14 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-3

நாங்கள் எல்லாரும் நண்பரின் காரில் ஏறினோம் 6 பேரையும் சுமந்து கொண்டு போய் நின்ற இடம்  கொழும்பு -12 ஜயும் மருதானையையும் இனைக்கும் மையப்புள்ளியான ஒல்கோட் மாவத்தையின் பின் புறவழியில் உள்ள சுவையான நட்சத்திர ஹோட்டலின் முகப்பில்!..

என் சகோதரமொழி நண்பர்கள் ஏதாவது தாகம் தீர்ப்பம் என்றார்கள் .இன்று என் பணம் காலி என்று உணர்ந்து கொண்டேன்.
அவர்களுக்கு நன்கு தெரியும் நான் மது அருந்துவதில்லை இருக்கும் சுவையூட்டிகளை முடித்து விடுவேன் என்பதுடன் எவ்வளவு அவர்கள் நிதானம் தவறினாலும் அவர்களின் இருப்பிடம் சேர்க்காமல் அகலமாட்டேன் என்று.
..
அன்றும் அப்படி என்னத்தில் தான் நானும் வாகணத்தை சரிபார்த்துவிட்டு அவர்கள் முன் செல்ல நானும் பின் தொடர்ந்தேன்.
நண்பர்கள் எல்லாரும் கடந்தவார செயல்பாடுகள், பிழைகள் , மாதமுடிவில் செய்ய வேண்டிய  நிர்வாக வேலைகளை எல்லாம் சாவாகாசமாக அலவலாவிய வண்ணம் அதிகமாக மதுவை சுவைத்தனர்.
..
நேரம் அதிகமாக நண்பர்களை  சாப்பிடும் படி வற்புறுத்தினேன் உண்மையில் எனக்குத்தான் அதிக பசி அவர்களுக்கும் சேர்த்து கொத்துப்பராட்டாவும் கோழிக்கறியும் தரும்படி கூறினேன் .பரிமாறுவரிடம் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் நிதானம் இல்லை விரைவில் போகனும் என்றேன் அவரும் கடைமூடும் நேரம் என்றுகொண்டே விரைந்து செயல்பட்டார்.
..
ஒருவாறு எழுப்பிக் கொண்டு வெளியில் வந்தால் மூவர் அதிகமாக மதுவுண்டதால் 
நிதானம் இல்லாமல் பாடிக்கொண்டு வர நான் காரை ஓட்டுகிறேன் என்ற போது சகோதரமொழி நண்பர் அடம்பிடித்து தான் செலுத்துவதாக கூற நானும் பாதுகாப்பு நிமித்தம் சரி ஓட்டும் என்று முன்னால் அருகில் ஏறி இருந்தேன் .கொஞ்சத்தூரம் போனால் முன்னால் பாதுகாப்பு சோதனைச்சாவடி நண்பரிடம் இடம் மாறியிரு என்றேன் .!அவனும் அசட்டை செய்யாமல் சோதனைச் சாவடியில் இடித்துவிட்டான்.!

இடித்ததும் இல்லாமல் காவலில் இருந்த இரானுவவீரன் கேள்விக்கு  அவதூறாக பதில் கூறிவிட்டான்!

சகோதரமொழி நண்பரிடம் பலமுறைகூறியிருந்தேன் !சிலவார்த்தைப் பிரயோகங்களை திருத்திக் கொள் என்று .அவன் வாழ்ந்த கொலன்னாவ வட்டாரத்தில்
மூன்றாம் தரமான வார்த்தைகள் மிகசர்வசாதாரனம். அவற்றை இங்கு எழுவது தரமற்றது.
.. தொடரும்!

12 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-2

 அன்று செவ்வாய்க்கிழமை கிரிஸ்மஸ் விடுமுறைக் கொண்டாட்டம் .நானும் என்னுடன் சகோதர மொழி நண்பர்கள் இருவரும், கொழும்பு நண்பர்கள் மூவருமாக ,சுகதாச உள்ளரங்கில் பாதுகாப்பு பரிசோதனை தாண்டி நுழைவுச்சீட்டைக் காட்டிவிட்டு உள் நுழைந்தோம்!
..
 அழகிய பெரிய மண்டபத்தில் மோகன்..-ரங்கன் வாத்தியக்குழுவினர் இசைமீட்ட தயாராகிக்கொண்டிருந்தனர். 
லோசனின் அறிவிப்புடன் சம்பிரதாய முறை விளக்கு முக்கிய பிரமுகர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து நம்மவர்கள் முதலில் பாடினார்கள்.
..
மகிந்தகுமார், எனக்குத் தெரிந்த பாடகர் அவரை  இனம் கண்டு கொண்டேன் .மற்றவர்களை தூரத்தில் இருந்து ரசித்தேன் நேரம் ஓடிக்கொண்டிருந்தது நாலாபுறமும்  அலங்கரிக்கப் பட்ட திரையில் பார்வையாளர்கள் மைய நிகழ்வை பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒலி/ஒளிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.
.
நீண்ட நேரத்தின் பின் லோசனின் அறிவிப்புடன் நாம்பார்க்க கூடியிருந்த சில ஆயிரம் ரசிகர்களின் ஆர்பரிப்புக் கிடையில் 
அந்த வெடிமாலையுடன் தோன்றினார் சங்கர் மகாதேவன்.
மேடையில் ஏற்கனவே எல்லா தென்னிந்திய பாடகரும் ஈழ்த்தவருக்கு  அதீத ரசனையாளர்கள் என்று கூறும் மூலமந்திரத்தை  சங்கரும் கூறிவிட்டு "தனியே தன்னம் தனியே என்ற ரிதம் படப்பாடலைப் பாடினார். கச்சேரி களைகட்டியது தொடர்ந்து பலபாடல்களை தனித்தும் நம்மவர்களுடன் மேடையில் பாடினார்.
..
இடையில் 5 செட் ஆடைமாற்றவும் மறக்கவில்லை .இடையிடையே சுருதி சரியாக சேரவில்லை .திரையிசைக்கும் நேரடி இசைக்கும் உள்ள வேறுபாட்டை மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டேன்.
..
நேரம் விரைவாக போய்க்கொண்டிருந்தது எனக்கு ஒருபாடல் கேட்டால் அதை முளுமையாக கேட்கனும் என்ற ஆவலுடையவன் சங்கரோ! ஒவ்வொரு பாடலையும் பலமொழிகளையும் கலந்து கொத்துப் பரோட்டா போட்டுக்  கொண்டிருந்தார்!
..
உண்மையில் எனக்கு கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் வரும் "இல்லை என்று சொல்ல ஒரு கனம் போதும்" என்ற பாடலில் தீராதகாதல் அப்பாடலை மேடையில் பாடினார் தமிழில் தொடங்கியவர் ஹிந்தி, தெலுங்கிற்கு மாரி அதன் சுவையை சீரலித்தார் .மேடை நிகழ்ச்சிகளை இவர்கள் களியாட்டம் என்று மாற்றுவதில் எனக்கு எப்போதும் உடன் பாடு கிடையாது .பாடல்  ஞாபகம் இல்லாத போது பல இடங்களின் வெற்றுச் சரணங்களை பாடுவதும் ஏனோ தெரியாது!
..
காசு கொடுத்து டிக்கட் வாங்கிய மற்ற நண்பர்கள் பொறுமையிழ்ந்து விட்டார்கள் .
நான் முழுவதும் பார்ப்போம் என்றேன்  இப்படி இருப்பதிலும் பார்க்க நாங்கள் வீட்டில் tvயில் தேவையானதைப் பார்க்கலாம் என்றார்கள் கொஞ்சம் பாத்தோம் ..
.
திடீர் என்று ஒரு அதிச்சி செய்தி தந்தார்கள் நடிகர் மாதவன் மேடையில் சிலநிமிடங்கள் தோன்றினார். அலைபாயுதே படப் பாடல்" செண்டேம் பர் மாதம் பாடல் பாடினார் " சங்கர்  ..மாதவனும் எல்லாருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறினார் சில வார்த்தைகள் தமிழிலும் பின் ஆங்கிலத்திலும் தயங்கிய படி குறினார் .இலங்கைக்கு இது முதல் பயணம் என்றும் நாட்டில் அமைதி வேண்டும் என்று கூறிவிட்டு சிலருக்கு கையெழுத்து குறிப்பில் கையொப்பம் இட்டார்...
.
இனிக்கிழம்புவம் என்று நண்பர்கள் கட்டாயத்தின் நிமித்தம் நிகழ்ச்சி முடியமுன்னரே வெளியில் வந்தோம்.
.
நண்பர்கள் எல்லாரும் பயங்கர கோபத்தில் .பணம் கொடுத்தும் திருப்தியில்லை!எனக்கு மறுதினம் பணி நண்பர்கள் மருதானையில் என்னை இறக்கிவிடுவதாகவும் ஒன்றாக உணவருந்தவும்  இப்ப போவம் என்றதும் எனக்கும் பசிக்களைப்பு வெளிக்கிட்டோம்.

.       தொடரும்