08 March 2016

அந்தியில் உதயம் அவசியம்!

இன்றைய நவீன காதல் எதில்  போய் முடியுமோ?,பேஸ்புக், வாட்சப். என்ற இணையத்தில் பல தேசம் நோக்கி பணம் தேடி ! அதுவும் புலம்பெயர் வாழ்வு என்ற திக்கு தெரியாத, பொருளாதார ,சமூக. கலாச்சார வாழ்வாதார யாதார்த்த உலகில்  இன்றைய தலைமுறையின் இடைவெளியை காலத்தின் பதிவாக வந்திருக்கும்பொதுவெளியில் காலச்சுவடு  இந்த யாதார்த்த உலகையும் நீங்களும் காணுங்கள்!


குறும்படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.முதலில்!!!

காட்சி இங்கே-












06 March 2016

அஞ்சலி!!

இழப்பு என்பது இயற்க்கையின்
இந்த உலக நியதி !
இதுதான் பதிவு என்று
இந்த ஆலயம் என்று
இன்முகம் தாமரை போல
இவரை வலைச்சரம் மேடையில்
இன்றைய வெள்ளி என்று
இந்த தனிமரமும் அன்பில் யாசித்தவன்
இன்னும் தனிமெயில் என்று நேசித்தவன்
இந்த இணையம் ஊடாக நெஞ்சம் தொட்டவர்!


இன்னும் வலையில் பல
  இறைவன்  இருக்குமிடம்பற்றி  எழுதிய
இனிய படைப்பாளி!


இன்று 9/2/16
இயற்க்கை எய்தினார் என்ற
இன்றைய செய்தி என்னையும்
இரங்கல் பதிவு செய்ய கால தேவன்
இறைவனின் செயல்! இவரின்
இழப்பு வலையில்  பேரிழப்பு !ஆத்மா
இறைவன் காலடியில்
இணையட்டும் என்று
இரந்து பிரார்த்திக்கின்றேன்!.

இன்னும் செய்திகள்
 இங்கே-http://tthamizhelango.blogspot.com/2016/03/blog-post_6.html

இனி யார் இந்த ஆலயம் என்று
இனிய காட்சிப்படங்களுடன்
இணையத்தில் ஏற்றுவார்கள்!
இறைவா உனக்கு ஏன் இந்த அவசரம்!

இந்த அன்னையை
இத்தனை சீக்கரம் அழைத்தாய்!