07 May 2016

யாசிக்கும் ஏ-தி-லி--9

முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016_04_01_archive.html
இனி....

விதி என்பது என் வாழ்வில்
விடுதலை அல்லாத சிறை!
விரும்பியவள் கேட்டாள்
விலை போல பட்டம்
விரும்பி ஏற்க இது என்ன
விடுதலைப்போரா!

                    (   யாதவன் நாட்குறிப்பில்)

காத்து இருந்தேன் தனியே எதிர்பார்த்து இருந்தேன் என்ற ராசாமகன் படப்பாடல் போலவோ இல்லை,  உனை  எதிர்பார்த்திருந்தேன்  தென்றலிடம் கேட்டேன்  என்ற வனஜா கிரிஜா படப்பாடல் போல அல்ல பார்த்துப்பார்த்து கண்கள் பூத்திருப்பேன் என்ற நீ வருவாய் என  படப்பாடல் போலும் அல்ல பஸ்சுக்கு காத்திருக்கும் யாதவன் நிலை !இது 12 பி படம் போலவும் அல்ல இந்த வீதியூடாக  பஸ் சில நேரத்தில் குறித்த நேரத்துக்கு வரும் பலசமயத்தில் வராமலும் போகும் என்பதை நன்கு அறிவான் யாதவன்.


 ஆனால் யாழினிக்கு ஈழத் தமிழருக்கு தீர்வுத்திட்டம் வரும் என்று காத்து இருக்கும் கூத்தணி போலத்தான் பஸ்சுக்கு காத்து இருக்கும் நிலை !

என்ன யாதவன் இன்னும் பஸ் வரல? வரும் ஆனா வராது என்று வடிவேல் போலச் சொன்னால் இருக்கும் கோபத்தில் இன்னும் நன்மொழிகள் கேட்க நேரிடலாம் என்பதால் இப்ப வந்திடும் என்று பாரதிகண்ணம்மா படத்தில் விஜய்குமார் ரயில் நிலையத்தில் காத்து இருப்பது போல நம்பிக்கையூட்டினான் யாதவன்.

உள்ளே வெளியே படம் போல யாதவனுக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய பதட்டம் என்றாலும் பஸ் நிறுத்தத்தில் தனியே யாழினியை விட்டுச்செல்ல தன்மானம் இடம்கொடுக்கவில்லை .பல்வேறு இன இளைஞர்கள் வீதியால் போகும் இடம் நாகரிம்மற்ற வார்த்தைகள் நன்கு உதிரும் கார்கால பனித்துளிகள் போல .

செல்லம்மா பாட்டி நம்பித்தானே யாழினியை என்னோடு அனுப்பிவைத்தா. இந்த நேரத்தில் முகம்சுழிக்கும் வண்ணம் ஏதும் நடக்கக்கூடாது என்பதால் பொறுமையாக பஸ் வருகின்றா என்று வீதியை நோக்கினான் என்றும் அன்புடன் படத்தில் முரளி  சித்தாராவீட்டை நோக்குவது போல.

 எப்ப இந்தியா பயணம் யாதவன் என்று யாழினி கேட்டதும் தான் பஸ்சுக்கு காத்து இருக்கும் நேரத்தினை நோக்கினான் யாதவன் இன்னும் 7 நிமிடங்கள் காட்டியது திரைப்பலகை .

எப்போதும் போவது போல தை முதல் வாரத்தில் போக இருக்கின்றேன் யாழினி .நானும் உன்னோடு வரவா இந்தியாவுக்கு இந்த இயந்திரமான உலகத்தில் இருந்து கொஞ்சம் விடுபடணும் போல இருக்கு .


வேலையில் விடுமுறைகிடைக்கும் போது வீட்டிற்கு வந்தால் முன்னர் போல சந்தோஸம் இல்லை .

தமிழ்ச் சினிமாவில்  வரும் அமெரிக்கா மாப்பிள்ளை நிலை போல இது பட்டதாரி மாப்பிள்ளை, இது லண்டன் மாப்பிள்ளை என்று ஒரே கலியாணப் பேச்சுத்தான் .


என் நிம்மதியே கொட்டுப்போச்சு காதலே நிம்மதி பட ராதிகா போல.தனியாக  மனம்விட்டுப்பேச இப்ப யாரும் இல்லாத என் சுயநிலையை  நினைக்கும் போது வாழ்க்கையில் வெறுப்பாக இருக்கு.

 உனக்கு என்ன சந்தோஸமாக இருக்கின்றாய் யாதவன் .ஏன் இப்படி பைத்தியமானே நான் பையத்தியமானே கடல்ப்பூக்கள் பாடல் போல  ஏன் இந்த மயக்கம் இப்படி உன்னோடு நடுவீதியில் நின்று புலம்பும் இந்த நிலை எதுவும் புரியல எனக்கு!

முதலில் மன தைரியம் முக்கியம் யாழினி. மனதை  தளரவிடாத விழியில் வழியும் கண்ணீரைத்துடை முதலில்.

 யாராவது பார்த்தால் நான் பேச நினைப்பதெல்லாம் மோகினி நிலை போலகிவிடும் .

நேசிப்பு என்பது யாசிப்பு போல யார்? யாரை ,ஏன் ?எப்படி நேசிப்பது என்பது முன்வினைப்பயன்.

 எதிர்ப்பார்ப்புக்களும் கனவுகளும் எல்லாருக்கும் நிறைவேறுவதில்லை யாழினி.

நீ என்னோடு வருகின்றேன் என்று இப்ப சொல்லும் போது கேட்க சுகமான சுமைகள் போல ஆனால் நான் போவது ஆன்மீகப்பயணம் குருவுடன் சேர்ந்து  கூட்டத்தை வழிநடத்த உதவியாகத்தான்  எப்போதும் என்னை நம்பும் அவரை விட்டுப்பிரிய மாட்டேன் கட்சிமாறும் சட்டமன்ற உறுப்பினர் போல !

உன்னை அழைத்துப்போக தயாராக இருக்கின்றேன் .ஆனால் தனியாக அல்ல! உனக்குப் பிடித்தஒரு துணையைத் தேடிய பின் என்னோடு வா!  தமிழகம். கேரளா எல்லாம் நிச்சயம் நீ பார்க்க வேண்டிய ஆலயங்கள் எல்லாம் சுற்றிக்காட்டுவேன்!ஏன் தெரியுமா ,,?,ஏதிலி யாசிப்பு  பொய்முகம் அல்ல! இது உன்னை குத்திக்காட்டுகின்றேன் என்று நினைக்காத படிக்காதவன்  நான் ஏதிலி என்றுதானே நீ என் காதலை புரிந்துகொள்ளவில்லை ?



தொடரும்....

03 May 2016

தாகம் தீர்க்கவா.


எம்மவர் இசை ,எம்மவர் பாடல், எங்களுக்கான மேடை இதுவே மெல்லிசை என்பது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சந்தனமேடையின் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் .

80 இன் பின்னும் 90 களிலும் இலங்கைக் கலைஞர்கள் பலருக்கு இந்த மேடை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பது வரலாறு. இலங்கை மெல்லிசையின் தனித்துவம் மேலோங்க சந்தனமேடையில் மின்னிய பலரினை இனவாத யுத்தம்  காலச்சுழற்ச்சியில் பலர் மறந்தாலும்!மறைந்தாலும்

 எதிர்கால வரலாற்றுக்கு சான்றாக ஏட்டில் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் இருக்கு.

அரசகரும மொழித்திணைக்களம் இன்னும் இனவாத கொள்கையில் இருந்து மீளவில்லை என்பதை இலங்கை அமைச்சர்களே பொதுவில் பேசும் போது சாமானியர்கள் எதை எதிர்பார்ப்பது நல்லாட்சி இது  என்ற கோஷத்தில் !

என்றாலும் வரலாற்றில் அனுபவத்தில் இருந்து இந்த இணையத்தில் அங்கங்கே நானும் தனிமரத்தில்  80 இன்/90 இன் காதல்ஜோடிகள் தம் பெயரை மரத்தில்  கீறும் கோடு போல சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் பிரபு ,சபீத்தா ஆனாந் ஜோடி எழுதுவார்களே அப்படித்தான்))  நானும் எழுகின்றேன் தனிமரத்தில்)))


சந்தனமேடை  நிகழ்ச்சி இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு பிரதி சனி மதியம் வானொலியில் கேட்கும் அறிமுக இசையும் அதைத்தொகுத்த அறிவிப்பாளர்கள்/ளிகளின் குரல்களும் இன்னும் நாடு கடந்தாலும் காதில் ஒலிக்கின்றது .

மனமோ அங்கேயே இன்னும் நினைவைச் சிறைப்பிடிக்கின்றது.
 அடிக்கடி தில்லையகத்தார் துளசிதரன் சார் பின்னூட்டத்தில் கேட்பது  ?

எப்படி தனிமரம் இத்தனை பாடல்கள் ,இத்தனை திரைப்படங்களை , நினைவில் இருத்தி தொடருக்குள் புகுத்தும் விந்தை ?

அந்த திறமையின் சூட்சுமம் என்ன என்று ?

இதில் ரகசியம் ஏதும்மில்லை  !

வானொலி அறிவிப்புக்கு முதல் திறமையே சுயதேடல் மெல்லிசை,துள்ளிசை,சினிமா பாடல்களும் ,சிறந்த படங்களும் அதில் இருக்கும் இலக்கிய ரசனைகளும் ,சுய வாசிப்புக்களும் தான் நிகழ்ச்சி படைக்க ஆக்கபூர்வமான வழிகாட்டி. அதனை எப்படி   நேயர்களுக்கு ஊடுகடத்துவது என்பதே  ஒரு வானொலி அறிவிப்பாளர்/ளிகளின் பிரதான வெற்றியாகும் .

என் சிறுவயதுக்கனவு வானொலியோடு பயணிக்க வேண்டும் என்பதே!

இசை என்னை அதிகம் செதுக்கியும் , சிலதில் சிதைத்தும் இருக்கின்றது என் பால்ய காலத்தில் !

அதனால் தான் இன்றும் மீள அசைபோடும் மாடுபோல  தொடர்களில் பாடல்களையும் ,கவர்ந்த படங்களையும் ஒன்றினைத்து தொடர் பேசுகின்றேன் )))


புதியவர்கள் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததா ? எந்த காலத்தில்? பாடல் இருந்ததா??  என்ற சிந்தனைத்தேடலுக்கு ஒரு உந்து சக்தியை  தூவிச்செல்கின்றேன் தொடரில்)))

தொடருக்கு பாடலும், சினிமாவும் மெருகூட்ட வழிகாட்டியதே இசையும் கதையும் என்ற இலங்கை வானொலியின் நிகழ்ச்சிதான் !

பல பிரதிகள் எழுதினாலும் அதில் ஒலிபரப்புக்கு தேறியது  சிலது என்றாலும் அந்த வெற்றியும் கூட  எழுத்துப் போதையை தந்ததும் அதை பின்புலமாக்கி தொடர்கதை எழுதி பட்ட வடுக்கள்  இன்னும் மறக்கமுடியாது.

எத்தனை கால காத்திருப்புக்கு பின் மீண்டும் வலையில் இந்த தொடர்  பெற்ற வெற்றிப்போதை!


 இன்னும் தொடர்கள் எழுத உற்சாகம் தருகின்றது இந்த தனிமரத்துக்கு))).

பாடல் பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றி நண்பர்களுடன் விடிய விடிய பேசவும் ,எழுதவும் இந்த மெல்லிசையுடன் தொடர்பு படவர்களின் நட்பும் என்னையும் இன்னும் கடல்கடந்தும் முகநூலில் தேடி வரவைக்கின்றது!

அப்படியான பாடல் விரும்பிய நேயர்களில் நானும் ஒருவன் .


விரும்பிய ஒரு பாடல் பற்றி நீண்ட நாள் எழுதணும் என்ற ஆசை !ஆனாலும் நடுவில் சில பக்கத்தைக் காணவில்லைப்போல பொருளாதார தேடல்))


அருந்ததி சிறிரங்கநாதன் -இலங்கை இசைத்துறையில் ,ஊடகம் ,இலக்கிய விமர்சனத்துறையில் என தெரியாதவர்கள் இருக்கமுடியாது .வீணை இசைப்பதில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற ஒரு வித்தகி .அருந்ததியின் மகன் 90 இன் அடுத்தலைமுறை இசையமைப்பாளர் சாரங்கன் சிறிரங்கநாதன். .இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக இருந்தவர் அருந்ததி ஒரு பெண்ணிலைப்போராட்டவாதி .

சிறிதர் பிச்சையப்பா-ஈழம் /இலங்கை என பிரபல்யமான பல்துறைக்கலைஞன் சிறிதரின் தந்தையும் ஒரு மூத்த இசைக்கலைஞர் இலங்கை கலைக்கூடத்தில் .சிறிதரின் மனைவி நிலாமதி சிறிதர் பிச்சையப்பா பிரபல்யமான பாடகி ( சிறிதர் இசைக்குடும்பம் பற்றி வேற பதில் எழுதுவேன்)

கணேஸ் ராஜ்-சந்தனமேடையில் அதிக இசையமைப்பு இவருடையதாகத்தான் இருக்கும்  என்பது நினைவுகள். வானொலி தாண்டி தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இசையமைத்தவர் இவரிடம் கொழும்பில் இசை கற்றவர்கள் பலரில் சிலர் பின் குறுந்தகடு வெளியீடு செய்ததும் வரலாறு அதனை இங்கே காணலாம்))http://www.thanimaram.org/2012/03/blog-post.html

மூவரின் கூட்டிணியில் உருவான இந்தப்பாடல் என்னைக்கவரர்ந்ததுக்கு முதல் காரணம் இசை அதுவும் ஒக்ரோ பாட் என்ற தோல்வாத்தியம் மற்றும் ஓகன் ஈழத்து மெல்லிசையில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகள் எனலாம்.

மழையில் நனைவது போல ஒரு சுகம் இந்த பாடலில் அதுவும் வாலிப்பத்தில் மலைகளில் நனைந்து இயற்க்கையோடு காதலில் மயங்கினால் எப்படி இதயம் குளுருமோ! அப்படி இன்றும் நெஞ்சைக்கிள்ளும் இந்த பாடல் நீங்களும் ரசிக்க  இங்கே-https://youtu.be/DKf7S-tOGCI