20 February 2017

காற்றில் வந்த கவிதைகள்--8

முன்னர் கவிதைகள் இங்கே-http://nesan-kalaisiva.blogspot.fr/2017/02/7.html

வடிவென்பது வாழ்க்கையில்
வந்து போகும் நட்புப்போல தாலி
வரம் என்பது இயல்பில்
வரலாறு போல
வார்த்தை கொண்டு
வடிவமைக்கமுடியாத
வானவில் போல
வா அன்பே சேர்ந்தே
வரைவோம் இல்லறம்!
///

///தொழில்நுட்ப வளர்ச்சியின் 
தொடர் பரிமானம் போலத்தான்
தோன்றினேன் தாயின் கருவில்!
தொப்புள்க்கொடி உறவாய் 
தொலைக்கின்றார்கள் என்னிடம்
தொலைபேசியை தோண்டுவதால்!
தோன்றாமல் இருந்து இருக்கலாமோ?
தொடரும் கேள்வி நெஞ்சில்!///



//வேண்டாம் நீ என்று 
வெறுத்துபோனவன் இப்போதும்
வேண்டும் நீ என்று காத்திருப்பது
வேறுயாரும் காட்டாத 
வேசமில்லாத பாசம் தந்த
வேங்கையே!
/////

எத்தனை இடர்கள் வரும் போதும்
என்னால் முடித்து வைக்க 
எப்போதும் தயாரானவன்
என்ற நம்பிக்கையே!
எந்த அரசியல் வெற்றியையும்
ஏற்றிவைக்கும் மகுடம்!


06 February 2017

காற்றில் வந்த கவிதைகள்...7

முன்னர் இங்கே-https://nesan-kalaisiva.blogspot.fr/2016/11/6.html.

இன்புற்று இருக்கலாம் இணைந்தே என்றே
இருவரும் நேசித்தோம் !
இடையில் இதுவரை புரியாத
இலங்கையின் புதிய தீர்வுத்திட்டம் போல
இன்னொரு தேசம் போனாள்!
இனி என்னை மறந்திடுங்கள் என்பதை
இந்தியச்சினிமா போல
இறக்கிவைத்துவிட்டு!
இந்தாண்டிலும் தீர்வு வரலாம் என்ற
இன்னொரு நம்பிக்கையில்
இன்னும் தனிமரமாக  இவனும்!

////-----



///
////////////////////////////

பொருளாதாரத்தையும்,
பொன்னான பூமியையும்,
பொருளீட்ட நினைக்கும்
பொதுநலவாதிகளிடம் இருந்து
பொறுப்பற்ற தனிமரமாக
 பொதுவெளியில் வாழ்வது
போதுமான தனிமை!

/////
/////////////////////////////////////////////////////////////

///வாகை சூடி வந்துவிட்டான்
வறிய குடும்பத்தில்
வளர்ந்தவன் என்று ! இன்று
வாழ்த்தும் இந்த உறவுகள் !!
வாழ்வியலில் வஞ்சித்த கதைகள் 
வரலாற்றில் அறியாத மாந்தர்களே.
வடுக்கள் தந்த நீமட்டும்
வாஞ்சையுடன் நோக்குகின்றாய்!


/////: