17 March 2013

panna cotta செய்வது எப்படி!!!!!


வணக்கம் உறவுகளே !!!!!!

பாரிஸ் வானம் பனிமழைபொழிந்ததில் பாதைசாரிகள் எல்லாம் பணிக்கு செல்ல முடிதாத நிலையில் திண்டாடிய நிலையை பார்க்கும் போது வல்லரசு என்றாலும் வர்ணபகவான் மனசு வைத்தால் தான் மனிதர்கள் நடமாட முடியும்!


 வாகனங்கள் வீதியில் வலம் வரும் விடியல் வேலை என்றாலும் வீட்டில் சாப்பாட்டு பிடிக்கலை என்றால் !ஓட்டலில் சாப்பிட போவது என்றாலும் பனிமழை விடுகின்றது இல்லையே என்ற நிலையில்!!


இன்று ஒரு பால்க்கலவை செய்யும் முறையை பார்ப்போமா??

இப்ப எல்லாம் அதிகம் பால்க்கோப்பி குடித்தால் அதிகம் டென்சன் வந்திடுமாம் என்று யாரோ ஆலோசனை சென்னார்களாம் ஓசியில் என்று காதில் ஓதும் கட்டின மனைவியின் சொல்லிற்கும் மரியாதை கொடுக்கணும் தானே :)))


வாங்க பால்க்கலவை செய்வோம்!!!!

தேவையான பொருட்கள்.
பால் -500 மி.லீ
தடித்த பால் -500 மி.லீ
சீனி -100 கிராம்
தேசிக்காய் தோல் சீவி நறுகியது-25 கிராம்
ஒரேஞ்சு தோல் சீவி நறுக்கியது-25 கிராம்
ஜெலட்டின் -8  பேப்பர்.
அடுப்பு -
சட்டி -1
கப் -6
பச்சைத்தண்ணீர் -500 மி.லீட்டர்
  என்ன எல்லாம் தயாரா வாங்க  எப்படிச் செய்யலாம்:)))

 வாசலில் நிற்காமல் இணையத்தில் இருக்கமல் குசினிக்குள் வாங்க வலது காலை எடுத்து வைத்து:)))
அடுப்பு மின்சாரமா ?காஸ் முறையா, இல்லை இன்னும் பாட்டியின் மடியில் இருந்து பால்க்கோப்பி குடித்த விறகடுப்பா ?எது என்றாலும் அடுப்பு இருந்தால் போதும்.!


முதலில் பாலையும் தடித்த பாலையும் ஒன்றாக விட்டு சட்டியில் விட்டு சூடாக்குங்கள் அதற்கு முன் அடுப்பு வீரியத்துடன் எரிகின்றதா இல்லை சோம்பல் முறிப்பது போல எரிகின்றதா என்று ஒரு கண்ணோட்டம் விடுங்கள்.10 நிமிடங்கள் 
சூடாகும்.அந்த நேரத்தில் பச்சைத்தண்ணியில் ஜெலட்டின் பேப்பரை ஊறவிடுங்கள்.


அதன் பின் சட்டியில் இருக்கும் பால் கொதித்து வரும் போது சீனியையும் தேசிக்காயும் ஒரேஞ்சும் சேர்த்து பாலில் இட்டு நன்றாக கலக்குங்கள் . கலக்கும் போது பால் சட்டியில் இருந்து அடுப்பில் நுழைந்துவிடாமல் பாருங்கள். இல்லைபென்றால் அழகாய்யிருந்த குசினியை கோயம்மேடு சந்தை போல ஆக்கிவிட்டீங்க என்று சம்சாரம் சப்பாத்திக்கட்டையால் தட்டிச் சொன்னால் நான் பொறுப்பல்ல வழக்குப்போட்டால் நிவாரன நிதி தரமாடேன் இலவசம் என்று :))) .கருணாநிதி ஆட்சிபோல:)))

சூடாகி  பொங்கிவருகின்ற நிலையில் பாலினைய்  அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்  

பின் பச்சைத்தண்ணியில் ஊறும் ஜெலட்டினை வெளியில் எடுத்து நல்லாக பிழியுங்கள் நீர் இல்லாமல் இருக்கும் வரை .அதன் பின் ஜெட்டினை பாலில் இட்டு ஒரு சில நிமிடம் கலக்குங்கள் .அவ்வளவும் 
தான் இனி கப் இல் ஊற்றுங்கள் .அதன் பின் குளிர்சாதன அறையில் 8 மணித்தியாளம் ஆறவிடுங்கள் .

அதிகாலை வேலைக்குப் போய் அந்தி மாலையில் வீடு வரும் போது ஓடிப்போய் குளிர்சாதன அறையில் இருக்கும் பால்க்கலவையை சுவையுங்கள் .

விரும்பினால் தேனும் கலந்து உண்டாள் உள்நாக்கு தித்திக்கும் பிடித்தவர்கள் கூட சுவைத்தால்!!



 இன்னும் சுவை தான் வாழ்வில் உருகமாட்டீர்கள் கேட்டுப்பாருங்கள் இந்த நங்கைக்கும் பிடித்த சுவையூட்டி என்று என் நண்பன் சொன்னான் ஒரு காலத்தில்:))))


 அட அப்படியே பார்த்துட்டுப்போனால் தகுமோ ??இரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் போறதுதானே ,பிடித்திருக்கா, பிடிக்கலையா???

14 March 2013

விழியில் வலி தந்தவனே-12



 எழுதும் கவிதை எழுதியவர் பார்வைக்கும் வாசிக்கும் வாசனுக்கும் இடையில் சிந்தனைப்பாலம் போடும் !சிறப்பு உருவக அணி ,உள்ளீடு, பாடுபொருள் இயல்புகளைப் பார்த்து அப்படித்தான் சொன்னது போல அடுத்த நாள் அவள் தோழி சுவாதியிடம் அவளது கவிதைக்கொப்பியை ரகுவிடம் கொண்டுவந்து தந்தாள்.!


மிகவும் அழகான அதிகாலை மலர்ந்த ரோசாப்பூ,ஆனந்தம் படத்தில் சினேஹா கொடுக்கும் விளக்கேற்ற வரலாமா ?என்ற இதயம் காட்சிப் படம் போல படங்களைவெட்டி ஓட்டி அதில் தபூசங்கர் கவிதைகள் போல காதல் ஈர்ப்பில் அவர் சாயலை உள்வாங்கி சில கவிதைகளை எழுதியிருந்தாள். சுகி !

சிலதை பொதுவில் பகிரமுடியும் சிலது தணிக்கை செய்ய வேண்டும் தனிப்பட்ட புனித அந்தரங்கம் என்பதைப்போல பல கவிதைகள் நெஞ்சில் பதிந்தது அவள் போட்ட கோலங்கள்.ஆனாலும் ..... !

மனித வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று தவிர்க்க முடியாத தருனம்.
 அது யார்மேல எப்போது ?வரும் எப்படி வரும்? என்று யாராலும் சொல்ல முடியாது.
 ஆனா பரீட்சை மறுமொழி வருவது போல வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டாவரும். அதே போலதான் சுகியின் காதலும் ரகுவின்மேல். 



ஏன் அவளுக்கு விவசாயிமகன் மீது காதல் வந்தது என்று அவளிடம் கேட்டால் ?நிச்சயம் அவளுக்கு புரியாத புதிர் போல பதில் சொல்லத்தெரியாது. 


இந்த உலகில் அவள் வாழுகின்றவரை அவன் நினைப்புகள் அவள் மனதில் ஏதோ ஒரு மூலையில் மூச்சுக்காற்றுப்போல என்றும் இருக்கும்

.அதே போல ரகுவின் மனதிலும் ஏதோ ஒரு மூலையில்இரத்த நாளங்கள் போல அவள் நிச்சயம் இருப்பாள்.



கண்காணிப்புக்குழுவும், சர்வதேசமும் சாமாதான நாடகத்தை கைவிட்டு கண்ணுறங்கத் தொடங்கிய 2007 ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தின் ஒரு நாள் !

ரகு பாடசாலைக்கு வந்திருந்தான். அவன் மனம் எல்லாம் கவலை. காரணம் இதுதான் அவனது பாடசாலை வாழ்க்கைக்கு இறுதிநாள் !


ஆம் பள்ளி என்ற நந்தவனத்தில் தென்றலாக வலம் வந்த விவசாயி வாரிசின் கனவு இனவாத விசத்தின் வெறியினால் விடுதலைப்பக்கம் புயலால வீசும் நிலை.


அடுத்த நாள் இயக்கத்தில் இணைவதாக முடிவெடுத்து இருந்தான். 


அன்று பாடசாலையில் சுகியை பார்த்து சகஜமாக கதைத்தான் .ஆனால் அவளுக்கு அவனது முடிவு பற்றி தெரியாது முன் உணர்ந்து கொள்ள அவள் என்ன அரசியல் வாதியின் மகளா ?பிடிவிராந்து வரும் என்று தெரிகின்ற போது நீதிமன்றத்தில் ரத்துபிடிவிராந்து வாங்கி வைக்க.

அவனும் சொல்லவில்லை.சொல்லிச் செல்ல இது என்ன ஜனாதிபதி வெளிநாட்டு சுற்றுலாவா பயணமா??? 


என்மேல எதுவும் கோபம் இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்க சுகி .நான் உங்களை நிறைய வேதனைப்டுத்திட்டேன்.எத்தனை தரம் எண்ணிடம் காதல் யாசகம் கேட்டீர்கள்?

 கையில் பணம் இருந்தும் தர்மம் செய்யாத பணக்காரன் போல நான்.

எதைப் பற்றியும் யோசிக்காது நல்லாப் படியுங்க இனவாத யுத்த மோகம் ,மதவாதம்,மொழிவாதம் ,பிரதேசவாதம் ,பிடிவாதம் என பலரின் வாழ்வை பள்ளிக்காலம் சீரழிக்கின்றது. 

அது எல்லாருக்கும் புரிவது இல்லை என்று முன்னர் என் நண்பன் சொல்லியது ஞாபகம் வருகின்றது  சுகி 


.நீங்க என்னைவிட சிறப்பான ஒருவரை எதிர்காலத்தில் பார்க்கும் போது எங்களுடன் ரகு படித்தானா என்று நினைப்பு வராது.!


பள்ளி வயதில் என் மேல் உங்களுக்கு வந்த ஈர்ப்பை காதல் என்று சொல்லமுடியாது .ஒரு காலத்தில் இதை யோசிக்கும் போது எங்களுடன் படித்தவனும் பளாக் எழுதுகின்றான் ,எழுத்துப்பிழைகளில் கொல்கின்றான் எங்க ஊர் ஆசிரியர் தகுதியை ஹிட்சு வெறியில் சோமபாணத்தில் எழுதுகின்றானோ ?,என்பதைப்போல உங்களுக்கே சிரிப்பு வரும் பாருங்க. அப்போது நான் காற்றில் சுழலும் புறாவின் இறகு போல உங்களைவிட்டு வெகுதூரம் போயிருப்பேன். !

ஏன் ரகு ?திடீர் என்று இப்படி எல்லாம் கதைக்கிறீங்க 
நான் தான் உங்களை நிறைய கஸ்டப்படுத்திட்டன். என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள்.ஆனால் உங்கள் மேல வந்த விருப்பம் உண்மை ரகு .ஆஸ்திகனுக்கு இருக்கும் கடவுள் பக்தி போல அது எப்பவும் மாறாது. என்றோ ஒரு நாள் என்னை நீங்க புரிந்துகொள்ளுவீங்க என்ற நம்பிக்கை இருக்கு கோகுலம் படத்தில் வரும் பாணுப்பிரியாபோல என்று சுகி தன் பங்கிற்கு அவள் மன ஆதங்கத்தை கொட்டி முடித்தாள் .


ரகு மனதுக்குள் பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி பாடல் போல என்று சுகியை நினைத்து சிரித்துக்கொண்டான் .அன்று பாடசாலைவிட்டதும் சைக்கில் பார்க்கில் சைக்கிளை எடுத்துக்கொண்டு ரகு பாடசாலையை விட்டு வெளியேர தயார் ஆனான்.


 தூரத்தில் சுகி உன்னை நினைத்துப்படத்தில் சினேஹா ரயில் நிலையத்தில் காத்திருப்பது போல அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். ரகுவும் அவளை திரும்பி பார்த்தான்  விழியில் வலி தந்தவளே !!விடைபெறுகின்றேன் விதியின் வழியில் பிரிகின்றேன் .நெஞ்சிருக்கும் வரை நீதானடி என் ஜீவன் என்பதைப்போல !!


சிலவேளை இதுதான் அவளை பார்க்கும் இறுதி பார்வையாகவும் இருக்காலாம் ஆனால் அந்த மங்கை அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது இந்தப்பாடல் காற்றில் வந்தது!
!