16 November 2011

இதயத்தில் இருந்து உறவுகளுக்கு ஒருவரி.

இன்று பிறக்கும் கார்த்திகை( 17/11/2011தமிழக்கு)மாதம்.

 ஈழத்தமிழர் வாழ்வில் பல மறக்க முடியாத நிகழ்வுகளையும் இன்னுயிர் நீத்த மாவீரர் பரணி பாடும் இந்த  நாட்களில் சில கவிதைகளை சூடவும்.


 உலகநாடுகளிடம் விலைபோகாத தமிழ் இனத்தலைவர் அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் இன்னும் சில பதிவுகள் போட இருந்தேன். ஆனாலும்!

இந்துக்களில் இந்த மாதம் சிறப்பான இன்னொரு மாதம்.

  வீடுகளில் தீபம் ஏற்றும் கார்த்திகைத் தீபத்திருநாள்(விளக்கீடு) வரும் அடுத்த நாள் வரும் சார்வாலய(சொக்கப்பானை) தீபத்திருநாள்.

 வீட்டில் தீபம் ஏற்ற குமிழந்தடி தேடி பந்தம் சுற்றி அழகிய நாட்சாரம் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் தீபம் ஏற்றியதும்.

 கிணற்றடியில் விளக்கு எரிந்து கொண்டிருக்காமல் விரைவில் அணைந்து விடும். என்பதற்காக! தகரவாளியைக் கவுட்ட குறும்பான பாழ்யகாலம் .

அப்போது பார்த்த நேவிக்காரன் விட்ட வெளிச்ச லைட் பற்றிய உணர்வுகள்!

 .மறுநாள் மாலையில் நிலவு வரும் நேரத்தில் கோயில் பிரகாரத்தில் சர்வாலய தீபமாக பட்டபனை மரம் 1/2 வாசியில் சோலைக்காட்டுப் பொம்மைபோல் காவோலை, தென்னோலை சுற்றி அதில் கற்பூரம் ஏற்றிய சொக்கப்பானை பற்றிய நீங்க நினைவுகள்.!

 பிள்ளையார் கதையில் கோயிலில் வடைக்கும் ,அவளுக்கும்,மோதகத்துக்கும் அடிபட்ட சிறுவயதுக் குறும்புகள்.

திருவெம்பாவையில் நண்பர்கள் குழுவாக இல்லாத வீட்டுக் வாசல் படலையில் எல்லாம் நித்திரையில் இருக்கு இளவரசிகளையும், மச்சாள் மார்களையும், துயில் எழுப்ப சங்கூதிய திருவெண்பா கால சுகமான சுமைகள்!

 நண்பர்களுடன் இடம்பெயர்ந்து கொண்டாடிய கிருஸ்மஸ் பண்டிகைகள்.

 நண்பனின் காதலைத் தூக்கியெறிந்து கன்னியாஸ்த்திரியாக போக நினைத்தவள் நாட்டுக்காக்கப் போய் பெட்டியில் வந்தபோது!
 கலங்கிய நினைவுத்தோழிக்குப் பிடித்த பாடல் பகிர்வு .

என சிலதை சொல்ல இருந்தேன்!

 ஆயினும் ஐரோப்பிய கொண்டாட்டங்களுக்கான முன் ஆயத்தப்பணிகளும். ஓடிஓடி ஊழைக்கனும் என்ற கவியரசர் அவர்களின் காத்திரமான கவிதையைப்போல!

 தனிப்பட்ட தேடல் நிமித்தம் இந்தப்பதிவுடன் தனிமரத்தின் சகல செயல்பாடுகளையும் இனிவரும் இரண்டு மாதம் தற்காலிகமாக வலைப்பதிவை இடை நிறுத்துகின்றேன்.!

நேரம் கிடைக்கும் சிறுதுளியிலும் நண்பர்கள் தளத்திற்கு காத்திரமான விடயங்களுக்கு.
 முன்னுரிமை அடிப்படையில்    என் தார்மீக பின்னூட்டத்தையும், வாக்கினையும் அளிக்க முயல்கின்றேன்.

நேசன்-கலைசிவா வலைப்பதிவை. தனிமரம் என்று வலையுலகப் பிரவேசத்திற்கு பின்னனியில் இருந்த இயக்குனர்களில் என் குடும்பத்தின் மூத்த மருமகன், மூத்த சகோதரியும் தந்த ஊக்கிவிப்புத்தான் நான் பதிவு எழுத காரணம்.

 அவர்களின் ஒத்துழைப்புக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் முதலில்.

 என் வலையை தன் தொழில்நுட்பத்திறமையை மற்றவர்களுடன் பொறாமையில்லாமல் பகிர்ந்து. மற்றவர்களையும் காத்திரமான பதிவுகள் தர வேண்டும் என்று பின்னனியில் நின்று ஊக்கிவிக்கும் என் பதிவுலக வழிகாட்டியும், தன் தளத்தில் தனிமரத்தை அறிமுகம் செய்தும்!

 பலவிவாதங்களில் வார்த்தைஜாலம் காட்ட இடம் தந்தவர்கூட. சில கருத்துக்காக மின்னஞ்சலில் முட்டிமோதினாலும். கருத்து பதிவு உடன் அன்றி தனிநபர் மீதல்ல என்பதை பலதடவை நிறுவிய என் நண்பன்.  தமிழிலில் எல்லாவற்றையும் எழுதத் துணிந்தவன்.

 நாற்றின் வலைப்பதிவாளர் திருவாளர் நிரூபன் செல்வராஜாவுக்கு.

 என் பதிவுலகில் இத்தனை (80 கோகுல் +
சேர்த்து) உறவுகளைப் பெற்றுத்தந்து.
உறுப்பினர்கள் (75)


 என்னையும் ஒரு பதிவாளன் ஆக்கிய  உங்களுக்கு என் வெற்றியைப் பரிசாக அளிக்கின்றேன் நன்றியுடன்.

.நன்றி சொல்லி உங்களைப் பிரித்துக்காட்ட விருப்பம் இல்லை என்றாலும் காலம் உணர்ந்து செய்த உதவிக்கு நன்றி சொல்வது தவறல்ல சகோதரா!

 என்தளத்திற்கு அதிக நண்பர்களை இனம்காட்டிய நண்பன் துசிக்கும்,  செங்கோவி ஐயாவுக்கு என் சிறப்பு நன்றிகள்!

  உங்கள் ஊடாகத்தான் பலரை நான் பெற்றேன்..

 எப்போதும் என் பாடல் பதிவுகளில் காத்திரமான பின்னூட்டம்மிடுவதுடன் என் எழுத்துப்பிழையையும் திருத்தும் அன்புச் சகோதரி ஹேமா அவர்களுக்கு நன்றிகள் பலகோடி!

.ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பயணிக்கும்  மைந்தன் சிவா, ,மனோ,ரெவெரி,கந்தசாமி,ஆகுலன் தமிழ்வாசி, விக்கியண்ணா,சி.பி,புலவர் ஐயா விடிவெள்ளி,கனாவரோ,மதுரன், மதிசுதா,மதுரை சரவணன் சண்முகவேல் ஐயா,ரட்ணவேல் ஐயா ரமனி ஐயா கவி அழகன்,கோகுல்,ஐடியாமணி. மகேந்திரன்,அம்பாள்ளடியாள், அன்புத்தம்பி ராச். லோசன், மற்றும் பலர்  என பட்டியல் நீளும்!

 இவர்களுடன் என்னோடு பயணிக்கும்  அனைவருக்கும். தனிமரத்தின் தாழ்மையான நன்றிகள் .கருத்துக்காக சிலருடன் மோதினாலும் அவர்களும் என் நண்பர்கள்தான்.

பதிவுலகில் என்னை ஊக்கிவிக்கவும் சமயங்களில் வழிதவறும் போது தட்டி அடக்கும் யோகா ஐயா, ,காட்டானுக்கு சிறப்பு விருந்தினர் நன்றிகள்.!












. திரட்டியில் இணைப்புக்கொடுத்து என் தொடரை பலரிடம் சேர்த்த என்  அண்ணன் குற்றால மன்னன் நாஞ்சில் மனோவுக்கு விசேட நன்றிகள்(..உங்களை வரும் ஆண்டில் சரி நேரடியாக சந்திக்கனும் தமிழக்கத்தில் மறக்கமாட்டன் ஜின் பாட்டில் ஹீஹீ) 

என் பதிவுகளில் அவசரத்தில் நான் விடும் எழுத்துபிழைகளைத் திருத்திய பதிவாளர்கள் அனைவருக்கும் .


பார்வையாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த நன்றிகள் .



இத்தனைக்கும் பக்கபலமாக இருக்கும் என் மனைவிக்கு இன்னொரு சிறப்புநன்றிகள்.!

 மகனும் பிளாக் எழுதுறான் என்று மற்றவர்களுக்கு பல்புக் கொடுக்கும் என் தாய்க்கு  மொத்த நன்றிகள்.


புத்தாண்டில் புதிய  தொடர் மற்றும் பாடல்பதிவுகளுடன் சந்திக்கும் வரை !

.
நட்புடன் தனிமரம் நேசன்!

மீண்டும் என் வலைப்பதிவு ஊங்களை நாடி வரும் !

எல்லாரின் படமும் சேர்க்க ஆசை பதிவு நீண்டுவிட்டது! உறவுகளே!

ஒரு வாசகன் பார்வையில் ஒரு தொடர்!

ஒரு தொடரில் தான். பல விடயங்களைச் சொல்லமுடியும் என்பதன் மூலம் சிலவிடயங்களை காலத்தின் மீள்பார்வையாக.

 கடந்த சிலவாரங்களாக உங்களை நாடிவந்த நொந்து போன ஓர் இதயம் பற்றி பல வலையுலக நண்பர்கள் பின்னூட்டம் இட்டும் வாக்கு போட்டும் ஊக்கிவித்தார்கள் .

சிலர் இந்த நேரத்தில் நீ தொடர் ஏன் எழுதுகின்றாய் ?உனக்கு பதிவுலக அரசியல் தெரியவில்லை என்ற போது மைந்தன் சிவா சொல்வது போல் போற்றுவோர் போற்றவும் தூற்றுவோர் தூற்றட்டும்! விரும்பினோர் படிப்பார்கள் நேசன்னா என்று நண்பன் துசி பகிர்ந்து கொண்டான் ஒரு வாசகம் .அது  திருவாசகமாக கருதி  வேலைப்பளுவையும் தாண்டி எழுதிய போது எனக்கு மனப்பாரம் குறைந்தது .

நல்ல உள்ளங்களின் பின்னூட்டம் இன்னும் சிறப்பாக்கனும் என்ற ஆவலைத்தந்தது.

 இந்த இடத்தில் ஒரு சிறிய தெளிவைச் சொல்லி விடுகின்றேன்.

 இசை என் மூச்சு நான் கேட்ட பல கருத்தாளமிக்க பாடல்கள் பலரைச் சென்றடையனும் அதை தந்த வானொலிகள் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல விழைந்த ஒரு உத்திதான் கதையில் பாடலைச் சேர்த்தது .

.குத்துப்பாட்டில் பலநல்ல பாடல்கள் மறக்கப்படும் நிலையில் என் மனதில் இருந்த  அறிவிப்பாளர் கனவின் வெளிப்பாடுதான் நான் தெரிவு செய்த பாடல்கள்.

வலைபதிவில் அதிகம் பாடல் ஒலிக்கவிட்டு பதிவு போட்டது அடியவனாகத்தான் இருக்கும்.!

 பாடல்கள் பற்றிய சிலாகித்த ஹேமா,புலவர் ஐயா,ரெவெரி,துஷ்சியந்தன்,மனோ, செங்கோவிஅண்ணாச்சி,யோகா ஐயா  ,கோகுல்,மாயாஉலகம் நிரூபன் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.

தொடரினைத் தொடர்ந்து படித்ததுடன் பின்னூட்டங்களும் இட்ட பல சகபதிவாளர்களில் விதியாசமான சிந்தனையாளன் ஒரு சகபதிவாள நண்பன் இந்த தொடருக்கு. தன் பல வேலைப்பளுவிக்கு மத்தியிலும்  நீண்ட விமர்சனத்தை தந்து இந்த தொடரினை இன்னொரு பரிமானம் கூட்டியிருக்கும் செயல்.

 பதிவுலகில் இது இரண்டாவது முறை  என என்னுகின்றேன். (முதலில் என் பதிவுலக வழிகாட்டி நிரூபன் செங்கோவி அண்ணாச்சியின் மன்மதன் லீலைகள் தொடருக்கு வழங்கிய விமர்சனத்தை  அடுத்து)

  பதிவுலகில் எல்லோரையும் தன் தனித்துவமான எழுத்து நடைமூலம்  இந்த சிறிய வயதில் ஒளிவு மறைவு(பள்ளிக்கூட காதலை) இன்றி பதிவுலகில் காரசாரமான பதிவுகள்  தந்து கொண்டிருக்கும் என் சிறிய சகோதரன் நண்பர்கள் வலைப்பதிவாளர்  திருவாளர் கே.எஸ்.எஸ் .ராச் அவர்கள்  தந்திருக்கும் விமர்சனத்தை இங்கு பதிவு செய்கின்றேன்

பதிவுலகில் ஒரு தொடர் இப்படி ஊக்கிவிக்கப் படுவது இன்னும் பல காத்திரமான தொடர்களைத் தர ஒரு உந்து சக்தி.

மீண்டும் ஒரு இதயம் கனிந்த நன்றி ராச் .அதிக சிரத்தை எடுத்து நடுநிலையுடன் அலசிய உங்கள் விமர்சனப்பார்வைக்கு!

இதோ அவரின் பார்வையில்!


வணக்கம் தனிமரம் நேசன் அண்ணா
கடந்த சில வாரங்களாக நொந்து போகும் இதயம் என்னும் தொடர் மூலம்
மனிதவாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த சோகங்களையும்.வலிகளையும் சுமந்து கொண்டு நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.

இளம்வயதில் வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதலை சரியான முறையில் தெளிவுபடுத்தினால் சிலர் புரிந்து கொள்வார்கள் சில புரிந்து கொள்ள மாட்டார்கள் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் துரோகிகளாகவோ இல்லை காதலைபிரிக்கும் வில்லன்களாகவே தெரிவார்கள் இதனால் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு யோசிக்கும் போது அவர்களுக்கே விளங்கும் தாங்க செய்தது தவறு என்று.வார்த்தையை கொட்டிவிட்டு வருந்துவதைவிட வார்த்தையை கொட்டாமல் இருப்பதே மேல்.

ஆனால் உங்கள் நண்பனின் காதலைப்போல சின்னவயதில் பக்குவம் இல்லாதவயதில் காதலிப்பவர்கள் இதை உணர்ந்து கொள்வது இல்லை.அவர்களுக்கு தங்கள் காதலே பெரிதாக தெரியும்.

நட்பின் வலிகளை மட்டும் இல்லாமல் பல அரசியல் விடயங்களையும் இந்த தொடரில் பகிர்ந்து கொண்டீர்கள்

அதைவிட
மார்க்கெட்டிங் துறைபற்றியும்.வியாபார நிறுவனங்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளின் திறன்களையும் அவர்களின் சாமர்த்தியங்களையும்,அவர்களின் கஸ்டங்கலையும், உங்கள் தொடரில் சிறப்பாக அலசியிருந்தீர்கள்.

தொடரின் நிறைவில் மனதை கவரும் சினிமாப்பாடல்களை இணைத்து இசைமீதான உங்கள் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி அருமையான பாடல்களின் வீடியோக்களையும் பகிர்ந்து ஓரு இசை மழையுடன் இந்ததொடரை நகர்த்திய விதம் புதுமையானது சிறப்பானது.

இந்த உலகில் மாற்றம் ஓன்றுதான் மாறாதது.எதுவும் கடந்து போகும்.எனவே உங்கள் நட்பில் ஏற்பட்ட விரிசல்களும் கடந்து போகும் காலம் எல்லாக் காயங்களுக்கும் மருந்தாகும்..

உங்கள் எழுத்துநடை மிக அழகாக இருந்தது ஆனாலும் சில பகுதிகளில் திரைப்படங்களின் பெயர்களை வசனத்தில் இணைத்து நீண்ட வசனங்களாக எழுதியது வாசிக்கும் போது சலிப்பைத்தந்தது.ஆனால் புதுமையாக இருந்தது.

உங்கள் தொடரில் உவமை கலந்து எழுதிய விதம்.ஓவ்வொறு சம்பவங்களுக்கும் ஓவ்வொறு உதாரணங்களை சொல்லும் விதம் போன்றவை அருமை மொத்ததில் ஓரு சிறப்பான தொடருக்குறிய அத்தனை அம்சங்களுடனும் அமைந்திருந்த இந்ததொடரில் உங்கள் மனச்சுமைகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

நொந்து போகும் இதயம் என்னும் இந்ததொடரை போல பல சிறப்பான பதிவுகளை உங்கள் தளத்தில் எதிர்பார்கின்றோம் ஓரு வாசகனாக உங்களுடன் பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
அன்புடன்\
கே.எஸ்.எஸ்.ராஜ்

15 November 2011

முகம் தெரியாத உறவுக்கு!

14 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-நிறைவுப் பகுதி!

என்ன நானா இப்படி யாருக்கும் தெரியாமல்? என்ன இந்தப்பக்கம் எங்க இருக்கின்றீர்கள்.

 ஒரு தகவலும் ஒருத்தருக்கும் தெரியாமல் போகும் அளவுக்கு என்ன பிரச்சனை ?

"அதெல்லாம் ஒரு  கெட்ட கனவு நடந்தவை எல்லாம் நல்லதிற்கே!

 ஆமா நீ எப்ப நிக்கா செய்தாய்?

  எல்லாம் உங்களால்தான் நீங்க பாட்டுக்கு வாப்பாவிடம் என்னை இடம் மாற்றச் சென்னீங்களா?

 அங்க போன பிறகு தான் என் தவறு புரிந்தது. முதலில் உங்களுக்கு சாபம் கூடப் போட்டன் பிறகுதான் மெல்ல மெல்ல என் படிப்பு விடயம் என் பாதை என்ன என்று அல்லா என் புத்தியில் தெளிய வச்சார் .

எனக்கு கம்பஸ்கூட கிடைச்சது நானா!
 வாப்பாதான் இவரை எனக்குப் பார்த்தார்.!

 உண்மையில் வாப்பா உங்களைப் பார்த்தா சந்தோஸப்படுவார்!
 வீட்டை வாங்களேன்.

 இல்ல பார்த்திமா. நீ இப்படி சந்தோஸமாக இருப்பதே எனக்குப் போதும்.

 நான் இப்ப யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்ல.

 எல்லாரும் வீட்டில் நலம்தானே?

 அல்லா நம்மலகைவிடல இப்ப கொஞ்சம் இடம்பெயர்ந்து ஓடாமல் நெளுக்குளத்தில் வாப்பா, உம்மா, தாத்தா இருக்கினம்.
 நான் பெரிய தாத்தா பக்கத்தில் இங்கே இருக்கின்றன்.

 வீட்ட வரலாம் தானே?

 இல்ல நான் தனிப்பட்ட வேலையாக வந்தன்.
 இன்று இரவே கொழும்பு போறன்.


 . ஆமா நீ பள்ளிக்கூட நண்பர்கள் யாரையாவது பார்த்தாயா?

 வவுனியாவில் என்று இன்னொரு கோணத்தில் கேட்டேன் .இரண்டு தரம் போயிருந்தேன் வவுனியாவிற்கு .


உங்களுக்குத் தெரியுமே! அந்த வெள்ளப் பொடியன் இப்ப சிங்கப்பூரில் கம்பியூட்டர் கோர்ஸ் செய்யிறானாம்.

 நீங்கள் கதைப்பதில்லை என்று உங்க நண்பன் சந்திரன் நானா சொன்னார்
 நானா.

 பார்த்திமா  வெள்ளையன் என்றது ரவியை தன் கடந்த காலத்தை இப்படி பட்டும் படாமலும் சொல்வது எனக்கும் பிடித்திருந்தது.

 சந்திரன் நானா இப்ப ஒரு கடை போட்டு இருக்கின்றர்.

 உங்களைப் பற்றிக் கூட என்னிடம் கேட்டார். எல்லோரும் இடம் பெயர்ந்ததுடன் பலரும் பல இடங்களுக்கப் போயிட்டாங்க.

  நல்ல காலம் உங்களால் நான் ஏற்கனவே பதுளை போயிட்டன்.

  இப்ப எல்லாம் என் நானா நல்ல இருக்கனும் என்று தூவா ஓதுரன்.

" உண்மையில் வாப்பா சொல்லுவார் உங்க ஆலோசனைகள் தனக்கு இன்னொரு வியாபாரத்தை தொடங்க ஆசை ஊட்டும் என்று "

.எல்லாம் நல்லதுசெய்து விட்டு இப்படி இடம்பெயர்ந்ததும் மீளவும் வந்து பார்காமல் இருப்பது நியாஜமா நானா?

 இல்ல பார்த்திமா!  சில சங்கடங்கள் ஆறுதலாக இன்னொரு நாள் வீட்டை வாரன்.

"அக்ரம் கிட்ட மட்டும் இந்த இலக்கைத்தைக் கொடுத்துவிடு. அவனுக்கு எல்லாம் புரியும் படி சொல்கின்றன்.."


பார்த்திமா அந்த வெள்ளையன் எப்படி சிங்கப்பூர் போனான்?

 அவரின் மாமானார் வசதி செய்து கொடுத்தாராம்.

 மாமானார்??!
 என் நிக்கா  முடிந்தது  தெரிந்த பின் அவரும் கலியாணம் முடித்துவிட்டார். இன்ஸா அல்லா!

கடவுளே இந்தச் சின்ன வயதில் இவனுங்கள் திருந்தமாட்டாங்களா?

" பார்த்திமா பார்த்தாயா அம்பிகாபதி ரேஞ்சில் என்னோடு சண்டை போட்டான் இப்ப எந்த முகத்தோடு 23 வயதில் மாப்பிள்ளைக் கோலம் ?

எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.இது வஞ்சகச் சிரிப்போ அல்லது என்னைவிட வயதில் குறைந்தவன் குடும்பம் ஆகிவிட்டான் என்ற போறாமையோ அல்ல .

" சரி பார்த்திமா என்னைச் சந்தித்ததாக வேற யாரிட்டையும் இப்போதைக்குச் சொல்லாத.
 இன்னும் ஒரு வருடம் பின் என் வியாபாரத்தை மீளவும் வவுனியாவில் தொடங்கணும் .

அதுவரை இப்படி கானமல் போனோர் பட்டியலில் இருக்கின்றேன்.

 நானாவின் நிக்காவுக்கு எங்கள் எல்லோருக்கும் அழைப்பு வருமா?

"  நிச்சயமா மரியம் உம்மாவின் வட்டலப்பம் தானே எனக்கு பரிசுப் பொருள்.

 சரிம்மா நான் போயிட்டு வாரன் அவசரம் கொழும்பு போகனும்.

  மன்னாரில் இருந்து வருகின்ற போது மனதில் தங்கள் காதல் பெரிது என்று என் நட்புக்கு இதயக் கதவு மூடிய ரவியின் செயலில் நொந்து போன இதயம்.

 இப்போது நலமாக இருக்கின்றேன் என்று தெரிந்து கொண்டபின் ரவி கடந்த வருடம் முதல் நான் முகநூலில் இருப்பது தெரிந்து கொண்டு.

 மீளவும் நட்புக்கரம் நீட்டுகின்றான். நடந்தவை மறந்து நண்பர்கள் ஆவோம் கூட்டணியில் சேருங்கள் ஆதரவு தாருங்கள் என்று.

 என்னால் சில வார்த்தை ஜாலங்களை மறக்கும் மனவலிமையை தேடுகின்றேன்.

   இன்று மன்னியுங்கள் நண்பன் தானே என்கின்றாள் என்னவள

  மற்ற நண்பர்கள் அவனுடன் இன்று ஒரே மேசையில் இருந்து கொண்டு என்னையும் பிடிவாதம் மறந்து இணைந்த கைகள் போல சேருங்கள் என்று ஆலோசனை கூறுகின்றார்கள்.

 நானே சரி என்று பட்டதை அந்த நேரத்தில் செய்தேன் தவறு என் மீது இல்லாத போது தண்டித்த நண்பனும் அவர்கள் குடும்ப உறவு தேவையில்லை என்று அவன் நட்பினை உறுதிசெய்யாமல் ஒரு வருடங்கள் மெளனமாக இருக்கின்றேன்.

 என் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் உறவுகளே?!


.நொந்து போன இதயம் இன்றுடன் உங்களிடம் இருந்தும் விடை பெறுகின்றது பயணங்கள் பலவிதம்.
 இந்தப் பாடலை என் தெரிவில் கேளுங்கள்.

12 November 2011

நொந்து  போகும் ஓர் இதயம்-24

எப்போதும் வியாபாரம், நண்பர்கள் குழு,  பாடல்கள் தேடும் ஒலிப்பதிவுக் கூடங்களை நாடிச்  சுற்றும் வாழ்க்கைச் சக்கரம் .

ரவியின் நட்புப் பிரிவு ஒரு துயரமான நிகழ்வாகிப்போனது.

 ஒரே ஊரில் வாழ்ந்தும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவன் தங்கை கலியாணத்திற்கும்! என்னை அழைக்கவில்லை.

  உயர்தரப்பரீட்சை ஒரு வித சோர்வுடன் எழுதியதாக அவனின் இன்னொரு நண்பன் என்னிடம் பகிர்ந்து கொண்டான்.

 என்னால் தான் தன் பார்த்திமாவை தொலைத்து விட்டதாகவும் தன் காதல் தோல்விக்கு முழுக்காரணம் என் ஊர் புத்தி என்று சாடியது.

 என்னை இன்னும் சினம் கொள்ள வைத்தது

ஊர்ப்புத்தி என்பதன் மூலம் அவனை மன்னிக்கலாம் என்ற எண்ணத்தில் சந்திரிக்கா அம்மையார் மக்கள் விடுதலை முன்னனியை நம்பி பாராளமன்றத்தைக் கலைத்தது போல் அவனின் நட்பையும் உதறினேன்.

.அரச கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழ் மக்கள் புலிகளின் பக்கம் தான் என்பதை  இனவாத அரசுக்கு  மீளவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் முகத்தில் அறைந்தது.

 வன்னியில் இருந்து நகரசபைக்கு வந்த தொலைநகல் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போகவும் என்ற வாசகம் .

இது காற்றில் மலேசியாவில் அன்வர் இப்ராஹிமுக்கு  எதிரா திரும்பிய பாலியல் குற்றச்சாட்டுப் போல மக்கள் வெள்ளம்  முண்டியடித்து வவுனியாவை விட்டு பலபகுதிக்கும் இன்னொரு முறை  மீளவும் இடம்பெயர்ந்தார்கள். மக்கள்.

 பலர் இந்தியாவுக்கு மீளவும் போனார்கள் சொத்துக்களை விற்று.

 இராணுவ கட்டுப்பாடு என்பதால் பாஸ் நடைமுறையில் தங்கியிருந்த பலர் இதை சாட்டாக வைத்து  காற்றுல்ல போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக .

கொழும்பு வந்து கடவுச் சீட்டு எடுத்துக் கொண்டே ஒரே இரவில் பணக்காரன்  ஆகும் அண்ணாமலை படம் போல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக புலம் பெயர தென் ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் ஓடிய பலரையும் பார்த்த கண்களுக்கு!

  வியாபாரத்தில் மறுபக்கம் மூடியதால் கண்முன்னே சொந்தத் தொழில் தொடங்கி தோல்வியில் முடிந்தது கண்ணீர்க்கதை வைகாசி பிறந்தாச்சு படத்தில் சுலக்ஸனா மட்டும் விட்ட கண்ணீர்கதை அல்ல நானுந்தான்.

அடிமேல் அடி விழுந்தால் வேப்பமரமும் பலகை ஆகும் என்பது போல் இக்காலகட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தோழியான சாலிக்காவும் மரணித்த போது வேதனையைப் போக்க வெண்தாமரை இயக்கம் சாமரம் வீசவில்லை.!

  விற்பனையின் போது யாரையும் நீ யாரு என்பதை விசாரிக்காத வியாபாரி  என்னை பாதுகாப்புக் கண்கள்.

 நான் விடுதியில் சந்தித்த அப்பாவி ஒருவன் குண்டு வைக்க வந்தவன் அவனை நீ இந்த விடுதியில் இந்த நேரம் சந்தித்தாய் என்று என்னையும் பாசச் சங்கிலியில் பூட்ட நினைத்த போது! மாமியார் வீட்டில் விருந்து உண்ணும் மருமகன் நிலையில் நான் இல்லை.

 சட்டத்தின் இருட்டறையில்  பின் கதவாள் ஒழித் தோடிய என் வெளிநாட்டுப் பயணங்களை இன்னொரு கோணத்தின் திரும்பிப் பார்க்கின்றேன் தொடர் பதிவில் எழுதியிருக்கின்றேன் விரும்பியோர் பாருங்கள்.http://nesan-kalaisiva.blogspot.com/2011/02/tirumpiparkirean.html?m=1

பலரும் நிதிக்கம்பனியில் போட்ட காசுடன் ஓடிப்போன நிதிக்கம்பனி முதலாளியைப் போல் என்னையும் இந்த வியாபாரத்தில் மற்றவர்களை ஏமாற்றிவிட்டுப் போன விற்பனைப் பிரதிநிதி என்ற என் பெயரை அந்தப் பகுதியில் உச்சரிக்கும் காலப்பகுதியில் !

கஞ்சி குடித்து வாழ்ந்த   என் மலேசிய வரலாறு தெரியாதவர்கள் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை.

என் குடும்பத்திற்கும் நான் சென்னதில்லை என் துயரங்களை.தொலைத்தொடர் வசதி ஏதும் இல்லாத பயணம்.

 விரும்பிப் போன பாதையில் சீதை தாங்கினாலே துயரங்களை அதைவிடவா என் சோகம்!

அங்கே பலர் வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்து, கொட்டும் மாரிக்காலம் கஸ்ரப்படும் போது.

  நானும் உயிர் தப்ப ஓடிய என் வாழ்க்கையின் நிலையில்.

 எப்போதும் அவசரப்பட்டுச்  செய்யும்
காரியங்கள் எல்லாம் தோல்வியில் முடியும் என்பது போல்  மீண்டும் சாமாதானகாலம் என்ற வசந்தகாலப்பறவையாக தாயகம் திரும்பினேன். ஆனால்!

மீளவும் ஹீரோவாக  நடிக்கத் துடிக்கும் காலம் போன முன்னனி நடிகர் மோகன் போல் என் வியாபார திறமை மூலம் விற்பனைத் பிரதிநிதியாக  புதிய பதவியில் யாழ்ப்பாணத்திற்கு மீளவும் என் சகோதரமொழி மேலதிகாரியின் பணிப்பின் பேரில் வேறோரு பல்தேசியக் கம்பனியில் சேர்ந்து வேலை செய்த போது.

 தவிர்க்க முடியாத பயணமாக மீளவும் மன்னார் போனேன் .

(ஓமந்தை ஊடாக பல நாட்கள்  பயணித்தாலும் ஒரு நாளும் என் இதயத்தில் பதிந்த வவுனியாவில் தரிக்காமல் ஒழித்தோடியது)

அன்று தனிப்பட்ட என் பணியுடன் நான் சந்தித்த ஒரு முக்கியஸ்தர் இன்று உயிருடன் இல்லை .அவரை  சந்தித்த

 பின் நான் எங்கு போனாலும் ஓடிப்போகும் நிம்மதியான ஒரு இடம் தியேட்டர்.

 அயன் தியேட்டரில் தற்செலாகப் பார்த்தேன்  பார்த்திமாவை! என் மடியில் அவளின் 3வது மவன் ராசிம் .

தொடரும்

 //
வெண்தாமரை-சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டம்

) அடுத்த பாகம் நிறைவுப் பகுதி!

11 November 2011

நொந்து போகும் ஒர் இதயம்-23

அசங்கவுடன் எப்போதும் சினேகபூர்வமான நட்பு இருக்கும் எனக்கு.
வறிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கும் அன்று இரவு என் கணக்கில் குடிவகையை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறீனேன்!

 இரவு  கம்பளை புறப்பட்டேன்.

மலையகம் எப்போதும்  தங்களின் துயரங்களை எரிமலையாக  வேதனைகளை மறைத்துக் கொண்டு எப்படி இருக்கின்றதோ! அப்படித்தான் இந்த மலையகத்தின்  பெரும் பாதைகள் .

வலைந்து வலைந்து அருவி போல் ஓடிக் கொண்டு இருக்கும்.





















 அதிகாலையில் வெளிக்கிட்ட பயணம் கம்பளையை வந்து சேரும் போது மாலை நேரத்தை அன்மித்துக் கொண்டிருந்தது .

எனக்காக சகோதரமொழி நண்பன் தன் அறைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தான்.

 ஒரு வார வேலையில் அவனோடு அவனின் அறையில் தங்குவதால் செலவு மிச்சம் ஒரு புறம் என்றாள்!

 விற்பனைச் சிக்கல்கள் வியாபாரத்தில் காசோலைக்கு பொருட்களை வாங்கி விற்பனை செய்து விட்டு பணத்தினைத் தராமல் சக்கரநாட்காளியைப் போல சுற்றவிடும் சிலரின் முகவரிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

 தனிப்பட்ட பினாக்கினால் நிறுவனத்தின் தயாரிப்பை எதிர்கட்சி என்பதற்காக எதிர்க்கும் கொள்கையைக் கொண்ட வியாபாரிகளை.
 இந்த புதிய முகம் மாற்றத்தின் மூலம் சந்தையில் மாற்றம் செய்யலமாம்.

 அதுமட்டும் மல்ல அவர்களிடம் வருமானம் முதல் அரசியல், சினிமா என பலதைப் பேசுவதற்கும் நண்பர்கள் துணை உதவும்.


 என்பதால் அதிகம் அவர்களுடன் பழகுவது வியாபாரத்தின் ஒர் அங்கம்.


 இப்படிப் பழகும் போது நண்பர்களுக்குள் எப்படி எங்கள் கைச் செலவைக் துண்டு விழாமல் நிறுவனத்தின் வளத்தில் ஒதுக்கீடு செய் முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும் .


எங்களையே ஏய்ப்போருக்கு எப்படி ஏய்க்கலாம் என்பதை தெரியாத அளவுக்கு நாங்களும் லால்லுபிரசாத் போல் மாட்டுத் தீவன கணக்கு காட்டுவம்.
  இந்த பல்தேசியக் கம்பனிகளுக்கு.


சகோதரமொழி நண்பர்களிடம் எப்போதும் இன்றைய நாளில் நல்லா சாப்பிட்டம், குடித்தோம். என்பதை தாரக மந்திரமாக ஓதுவார்கள்!

 ஜாலி அவர்களின் ஹாபி.


மலையகத்தில் மழை வந்தாள்  வீதிகள் எங்கும் மண்சரிவும் வீதித் தடையும் தொழிலைப் பாதிக்கும்  அத்துடன் தொலைத்தொடர்புகள் அதிகம் பாதிக்கப்படும்.

 துயரம் சில இடங்களில் தொடர்பே இருக்காது.

 வாகனத்தில் ஏறி எப்படா ஆட்சி மாறும் என்று காத்திருக்கும்  எதிர்க்கட்சி போல் மழை விடும் வரை காத்திருந்து அன்றைய நாளை  திட்டிக் கொண்டே ஓட்டுப் போடும் வாக்காளர் போல்  வேலை முடிந்து திரும்புவது இன்னொரு சவாலான விடயம்

.என்றாலும் நினைத்த அளவு விற்பனையைச் செய்து விட்டால்  அன்றைய இரவு பைலாவுடன் படம் பார்ப்போம்.
 தியேட்டரில். ஆனந்தா தியேட்டரில் பார்த்த படத்திற்கும் இன்று இந்திய நாளிதளுக்கும் என்ன சம்மந்தம்?

 இப்படியான  சந்தோஸங்கள் நீண்ட நாள் நிலைப்பது இல்லை.













இந்த தமிழ் பாடல் இங்கே  .
  ஒரு  வாரம்
போன பயணம் அதிக மழையாலும் விற்பனை தேக்கத்தினாலுன் நானும் 12 நாட்கள் கம்பளையில் தங்க வேண்டிய நிலை. இரண்டாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை மீண்டும் வவுனியாவிற்கு போய்ச் சேர்ந்தேன்.  காலமாற்றம்  ஓடும் வேகம்   இரத்த ஓட்டத்தை விட அதிகம் அதைவிட கொடுமை யுத்த பூமியில் நாம் இடம் பெயரும் துயரம் என் வாழ்விலும் சரி  வவுனியா வாழ் வாசி மக்கள் வாழ்விலும் சரி மறக்க முடியாத ஆண்டு 1999 கார்த்திகையின்  பின் வந்த நாட்கள் !

தொடரும்

10 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-22

நீ ஒரு துரோகிடா! கூட இருந்தே இப்படி குழிப்பறித்துவிட்டாய்.
 ஏன் வீட்டுக்குப் போனாய்? நீ மனிதனே இல்ல நான் லவ்பண்ணினா உனக்கு என்னடா?

 என்று சகோதரமொழியில் மூன்றாம்தரமான வார்த்தைகளை நிலைகெட்டு தூற்றிக் கொண்டிருந்தான் ரவி.

"  .எனக்கோ சிரிப்பு ஒரு புறம் அவன் மீது பரிதாபம் இன்னொரு பக்கம்."

 சிரிக்காத உன் சிரிப்பே வஞ்சகச் சிரிப்பு. கடைசியில் என்னை இப்படி பார்த்திமாவை தேடும் படி விட்டு விட்டாய்.

" நீ என்ன சொல்கிறாய்? பார்த்திமா எங்க என்றேன் இயல்பாக தெரியாதது போல்

  நீ நடிக்காத.
 "உன்னைமாதிரி எனக்குப் பொய் சொல்லத் தெரியாது.

 ஏன்டா நீங்கள் எல்லாம் இப்படி இருக்கின்றீர்கள்.

 எங்கள் உணர்வு உனக்கு விளையாட்டாப் போச்சோ?

 "இங்கபார் ரவி நீ இப்படி எல்லாம் ஏன் குழம்பிப்போனாய்.

எனக்கும் உனக்கும் என்னடா பிரச்சனை .படிக்கின்ற வயசில் இந்த நிலை கூடாது மற்றும் படி பார்த்திமா விடயம் எனக்கு ஏதும் தெரியாது.

 உன் பிரட்சனையில் ஏன் நான் தலைபோடப்போறன். நீ போறவழி பிழை என்று ஒரு நண்பனாக தடுத்தன்.

கேட்கும் நிலையில் இல்லாத போது அம்மாவிடம் கண்டிக்கச் சொன்னன் .அவங்க என்னைத் திட்டினாங்க .

சமாதனப்படுத்த வேண்டிய நீயே இப்படி மூன்றாம் தரமான சகோதரமொழியை உமிழ்வது வேதனைடா!

 நான் இந்த வார்த்தைகளை வியாபார ரீதியில் உதிர்க்கும் போது கூட சங்கடப்படுபவன்.

 நீ நல்ல நண்பனாக இருக்கனும் என்று எதிர் பார்த்தேன் சீச்சீ நீயும் என்னை ஒழுங்காப் புரிஞ்சுக்கிடலையே.

 இப்படி ஒருத்தனோட பழகியதை நினைச்சு இன்னொரு கிளாஸ் ஜின் அடிக்கனும்.

 போடா போய் படிச்சு  நல்ல குளிர் அறையில் இருந்து சம்பாதிக்கப் பாரு.

  காதலிக்கலாம் எத்தனை வயசிலையும் .படிப்புப் போனால் முடியாது மச்சான் புரிஞ்சுக்க!

" நிதானமாக ஜோசி அம்மா உன்னை ரத்தரங் பட்டியோ என்றாங்க பாரு!

 அந்த நம்பிக்கையைச் சரி காப்பாற்றப்பாரு.

 என்னை விட்டா உனக்கு இன்னும் ஆயிரம் பேர் வருவாங்க.  வேனும் என்றாள் ஒரு பீர் அடித்து இச்சைக்   காதலை இன்றுடன் விட்டு விடு.

  வார்த்தைகள் தடித்து விட்டால் மீண்டும் ஒட்டவைக்க இது ஒன்றும் சைக்கிள் ரியூப் கிடையாது நட்பு. என்னாலும்  மும்மொழியிலும் உன்னுடன் மூர்க்கமாக பேசமுடியும் என்பதைக் கூட மறந்து போகும் அளவுக்கு நீ தடுமாற்றத்துடன் இருக்கின்றாயே!


 இதில் இருந்தே தெரியலையா அம்பஜாலுவக் கியன்னே மொக்கத்த கியல!

 உனக்கெல்லாம் என்னடா தெரியும்? துரோகி,குழிபறிப்பவன் பற்றி!

 வார்த்தைகளின் தாற்பரியம் தெரியாமல் வாயில் வாரது எல்லாம் பேசுவதா .

வாழ்க்கையில் இன்னும் படிப்பு முடிக்கவில்லை. வேலைதேடவில்லை. ஆனால் காதலி மட்டும் தேடுவீங்க.

 நீங்களே ஒரு தனித்துவமகா இல்லாத போது!

 இன்னொரு அன்னக்காவடியையும் தூக்கி வீட்டுக்கு பொறுப்பை அல்லவா கூட்டுறீங்க.

 போடா ரவி போய் எந்த நடிகர்  எந்த நடிகைக்கு சோப்பு போடுகின்றார் என்று காலத்தை ஓட்டுங்க.


 நாட்டின் நிலை என்ன? வேலைவாய்ப்பு பற்றி ஆராயாதீங்க!

 போடா டேய் உன்னுடன் பேசி என் வியாபாரத்தை கெடுக்க விரும்பவில்லை.

 புரிந்தும் புரியாததுமாக வேகமாக வந்தவன் என்னுடன் கதைத்து ஏதும் நடக்கப் போவது இல்லை என்பதை உணர்ந்தவன் போல்!

இனிமேல் நீ நண்பன் இல்ல. உனக்கும் ஒரு காதல் வந்து இப்படி அல்லாடும் போது என் உணர்வு தெரியும்.

" நீ நல்லா இருக்கமாட்டாய் தனிமரம் உன்னைமாதிரி ஒருத்தனை சந்தித்தது என் கஸ்ரகாலம்.

 உன்னை இனி சந்திக்கக் கூடாது எனக்கு எப்படி பார்த்திமாவை தேடுவது  என்று தெரியும் !

. ரவித் தம்பி! உன்னை மாதிரி எல்லாம் நான் இல்ல சாபம் போடாமல் போய் படி!

போதையில் போவோர் போல தளர்ந்த படி தன் சைக்கிளில் அங்கிருந்து கடந்து போனான்.

 அப்போது அருகில் தியேட்டரில் இருந்து ஒலித்தது. இந்தப்பாடல்

 அவன் போன பின்னாடி அசங்க வந்தான் இவன் சாலிக்காவுடன் பணியில் இருக்கும் நண்பன்.vain

தொடரும்!

////:////

ரத்தரங்க பட்டியோ
-தங்கமகன் என்று செல்லமாக/பாசமாக சொல்லும் சகோதரமொழி வார்த்தை.
அம்பஜாலுவக் கியன்னே மொக்கத்த கியல- இனைபிரியாத நண்பர்கள் என்றால் என்ன வென்று சொல்வது!
(இந்தவார்த்தைக் கோர்வை சகோதரமொழியில் மிகவும் புனிதமான இலக்கிய இலக்கனம்.)

09 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-21

பலரும் தியேட்டருக்குள் போவது என்றால் படம் பார்க்க என்று நினைப்பார்கள் !சிலருக்குத்தான் தெரியும் அங்கே இருக்கும் மதுபானக்கடை.

 இங்கு சிலரை பாராளமன்றத்தில் ஓட்டுப்போட சூட்கேஸ் கொடுப்பது போல நம் வியாபார பொருட்களை வாங்க மறுக்கும் நிறுவனத்தின் கணக்காளர்கள் பலர்  இங்கு இரவில்  வருவார்கள்.

அவர்கள் மதுபான தெப்பக்குளத்தில் இராமனால் பதவி பெற்று அவனுக்குக் கொடுத்த வாக்கு மறந்து  அரச அந்தப்புரத்தில் மது மயக்கத்தில் கிடந்த சுக்ரீவன் போல்!
 போதையில் இருப்பார்கள்.

 அப்போது அவர்களுடன் ஒரு கிளாஸ் சாரயத்துடன் எங்கள் பேரம்பேசும் திறமையை தொடங்கி.

     இன்னொரு கிளாஸ் குடியுங்கோ !நான் பில் கொடுக்கின்றேன். என்று தூண்டில் போட்டு எங்கள் வியாபாரத்தின் பொருட்களை மறுநாள் அவர்கள் நிறுவனத்தில் 2g  அலைவரிசை போல் கொடுத்து விடுவோம்!

 இதெல்லாம் ஒரு வியாபார உத்தி நாங்கள் இதில் ஊறிப்போன உத்தமர்கள்!

என்னிடம் சில நாட்களாக அவியாத ஒரு கணக்காளர் திலகத்தை இன்று தண்ணிகாட்டும் முடிவுடன் தான் அவரைக்கான அவர் வரும் முன்னாடியே போய் இருந்தேன்.

 இங்கு இராணுவத்தார் வருவதால் பலர் நேரகாலத்துடன் தங்கள் அளவுக்கு ஏற்ப சுருதி சேர்த்துவிட்டுப் போய் விடுவது !

என்ன நேரத்தில், எங்கே? எப்போது ?துப்பாக்கிச் சன்னங்கள் முத்தம் இடும் என்பதை அறியாமுடியாத பயத்தினால் .

இராணுவத்தினர் சிலர் தமக்கு வரும் இலவச சாரயத்தை இங்கு கொடுத்து காசு வாங்குவார்கள்.

 சில கழிவுக்கள் போக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும். அவர்களிடம் வாங்கியே அவர்களுக்குக் கொடுக்கும் நிலையும் இருக்கும்.


 இப்படியான சமயத்தில் மற்ற நண்பர்களை கழற்றி விடுவது !விற்பனை ரகசியம் வெளியில்  தெரியக் கூடாது என்பதால்.

நான் காத்திருந்தது போலவே அந்த நபரும் வர அந்தி மாலை இனிய தாகத்துடன் தொடங்கியது.

 என் வேலையும் நீண்ட மூளைச் சலவையின் பின்  ஒரு போத்தல் ரைஜின் தீர்ந்து போனது

 ஜின் குடித்தால் யாரும் விரைவில் கண்டுபிடிக்க மாட்டினம். வாய் மணக்க மாட்டு என்பதால் விலை அதிகம் என்றாலும் வேலை முடியவேணுமே!

 இந்த வேலையில் இப்படியான உள்ரகசியம் எல்லாம் நிறுவாகத்திற்குத் தெரியும்.

 இப்படியான சித்து விளையாட்டைக் கண்டு பிடிக்கத்தான்.

  ஒவ்வொரு மாதமும் ஒன்று கூடல் வைக்கும் போது முதல் நாள் இரவை பார்ட்டியில் தொடங்கி வைப்பது.

 குடியே தெரியாத பால்குடிகள் எல்லாம் கொக்கா கோலாவுடன்  கலந்து இருப்பது  சாரயம் என்று   புரியாமல் கோலா என்று குடிப்பார்கள்.

 பின் நடக்கும் நாடகங்கள் பல !

மூத்தவர்கள் யார்? யார்? எல்லாம் என்ன தில்லு முல்லு செய்தார்கள் என்று ஒற்றர்களாக மேலதிகாரிக்குப் போட்டுக் கொடுப்பது,.ஒரு தொழிலாக இருக்கும்.


 சகோதரமொழி நண்பர்கள் இந்தப்பார்ட்டி எப்படா நடக்கும் என்று காத்திருப்பார்கள்!

 அன்று குடிவகைச் செலவு எல்லாம் நிறுவனத்தின் பொறுப்பாக இருப்பதாலும் அதிகமான வெப்பமான பகுதியில் வேலை செய்வதாலும், இன்நாட்களின் மூக்கு முட்டக் குடித்துவிட்டு.

 ரபான் தளம்போட்டு பாடும் போது அவர்களும் ஒரு பின்ஸிரி பீரிஸ்,ரூக்காந்த குனதிலக்க நாமல் உடுகம என பாடகர் பட்டியல் நீளும்!


 ஆலாபனைக் காட்சியைப் பதிவு செய்ய அன்நாட்களில் கைபேசியில் கமரா இல்லாதது  ஒரு குறையே!

 இங்கு நடக்கும் செயலைப் பார்த்து விற்பனைப்பிரதிநிதி வேலை வேண்டாம் என்று ஓடிய பலரையும் பார்த்தவன்!

இங்கு நடந்த பல சுவையான விடயங்களை பல பதிவு போடமுடியும் .சில  வருட சுகமான வாழ்க்கையில் எத்தனை பேர்களுடன் எத்தனை நட்சத்திர விடுதியில் பல நண்பர்களைப் பார்த்தவனுக்கு இப்படி ஒரு ரவி வந்தானே!

 என்ற ஜோசனையில் இருக்கும் போதே என்னைத் தேடிச் சைக்கிளில்l  ரவி வந்தான் அந்த தியேட்டர் மதுபானசாலைக்குள்!


தொடரும்

-//////
ரபான் -சிங்கள இசையில் பிரதான தோல் வாத்தியம்.