16 November 2011

இதயத்தில் இருந்து உறவுகளுக்கு ஒருவரி.

இன்று பிறக்கும் கார்த்திகை( 17/11/2011தமிழக்கு)மாதம்.

 ஈழத்தமிழர் வாழ்வில் பல மறக்க முடியாத நிகழ்வுகளையும் இன்னுயிர் நீத்த மாவீரர் பரணி பாடும் இந்த  நாட்களில் சில கவிதைகளை சூடவும்.


 உலகநாடுகளிடம் விலைபோகாத தமிழ் இனத்தலைவர் அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் இன்னும் சில பதிவுகள் போட இருந்தேன். ஆனாலும்!

இந்துக்களில் இந்த மாதம் சிறப்பான இன்னொரு மாதம்.

  வீடுகளில் தீபம் ஏற்றும் கார்த்திகைத் தீபத்திருநாள்(விளக்கீடு) வரும் அடுத்த நாள் வரும் சார்வாலய(சொக்கப்பானை) தீபத்திருநாள்.

 வீட்டில் தீபம் ஏற்ற குமிழந்தடி தேடி பந்தம் சுற்றி அழகிய நாட்சாரம் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் தீபம் ஏற்றியதும்.

 கிணற்றடியில் விளக்கு எரிந்து கொண்டிருக்காமல் விரைவில் அணைந்து விடும். என்பதற்காக! தகரவாளியைக் கவுட்ட குறும்பான பாழ்யகாலம் .

அப்போது பார்த்த நேவிக்காரன் விட்ட வெளிச்ச லைட் பற்றிய உணர்வுகள்!

 .மறுநாள் மாலையில் நிலவு வரும் நேரத்தில் கோயில் பிரகாரத்தில் சர்வாலய தீபமாக பட்டபனை மரம் 1/2 வாசியில் சோலைக்காட்டுப் பொம்மைபோல் காவோலை, தென்னோலை சுற்றி அதில் கற்பூரம் ஏற்றிய சொக்கப்பானை பற்றிய நீங்க நினைவுகள்.!

 பிள்ளையார் கதையில் கோயிலில் வடைக்கும் ,அவளுக்கும்,மோதகத்துக்கும் அடிபட்ட சிறுவயதுக் குறும்புகள்.

திருவெம்பாவையில் நண்பர்கள் குழுவாக இல்லாத வீட்டுக் வாசல் படலையில் எல்லாம் நித்திரையில் இருக்கு இளவரசிகளையும், மச்சாள் மார்களையும், துயில் எழுப்ப சங்கூதிய திருவெண்பா கால சுகமான சுமைகள்!

 நண்பர்களுடன் இடம்பெயர்ந்து கொண்டாடிய கிருஸ்மஸ் பண்டிகைகள்.

 நண்பனின் காதலைத் தூக்கியெறிந்து கன்னியாஸ்த்திரியாக போக நினைத்தவள் நாட்டுக்காக்கப் போய் பெட்டியில் வந்தபோது!
 கலங்கிய நினைவுத்தோழிக்குப் பிடித்த பாடல் பகிர்வு .

என சிலதை சொல்ல இருந்தேன்!

 ஆயினும் ஐரோப்பிய கொண்டாட்டங்களுக்கான முன் ஆயத்தப்பணிகளும். ஓடிஓடி ஊழைக்கனும் என்ற கவியரசர் அவர்களின் காத்திரமான கவிதையைப்போல!

 தனிப்பட்ட தேடல் நிமித்தம் இந்தப்பதிவுடன் தனிமரத்தின் சகல செயல்பாடுகளையும் இனிவரும் இரண்டு மாதம் தற்காலிகமாக வலைப்பதிவை இடை நிறுத்துகின்றேன்.!

நேரம் கிடைக்கும் சிறுதுளியிலும் நண்பர்கள் தளத்திற்கு காத்திரமான விடயங்களுக்கு.
 முன்னுரிமை அடிப்படையில்    என் தார்மீக பின்னூட்டத்தையும், வாக்கினையும் அளிக்க முயல்கின்றேன்.

நேசன்-கலைசிவா வலைப்பதிவை. தனிமரம் என்று வலையுலகப் பிரவேசத்திற்கு பின்னனியில் இருந்த இயக்குனர்களில் என் குடும்பத்தின் மூத்த மருமகன், மூத்த சகோதரியும் தந்த ஊக்கிவிப்புத்தான் நான் பதிவு எழுத காரணம்.

 அவர்களின் ஒத்துழைப்புக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் முதலில்.

 என் வலையை தன் தொழில்நுட்பத்திறமையை மற்றவர்களுடன் பொறாமையில்லாமல் பகிர்ந்து. மற்றவர்களையும் காத்திரமான பதிவுகள் தர வேண்டும் என்று பின்னனியில் நின்று ஊக்கிவிக்கும் என் பதிவுலக வழிகாட்டியும், தன் தளத்தில் தனிமரத்தை அறிமுகம் செய்தும்!

 பலவிவாதங்களில் வார்த்தைஜாலம் காட்ட இடம் தந்தவர்கூட. சில கருத்துக்காக மின்னஞ்சலில் முட்டிமோதினாலும். கருத்து பதிவு உடன் அன்றி தனிநபர் மீதல்ல என்பதை பலதடவை நிறுவிய என் நண்பன்.  தமிழிலில் எல்லாவற்றையும் எழுதத் துணிந்தவன்.

 நாற்றின் வலைப்பதிவாளர் திருவாளர் நிரூபன் செல்வராஜாவுக்கு.

 என் பதிவுலகில் இத்தனை (80 கோகுல் +
சேர்த்து) உறவுகளைப் பெற்றுத்தந்து.
உறுப்பினர்கள் (75)


 என்னையும் ஒரு பதிவாளன் ஆக்கிய  உங்களுக்கு என் வெற்றியைப் பரிசாக அளிக்கின்றேன் நன்றியுடன்.

.நன்றி சொல்லி உங்களைப் பிரித்துக்காட்ட விருப்பம் இல்லை என்றாலும் காலம் உணர்ந்து செய்த உதவிக்கு நன்றி சொல்வது தவறல்ல சகோதரா!

 என்தளத்திற்கு அதிக நண்பர்களை இனம்காட்டிய நண்பன் துசிக்கும்,  செங்கோவி ஐயாவுக்கு என் சிறப்பு நன்றிகள்!

  உங்கள் ஊடாகத்தான் பலரை நான் பெற்றேன்..

 எப்போதும் என் பாடல் பதிவுகளில் காத்திரமான பின்னூட்டம்மிடுவதுடன் என் எழுத்துப்பிழையையும் திருத்தும் அன்புச் சகோதரி ஹேமா அவர்களுக்கு நன்றிகள் பலகோடி!

.ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பயணிக்கும்  மைந்தன் சிவா, ,மனோ,ரெவெரி,கந்தசாமி,ஆகுலன் தமிழ்வாசி, விக்கியண்ணா,சி.பி,புலவர் ஐயா விடிவெள்ளி,கனாவரோ,மதுரன், மதிசுதா,மதுரை சரவணன் சண்முகவேல் ஐயா,ரட்ணவேல் ஐயா ரமனி ஐயா கவி அழகன்,கோகுல்,ஐடியாமணி. மகேந்திரன்,அம்பாள்ளடியாள், அன்புத்தம்பி ராச். லோசன், மற்றும் பலர்  என பட்டியல் நீளும்!

 இவர்களுடன் என்னோடு பயணிக்கும்  அனைவருக்கும். தனிமரத்தின் தாழ்மையான நன்றிகள் .கருத்துக்காக சிலருடன் மோதினாலும் அவர்களும் என் நண்பர்கள்தான்.

பதிவுலகில் என்னை ஊக்கிவிக்கவும் சமயங்களில் வழிதவறும் போது தட்டி அடக்கும் யோகா ஐயா, ,காட்டானுக்கு சிறப்பு விருந்தினர் நன்றிகள்.!












. திரட்டியில் இணைப்புக்கொடுத்து என் தொடரை பலரிடம் சேர்த்த என்  அண்ணன் குற்றால மன்னன் நாஞ்சில் மனோவுக்கு விசேட நன்றிகள்(..உங்களை வரும் ஆண்டில் சரி நேரடியாக சந்திக்கனும் தமிழக்கத்தில் மறக்கமாட்டன் ஜின் பாட்டில் ஹீஹீ) 

என் பதிவுகளில் அவசரத்தில் நான் விடும் எழுத்துபிழைகளைத் திருத்திய பதிவாளர்கள் அனைவருக்கும் .


பார்வையாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த நன்றிகள் .



இத்தனைக்கும் பக்கபலமாக இருக்கும் என் மனைவிக்கு இன்னொரு சிறப்புநன்றிகள்.!

 மகனும் பிளாக் எழுதுறான் என்று மற்றவர்களுக்கு பல்புக் கொடுக்கும் என் தாய்க்கு  மொத்த நன்றிகள்.


புத்தாண்டில் புதிய  தொடர் மற்றும் பாடல்பதிவுகளுடன் சந்திக்கும் வரை !

.
நட்புடன் தனிமரம் நேசன்!

மீண்டும் என் வலைப்பதிவு ஊங்களை நாடி வரும் !

எல்லாரின் படமும் சேர்க்க ஆசை பதிவு நீண்டுவிட்டது! உறவுகளே!

ஒரு வாசகன் பார்வையில் ஒரு தொடர்!

ஒரு தொடரில் தான். பல விடயங்களைச் சொல்லமுடியும் என்பதன் மூலம் சிலவிடயங்களை காலத்தின் மீள்பார்வையாக.

 கடந்த சிலவாரங்களாக உங்களை நாடிவந்த நொந்து போன ஓர் இதயம் பற்றி பல வலையுலக நண்பர்கள் பின்னூட்டம் இட்டும் வாக்கு போட்டும் ஊக்கிவித்தார்கள் .

சிலர் இந்த நேரத்தில் நீ தொடர் ஏன் எழுதுகின்றாய் ?உனக்கு பதிவுலக அரசியல் தெரியவில்லை என்ற போது மைந்தன் சிவா சொல்வது போல் போற்றுவோர் போற்றவும் தூற்றுவோர் தூற்றட்டும்! விரும்பினோர் படிப்பார்கள் நேசன்னா என்று நண்பன் துசி பகிர்ந்து கொண்டான் ஒரு வாசகம் .அது  திருவாசகமாக கருதி  வேலைப்பளுவையும் தாண்டி எழுதிய போது எனக்கு மனப்பாரம் குறைந்தது .

நல்ல உள்ளங்களின் பின்னூட்டம் இன்னும் சிறப்பாக்கனும் என்ற ஆவலைத்தந்தது.

 இந்த இடத்தில் ஒரு சிறிய தெளிவைச் சொல்லி விடுகின்றேன்.

 இசை என் மூச்சு நான் கேட்ட பல கருத்தாளமிக்க பாடல்கள் பலரைச் சென்றடையனும் அதை தந்த வானொலிகள் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல விழைந்த ஒரு உத்திதான் கதையில் பாடலைச் சேர்த்தது .

.குத்துப்பாட்டில் பலநல்ல பாடல்கள் மறக்கப்படும் நிலையில் என் மனதில் இருந்த  அறிவிப்பாளர் கனவின் வெளிப்பாடுதான் நான் தெரிவு செய்த பாடல்கள்.

வலைபதிவில் அதிகம் பாடல் ஒலிக்கவிட்டு பதிவு போட்டது அடியவனாகத்தான் இருக்கும்.!

 பாடல்கள் பற்றிய சிலாகித்த ஹேமா,புலவர் ஐயா,ரெவெரி,துஷ்சியந்தன்,மனோ, செங்கோவிஅண்ணாச்சி,யோகா ஐயா  ,கோகுல்,மாயாஉலகம் நிரூபன் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.

தொடரினைத் தொடர்ந்து படித்ததுடன் பின்னூட்டங்களும் இட்ட பல சகபதிவாளர்களில் விதியாசமான சிந்தனையாளன் ஒரு சகபதிவாள நண்பன் இந்த தொடருக்கு. தன் பல வேலைப்பளுவிக்கு மத்தியிலும்  நீண்ட விமர்சனத்தை தந்து இந்த தொடரினை இன்னொரு பரிமானம் கூட்டியிருக்கும் செயல்.

 பதிவுலகில் இது இரண்டாவது முறை  என என்னுகின்றேன். (முதலில் என் பதிவுலக வழிகாட்டி நிரூபன் செங்கோவி அண்ணாச்சியின் மன்மதன் லீலைகள் தொடருக்கு வழங்கிய விமர்சனத்தை  அடுத்து)

  பதிவுலகில் எல்லோரையும் தன் தனித்துவமான எழுத்து நடைமூலம்  இந்த சிறிய வயதில் ஒளிவு மறைவு(பள்ளிக்கூட காதலை) இன்றி பதிவுலகில் காரசாரமான பதிவுகள்  தந்து கொண்டிருக்கும் என் சிறிய சகோதரன் நண்பர்கள் வலைப்பதிவாளர்  திருவாளர் கே.எஸ்.எஸ் .ராச் அவர்கள்  தந்திருக்கும் விமர்சனத்தை இங்கு பதிவு செய்கின்றேன்

பதிவுலகில் ஒரு தொடர் இப்படி ஊக்கிவிக்கப் படுவது இன்னும் பல காத்திரமான தொடர்களைத் தர ஒரு உந்து சக்தி.

மீண்டும் ஒரு இதயம் கனிந்த நன்றி ராச் .அதிக சிரத்தை எடுத்து நடுநிலையுடன் அலசிய உங்கள் விமர்சனப்பார்வைக்கு!

இதோ அவரின் பார்வையில்!


வணக்கம் தனிமரம் நேசன் அண்ணா
கடந்த சில வாரங்களாக நொந்து போகும் இதயம் என்னும் தொடர் மூலம்
மனிதவாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த சோகங்களையும்.வலிகளையும் சுமந்து கொண்டு நாங்களும் உங்களுடன் பயணித்தோம்.

இளம்வயதில் வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதலை சரியான முறையில் தெளிவுபடுத்தினால் சிலர் புரிந்து கொள்வார்கள் சில புரிந்து கொள்ள மாட்டார்கள் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் துரோகிகளாகவோ இல்லை காதலைபிரிக்கும் வில்லன்களாகவே தெரிவார்கள் இதனால் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு யோசிக்கும் போது அவர்களுக்கே விளங்கும் தாங்க செய்தது தவறு என்று.வார்த்தையை கொட்டிவிட்டு வருந்துவதைவிட வார்த்தையை கொட்டாமல் இருப்பதே மேல்.

ஆனால் உங்கள் நண்பனின் காதலைப்போல சின்னவயதில் பக்குவம் இல்லாதவயதில் காதலிப்பவர்கள் இதை உணர்ந்து கொள்வது இல்லை.அவர்களுக்கு தங்கள் காதலே பெரிதாக தெரியும்.

நட்பின் வலிகளை மட்டும் இல்லாமல் பல அரசியல் விடயங்களையும் இந்த தொடரில் பகிர்ந்து கொண்டீர்கள்

அதைவிட
மார்க்கெட்டிங் துறைபற்றியும்.வியாபார நிறுவனங்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளின் திறன்களையும் அவர்களின் சாமர்த்தியங்களையும்,அவர்களின் கஸ்டங்கலையும், உங்கள் தொடரில் சிறப்பாக அலசியிருந்தீர்கள்.

தொடரின் நிறைவில் மனதை கவரும் சினிமாப்பாடல்களை இணைத்து இசைமீதான உங்கள் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி அருமையான பாடல்களின் வீடியோக்களையும் பகிர்ந்து ஓரு இசை மழையுடன் இந்ததொடரை நகர்த்திய விதம் புதுமையானது சிறப்பானது.

இந்த உலகில் மாற்றம் ஓன்றுதான் மாறாதது.எதுவும் கடந்து போகும்.எனவே உங்கள் நட்பில் ஏற்பட்ட விரிசல்களும் கடந்து போகும் காலம் எல்லாக் காயங்களுக்கும் மருந்தாகும்..

உங்கள் எழுத்துநடை மிக அழகாக இருந்தது ஆனாலும் சில பகுதிகளில் திரைப்படங்களின் பெயர்களை வசனத்தில் இணைத்து நீண்ட வசனங்களாக எழுதியது வாசிக்கும் போது சலிப்பைத்தந்தது.ஆனால் புதுமையாக இருந்தது.

உங்கள் தொடரில் உவமை கலந்து எழுதிய விதம்.ஓவ்வொறு சம்பவங்களுக்கும் ஓவ்வொறு உதாரணங்களை சொல்லும் விதம் போன்றவை அருமை மொத்ததில் ஓரு சிறப்பான தொடருக்குறிய அத்தனை அம்சங்களுடனும் அமைந்திருந்த இந்ததொடரில் உங்கள் மனச்சுமைகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

நொந்து போகும் இதயம் என்னும் இந்ததொடரை போல பல சிறப்பான பதிவுகளை உங்கள் தளத்தில் எதிர்பார்கின்றோம் ஓரு வாசகனாக உங்களுடன் பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
அன்புடன்\
கே.எஸ்.எஸ்.ராஜ்