30 March 2015

முகம் காண ஆசையுடன்--6

முகம் காண ஆசையுடன் -1,2,3,4.5..


 இனி...


எதிர் பார்த்தேன் இளங்கிளியே உனைக்க காணலையே? என்ற பாடல போல தான்  !

வார இறுதி ஒருநாள் விடுமுறையான ஞாயிறு ஓய்வுநாளில் சுமாவின் ஸ்கைப் அழைப்பு வரும் என்று காத்திருந்தே முதல் மரியாதை நடிகர் திலகத்தின் ஊயிர் ஊஞ்சல் போலத்தான்  அசுரனும் இலங்கையில் இருந்து முகநூல் நண்பியின் அழைப்பு நேரில் வராத போது தன் இணையத்தினை; நீயும் உன் நட்பும் போய்த்தொலை என்று குடிபோதையில்தான் பருகிய  வெற்று மதுபாண போத்தலை வீசி விட்டு போகும் குடிகாரன் போல எழுந்து போன நிலையில்!

 அவனின்  நண்பன் அகிலன் . என்ன மச்சான் ?மனசு சரியில்லைப்போல? இந்தா ஒரு பியர் குடி !

இன்று தானே உனக்கு விடுமுறை .தினமும் என்னைக்கவனி போல ஒரு நாளைக்கு 15  மணித்தியாளம்  காசுக்கும் மீதி 3 மணித்தியாளம் வெட்டியாக அறிவை வளர்க்கின்றேன்; ஆழ்ந்து நூல்கள் படிக்கின்றேன் ;நட்புக்கள் என்று  முகநூல்/ வலைப்பதிவு என்று வெட்டியாக அழையும் உன்னை சிலகாலம் பாரிசில் அறியும் ஒருவன் நான் என்றாலும் !

இந்த வீட்டில் சக நண்பன் போல உன்னையும் என்னுயிர் தோழன் பாபு பார்க்கின்றேன்

 இப்ப சில மாதங்கள் நீயும் ஒரு வலைப்பதிவு/முகநூல் என்று ஏதோ போதையில் பதவி தேடி ஓடும் முன்னால் ஜனாதிபதி போல அமைதியில்லாமல் போலி விளம்பரம் தேடுவது போல சிலரின் பதிவை நாடி ஓடுவதும்; அதன் சுருக்கம் பற்றிப் பேசுவதும் ,முகநூல் நட்பு என்று அழைப்பிள் அதிரடிப்படைநாயகன்  அம்மவாசை பாத்திரம்  போல பம்முவதும் ஏன்??

 என நான் கனம் கோட்டார் அவர்களே என்பது போல உன்னைக்கேட்க மாட்டேன் நண்பா!


முகநூலில் ஏதாவது நல்ல விடயம் அலசிஆராய முடியுமா  ?,

நிச்சயமாக இல்லை!

சும்மா பொழுது போக்கு போதைக்கு ஒரு நடிகையின் / நடிகரின் விடயம் அல்லது ,அரசியல் நையாண்டி பேசி நாமும் ஒரு பத்தி விமர்சனப்பதிவு எழுதும் தகுதி இருக்கு! என்று நமக்கு  நாமே பட்டம் சூட்டும்  பரிவட்ட மேடைபோல மட்டும் தான் மச்சான் முகநூல் இது என் கருத்து நாளை எனக்கு தாலி அறுப்பு போல  வேண்டாம் மச்சான்! .


உண்மையான நட்புக்கு இங்கு பலருக்கு சிரிக்கும் மேடை போல ஆமா நீ பாரிஸ் உன் உயிர்காப்பாற்ற வந்தாயா ?,

இல்லை உழைத்து இலங்கையில் சொந்த வீடு கட்ட வந்த  வெற்றிக்கொடி கட்டு படத்தில்  சார்லி போலவா  மச்சான்??

 வெளியில் உன் போலி முகம் எதுவோ நான் அறியேன் .

உனக்காக ஒருத்தி உன்னை நேசித்த பாவத்துக்காக இன்னும் முகம் வெளியில் காட்டாமல் இலங்கை இனவாத நாட்டில்  சிறையில் பூத்த சின்னமலர் போல இருக்கும் பூஜா பற்றி சிந்தித்தாயா??


 ,,அவளைப்பற்றி ஏதாவது ஜோசித்தாயா மச்சான் அகிலன்!பூஜா என் உயிர் மச்சான் உனக்கு எப்படி புரியவைப்பேன் நான் சிறையில் வாடும் சின்னப்பறவை போல இலங்கை இனவாதம் பற்றி சிலதை முகநூலில் போலி முகத்திலும், வலைப்பதிவில் ஊடக பத்தி எழுதும் நாளைய செய்தி  போலவும் எழுதினாலும் என் நேசம் நீ எப்படி அறிவாய் இன்னும் ஒரு பியர் தான் குடிப்போம் போதை சிலதை நிஜம் சொல்லும் !......வண்ணப்பூ வவுனியாவின் தேவதை  என் ஆசைக்காதலி அவள் பூஜா.............



 தொடரும்..........

26 March 2015

முகம் காண ஆசையுடன் -5


முகம் காண ஆசையுடன் -4
/////////////////
 இனி......
-----------------

இணைய நினைக்கும் போதெல்லாம்
இசைக்கும் பாடல் போல நீயும்
இல்லறத்தில் இணைய வேண்டிய ஆசையில்
இவன் இசைக்கும் பாடல்!

இங்கும் கேட்குமோ உன் குரல்?,


 என்று கவிதை எழுதிக்கொண்டிருந்தான் அசுரன் . இன்று எப்படியும் சுமாவுடன் ஸ்கைப்பில்  நேரடியாக பேச வேண்டும் சந்தித்தவேளை நாயகன் போல காத்து இருந்தான் ஆவலுடன் பாரிசில்.!



 விரும்பிய நட்புக்களுடன் நேரில் பேசும் வசதியை ஸ்கைப் என்ற புதிய வருகையின் தொழில்நுட்பம் உதவி செய்தாலும் இலங்கையில் இணையத்தொடர்பு என்பது நினைத்த நேரத்தில் உதவாத ஒரு அயல்தேசம் போல இழுத்தடிக்கும் தந்திரம் கொண்டது!


!உடனே கைபேசியில் இருந்து தூரதேசம் அழைத்தால் மாதமுடிவில்  அதிக கட்டணம் போடும்  இலங்கைக்கு உதவி செய்த  சீனா போல!


 என்ன செய்வது தொடர்பு அவசரம் என்றால் உதவி நாடிப்போவதில் என்ன குறை வந்துவிடப் போகுது அயல்நாட்டிடன் இன்னும் அடிமை போல இருந்த காலம் இப்போது இல்லை!

 நமக்குத்தேவை இப்போது அவசரமாக என்ற பின் ஏன் அவதிப்படுவான் என்றாலும் அசுரனின் கைபேசி இலக்கத்தை வாங்கி வைத்து இருக்கவில்லை மத்திய வங்கியில்  இருக்கும் தங்கநாணயம் போல!

 என்றாலும் இப்போது நிவேதாவிடம் கேட்களாம்!

 ஆனாலும் அவளிடம் ஏதும் காரணம் சொல்ல வேண்டும். பேசாமல் இணைப்புச்சதி செய்கின்றது நம் ஆட்சிக்கு எதிராக என்பது போல ஒரு ஸ்டேஸ்ச் போட்டாள்  நாளை அசுரன் முகநூலில் அறிந்து கொள்வான் என்ற சிந்தனையில். கொழும்பு  14 கிராண்பாஸ் வீதியில் இருந்த தொலைத்தொடர்பு சேவை மையத்தில் இருந்து வெளியேறினாள் சுமா.


இப்பவே  இப்பவே  என்ற பாடல் போல இதோ அழைப்பாள் என்று இணையத்தில் காத்து இருந்தான் ஜனாதிபதியை சந்திக்கக் காத்து இருக்கும் வெளிநாட்டு ஊடகவாதி போல அசுரன் !


 சிலரின் அழைப்பு சிலருக்கு சிலநேரத்தில் போதையூட்டும் இது பருவத்தின் சித்து விளையாட்டுப்போல என்று நினைத்துக் கொண்டான் அசுரன் வாடகை கொடுத்து  தங்கியிருக்கும் அறையில் இருக்கும் இன்னொரு நட்பு அகிலன் .

அந்தி  பூத்திடும்  இந்த நேரத்தில்
அக்கரையில்  இருந்து
அன்பில் யாரின் அழைப்புக்காய்
 அலைகின்றான் அகதியான
அன்பு நண்பன் அழுத்தினான்
அடுத்த பாட்டுக்கு கவிதை ஒன்று
அக்கரையில் இருக்கும் வானொலிக்கு


அதில் ஒலித்த பாடல் இதுவோ  [[[[[[[




தொடரும்.......