனதால் பெருமாள் பள்ளிகொண்ட சிறிரங்கத்தானை மிகவும் ஆற அமர இருந்து சேவித்தோம்.

 குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா என்று மனம் உருகி பிரகாரத்தில் அமர்ந்திருந்துவிட்டு.

 பெருமாளின் சயன நிலையைக் காண சிறிரங்கப் பெருமாளைச் சேவிக்க சிறப்புத்தருசனம் ஊடாக சிறிரங்கநாதனைப் பாதம் பணிய பக்தர்கள் கூட்டத்துடன் வரிசையில் உள்நுழைந்தோம்!

 .பக்தர்களின் பெருமாள் நாமத்தில் வேங்கடாவா கோவிந்தா என நாமம் பக்திப்பரவசத்தை தூண்டுகின்றது.

 அங்கங்கே ஆழ்வார் வழித்தோன்றல்கள் புராணங்களை பட்டாச்சாரிகள் உதாரணங்கள் காட்டியும் பாசுரங்களை விளக்கவுரை சுருக்கமாகவும்!கொடுத்தும் படித்தும் பரந்தாமன் நாமத்தை ஓதுகின்றார்கள்.

 நூழைவாயில் தோறும் பெருமாளின் திவ்ய தேசங்களின் விளக்கங்களும் பெருமாளின் திருவிளையாடல்களையும் ஒவியங்கள் உட்சுவர்களில் பொன்னொளியாக மின்னும் வண்ணம் தீட்டியிருக்கின்றார்கள்.

 பக்தர்கள் ஒவ்வொருத்தராக மதுசூதனை சேவித்து நகர்ந்து செல்ல நம் தருசன வேளையும் வந்தது.

 பரம்பொருள் மூவுலகை தன் பாதத்தால் அளர்ந்த நம்பிரான் கர்ப்பக்கிரகத்தில் நித்திரைக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்".

 பாம்பனை  மேல் பள்ளிகொண்ட ரங்கா சிறிரங்கத்தில் அவதரித்தாய் ரங்கா ரங்கா! உன் திருவடியால் உலகலளந்த அச்சுதானந்தா!

 உன் திருவடி தருசனம் நாடி வந்திருக்கும் ஏழைகள்  சேவிக்கின்றோம் .இப்பிறப்பில் உன் வழி கால நதியில் பக்திக்கடலில் கலந்திட உன் நாமத்தை கயிறாக பற்றுகின்றோம்.

  பலிபீடத்தின்   முன் பாதம் பணிந்து சேவித்த பின் பெருமாளின் நாமத்துடன் துளசியையும் தீர்த்தமும் வாங்கியவுடன் நாம் சென்றது.

 சூடிக் கொண்ட சுடர்க்கொடி ஆண்டாலின் கண்ணாடித் தருசனம் கான்பதற்கு.

 ஒவ்வொருமுறையும் பூமாலை சூடிக்கொடுத்த பெரியாழ்வார் சுடர்கொடி அழகிய திருவுருவம் கண்ணாடி கவசத்தில் ஜொலிக்கின்ற அழகைப்பாடுவதற்கு மீண்டும் ஆண்டாலே அவதரிக்கனும் .

அங்கிருந்து யாசோதை நாச்சியாரை தருசித்தோம். கோவலன் நம்பியின் தாயைச் சேவிக்காமல் வருவது முறையோ? தாயிற்காக உலகை வாயில் தொண்டைக்குள் எழலகங்களையும் காட்டியவர் அல்லவா பெருமாள்.!

 அதன் பின்னே நாம் தருசனம் செய்தது ராமாவாதாரத்தில் இராமன் சீதை இலக்சுமணன் அனுமானுடன் இருக்கும் கலியாணக்கோலம்.

 திருமணம் முடிக்காதவர்களும் தொழிலில் உயர்வு தேடுவோரும் இவர்களைச் சேவித்தால் மங்களம் என்கிறார் பட்டாச்சாரியார்

.இங்கு இன்னொரு சிறப்பு அனுமானுக்கு தலையில்தான் வால் இருக்கின்றது.

அனுமன் சங்கு சக்கரத்துடன் தமிழ்நாட்டுல் இருக்கும் இன்னொரு தலம்
ஆதனூர் ஆகும். இது சங்கரன் கோவில் போகும் வழியில் இருக்கின்றது.


அங்கிருந்து இலங்கைவேந்தனின் தம்பி விபூசனன் சன்னதியும் பார்த்தோம்.

 .அவற்றைத் தாட்டினால் ஆயிரங்கால் மண்டபம் அழகுற காட்சியளிக்கின்றது. சிற்பத்தொழிலின் மகத்துவத்தை பறைசாற்றுகின்றது

.சிற்பக்கலை மாணவர்கள் பலர் இதனை ஆய்வு செய்கின்றனர். பாரிஸ் நங்கை ஒருத்தியும் அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆய்வு செய்வதற்காக .

என் படத்திணை அவள்தான் எடுத்துத்தந்தாள்

.அங்கிருந்து வெளியேறினால் பெருமாளின் கடைத்தெருவில் பல நூல்கள் அலங்கரிக்கின்றன. இனிய கடவுளின் சித்திரங்கள், வடிவமைக்கப்பட்டுருக்கின்றது.அருகில்
பல்சுவையில் சைவச் சிற்றுண்டி காத்திருக்கின்றது .

.பெருமாளின் வாசல் கோபுரம் தெரியும் மட்டும் வாகனம் தங்கிச் செல்கின்றது .
 பெருமாள் தருசனம்  இனி எப்போது கிட்டுமோ?4batom

19 September 2011

மதுரை வழி திருச்சி!

மதுரையில் இருந்து மீண்டும் எங்களின் பயணம் திருச்சியை நோக்கிப் பயணித்தோம்.

 திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு பலவருடங்கள் முன்னோக்கியது.

 கால ஓட்டத்தில் ராமனைப் பிரிந்த சீதை போல் இப்போது நானும்!

 ஆம் எங்கள் ஊருக்கு திருச்சி வானொலியான திருச்சிறாப்பள்ளி வானொலியில் இருந்து ஆடிவரும் திரைகடல் ஆடிவரும் தென்றல், வேளான்மைக்கல்வி ஒலிபரப்புகள் எங்கள் வீட்டு வானொலியில் வலம் வந்த அந்த அமைதியான காலத்தைச் சொல்கின்றேன்!

 அப்போது வானொலிக்குள் முகத்தைத் தேடிய பூமியில் இப்போது என் கால்கள் தடம்பதிக்கின்றது.

 பலதடவை!
திருச்சிக்குப் போவது யாரிடம் என்ற உங்கள் ஆதங்கம் புரிகின்றது !

.திருச்சி முன்னரை விட இப்போது இன்னும் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

 ஒவ்வொரு வருடப்பயணங்களிலும் இதை நான் நன்கு உணர்கின்றேன்.  பலதடவை தனியாக தனிமரம் போன படியால் இப்போது திருச்சி எனக்கு ஒரு பழகிய இடமாகிவிட்டது எனலாம்.


 திருச்சியில் இறங்கியதும் நாம் பயனித்தது எங்கள் ஊர்க்கோயிலின் சாயலில் இருக்கும் அம்மன்தான் சமயபுரத்தாள் அம்மன் கோயிலுக்கு!

அதிகாலையில் மணி அடிக்கப் போகும் எங்கள் கிராமத்து கோயில் 21 வருடங்களாக பாதுகாப்பு பிரதேசம் என்ற கம்பி வலயத்துக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.

 ஊரைக்காக்கும் தெய்வத்தின் சன்நிதி கூட யுத்தம் என்ற கொடுயவலையில் சிக்கிவிட்டது.

 கண்முன்னே இருந்த கோயிலை நான் பார்த்து வருடங்கள் 21  ஆண்டுகள் ஆகிவிட்டது.  வனவாசம் போனது போல் இனியும் அந்த ஊருக்குள் எப்போது திரும்பிப் போவது?

 விரட்டப்பட்ட அகதியானவன் அதே சாயல் அம்மனை இங்கு பார்க்கின்றேன்.

  அதனால் தான் தனிப்பட்ட விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் குழுவாக சமயபுரத்தாலிடம் போவது என் இயல்பு.

நான் பார்த்த அம்மன் திருவுருவத்தை என் மனைவியும் கானவேண்டும் என்ற ஆவலில் நாம் திருச்சியில் இருந்து சமயபுரம் போனோம்.

  சமயபுரம் என்றாளே அம்மன் கோவிலுக்கா? என்று பஸ் நடத்துணர்கள் கண்டுபிடித்து விடுகின்றார்கள்.

சூரியோதம் வரும் வேளை ஈர ஆடை உடுத்தி அம்மனை வலம் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்று எங்கள் ஊர் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

 நானும் சமயபுரத்தாளின் அருள்வேண்டி பலதடவை அதிகாலையில்  சமயபுரத்தாளை தேவியே! நின் பாதம் போற்றுவேன் நூற்றாண்டு  தாண்டி உன் உயிர்  முகவரி கேட்டறிந்த நுண்மான் நுழைபுலம் கொண்டாட்சி செய்பவளே சரணம்!தருசித்திருக்கின்றேன்.

 இம்முறை மாலையில் கோயில் சிறப்புத் தருசனம் ஊடாக மனைவியுடன் உள்நுழைந்தோம் .

சமயபுரத்தாளின் மூலப்பிரகாரம் மிகவும் தொளிப்புடன் பக்தர்கள் முண்டியடிக்க தீபாராதனை நடக்கின்றது

.ஆயிரம் கண்கொண்ட தாயின் திருவடிகளை தருசிக்கும் பேறு நம் விழிகளுக்கு..

 அபிராமிப்பட்டரின்" ஆத்தாளை எங்கள் அபிராமியை நெஞ்சமெல்லாம் என்று "அதிகம் பக்தர்கள் நெரிசலில்.

 அந்தனர்கள் வீபூதி குங்குமம் விரைவாக கொடுக்கின்றனர். தாயின் தருசனத்தின் பின் வீதி வலம் வந்தாள் சமயபுரத்தாலில் கோபுரக்கலசம் தங்கமுலாம் பூசியது ஜெகஜோதியாக ஜொலிக்கின்றது.

 தாய் உள்ளம் கொண்டவளின் கோபுரம் இப்படியான தங்கமுலாம் பூசிய கோபுரங்கள் மிகவும் விரல்விட்டு என்ன முடியும்

.அம்மனின் அற்புதமான கோயிலின் திருவுருவம் இன்னும் கண்களில்!பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கும் ,தோஸ நிவாரனத்திற்கும் ,மாலை,சேலை,தொட்டில், தங்கத்தில்,வெள்ளியில் செய்த ஆபரங்கள் என பலதை காணிக்கை இடுகின்றனர்.

அம்மனுக்கு பலர் பால் குடம் எடுக்கின்றனர். விரதம் இருப்போர் பாதயாத்திரை வருவோர் என சமயபுரத்தாள் அதிகம் பக்தர்கள் தவம் கிடப்பதைக் கான முடிகின்றது

.சமயபுரத்தாளின் சிறப்பு, பூசைகள் பற்றி அறிய இங்கே -http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html


நன்றி - ராஜேஸ்வரி அம்மா!

 அடுத்த பதிவுடன் மதுரை உலா முடியும்!

16 September 2011

சொர்க்க விழா!!

 கோடைகால வழி அனுப்பும் ,குளிர்கால வரவேற்புக்கும் ,பாரிஸ் மக்கள் திரலும் நாள்!

உதட்டோர முத்தத்திற்கு குறைவில்லாத காதலர்கள் போல்!

வைரமுத்து சொன்னது போல் ஐந்து நாள்கள் விற்கப்படும் நாட்களை வார இறுதியில் வாங்கும் நாள் !

மிகவும் சிறப்பு மிக்க சொர்க்கபுரி தான் பாரிஸ்சில் இன்று நடக்கும் இசைத் தொடர் !

இடைவிடாது புதிய இசைக்கருவிகளின் அறிமுகமும்  இசையின் நுனுக்கக் கருவிகள் ,மக்களிடம் விழிப்புனர்வை ஏற்படுத்தும் TECHNO PARADE  ஆகும்.

  இது பாரிஸ் தேசத்தின்  கலாச்சார அமைச்சக்தின் அறிமுகத்திட்டம் ஆகும் 1998 இல் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த நிகழ்வு.


 ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையில்  உற்சாகமாக பாரிஸ் மாநகரத்தில் கொண்டாடுகின்றது.


 இந்த நிகழ்வில் உணவகங்கள்,,பாதையோரத்தில் மடைபரப்பி கூதுகளிக்கும் மக்களுக்கு இன்னும் மயக்கம் கொடுக்கும் வண்ணம் சேவையாற்றும் .

பாரிசின் மாநாகரின் 4 ம் பிரிவுப் பகுதியில்  அமைந்து இருக்கும் ஆற்றுப்பாதையோரம் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு வழங்க! சிறப்பான இசைக் கொண்டாட்டம் நடைபெறும்.


 இந்திரலோகத்து  சொர்க்கவிழாவையும் கம்பன் சொல்லும்  வானரப்படைகள் அறுசுவைகணிகள் உண்ட மயக்கத்தில் நினைவு மங்கிய வேலையில் அனுமான் இலங்காபுரியை அடைந்தான் என்பது போல்!

 பாரிஸ் மக்களும் இனிய மென்பாணங்கள் ,மது பாணங்கள் உண்டு பாதையோரம் ஆனந்தக் களிப்பில் இசையை ரசிக்கும் அழகு பார்ப்பதற்கு பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.


  தமக்கு  தெரிந்தவர்களுடனும் , உற்சாகமாக
மனதிற்குப் பிடித்தவர்களுடன், வீதியோரம் ஜல்சா,பலே,கபரே நடனங்கள், தனிநபர் டிஸ்கோ, தீப்பந்தத்தில் வாயினால் புகை ஊதி நெருப்பினை சுவாலையாக்கள், பல்டி, தோல்களில் ஏறி சுலலும் சதுராட்டம் என   ஆடும் அழகு பார்ப்பதற்கு உள்ளத்திற்கு கிளர்ச்சி ஏற்படும் !


 அதுவும் பிரென்ஞ் இளையோரின் சுதந்திர  ஆர்ப்பரிப்பும், அன்பு உள்ளங்களின் பலத்த கரவோசம் மேல் உலகம் அதிரும் வண்ணம் இருக்கும்

.இலங்காபுரி வேந்தனை இராமன் போருக்கு அறைகூவல் இட்டு போர் முரசு கொட்டியது போல்!


ரசிகர்களின் ஆதரவு கண்டு இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள்,ஒலிக்கவிடும் இசைக்கலவை(dj)  ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு உணர்வை பிரதிபலிக்கும் .


இசைக்கலவையாளர்களின் விரல்களில் நடனதாரகை நாட்டியம் ஆடும்.

  இசையின் சத்தம் வரும் போது உள்ளங்கள் கவலை ஏதும் அற்ற நாதத்தின் ஒலியை சுவாசித்து பேரலையில் கலந்து போகும் சிற்றரிவியாக   வீதிகளில் அசைவார்கள்!



 ஒலி/ஒளி ஊடகம் காட்சியைப் பதிவு செய்வதும் ,நாளிதல்கள் வாரசஞ்சிகைகள் பதிவு செய்வதற்கு அதிகளவில் ஒன்று கூடும்.

  5 km தூரத்திற்கு  இசைப் பேரணி  மதியம் 12 மணிக்குத் தொடங்கும்.  BASTILLE தொடங்கி அதன் மையப்  பகுதியின் 4 புறத்தின்  பெரும் பாதைகள் ஊடாக இசை முழங்கி   ஆற்றுக்கரையோரம் வந்தடைவது மாலை 6.30 மணிக்கு ஆகும்.

  அதன் பிறகு தொடங்கும் இசைக் கச்சேரிகளில் பலதுறைக் கலைஞர்களின் ஒற்றுமையில் பல இனிய பாடல்கள் இசைக்கப்படும்.

பிரென்ஞ்,ஆங்கிலம்,போர்த்துக்கள்,ஸ்பெயின் ,ஆப்பிரிக்க,ஆரபிய இசைக்கலவையில் பல புகழ்பெற்ற கலைஞர்கள் மேடையில் பாடி நளினம் புரிவதைப் பார்க்கும் போது இசைக்கு இங்கு கொடுக்கும் மரியாதை மெய்சிலிக்கும் 400000 மக்களுக்கு மேல் ஒரே இடத்தில் இணைவது என்பது  எத்தனை சிறப்பஞ்சம் ஆகும்

.இத்தனை மக்களை சிறப்பாக ஒன்றினைக்கும் கலாசார அமைச்சகம் அதன் உபக்குழுக்கள் சேவை பாராட்டத்தக்கது.

நினைக்கையில் நீங்கள்  பொறாமை கொள்வீர்கள் பிரென்ஸ் தேசத்தில் இருக்கவில்லையே என்று!

  இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் கவலைகள்    அற்ற  சொர்க்க புரியைக் கானும் போது மனதில் தோன்றும்


!நம் தேசத்தில்  எப்போதும் சொர்கபுரி? என்பது கம்பன் சொல்வதை  ஏட்டுக்கல்வியாக   மட்டும்தான் தமிழன் கானுவதா?  மாலை என்றாளே  கிரீஸ் மனிதனின் பயத்தில் வீட்டுக்குள் பதுங்கும் நம் இனம் !


பாரதி பாடியது போல் ஆடுவோம் பள்ளுப் பாடுவோம் ஆனந்தச் சிதந்திரம் பெற்றுவிட்டோம் என்று எப்போது இன்னொரு சொர்கபுரியைப் பார்ப்பது? Op

14 September 2011

அழகர் அழகு. !

ஓவ்வொரு கிராமத்துக்கும் ஒருவர் காவல்காரணாக இருந்தவர்கள் பற்றி வரலாறும், புராணங்களும் பலதையும் பதிந்து வைத்திருக்கின்றது.


 பாடசாலை நாட்குறிப்பைப்போல். எனபயணங்களின் குறிப்பையும் சில பதிவுகளில் சொல்லனும் என்ற ஆசைகள் பல.

 அதில் ஒன்று நான் எப்போதும் பிரமிப்போடு பார்க்கும் பெருமாள்!

பெருமாளை மதுரையில் அழகர் பெருமாள் எல்லைச் சாமி,குலதெய்வம் காவலர்,எனச் சொல்கின்றனர் மதுரைவாசிகள்.

மதுரைக்குப் போனாலும் அழகர் ஐயாவை போய் சேவித்தாயா என்று என்னோடு ஆன்மீகத்தில் கலந்து என்னை வழிநடத்தும் என் குரு கேட்பார்

 .ஒவ்வொரு முறையும் அழகர்சாமியின் தருசனம் நல்ல கதை இருந்தும் தயாரிப்பாளர் கிடைக்காத இயக்குனர் போல் போக முடியவில்லை .

பயன நாள் குறைவு என்று ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்லிவிடுவேன்.

 இந்தச    மாசியில்    நாம் ஒன்றாக மதுரைபோவம் அழகர் சாமியின் உற்சவவிழாவைக்கான என நிநைத்து குருவிற்கு வாக்குறுதி கொடுத்தேன்

. அம்மாவை நம்பிக் கெட்ட வைக்கோ போல் அவருடன் இவ்வருடம் போகும் வழிகிடைக்கவில்லை.

 தொழில் மாற்றம் அதையும் தாண்டி சில வேறு தேடல்கள் என்னை அசைத்துக்கொண்டிருந்தது

.ஆனாலும் அழகர்சாமி ஆற்றில் இறங்கும் நாளுக்குப் பதிவு போட்டிருந்தன்.இங்கே( http://nesan-kalaisiva.blogspot.com/2011/02/blog-post_17.html?m=1

அண்ணன் மதுரை சரவணன் அதற்கு பின்னூட்டம் இட்டு என்னையும் ஒரு சகவலைப்பதிவாளராக ஏற்றுக்கொண்டு அந்த நிகழ்வை பதிவு செயுங்கள் என்று அன்புக்கட்டளை இட்டார்.

 ஆனால் முடியவில்லை. அதன்பிறகு பெருமாள் அழகர் சாமியின் சிந்தனை என்னை ஆட்கொண்டது. அவரின் அருமைக்கோயிலை ஒரு தடவை சரி பார்த்துவிடனும் என்ற ஆதங்கம் முற்பயனின் பேறில் இப்போது அதிகமான தருசனங்களை பெருமாள் கண்குளிரும் வண்ணம் என்னையும் அப்போதே சொலிவைத்த ஆண்டாள் போல் சின்னவன் யானும் இல்லறத்தில் நல்லறம்போல் இருவருமாக அழகர் சாமிக்கோயிலுக்குப் போனோம்,

மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 7Km தூரத்தில் ஆழகர்சாமிகோயில் இருக்கின்றது.

நாங்கள் போனபோது பக்தர்கள் கூட்டம் அலைமோதியது தருசனத்திற்கு வெள்ளிக்கிழமைவேறு மக்கள்கூட்டம் அதிகம்

.அழகர்சாமி சித்திரையில் உலாவந்து வைகை ஆற்றில் நீராடி மீண்டும்செல்வதற்கு முன்று நாட்கள் தேவை.அயல்கிராமத்தவர்கள் உண்டியல் காணிக்கை மாற்றிக்கொள்வது ஒவ்வொரு வீட்டிலும் பவனிக்காக தருசனம் கொடுக்கவரும் போது லட்சகணக்கில் மக்கள் மதங்கள் தாண்டி கூடும்விழா என்பது சிறப்பு.

 அந்த மாதத்தில் வெளியில் வரும் கள்ளழகர் ஆவணியில் தான் மூலப்பிரகாரத்திற்குப் போவார்.


 அதுவரை ஆலயத்தின் வெளிப்பகுதியில் வீற்றிருப்பார் தேர்பவனி மிகநேர்த்தியாக இருக்கும். தேரடிவீதியில் போய் தருசித்தோம் .

கோவில் பிரகாரம் எங்கும் பக்தர்கள் அங்கேயே நீராடிச் செல்கின்றார்கள்.






 சிறப்பு தருசனம்


ஊடாக நாம் மூலவரை தருசித்து மஞ்சல்வாங்கினோம்.











 பெருமாள் கோவிலில் மஞ்சல் ஒரு பிரசாதம் ஆண்டாள் மேனியின் தீயினை மஞ்சல் நீட்சியாக்கும் (குளிர்விற்கும் )தன்மை கொண்டது .பெருமாள் மீதான பக்தியின் வெளிப்பாட்டை பாசுரங்களில் காணலாம் .இது ஆன்மீகத்தின் உணர்வை சிலர் நளினமாக்கும் போது  என்ன செய்வது.?

ஒவ்வொரு ஆலயத்திலும் முதலில் உடல்சூட்டினைத் தனிக்க மஞ்சல் அபிசேகம் நடைபெறும் ,சில பெருமாள் ஆலயங்களில் துளசித் தீர்த்தம் கொடுப்பதுடன் முடிந்து விடும் நிகழ்வுகள்.

 அழகர் சாமிக்கு மாமிசங்கள் பலிகொடுக்கப்பட்டு படையல் நடக்கின்ற காட்சியையும் கண்டோம்.

அழகர்சாமியைத் தருசித்துவிட்டு மலைக்கோயில் போனோம்.இந்த அழகர் மலையின் பழைய பெயர் திருமாலிருஞ் சோலை ஆகும் நம்மாழ்வார் திருவாய் மொழியில் இதன் பெருமாளைப் பற்றி அதிகம் பாசுரங்கள் பாடியுள்ளார்!
    (ஆதாரம் சுஜாத்தா நாளும் ஒரு பாசுரம் பக்கம்-43)

 மலைக்கோயில் மிகவும் சிறப்பு மிக்கது என பக்தர்கள் பலர் கூறினார்கள். வந்த கையுடன் அதனையும் பார்ப்போம் என்றாள் 2km தூரம் மலைப்பகுதியில் அமைந்திருக்கின்றது .


அழகர்சாமி கோயில் வாகனம் கட்டணம் செலுத்தினால் மேலே போய்வர முடியும் .

ஆனால் அதிகமான கூட்டம் நிற்கின்ற அழகு  கம்பன் சொன்ன ராமன் அயோத்தி மீண்ட போது பரதன் சேனைகளும் அஸ்த்தினாபுர மக்களும் கூடி நிற்பதைப் போல் !

. எனக்கு வரிசையில் நிற்பதிலும் பார்க்க நடந்தே போவது மனதிற்கு இனிமையானதாக இருக்க .இருவரும் நடந்தே போய்ச் சேர்ந்தோம்.

மலையின் எழில் கொஞ்சம் மனதில் கிலசத்தை உண்டாக்கும் மனம் ஒத்தவர்களின் நடைப்பயணத்தில் முதியவர்கள் பலர் இணைந்து கொண்டார்கள் தாம் முற்காலத்தில் நடந்த அளவு இப்போது இருக்கும் தலைமுறையினர் நடப்பது இல்லை என்றார்கள்.

 எல்லோரும் மோட்டார் வண்டியிலும்,வாகனத்தை விரும்புகின்றனர் என்றாள் ஒரு பாட்டி .உண்மையில் அந்த ஆச்சியின் நடைக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே நிஜம்.

முருகனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் தேவாரத்துடன் போகும் முதியவர்களின் பக்தியைப் பார்க்கும் போது மனதில் நாம் எங்கு நிற்கின்றோம் என்ற உணர்வு வருகின்றது.

 மலையில் இருப்பவர் அழகு என்றாள் தமிழுக்கு இலக்கணம் கொடுக்கும் முருகனின் ஆறுபடை வீட்டின் இன்னொரு மலைக்கோயில்தான் இந்த அழகர்சாமி மலைக்கோயில் என்பது.தெரிந்து கொண்டேன் .

முருகன் வள்ளி+ தெய்வானை சகிதம் மலையில் காட்சியளிக்கின்றார் வெற்றிவேல் கொடுத்த சக்திவேல் என்ற சரபவண ஒலி மந்திரம் என்கின்ற திருமந்திரம் ஒலிக்கின்றது.

 முடி காணிக்கை கொடுத்தவர்கள் பூசை பொருட்கள், மாலைகொடுத்து வெற்றி வேலாயுதம் முருகனை வழிபடுகின்றனர். இங்கு சிறப்புத்தரிசனம் மிகவும் பக்திப்பரவசத்துடன் சரனாகர ரட்சதகர் முருகனை இல்லத்தரசிகளுடன் இனிமையாக உருகிப் பரவசத்துடன் பிராத்தனை செய்ய முடிகின்றது.

 கருணை உள்ளம் கொண்ட முருகனைத் தருசித்தபின் கீழே வாகனத்தில் வந்தோம் அங்கிருந்து!

கோயில் தருசனத்தின் பின் அண்ணனுக்கு ஒரு பால் கோப்பி போடும் அழகு பாருங்கள்!

  எமது பயணம் தொடரும்!  

இன்னும்  சில  படம்








12 September 2011

மதுரை உலா!

மதுரைக்குப் போகலாம் விடுமுறையில் என்ற என் ஆசைக்குக் காரணம் மதுரையில் மல்லிப்பூ வாங்க அல்ல .

மதுரையின் சிறப்புக்களை அறிந்து கொள்வதுடன் .பார்த்தும் விடனும் என்ற ஆவல்.

 தூங்காத நகரம் மதுரைக்கு இலக்கியம், ஆன்மீகம், அரசியல் ஏன் ரவுடிசம் எல்லாத்திற்கும் தனி இடம் உண்டு .

மதுரையில் பார்க்க பல இடங்கள் இருந்தாலும். பலதடவை தனியாகப் போயிருந்த போது எப்படியும் மனைவியையும் கூட்டியந்து காட்டனும். அன்னையையும் பார்க்கவைக்கனும் என்ற உள்ளூணர்வு ஏற்படும்.
 அன்னையின் வதிவிட அனுமதி முடியவில்லை என்பதால் இம்முறை மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து பயணித்தேன்.

 கோயம்பேடு பஸ்தரிப்பில் மதுரைக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் ஏறினோம்.

 நல்ல வெயிலில் அவர்கள்  வரும் வராது என்பது போல் குளிர்சாதனத்தை இயக்கவில்லை .என்ன செய்வது ஏறியபின் இறங்கவா முடியும்?



(அண்ணா மனோ இந்த ஹோட்டல் பேரணியூரில் இருக்கு சாப்பாடு மிகவும் பேஜார் உங்க வாளை ஒருக்கா பட்டையை த்தீட்டுங்க சார்)
 அதற்காக அண்ணன் அழகிரியிடமா போகமுடியும் அட்டாக் பண்டியை விட்டு பஞ்சாயத்துப் பண்ணு என்று சொல்ல.  அதிகமன உளைச்சலுடன் எங்களின் பயணம் மதுரையை இரவுப் பொழுதுடன் தொடங்கியது

. மதுரை பேருந்து நிலையைம் மிகவும் சுறுசுறுப்புடனும் துப்பரவாகவும் இருந்தது. அங்கிருந்து ஆட்டோவில் நாம் மதுரையில் குடிகொண்டிருக்கும் தாய் மதுரை மீனாச்சியை தரிசிக்க அருகில் இருக்கும் ஒரு வாடகை விடுதியில் தங்கினோம்.

 தமிழக்கத்தில் தங்கும் விடுதி எங்கிலும் இலங்கை என்றால் ஒசாமா பின்லாடனைப் பார்ப்பது போல் கடவுச் சீட்டை பலதடவை புரட்டிப்பார்ப்பது மட்டும் இன்னும் மாறவில்லை.

 காரணம் எனக்கும் புரியவில்லை. ஒரு வேளை அதிகமான வருமானம் கிடைக்கும் என்பதாலா?

சென்னையை விட மதுரையில் கொசுத்தொல்லை மிகக்குறைவு.

  இரவுப் பொழுதில் நல்ல இட்லி குஸ்பூவைப் போல் குளுகுளு என்று இருந்தது. மிகவும் ரசித்துத்துச் சாப்பிட்டோம் இட்லியை.

 சாப்பிட்ட பின் கோப்பி குடிக்கும் பழக்கம் எனக்கு எப்போதும் உண்டு அதற்காக பலகடைகளில் சாப்பிடாமல் வருவதும் உண்டு.

 இரவு 8 மணியின் பின் கோப்பி இல்லையாம் அதுக்காக டாஸ்மார்க்கா  போகமுடியும்

 . சாப்பிட்ட உணவகத்தில் விசாரித்த போது  அருகில் ஒரு கோப்பி/பால் / சாயாவிற்கு என்றே தனிக்கடை இருக்கு என்றார்கள். உண்மையில்  நல்ல கோப்பி மதுரையில் குடித்தேன்.

விடுதியில் காவலாளியாக இருப்பவர் நம்நாட்டைச் சேர்ந்தவர் 15 வருடமாக மதுரைவாசியாம்.(மதுரைநாயக்கர்- பற்றிய விளக்கம் இங்கே  பார்க்கலாம்-http://naickernaidu.blogspot.com/2011/05/blog-post_7271.html)

 தாய்நாட்டை விட்டுவந்த வலிகள் மட்டும் எல்லாருக்கும் ஒன்று போல்!  என்ன செய்வது என்ற கேள்வியைத் தவிர பதில் இல்லை..!
 
முன்னர் பெரியவர்கள் சொல்வார்கள் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று,

 இப்ப எல்லாம் சின்னத்திரையும் சினிமாவும்  கணனியும் பலரை வீட்டிலேயே முடமாக்கிவிட்டது. 

எனக்கு எப்போதும்  ஆன்மீகத்தில் தனியான ஆர்வம் உண்டு .

மதுரை மீனாச்சியை பார்க்க பலதடவை முயன்றும் குழுவாக செல்லும் பயணங்களில் அவர்கள் இங்கு போவதை விரும்பமாட்டினம் அதனால் இம்முறை தனியாக மனைவியுடன் மதுரையில் முதலில் மீனாட்சியை தரிசிக்க .நினைத்து.

மறுநாள் அதிகாலை5.30 உள்நுழைந்தோம் .நாங்கள் உள்நுழையும் தருணம் நடைதிறந்து அதிகாலைப் பூசை ஆரம்பமாகியது .அருகில் இனிய கதாப் பிரசங்கம்  ஒலிபரப்பிக்கொண்டிருந்தது என் நினைவில் வசந்தா வைத்தியநாதனும்,க.நாகேஸ்வரனும் ..ஞாபகத்தில் வந்து போனார்கள் .

சிவனின் திருவிளையாடல்கள் நாலாபுர கர்பக்கிரகத்தின் வெளிப்புறத்தில் அழகாய் சிற்பிகள் செதுக்கியிருக்கின்றார்கள்.

 முதலில் வடக்கு வாசலால் உள்நுழைந்தால் கொடிக்கம்பம்  வரவேற்கின்றது! 

இன்று பலர் விதிமுறை தெரியாமல் கோயில் நந்தியின் பிரகாரத்தில் வீழ்ந்து அஸ்டாங்கம் செய்வது  கானும் போது இவர்களை வழிநடத்த ஒழுக்கமான சமயத்துறவிகள் வரமாட்டார்களா?

 என்று ஆதங்கம் வருகின்றது .கோயிலில் நுழைந்தால் .

கொடிக்கம்பத்திற்கு முன்னால் அஸ்டாங்கம் செய்யனும் நந்தியை வழிமறித்து நிற்கவோ, வீழ்ந்து வணங்குவதோ ,கூடாத செயல்.

 இன்று பல ஆலயங்களில் வருமானத்தை எதிர் பார்ப்பவர்கள் புகைப்படம் எடுக்க காசு ,வீடியோ புகைப்படம் எடுக்க காசு ,வசூழிக்க நினைப்பவர்கள் ஆலயத்தில் செய்யக்கூடாத காரியங்களை வலியுறுத்த இல்லாத நிலை நம் இந்து மதகோவில்களில் இருக்கும் குறை பாடு!

 சிறப்புத்தரிசனம் வழியாக நாங்கள் உள்நுழைந்தோம் தமிழ்நாட்டு இந்து ஆலயங்களில் இந்த கட்டண வழிமுறைகள் பக்தர்களை விரைவாக தரிசனம் பார்ப்பதற்கு வழிகாட்டினாலும் இது முறையா? 

நாவுக்கரசர்"

 காதல் மடப்பினியோடு களிருவருவனக்கன்டேன் அவர் திருப்பாதம்
கன்டறியாதனைக் கண்டேன்  "என்பார் .
இங்கு  முதலில் மீனாச்சியம்மனிடம் குங்குமம் வாங்கி அன்னை தரிசித்தோம்.
 கர்பக்கிரகத்தில் தாயின் கருணை உள்ளம். கண்முன்னே .!

அதிக நேரம் நிற்கமுடியாது பக்தர்கள் முண்டியடிக்கின்றார்கள் .அர்ச்சனை அதி வேகமாக செய்யும் அந்தனர்களுக்கு புரிவதில்லை மீனாட்சியைத்  தரிசிக்க. கடல்கடந்தும் , பல தூரத்தில் இருந்தும் எவ்வளவு பக்திப்பரவசத்துடன் வருகின்றார்கள் என்று.

""உன்னையே தேடுகின்றேன் உன்பாதம் நாடுகின்றேன் 



இந்த சிறுவனாகிய என்னைக் காத்தருள்வாய் என் தாயே
இந்த ஏழைக்கு இரங்கியே!


 தாயின் தருசனத்தின் பின்.

 மீனாச்சி சுந்தரேசரைத் தரிசித்தோம். 

சிவனின் கற்பக்கிரகம் ஒரு நிமிடம் பார்க்கும் போது சிவலிங்கத்தின் மகிமையை சொல்வது இன்னும் பலபதிவு போடலாம் .படிப்பார்களா?
 தென்னாடுடைய சோதிப்பிழம்பைப் பார்ப்பது வாழ்வில் பயனுடை செயல் .

அங்கிருந்து பிரகாரங்களை வலம் வந்தாள் பிரகாரத்தில் முக்கியமாக சிவனின் வலது கால் தூக்கியாடும் (வெள்ளி அம்பலம்) இங்கு இருப்பது சிறப்பாகும்.(இதுபற்றிய சிறப்பான விளக்கம் இங்கே-http://www.aambal.co.uk/magazine/issue-3/hindu-temples-madurai-meenakshi.html)


 நாம் எப்போதும் சிவனின் கூத்தில் இடது காலைத்தான்  தூக்கியாடும் காட்சியினைத்தான் கான்கின்றோம்.

பிரகாரத்தின் மேற்புறத்தில் .(மேல்சுவரில்)அழகிய தாமரைப் பூக்களை தீட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு கருங்கற்களும் சொல்லும் சிற்பத்தின் பெருமையை.

 அங்கிருந்து   தெற்பக்குளத்தையும் பார்வையிட்டேன் இக்குளத்தின் வரலாற்றை சொல்வதும் முக்கியம் தானே !

திருவள்ளுவரின் திருக்குறள் சங்கப்பலகையாக மிதந்தது இங்குதான்.  குளத்தின் அகளம் நல்லூர் தீர்த்தக் கேணியின் மூன்று மடங்கு  நீளமும் ஆழமும் அருகில் அழகிய நந்தியாவட்டை ,மல்லிகைப் பூக்கள் அலங்கரிக்கின்றது.

.தீர்த்தக்கேணியில் நின்று பார்த்தால் நான்கு  பெரிய கோபுரமும் சிறிய 8 விமானங்களும் தெரிகின்றது.

 யாணைப் பாகன் பக்தர்களின் தலையில் யானையின் தும்பிக்கையால் ஆசிர்வதிக்க விட்டு விரும்பிய காணிக்கையை வசூலிக்கிறார்.


 பின் அங்கிருந்து வெளியேறி அழகிய ஆயிரங்கால் மண்டபம் பார்த்தோம். 

மதுரை உலா தொடரும்!
 நன்றி- வலைப்பதிவாளர்களுக்கும், இப்படியும் செய்லாம் என்று அறிவுரை கூறிய நண்பன் நிரூபனுக்கு!ம


....... .

 

10 September 2011

சிற்பி இருக்கு சிந்தனை?!!

மெரினா போனால்  அருகில் இருவரின் சமாதியை கண்டிப்பாக  பார்க்கனும்! ஒன்று பேர் அறிஞ்ஞர் அண்ணாத்துரையின் ஆத்மா.

 இவரின் இதயத்தை கடன் கேட்டு ஆட்சி செய்தவர் .இப்போது திஹார் ஜெயிலுக்கு நடைபயணம் போகின்றார்.

அண்ணாவின் வேலைக்காரி  நாவல்
மிகவும் சுவாரசியமாக இருக்கும் வாசிக்க

 .
மற்றயைய சமாதி எங்கள் இதயதெய்வம் M.G.இராமச்சந்திரான் அவர்களுடையது .அணையா தீபம் ஒளிர்கின்றது .


பல்லாயிரக்கணக்கானவர்கள் தினமும் வந்து பார்வையிடும் இடம் நானும்  தொடர்ந்து வருகின்றேன்.

 இங்கு . பார்ப்பதற்கு மிகவும் அமைதி தரும் இடம் .




இதோ இந்த கடைத் தொகுதியில் கடலில் இருந்து பெறும் சிற்பி , சங்கு சோகியில் அழகியச் வேலைப்பாடுடன் கூடிய மாலை மற்றும் ஞாபகச் சின்னங்கள், ஆடை ஆபரணங்கள் அலங்கரிக்கின்றது.

உங்களுக்குப் பிடித்தவர்களின் மச்சாள் பெயராகவும்.  இருக்கலாம் எதிர் வீட்டு பிரியவதனாவின் பெயராகக்கூட அரிசியில்

எழுத்துருக்கள்  பொறிக்கப்பட்டு  உடனடியாக பெறமுடியும்.

இந்தப் பகுதியில் பலருடன் நீங்கள் கைகுழுக்கலாம் கட்டிபிடிக்கலாம் .ஏன்? பிரென்ஞ் முத்தம் கூடக் கொடுக்கலாம்.

 இவர்களைத் தேடி நீங்கள் அவர்கள் வீட்டுக்கோ! படப்பிடிப்புத் தளத்திற்கோ!

 வீண் காசு செலவலித்துப் போகத்தேவையில்லை.

 உங்களை காத்திருக்க வைத்து பொறுமையை சோதிக்க மாட்டினம் .

ஆர்வக் கோளாற்றில் கையை அங்கே இங்கே தொட்டு  விட்டால் அதற்காக பாதனியால் சங்காரம் செய்ய மாட்டினம்.

 இத்தனை சிறப்பு மிக்க


இடம் தான் பிரபல்யங்களுடன் புகைப்படம் எடுக்கும் காட்சியறை இருக்கின்றது.

  நானும் எனக்குப் பிடித்த நடிகையுடன் படம் எடுக்க தொடர்ந்து முயற்ச்சிக்கின்றேன். முடியவில்லை  அவங்க யாரு தெரியுமா?

தமிழ்சினிமாவில் முதல் முறையாக டேய் எடுபட்ட பயலே !வக்கனையா பேசத்தெரியுது?அடிப்பாவி நான் பெத்த மயிலு வசனம்


 புகழ் காந்திமதி தான் எனக்குப் பிடித்தவங்க.

 எங்க பாட்டி மாதிரியே திட்டுவாங்க பாருங்க.

 அதிகாலைத் தூக்கம் பறந்து போய்விடும் .கடைசியா அவங்க அஸ்தியை கடலில் கரைத்து விட்டாங்க இந்தப் பேரன் இல்லாமல் .!

அதுதான் கடலில் தேடுகின்றேன் சில மெனங்களுடன்!

எப்போதும் சுருக்குப் பையில் வைத்திருந்து தரும் சில்லறைகள்,பேய் பிசாசு காத்துக்கருப்பு பிடிக்கக் கூடாது என் பேரனை என்று வாஞ்சனையோடு பூசிவிடும் வீபூதி!

வளரும் பிள்ளை என்று பசுப்பால் கோப்பியை எனக்கு பாசத்துடன் அதிகாலையிலும் ,இரவிலும் பரிமாறும் அவங்களை நினைக்கும் போது மனசு மீண்டும் என் கிராமத்து தெருக்களில் அலைகின்றது.

 வெள்ளைச் சாரியில் பலதடவை என் உயிர்காத்த  செயல் என்னி!

பேரன் பசிதாங்கமாட்டான் என்று பண்போடு தான் இடித்து ஊட்டிவிட்ட அரிசிப் பொறிமா!

நான் பட்டணம் போனாலும்!   பக்கத்து வீட்டு சீலா கிராமத்துக்கு தேருக்குப் போனபோது இதை அவனிடம் கொண்டு போய் கொடு என்று அனுப்பியவை !

ஏதோ மணக்கின்றது அந்த ஆச்சி தந்துவிட்டா என்று எள்ளி நகையாடினால்  பட்டணத்தின் வாசத்தில் ஊறிய சீலா !அவளுக்குத் தெரியாது அது  அரிசிப்பொறிமா மணம் அல்ல மறக்காத பாசம் என்று!!

இந்தப்பதிவு  காந்திமதிக்கு அஞ்சலி



 
அந்தப் பாட்டிக்கு என்ன செய்தேன் இந்தப் பேரன்?
நான் கிறுக்கியவை இங்கே!http://nesan-kalaisiva.blogspot.com/2011/05/blog-post.html?m=1

07 September 2011

கன்னி.. காதலி!!

 கிறிஸ்தவர்களின் தேவாலயம் போகும் பழக்கம் .என்னுடன் உயர்தரத்தில் படித்த தோழியின் நட்பாள் ஏற்பட்டது.

 எனக்கு தேவையான சில உரைகளை (notes) எழுதுவதற்கு அவளிடம் கொடுத்தால் புன்னகையுடன் விரைவாக எழுதித்தருவாள்.

 .அவள் தேவாலயத்தாள் நடத்தப்படும் விடுதியில் தங்கிப் படித்தவள் .அதனால் அவளைப் பார்க்கனும் என்றாள்  விடுதிக்குப் போக முடியாது .

.தேவாலயத்தில் ஞாயிறுப் பொழுதில் அங்கே குழுவாகப் பாடுவோரில் அவளும் தேவ கீதம் பாடுவாள் .அது முடியும் வரை நானும் காத்திருப்பேன் .

என்னுடன் படித்த நண்பர்களுக்கு நான் தேவாலயம் ஏன் போகின்றேன் என்று குழம்பிப் போய் இருந்தார்கள்.

ஆனாலும் என் மனதில் எந்தச் சலனமும் இல்லை அவளிடமும் தான் காரணம்!அவளின் மனதில் கன்னியாஸ்திரியாகனும் என்றே ஆவலுடன் அந்தப் பாதையில் போய்க்கொண்டிருந்தால்.

 .உயர்தரத்தின் பரீட்சை நேரத்தில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள் நாங்களும் வெளியேறினோம்.

அதன் பின் நான் அவளைக் கண்டதே இல்லை .
இன்று அவளின் லட்சியம் நிறைவேறியிருக்குமா? இல்லை கால ஓட்டத்தில் இல்லத்தரசியானாலா தெரியாது. ?

அன்று தொடங்கிய என் தேவாலயம் போகும் .வாடிக்கை தொழில் நிமித்தம் கொழும்பு வந்த பின் கொச்சிக்கடை அந்தோனியார்,கொட்டாஞ்சேனை ,மட்டக்குளி யாழ்ப்பாணம்,வவுனியா என பல தேவாலயங்களுக்குப் போக காரணமானவள்.

எங்கு போனாலும் அந்தோனியாரிடம் போகும் போது மனதில் ஏதோ ஒரு அமைதியிருக்கும். இப்படி மனதில் தேவாலயம் போகும் ஆசையை ஒரு பாடல் சொல்லும் அழகு தனித்துவமானது.

நான் மலேசியாவில் இருந்த போது(  இங்கே சென்றாள் அங்கு ஏன் போனேன் என்ற விளக்கம் கிடைக்கும்!)
http://nesan-kalaisiva.blogspot.com/2011/04/blog-post.html?m=0
.இப்பாடலை அங்கு இருக்கும் மலேசிய வானொலியில் (24 மணித்தியாலம் சேவைபுரிகின்றது) பின்னிரவில் கடமையாற்றிய S.R. பாலசுப்பிரமனியம் என்பவர் ,ஒலிபரப்பிய பாடல்தான் இது. .

இதனை பின் தாயகம் சென்றதும் தாய் வானொலிக்கு அஞ்சல் போட்டேன் நேயர் விருப்பத்திற்கு .
தீர்வுத்திட்ட பொதிபோல் பாடல் வரவில்லை .

பின் ஒரு நாள் கொழும்பு சர்வதேச வானொலியில் அன்பு அறிவிப்பாளர் முத்தையா ஜேகன் மோகன் ஒலிக்கவிட்டார் சில தடவை.

 மலையகத்தை பூர்வீகம்கொண்ட இவரின் திறமை பாராட்ட வேண்டியது. கண்டிசேவை ,மலையகசேவை ,வர்த்தக சேவையில் பலநிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்து  நடத்துவார்.

 விடைபெறும் போது அவரின் அறிவிப்பு  உச்சஸ்தாயில் போய் குறியிசையுடன் விடைபெறும் தருனம் நானும் அவர் போல் முயற்சி செய்து பார்ப்பேன் அன்நாட்களில்.

 தொலைபேசி மூலம் பாடல் கேட்கும் நிலைவந்த பின் வானொலியில் அவருடன் சிலதடவை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றேன் .இப்பாடலை எனக்காக அவர் ஒலிக்கவிட்டு என் அபிமானத்தை
அதிகமாக்கினார்.

புலம் பெயர்ந்த பின் இப்பாடல் என் இசைத் தொகுப்பில் தொடர்ந்து இடம்பிடித்திருக்கின்றது.


இப்பாடல் 1989 இல் வெளியான அறுவடைநாள் படப்பாடல்.  அதில்  பிரபு நாயகன் .
இப்படம் மூலம் தமிழ்திரை உலகிற்கு ,பிரபுவின் அண்ணன் ராம்குமார்+பல்லவி R.P.விஸ்வம்  அறிமுகமானவர்கள்.

கிராமத்துக் கதைக்களம் எனக்கு மிகவும் பிடித்த படம்.
 இதில் வரும் கதாநாயகி  போல்தான் என் தோழி ஸ்டெல்லா.
 இப்படத்திற்கு  இசையானி இசை மீட்ட தம்பி கங்கை அமரன் அழகு தமிழை எதுகை மோனையுடன் கவிப்பூங்கா வடித்திருப்பார்.

 கங்கை அமரன் அதிகம்  பல்திறமை இருந்தும் ஏனோ பெரிதாக வெற்றியடையவில்லை. நல்ல பலபாடல்கள் இவரால் இயற்றப்பட்டிருக்கு .

.சின்னக்குயில் சித்திரா இப்பாடலை மிகவும் ரம்மியமாக்கிப் பாடும் போது அழுதுவிடத்தோன்றும் மனது அந்தளவு இப்பாடலில் கருத்தாளம் இருக்கு

!ஒரு வழிப்பாதை !
இதயங்கள் எல்லாம் மறப்பதற்கு! மறந்தால் தானே நிம்மதி!! என்ற வரிகளில் கங்கை அமரன் திறமை மெச்சலாம் இன்னொரு வரியில் .
பிரிந்தே செல்லும் நதிக்கரை போல் தனியே!
நான் ஒரு இடிதாங்கி , !
அழுதிடத்தானோ கண்களில் நீருக்குப் பஞ்சம் !நானோர் கன்னி !காதலி!! என்ற வார்த்தையாலங்கள் ஒரு பாடலின் தரத்தை புடம் போடுது.

இசையானியின் மென்மையான இசையில் அவர்  தொடங்கிவைக்க சின்னக்குயில் கீதம் இசைக்கும் அழகு எனக்குப் பிடித்தது.

சின்னக்குயில் நம் ராசாவைப் பற்றி  சொன்னது

ஒலிவடிவமாக இதோ பாடல் முழுமையாக!

ஒலி/ஒளியாக படத்தில்  பாடல்காட்சி  முழுமையில்லை  இதையும் ரசியுங்கள்!













தனிமரம்  உங்களுக்கு லக்ஸ்பீக்கர் (குழாய்ப்புட்டு)  பூட்டியிருக்கு ! இது தனிமரத்தின் பண்பலையில் என்விருப்பமாக!