30 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-நிறைவுப்பகுதி!

நாட்டில் எப்போதும் எங்கேயும் குண்டு வெடிக்க கூடிய காலகட்டம். மக்கள் எந்த சத்தம் வந்தாலும் முதலில் என்னுவது குண்டுச்சத்தம் என்றுதான் .இது தானே நாட்டில் புரையோடிப்போய் கிடக்கும் தலைமுறைப் பிரச்சனை!
.. 
நானும் முதலில் எங்கேயோ கிளைமோர் வெடித்துவிட்டது என்றுதான் தலையை குப்புறச்சாய்த்து வாகன ஆசனத்தில் சாய்ந்து கொண்டேன்!  வெளியில் இரானுவத்தினர் தயார் நிலையில் இருந்ததை ஓரக்கண்ணால் பார்த்தேன்!
..
அவர்களிடையே  பதட்டமான நிலையில் உரையாடல் நிகழ்ந்தது பின் அமையான நிலையில் இருந்தனர். நாங்கள் நினைத்தோம் இன்று எங்கள் எல்லோருக்கும் செம்பனிதான் என்று  .இரானுவத்திற்கு இழப்பு வந்தால் அருகில் இருப்பவர் உயிர் உத்தரவாதம் இல்லை எத்தனை செய்திகளை நாளேடுகளில் படித்திருக்கிரேன்!
..
சில நிமிடங்களில் ஒரு ஆமிக்காரன் வந்து சொன்னான் முன் வாகனத்தில் பெற்றோல் டாங்கி  வெடித்துவிட்டது என்று அதனுடே புலியில்லை என்று அவர்களை இகழ்ந்து கூறினான் ,..

சில இடங்களில் ஊமையாகவும், மொழி தெரியாதவனாக இருந்தால் சில பண்பற்ற வார்த்தைப் பிரயோகம் வரும் போது சும்மா இருக்கலாம். மொழி புரிந்தால் மனதில் வன்மம் வரும் .எனக்கு அவர்களின் வார்த்தைகள் செவியில் வென்னீரை ஊற்றியது போல் இருந்தது !என்ன செய்யமுடியும் இப்படித்தானே பல இடங்களில் சுயம் இழந்து போகின்ரேன்!..

அப்பனே கேதீஸ்வரநாதரே எங்கள் எல்லோரையும் பத்திரமாக மன்னாரில் சேர்த்துவிடு ! இவர்கள் தயவில்  இருந்து பயணத்தை நிறைவு செய்தால் போதும் என வேண்டிக்கொண்டேன்!
.. 
தனியாக ஏதும்  நடந்தால் அதற்கு நான் பொறுப்பு  !இப்படி மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் ஆசையில் போய் ஏதாவது விபரீதம் என்றாள் என் வேளைத்தளத்திற்கும்  கெட்ட பெயர் ,எல்லாவிதமாகவும் மனசு சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது!

..நாதரே இப்படி
அருமையான தரிசனம் காட்டிய  பின் இப்படி மனசை அலைபாயவிடலாமோ! 
மன ஓட்டத்திற்கும்  வாகனம் ஓடிய வேகத்திற்கும் மதியம் நகரை வந்தடைந்தோம்!
..
போன சுவாசம் மீண்டும் வந்தது !ஆமியின் காவலில் இருந்து எமது அடையாள அட்டையையும் என் வேளைத்தள அட்டையையும் வாங்கும் போது ஆமிக்காரனிடம் கேட்டேன் ஏன் டாங்கி வெடித்தது என்று!..

இரானுவத்தில் வாகனங்களை ஓட்டுபவர்கள் எந்த  பழுதும் பார்க்காமல் கணக்கு எழுதி காசை தம் டாங்கியில் போட்டுவிடும்  ராஜவிசுவாசிகள் .நீண்ட தூரம் போகக்கூடிய வாறு திருத்தி வைப்பது குறைவு  அல்லது கவனயீனம் எனலாம்.  அவர்களிடம் கேட்டால் ஊசிபோறதிற்கு கணக்கு கேட்பினம் உலக்கைபோறதிற்கு கணக்கு கேட்காயினம் இதுதான் ஊழல் என்பதா?.

நன்றி உங்களால் என் கடவுளை தரிசித்தேன்!வாகனத்தை ஓட்டியவனிடம் உன்னை பெற்றவர்களுக்கு
புண்ணியம் சேரட்டும் என்றேன் ! .
என்னிடம் அவன் எதிர்பாராத வார்த்தைத் தொடர்!..
 .. 
தம்பி உனக்கு சிங்களம் தெரியுமா!மற்றவர்கள் பேசியது எல்லாம் கேட்டாயா!நான் கூறினேன் எல்லாத்தையும் கடவுளே என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கிறம் 
விடிவு தெரியாமல்!
.. 
அதன் பிறகு நகரில் கானும்போது எல்லாம் நலம் விசாரிப்பான் பாவம் அவனும் ஒருதாய்க்கு   மகன்! அவன் தொழில் இரானுவ சேவை, இனவாதப் போதனைக்கு அடிமையாகி கூலிக்கு மாறடிப்பவன்!இனி எப்போது போவேன் திருக்கேதீஸ்வரம்!?

29 April 2011

கேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-3

அழகிய மலர்களினால் மிகவும் சாந்த நிலையில் கேதீஸ்வர நாதருக்கும் ,கெளரி அம்பாளுக்கும் ,அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சியைக் கான! கோடி கண்கள் வேண்டும் என்ற பேராசை குடிகொண்டது !விபரிக்க முடியாத தரினங்களில் கண்களில் நீர்த்துளி வருவது பேராணந்தத்தின் வெளிப்பாடு  !தேவாரத்தில் வருமே! "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி""  .. நாதன் நாமம் நமச்சிவாயவே!"
...
பூசைகளை சிறப்பாக ஆச்சாரியர்கள் மந்திரங்களுடன் முடித்த ,மறுவினாடியில் கணீர் என்ற குரலில் வசாந்தா வைத்திய நாதனின் கதாப்பிரசங்கம் தொடங்கினார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வந்த இந்துக்கலாச்சார அமைச்சின் அதிகாரிகளின் ,அருளுரைகள் விளக்கங்களின் பின் அறிமுகத்தின் பின் .
..மடைதிறந்த வெள்ளம்போல் அம்மையாரின் மெய்யான விளக்கம் தொடர்ந்தது!(இவர் ஒரு ஈழத்தின் அறிவுச்சுடர், வானொலியில் தொடர்ந்து நற்சிந்தனை உரைக்கும் வித்தகி) ..
.. 
இன் நிகழ்ச்சிகள் ஏககாலத்தில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணம் நேரடி அஞ்சல் செய்துகொண்டிருந்தது! அங்கே என் ஊர்காரர் மு.ரவீர்ந்திரனுடன் ரா.ஜோகராஜன் இருவரும் அறிவிப்பு  செய்து கொண்டிருந்தனர், வானொலி நேரஞ்சலை அங்கேதான் நேரடியாக பார்த்தேன்!..


முன்னர் சாமியை தரிசிப்பது என்றாள் தோல்களில்  ஏறியும், முட்டிமோதியும் பார்த்தோம் என்றார் என்னருகில் இருந்த முதியவர்..
..  
அம்மையாரின் சொற்பொழிவு   நிரைவுரும் வேளையில் அவருக்கு அதிகாரிகளின் கரங்களால் பொண்ணாடை போர்த்து கெளரவிக்கப் பட்டது!  நேரமோ அதிகாலைப்பூசைக்கு கட்டியம் கூறியது மடங்களில் சூடாக கோப்பி,பால்   பரிமாறப்பட்டது,! 
.. 
கோப்பி என்றாள் எனக்கு  தனிப்பிரியம்  !பின்னாளில் சென்னையிலும், கேரளாவிலும் அவஸ்தைப்பட்டது தனி ஒரு ஆவர்த்தனம்!..

அதிகாலைப் பூசையின் பின் அடியார்கள் பாலாவியின்  புண்ணிய தீர்த்தம் ஆட அதன் குளத்தில் இறங்கினோம் !பாலாவி ஆறு போரின் விளைவால் குளம்போன்றே  சிறு வட்டத்தினுள் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்பர்களுக்கு  சரியான பனியில் நீர் குளுமையாக இருந்தது !
...
ஊரில் திருவிழா என்றாள் தீர்த்தத் திருவிழா கடலில் ஆடிய எனக்கு இது புது அனுபவம். ஆசைதீர குளிக்கலாம் என்றாள் எங்களுக்கான கால அவகாசம் முடிந்ததாக  இரானுவம் ஒலிபரப்பியது. விரைவாக எழுந்து மீண்டும் கோயில் சென்று வழிபட்டுவிட்டு  பிரசாதத்தை வேண்டிக்கொண்டு வாகனத்தை நோக்கி நடந்து போகும் போது இலக்கத்தகட்டை பத்திரமாக சரிபார்த்துக்கொண்டோம்!..
மீண்டும் நாதரையும் அம்பாளையும் எப்போது தரிசிப்போம் என்ற ஆதங்கம் எனக்குள்!
..
விரைவாக இரானுவத்தின் கன்கானிப்பின் ஊடே வாகனத்தில் ஏற்றப்பட்டோம் .எங்கள் உருமறைத்த வாகனத்தை தொடர்ந்தது இரானுவ இராட்சத கவசவாகனம்!.

வேகமாகப் போன வாகனத்தின்  முன்னே டமார் என்ற வெடிச்சத்தம்!
...
தொடரும்!