30 March 2011

விடை கொடுங்கள் நினைவுகளே!

எப்போதும் தாண்டிச்செல்லும் இந்த முற்கம்பி சோதனைச்சாவடிகள் இனியில்லை உற்றுப்பார்க்கும் கழுகுப்பார்வைகளில் இருந்து தப்பிக்கின்றேன் மனநிம்மதியுடன் என்றாலும் என்னிடம் பல துயருடன் குடிபெயர்கிறேன்!   .........
              பெற்றவர்களைப் பிரிந்து கூடப்பிறந்து கும்மாளம்,குடிமிச்சண்டை,போட்டாலும் பாசத்தின் உறைவிடங்களான சகோதரிகளைப்பிரிந்து நேற்றுவந்து உறவாகிப்போன கைபிடித்த கணவனுடன் கடல்கடந்து குடித்தனம் நடத்த நாடற்றவனின்பின் நானும்போகிறேன்!
.......,,,,,,
நான் பிறந்த இந்தவீட்டை இனி எப்போது பார்ப்பேன் எப்போதும் தனிமையில் என்னுடன்பேசும் இந்த வேப்பமரம் தாங்கிய     தூப்பாக்கிச்  சன்னங்கள் இன்னும் மறையாத முற்றத்தை விட்டுப்போறன்!
:::;;
முகம் தெரியாத மணிதர்களாக வந்து முன்னேரி காவல்காத்த அந்த தெய்வங்கள் வாழ்ந்த ஓழுங்கையை மறந்து எப்படி இருப்பேன் தனிமையில்......,
--//////
அயல்கிராமங்கள் எல்லாம் ஓடிவந்து சாப்பிட்ட கோயில் மடத்தை எப்படிப்பிரிவேன்!-//
--/////
ஓர் இரவுக்குள் கையில் கிடைத்ததுடன் மழையில் நனைந்து மறுகடல்தாண்டி வந்தாரைவாழவைத்த வன்னியைவிட்டு  வீட்டுக்காவலுக்கு விட்டுப்போன நான் வளர்த்தமாடு காணாமல் போனது போல் !
........----/
உறவுகள் எல்லாம் உணவின்றி உடுதுணி இன்றி உறக்கம் தொலைத்து கொத்துக்கொத்தாக குண்டுபோட்டு குதறியெறியப்பட்டு குற்றுயிர்போன பேரவலத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வல்லரசுகள் தேசத்துக்குப் போனாலும் வற்றாத காயங்கள் மனதில் அலையலையாய்!
--/
என் அண்ணா நீ என் மடியில் மரன ஓலமிட்டு மறைந்து போன தருனத்தில் தவித்த தவிப்புக்களை எல்லாம் எல்லாத்தையும் என்னுள் புதைத்துவிட்டு புலம்பெயர்ந்து இன்று புதுப்பயணம்போனாலும் நான் மரணத்துள்ளும் வாழ்வேன் என் இனத்தின் விடிவைப்பார்பதற்காக என்னுள் கனவுகளுடன்!
----
இவளையும் மன்னியுங்கள் வேர்களைவிட்டு வேறுதேசம் போவதற்கு நான் தப்பிக்கவில்லை சாட்சியாக வேண்டும் சில
சம்பவங்களுக்கு!

25 March 2011

படித்ததில் பிடித்தது-7

நம்மவர் கவிஞர்கள் அதிகமானவர்கள் சரியாக இனம்கானப்படாமலும் போதிய கவனிப்பற்று குப்பையில் தங்கக்கீரீடம் போல் சரியான இடத்திற்குப் போய்ச்சேரவில்லை என்பது என் வாதம் அயலககவிஞர்களை இங்கு கூட்டிவந்து விழா எடுத்து பொன்னும் பொருளும் கொடுத்து தங்களை புரவலர்கள் என நாளிதல்களிலும்,ஊடகங்களில் மாலையுடன் காட்ச்சி தருபவர்கள் எங்கள் முற்றத்து மல்லிகைகளையும் கைகொடுத்தாள் அவர்களும் நிலையான கவிதைகளை விதைப்பார்கள் பரவலான கவிஞர்களில் என் உணர்வுகளை பிரதிபலிப்பதுபோல் இருக்கும் இந்தக்கவிதைக்கு சொந்தக்காரர் மாவை.வரோதயன் தன் ஊர் பெயரை முன்னுடன் முழங்கும் இவர் அதிகமான கவிதைகளை அச்சு ஊடகங்களிலும்,இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரவசித்துக்கொண்டிருக்கிறார்.எங்கள் ஊரின் அவலத்தை படம்பிடித்துக்காட்டும் இந்தக்கவிதை என் வேதனையையும்,இயலாமையும் வாழ்ந்து கெட்ட வீட்டை ஞாபகம் ஊட்டுகிறது.
...எனது கிராமத்துக்குத் திரும்பல்......
என் வீதிகள் தோறும்
கற்பக தருக்களின்
குறுகத் தறித்த சடலங்கள்.
என் ஊரின் வீடுகள்
வேட்டை நாய் குதறிப் போட்ட
கோழிக் குஞ்சின் உடல் மீதிகள்!
எனது கிராமமோ இன்று
கிழித்தெறியப் பட்ட ஒவியம்!
தசாப்தங்களில்
கணக்குப் பார்க்க முடியுமான
கால இடைவெளிக்கு அப்பால்
எனது கிராமம் எனக்கு
அன்னிய மாகி விட்டது!
பற்றைக்  காடுகள் வளர்ந்து
ஒழுங்கைகளை அழித்திருக்கும்!
விதைத்தவனைத் தெரியாமல்
புதையுண்ட  நிலக் கண்ணிகள்!
ஓரு சில காப்பரங்களுக்கு
எனது கிராமமும்
காவலாக்கப் பட்டிருக்கும் விந்தை;
அகதி வாழ்வை எனக்கு
வரமாகத்  தந்திருக்கிறது!
கோயில், வயல்,தோட்ட வெளி,குளம்,கிணறு
பட்டமேற்றும் புகைவண்டிப் பாதை,முத்தவெளி,
பள்ளிக்கூடம்,  பனைவடலிக்காணி,
பட்டாளத்துக்கு  புட்டவிக்கும் சீமெந்து ஆலை,
கப்பல் வந்து சைரன் அடிக்கும்   துறைமுகம்,கீரிமலை,சடையம்மா  மடம்........
எல்லாம் எல்லாம்
திரும்பிப் போக முடியாத தூரத்தில்.................
இரு இருந்துபார்!
மல்ரி பரல்களும்,கிபிர்களும், துவக்குகளும்
என்னைப் புதைக்கும் தடைகளும்,வதைகளும்
ஒருநாள் ஒதுங்கும்!
நான் எனது கிராமத்துக்குத் திரும்புவேன்!
.....................இக்கவிதை ஞானம்   சிற்றிதலில் 2001ஆண்டு மார்ச் மாதம் வெளியானது இச்சஞ்சிகை கண்டியில்  இருந்து வெளியானது இப்போது வருகிறதா எனத்தெரிய வில்லை என்றாலும் மனதை குடையும் கவிதை.