03 June 2014

பாடும் நிலா வாழ்க!

பாடும் குரலில் நீங்கள் ஒரு பாடல் பாடும்  பெருமலை
பல்மொழியில் பல்லாயிரம் பாடல்
பாடிச்சென்றாலும் பணிவில்
பலரும் போற்றும் இன்றும் பாலகன்!


பார்த்தேன் ஒரு பாட்டுக்கச்சேரியில் நேரில்
பாரிஸ் வர முன்னர் !


பாட்டுத்தலைவன் இவன் என்று
பாதையில் நின்று உள்நுழைந்து
பலகாசு கொடுத்து பார்த்த தருணம்
பரவசம் கடவுளை நேரில்ப் பார்த்த
பக்தன் போல!
பலபாடல் . திரையிலும் மேடையிலும்!
  பாடினாலும்
பல ரசிகர்களுக்கு
பணிந்து போகும் உங்கள் பண்பு!


பலருக்கு இன்று ஏனோ இல்லை! அதுதான்
பல பாடகர்கள் இன்று வந்து போனாலும்
பாலசுப்பிரமணியம் சார் என்று
பல அறிவிப்பாளர்கள் பாடல்
பல ஒலிக்கவிடமுன்னர்
பாராட்டுவது.!


 பாலசுப்பிரமணியத்துக்கு இன்று இன்னொரு
பருவ ஆண்டு கூடும்நாள்.4/6/...
பண்இசை  போடும் இசையில் சிகரம் இவர்!


பாலகன் தனிமரத்தில்
பல்லாண்டு வாழ்த்துப்பா
!


பல்லாண்டு வாழ்த்துப்பூ!

பல்லாண்டு வாழ்க
பாரிஸில் இருந்து
பாடலுடன் வாழ்த்துக்கின்றேன்!
பாலு அண்ணா இன்னும்
பல பாடல் பாட வேண்டும்!

பாடல் பிரியன் பிரார்த்துக்கின்றேன்!


8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

பாடும் நிலாவை வாழ்த்துவோம்

கரந்தை ஜெயக்குமார் said...

பாடும் நிலாவை வாழ்த்துவோம்

MANO நாஞ்சில் மனோ said...

பல்லாண்டு வாழ்க வாழ்க...பாடல் மழையை பொழிக பொழிக...

திண்டுக்கல் தனபாலன் said...

பாட்டுத்தலைவனுக்கு பல கோடி வாழ்த்துக்கள்...

unmaiyanavan said...

பாடும் நிலாவிற்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

தமிழில்,எத்தனை ஆயிரம் பாடகர்கள் வந்தாலும் பாலுவுக்கு நிகர் பாலுவே!அதிகம் பாடல்களை அவருக்காகப் பாடவில்லை என்றாலும்,அழைத்து வந்த பொன்மனச் செம்மல்,தீர்க்கதரிசி!!இனிய வாழ்த்துக்கள் பாலு!!!

அம்பாளடியாள் said...

என் அபிமான பாடகர் இவர் இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடனும்
தீர்க்காயுசுடனும் வாழ வேண்டும் என்று நானும் இவரை வாழ்த்தி வணங்குகின்றேன் சகோதரா !

தனிமரம் said...

வாழ்த்திய அணைவருக்கும் பாலு ரசிகன் தனிமரத்தின் நன்றிகள்.