07 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்--19

புலரும் பூபாளப் பொழுதில்.
 வாப்பாவுடன் ரிஸ்வானா,பார்த்திமா மூவரும் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்தார்கள்.

 இயல்பாக இந்தப்பக்கம் நானும் வந்தேன் !

என்ன வாப்பா தூரக்கிளம்பீட்டிங்க போல  ?
இல்ல
மவன்.

 தாத்தாவை  ஒருக்கா ரிஸ்வானா நிக்கா விடயமா போய் அழைப்புக் கொடுக்கப் போறன்.

 அப்படியே பார்த்திமாவையும் ஊர் பார்க்க கூட்டிட்டுப் போறன்.

 நல்லம் பாய் போயிட்டு வாங்க நமக்கும் நாளை முதல் கம்பளைக்கு பொறுப்பாக வேலை செய்யபோகச் சொல்லியிருக்கிறார் பெரியவர்.

 அதனால் இப்பவே போற  வேலைகள் பார்க்கனும்.

 கவனமாக போய் வாங்க பாய்! போனதும் எனக்கு பேசுங்க.

 .என்ன பார்த்திமா மெளனம்!

 இல்ல நானா நல்லத்தானே இருக்கின்றன்.

 சொல்வாயே வாய் திறந்து?

அல்லாவின் ஆணைப்படி எல்லாம் நடக்கும்.

என்னைச் சொல்லிச் சொல்லிக் குற்றம்மில்லை .

நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்!

போடாப்போடா புண்ணாக்கு!

சில் வண்டு என்பது சில காலம் வாழ்வது!

இதயமே நாளும் நாளும் காதல் பாடவா?

ஆசையே அலைபோலே நாம் எல்லாம் அதன் மேலே!

காலம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்தக் காதல் !


நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் .

 கடவுள் உள்ளமே
 கருணை  இல்லையோ!

ஈஸ்வர அல்லா இடையில் வா வா கண்ணாவா ??

மதங்கள் கடந்தால் ?

காதல் என்பது பொது உடமை படிப்புத் தான் நம் உடமை

நானா !


நான் நல்லவன் இல்லை
கெட்டவன் தான்.

போய் வா நதி அலையே நல்ல பூச்சுடும் நாள் பார்த்துவா  .

நன்றி சொல்லிப் பாடுவேன் நாயகி நான் ஆவேன்!

நலம் வாழ் என் நாளும் நல்வாழ்த்துக்கள்!

என்ன இரண்டு பேரும்
 லலித்தாவின் பாட்டுக்குப் பாட்டுப் போட்டிக்கு பங்கு பெறப்போர்கிறீங்களா?

இல்ல ரிஸ்வானா பிடித்த பாடல்களை வரிசைப்படித்தினோம்!

" சரி நீங்கள் போய் வாங்கோ  சொகுசு பஸ் ரோசா வாகனம் காதல் ரோஜாவின் மயக்கத்தில் இருக்கும்
 பார்த்திமா வினை வெள்ளை வான் போல  இந்த நகரத்தின் இருப்பில் இருந்து வெளியேற்றிக் கொண்டு போனது!

 அதன் பின் அவளை நான் 5வருடங்கள் சந்திக்கவில்லை!

வாகனம் போனதன் பின் வேலைத்தளத்திற்குப் போய் விட்டு ரவியின் வீட்டை போனேன் .

பள்ளிக்கூட நாள்
 என்பதால் ரவி வீட்டில் இருக்க மாட்டான் .குசுமாவதி அம்மாவுடன் எல்லாவற்றையும் கதைக்கலாம் என்ற என்னத்தில் போனேன்.

.காதல் பிரிவு என்றாள் ரவி போன்றவர்கள் டமரோன்,நெஞ்சா கொசுத்திரி, போன்றவற்றை எப்படிச் சத்தம் இல்லாமல் தொண்டைக்குழியின் ஊடாக நெஞ்சுக்குழியில் நஞ்சாக்குவார்கள் என்பதைத் தெரிந்தவன்.

 இப்படி ஒரு முட்டாள்த்தனம் அந்தச் சூழ்நிலையில் நடக்கும் இல்லையோ  கட்டுப்பாடு அல்லத பகுதியில் போய் மறவர் அணியில் கலந்து போவார்கள் .

தன் இன்னொரு தேடலாக இருக்கும் வழிகள்.

 இதை எல்லாம் எப்படித் தடுக்கலாம் என்ற சிந்தனையில் வீட்டின்  உள்ளே சென்றேன்.





" வாங்க துரை.
 இப்ப எல்லாம் ஒரே பிஸி போல வீட்டை எல்லாம் வாரது இல்லை"

 இல்ல அம்மா கொஞ்சம் சோலிகள்!

தொடரும்.

டமரோன் -பூச்சி நாசினி.
நெஞ்ஜா -நுளம்புத்திரியின் வியாபார சின்னம்

05 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-18

எனக்கு என்ன செய்யிறது என்று தெரியல? மன்னார் அனுப்பட்டா மூத்த மவ கூட!
 இல்ல பாய் .

மன்னார் கிட்ட என்பதால அவர்கள் இன்னும் நெருங்கி வர சாத்தியம்  இருக்கு
வாப்பா!

 நான் சொல்லுவது உங்களுக்குச் சரி என்று பட்டால்!

 பார்த்திமாவை உங்க தாத்தா வீட்டில் இருந்து படிக்க வழி செய்யுங்க. என்றேன்.

 அவர் தாத்தா இருக்கும் எழில் கொஞ்சும் மலையகத்தின் அந்த நகருக்கு அனுப்பும் படி கூறவும். அவர் முகக்தில் ஆனந்தம் ஒரு நிமிடம்!
" அதே மறு நிமிடம் வீட்டிலும் மற்ற  உறவுகளுக்கும் உடனே என்ன சொல்வது என்ற தோரனையில் வட்டாம் அவர் முகத்தில்!

எல்லாப் பக்கமும் ஜோசித்த போது இது சரி என்று பட்டதும். வாப்பாவும் பார்த்திமாவை வேறு இடத்திற்கு  அனுப்புவம் என்று உடன் பட்டார்.

 இது யாருக்கும் தெரியக்கூடாது பாய்.

 சின்னச் சின்ன விடயங்கள் வாழ்வில் சூறாவளியைக் கொண்டரும்.

" காதலின் பாதையில் போவோருக்கு நாம் போடும் அணை எரிகின்ற தீயில் எண்ணை வார்ப்பதைப் போல்!

 படிக்க வேண்டிய காலத்தில் இது கூடாது என்பது வாப்பாவின் தீர்மானம் .

அதை நானும் சபாநாயகர் போல் ஆதரித்தேன்.

" எப்படி மவளைக் கூட்டிப்போவது எனக்கு ஒன்றும் புரியுது இல்ல மவன். மூளை எல்லாம் மூங்கில் காடு போல் திக்குத் தெரியுது இல்ல.


"வாப்பா போனவாரம் நமக்கு நடந்தது எல்லாம் நல்லதுக்கு என்று ஜோசித்துப் பாருங்க."

அதன் படியே செயல்படுங்க.

 நாம யாருக்கும் கெடுதல் செய்யல. சில காலம் சென்றதும் வாழ்வின் அர்த்தங்கள் புரியும் .

".மவன் நீ உண்மையிலே கெட்டிக்காரன். உங்கப்பா மிகவும் தெளிவான பார்வையுடன் வளர்த்திருக்கின்றார்.

 நான் நாளைக் காலையில் தாத்தா வீட்டுக்குப் போறன் பார்த்திமாவுடன்.

 நல்லம் வாப்பா கூடவே ரிஸ்வானாவையும் கூட்டிக் கொண்டு போங்க அப்பதான் இங்கு
இருப்போருக்கு இயல்பான பயணமாக இருக்கும் .

"இல்லை என்றாள் உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதே

!சரிப்பா நீ காலையில் பஸ் நிறுத்துமிடம் வந்துவிடு.

 இப்ப எங்க போகப்போறாய்?

 வாப்பா போன வாரப் பிரச்சனை இன்னும் முடிக்க வில்லை.

 அங்க இனித்தான் கடதாசிப் பையுடன் போகப்போறன்.

இவனுங்கள் வியாபாரம் செய்ய விடமாட்டாங்க.

 என்ன செய்வது பாய் தொழில் என்றாள் பலதும் வரும் தாங்கனும்.

 சரிப்பா இப்பதான்  மனம் தெளிந்த நீரோடை போல இருக்கு இன்ஸா அல்லா! .
 .
    // கடந்த வாரம் இப்படித்தான் வியாபார விடயத்தால் தேவன் முதலாளி,மொயூத் வாப்பா ,நான் என மூவரும் சில துயரங்களை தாண்ட வேண்டிய நிலை.

 வெளிப்பார்வைக்கும் உள் வீட்டுப் பார்வைக்கும் ஒவ்வொருத்தனின் செயலும் வேறுபாடு கொண்ட நிகழ்வுகள்.!

 எரிமலை போல் ஈழத்தைப்  பலர் பார்ப்பது ஒரு யுத்த பூமி என்று மட்டும் தான்!


  t// யுத்தம் என்ற ஒரு கொடிய அரக்கனிடம் முகம் கொடுப்பது ஒரு புறம் என்றாள்!

 குறுநில மன்னர்களும் மக்களுக்கா போராட வெளிக்கிட்டு கொள்கை மாறி ஆட்சி பீடத்தின் பின்னே சென்று மாற்றுக்குழு எனப் பலராலும் அழைக்கப்படும் பலர்!.


 இங்கு எங்கும் இருப்பார்கள் அவர்கள் பல தளங்களை வைரவப்புளியங்குளம், ,பண்டாரி குளம்,நெளுக்குளம்,கோவில் குளம் போன்ற இடங்களில் மண்மூட்டையின் துணையுடன் தகரத்தால் வேலியடைத்து வீற்று இருப்பார்கள் வேள்வி வளர்க்க.

 இவர்களுக்கு இங்கு யார் யார்  வியாபாரச் சந்தையில் முன்னுக்கு இருக்கின்றார்கள்  என்று மோப்பம் பிடிப்பார்கள். திறமையாக பின் உடும்புப்பிடி பிடிப்பார்கள்.

 அன்பளிப்பாக இவ்வளவு தொகை கொடுக்கனும் என்று ஆசையாக பேச வரச் சொன்னார்கள் என்று போனால் நம் பக்கம் சனியேஸ்வர பகவான் சத்தம் இல்லாமல் தலையில் நடணப்புயலாக  இருக்கின்றார் என்று நோக்க வேண்டியது தான்!

 முரண்டு பிடித்தால் அவர்கள் கருவி முணை  பல விடயம் சொல்லும்!
தொழில்
நிலையத்தில் // பாதுகாப்புச் சேனைகள் வியாபார நிலையைத்தை சீல் வைப்பார்கள் மறுநாள் சஞ்சிகையில் பிரபல்ய வர்த்தக நிலையைத்தில்   தேங்காய் சாக்குக்கிடையில் வெடி பொருள் மீட்கப்பட்டது என கொட்டை எழுத்தில் வரும்.

 சமயத்தில் முதலாளி வீடுகள் இனம் தெரியாத குழுவால் வீட்டுக்கு கல் எறிதல் ,தொலை பேசியில் அன்புத்தொல்லை  என
தொடர்கள் நீளும்.

 முடிவு கொண்டு வாரும் கடதாசிப் பை !

இல்லையேல் வெளியேறுவது எங்கனம் ?வீட்டில் வயசுப் பெண்கள் இருக்கும் இடத்தில் யார்தான் மோதுவார்கள்.


 அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து விட்டு வீட்டில் வந்து பெருமிக் கொண்டு .வேங்கடவா ராமா!

 ஏன் இந்த வேதனை தந்தாய் என்று புலம்பும் வியாபாரிகள் எல்லாம் மறுநாள் தத்தம் அலுவல்களைச் செய்வார்கள்.

 சில வாரத்தின் பின் தான் இவ்வளவு கொடுத்தேன். என்று உண்மையானவர்களிடம் சொல்லி உள்ளத்தைத் தேற்றுவார்கள் .

இப்படிக் கொடுக்காதவர்கள் சிலர் ஒழித்தோடி தலைநகரில் இருந்தாலும், உருப்படியான சட்டதரனியை கையில் வைத்திருக்கும் வசதி எல்லாருக்கும் இருப்பதில்லையே!

நாங்களும் போனவாரம் எல்லாம்
வீட்டில் இருந்து இந்த சந்தடியில் சட்ட ஆலோசனையாக இருப்பதை பிரித்துக் கொடுப்போம் என்று முடிவானதன் பின் அவர்களை நாடி தேவனுடன் நானும் போனதால் தான்  பார்த்திமா வீட்டில் சாப்பிடவில்லை!

  இத்தனை எங்கள் வாழ்வாதார நிலையில் இந்த விடலைக்காதல் என்ற இன்னொரு அம்பு பட்டு துடிக்கும் கர்ணன் நிலை வாப்பாவுக்கு!

  வெளியில் இவர்கள் காதலுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்கள் பார்த்திமாவைத் தூக்குவது தான் முடிவாகச் சொல்லுவார்கள்.

 அதனால் வரும் பின் விளைவுகள் .இன்னொரு குழு இவர்களை எப்படி அரசியல் செய்யும் எனதை அறிந்த படியால் தான் இந்தக் காதலை மகாவலி கங்கையைப் போல் பிரித்து விடனும் என்ற திட்டத்தில் முதல் கட்டம் பார்த்திமாவை இடம் மற்றுவது என்ற  ஜோசனையை வாப்பாவிடம் சொன்னது.!
அந்த நேரத்தில் சக்தி வானொலியில் லோசனும் )கெளரியும்  தொலைபேசியில் கேட்ட பாடலாக இப்பாடலை  ஒலிக்க

விட்டனர்!


தொடரும்