29 July 2016

41 ஒரு நாட்கள் ! சிந்தித்தால் நிஜம்!!!


சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லிய வண்ணம் பல படைப்புக்கள் வருகின்றன.ஆனால் நெஞ்சில் தங்குவது சிலது என்பது நிதர்சனம்.

அந்த வகையில் இந்த குறும்படம் சமூகத்தின்  முக்கிய ஒரு விடயத்தை பொதுவிள் பேசுகின்றது அதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்! இன்னும் பலரிடம் விவாதிக்கும் விடயமாக மாற்றுவது உங்கள் கைகளில்! படக்குழுவுக்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூக்கள்! இதோ!

 இனிய குறும்படம் ரசிக்க!













27 July 2016

கவிதை போல கிறுக்கல்!!!

நினைவுகளுக்கு மட்டும்
நினைவில் ஒரு கல்லறை இருக்கும் எனில்
நீங்காத  உன் நினைவுகளையும்
நிச்சயம் அதில் புதைப்பேன்
நீ பிரிந்த அந்த நொடிகளை!//


/////

யாரோடும் நீ  சென்று வாழ்ந்தாலும்
என் யாசகம்
என்றும்  வாழ்த்தும் அன்பே!
யாசிப்பது உன் அழகையல்ல
யாதுமாகிய உன் நேசத்தை!
யானோ ஏதுமற்ற ஏதிலி!





//////////////////////////////////

இதயத்தில் நுழையும் காதல் போல
இமையும் இசையும்  இருவாசல் திறக்கின்றது!
இருண்டுபோன நம் இருவர் கைதிபோல,
இனியும் வசந்தம் என்று
இணைந்துபாடுவோம் இந்த
இனிய நாட்களை





//////////////////////

அடுப்படி வெப்பத்திலும் 
அனல்போல என் காதல்
அகதி உன்னைத்தேடியே
அலைந்து திரிகின்றது
ஆயுள்ச்சிறையில் என்றாலும் 
அணைத்துக்கொள்

முன்னம் கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2015/03/blog-post.html