11 May 2011

அண்ணை பூமி.

 ஓ எங்கள் தாய் நிலமே!
நிலம் ஆழப்போய் நிலத்தில் ஆகுதியானது எங்கள் சுதந்திர தீபம் .! புல்லுமுளைக்கும் நிலத்திற்கு உரமாகிப் போன எங்கள் உறவுகளின் உடல்கள் கணக்கிட்டால் கதிகலங்கிப் போவான் கப்பல் ஓட்டிய தமிழன்!
..
சகுனிகளும் ,சாத்தான்களும் வெள்ளரசுப் பேய்க்கு மகுடி ஊத எங்கள் நிலத்தில் பேய்கள் ஆடிய களியாட்டத்திற்கு நிலமே நீதான் கண்கண்ட சாட்சி!

.எத்தனை துளைகள் நிலத்தை வெறி கொண்டு தோண்டி நவீன ஆயுதங்களை பரீட்ச்சித்து நம் சந்த்ததியை சாய்த்துவிட்டது!
..
நிலம் இல்லை என்றாகிவிட்டு ஆண்டு இரண்டு ஓடிவிட்டது!
இன்னும் பேய்களின் வார்த்தை யாலங்களுக்கு பெரிய வல்லரசுக்களும் போதனை தூதர்களும் வியாக்கியானம் கூறுகிறார்கள் உங்கள் பிரச்சனை முடிந்துவிட்டது .உங்களுக்கு எல்லாம் சுபமே !என்று புலம் பெயர் தேசத்தில் பல புல்லுருவிகள் புற்றீசல் போல்! ஒத்து ஊதுகிறார்கள்!.
..
வீழ்ந்தவர் போய் ,விழுப்புன்னுடன் விலங்கிடப் பட்டவர்கள் ,, வேலிக்குள் அடைக்கப் பட்டவர்களும் ,இன்னும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல்
சிறையிலும் சீரலிழ்ந்தும் ,
சீரலித்தும் படு அவலத்தை என் நிலமே நீ உள்வாங்கியும் உறைந்து போய்க்கிடக்கிறாய் புலப்படாத, தெளிவில் சாதார மானிடரைப்போல்!
..
அயலவரின் பெரியண்ணன்  தோரனைக்கு நம்நிலம் பலியாக்கப்பட்ட வரலாறு என்றும்
பதியப்படும் நம்சந்ததிகள் வரலாற்று ஏடுகளில்!
தாய்நிலமே நீ எழுதுவாய் ஒரு சரித்திரம் கரிகாலனிடம் எந்த ஆசைக்கும்  பேரங்களுக்கும்  கொள்கை பலியாகவில்லை! தோறுப்போனது கொள்கையுள்ள தலைவன் அல்ல!என்றுமட்டும் பெருமிதத்துடன் சிலையில் எழுது!
.

10 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,

காற்றலையில் வரும் சினிமாப்பாடல் பின்னனிக் குயில்களின் பாடல்கள் பலரசிக்கும் நான் குயில்களின் முகம்கானும் வாய்ப்புகள் கிடைக்கும் போது தவரவிடுவது இல்லை!
..
அப்படி ஒரு வெறி பிடித்த ரசிகன் அந்தவகையில் 2000 ஆண்டு சக்திfm வானொலியின் இரண்டு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அவர்களின் அனுசரனையில் இலங்கைக்கு முதல் முறையாக தென்னிந்திய பின்னனிப்பாடகர் சங்கர் மகாதேவன் வந்தார்.
.. 
அன்நாளில் அவர் பாடிய பாடல்களில் என்ன சொல்லப் போகுறாய்யும்,தனியே தன்னம் தனியேயும் அதிகம் எல்லாராலும் ரசிக்கப் பட்டது.
 இவரின் இசைநிகழ்ச்சிகள் அதிகமாக வானொலி, தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது,
சிலவர்த்தக நிறுவனங்கள் அனுமதிச்சீட்டை  
வானொலிப்போட்டியில் வழங்கினார்கள்!
நேயர்களுக்கு. நானும் போட்டியில் கலந்து அனுமதிச்சீட்டை வாங்கினேன் உண்மையில் அந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது! நானும் ஒரு பணியாள் அந்த வர்த்தக கூட்டமைப்பில் .ஆசைக்குத் தெரியுமா விதிகள் முறை நானும் பின்வழியால் போட்டியில் கலந்து அனுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டேன்.


..பணம் கொடுப்பது என்றாள் 1000 ரூபாய் அன்நாளில் என் சம்பளத்தில் 8/1  பகுதி மாத இறுதியில் துண்டு விழும் தொகையை எப்படி நிவர்த்தி செய்யமுடியும்.
நிகழ்ச்சி நடந்தது கிரிஸ்மஸ் முடிந்த மறுநாள் டிசம்பர் 26 மாலையில்!
.. தொடரும்