23 September 2014

நான் ரெடி! நீங்கள் ரெடியா????

வணக்கம்  தனிமரம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே??

எனக்குப்பிடித்தை என் பாணியில் ஏதோ எழுதும் ஒரு எழுத்தாணிக்கும் எழுதும் தகுதியிருக்கு என்று ஒரு விருதினை நண்பர் அரும்புகள் வலைப்பதிவாளர் திரு பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் வழங்கியிருந்தார் ..விருது பெறுவது சந்தோஸம் எழுதி என்னத்தைக் கண்டாய் என்று கேட்கும் சிலருக்கு நானும் விருது பெற்றதை  ஞாபகப்படுத்தலாம்:))).http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-award.html

 சில விருதுகள் மேலும் மேலும் எழுதும் ஆர்வத்தைத்தரும் இன்னொரு உற்சாக மருந்து என்றாலும் விருதுகள் ஒரு படைப்பை தரமானது. தரமற்றது என்று இடைபோடும் தராசு அல்ல என்று
 விருதுகள் மீதான விமர்சனங்கள் இன்னும் விலகாத மேகமூட்டங்கள்.

 எனினும் பொருளாதார தேடலினாலும் தனிப்பட்ட வாழ்வியல் மாற்றத்தினாலும் இந்த ஆண்டு அதிகம் பதிவுகள் இப்போது தனிமரம்  வலையில் அதன் பதிவாளர்  தி.சிவநேசன் அதிகம் எழுதும் சூழ்நிலையை காலம் தரமறுக்கின்றது :)))

எழுதவில்லை என்றாலும் ஒரு தொடர் மூலம் நண்பனின் நெஞ்சின் பாரத்தை இந்தாண்டு  இறக்கி வைத்து இருக்கின்றேன்.இங்கே

. இந்த தொடருக்கு இந்த விருந்து என்ற எண்ணத்தில் பாண்டியனின் பரிசினை ஏற்றுக்கொள்கின்றேன். பரிசளித்த வாத்தியாருக்கு தனிமரம் நேசனின் நன்றிகள் .

.
விருதின் போது விருது பெறும் பதிவர்/பதிவாளினி இரண்டு கட்டளைகளுக்கு பதில் சொல்லணும்.

 ஒன்று எனக்குப்பிடித்த எழு  விடயங்கள் எழுத வேண்டும் என்பது ஒரு கட்டளை. மற்றது நமக்குப்பிடித்த பதிவர்களுக்கு/பதிவாளினிக்கு இந்த விருதினை வழங்கி ஊக்கிவிக்க வேண்டும்.


 பெறும்  பதிவர்/பதிவாளினி மற்றவர்களுகு வழங்கி தொடர் சங்கிலியை பின்னவேண்டும்:))

கோர்த்துவிட நான் ரெடி நீங்கள் ரெடியா??:)))

அதற்கு முன் எனக்குப்பிடித்த ஏழு  விடயம் பல பிடித்தாலும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமாம்:))))


  விடிகாலைத்தூக்கம் பிடிக்கும்
  விடிந்ததும் பால்க்கோப்பி பிடிக்கும்
  விடியவிடிய பாடல்கேட்கப்பிடிக்கும்
  வியக்க வைக்கும் வாசிப்புப்பிடிக்கும்
விரும்பிய ஊர்சுற்றப்பிடிக்கும்
விதிவழிப்பாதை ஆன்மீகம்பிடிக்கும்
வீட்டில் புட்டுப்பிடிக்கும்:)))
விடுகதை போல சினேஹா பிடிக்கும்!
.

விருதுக்கு நான் அழைப்போர்


அரசியல் கட்டுரைக்கு அண்ணாச்சி-http://maruthamuraan.blogspot.fr/2014/05/blog-post.html
அருமையான் பாடல் நினைவுகளுக்கு இவர்http://www.radiospathy.com/2014/09/blog-post_19.html
அன்பான அதிகாரி அவர்http://nanjilmano.blogspot.fr/2014/09/blog-post.htm

அழகு தமிழுக்கு அம்மு நிலா-http://kuzhanthainila.blogspot.fr/
அருமையான ஆரூடம் இவர்http://ilyas7032.blogspot.fr/2014/09/blog-post.html
ஆனாலும் இன்னும் இருக்கும் இவர் நூல் ஆசிரியர்.http://netkoluvan.blogspot.fr/2014/09/blog-post_20.html

அதிகம் இப்போது எழுதாத அன்புத்தம்பி ராஜ்http://cricketnanparkal.blogspot.fr/2014/08/blog-post.html


அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


 அவர்கள் விருதினை  ஏற்று
அவர்கள் தளத்தில் பகிர் அண்போடு அழைக்கின்றேன்..

20 September 2014

வாழ்த்துவோம் வாரீர்............

வலையில் வரும் பல வாசிப்பில்
வசந்தமண்டபம் வாசகன் யான்!
http://ilavenirkaalam.blogspot.fr/2014/09/blog-post.html
 வரிக்கு வரி வடிவான தமிழின்பால்
 வார்த்தைக்கோர்வையில் பாவில்
 வசியம் வைக்கும்
 வள்ளல் வாழ்வது பல தேசங்களில்
 வாழ்வாதாரத்தில் !



வாசகனாக பலரை 
வாழ்த்துவதிலும் ,பலகூத்துக்கட்டும்
 வடிவான அன்பர் என்பேன் மகியை. !


வாடும் போதெல்லாம் 
வாழ்க்கையின் பாதையில் 
வாடாதே வளர்பிறை மரமே 
வாருங்கள் தனிமரம்
 வலைப்பக்கம் என்று
 வஞ்சனையில்லாமல்
 வருடிக்கொடுக்கும் வாழ்த்துப்பாக்கள் பல
 வந்துகொண்டே வரும்.
 வழியெங்கும் வலைவீசி. 
வாயில்க்காப்போன் போல நட்பில் 
வாஞ்சிநாதன் போல 
வற்றாத தென்மாங்கு பாடும் மகேந்திரன் 
வாழ்வில் இன்று வருடம் ஒன்று 21/9/..
 வயதாககூடினாலும்




!
 வாலிபன் போல வருகிட்டு
 வளித்துச்சீவிய தலைமுடியும், 
வாசணைத்திருநீறும் 
வஞ்சியரை வம்பளக்க வைக்கும்
 வண்ணத்தில் மகியின்
 வண்ணமுகம் அதில் இல்லை
 வஞ்சினம்.


. வாழ்த்த வயதில்லை அண்ணா என்பதால்!
 வணங்கி நிற்கின்றேன் 
வழிகாட்டும் அன்பில் 
வழிப்போக்கன் என் 
வாழ்த்துக்களை .
வாசம்வீசும் தனிமரத்தில்
 வாழைநார் கொண்டு 
வாழ்த்துப்பாவாக வழுக்கில்லாமல் 
வழியனுப்புகின்றேன்!!



 வரும் வருடத்தில்
 வழிகிடைத்தால் சந்திப்போம் ! 

19 September 2014

இளவரசிக்கு வாழ்த்துக்கள்.

கலாய்ப்பதில் கருவாச்சி
 கனிவானவள்
 கற்றுத்தேர்ந்தவள் 

கல்லாதவன் தனிமரம் என்னையும்
 கபடம் இல்லாத
 கதையுடன் அண்ணா என்பாள்!
கடல்கடந்து.
 கவிதையும். கதையும். 
கலந்து எழுதுவதில் என் தங்கை 
கலையும் ஒரு வித்தகி.
http://www.thanimaram.org/2012/04/blog-post_19.html


காகம் போல பறப்பாள் 
கடும் பணி என்று!
 கானத நேரத்தில்
 கடல்கடந்து
 கடிதம் போல கொசுவலையில்
 கருவாச்சி ஏங்கே?? என்றால் 
கருக்குமட்டை எடுத்து வருவாள்!
 கதையில் எத்தனை வழு.
 கணனியில் திருத்தவில்லையோ ??
கடும் தூக்கமோ ?,
கனவில் சினேஹா நினைப்போ??
 கலாப்பாட்டியின்
 கறுப்பு பட்டி காத்து இருக்கு
 கத்தி போல என்றெல்லாம்
 கடிந்து பேசினாலும், 
கங்கை போல பாசத்தில் தங்கை
 கலையும் ஒரு ஆலமரம் .


! கனிதரும் தனிமரம் இவன் 
கண்ணியமான கதை 
கட்டாயம் எழுதணும்
 கற்றவர் சபையில். தனிமரமும்
 கற்றவன் என்று சொல்லணும் என்று
 கதையளப்பாள் முகநூலில்!


 கதை என்று தொடங்கி
 கனியின் முடிவு(நிரோஷாவின்) 
கடைசிவரை சொல்லாமல்
 கருவாச்சி காணவில்லை

 கதையின் முடிவு!
 கண்ணீரில் உருகும் காதலியோ?
 கட்டையில் போனானோ 
காத்திருந்த மாமன்? என்றெல்லாம் 
கற்பனை சிறகடிக்கு! 
கருவாச்சி தொடர் முடிக்காவிட்டாள்.
http://kalaicm.blogspot.fr/2014/05/7.html

கட்டாயம் கருக்குமட்டை 
கடல்கடந்து வந்துவிடும்
 கலைக்கு இன்று கடக்கின்றது
 இன்னொரு ஆயுள்.


! கடல்கடந்து தங்கையை 
கருவாச்சியை அன்போடு
 வாழ்த்துக்கின்றேன் .


எல்லாச்செல்வமும் பெற்று
 இனிதே வாழ்க! 


என்றும் அன்புடன் தனிமரம் ! 
எங்கே கலைக்கு பாட்டு இல்லையா...?,..
என் தேர்வில் இது-

16 September 2014

தேடலும் நினைவுகளும்--2

வணக்கம் உறவுகளே எல்லோரும் நலம்தானே??

 மீண்டும் தேடலும் நினைவுகளுடனும் சந்திக்கின்றேன்.

 இன்று யாரைத்தேடலாம் இவர் பெயர் ஆதித்யன்.

 இசையமைப்பாளர். 90 இன் பிற்பகுதியில் இளையராஜாவின் இலையுதிர்காலத்தில் நானும் சூப்பர்ஸ்டார் என்ற கோதாவில் அமரன் திரைப்படத்தின் ஊடாக தமிழுக்கு வந்தவர்! 

முதல்படத்தில் நடிகர்  கார்த்திக்கை பின்னனி  பாடவும் வைத்தவர் அஸ்லாலைக்கு மெட்டுத்தானுங்கோ! இலங்கை பைலா பாடல் சாயல் இது என்றாலும்  அமரன் பாட்டிலதான் கொட்டிக்காரன் என்றாலும்  குத்தில் பின்னிய பாடல் இலங்கை வானொலியில் நேயர் விருப்பத்தில் விரும்பி காற்றில் ஒலிக்கவிடமுடியாத சூழ்நிலையை அறிவிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளினிக்களுக்கும் ,கட்டுப்பாட்டாளர் பதவி கட்டுப்பாடு விதித்த நிலையை இலங்கை  வானொலி நேயர்கள் அறிவார்கள்.


 பாடல் வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாக இலங்கை இனவாத  அரசின் கட்டுப்பாட்டுக்கு கட்டிப்படவேண்டிய கடப்பாடு கட்டுப்பாட்டாளருக்கு!

அவரும் சூழ்நிலைக்கைதி என்றாலும் அவரும்/அவவும் அறிவிப்பாளர்களாக அறிமுகமுகமாகி பதவி உயர்வு பெற்றவர்கள்

! அவர்களுக்கு பணி முக்கியம் எனக்கு நல்ல பாடல் தேர்வுகள் முக்கியம் (உள்குத்து இல்லை மாகஜனங்களே::::::::)

ஆதித்யன் நல்ல மெட்டுக்கள் போட்டாலும் ஏனோ அதிஸ்ரம் அவருக்கு  கைகொடுக்கவில்லை தமிழ்த்திரையில் .

வந்தவேகத்தில் சிலபடம் சேர்ந்தாலும் சிவலப்பேரி பாண்டி, என்று இசை பின்னிய காலம் வசந்தகாலம்.


 பின் இவர் சின்னத்திரையில் இசைநிகழ்ச்சி செய்து பார்த்து  ஞாபகம்  இருக்கு!

 தலையை பின் வந்த பாடகர்  ஹரிகரன் போல சிலிர்ப்பி முடியை  பின்னிவளர்த்து இருப்பார்!

 இசையமைப்பாளர் என்றால் நெற்றியில் திருநீறு. சந்தனம் .குங்குமப்பொட்டு. வேட்டி என்ற என் கற்பனைக்கோட்டையை சிதறரடித்த முதல் இசையமைப்பாளர் இவர் என்ற என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டியது வரலாற்றுப்பதிவு.  ஆதித்யன் கோட்டு சூட்டில் கொண்டையில் தனித்துவம்:)))!


 இன்னொருவர் இசையில் மற்றவர் பாடும் இசையமைப்பாளர்  வரிசையில்  இவர் S.A .ராஜ்குமார் இசையில் அவருடன்   சேர்ந்து  பூவே உனக்காக படத்தில் பாடிய இந்தப்பாடல் அதிகம் எனக்கும் பிடிக்கும் பேர்த்தி சினேஹா போல் இருந்தாள் ரசிக்கலாம்  ஹீஈஈஈஈஈஈ

!
இவர் புதிய இசை கேட்டால் சொல்லுங்கோ!

 தொடரும்..........................


---------------------------

கனவும் கற்பனையும் காதலி நீ
கடல் கடந்தாலும் வருவேன்
காத்து இரு கதையுடன் 
கன கதை இதுவும்!!
 காலம் கூடினால் விரைவில்!!!!!


09 September 2014

அசலும் நகலும்-2

இசையில் ஒரே  சாயல் அல்லது ஒத்த தன்மையில் பல பாடல்களை நாளாந்தம் வானொலியில் செவி மடுத்தாலும்!



 இன்றைய நவீன தொடர்பாடல் புலம் பெயர் வாழ்க்கை. பல இசையை கேட்க்கும் வசதியும்  நான் பெற்று   இருப்பது என் பாக்கியம் என்பேன்!



  அதனால் தான் இந்த அசலும் நகலும் அசை போடமுடிகின்றது !!http://www.thanimaram.org/2014/02/1.html

எது சுயமான இசை எது காப்பி என்று ! என்றாலும் எந்த மொழியில் இருந்தாலும் அதை தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த தேவா சாருக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!

முதலில் காப்பி இது நம் தல படம்!


இதன் பின்னே இத்தாலி நாட்டு மூல இசை பாடல் இதனை இரண்டாவது பாடலில் கேளுங்க் எது அசல் எது நகல் என்று  நீங்களே உணர்வீர்கள்§


08 September 2014

தேடலும் நினைவுகளும்!-1

வணக்கம் உறவுகளே நலமா?? மீண்டும் தனிமரம் ஒரு நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஆசையில் பாடல் பற்றிய தொடர்பயணம் இது.


வானொலி அறிவிப்புக்கு ஆசைப்பட்டது வாலிபத்தில்!.ஆனால்  அந்த ஆசையில் இனவாதம் தீயிட்டு இலங்கையைவிட்டு இடம்பெயர, புலம்பெயர வழிகாட்டாடினாலும், வாடிப்போகமல் மனசைத் தாலாட்டியது பாடல்கள்தான்!

 .
பல பாடல்கள் என் நினைவில் வருவதுக்கு வழிகாட்டிய தாய் வானொலி இலங்கை வானொலிக்கு  முதலில் ஒரு நன்றிகள்.


.இந்த ஆசைப்படகில் ஏறும் என் பதிவில் எத்தனை எழுத்துப்பிழை வரும் என்று உள்குத்து போட எண்ணும் பண்டிதர்களுக்கு பணிவோடு சொல்வது ஐயா தனிமரம் படிக்காதவன் .பாடல் பிரியன்!! என் வலையில் எனக்குப்பிடித்ததை எழுகின்றேன். ஏற்பதும், தூற்றுவதும் எதுவும் உங்கள் விருப்பம். எனக்குத் தெரிந்ததை எழுதிவைக்கின்றேன் எதிர்கால சந்ததிக்கு ஏதிலிகள் எதுவும் பதிவு செய்யவில்லையே என்ற வரலாற்றுத்தவறினை தவிர்ப்பதற்காக.:)))

சினிமாவிற்கு இசையமைக்கவும், பாடல் பாடவும் ,கவிதை அறிந்து பாடல் எழுதும் கனவுகளுடன் கோடம்பக்கம் வந்து போன சிலரின் நினைவுகள் என்னோடு இன்றும் பாடல்களில் பயணிக்கின்றது .

சிலர் நீங்கள் அறிந்து இருக்கலாம் மறந்து இருக்கலாம் என்றாலும் ஞாபகம் மீட்டுவோம். இசைக்கும் இனிய பாடல்களில் இன்னும் வாழ்வோர் பலர் இணையத்தில் தேடலாம் முகங்கள்.


 செளந்தர்யன் -



 தமிழ் சினிமாவில் இளையராஜா ,சங்கர்-கணேஸ் இருவரும் கோலோட்சிய மேடையில் 90 இன் ஆரம்பத்தில்  தனித்துவமாக இசை மீட்டிய படம் சேரன் பாண்டியன் இதில் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் சக்கைபோடு போட்டது .!



காதலின் பிரிவுக்கு வானொலிகள் தேடும் முதல் பாடலாக வா வா எந்தன் நிலவே  வெண்ணிலவே ஒரு புறம் என்றால்! தங்கை பாசத்துக்கு சின்னத்தங்கம் எந்தன் செல்லத்தங்கம் இன்னொரு புறம். .( நல்லெண்ணை சித்தாரா மீதுதான் கிசுகிசு எல்லாம் ஏன் நமக்கு!)

அதே நேரத்தில் காதல் அரும்பும் பருவத்துக்கு இன்று முகநூல் வழி என்றால் அன்று கடிதம் எழுதிய கடைசித் தலைமுறையின் காதல் கீதம் இது எனலாம்!

 அதுவும் கிராமியக்காதல் பல கருக்குமட்டையாலும்,இயந்திர துப்பாக்கிகளும் இடம் மாறிய கதைகள் இன்னும்  பகிராத படலங்கள் ஈழத்தின் இலக்கியத்தில்.



ஒரே படத்தில் பல சூழ்நிலைக்கு ஏற்ற களம் கிடைத்த போது கச்சிதமாக தன் திறமையை மடைதிறந்த செளர்ந்தர்ஜன் .


பின் நீண்ட காலத்தின் பின் சிந்து நதிப்பூவே படத்தில் இசைராகம் மீட்டி சில பாடல்கள் இலங்கையின் அரச,தனியார்  .பண்பலையிலும் அடிக்கடி ஒலித்தது !




2000 ஆண்டின் பின் வந்த ஆண்டுகளில் அவரின் இசையைக்கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை பொருளாதார தேடலில்.தொலைத்துவிட்டேன் .



இசை ஆர்வத்தை இன்று மீண்டும் தேடிப்பார்க்கின்றேன் என்னிடம் ஏதும் செளந்தர்ஜன் இசை தென்படவில்லை!



 தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லித் தாருங்கள் சின்னத்திரைப்பக்கம் இன்னும் இருக்கலாம் இவரின் முகவரி!


இன்னொரு தேடலுடன் நிணைவுகளும்

தொடரும்.....