20 June 2016

யாசிக்கும்-- ஏ-தி-லி -13

முன்னர் கதை இங்கே-http://www.thanimaram.org/2016/06/12.html

காதல் என்ற உணர்வு ஒருவனுக்கோ ,யுவதிக்கோ ,உள்ளத்தில் காதல்வேதம் என பூப்பது  எப்போது ?

வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதை போலவா ,இல்லை தபூ சங்கரின் இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கும் காதல் பிறந்திருச்சு என்ற கவிதை போலவா ?

நேசம் வரும் பருவம் என்ன ?இளமைக்காலங்களா?ஆராட்சிகள் பலதில் இளமை ஊஞ்சல் ஆடுகின்றது  ,காதலுக்கு மரியாததை  ,முதல் வசந்தம் பள்ளிப்பருவத்தில் என்பதா !

கன்னிப்பருவத்திலே என்பதா. இல்லை பூந்தளிர் போல மாப்பிள்ளை களைகட்டும் இல்லையேல் காதல்   முத்தினகத்தரிக்காய் போல !

இருபது வயதுவரை பெற்றோரின் வசமிருந்தேன்!இருபது நிமிடத்திலே உன் வசமாகிவிட்டேன்   காதல்கொண்டேன்  நீ பாதி நான் பாதி ,கண்ணால் பேசவா ,

இல்லை இன்னும் அடிப்படை இனப்பிரச்சனைக்கு முக்கியகாரணம் இனவாதசெயல் போக்கு என்பதை அறியாத இலங்கை ஜானாதிபதி போல காதலும் இன ஈர்ப்பு என்பதா ??

ஏன் இந்த மாற்றம் டுயட் பட கவிதை போல் கண்ணிருந்தால் வாசித்துப்போடி என்பது போல இல்லை யாழினி   என் காதல் .

உன்னைப்பார்த்த அந்த கார்கால கார்த்திகை தீபஜோதி அந்த ஒரு நாள் போல அல்ல .

வருஷம் எல்லாம் வசந்தம் போல இருதயம் இடமாறித்துடித்தது டிங்டோங் கோயில்மணி போல , எதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் போல அல்ல யார் இந்த தேவதை என்று நெஞ்சம் துள்ளியது! நேசிப்பில்  மனமோ உன்னருகில் நான் இருந்தால் படம் போல  காலம் எல்லாம் என் பொண்டாட்டி நீ என்று என்றோ எழுதிய தீர்ப்பு போல என்னைக்கொன்றது !

உனக்கு  உண்மை தெரியுமா யாழினி ?நானும் அகதியாக இடம் பெயரமுன் என் தொழில்கள் பல பூர்வபூமியில்.

என்றாலும் நான் மதித்தது வானொலியோடு பயணிக்க யுத்த இடப்பெயர்வில் என் ஆசையைவிட  பொருளாதார கடமை என்னை அழைத்தது. விற்பனைப்பிரதிநிதி வேலைக்கு.!

நெஞ்சம் எல்லாம் பாடல்களும், கவிதையும் கரைகடந்த வெள்ளம் போல பாய்ந்தாலும் .

ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதம் பண்ணாதீங்க போல பல இடங்கள் பயணித்த போதும் பார்வைகள் பல பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன், என்று கொல்லவில்லை சிந்தையை .

எங்கேயும் எப்போதும் போல   என் அடிப்படை உயிர் பாதுகாப்பை  கேள்விக்குறியாகிய போதுதான்  சிறையில் சில ராகங்கள் போல நானும் புலம்பெயர்ந்தேன் .


பொருளாதார தேடலுக்காக அல்ல விதியின் விளையாட்டு உன்னைச்சந்திக்க வைத்தது என் வாலிபம் பூத்தது  இப்படி போல


 யாழினி!





தொடரும்.

4 comments :

Unknown said...

காதல் விதை விழுவது எப்போது என்கிற உங்கள் ஆராய்ச்சியை ரசித்தேன் :)

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன்
தொடர்வேன்
தம +1

”தளிர் சுரேஷ்” said...

அருமை! தொடர்கிறேன்!

வலிப்போக்கன் said...

அருமை..... நண்பரே...