19 April 2017

காற்றில் வந்த கவிதைகள்-13

முன்னர் கவிதைகள் இங்கே--http://www.thanimaram.com/2017/03/12.html//

இனி உள்ளே---------------//
இணைய வானொலிகளுக்கு நன்றிகளுடன்
இவன் ஏதிலி தனிமரம்!

-------------------------------------------------

இனவாதம் நாஸ்வரம் பொதுவில் ஊத,
இங்கு காவி வேட்டி வேஷத்தில்
இருப்போருக்கு  வெண்தாமரை போல
இறைத்துக்கொடுக்கும்
இன்னும் வாக்கு வங்கியும்,
இதர பல சலுகைகளும் .
இதுவல்ல தீர்வு என்ற
இறுமாப்பு கோஷங்கள்
இங்கு மீண்டும் மீண்டும்
இலக்கியத்திலும் ,அரசியலிலும்
இருக்கும் வரை மீண்டும் மீண்டும்
இன்னல்லகள் தொடரும்!








///

வார்த்தைகள் இல்லாதவன் கவி வடிக்க வந்தேன் ஆசையுடன் !
நீயோ செவிப்புலன் இல்லாத நங்கை என்று
சைகை செய்கின்றாய் !///

---------------------------------------

வியாபாரம் என்ற வேர்வை சிந்தி
வியாப்பித்து பெட்டிக்கடை முதல்
விளம்பரத் துறைவரை 
விறுகொண்டெழ வழிகாட்டிய
விளைநிலம் உன்னைப்பணிந்து!


விதிவழி தொலைந்த 
வியாபாரி மகனை தேடுகின்றேன்
விம்மலுடன் !
விசாரித்ததில் விடலைப்பையன்
விழிகளில்  விழுந்த
விதானையார் மகளும் 
விரும்பி ஓடியதாக
விசர்க்கதை பேசிய விடிவெள்ளிப்பொழுதில்
விரைந்துடுவீர்  ஒருகுரல் விரைவாக 
வீரகேசரி வீதியில்
விரட்டிப்பிடிக்கலாம் 
வியாழமாற்றம் வரும்முன்னே )))
விற்பனை அதிகாரி என்ற 
விறுமாப்பு நிழல்  நட்புக்கள் 
விதர்ப்ப நாட்டு இளவரசன் போல
விசிறிகள்   அல்ல
விட்டில்ப்பூச்சிகள் 
விதைக்கும் தொடர்  !
விளையும் பயிருக்கு  உரம்போல
விழுந்திடும் வென்னீர் போல
விடுபடும் இலக்கணவழுவுக்கு
விலக்கப்பட்ட  
வரிச்சலுகை கிடைக்குமா?)))
விடையாக தனிமரத்துக்கு))

 விரும்பிய பாடல் சேமிப்பாக  அன்றி 
விரலில் ஏதுமில்லாத ஏதிலி !
விட்டத்தோடு சேர்த்தடித்தாலும் 
விடாக்கண்டவன் போல )))
விரும்புகின்றேன் ))
விடுதலை தந்திடுங்கள் 
 விரட்டப்பட்ட
விந்தையான தாய்க்கும் 
விடையைத்தேடி 
விதைக்கின்றேன் கதையை!
விரல் கொடுப்பது நட்புக்கா!
 விடுதியில் தங்கிய அன்புக்காக
விடாமுயற்ச்சியுடன். 
விடாது வலையில் இவன்
விசரன் போல ஒருவன்))


http://www.thanimaram.com/2017/03/12.htmlவிரைவில் [[முழுவதும் [[[
///

முகநூலில் பல `முத்தான நட்பை
முழ்கி எடுக்கின்றேன் முகநூல்
முன்னால் தோழன் போல
முடிந்தால் வந்திடு!
முத்தையா பேர்த்தியே
முன்னிரவில் பவர் பாண்டி
முன்னால் ரேவதிக்கா
முழுவதும் பார்த்தேன்!
முழிச்ச கனவின் போது தலையில்
முடியில்லாதவன்!
முன்னால் முகநூல் தோழி!
முக்கிய தோழி
மூடிப்போனால்
முகநூல் க/கு
முடிச்சவிக்கு இழந்தது[[
முதல் சீதனம் அல்ல[[
முடிந்தால் இணைய வானொலியில்
முத்திரை பதிக்கலாம்[[!
முகம் தெரியாது!
முடிந்தால் வரலாம்
முத்தான பாடல் இங்கும்
முழுமையாக கிடைக்கும்[
முழுமையான உலகத்தில்
முதல் இணைய வானொலி!
முக்கிய பொய் சொல்லி விட்டேன்[[
முதல் கவிஞர் என்ற
முத்தம் தந்த உன் போதையில்[[!






யாவும் கற்பனை!






7 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்கு...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

முற்றும் அறிந்த அதிரா said...

ஒரு எழுத்தை வைத்தே கவிதையா... நீங்க எங்கெயொ போயிட்டீங்க நேசன்...

வலிப்போக்கன் said...

அருமை...

Angel said...

நானும் ஒரு அ முதல் ஒள வரை தலைப்பிட்டு ஏதாச்சும்எழுத நினைப்பேன் வரவே வராது .நீங்க இ ,வி வச்சே சூப்பரா கலக்கிட்டிங்க நேசன்

Studentsdrawings said...

அருமை அய்யா

Thulasidharan V Thillaiakathu said...

கலக்கிட்டீங்களே நேசன்...முன்னாடியும் இப்படி எழுதியிருக்கீங்க தானே! நினைவில் நிழலாடுதே!!