05 October 2018

தலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று!

ஈழத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது .என்றாலும் இனவாத/மதவாத/பிரதேசவாத போட்டிகளுக்கும்,பொறாமைகளுக்கும் இடையே ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பவை குறிப்பிட்ட சில படைப்புக்கள் என்பது ஒன்றும் புதியவிடியம் இல்லை எம்மவர்களிடம்

ஒரு சிலதூரநோக்கு  சிந்தனைகள் அத்தி பூத்தாற்போல ஒருவருக்கு மட்டுமே வயப்படும் . அந்த கருவினை சொழிமையுடன், திரைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான பணி !அதுவும்  பெண் என்பவளின் திரைப்பயணம் ஈழத்து சினிமாவில் நிறைய தடைகளைத்தாண்டி வெளிவருவது என்பது தலைமுறைமாற்றம்

குறும்படத்துறையில் சாதனைகள் என்பது ஆத்மபூர்வமான நட்புகளின் அன்புக்கரத்தினால் மட்டுமே! வெட்டி ஒட்டும் பூச்செடி போல துளிர்க்கமுடியும் !அதுவும் தலைமுறை மாற்றம் என்பது வடகிழக்கில் மட்டும்மல்ல சகோதரமொழி சிங்கள இனத்திலும் துளிர்க்க வேண்டும்  விரைவில்.மொழிகள் கடந்து ஈழத்திலும், இலங்கையிலும்  இவற்றை பார்த்து வளர்ந்தவர்களில் தனிமரமும் ஒருவன்.))). 

ஈழத்தின் வடக்கு பேச்சு வழக்கு என்பது தனித்துவம்மிக்கது! அதை தென்னாலி பட இந்திய சினிமாவின் சாயலில் திரைக்கதையை  நீர்பாச்சாது சாதாரண வடக்குமக்களின் யதார்த்த உலகை நிஜமுகத்துடன் பதிவு செய்வது வரவேற்கப்படவேண்டியவிடயம்.


 சொல்ல வருவதை காட்சிகளின் பேச்சு மொழிகளில் ஊடாக தலைமுறை மாற்றம் நிதர்சனத்தினை தீப்பிழம்பு போல கொதிக்கின்றது  . 

இயக்குனர் புதிய தலைமுறையாளர் என்பதால் உசுப்பேத்தும் ஆர்வம் இல்லை என்றாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை !ஒவ்வொரு புக்களுமே சொல்கிறதே சினேகா பாட்டு போல தேர்ந்து எடுத்த நட்சத்திரங்கள் இன்னும் தலைமுறையை அழகுபடுத்தியிருக்கின்றார்கள்.

கதையின் கருவை சிதைக்காது , ஆர்ப்பாட்டம் இல்லாத இசை  அழகே அழகுஇயற்க்கை காட்சி ஒளிப்பதிவு மீண்டும் வேலிகள் தாண்டாத ஈழத்தின் குறும்பு ஆனந்தம்  போல இடையிடையே இயக்குனரின் நம்மூர் வானொலிகளின் இன்றைய முகத்திரையையும் சற்றே விளாசியிருப்பதையும் பாராட்ட வேண்டும்  ஐஸ் சூப்பும் வானொலி நேயர் தனிமரம்!)))





என்ன ?தனிமரம் தலைமுறை மாற்றம் என்று புகழ்கின்றதே என்று நீங்கள் சிந்திப்பது புரிகின்றது.!

ஓம் இன்று இணையத்தில் வெளியாகி இருக்கும் தலைமுறை மாற்றம் குறும்படத்தினை காணும் வரம் பெற்றேன். அந்த மகிழ்ச்சியை வலையில் உங்களுடன் கொண்டாடுகின்றேன்

வாருங்கள் சேர்ந்தே காட்சியை காணுவோம்!அதுக்கு முன் வானொலி விளம்பரம் போல)))

படக்குழுவினர்களுக்கு அன்பான ,நேசமான, தங்கப்பதக்க வாழ்த்துக்கள் அள்ளி இறைக்க ஆசை .என்றாலும்! ஏதிலியின் அன்பு வாழ்த்துக்களே தகரக்கேட்டுக்களை தாக்கி ஈழத்து சினிமா வரலாற்றில் இன்னும் இயக்குனர் சாதனை புரிய ஆசிகளும் ,பாராட்டுக்களும்!)))))




படத்தினை பார்வைக்கு தொடுத்த முன்னால் நண்பர்கள் வலைப்பதிவரும்(கிஸ் ராஜ்) /வளர்ந்து வரும் ஈழத்து குறும்பட பன்முகநட்சத்திரம் அன்புத்தம்பி ராஜ் அவர்களுக்கும் நன்றிகள்!

------------------------------------

படத்தினை காண இங்கே அழுத்தவும்!





01 October 2018

காற்றில் வந்த கவிதைகள்-42

http://www.thanimaram.com/2018/07/41.html


தள்ளிப்போகாதே!

—-
திட்டம் என்றும்
தீர்வு என்றும்
தீர்வுப்பொதி என்றும்
தில்லாங்கடி வேலையில்
தீர்வு இன்றியே தீர்மானம் இல்லாத
தீர்க்கவியலாத கூட்டணிகள்
தினமும் கூவுகின்றது
திட்டித்திட்டி இதோ 
தினமும் ஊழல் வருவாயில்
திண்ணையில் அவுடிக்கார் 
திறந்து பார்த்தாள் சட்டத்திருத்த 
தீர்வுக்கு இன்னும்
தினமும் கழுவுகின்றோம்
தீர்த்துவைப்பாய் நீயே என்ற
திவிரவாத அரசியல்வியாபாரிகள்
திருமுகம் தினமும் நாளிதழ்களில்
தித்திக்கும் சிந்தனைப்பதவி
திவிர தமிழ்த்தலைவரிடம் தள்ளிப்போகாதே
திருகோணமலை விவகாரம் எல்லாம்
தீப்பொறி போல செய்தி என்று
தினம் ஒரு சந்திப்பூ என்று
தினத்தந்தியில் திமிருடன் பேச
தில் இல்லாத கோழையை தந்தான்
திக்கெட்டும் புகழ்பூத்த தூய
திங்கள்ப்புதழ்வன்!
திட்டுவோர் தமிழர்வழிவந்த
தியாகிகள்!


(யாவும் கற்பனை)
——



தேனும் பாலும் ஓடும்
தேர்தல் வந்துவிட்டது
தேசியத்தலைவர் கைகாட்டிய
தேர்தல் சின்னம் இது
தேர்ந்தேடுங்கள் எம் ஜனாதிபதியை
தேர்தல்விளம்பரம் போல
தேர்தல் பரப்பினையில்
தேசவிரோதிகள் எல்லாம்
தேர் இழுத்தார்கள்
தேற்றிக்கொள்ள முடியும் நல்லாட்சி
தேசியச்சிறையில் இருப்போர் எல்லாம்
தேர்தல்வாக்குக்கள் போல
தேசிய சின்னத்தில் விடுதலையாவார்கள் என்ற
தேசமக்கள் ஏமாற்றம் எல்லாம்
தேய்ந்து போனது 
தேய்பிறை நட்சத்திரம் போல
தேய்ந்து போகும் நல்லாட்சி முகத்தில்!
(யாவும் கற்பனை)





///எழுத நினைத்த ஒரு தொடர்
ஏதிலிக்கும் ஏனோ!
ஏதுமற்ற  வருமானம் என்ற 
எல்லைக்கோடு என்னையும்
எடுத்துவந்த காவடி 
என்னையும் தள்ளிவிட்டது!
ஏன் இந்த அவசரம்!))
ஏற்றம் என்ற சபரிமலை விரதம் முடித்து!

ஏற்றி வருவேன் தனிமரம் வலையில்
எல்லோரும் போற்றும் 
என்னவளே சினேஹாபோல
ஏதிலியுடன் என்றும் சேர்ந்து இருப்பீர்கள் 
என்னிடம் இல்லை ஏட்டுக்கல்வித்தகுதி!))
என்னிடம் சொல்லாயோ







எதிர் பாருங்கள்!

03 September 2018

யாசிக்கும் ஏதிலி- மின்நூல்!

வணக்கம் உறவுகளே நலம் தானே

கொஞ்சம்  பதிவுலகம் எல்லாம் எப்படி இருக்கு என்பதை கண்டுகளிக்கலாம் என்று ஓடோடி வந்தேன்!)))ஒரு சிறிய சோம்பல் நீக்கி .

உங்களுடன் இணையத்தில் சந்திப்பது மகிழ்ச்சி.

கடிகார மனிதர்கள் படம் போல வாழ்க்கை என்னும் வீடுக்கனவுடன் பொருளாதார தேடலில் புதிய வேலை தேடும் படலம் சில மாதங்களாக தொடர்கின்ற கதை எல்லாம் விரைவில் உங்களுடன் பகிர ஆசை !என்றாலும் எப்போதும் ஒரே சினேஹா முகாரி பாடும் உன் கதை கேட்டுச்சலித்துப்போச்சு என்றவர்களுக்காக !

இதோ புதிய அவதாரம் போல யாசிக்கும் ஏதிலி மின்நூல் வடிவத்தில் உங்களை நாடி வந்துவிட்டது.)))) https://thanimaramnesan.pressbooks.com/

இனி தொடர்கதை வாசிக்காதவர்கள் மின்நூல் வாசித்து உங்களின் உள்ளக்கிணற்றில் இருந்து எழும் கருத்துப்புயல்களை தனிமரம் நோக்கி வீசுங்கள் .


என் எழுத்துப்பணிக்கும், அடுத்த படைப்புக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்ற  ஆவலுடன் என் தாழ்மையான வேண்டுகேளுடனும் உங்களை யாசிக்கும் இந்த ஏதிலியின்  இன் மின்நூல்களை பலரிடம் சென்று சேர்க்க வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் 
உங்களின் 
சினேஹா அபிமானி தனிமரம் நேசன்!))))

விரைவில் அடுத்த மின்னூல் பற்றிய பகிர்வுடன்!





தனிமரம் வருவேன் என்ற தேர்தல் வாக்குறுதி போல அல்லாது செயல்வடிவில் உங்களைச்சந்திப்பேன்.!




நட்புடன் தனிமரம்,
பாரிஸ்.





18 July 2018

காற்றில் வந்த கவிதைகள்-41





லைய மறுக்கும் கனவு!
—-
ஏதிலியின் இதயத்துக்கும்
ஏனோ காதல்  ஏற்றம் கட்டி
ஏர் பூட்டி ஊழுவது போல
ஏழ்மையில் ஏக்கம் தந்தவளே!
ஏனோ இன்னும் தராத
ஏகாபத்திய தேசங்களின்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு போல
ஏழை என்னையும் இழுத்தடித்து
எல்லோரிடமும் கையேந்தும்
எங்கநாட்டு காணமல்போனோர் விடயம் போல
ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரிகள்
எல்லோரும் இருக்கும் கதிரையில்
ஏளனம் பேசும் பாராளமன்ற மேடை போல
எல்லோரும் நேசிக்கும்
ஏட்டுக்கல்வித்திறமை
ஏனோ உன்னிடம் இல்லை!
ஏதிலிக்கு எப்போது வரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வதிவிடவிசா?
என்றெல்லாம் நீ சூட்டிய!
என்றென்றும் புன்னகை போல
ஏனோ சிரித்த பார்வையில் தான்
ஏதிலியும் இன்னும்
எழுதுகிறேன் பல தொடர்கள்!
என்னவளே நாயகி நீ என்ற
எடுகோலில் என்றும்
ஏக்கம் 
கலையாற மறுக்கும் கனவு போல
என்னுள் வந்த உன்னை நினைத்து!
(யாவும் கற்பனை)



////தேயாத வெண்ணிலா!

—-
இனவாத மேகங்களும்
மதவாத தூறல்களும்
ஊழல்கள் என்னும் சுழற்காற்று
ஊழிக்கால மண்சரிவு போல
இயற்க்கையின் வளர்ச்சியில்
இன்னும் இன்னும்
இலங்கை என்ற தேசத்தின்
இதயக்கமலத்தில் மின்வெட்டுப்போல
இடறிவிழுகின்ற போதெல்லாம்!
இறையாண்மை என்ற தேயாத வெண்ணிலா
இசைந்தாடும்  தென்றலாய் !
இன்னும் இருட்டறைக்கைதிகளுக்கு 
இருவிழிகளில் தருசனம்
இனியும் வருமா தேயாத வெண்ணிலாவே
இருகரம் கூப்பிக்கேட்கின்றேன்
இன்னுயிர்க்காதலியே?!!!

(யாவும் கற்பனை)//

///
விளம்பரங்கள் இங்கே
 விரும்பம் இல்லை என
விரும்பாமல் போவோரினால்
விருப்பப்பக்கம் வீழ்ச்சி காணும்
விலைச்சுட்டென்  இலங்கை போல
விருப்பங்கள் விரும்பாமலே
விண்ணைத்தாண்டி வருவாயா என
விழிகள் நோக்கும் 
விடுமுறை விருப்பங்கள் தொலைந்து
வீட்டுக்கொரு கணனி 
விளையாடும் விருப்பு வாக்கு நாடி
விளம்பரம்செய்தவர் இன்றைய
வீட்டின் தலைவரிருடன்
விருந்தோம்பல் செய்வதும்
விரைவில் வரும்
விடுதலைத்தீர்வு என்று
விளக்கம் கொடுப்பதும்
விடியவிடிய கேட்ட கதைகள் எல்லாம்
விட்டில்பூச்சி போல
விதைக்க ஆசை !



விரைவில் வந்திடு
விளக்கு எரியட்டும் 
விளக்கம் கேட்டு முகநூலில்
விழித்திருக்கின்றேன்!



விதாணையார் வேலைக்காரன்!
(யாவும் கற்பனை)