05 October 2011

விண்ணைத் தாண்டிய என் காதல் -2

 பாரிஸ் குளிரில் நடுங்கும் உள்ளங்களே என்னிடம் வாருங்கள் !
வெப்பத்தின் வேர்வையில் குளியுங்கள் உங்கள் நிறம் கொஞ்சம் வெளுக்கட்டும் என்பதைப்போல் மதியவெய்யில்!

  வைரமுத்துவின் வரிகள் சொல்லும் பசிகொண்ட நேரத்தில் தாளிக்கும் ஓசை சங்கீதம் என்பது போல்!  மதியம் சாப்பிடும்  மேசையில் இதமான காலநிலை மனதில் சந்தோசம் என படகில் மதியசாப்பாடு சுவை அதிகம் காரம் குறைவு என்றாலும் ரசித்து உண்டோம்!

 எத்தனை நட்சத்திரவிடுதிச் சாப்பாடும் இதுபோல் சுவையைத் தரவில்லை .இத்தனைக்கும் நானும் ஒரு சமையல்காரன் என்று அவர்களுக்கும் தெரியாது!

அதன் பின் கடல் ஏரியில் படகு மெதுவாக மிதந்து செல்கின்றது .

தென்றல் காற்றில்  உண்டகளைப்பைப் போக்க நித்திரைவந்தாலும் இயற்கையை ரசிக்க இத்தனை தூரம் வந்து விட்டு நித்திரை கொள்வதா ?

ஊரில் பெருசுகள் சொல்லும் முதல் இரவிற்குப் போனவன் முகட்டைப்ப்பார்த்துக் கொண்டிருந்தானாம் !
அதைப்பார்த்துக் கொண்டிருந்தவள் தூங்கிவிட்டால். என்பதைப் போல் அல்லாமல் இயற்கையின் அழகினை விவசாய நிலத்திற்கு இடையில் அழகுமிக்க தென்னைமரங்கள் .வாழைமரங்கள் இன்னும் எழில் கொஞ்சுகின்றது

.கேரளா ஏன் இத்தனை வளம்மிக்க தேசம் என்பதை பார்த்த பின்பு புரிகின்றது.

 இங்கு இருக்கும் தென்னை மரத்தில் தான் ஜீவா ஏறி நின்று நளினம் செய்வார் சத்யா கூட டுஸ்யூம் படத்தில்.

அங்காங்கே பல படகுவீடுகள் அருகில் வந்து அன்பாய் மற்றவர்களுக்கு கையசைப்பைச் செய்கின்றது .

கண்களில் இவர்கள் எந்த நாட்டவர் என்கின்ற தேடல்கள் ஒரு புறம் ,பெரியவர்கள் மனம் துள்ளும் முதுமை அழகு .
புதுத்தம்பதிகளின் சில்மிச ஊடல்கள் காதோரம் மூச்சுக்காற்றில் முத்தங்கள் என இயற்கையின் படகுவீடு பலகதைகளை தன்னகத்தே கொண்டு செல்கின்றது .

சூரியன் முதுமையடையும் நேரத்தில் சூடாக ஏதுவேண்டும்   என்ற பணியாளுக்கு பால்கோப்பி இருக்கா என்றேன். உங்கள் விருப்பமே எங்கள் சேவை என்று இனியதான சூடான பால்கோப்பியை மனைவியுடன் ரசித்துக் குடித்தேன்.

 இந்த இடத்திலும் உங்களுக்கு கோப்பியை விடமா இருக்க முடியாதா? என்ற அவளின் ஏளனப்பார்வையின் அர்த்தம் நான் எப்போதும் சூடான கோப்பியைப் பருகுவதால் உடல் நலத்திற்கு கேடு என்று யாரோ மருத்துவக்குறிப்பில் சொன்னார்களாம்! என்பதே!

ஆலப்புழா ஏரி அழகு நடனம் புரிகின்றது. கப்பல் காற்றின் வேகத்திற்கு இசைந்தாடுகின்றது.

எதிரே வருகின்ற வீட்டைக்கைகாட்டி மாலுமி சொன்னார் கேரளா கட்டிப்பிடி வைத்தியம்  இருக்கும் வீடு. என்று !

என்ன ஜோசிக்கின்றீர்களா நண்பர்களே அது மூலிகை வைத்தியம் மாசாஸ் செய்கின்றார்கள். மூட்டுவலி/கால்வலி,முதுகுவலிக்கு சர்வரோக நிவாரனி.

 நானும் முதுகுவலிக்கு எண்ணெய்யில் முட்டிபோட்டேன்.நல்ல மென்மையாக இதமாக இருந்தது அவர்களின் வைத்திய முறை. .

இங்கு அருகில் ஒரு சுவாரசியம் நடந்திச்சு. இன்னொரு ஐரோப்பிய தேசத்தில் இருந்து நம்மவர்கள் குழுவாக வந்தார்கள்.

 அதில் ஒருவரும் மசாஸ் செய்யப் போனார் வெளியில் வந்தால் அவரின் பணத்தினை யாரோ ஆட்டையைப் போட்டுவிட்டார்கள் .

.பிறகு  பார்த்தால் களவு எடுதவர் மசாஸ் செய்த ஆண்மகன்.
 அதன் பின்பு  பொலிஸ்போய் அலைபட்டார்கள்  .

இப்படியும் நடக்கின்றது நாம்தான் கவனமாக இருக்கனும் அதன் பின் நாங்கள் மறுகரைக்குப் போனோம். அங்கே நாம் விரும்பினால் மீன்பிடித்துக் கொடுத்தால் நல்ல வடிவாக பொறித்துத் தருவார்கள். அந்திமாலை போய் எங்கள் படகு வீடு கரையை ஒதுங்கியது.

  அவர்களிடம் இருக்கும் தொலைக்காட்சியில் விரும்பியதைப் பார்க்கலாம் சாட்டலைட் பூட்டியிருக்கின்றார்கள் நாம் கொஞ்சம் நடைபழகினோம்.

 இருவரும் சேர்ந்து நடந்து வருடங்கள் ஓடிவிட்டது .இருவரும் கொஞ்சம் வயல்பக்கம் காற்றுவாக்கில் கதை பேசினோம் ..விவசாய நிலம் பாதுகாப்பு வலயத்தில் சிறைவைக்கப்பட்டு வருடங்கள் 21 கடந்துவிட்டது அதனை ஞாபகப்படுத்தும் வயல்கள் மனதில் மீண்டும் கிராமத்து வாழ்வை என்னிகூத்தாடியது.!






 அதனைப் பார்வையிட்டு ஏங்காவது கிளிகள் தெரிகின்றதா! என்று பார்த்தாள் கேரளத்து பைங்கிளிகள் மாலை வேளையில் மஞ்சள் நீராட குருவாயூரானை அழைப்பது போல்  நீராடும் அழகைப் பார்க்கனுமே!

  இரு கரைகளிலும் ஆண்கள் ஒரு புறம் பெண்கள் ஒருபுறம் என நீர் ஏரியில் குளியலைப் பார்க்கும் போது அனுராதபுரம் பகுதியில் குளத்தில் சகோதர மொழி நண்பர்கள் நண்பிகள் குளிக்கும் ஞாபகம் வந்து போகின்றது.

பாக்யராஜ் ஒரு படத்தில்  தென்னமரத்தில் தென்றல் அடிக்குது வண்ண வண்ணக்குயிலே அடி புண்ணைவனக்குயிலே என்ற ஞாபகம் ஒலிக்க நானும் நீந்த வெளிக்கிட்டேன்.

 என்னவள் வேண்டாம் குளிர்த்தண்ணி உடம்புக்கு ஒத்துவராது என்றாலும்
நீண்டநாள் ஏரியில் இறங்காத ஏக்கத்தை தீர்த்துக் கொண்டேன் .

எங்களுக்கு இரவுச் சிற்றுண்டியும் தயாரானது மாலுமி விரும்பிய அலைவரிசையில் பாடல் ,படம் பார்க்கச் சொன்னார். இயற்கையைத் தேடிவந்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் போக விருப்பம் இல்லை எங்களுக்கு!

தொடுவானத்தின் இரவில் கதைகள் பேசுவதில் அதிக சுகம் .பலகாலம் சில நாவல்கள் பற்றி மீள்வாசிப்பு இல்லாத குறையை இந்த இரவு தீர்த்துவைத்தது.

 கொஞ்சம் கொசு தன் லீலையைச் செய்தது .நீண்ட உறக்கம் கப்பல் வீட்டில்.
 அதிகாலைச் சூர்ய உதயத்தைக் கானும் அழகு இருக்கே வார்த்தையில் கூறமுடியாத ரவிவர்மன் ஓவியம்.!

 இதமான அந்தக்காட்சியை பார்த்ததும் புத்தம் புதுக்க்காலை பொன்னிற வேலை அலைகள் ஓய்வதில்லை ஞபகம் எட்டிப்பர்க்க இனிக பால்கோப்பியை பரிமாறினார் உதவியாளர்!



அதிகாலையில் மீண்டும் எங்கள் படகு வீடு மறுகரையை நோக்கி நீரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மெது மெதுவாக ஓடியது .

ஒரு நாள் பொழுதை கொண்டாடிய நம் பயணத்தைப்போல் பலருடைய படகு வீடுகளும் பின் தொடர்ந்தது கரைசேர.

 மனதில்  இப்படி நம்தேசத்திலும் இருக்கின்றது  .நுவரெலியாவில் வாவி இருக்கின்றது,கண்டியில் தெப்பக்குளம் இருக்கின்றது திஸ்ஸமகராம்வில் இப்படியான இயற்கையுடன் கூடி வசதிகள் இருந்தும் நம்தேசத்தின் புதல்வர்களுக்கு நாட்டை சுற்றுலா மையம் ஆக்குவதை விட சுடுகாடு ஆக்குவது தானே சிந்தனை !

.இந்த இயற்கையை விட்டு நீங்கிப் போகின்றம் என்ற ஆதங்கம் வந்தாலும் வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது தானே வாழ்வின் சாரம் !

மனைவியுடன் இனிய இன்னொரு காலை வேலையில் படகு வீட்டில் இருந்து  மாலுமி,உதவியாளருக்கு விடைகொடுத்து வெளியேறும் போது அவர்களின் பயனாளர் குறிப்பேட்டில் எங்களின் அனுபவங்களையும் பதிவு செய்து விட்டு வெளியேறினோம்..!

 திரும்பி வரும் போது எமக்காக எமது வாடகைக் கார் தயாராக இருந்தது..

 நமது அடுத்த சுற்றுலாவுக்கு தயாராக!

......,,,,,,,,,

Oriyinal

02 October 2011

பிடித்த படத்தின் பின் நானும்//

திரைப்படம் என்ற ரயில் பயணம் என்னை எல்லா இடங்களுக்கும் சுமந்து செல்கிறது .
மேத்தாவின் கவிதையில் சொல்வது போல் இருட்டில் நிழலைத்தேடி ஓடும் மனம் என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.படம் பார்த்துக் கெட்டுப் போனவர்கள் வரிசையில் உன்னையும் சேர்க்கனும் என்று என் நண்பர்கள் திட்டும் அளவுக்கு நானும் சினிமா என்ற சக்கரத்தில் வளையமாக இருந்திருக்கிறேன்!

சகோதரமொழி நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பு. தமிழ் திரையைத்தாண்டி ஹிந்திப் பக்கம் தாவிச்சென்றது!1980 இல் இருந்த ரசனையும் 1990 இன் பிற்பகுதியில் அதிகமான காதலை மட்டும் அரைத்த வண்ணம் இருந்த தமிழ் சினிமாவின் வெறுப்பும் என்பதும் ஒருகாரணம்!

அவர்களுக்கு சகோதரமொழியில் வரும் படங்களை தாண்டி ஹிந்திக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நாடறிந்தது இந்த மயக்கம் அசின் வரை பத்திக்கிச்சு!

நான் அதிகம் சாருக்கானின் படங்களை விரும்பிப் பார்ப்பேன் .என் அபிமான நடிகரும், கூட
 இந்த வரிசையில் கொழும்பில் பணியில் இருந்த போது ஒரு படத்தை வெற்றி கரமாக 60 காட்சிகள் திரையரங்கில் பார்த்தவன் நான் !வீனாப்போன ரசிகன் என்ற பட்டம்தந்தால் ஏறுக்கொள்வேன்!அந்தப் படம்!







தில் தோ பாஹல் ஹைய்(dil to pahal hai) சாருக்கானின் வெற்றிப் படவரிசையில் இது ஒரு முத்து .அழகான காதல் கதை நால்வரின் காதலை ஒவ்வொரு காட்சியும் ரசித்துப் பார்க்க வைத்த இயக்கம் யாஸ்சோப்ராவின் கைவண்ணம் ,படப்பிடிப்பு, நடிப்பு எல்லாம் பிடிக்கும் எனக்கு இப்படப் பாடல்கள் என்றும் என்கூடவரும் தாலாட்டு!

ஹிந்தியில் புகழ்பெற்றவர்கள் காதாநாயகர்கள் இருவர், மூவர் சேர்ந்து ஒன்றாக நடிப்பார்கள் இங்கே விஜய்காந்தும் ரஜனியும் சேர்ந்து நடிக்க மாட்டினம்!

இப்படம் கொழும்பில் லிபர்ட்டி மெஜிக் சிட்டி, கிரான்பாஸ் அசோக்கா மருதானை சென்றல் என சுற்றுவட்டாரங்களில் வெற்றிகரமாக ஓடியது யாஸ்சோப்ராவின் தயாரிப்பில் இக்காவியம் வெளிவந்தது சாருக்கானுடன் அக்சைக் குமாரும் போட்டிக்காக சில காட்சியில் வந்து போவார்!

எப்போதுமே பிடித்த மாதுரிடிக்சித்


 ,கரிஸ்மாகபூர் என முக்கிய கதாப்பாத்திரங்கள் கதைக்கு உயிர் கொடுத்தவர்கள் .நிஜத்தில் இக்கதையில் வரும் கரிஸ்மா ஏற்ற பாத்திரம் என் நண்பி ஒருவரின் உண்மை நிலை!

உத்தம் சிங் இப்படத்திற்கு அற்புதமாக இசை அமைத்திருந்தார் .ராஜாவிற்குப் பிறகு இவரின் இசை என்னை கட்டிப்போட்டு துள்ளிக்குதிக்க வைத்தது .காலத்தின் கோலம் நல்ல இசையமைப்பாளர் பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டார்!


ஹிந்தியுலகில் இவரின் இழப்பு பேரிழப்பு வெற்றிப்படியில் ஏறும் போது அந்தக் கொடுமையான மரணம் வந்துவிட்டது!
இவரின் இசையை பின்னாலில் லவ்டுடே சிவா காதல் சுகமானது படத்திற்கு" அடி சுகமா சுகமா சுடிதாரே" பாட்டுக்கு சுட்டுப் போட்டிருந்தார்!

ஆறு பாடலும் பிரபல்ய மாகியிருந்தது இரண்டு பாடல் சகோதரமொழி வானொலியான சிரச வில் பாடல் தரவரிசையில் top 20 ஞாயிறு இரவு 10மணி தொடக்கம் 12மணிவரையில் இடம் பெறும் நிகழ்ச்சியில் தொடர்ந்து 1,2 இடங்களை பெற்று முதல்தரவரிசையில் ஒருவருடம் நீடித்தது இது ஒரு சாதனையான விடயம் அன்நாட்களில் !!


தில் தோ பாகல்கேயும், ஹரரே ஹரகுச்சு கோகயா கோகின்ன பேரானா , பாடல்களை உச்சரிக்காத சகோதர மொழி வாலிப உள்ளங்கள் அன்று கிடையாது


!நீண்டதூர பேரூந்துப்பயணங்களில் ஒலிநாடா அறுந்து போகும் வரை ஒலிக்கும்,

அந்தளவுக்கு வானொலியிலும் ஒலித்து ஒய்ந்தது.ஹரிஹரன் இப்படத்தில் titile பாடலை மிக இயல்பாக பாடி அதிகமாக வடஇந்தியாவில் பிரபல்யமாகியிருந்தார்

பிறகுதான் தமிழில் புகழின் உச்சிக்குப் போனார்.
வட இந்தியாவின் இசைக்குயில் லதாமங்கேஸ்கர் இதில் இருபாடல் பாடியிருப்பார் .ஒருபாடலின் இடையே அவரின் ஹம்மிங் தமிழில் ஜொன்சியிக்குப் பிறகு அதிகம் கவர்ந்தது .கரிஸ்மாவின் ஒருதலைக் காதலுக்கு இசைவாக வரும் பாடலில் இந்த ஹம்மிங் இசைக்குயிலின் குரல் ஊடாக முன்னால் நண்பனின் முன்னால் தோழியின் நினைவு வந்து போகிறது.

இன்னொருபாடல் மழையில் பாடுவார்கள் இதை தமிழில் அறிந்தும் அறியாமல் படத்தில் இரண்டாவது ஹீரோவிற்கு கொடுத்து மூலப்பாடல் காட்சியை கொத்துப் பரோட்டாவாக்கியிருப்பார்கள்!

படத்தில் கரிஸ்மாகபூர் நடிப்பில் ஒரு காட்சியில் அவரின் காலில் ஏற்படும் நரம்பு விலகும் காட்சியில் கமரா அவரின் காலைச் சுற்றி ஓடும் சில கனங்களில் காட்டும் பாவனை


 மயூரி படத்திற்குப் பின் என்னை மிகவும் பாதித்தது


 .வெற்றியடையும் போதுவரும் தடங்கள் ஆண்மாவை உலுக்கும் அப்படித்தான் இதில். கரிஸ்மா பரம்பரை நடிப்பில் தன் தந்தையை நிரூபித்திருப்பார்!

மதுரிடிக்சித்தின் நடிப்பை சொல்ல இரண்டு பதிவு போடலாம்! ஏற்ற பாத்திரத்தை பானுப்பிரியா போல் சிறப்பாக செய்யக்கூடியவர் .இவரும் சன்சய்தத்தும் நிஜத்தில் ஜோடி சேரப் போவதாக அன்நாளில் நாளிதழ்கள் பத்திவெச்சது!
சாருக்கானின் நடிப்பை குறும்பை, ரசித்துப்பார்த்தேன்!

இவர்களைத் தாண்டி இப்படத்தில் அக்சைக்குமார் வந்துபோகும் காட்சி செய்யும் தியாகம் என் முன்னால் நண்பனுடன் காலிமுகத்திடலில் மாலையில் தோன்றிய வாக்குவாதம் இரவு கொழும்பு-12 இல் வந்து சேரும் வரை. இரு மொழிகளில் ஆட்டோக்காரன் காதை மூடிக்கொள்ளும் அளவுக்கு நீண்டது. என் நட்புக்கு முடிவுரை எழுதிய கனங்கள்..!

இப்படிபல விடயங்கள் இப்படத்தோடு என் நினைவில் வந்து போகிறது .எப்போதும் மனதிற்குள் சிலரை நினைக்கும் போது என் அலுமாரியில் இப்படத்தை தேடி எடுத்து சில காட்சிகள் ரசித்தால் சில வருடங்கள் பின்னோக்கிப் போகிறது மனசு!

இப்படத்திற்கு தமிழில் யாரோ ஒருவர் யாருக்காகவோ எங்கேயும் எப்போதும் காத்திருப் பார்களாம்! காலம் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கு போல்!