28 June 2018

மொழி என்னும் கைத்தடி!

ஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முகாம்களிலும், வெவ்வேறு ஊர்களில் வாழ்வதும் வரலாறு .

இன்றைய நல்லாட்சி என்ற கோஷங்களும் விடுவிக்காத காணிகள் ,சந்தேக கைகதிகள் என்ற அவலங்கள் எல்லாம் தொடரும் துன்பியல் வலிகள்.  

அது போல நம்மவர்கள் பலர்  இந்தியா /ஐரோப்பிய/அவுஸ்ரேலிய/கனடா என்றும் புலம்பெயர்ந்து பல்வேறு உளவியல் போராட்டங்களுக்கு முகம் கொடுப்பது எல்லாம் நடைமுறை வாழ்வியல்

அந்த வகையில் பாரிஸ் தேசத்தின்  அடிப்படை குறுக்குவெட்டு முகத்தினை பலர் அச்சுவடிவிலும் ,இணையத்திலும் எழுத்தில் வடித்து இருக்கின்றனர்.

 இன்னும் பலர் பல படைப்புக்களை எதிர்காலத்தில் பதிவு செய்யலாம் பல நம்மவர்கள்.

 ஆனாலும் ஒரு நூல் வாசிப்பதைவிட ஒரு காட்சி ஊடகம் மூலம் ஒளி/ஒளியுடன் சொல்லவருவதை திறம்படச்சொன்னால் நிச்சயம் அது பல பார்வையாளர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும் .

 அந்த வகையில் இப்போதெல்லாம் அதிகமான குறும்படங்கள் எம்மவர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தியவாரே பாரிசில் வெளியாகுவதை சமூக தளங்களில் பார்க்க முடிகின்றது இவ்வாறு சினிமா ஆர்வத்தில் இருப்போரும் தனிமரத்தின் கிளைகளில் சில நட்பு வட்டங்களாக முகநூல்களிலும் ,வாட்சாப்பிலும்,டிவிட்டர் ஊடாகவும்  பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்

அந்த வகையில் இவ்வாரம் என் பார்வைக்கு கிடைத்த இந்தக்குறும்படம் நெஞ்சில் முள்ளாக நெருடுகின்றது . பொருளாதார தேடல் என்ற போராட்டத்திற்கு இடையிலும் புலம்பெயர்தேசத்தின் இன்றைய அவசியத்தை உணர்த்தும் இக்கானொளியை நீங்களும் இங்கே காணலாம்!https://www.youtube.com/watch?v=sbapGccRJto&feature=youtu.be

நன்றிகள் யாழவன் ராஜன் அருமையான குறும்படத்தினை முகநூலில் பகிர்ந்தமைக்கு.


குறும்படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்!



------------------------------------------------------------------------------------------------------------------------------------




























21 June 2018

காற்றில் வந்த கவிதைகள்-40

http://www.thanimaram.com/2018/05/39.html


----------------------

அதிகம் பிடிக்கின்றது!
——-////////————-!
தேடல்கொண்ட வாழ்வில்
தேடிப்பெற்ற அன்பின் சகியே
தேடிச்சென்றாய் உயர்கல்வி என்று
தேசம் விட்டு தேசம்!
தேடி வருவாய் என
தேவனின் கோவிலில்
தனிமரம் போல
தேடிக்கொண்டேயிருக்கின்றேன்
தேவதை நீ வருவாய் என!
தேனே தென்பாண்டி மீனே என,
தேடினேன் வந்தது போல
தேர்வில் தோற்றவன்!
தேர்ந்த அரசியல்வாதி போல
தேசியம் விட்டு 
தேற்றக்கணக்கில் தேடியவை 
தேய்மானாமாகச்சொத்துக்கள் பல!
தேசியம் சிரிப்பதை
தேரோட்டி சொல்லியும்,
தேடிக்கொள்ளவே அதிகம் பிடிக்கின்றது!
தேசியக்கட்சியில் இருப்போருக்கு!!
தேய்ந்து போகின்றது
தேர்தலில் வாக்களிப்போர் விகிதம்!

(யாவும் கற்பனை)

——-


எதிர்பார்த்திருப்பேன்!—

-/
பொருளாதார தேடலில்
பொருத்தமானவள் இதயம் துடிக்க
பெரும்சுமையுடன் 
பொருளீட்டச் சென்றவன்!
பொல்லாத தீவிரவாதியாய்
பொஸ்னியச்சிறையில்!
பெற்றவளோ
பொருளாதார மந்திரி போல
பெட்டிகளுடன் வருவான் 
பொறுத்திருங்கள் !நுண்நிதிக்கடன்,
பெருங்கடன் எல்லாம்
பெருங்குடிமகன் தேர்தல் நேரத்தில்
பொழச்சுப்போங்கோ என்று
பெரும்மனதுடன் தள்ளுபடி 
பொருள்வாக்கு தந்திடுவான்!
பெருமையுடன் போட்டிடலாம்
பெருவாரியான வாக்குகள்!
எதிர்பார்த்திருப்பேன்
நல்லாட்சியில் விடுதலைச்சிறை
விரைந்துவந்திடும் என்று!
நாங்களும் பொழுதினை
நாள்தோறும் போற்றுகின்றேம்
எதிர்ப்பார்த்திருப்பேன்
எனக்கும் விடிவு வரும் என்று!
(யாவும் கற்பனை)
---------------------------------------------------------------------------------------
பொறாமை!
வளர்ச்சியை நோக்கி
வடிவம் எடுக்கும் தேசங்களை எல்லாம்
வளர்ந்துவிட்ட பொருளாதாரம்
வழுக்கிவிழ வைக்கும் 
வாய்ப்புக்களின்
வரிசுமையில்க்கூட
வந்துவிட்டது பொறாமை என்னும்
வலைப்பின்னல்!
வாடிப்போனாலும்
வாடிக்கையாளருக்கு 
வரிவிலுக்கு அளிக்க
வசதியான முதலாளிகளுக்கு
பொறாமை
வடிகால் காட்டுவதில்லை!
வாக்கு அரசியலில்
வாத்திமார்களிக்கும் பொறாமை
வளரும் கட்சியையும்,
வசைபாடி  வீட்டிலேயே
வாசலில் வைத்துக்கொள்ள
வாழும் தலைவருக்கும்
வால்பிடிப்போர் வடக்கில் பலர்
வந்துவிட்டார்கள் இனப்பற்றுப் பொறாமையில்!
வரிக்கவிதையிலும் வழுக்கள் உண்டு
வாட்டி எடுப்போர்கள்
வடிகட்டி 
வதனநூலில் லைக்கு என்னும் பொறாமையில்
வந்து போகின்றனர்!
வாருங்கள் பொறாமை என்னும்
வக்கிரபுத்தியை 
வழக்கொழிபோம்!
வட்டலப்பம் சாப்பிட்டு!