31 August 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்- 13

 முன்னர். இங்கே--/http://www.thanimaram.com/2017/08/12.html

---------------------



சுதந்திரக்கட்சியின் வெளியுறவுக்கொள்கையில் எப்போதும் ரஸ்யாக்குடியரசுவுடன் என்றும் காத்திரமான செயல்திறனை கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை ஆரம்பகால பண்டாரநாயக்கா காலம் தொடக்கம் முன்னைய ராஜபக்‌ஷா ஆட்சிவரை தொடரும் ஒரு பந்தம்!


 இலங்கையில் ஆரம்பகால வளர்ச்சியில் ரஸ்யாவும் பல அன்பளிப்புக்களை செய்தும் இருக்கின்றது நட்பு நாடாக! பண்டாரநாயக்காவின் மரணத்துக்கும் ரஸ்யாவின் உளவுப்படையும் காரணகர்த்தாக்காளாக இருந்தார்கள் என்ற சீனச்சார்பு மார்க்சியவாதிகளின் அரசியமேடைக்குற்றச்சாட்டு இன்றும் பல முன்னைய தலைமுறை அடிமட்ட அரசியல்த்தொண்டர்களிடம் சட்டம் ஒரு சதுரங்கம் என்பது போல என்றாலும்!


 ரஸ்யாவின் மாநிலங்கள் தனித்தனிதேசங்களாகி தனிநாடாகிய போதும் இன்னும் இலங்கையில் ரஸ்யாவையே முதல் நண்பனாக  சுதந்திரக்கட்சி கொண்டு இருக்கின்றது .என்றாலும்!! பெரியண்ணாவைவும் அதன் பரமவைரி பாகிஸ்த்தானையும் எப்படி அரசியலில் கையாள்கின்றதோ அப்படியே ரஸ்யாவுடனும் அதன் முன்னைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த உக்ரேன் முதல் லித்துனியா, ரூமெனியா ,ஒஸ்திரியா,யூகொஸ்லாவியா என்றெல்லாம் தன் அரசியப்பாதையில் பல தொடர்பை மேற்கொண்டாலும் !


இலங்கையின் ஆயுதங்கள் பல கள்ளச் சந்தையில் உக்ரேனுக்கு விற்ற விவகாரம் உக்ரேன் -ஐரோப்பாவுடன் சாய்ந்து எரிவாயு தடைப்பட்ட நிலையில் ரஸ்யாப்படைகள் உக்ரேனில் மோதலில் ஈடுபட்ட போது பல  ஐரோப்பிய நாளேடுகள் செய்தி வெளியீடு செய்தமை. அதை  மகிந்த ஆட்சி என்றாலும் இன்றைய நல்லாட்சி மறுதலித்தமும் இன்னும் அரசியல் ஒரு பனிப்புகார் போல விளங்காத ஒரு விடயம்!


 ஆனாலும் அவன்காட் விவகாரம்  இலங்கையின் ஆட்சிமேடையில் மீண்டும் கோகிலா போல வெற்றிலை உரல் இடிப்பது போல எழுந்தது !அதன் கைகள் ராஜபக்‌ஷவின் உறவினர்கள் லலித்வீரதுங்க என்ற உக்ரேன் நாட்டு தூதுவர் சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும்! அவரை கைது செய்ய சர்வதேச இண்டர் போலிடம் உதவி கோரியதாக  பொதுவெளியில் ஊடகக்கருத்து தெரிவித்த முன்னால் வெளியுறவு அமைச்சர் மங்களசமரவீர துறை மாற்றப்பட்டதுடன் அவை பலர்  மறந்து போன வானொலி  நிகழ்ச்சி  நேற்றைய காற்று போல !


இனி இன்னொரு சுறாவளி ஊழல்க்கைது நடக்கும் போது அமெரிக்கா சார்பு உளவாளிகள் பலர் ;ரஸ்யாவுடனும், சீனாவுடனும் நிழல்யுத்தம் செய்வார்கள் !என்றாலும் செயலில் எவையும் நிறுபிக்க மாட்டார்கள்.


 காரணம் அரசியலில் எப்போதும் நண்பனும், துரோகியும் ஒரே கட்சியில் தானே இருக்கின்றார்கள். பணமுறிவு முதல் இனவாத வெறியை தூண்டும் சக்திகளாக  !




என்றாலும் இலங்கையின் வெளியுறவுத்துறையில் நிலவும் ஊழல் செயல்ப்பாடு ஆட்சி மாறும் போதெலாம் சினிமா கிசுகிசு போல ஊடகத்தில் வருவதும் ,பின் காணமல் போனோர் விசாரணை அறிக்கை போல கிடப்பில் போடப்படுவதும் ஒரு மாயக்கண்ணாடியே


 அது போலவே இலங்கையின் பல்கலைக்கழங்களிலும் புகுந்த இனவாத செயல்ப்பாடுகள் பலருக்கு புலம்பெயர் தேசங்களில் உயர்கல்வியை சிறப்பாக கற்பதுக்கு வழிகாட்டியது.




 அதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து என்ற வட்டம் தாண்டி ஐரோப்பிய நாடுகளிலும் பயின்ற பட்டதாரிசான்றிதல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நவீன கல்விச்சீர்திருத்தமும் ,பலரை வெளிநாடுகளில் கல்விபயில ஊக்குவித்தது எனலாம்!


 அந்த வகையில் சைப்பிரஸில் கல்வி பயில்வதில் பலரும் ஆர்வம் காட்டியதன் பின்னனி. அங்கே போவதன் ஊடாக ஐரோப்பிய நாட்டுக்குள் அடைக்கலம் தேடுவதுக்கு  வாய்ப்பாக இருந்ததும் பொதுவெளியில்  சொல்லப்படாத காகித ஓடம் போல ஒரு மறுபக்கம் என்றாலும்! சிலர் இந்தத்துறைமூலம் அதிகம் சுவிஸ் வங்கியில் சேமித்த கதை எல்லாம் புலன்விசாரணை படம் போல இலங்கையில் பாதாள  உலகக் கோஸ்ட்டி என்ற போர்வைக்குள்  சுட்ட கதைகள் எல்லாம் ஏராளம் ஊடகத்தில்  எழுத ஆசை !


என்றாலும் எனக்கும் நேரம் இருக்கனும்.  அதை பொதுவில் பிசுரிக்க ஆசிரியர் பீடத்துக்கும் தில் இருக்கனும்!  அரச விளம்பரம் கைவிட்டுப்போய்விடும் என்ற பயத்தில் வாசகர்களுக்கு உண்மையை சொல்லாமல் மறைக்கக்கூடாது ஊடகம் நிலாந்தன்!தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காதலி போல உன்னாலே உன்னாலே என்று  சினிமா  பாடல்கள் காட்சிகள் வருவது போல !








கொழும்பில் அழகு நிலையங்கள்  என்ற போர்வையில் இருக்கும் மசாஸ்  நிலையங்கள் எல்லாம் இன்னொரு உலகம் நீ  அது பற்றி அறியாய்))) 


 ஆமா நீ   லித்துனியா அறிந்து இருக்கின்றாயா?


 இல்லை நான் அல்பேனிய- கொசோவே - இனவன்முறை தான் நம்நாட்டு ஊடகத்தில் வெளிநாட்டு செய்தியில் அறிவேன்! அது சரி !


இங்கே பரந்த செய்திகள் எல்லாம் வாரயிறுதி நாளிதலில் கவிதைக்கு ஒதுக்கும் இடம் போலத்தான்! சினிமாவுக்கும் ,கிறீக்கட்டுக்கும், விளம்பரத்திலும் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றைய விடயங்களுக்கு கொடுப்பதில்லையே நிலாந்தன்!



நீங்க ஒரு குழப்பவாதி  யாழவன் அண்ணா !ஏன்?!!!!
 தொடரும்-----!!!!





5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

எழுதுங்கள் நண்பரே

KILLERGEE Devakottai said...

அரசியலில் எதிரியும், நண்பனும் ஒரே இடத்தில் அருமை நண்பரே உண்மை.

K. ASOKAN said...

அருமையான பகிர்வு பாராட்டுகள்

முற்றும் அறிந்த அதிரா said...

அச்சச்சோஒ நேசன் அரசியலுக்குள் ஜம்ப் பண்ணிட்டாரே.. இது இலங்கைக்கு நல்லதில்லையே:)

Thulasidharan V Thillaiakathu said...

என்ன நேசன் அரசியலும் நுழைத்துதான் கதையோ...முந்தைய கதையிலும் வந்தது இல்லையா....சரி சரி!! தொடர்கிறோம்...எதிரியும் நண்பனும் ஒரே இடத்திலா அட!!