06 March 2016

அஞ்சலி!!

இழப்பு என்பது இயற்க்கையின்
இந்த உலக நியதி !
இதுதான் பதிவு என்று
இந்த ஆலயம் என்று
இன்முகம் தாமரை போல
இவரை வலைச்சரம் மேடையில்
இன்றைய வெள்ளி என்று
இந்த தனிமரமும் அன்பில் யாசித்தவன்
இன்னும் தனிமெயில் என்று நேசித்தவன்
இந்த இணையம் ஊடாக நெஞ்சம் தொட்டவர்!


இன்னும் வலையில் பல
  இறைவன்  இருக்குமிடம்பற்றி  எழுதிய
இனிய படைப்பாளி!


இன்று 9/2/16
இயற்க்கை எய்தினார் என்ற
இன்றைய செய்தி என்னையும்
இரங்கல் பதிவு செய்ய கால தேவன்
இறைவனின் செயல்! இவரின்
இழப்பு வலையில்  பேரிழப்பு !ஆத்மா
இறைவன் காலடியில்
இணையட்டும் என்று
இரந்து பிரார்த்திக்கின்றேன்!.

இன்னும் செய்திகள்
 இங்கே-http://tthamizhelango.blogspot.com/2016/03/blog-post_6.html

இனி யார் இந்த ஆலயம் என்று
இனிய காட்சிப்படங்களுடன்
இணையத்தில் ஏற்றுவார்கள்!
இறைவா உனக்கு ஏன் இந்த அவசரம்!

இந்த அன்னையை
இத்தனை சீக்கரம் அழைத்தாய்!

14 comments :

Yarlpavanan said...

ஈடு செய்ய முடியாத இழப்பு
துயர் பகிருவோம்

S.P.SENTHIL KUMAR said...

ஆழ்ந்த இரங்கல்கள்! அவர் இறந்த தேதி 9.2.2016 என்பதே சரி. அவரின் மகன் மற்றும் மகள் தகவல் தெரிவித்ததுதான் 6.3.2016 அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

சகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

தி.தமிழ் இளங்கோ said...

உருக்கமான பதிவு. திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடம் நான் போனில் பேசியபோது,, திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டதும் தான் ரொம்பவும் அதிர்ச்சியாகி விட்டதாகவும், தான் கண்ணீர் விட்டு அழுததைப் பார்த்தவுடன், வீட்டில் உள்ளவர்களும் ரொம்பவும் வருத்தம் அடைந்ததாகவும் சொன்னார். (திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்த நாள் 09.02.2016 ஆகும்; தங்கள் பதிவினில் திருத்தம் செய்யவும்)

இன்றைக்கு எனது மனது (சில தனிப்பட்ட கவலைகள்) இருந்த நிலையில் , நீங்கள் இங்கு இணைத்த ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ என்ற தத்துவப் பாடல் கொஞ்சம் அமைதியைத் தந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

putthan said...

ஆழ்ந்த இரங்கல்கள்

வலிப்போக்கன் said...

ஆழ்ந்த இரங்கல்...........

balaamagi said...

ஆழ்ந்த இரங்கல்,,,,,,,,,,,,

Angel said...

அந்த தாமரைப்பூ நம் அனைவர் நெஞ்சினிலும் நீங்காதிருக்கும் ..எத்தனை எத்தனை அருமையான பதிவுகள் தந்தவர் அவர் ..மனதுக்கு எப்பவுமே ஒரு சந்தோசம் தரும் அவர் பதிவுகள் எல்லாமே .
அவரது ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்

KILLERGEE Devakottai said...

திருமதி. ராஜராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

கோமதி அரசு said...

அருமையான ஆன்மீக பதிவாளார். அன்பான சகோதரி.
அனைவர் வலைத்தளத்திற்கும் சென்று உற்சாக பின்னூட்டம் அளிப்பார் விரைந்து வந்து.

தன்னைப் போற்றுபவரை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள ஆசைப் பட்டு விட்டார் இறைவன். அவருக்கு என் அஞ்சலிகள்.

Ajai Sunilkar Joseph said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

சகோதரியின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவரது குடும்பம் அந்த இழப்பைத் தாங்கும் சக்தி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Ajai Sunilkar Joseph said...

ஆழ்ந்த இரங்கல்....
இவர் ஆன்மா
இறைவனடி சேர 
பிரார்த்தனை செய்கிறேன்...