19 July 2016

யாசிக்கும்-- ஏ-- தி---லி--15

முன்னம் நினைவில் இங்கே-http://www.thanimaram.org/2016/07/14_5.html

இனி நினைப்பு தோன்றினால் விரும்பி தொடர்க!யாரையும் நோகாத ஏதிலி!!!





ஒரு ஆண் காலம் எல்லாம் பிரம்மச்சாரியாக வாழ்வதுக்கும், ஒரு பெண் காலம் எல்லாம் செல்வியாக வாழ்வதுக்கும், இந்த சமூகத்தின் சம்பிராதய ,இயல்பான,வாழ்வியல்  கட்டமைப்புக்கள் இடம் கொடுப்பது என்பது நிதிமோசடி வழக்கில் கைதியாக உள்ளே போவது போலவும் ,நோய் நொடி  என்ற சாட்டில் வெளிவருவது போல இலகுவான அரசியல் இல்லை .


ஒரு கம்பவாதிரி ,ஒரு அப்பாக்குட்டி தங்கமா என்று நாடு சிலரைத்தான் அறியும்!

 இன்னும் சிலர் வெளியுலகம் அறியாது , சிலரின் காதல் கைகூடாத நிலையில் காலம் எல்லாம்  தாடியுடன் சாமியாக ,அல்லது வெள்ளைரோஜா போல கன்னியாஸ்த்திரி என்று சமயத்தொண்டு என்று புதியபாதையில் பயணிக்கும் போக்கையும்  இந்த இனவாத ஆட்சியாளர்களின் தூண்டுதல் போல குடும்பம்  உறவுகள் என்ற ஆட்சிநிலை எதையும் தீர்மானிக்க இடம் கொடுப்பதில்லை யாழினி !

இதுதான் பொதுவான நடைமுறைச்சிக்கல் ,இலங்கை ஆட்சியின் இனவாத கலாட்சார போராட்டம் போல புதிது புதிதாக  தோன்றும் வன்முறைகள் !கண்டி நடணம்  போல எங்கும் ஆட இங்கு பாரிசில் இங்கு என்னாலும் முடியாது !

என் தந்தை எனக்கு எப்போதும் ஒரு நண்பன் போல நாங்க வியாபாரத்தில் பலதுறையில் ஈட்டுபட்டாலும் என் தந்தைக்கு  உன்மேலான என் காதல் வேதம் புரியும் !

என் யாசிப்பு மோகமுள் போல அல்ல   என்றென்றும் காதல்  போல நேசம்  என்பதையும் உணர்ந்தவர்.!

 உன் தந்தையைவிட குடும்பம் என்றால் விட்டுக்கொடுத்து போக வேண்டும் பிள்ளைகளின் ஆசையைப்புரிந்து கொண்டு என்பதை நம்பும் சாதார அப்பா அவர்.

 எனக்கு தவமாய்த் தவம்மிருது பட தந்தை போல என் காதலுக்குகாக தாய்தேசத்தில்   இருந்து தன் புலம்பெயர் நட்புக்கள் மூலம் எல்லாம்  எனக்காக உன் தந்தையிடம் பல தடவை தன்நிலையில் இருந்து இறங்கிவந்து பெண் கேட்ட போதெல்லாம் அவமரியாதையும் ,அலட்சியமும் செய்தார்!

 நீ படித்தவள் என்றும் நான் படிக்காத மாப்பிள்ளை பாரிஸில் சமையல்வேலையில் பாத்திரம் தான் கழுவ பொறுத்தமான பெரியவீட்டுப்பிள்ளை என்று!

என்னை அவமரியாதை செய்து இருக்கலாம் என் காதலுக்காக பொறுத்துக்கொள்வேன் !ஆனால் என் தந்தையை இல்லை ,என் வம்சத்தை வம்பு இழுத்தால் எப்போதும் நான் பொல்லாதவன்  !

உன் தந்தை என் அப்பாவிடம் வீசிய பாசவலை என்ன தெரியுமா ?

நான் ஆன்மீகத்தேடலிக் தொடர்ந்து போவதை இன்னொரு நித்தித்தியானந்தா மடம் போல விரைவில் வீடியோ வரலாம்!

 நீயும்  அவமானத்தில் தூக்கில் தொங்க வேண்டும் என்று விடுமுறையில் இலங்கை போற உறவுகள் யாரிடமோ கொழுத்திப்போட்ட பட்டாசு.

 ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பாட்டு போல அல்ல  அதன் மீள்தாக்கம் பூமரங்க போல ஐயா என்னிடம் கேட்டது என்ன தெரியுமா யாழினி?

?உன் பாட்டிதான் நம் குடும்பத்தை அரவனைத்து போகத்தெரியாமல் நடுவீதியில் நிக்க வச்சா !



அதை உன் தந்தையும் என்னிடம் பரீட்சிக்கின்றார்! நீ எந்த வழியில் போக விரும்புகின்றாய்?, என்பதை முடிவு செய்த பின் என்னோடு கதை!

 அது வரை நான் சாகமாட்டேன் !ஏன் தெரியுமா ?,

உன் அண்ணா பிறக்க வரம் வேண்டி அப்பவே1972  என் தந்தை வாழும் போதே சம்பிராத கொள்கை மீறி  திருப்பதியில் மொட்டை போட்டவன்!

 இன்னும் இருக்கின்றேன்!! சொத்தா போட்டேன்?,

 நீ போ ஆன்மீக பயணம்!எப்போதும் போல என் மகன் பாராளமன்ற தேர்தல் பிரச்சார வேட்பாளர் போல  சிரித்த முகத்துடன் எங்கும் மேடையில் தோன்ற வேண்டும் நீ என்மகன்!  உன்னையே அறிந்தவன்!!


 உன் நட்பு இங்கு இருந்து எப்போதும் போல இந்தியா வருவான் !என்னை! உன்னை! நம்மை புரிந்தவன்!!!



தொடரும்


2 comments :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

,//இயல்பான,வாழ்வியல் கட்டமைப்புக்கள் இடம் கொடுப்பது என்பது நிதிமோசடி வழக்கில் கைதியாக உள்ளே போவது போலவும் ,நோய் நொடி என்ற சாட்டில் வெளிவருவது போல இலகுவான அரசியல் இல்லை // உதாரணம் அருமை. உங்களுக்கே உரித்தானது.

putthan said...

[quote]கண்டி நடணம் போல எங்கும் ஆட இங்கு பாரிசில் இங்கு என்னாலும் முடியாது ![quote]மீண்டும் உங்களுக்கே உரித்தான அரசியல் எடுத்துக்காட்டு